வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 31, 2010

ஜுலை முதல் டிசம்பர் வரை

இந்த ஆறு மாதங்களாக மிக குறைவான புத்தகங்களை படித்திருக்கிறேன். மிக குறைவாகவே எழுதியிருக்கிறேன். பதிப்பாளன் எழுத்தாளனை விழுங்கி விட்டானோ அஞ்சுயிருக்கிறேன். படிக்க வேண்டிய புத்தகங்கள் மூவாயிரம் ரூபாய் மேல் வாங்கி வீட்டில் அப்படியே தீண்டப்படாமல் கிடக்கிறது.

வரும் வருடமாவது உருப்படியாக எதையாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு வருடமும் மாறாமல் இருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களாக படித்த புத்தகங்கள்.

கிழக்கு

1.சினிமா வியாபாரம் – சங்கர் நாராயணன்
2.சத்திய சோதனை - இந்திரா பார்த்தசாரதி
3.கலைவாணி : ஒரு பாலியல் தொழிலாளியின் கதை – ஜோதி நரசிம்மன்
4.கதி வாழ்க்கை - கலையரசன்
5.நாதுராம் விநாயக் கோட்ஸே - சி.என்.எஸ்
6.நேரு முதல் நேற்று வரை - ப.ஸ்ரீ. ராகவன்

7.திரும்ப வராத கடந்த காலம்-ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி
8.மகாபுல்வெளி - ஆன்டன் செகாவ்
9.நான் கண்ட சீனா - நடிகர் ராஜேஷ்
10.பெரியார் பெருமைகள் 100 - தொகுப்பு:சபிதா ஜோசப்
11.சொன்னார்கள் -2 - சுகி சிவம்
12.வெட்டுப் புலி - தமிழ்மகன்
13.ஹக்கூ ஒரு அறிமுகம் - சுஜாதா

14.மறக்க முடியுமா ? - புரட்சிப்பாடகர் கத்தார்
15.மனசே டென்ஷன் ப்ளீஸ் ! -நளினி
16.ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் – அன்வர்

கவிதை

17.உயிர்க் கவிதைகள் - மு.முருகேஷ்
18.மயிரு - யாத்ரா
19.சண்டைத்தோழி - கட்டளை ஜெயா

20.Same sex marriage Pro & Con - A Reader - Andrew Sullivan
21.Rescaling Transnational "Queerdom": Lesbian and "Lesbian" Identitary–Positionalities in Delhi in the 1980s -- Paola Bacchetta

நாகரத்னா பதிப்பகத்தில் ஆறு மாத்த்தில் வெளிவந்த நூல்கள்

கவிதை உலகம் – கவிதை தொகுப்பு
நீங்கதான் சாவி – சுரேகா
உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி – கனியன் செல்வராஜ்

இந்த வருடம் உருப்படியாக செய்ததது நான் எந்த புத்தகமும் எழுதாதது தான். ’கவிதை உலகம்’ நூலை தொகுத்த்தோடு சரி ! இன்னும் சில வருடங்களுக்கு புத்தகம் எழுதாமல் இருப்பது நல்லது என்று நினைக்கிறேன். வருடத்தில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

சென்னை 34வது புத்தக கண்க் காட்சியில் நாகரத்னா பதிப்பகம் புத்தகங்கள் கிடைக்கும் இடம்.

பாலவசந்தா பதிப்பகம் – ஸ்டால் எண். 448
அணைத்திந்திய எழுத்தாளர்கள் சங்கம் – ஸ்டால் எண். 272.


மேலும், இரண்டு, மூன்று ஸ்டால்களில் எங்கள் பதிப்பக புத்தகங்கள் இடம் பெறலாம். பின்னர் அறிவிக்கப்படும்.

அனைவரும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !!

***

ஜனவரி முதல் ஜூன் வரை படிக்க.

Thursday, December 30, 2010

அழகான ராட்சசி !

அழகான ஆண்ணுடன் உறவு கொள்கிறாள். இரவு முழுக்க தன் காம பசியை தீரும் அளவிற்கு அவனை அனுபவிக்கிறாள். ஒரு கட்டத்திற்கு மேல் அந்த ஆண்ணால் முடியாவிட்டாலும் தன் தேவை தீரும் வரை அந்த பெண் விடவில்லை. தன் காமம் தீர்ந்த பிறகு தனக்கு சுகம் கொடுத்த ஆண்ணை கொடூரமாக கொலை செய்கிறாள் அந்த பெண்.

எதோ Basic Instant, Spieces ஆங்கிலப்படத்தின் கதை இல்லை. நிஜவாழ்க்கையில் வாழ்ந்த ஒரு பெண் இப்படி வாழ்ந்திருக்கிறாள். தனக்கு திருப்தி தராத ஆண்ணின் உருப்பை அறுத்திருக்கிறாள். ஆழகான பெண்களை பல விதமான விஞ்ஞான ஆராய்ச்சி என்ற பெயரில் கொலைச் செய்திருக்கிறாள். இவளின் காம பசிக்கு பலியான ஆண்கள் அதிகம். கொடூரமான ஆராய்ச்சிக்கு பலியான பெண்கள் ஏராளம். அவளுக்கு துணையக சில பெண் ஊழியர்கள் இருந்திருக்கிறார்கள். ஆராய்ச்சிக்கு வரும் பெண்களை அனுபவிக்க வாய்ப்பு கிடைத்ததால் சில ஆண் அதிகாரிகளும் அவளின் புண்ணியகாரித்தை ஆதரித்தார்கள்.

ஒரு பெண் இப்படி செய்திருக்க முடியுமா ? பெண்ணுக்கு என்ன தான் காம பசி இருந்தாலும் ஆண்களை கொலைச்செய்யும் சைகோவாக இருந்திருக்க முடியுமா ? அந்த ஊரில் சட்டமே இல்லையா ? என்ற பல கேள்விகள் நீங்கள் கேட்கலாம். அதற்கு பதில் அவள் செய்தது சட்டப்படி சரி தான். காரணம், அந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட ஆண்களும், பெண்களும் யூதர்கள். அந்த கொடூர செயலை செய்தவள் நாஜியின் மரண மூகாமான புசென்வல்ட் (Buchenwald) (1937- 1941), மஜ்டானெக் ((Majdanek 1941-1943) தலைமை அதிகாரியான இல்சா கோச்.



பெண் என்றால் பேய் இறங்கும் என்பார்கள். பேயே பயப்படும் அளவிற்கு இல்சா போன்ற பெண்கள் இருப்பதால் தான் இந்த பழமொழி வந்திருக்குமோ என்று தோன்றும் அளவிற்கு வாழ்ந்திருக்கிறாள்.

இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த பிறகு யூதர்கள் எப்படி எல்லாம் கொடுமை செய்யப்பட்டார்கள், நாஜி படையினர் என்ன கொடுமை செய்தனர் என்று பல தகவல்கள் வெளிவந்தன. பல யூதப் பெண்கள் நாஜி படையினரின் காமத்து பலியாகியிருக்கிறார்கள். குழந்தைகளை விஷ வாயுப் போட்டு கொன்றுயிருக்கிறார்கள். முதியவர்கள் மூகாமுக்கு அழைத்து செல்லும் முன் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எந்த ஒரு அதிகாரியும் நல்லவர் என்று சொல்ல முடியாமல் தங்கள் தகுதிக்கு ஏற்றாற் போல் கொடுமைகள் செய்துள்ளனர். இப்படி, நீண்டுக் கொண்டுயிருக்கும் பட்டியலில் ஆண்களும் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பதை சொல்லித்தானாக வேண்டும்.

சாதாரன பெக்ட்ரி ஊழியனின் மகளாக பிறந்து, கணக்கு பாடத்தில் ஆர்வம் கொண்டு அதையே பாடமாக ஏற்று படித்தாள் இல்சா கோச். முதல் உலக போரில் ஜெர்மனுக்கு ஏற்ப்பட்ட பொருளாதார வீழ்ச்சியிலும் அவளுக்கு வேலை இருந்துள்ளது. எல்லோரைப் போலவே சாதாரன பெண்ணாகத் தான் வாழ்ந்திருக்கிறான். 1932ல் நாஜியில் உறுப்பினரானாள். அங்கு ’கரல் ஓட்டோ கோச்’ என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாள். ஹிட்லர் மரண முகாம் அமைக்கும் வரை அவள் சராசரி பெண்ணாகத் தான் பலருக்கு தெரிந்திருக்கிறாள். அவளின் கணவன் கர்ல் ஓட்டோ கோச்சுக்கு Buchenwald முக்கிய தலைமை பொறுப்பு கிடைத்தப் போது அவளும் தன் கணவனோடு மூகாமுக்கு சென்றாள்.

தன் கணவனின் தூண்டுதலில் பெயரில் முதலில் கைதிகளை கொடுமைப்படுத்தினாள். வெட்டவெளியில் ஒரு கைதி இன்னொரு கைதியை பலாத்கார செய்ய வைத்து ரசித்தாள். பெண் கைதிகளை ஆண் இராணுவ அதிகாரிகளுக்கும், அழகான யூத ஆண்களை தனக்கும் என்ற எழுதப்படதா ஒப்பந்தப்படி வன்கொடுமை நடத்தினாள். பல பெண் கைதிகளின் உறுப்பின் மின்சாரம் பாச்சி மகிழ்ந்திருக்கிறாள். ஒவ்வொருவரின் மரணமும் இல்சாவுக்கு கேளிகையானது.

1941ல் அவளின் கணவனுக்கு 'Majdanek' மாற்றாலாகி சென்றபோது கூட கணவன், மனைவி இருவரின் அட்டக்காசம் ஓயவில்லை. ஒரு கட்டத்தில் கணவன், மனைவி இருவரும் எஸ்.எஸ். படையினரால் கைதி செய்யப்பட்டனர். யூதர்களை வன்கொடுமை செய்த குற்றதிற்காக அல்ல. எஸ்.எஸ் படை பிரிவினர் பணத்தை தவறாக பயன்ப்படுத்தியதற்காக. எஸ்.எஸ் நீதி மன்றத்தில் ஓட்டோ கோச்சுக்கு மரண தண்டனை வழங்கியது. இல்சா அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டாள். இருந்தும் அவள் செய்த பாவம் அவளை விடவில்லை. ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்க அரசு யுத்த குற்றவாளிகளில் அவளை கைது செய்தது.

ஆறு ஆண்டுகள் மரண மூகாமில் அவள் நடத்திய கொடுமை வாழ்நாள் கடைசி வரை அனுபவித்தாள். தன் வாழ்க்கை முழுக்க நீதி மன்றமும், தண்டனையும் மாறி மாறி பார்க்க வேண்டியதாக இருந்து. 1967ல் சிறையில் தற்கொலை செய்துக் கொண்டாள்.

ஹிட்லர் கொடுமையான செயல்கள் செய்ததால் அவன் கீழ் இருக்கும் அதிகாரிகளும் அப்படி கொடுமை செய்தார்களா ! அல்லது ஹிட்லரின் இராணுவ அதிகாரிகள் பலர் கொடுமை செய்ததால் ஹிட்லருக்கு கெட்ட பெயரா என்ற சந்தேகம் வர தொடங்கியுள்ளது. காரணம், ஹிட்லரை விட அவன் கீழ் இருக்கும் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் செய்த கொடுமைகள் பல இருக்கிறது.

இன்றும், தலைமையில் இருப்பவர்களை விட அவர்களுக்கு கீழ் இருப்பவர்களின் ஊழலும், அட்டகாசமும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பதை நாம் அனுபவைத்துக் கொண்டுயிருக்கிறோம்.

தலைமை மட்டுமல்ல அவர்கள் கீழ் வேலை செய்பவர்களும் நல்லவர்களாக இருக்க மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் !!

Wednesday, December 29, 2010

ஹைக்கூ கவிதைகள் - 7

பசியோடு வாடும்
விவசாயிகளுக்காக
மந்திரி உண்ணாவிரதம் !

**

பெற்றோர்களை சுமக்காத
கரங்கள் சுமக்கிறது
கடவுளை !

**

ஒரே சாலையில்
இரண்டு ஊர்வலம்
மரணமும், கடவுளும் !

**

மனைவியை எதிர்த்து
கணவனின் பிரசவம்
புத்தக வெளியீடு !

**

நீங்கதான் சாவி புத்தகம் வாசித்த ஒரு வாசகர் என்னிடம் சொன்ன ஹைக்கூ

சாவிகள் தொலைகின்றன
சாவிக்கு
பூட்டு !

Tuesday, December 28, 2010

நூல் வெளியிட்டும், விமர்சனமும் !

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மறக்க முடியாத ஒரு நிகழ்வு. இது வரை வந்த நூல்களின் விமர்சணமும், கருத்துகளும் இன்னும் மேலும் பல ஆண்டுகள் பயணம் செய்ய உதவியாக இருந்தது.

விழா நிகழ்வில் நடந்த சில குறிப்புகள்.

பரிசல் கிருஷ்ணா எழுதிய டைரி குறிப்பும் காதல் மறுப்பும்பற்றி ‘கல்வெட்டு’ சொர்ணபாரதி

சிறுகதை என்பதை விட சின்ன கதை என்று சொல்லி புத்தகத்தை பற்றி தொடங்கினார். பெரும்பாலான கதைகள் ஜனரக பத்திரிக்கைகளுக்கு எழுதப்பட்ட கதைகளாக தான் இருக்கிறது. மனதை வருடும் படியான கதை இல்லை என்பதை கூறினார்.

BUTTERFLY EFFECT, இருளின் நிறம், டைரி குறிப்பும் காதல் மறுப்பும் கதைகளை மேற்கோள் காட்டி பேசினார். பரிசல் தனது ஒவ்வொரு கதையிலும் இறுதியில் திரைப்படத்திற்கு தேவையான ட்விஸ்ட் வைத்திருப்பதை கூறினார்.

குகன் எழுதிய என்னை எழுதிய தேவதைக்கு பற்றி மணிஜீ

'என்னை எழுதிய தேவதைக்கு' தலைப்புக்கு பதிலாக 'என்னை எழுதிய தேவதைகளுக்கு' என்று பன்மையில் தலைப்பு வைத்திருக்கலாம் என்று சொல்லி தொடங்கினார்.

எனக்கும், அவருக்கும் நட்பு தொடர வேண்டும் என்றால் இந்த புத்தகத்தை விமர்சணம் செய்யாமல் இருப்பது நல்லது என்று கூறினார். (இதுக்கு நாலு வார்த்தை என்னை திட்டியிருக்கலாம்.)

தனிப்பட்ட முறையில் அவருக்கு புத்தகம் பிடிக்காததால் பெரிதாக விமர்சணத்தை முன் வைக்கவில்லை. ஆனால், தன் மனைவிக்கு இந்த புத்தகம் பிடித்திருப்பதாக சொன்னார். ( முன்பே தெரிந்திருந்தால் அவரை விமர்சணம் செய்ய அழைத்திருக்கலாம்)

கேபிள் சங்கர் எழுதிய 'லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்' பற்றி அமிர்தம் சூர்யா

தனக்கும், சங்கருக்கும் ஆரம்பித்த நட்பின் கதையை சொல்லிவிட்டு புத்தக விமர்சணத்திற்கு வந்தார். நிகழ்ந்த மூன்று நூல் விமரசணங்களில் சூர்யாவின் விமர்சணம் தான் நிறைவாக இருந்தது.

தனது விமர்சணத்தில் அவர் சொல்ல வந்த முக்கிய கருத்து. சங்கர் தன்னோடு பாதையை முன்பே தெளிவாக தீர்மானித்து விட்டதால் அவர் காமம் கலந்த கதையை எழுதுவார். அவரால், வேறு சமூக கருத்துள்ள கதை எழுதத் தெரிந்தவர் என்றாலும் தன் பாதையில் கவனமாக இருப்பதை கூறினார்.


4:45க்கு வருவதாக சொன்ன சீமான் அவர்கள் 6:20 மணிக்கு வந்தார். நூல் வெளியிடுபவர் தாமதமாக வந்தால் நூல் விற்பனை எப்படி பாதிக்கும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். ஒரு சிலர் உயிர்மை நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்று விட்டனர். இருந்தும், சீமான் வந்த போது கூட்டம் நிறைவாக இருந்தது.

நீங்க தான் சாவி பற்றி சீமான்

புத்தகத்தை பற்றி சொல்லும் போது முகப்பு அட்டைப்படத்தை மிகவும் பாராட்டினார்.

மனிதன் பென்சிலாக இருக்க வேண்டும் என்று குரிப்பிட்டு இருக்கும் 'பென்சில் வாழ்க்கை' கட்டுரையை சிலாகித்து பேசினார். 'தட்டிக் கேளுங்கள்' என்ற கட்டுரையை நாட்டில் நடக்கும் பிரச்சனையை குறித்து பேசப்படும் கட்டுரையை மேற்க் கோள் காட்டியிருக்கிறார்.

உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி

இந்த நூலை அவர் படிக்கவில்லை. நமது வாழ்க்கைக்கு வழி நம் கையில் தான் இருக்கிறது. குரங்குக் கூட கை ரேகை இருக்கிறது. அது ஜோசியனிடம் கை காட்டுவதில்லை. ஆனால், மனிதன் தான் தன் கையை நம்பாமல் ரேகையை நம்புவதாக கூறினார்.

பதினைந்து நிமிடம் வரை பேசிய அவர் துளிக் கூட அரசியல் கலக்காமல் பேசியது ஆறுதலாக இருந்தது. விழா நிகழ்ச்சிக்கு சால்வை போடுவதிற்கு பதிலாக புத்தகம் கொடுக்க வேண்டும் என்பதை கூறினார். ( பதிப்பகம் தொடங்கி சிறப்பு விருந்தனர்களுக்கு நினைவு பரிசாக புத்தகம் கொடுப்பதால் தப்பித்தேன்.)

இந்த விழாவில் சில நல்ல பாடங்களை கற்றுக் கொண்டேன்.அதைப் பற்றி அடுத்த பதிவில் சொல்கிறேன்.

மேல் குறிப்பிட்டுள்ள அத்தனை புத்தகங்களும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சியில் கிடைக்கும்.

Monday, December 27, 2010

நாகரத்னா பதிப்பகத்தின் நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள் !!

உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி நூலை சீமான் வெளியிடுகிறார்.


சுரேகா, கனியன் செல்வராஜ், சீமான், மனோஜ் கிருஷ்ணா (’ஊர் காவலன்’ படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்), குகன்

நீங்கதான் சாவி நூலை சீமான் வெளியிடுகிறார்.

சுரேகா, சீமான், மனோஜ் கிருஷ்ணா (’ஊர் காவலன்’ படத்தில் ரஜினி தம்பியாக நடித்தவர்), குகன்



வேடியப்பன், சீமான், குகன், சுரேகா







இறையாண்மையை பற்றி சிறுவனுக்கு சீமான் விளக்குகிறார்.




காவேரி கணேஷ், இளங்கோ, நர்சிம்

Saturday, December 25, 2010

நூல் வெளியீட்டு விழா !!



நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவிஎன்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.

மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)

பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)

குகன் எழுதிய ’என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.

நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.

Wednesday, December 22, 2010

ஹைக்கூ கவிதைகள் - 6

விவசாயம் கண்ணில் தெரியவில்லை
டாஸ்மார்க்
நடத்துபவர்களுக்கு !

**

சுதந்திர
குளியல்
அகதி முகாமில் !

**

அரசாங்க அறிவிப்பு
விடுமுறை எடுத்துக் கொண்டது
மழை !

**

அண்டை நாட்டு
சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறது
இந்திய ஜனநாயகம் !

**

வெளிநாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டார்
புத்தர் !

**
சட்டவிரோதமாக
தண்டனை அனுபவித்தனர்
சிறையில் போராளிகள் !

Tuesday, December 21, 2010

நாகரத்னா பதிப்பக நூல் வெளியீட்டு விழா!!



நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் தோழர் சீமான் அவர்கள் கலந்துக் கொண்டு, சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ என்ற நூலையும் மற்றும் கனியன் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ நூலையும் வெளியிடுகிறார்.

மேலும், நாகரத்னா பதிப்பகத்தின் மூன்று நூல்கள் விமர்சண நிகழ்வும் நடக்கவிருக்கிறது.

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ நூலை விமர்சணம் செய்பவர் அமிர்தம் சூர்யா ( ‘கல்கி’ துணை ஆசிரியர்)

பரிசர் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’ நூலை விமர்சணம் செய்பவர் ’கல்வெட்டு’ சொர்ணபாரதி ( ‘’கல்வெட்டு பேசுகிறது’ இலக்கிய மாத இதழ் ஆசிரியர்)

குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு’ நூலை விமர்சணம் செய்பவர் தோழரும், பதிவருமான மணிஜி அவர்கள்.

நிகழ்ச்சி 4:30 மணிக்கு தொடங்கி 6:30 மணிக்குள் முடிந்துவிடும்.

உயிர்மை வெளியீட்டு , கிறிஸ்மஸ் கொண்டாட்டம் என்று காரணம் சொல்லாமல் அனைவரும் நிகழ்ச்சி வருக....

Friday, December 17, 2010

2010 சிறந்த அரசியல், சினிமா !!!

இப்போதெல்லாம் அரசியல், சினிமா இரண்டு தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. ஒன்று சினிமாவை வைத்து அரசியல் நடக்கிறது. இல்லை என்றால் சினிக்காரர்கள் அரசியல் செய்கிறார்கள். அதனால், இரண்டும் சேர்ந்து காக்டைல் நகைச்சுவை.

இந்த வருடம் சிறந்த அரசியல்வாதி ?
ஆ.ராசா
(அறுபது வருட இந்திய அரசியல் நடந்த எல்லா ஊழலை தன் ஒரே ஊழலில் முந்தி சென்றுள்ளார். )

இந்த வருடம் அரசியல் புது வரவு ?
'இளைய தளபதி' விஜய்.
(ரஜினி மாதிரி வருவேன்...வருவேன்... சொல்லிக்கிட்டே இருக்காம நிஜமாவே வந்திருவாரோ நினைக்க வச்சிட்டாரு)

குஷ்பு ( ஒரு வழியா எல்லா கேஸ்ல இருந்து வெளியே வந்தாச்சு )

இந்த வருடம் சிறந்த கட்சி ?
காங்கிரஸ்
( ஒருவர் தி.மு.கவுக்கு எதிராக பேசுவார்.
இன்னொருவர் தி.மு.கவோடு தொழமையாக இருப்பார்.)

அடுத்த வருடம் யார் யாரோட கூட்டனி ?
அந்த முடிவு எடுக்க தெரியாம தானே எல்லா கட்சியும் தவிச்சிக்கிட்டு இருக்கு.(அதுவரைக்கும் பத்திரிகை நல்ல விற்பனையாகும்)

2011ல்ல யாரு ??

ஜெயலலிதா : தி.மு.க தவிர எல்லா கட்சிகளும் அ.தி.மு.கவுடன் கூட்டனி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். 2011ல் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

விஜய்காந்த் : என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டனி வைத்துக் கொள்ள தயார்.

ராமதாஸ் : தமிழ் நாட்டில் மூன்றாவது அணி அமைந்து, அவர்கள் ஆட்சி அமைய வேண்டும்.

சரத்குமார் : எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை. எந்த கட்சியும் எங்களை பார்த்து பயப்பட வேண்டாம்.

கலைஞர் : தமிழக மக்கள் எங்கள் ஆட்சியை விரும்பவதால் அடுத்த வருடம் தேர்தலே இல்லை.


இந்த வருடம் நடந்த சிறந்த கூட்டம் ?
சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களை திட்டியக் கூட்டம் தான்.
(குடும்ப பெண்களை (!) தவறாக எழுதியதை கண்டித்து பத்திரிகை குடும்ப பெண்களை திட்டியது)

இந்த சிறந்த தண்டனை ?
முதல்வர் முன் உண்மையை மேடையில் சொன்னதற்காக அஜீத் முதல்வர் பேரன் படத்தில் நடிப்பது.


இந்த வருடம் டாப் 5 படங்கள்


சன் டி.வி :-

1.எந்திரன்
2.சிங்கம்
3.தில்லாலங்கடி
4.சுறா
5.ஆடுக்களம் ( படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியேவா !!!)


கலைஞர் டி.வி :-

1.பெண் சிங்கம்
1.மதராசபட்டினம்
2.தமிழ்படம்
2.பையா
3.விண்ணை தாண்டி வருவாயா
3.மைனா
4.நான் மகான் அல்ல
4.பாஸ் (எ) பாஸ்கரன்
5.வ - குவாட்டர் கட்டிங்
5.இரத்த சரித்திரம்

( 18 எம்.பி வச்சிக்கிட்டு 8 மந்திரி சீட் கேட்டவராச்சே !)

ஜெயா டி.வி :-

எல்லா படங்களை கலைஞர் வாரிசுகள் வாங்கிவிட்டதால், இந்த நிகழ்ச்சி ஜெயா டி.வியில் ரத்து செய்யப்படுகிறது.

மக்கள் டி.வி :-

இந்த வருடம் தமிழ் படமே வரவில்லை.

இந்த வருடம் சிறந்த நடிகர் ?
விஜய் தான். ( அரசியலில் நிஜமா நடிக்க தெரியனும். சினிமாவிலே சுமாரா நடிக்கிறாரு. எப்படி சமாளிக்க போறாரோ !!)


இந்த வருடம் சிறந்த நடிகை ?
தமனா ( சன் டி.வி. சிபாரிசு) மற்றும் நமீதா (கலைஞர் டி.வி சிபாரிசு )

எந்த வருடமும் சிறந்த தயாரிப்பாளர் ?
சன் குழுமம்

Thursday, December 16, 2010

வெட்டுப் புலி : தமிழ்மகன்

சென்ற வருடம், இரண்டு மாதமாக செலவிட்டு, மெனக்கிட்டு எழுதிய நாவல் 'அந்த மூன்று பெண்கள்'. ஆகஸ்ட் 15, 1947ல் பிறந்தவன் வாழ்க்கையில் மூன்று பெண்கள் அவனின் திராவிடக் கொள்கையை எப்படி மாற்றுக்கிறார்கள் என்பது தான் கதை கரு. திராவிட பதிவாக பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் கெஸ்ட் அபிரன்ஸாக அந்த நாவலில் வருவார்கள்.

1947 முதல் தற்காலம் வரை கதை நடக்கிறது. எழுதி முடித்த பிறகு அழியா காவியத்தை முடித்துவிட்ட மகிழ்ச்சி. புத்தகமாக்கும் முன்பு நண்பர்களின் கருத்தைக் கேட்கலாம் என்று என் நெருங்கிய நண்பன் ஒருவனிடம் கொடுத்தேன். (அவன் எழுத்தாளன் இல்லை. வாசகன் மட்டுமே).

படித்து விட்டு அவன் கூறிய கருத்து, " இனிமே எழுதுறத விட்டுடு" என்பது தான். என் நாவலை படிக்க சொன்னதிற்காக ரூ.500 அபராதம் (சரக்கு) வாங்கிக் கொண்டான். அது சரி, ‘வெட்டுப் புலி’ நாவல் விமர்சணத்தில் சொந்த புராணம் எதற்கு ? நானும் மிஷ்கின்ப் போல் ஆகிவிட்டேனா என்று நினைக்க வேண்டாம்.

வெட்டு புலி நாவலைப் பற்றி ஒரு சில வார்த்தைகளை சொல்லிவிட்டு பிறகு சொல்கிறேன்.



தமிழ்மகன் எழுதிய 'எட்டாயிரம் தலைமுறை' சிறுகதை தொகுப்புக்கு தமிழக சிறந்த சிறுகதை தொகுப்புக்கு பரிசு கிடைத்தது. இதில் கலைஞர், எம்.ஜி.ஆரை திட்டியிருப்பதால் கண்டிப்பாக இந்த புத்தகத்திற்கு தமிழக அரசு விருது கிடைக்காது. எட்டாயிரம் தலைமுறை சிறுகதை தொகுப்பில் ஒரு சில கதைகள் என்னை கவர்ந்ததால் இந்த புத்தகம் வாங்கினேன்.

1930ல் தொடங்கி தற்காலத்தில் வரை திராவிட பரிமாற்றத்தை பதிவு செய்திருக்கிறார்.

ஒரு நாவல் இயக்கத்தின் வரலாற்றை பதிவு செய்ய இயலுமா என்று பிரம்மிக்கும் அளவிற்கு எளிய நடையில் பல முக்கிய சம்பவங்கள் பதிவாகிறது.

நாற்பதுகளில் பெரியார் கொள்கையில் பிராமிண அல்லாதவர்கள் அதிகம் ஈர்க்கப்பட்டனர். ஆனால், தற்காலத்தில் பெரியாரின் கொள்கையை பிராமணர்கள் விரும்புவதை ஒரு இடத்தில் காட்டியிருப்பது ரசிக்கதக்கது.

லட்சுமண ரெட்டியின் முந்தைய, பிந்தைய தலைமுறைகள் கொண்டு நாவல் செல்கிறது. மேலும், கிளை கதாபாத்திரங்கள் வாயில திராவிட கொள்கை, நம்பிக்கை அழிந்து வருவதையும் சொல்லப்படுகிறது. ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வசனங்கள் பாத்திரத்திற்கு ஏற்றதாக இருப்பதால் ஆசிரியரின் தனிப்பட்ட கருத்தை யூகிக்க முடியவில்லை. ஒரு பாத்திரம் திராவிடத்தை விரும்பி ஆதரத்து பேசினால், கடவுளை நம்பும் பாத்திரம் நேர்மாறாக பேசுகிறது. இரண்டுக்கும் பதில் அளிக்க முடியாமல் இருக்கும் கதை நகர்கிறது.

தியாகாரசன் “அவனுங்களால தான் நம்ம் வாழ்க்கை இப்படி நாறிக்கிட்டு இருக்குது” என்று பார்ப்பனர்களை திட்டும் போது, எதிர் கருத்துள்ள மனைவி தன் கழுத்தில் தொங்கும் நகையையும், புடவையும் அவசரமாகப் பார்த்துவிட்டு நல்லாத்தானே இருக்கிறோம் என்று எறிட்டுப் பார்த்தாள். மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.


இந்த நாவலில் பெரிய குறையாக என் கண்ணில் பட்டது இரண்டு விஷயம் தான்.

1.

நவம்பர் 1, 1956 அன்று மொழிவாறியாக மாநிலம் பிரிக்கப்பட்டதைப் பற்றி எந்த குறிப்புகளும் இதில் இல்லை. பெரியார், அண்ணா போன்றவர்கள் காட்டாத எல்லை போரை மா.போ.சி அவர்கள் போராடி சென்னை வரை தமிழ் நாட்டுக்கு மீட்டு தந்தார். திராவிடர்கள் ஆர்வம் காட்டாத எல்லை போரை திராவிட புனைவில் ஆர்வம் காட்டாமல் குறிபிடாமல் விடுப்பட்டு போனது.

2.
திராவிர வரலாறு பற்றிய புனைவாக இருந்தாலும் சாதியை விட முடியவில்லை. ரெட்டி, நாயகர், மலையாளி என்று ஜாதி பெயரை திராவிட கதாபாத்திரங்கள் பேசும் அதை எதிர்த்து வாசகனாக குரல்க் கொடுக்கிறோம். அதையும் காதில் வாங்கிக் கொள்ளாத அரசியல்வாதிப் போல் வாசகனும் அடுத்த பக்கத்திற்கு கடந்து செல்ல வேண்டியதிருக்கிறது. (அன்றைய திராவிடர்கள் குறித்து ஆசிரியரின் பகடியாகக் கூட இருக்கலாம்)

எனினும் இந்த வருடத்தில் வந்த மிக சிறந்த நாவலில் கண்டிப்பாக 'வெட்டுப் புலி’ நாவல் இடம் பெறும் என்று நினைக்கிறேன்.

நான் எழுதிய 'அந்த மூன்று பெண்கள்' நாவலுக்கும், வெட்டுப் புலிக்கும் என்ன சம்மந்தம் என்பதற்கு பதில் சொல்ல வில்லையே !!!

நண்பனின் கருத்தை பெரிதாக அந்த நாவலை திருத்தி எப்படியாவது புத்தகமாக்கலாம் என்று இருந்தேன். இருந்தும், சில பகுதிகள் எனக்கு திருப்தி அளிப்பதாக இல்லை. வெட்டுபுலி நாவலை படித்ததும் நான் எழுதிய ஒரு சில இடங்கள் இதில் பெற்று இருப்பதை உணர முடிந்தது.

அந்த நாவலை மாற்றி புத்தகமாக வந்தால், ஒன்று பெயர் கெட்டுவிடும் அல்லது Inspiration (உருவி) எழுதிய நாவலாக கருதப்படும். அதனால், Shift + Delete and Enter.

உயிர்மை பதிப்பகம்
ரூ.220, பக். : 378

Tuesday, December 14, 2010

பெரியார் பெருமைகள்

பெரியாரின் கேள்வி நேரம்

அப்போவெல்லாம் ஐயா பேசற கூட்டங்கள்லே,கேள்வி-பதில் நிகழ்ச்சி கண்டிப்பா இருக்கும்.எந்த கக்ஷ்டமான கேள்விக்கும் அப்பவே ஐயா அருமையான பதில் சொல்வாரு.

அந்த கேள்விக்கு பதில்களை யாரவது தொகுத்திருந்தா இன்னைக்கு அதை ஒரு அருமையான புத்தகமா வெளியிடலாம் அவ்வளவு சுவையாக இருக்கும்.

அன்னைக்கு காரைக்குடி கூட்டத்திலேயும் அது மாதிரி கேள்வித்தாளைத்தான் ஐயாகிட்டே கொடுக்கிறாங்கனு நெனச்சுக்கிட்டு நாங்க எல்லாம் பேசாம இருந்துட்டோம்.வழக்கமா ஐயா முதல்லே மைக்லே அந்தக் கேள்வியை படிச்சுட்டு அப்புறம் தன்னோட பதிலை சொல்வார் .ஆனா அன்னைக்கு அந்த தாளை படிச்சுட்டு ஒன்னும் சொல்லாம பக்கதிலே இருந்த அண்ணாக்கிட்டே அதைக் கொடுத்திட்டார்.அண்ணா படிச்சு பார்த்த்தும் லேசா சிரிச்சுட்டே மைக்குக்கு வந்து பொது மக்களை பார்த்து

இங்கே யாரோ ஒரு தாள்லே தன்னோட பெயரை மட்டும் எழுதிட்டு கேள்வியை எழுத மறந்திட்டாரு.ஆகையினால் அந்த தாளை நம்ம இராம.சுப்பையாவிடம் கொடுக்கிறேன், அவர் அதை உங்களிடம் கொண்டு வருவார்.அது யாரோட பேரோ அவங்க மேடைக்கு வந்து மீண்டும் தங்கள் கேள்விகளை கொடுக்கலாம்னு சொல்லிவிட்டு அதை எங்கிட்ட தந்தார்.அந்த தாள்லே “நான் ஒரு முட்டாள்னு” எழுதியிருந்தது.

இதை கேள்வினு நினைச்சுக்கிட்டு பெரியார் மைக்கிலே படிப்பார்ங்கிற நோக்கத்திலே யார் அதை கொண்டு வந்து கொடுத்தானோ அவனே அன்னைக்கு பெரிய முட்டாள் ஆயிட்டான். அண்ணாவோட குறும்பும் புத்திசாலிதனமும் ஐயாவையே ஆச்சிர்யப்பட வைச்சுடுச்சு. இப்படி அனுபவத்தை சொல்கிறார் இராம.சுப்பையா

**



பெரியாரின் பன்பு

இடுக்காட்டில் இராஜாஜியின் இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள குடியரசு தலைவர் வி.வி.கிரி வந்தருந்தார். சுடுகாட்டில் அவர் நின்று கொண்டிருந்தார். பெரியார் அவர்கல் அருகில் ஒரு சக்கர-நாற்காலியில் அமர்ந்து கண்ணீர் விட்டு கொண்டிருந்தார். அந்த நிலையிலும், பெரியார் என்னையும் விடுதலை சம்பந்தத்தையும் அருகில் அழைத்து “என்னை இறக்கி கீழே உட்காரவையுங்கள், கிரியை இந்த வண்டியில் உட்கார சொல்லுங்கள்.அவர் குடியரசு தலைவர்.அவர் நிற்கும் போது நாம் அமர்ந்திருப்பது மரியாதையாக இல்லை,என்றார்.

ஜனாதிபதி கிரியிடம் இதை தெரிவித்தபோது பெரியாரின் பண்பைக்கண்டு பெரிதும் வியந்து போனார். என்கிறார் முன்னால் அமைச்சர் ராசாராம்.

எழுந்து நிற்கமுடியாத அந்த தள்ளாத வயதிலும் குடியரசு தலைவரின் பதவிக்கு மரியாதை கொடுத்த பெரியாரின் இந்த பண்பு .ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை நிற்க வைத்துவிட்டு தாம் மட்டும் உட்கார்ந்து கொண்டு பேசிய பெரியவாள் சின்னவாள்களுக்குத் தெரியுமா?

**

1929 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் ஒரு சொற்பொழிவுக்காக நானும் பெரியாரும் சென்றிருந்தோம்.எதிர்ப்பாளர்கள் அன்றைய கூட்டத்தை நடக்கவிடாமல் செய்வதற்காக எதிர்ப்பு நோட்டீசுகள் சில போட்டிருந்தார்கள்.அதில் ”பெரியார் புராணங்களையெல்லாம் பொய் என்று சொன்னவர்.நாத்திகர்.அவரை இன்று பேசவிடக்கூடாது“ என்றிருந்தது.

கூட்டம் மாலை 6 மணிக்கு.ஆனால் 6.30 ஆகியும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்களும் எங்களை அழைத்தவர்களும் வரவில்லை.”பேசாமல் திரும்பி போய்விடுவது நல்லது”என்றேன். அவரும் சரி என்று இரயில் நிலையத்திற்க்குப் போக ஏற்பாடு செய்யும்படி சொன்னார்.
வண்டியில் அமர்ந்ததும் பெரியார் வண்டிகாரணிடம் கூட்டம் நடக்கும் இட்த்தின் வழியாக இரயிலடிக்கு போகும் படி சொன்னார். அந்த இடம் வந்த்தும் பெரியார் பார்த்தார்.சுமார் 500 பேர்கள் அங்கு கூடியிருந்தனர்.மேடையில் நாற்காலி எதுவுமில்லை. எங்களை வரவழைத்த ஆட்களும் இல்லை.

உடனே பெரியார் வண்டியை நிறுத்தச் சொல்லி தனியாகவே போய் மேடையில் ஏறினார்.
“பொது மக்களேநான் உங்கள் முன் இப்போது பேச வரவில்லை.ஒரு உண்மையைச் சொல்லி போகவே வந்தேன்.

புராணங்களை போய் என்று நான் சொன்னதாக என்னை எதிர்த்து நோட்டீஸ் போட்டிருக்கிறார்கள்.அது நான் சொல்லவில்லை. சைவ புராணங்களை எல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் வைணவப் பண்டிதர்கள். வைணவப் புராணங்களையெல்லாம் பொய் என்று கண்டுபிடித்து சொன்னவர்கள் சைவப் பண்டிதர்கள். இந்த இரண்டு புராணங்களுமே பொய்யாக இருக்குமோ என்று நான் எண்ணியதுண்டு. ஆக புராணங்களை போய் என்று சொன்னவர்கள் சைவ-வைணவப் பண்டிதர்கள்தான் இதை சொல்லி போக தான் வந்தேன். என் மேல்பழி போடாதீர்கள்.” என்று பெரியார் சொன்னதும் ஓயாமல் கை தட்டி மக்கள் ஆரவாரம் செய்தார்கள். அங்கு தொடர்ந்து ஒன்றரை மணி நேரம் பெரியார் பேசினார் அனைவரும் அமைதியாக இருந்து கேட்டார்கள்.

சொன்னவர் தமிழ் அறிஞர் கி.ஆ.பெ.விசுவநாதம்.

**
பெண்களுக்கு சொத்தில் சம பங்கு

1970ல் இந்திராகாந்தி அம்மையாரின் அமைச்சரைவையில் மாகாண மந்திரியாக இருந்தவர் டாக்டர் சந்திர சேகர். மத்திய அரசின் மக்கள் தொகை கட்டுபாடு சம்பந்தமான ஆராய்ச்சியாளர் அவர்.

வேலூரைச் சேர்ந்த அவர் பெரியாருக்கு நெருக்கமானவர்.அவர் பெரியாரை சந்தித்து மக்கள் தொகையை கட்டுபடுத்தவே முடியவில்லை. ஆண் குழந்தை வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பிள்ளை பெற்றுக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு என்ன செய்யலாம்?”என்றார்.

“பெண்களுக்கு சொத்தில் சம அந்தஸ்து இருக்கிறது என்று அறிவித்து விடுங்கள். சரியாகிவிடும்” என்றார் பெரியார்.

கேட்டவருக்கு புரியவில்லை .பெரியார் விளக்கி சொன்னார்.

”உன் மனைவிக்கும் வேலை உன் மகளுக்கும் வேலை,அவர்களுக்கு சொத்தில் சமபங்கு என்ற நிலை வந்தால் பெண்களை யாரும் குறைச்சு மதிப்பிடமாட்டார்.ஆண் வாரிசுதான் வேண்டும் என்ற கருத்து போய்விடும்” என்றார் பெரியார்.

ஆச்சிர்யப்பச்சு போனார் அந்த அறிஞர்.

“உலகத்தில் வேறு யாரும் சொல்லாத உங்களின் ஒரிஜினல் ஆலோசனை இது” என்று கூறினார் அந்த அறிஙர்.எனவே அவரை (பெரியாரை)ப் பிற்போக்குவாதி என்பதும். அவருடைய கருத்துக்களால் வீழ்ச்சியடைந்தோம் இன்பதும் நேர்மையான குற்றச்சாட்டாக தெரியவில்லை.”

என்கிறார் சிந்தனையாளன் ஆசிரியர் தோழர் வே. ஆனைமுத்து.

தககல் :
பெரியார் 100 பெருகிவந்த பெருமைகள்
தொகுப்பு:சபிதா ஜோசப்
நக்கீரன் வெளியீடு

Monday, December 13, 2010

இரண்டாம் ஆண்டு விழா

வரும் டிசம்பர் 25 அன்று, நாகரத்னா பதிப்பகம் இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. மேலும், இரண்டு புத்தகம் வெளியீட்டு விழாவும் மற்றும் விமர்சன கூட்டமும் நடைப்பெறவுள்ளது.

நீங்கதான் சாவி
சுரேகா
பக் : 80, ரூ.50

பதிவரும், இயக்குனருமான சுரேகா அவர்கள் எழுதிய சுயமுன்னேற்ற கட்டுரைகள். கடந்த 8 ஆண்டுகளாக 250க்கு மேற்பட்ட பயிற்சி வகுப்புகள் எடுத்திருக்கிறார். அந்த அனுபவம் இந்த புத்தகம் எழுத உதவியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.




உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி
கனியன் செல்வராஜ்
பக் : 24, ரூ.10

திருப்பூர் தொழிற்சாலையில் வேலை செய்யும் கனியன் செல்வராஜ் எழுதிய முதல் கட்டுரை நூல். இவருக்கு திருச்சி ஜெயம் கலைத் தொடர்பு மையம் இந்திய அரசு நேருயுவகேந்திராவுடன் இணைந்து ஜெ. ஜகத்ரெட்சகன் தலைமையில் “கவிகலைமணி விருது” வழங்கி சிறப்பித்துள்ளார்கள்.




மற்றும்

கேபிள் சங்கர் எழுதிய ‘லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’
பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரி குறிப்பும் காதல் மறுப்பும்’
குகன் எழுதிய ‘என்னை எழுதிய தேவதைக்கு...’

ஆகிய மூன்று சிறுகதை தொகுப்பின் விமர்சணங்களும் நடைப்பெறவுள்ளது.

நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் பிரமுகர்களைப் பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.

இடம் :

டிஸ்கவரி புக் பேலஸ்,
கே.கே.நகர்.
சென்னை.

Thursday, December 9, 2010

சினிமா : ஹைக்கூ கவிதைகள் - 5

துண்டு விழ வேண்டும்
விரும்பும் தயாரிப்பாளர்
கெமிரா முன் நடிகை !

**

நடிப்பில் இருந்து
ஓய்வு எடுக்க விரும்பவில்லை
அரசியலில் நடிகன்

**



அம்மாவும், மகளும்
போட்டிப் போட்டுக் கொண்டார்கள்
ஆடை குறைப்பில் !

**

காமம் தீர்ந்த பின்னும்
பத்திரிகையில் பேட்டிக் கொடுத்தனர்
'நாங்கள் நண்பர்கள்' என்று !

**

Wednesday, December 8, 2010

சிறுகதை to குறும்படம்

பொதுவாக கதை எழுதியவரே திரைக்கதை அமைக்கும் சந்தர்ப்பம் எல்லோருக்கும் கிடைக்காது. ‘ஒன்பது ரூபா நோட்டு’ நாவலை எழுதிய தங்கர்பச்சன் போல் எழுதியவரே படம் இயக்கினால் மட்டுமே முடியும். கேபிள் சங்கர் எழுதிய ‘ லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ சிறுகதை தொகுப்பில் இருந்து ‘போஸ்டர்’ சிறுகதை குறும்படமாக்கப்பட்டது. இதில், சுவையான தகவல் என்றால் கதை எழுதியவரே திரைக்கதை அமைத்திருப்பது தான். எதோ நானே எழுதிய சிறுகதை படமாக பார்த்ததுப் போல் உணர்வு. நாகரத்னா பதிப்பக வெளியீடு புத்தகத்தில் இருந்து குறும்படம் வந்திருக்கிறது என்றால் பெருமை தானே !!!

வாசித்த கதை திரையில் பார்க்கும் போல் வாசகன் கற்பனையில் இருக்கும் காட்சிகள் மாறுப்படும் என்பதை இந்த குறும்படம் உணர்த்தியது. வாசகன் இடத்தில் இருந்து பார்வையாளன் வட்டத்தில் இருப்பவர்களுக்கு திருப்பி படுத்த சில காம்பிரமைஸ் செய்ய வேண்டியது இருக்கும். ஆனால், இந்த கதையில் எழுதிய 90% சதவீத கதையை காட்சியாக ரவிகுமார் கொண்டு வந்திருக்கிறார். வாழ்த்துக்கள்.

கோடிக்கணக்கில் முதலீடு போட்டு வாங்கிய படத்தை தியேட்டரில் ஓட வில்லை என்றாலும், இரண்டு மாதமாவது சன் டி.வி, கலைஞ்ர் டி.வியில் விளம்பரம் ஓடும். வருட முடிவில் ‘டாப் 10’ அந்த மொக்கை படங்கள் இடம் பெறும். தான் எழுதிய சிறுகதை குறும்படமாக வந்திருக்கிறது. எந்த ஒரு ரியாக்‌ஷன் இல்லாமல் தன் பதிவில் ஒரு பெட்டி செய்திப் போல் கேபிள் சங்கர் போட்டிருப்பது எனக்கு வருத்தம் தான். ( Widget விளம்பரப்படுத்தி படத்தை ஓட்ட வேண்டாமா !! )

அண்ணே ! ‘சினிமா வியாபாரம் - 2’ இதை எல்லாம் சேர்த்துக்கொங்க !!


லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் புத்தகம் வாங்க.... இங்கே

படம் பார்க்க...

Monday, December 6, 2010

உயிர்க் கவிதைகள் : மு.முருகேஷ்

சிறுகதை, நாவல், கட்டுரை என்று வாசிக்க தொடங்கிய பிறகு கவிதை புத்தக வாசிப்பு மிக அறிதாக விட்டது. நண்பர்கள் கட்டாயப்படுத்தி தினித்தால் ஒழிய கவிதை புத்தகங்கள் சமிபத்தில் வாசிக்கவில்லை.

நேற்று (5.12.10) நடந்த ‘ஹைக்கூ திருவிழா’ நிகழ்ச்சியில் இரண்டு மாதம் கழித்து ‘நாகரத்னா பதிப்பக’ சார்பாக புத்தக சந்தை நடத்தினேன். நிகழ்ச்சி நடக்கும் போது மு.முருகேஷ் எழுதிய ‘உயிர்க் கவிதைகள்’ படிக்க வாய்ப்பு கிடைத்தது.

மு.முருகேஷ் அவர்கள் வந்தவாசி இருந்து வந்தவர் மட்டுமல்ல ஹக்கூ கவிதைகளை அதிகம் தந்தவாசியும் கூட. ஹைக்கூ எழுத்தாளர்களில் முக்கிய கருதப்படுபவர். ஹைக்கூ எழுத பல எழுத்தாளர்களை ஊக்கவிப்பவர். இப்படி இவரைப் பற்றி கேள்வி எனக்கு, நேற்று தான் முதல் முறை சந்தித்தேன். (ஆனால் அவரிடம் பேசவில்லை) முதல் முறையாக அவரின் புத்தகத்தை வாசித்தேன்.

புத்தகத்தில் இடம் பெற்ற எல்லா ஹைக்கூ கவிதைகளும் குழந்தைகளை மையமாக கொண்டது. ஒவ்வொரு கவிதைக்கு பொருத்தமான புகைப்படங்கள். புகைப்படத்தோடு அவரின் ஹைக்கூவை வாசிக்கும் போது படத்தில் குழந்தையின் உணர்வுகள் நம்மை பற்றிக் கொள்கிறது.

அதில் ஒரு சில ஹக்கூ என்னால் வாசித்தும் மறக்க முடியவில்லை.

சிரித்துத்தான்
மறக்க வேண்டியுள்ளது
பசியை !

**

கொஞ்சமாய் உணவு
சண்டையில்லாமல் பகிர்ந்துண்ணும்
நாயும் குழந்தையும் !

**

அம்மா அப்பா எப்ப வருவாங்க ?
பார்வையால் கேட்கும்
சுனாமியில் தப்பிய குழந்தைகள்

**

இருட்டில் தான் படிக்கிறான்
வெளிச்சமாகும்
நாளைய வாழ்க்கை !

**

கிழிசலைத் தைக்கும் தாய்
விளையாட்டால் கிழிக்கும்
குழந்தை.


ஒவ்வொரு ஹக்கூவிலும் குழந்தைகளிடம் ஒலிந்திருக்கும் சோகத்தை சொல்லுகிறார். கவிதைக்கு பொருத்தமான தேர்வு செய்யப்பட்ட புகைப்படங்கள் மிகவும் கச்சிதம். பொதுவாக புகைப்படங்கள் கொண்ட கவிதை தொகுப்பு காதலை சுமந்து தான் வரும். முதல் முறையாக குழந்தையின் உணர்வுகளை சுமந்து வருவதை பார்க்கிறேன்.

குழந்தைகளுக்கான ஒரு உலகம் இருப்பது எல்லோருக்கு தெரியும். எல்லோரும் குழந்தைப் பருவத்தை தாண்டி தான் வந்திருக்கிறோம். வளர்ந்த பிறகு மறந்து விடுகிறோம். குறைந்த பட்சம் மற்ற குழந்தையின் உலகத்தை கெடுக்காமல் இருக்க நம்முடைய குழந்தைப் பருவ உலகத்தை மறக்காமல் இருக்க வேண்டியதாக உள்ளது.

பக்: 48. விலை ரூ.30
அகநி வெளியீடு
வந்தவாசி – 604 408
பேசி: 94443 60421

Friday, December 3, 2010

வினோத் காம்லி

அலுவலகத்தில் நுழைந்ததுமே காலை வெட்டிப்பேச்சாக கிரிக்கெட்டை பற்றி பேசிக் கொண்டு இருந்தார்கள். நேற்று நியூசிலாந்து எதிரான ஒரு நாள் ஆட்டத்தில், விராத் கோலி சதம் அடித்தது தான் பேரிய பேச்சாக இருந்தது.

" என்ன பேட்டிங்... கவர் டிரைவ், பிலிக் ஷாட் என்னாவா ஆடுறான் " வியாந்தான் சுந்தர்.

" போன மேட்ச் தான் ஆஸ்திரேலியா கிட்ட 100 போட்டான். அடுத்த மேட்சல நூறு.... நீ பாரு அடுத்த சச்சினா வருவான் " என்று ரிசப்ஷனிஸ்ட் கமலி சொன்னாள்.

மூன்று ஆட்டங்களில் நன்றாக ஆடினால் தலையில் தூக்கி வைத்துக் கொள்வதும், முக்கியமான ஆட்டத்தில் சரியாக விளையாடத போது ஊழல் செய்த அரசியல்வாதியைப் போல் உருவப்படத்தை எரிப்பதும் சகஜமாகிவிட்டது. கிரிக்கெட் வீரர்களுக்கும் இது பழகிவிட்டது.

என்னைப் பொறுத்தவரையில் விராத் கோலி இரண்டு வருடத்திற்கு இந்திய அணியில் இடத்தை தக்க வைத்துக் கொண்டான். மூன்று விக்கெட் விழுந்தால் விக்கெட் விழுவதை நிறுத்தி விளையாடும் பொறுமையான ஆட்டக்காரர் இல்லை. ஒரு நாள், 20-20 ஓவர் ஆட்டங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட பிரெத்தேகிய ஆட்டக்காரன். டெஸ்ட் ஆட்டங்களில் ஆடி நிறுபிக்கும் வரை ஒருவனின் உண்மையான ஆட்டத்தை தீர்மானிக்க முடியாது என்பது என் கருத்து.

" என்ன ராம் ! எதுவுமே பேசாம இருக்க.. ?" என்றாள் அக்கவுன்டட் ரமா. என்னிடம் எதிரான கருத்து இருக்கும் என்பதை அவளுக்கு நன்றாக தெரியும். வெட்டிப் பேச்சை சூடான விவாதமாக்க அவளின் நோக்கம் புரிந்தது.

" விராத் கோலி கேம் பெரிய விஷயமா தெரியில்ல. அவன் இல்லனா ரெய்னா, யுவராஜ் அடிச்சிருப்பாங்க..." என்றேன்.

" இவ எப்போதுமே இப்படி தான். யாரையும் என்கரேஜ் பண்ணவே மாட்டான்" என்று என் மேல் இருந்த தனிப்பட்ட கருத்தை சொன்னான் சுந்தர். இரண்டு பெண்கள் முன் என் காலை வாரிவிட நல்ல சந்தரப்பம் அவனுக்கு கிடையாது.


" ஒருத்தனோட உண்மையான விளையாட்ட பத்தி தெரிஞ்சிக்கனும்னா டெஸ்ட் மெட்ச் தான் பெஸ்ட். அதுல அவன் நல்ல விளையாடட்டடும். அவன அடுத்த சச்சின் சொல்லுறேன். அதுவரைக்கும் கோலி இன்னொரு யுவராஜ் சிங் தான்" என்றேன்.

என் கருத்தில் நான் தீவிரமாக இருந்தது சுந்தருக்கு பிடிக்கவில்லை. கமலி, ரமாவும் எங்கள் வாதத்தை ஆர்வமாக கேட்டார்கள். காலை அலுவலகத்தில் இதை விட நல்ல பொழுபோக்கு அவருகளுக்கு கிடைக்கவில்லை.

" அப்போ டிராவிட், லக்ஷ்மண் தான் நல்ல ப்ளேயர் சொல்லுவ..."

"கண்டிப்பா ! எத்தனையோ மெட்சில வேகமா மூனு விக்கெட் விழுந்தா இவங்க இரண்டு பேரும் பொறுமையா நின்னு ஜெய்க்க வெச்சிருக்காங்க. குறைஞ்சது நல்ல ஸ்கோர் எடுப்பாங்க. விராத் கோலி, யுவராஜ் இருக்குற சில மெட்சில இந்தியா நூறுக் கூட தாண்டினதில்ல." என்றேன்.

" ஒன்டே மெட்சில டெஸ்ட் மெட்ச் மாதிரி ஆடுனா அவ்வளவு தான். ஆட்டம் காலி. ஆட்டத்துக்கு தகுந்த மாதிரி விளையாட சச்சினால தான் முடியும்" என்றான்.

இந்த கருத்தும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சச்சினை விட சிறந்த ஆட்டக்காரன் அவனின் பள்ளி நண்பன் வினோத் காம்லி தான். ஒரு பள்ளி விளையாட்டில் சச்சினும், காம்லியும் சேர்ந்து 700 ரன் மேல் குவித்துள்ளனர். இருவரும் ஒரே ஆட்டத்தில் தலா 400 ரன் மேல் அடித்திருக்கிறார்கள். ஆனால், இன்று சச்சின் புகழில் உச்சியில், வினோத் காம்லி இருக்கும் இடம்க் கூட தெரியவில்லை.



தொடர்ந்து இரண்டு டெஸ்ட் மெட்சில் இரட்டை சதம் அடித்தவன். தொடர்ந்து மூன்று ஆட்டத்தில் சதம் அடித்தவன். கங்குலி, டிராவிட் வரும் முன்பு நெ.4 சிறந்த இடம் வினோத் காம்லிக்கு தான் பொருந்தும். என் பள்ளி நாட்களில் வினோத் காம்லி தான் என் ஹீரோ என்று சொன்னால் சுந்தரோடு ரமா, கமலி கண்டிப்பாக சிரிப்பார்கள்.

" என்ன ராம் ! ஒரு பதிலுமே காணோம் " என்றான் சுந்தர்.

என் நல்ல நேரம் மேனேஜர் கார் நுழைவதை கமலி கவனித்தாள். எல்லோரும் அவரவர் இடத்துக்கு சென்று காலை வேலை செய்ய தொடங்கினர் அல்லது செய்வது போல் பாவனை செய்தனர். ஆனால், என்னால் மட்டும் வேலை செய்ய முடியவில்லை. பள்ளியில் படிக்கும் போது நான் ரசித்த வினோத் காம்லி நினைவுக்கு வந்தான்.

1996ல் நடந்த உலகக் கோப்பை அரை இறுதியில் எட்டு விக்கெட்டை இழந்து இந்தியா 120 ரன் மட்டுமே எடுத்திருந்தது. இருந்தும், வினோத் காம்லி தன் ஆட்டத்தை இழக்கவில்லை. நம்பிக்கையும் இழக்கவில்லை. கோல்கட்டா ரசிகர்கள் செய்த பிரச்சனையால் இலங்கை வெற்றிப் பெற்றதாக அறிவித்தனர். பள்ளியில் படித்த என்னால் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்டிலில் விழுந்து அழுதேன். அன்று இரவு கூட சாப்பிடவில்லை. நம்பிக்கையுடன் இருந்த வினோத் காம்லிக்கு எப்படி இருந்திருக்கும். அழுதுக் கொண்டே மைதானத்தை விட்டு வெளியே வந்தான். ரசிகனின் கண்ணிரை ஒரு விளையாட்டு வீரரின் கண்ணிர் எவ்வளவு விலை மதிப்பற்றது என்று விளையாடுபவர்களுக்கு தான் தெரியும்.



அன்றைய மீடியாக்கள், காம்லியை மெச்சூரிட்டி இல்லாதவன் என்றே வர்ணித்தது. அழுவதுக்கு பதிலாக நன்றாக விளையாடி இருக்கலாம் என்று பல பத்திரிகை எழுதியது. முக்கியமான ஆட்டத்தில் அரை சதம் அடித்ததோடு தன் கடமை முடிந்தது என்று சச்சின் பெவுலியன் திரும்பினான். வெற்றிப் பெற காம்லியை பலர் விமர்சணம் செய்தனர். அதன் பிறகு இந்திய அணியில் காம்லிக்கு இடம் மறுக்கப்படது. கங்குலி, டிராவிட் வந்த பிறகு முன்னனி ஆட்டக்காரனாக இருந்த காம்லி வாய்ப்புக்காக ஏங்கும் சராசரி ஆட்டக்காரனாக நடத்தப்பட்டான்.

உப்பு சப்பில்லாத ஆட்டத்தில் தான் காம்லிக்கு வாய்ப்பு கொடுத்தனர். அதில் கூட 30,40 என்று ரன் எடுத்தான். தன் உண்மையான ஆட்டத்தை காட்ட டெஸ்ட்ப் போட்டியில் காம்லிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு கங்குலி, டிராவிட் தங்கள் தங்கள் இடத்தை தக்கவைத்துக் கொண்டனர்.

எல்லோர் மனதிலும் கோபம், அழுகை, வருத்தம் என்று இருக்கும். வெளியே காட்டுவது தான் மனித குணம். இதில் பெரிய தவறு இருபதாக தெரியவில்லை. எவ்வளவு திறமை இருந்தும், தன் உணர்வை கட்டுப்படுத்த தெரியாதவன் வெற்றிப்பெற்றாலும் நீடிக்க முடியாது என்பதற்கு காம்லி முன் உதாரணமாக இருந்தது கவலையான விஷயம் தான். இன்று குரங்கு சொன்ன ஹர்பஜன், கத்தியே விக்கெட் எடுக்கும் ஸ்ரீஷாந் போன்றவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புக் கூட வினோத் காம்லிக்கு கிடைக்கவில்லை.

அலுவலகம் நேரம் முடிந்தும் வினோத் காம்லி பற்றிய நினைவு என்னால் அகற்ற முடியவில்லை. வண்டி ஓட்டும் போதுக் கூட "இவன் எல்லாம் விளையாடுறான். காம்லிக்கு வாய்ப்பு கொடுத்திருக்க கூடாத " என்ற ஆதங்கம் மனதில் இருந்துக் கொண்டே இருந்தது.

வீட்டை அடைந்ததும் என் வண்டி வைக்க முடியாத அளவிற்கு கார், டூ விலர் எல்லாம் என் வீட்டின் முன் நின்றுக் கொண்டு இருந்தது. இன்று, அப்பாவுக்கு ரிடையராகிறார் அப்போது தான் என் வீட்டு ஞாபகம் வந்தது. அம்மா வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு காபி, ஸ்வீட் ஒவ்வொன்றாக கொடுத்தார். சம்பிரதாயத்துக்கு அப்பாவின் அலுவக நண்பர்களை பார்த்து சிரித்தேன்.

" மிஸ்டர் மாகாலிங்கம் ! இனிமே ஆபிஸ் டென்ஷன் கிடையாது. ஜாலியா லைப் எஞாய் பண்ணுங்க..." என்றார் அப்பாவின் சக நண்பர்.

"வேலை செய்றவனுக்கு ஓய்வு என்னைக்குமே சங்கடம் தான். அதுவும் சாதரன மேனேஜரா தான் ரிடையராகியிருக்கேன். பணம்னு பெருசா சேர்த்து வைக்கல " என்று தன் கவலையும், பயத்தையும் அப்பா காட்டினார்.

" நீங்க பெரிய மேனேஜர்ஸ் கிட்ட கொஞ்சம் பொறுமையா நடந்திருந்தா ஹெட் ஆபிஸ்ல உங்க பேர ரெகமென்ட் பண்ணியிருப்பாங்க. எல்லாகிட்டையும் கோபமா நடந்துக்கிட்டா " என்று அப்பாவின் கீழ் வேலை செய்பவர் சொன்னார். இனி அப்பா அவருக்கு மேனேஜர் இல்லை என்ற தைரியம் அவர் பேச்சில் தெரிந்தது.

"தப்பு பண்ணும் போது மேனேஜரா இருந்தா என்ன ? ப்யூனா இருந்தா என்ன ? தைரியமா கேக்கனும். அவன் தான் மனுஷன்." என்று கோபமாக அந்த நபரிடம் பேசினார். அந்த நபர் மேலும் பேசாமல் வெளியே சென்றுவிட்டார். அப்பா ரிட்டையர்ராகவிட்டால் அவர் அப்பா திட்டுவதை வாங்கி பொறுமையாக இருந்திருப்பார். அப்பா இனி தனக்கு மேலாளர் இல்லை என்பதால் அவனால் தன் உணர்வை தைரியமாக அப்பா முன் காட்ட முடிந்தது.

ஒவ்வொரு துறையிலும் ‘வினோத் காம்லி’ இருக்கத் தான் செய்கிறார்கள் என்று என் மனதில் நினைத்துக் கொண்டேன்.

Friday, November 26, 2010

இரண்டு குறும்படங்கள்

பித்தள சொம்பு

ஜெகன், வி.எஸ்.ராகவன் போன்ற திரைப்பட கலைஞர்களை வைத்து இயல்பான நகைச்சுவையோடு எடுத்திருக்கிறார்கள். ‘ஆல்மைட்டி’ ஆங்கில படத்தை ஞாபகப்படுத்தினாலும், டைம்ங் காமெடி நம்மை ரசிக்க வைத்திருக்கிறது.



கடைசி தகவல்

நல்ல கதையை யோசித்து காஸ்டிங், வசனத்தில் கொட்டை விட்டுயிருக்கிறார்கள். இதுப் போன்ற கதையில் சோர்வில்லாத வசனங்கள் மிகவும் முக்கியம். ஒரு கட்டத்திற்கு என்ன சொல்ல போகிறான் என்பதை யூகிக்க முடிக்கிறது.

Thursday, November 25, 2010

பௌத்த சூத்திரங்கள் எப்படிப் பிறந்தன?

புத்தர் இறக்கும் போது ஞானம் பெற்றுவிட்ட அவருடைய சீடர்கள் அனைவரும் அவரைச் சுற்றிக் கூடிவிட்டனர்.அவருடைய உபதேசங்களை எழுதிவைக்க முடிவு செய்தார்கள் .குரு இறந்துவிடப் போகிறார்.வருங்காலத்துக்கு அவருடைய உஅபதேசங்களை எழுதி வைக்க வேண்டு மல்லவா?

பிரமாதமான சீடர்கள் இருந்தார்கள். மிகப் பெரிய ஞானியர்.ஆனால் யாரும் அவருடைய உபதேசங்களை அப்படியே திருப்பிச் சொல்ல முடியவில்லை.சிலர் முழு மௌனத்தில் ஆழ்ந்துவிட்டார்கள்.அவர்களை கேட்ட போது தோள்களைக் குழுக்கி ,”ஏதாவது தவறு ஏற்பட்டுவிடக்கூடாதே.பிழைகள் இருக்கத்தான் செய்யும்.அவரிடம் நாங்கள் கண்டதை எல்லாம் அப்படியே வார்த்தைகளில் வடிக்க முடியாது “ என்று சொல்லிவிட்டார்.



எந்த ஒரு ஞானியும் புத்தரின் உபதேசங்களைத் தொகுத்துச் சொல்ல முன் வரவில்லை.கடைசியாக ஆனந்தரை அனுகினார்கள்,புத்தரோடு நாற்பத்திரெண்டு வருடங்கள் இருந்தவர் அவர் ஒருவர் தான்.ஆனாலும் ஞானம் சித்திக்கவில்லை.எல்லாமும் அவருக்கு நினைவிருந்து .வார்த்தைக்கு வார்த்தை புத்தருடைய உபதேசங்களை அவர் நினைவில் வைத்திருந்தார்.

அசாதாரணமான நினைவாற்றலாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் ஒரு சிக்கல் இருந்தது.ஒரு ஞானியின் வார்த்தைகளை அஞ்ஞானியின் வாய் வழியாகக் கேட்டு நம்ப புடியுமா?

புத்தர் இறந்த அன்று ஆனந்தாவை அழைத்து ,”ஆனந்தா!நாளைக்கு நான் இங்கே இருக்கமாட்டேன்.எனவே அவசரப்படு,இனியும் தள்ளிப் போடாதே!”என்றார்.

புத்த்ர் இறந்தப்பின் அங்கே கூடியவர்கள் கேட்டுக் கொண்ட்தற்காக ஆனந்தர் இருபத்து நான்கு மணி நேரம் கண்கலை மூடி அமர்ந்தார்.அவருடைய வாழ்வில் முதல் முறையாக அப்படி அமர்ந்தார்.எப்போதும் புத்தரோடேயே இருந்துவிட்டதால் அவருக்கு கண்களை மூடி அமர்வதே முடியாத காரியமாக இருந்தது.

தினமும் அவரை சுற்றி பல காரியங்கள் நடந்துக் கொண்டே இருந்த்தால் அவருக்கு எப்போதும் ஏதாவது செய்வதற்க்கு வேலை இருந்து கொண்டே இருந்தது இப்போதுதான் புத்தர் போய்ச் சேர்ந்துவிட்டாரே !வேறு வேலை ஏதும் இல்லை .கண்களை மூடி இருபத்து நான்கு மணிநேரம் அமர்ந்துவிட்டார்.தன் வாழ்வில் முதல் முறையாக மௌனத்தில் அமர்ந்துவிட்டார்.
இருபத்து நான்கு மணிநேரத்தில் ஞானம் பெற்றார்.நாற்பத்திரெண்டு வருடம் நடக்காத காரியம் இருபத்து நான்கு மணிநேரத்தில் நடந்துவிட்ட்து.

அவருடைய ஞானப் பிரகாசத்தை பிற ஞானியர் கண்டனர்.அவருடைய ஜோதியை கண்டனர்.பிறகு “ஆனந்தா இனி சத்சங்கத்துக்கு வரலாம் நீர் சொல்லச் சொல்ல நாங்கள் எழுதிக் கொள்கிறோம் “என்றார்கள்.

அப்படித்தான் பௌத்த சூத்திரங்கள் யாவும் தொகுக்கப்பட்டன.

**

புத்தரை ஒருவர் திட்டினார்.புத்தர் கேட்டார்,தன் வழி நடந்தார்.புத்த பிட்சு ஆனந்தர்,”திட்டியவனுக்கு மறுமொழி எதுவும் கூறவில்லையே” என்று கேட்டார்.

புத்தர் “மற்றவர்களது தவற்றுக்கு என்னைத் தண்டித்துக் கொள்வதை,வெகு காலத்திற்கு முன்பே நிறுத்தி விட்டேன்.அவன் திட்டுகிறான்.திட்டுவது அவன் செயல்,அவன் தவறு.அதில் நான் எங்கே நுழைந்தேன்”திட்டட்டும்,திட்டாதிருக்கட்டும்.மோசமாகத் திட்டட்டும்.லேசாகத் திட்டட்டும்,பலத்தைச் செலுத்தித் திட்டட்டும்,பலமற்று திட்டட்டும்,அவன் உழைத்தான்.கிராமத்திலிருந்துநடந்து,நம் பாதை வரையில்,திட்டுவதறகாக் வந்தான்.திட்டி விட்டான்.தனது வேலையை முடித்து விட்டான்,திரும்பினான்.இதில் எனக்கு என்ன சம்பந்தம்?

திட்டுவதற்க்கு,அவனை நான் தூண்டவில்லை அவனை நான் உற்ச்சாகபடுத்தவுமில்லை. எனக்கு அதில் எந்தத் தொடர்பும் இல்லை.நான் தொடர் பற்றவன்.அவனது தவற்றிற்காக ,எனக்கு ஏன் தண்டனை விதித்துக் கொள்ளவேண்டும்?நான் கோபமைடைந்தால்,அதில் எரிபடுவது நானே .தீ,எனக்குள் எழும்.எனது மயிர்கால்கள் அனைத்தும் குத்திடும்;எனது பிராணன் துடிக்கும்,எனது ரத்த அழுத்தமே அதிகரிக்கும்,இரவு எனக்கு உறக்கம் வராது;இந்த மனிதன்,திட்டி முடிதாயிற்று,வேலை முடிந்தது,என்று ஆனந்தமாக உறங்குவான்!”எனறார்.

Tuesday, November 16, 2010

சத்திய சோதனை

இந்திரா பார்த்தசாரதி

இ.பா புத்தகங்கள் என்றால் அரசியல் பகடி செய்யும் எழுத்துக்கள் தான். ’வேதப்புரத்து வியாபாரிகள்’ அபத்தங்களாக சம்பவங்களை கோர்க்கப்பட்டு தற்கால அரசியல்வாதிகளை நக்கலடித்திருப்பார்.’ஏசுவின் தோழர்கள்’ நாவலில் போலிஷ் நாட்டோடு அரசியலோடு இந்தியாவை ஒப்பிட்டு செய்திருப்பார். ‘சுதந்திர பூமி’ நாவலில் ஒரு சமையல்க்காரன் அரசியல்வாதியான கதையை சொல்லியிருப்பார். இதில் அண்ணா, கலைஞர் போன்றவர்களின் கொள்கையை பகடி செய்திருப்பார். இந்த மூன்று அரசியல் நாவலை கட்டுரையாகக் கூட எழுதியிருக்கலாம். ஏன் நாவலாக எழுதினார் படித்து முடித்த பிறகு தோன்றியது ? கட்டுரையில் சொல்ல வேண்டியதை கதாப்பாத்திரங்களின் விவாதம் மூலம் சொல்லியிருப்பார்.

மிக எளிமையான எழுத்து, அதிக வர்ணனையில்லாத நடை என்பதால் இவரின் மூன்று புத்தங்களை படித்திருக்கிறேன். இ.பாவின் ‘சத்திய சோதனை’ நான் படித்த நான்காவது புத்தகம். இதுவும் அரசியலை பற்றிய சமக்கால நாவல் தான்.

மகாத்மா காந்தி சுயசரிதையின் தலைப்பைக் கொண்ட புத்தகம் தவிர அவரின் சுயசரிதைக்கும், இந்த நாவலுக்கும் எந்த சம்மந்தமில்லை. காந்தியிருந்திருந்தால் தன் புத்தகம் பெயர் இதற்கு வைத்தற்காக மான நஷ்ட வழக்கு போட்டிருப்பார். அவர் இல்லை என்ற தைரியத்தில் இந்த தலைப்பு வைத்துவிட்டார்கள் போல.

தமிழ் அகராதியில் ‘அரசியல்’ என்றால் நாட்டை நிர்வாகிக்கும் கலை. ஆனால் நாம் பயன்ப்படுத்துவது...? தந்திரம், ஏமாற்றுவது, முகமூடி, காலை வாரிவிடுவது, மாட்டிக் கொள்ளால் இருப்பதற்கு... போன்ற காரியங்களுக்கு மாற்றுப் பெயராக தான் இருக்கிறது.

பிரும்மநாயகம் என்ற அரசியல்வாதியின் சுயசரிதை எழுத கோஸ்ட் ரைட்டராக வரும் வாசுதேவன், அவர் செகரெட்டியாக சேருக்கிறான். அங்கு அவருடன் வாசுதேவனுக்கு கிடைக்கும் அனுபவம், அரசியல் தந்திரமும் அவனை பிரம்மிக்க வைக்கிறது. பிரம்மநாயகம் வேட்பாளராக நிருத்திய பிரம்மநாயகத்தின் நண்பர் தணிகை கொலைச் செய்யப்படுகிறார். தணிகையின் கொலை அரசியலுக்காக செய்யப்பட்டதா ? பிரும்மநாயகம் பங்குயிருக்குமா ? என்று பல சந்தேகங்கள் வாசுதேவன் மனதில் ஓடுகிறது. இறுதியில், கொலை பழி வாசுதேவன் மேல் படியாக சந்தர்ப்பங்கள் அமைக்கிறது. அதில் வாசு எப்படி மீண்டான் என்பதை புத்தகம் வாங்கி தெரிந்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாட்டிலே சரியான குடிநீர் வசதிகூட இல்லாம இருக்கிறவங்க சதவிகிதம் தெரியுமா உங்களுக்கு ? அவங்களுக்கு என்ன செய்யப் போறீங்க ?’

‘சாராயம் கொடுங்க’

’அரசாங்கத்துக்கு உங்க சிபாரிசு இதுதானா ?’

‘என் சிபாசிசு இல்லேய்யா. அரசாங்கம் இதைத்தானே இப்போ செய்திட்டு வருது ?”


**

’படிச்சு முடிச்சாச்சு. வேலை தேடிக்கிட்டிருக்கேன்.’

வேலை தேடுவானேன் ? கட்சியிலே சேர்ந்திடு !’


’வேதப்புரத்து வியாபாரிகள்’, ‘ஏசுவின் தோழர்கள்’ நாவலில் இருந்த இ.பாவின் அரசியல் நகைச்சுவை இதில் குறைவு தான். எழுத்தாளன் கண்ணோட்டத்தில் நடக்கு கதை இன்னும் அரசியல் நகைச்சுவை கலந்திருக்கலாம்.

தன் முந்தைய நாவலில் திராவிட அரசியலை பகடி செய்தவர், இதில் வன்னிய அரசியலை பகடி செய்திருக்கிறார். குடி பழக்கம் இல்லாதவனாக பேசும் தலைவன் அந்தரங்க நண்பனோடு குடிப்பது போல் அமைத்திருக்கிறார்.

பார்ப்பனிய அரசியல் ஒன்று இருக்கிறது. அதைப் பற்றி இவர் ஒரு நாவல் எப்போ எழுதப்போகிறார் ??

சமகால அரசியல் நாவல் வரவேற்க ஒன்று தான். இ.பா நாவல் ஒரு தலை பட்சமாக இருக்கிறது என்று தான் தோன்றுகிறது.

நூல் வாங்க... இங்கே


ரூ.100 , பக் : 136
கிழக்கு பதிப்பகம்

Thursday, November 11, 2010

சில மொக்கை குறும்படங்கள்

நல்ல துணி எடுக்க நூறு துணியை எடுத்து வேண்டாம் என்று ஒதுக்குவார்கள். அது போல தான், நல்ல குறும்படம் பார்க்க சில மொக்கை குறும்படங்களை பார்த்து தொலைய வேண்டியதாக இருக்கிறது. அப்படி நல்ல குறும்படங்களை தேடும் போது கண்ணில் மாட்டிய சில மொக்கை படங்கள். எடுத்துக் கொண்ட கதைக் களம், மெசேஜ் சொல்ல வேண்டும் என்ற நல்ல எண்ணத்திற்காக இயக்கியவர்களை பாராட்டலாம்.

Someone’s

பள்ளி மாணவன் இயக்கிய குறும்படம் என்பதை தவிர பெரிதாக சொல்ல இதில் இல்லை. மாணவன் என்பதால் என்னவோ கண்டிப்பாக மெசேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக இறுதியில் சொல்லியிருக்கிறார்.



பலன்

நாளைய இயக்குனர்களுக்கு தன்னம்பிக்கை கொடுப்பதற்காக எடுக்கப்பட்ட குறும்படமா ? நகைச்சுவை படமா ? என்று ஒன்றும் புரியவில்லை. படம் எடுக்க வரும் இயக்குனரின் காட்சியை நடிகர்கள் எப்படி மாற்ற வைக்கிறார்கள் என்பதை இந்த குறும்படம் காட்டுகிறது.



முதல் படி

இறுதி காட்சி வரை இந்த பெண்ணுக்கு என்ன குறை இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டுகிறது. வசனம் ஓரளவுக்கு பரவாயில்லை. நல்ல எண்ணத்திற்காக எடுக்கப்பட்ட குறும்படம் என்பதால் விமர்சணத்துக்கு அப்பால் இதை பார்க்க வேண்டும்.

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

Tuesday, November 9, 2010

இலக்கியச் சோலையில் "சாப்பாட்டு பிரியன்"



அக்டோபர் மாதம் இலக்கியச் சோலை மாத இதழில் நான் எழுதிய "சாப்பாட்டு பிரியன்" சிறுகதை.

Thursday, November 4, 2010

ஹைக்கூ கவிதைகள் - 4

தங்கத்தில் இருந்து
வெள்ளி வந்தது
ஏழையின் வேர்வை !

**

ஓசோனின்
ஓட்டையைப் போல்
ஏழையின் குடை !

**

என்னுள் இருந்து
என்னை ஆட்டிவைக்கிறது
தலைகனம் !

**

ஆணுக்கு இருந்திருந்தால்
பரத்தையை தேடியிருக்க மாட்டான்
கற்பு !

**

நீண்ட தூரம் பயணம்
ஓட்டியவன் கட்டிலில்
அவனை ஓட்டியது பனியில் !

**

நூறு ரூபாய் லஞ்சம்
வறுமைக்கோட்டுக்கு கீழ்
சான்றிதழுக்காக !

Tuesday, November 2, 2010

இரண்டு குறும்படங்கள்

நண்பா

பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுவர்களுக்குள் போட்டி தான் கதை. யார் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுக்கிறார்கள் என்ற ஆரோக்கிய விஷயத்தை வைத்து எடுத்ததை பாராட்டுக்குறியது. இரண்டு சிறுவர்களும் நடிப்பும் க்யூட். இந்த குறும்படத்தில் வரும் குழந்தைகளுக்கான பாடல் நம்மை சிறுவர் உலகத்திற்கு அழைத்து செல்கிறது.

பல விருதுகள் “நண்பா” குறும்படத்திற்கு கிடைத்துள்ளது.



தோட்டா... விலை என்ன ?

படத்தின் ஆரம்பக் காட்சியில் Perfume, SAW போன்றா சீரியல் கில்லர்ஸ் படம் போல் பார்வையாளர்களை யோசிக்க வைத்துவிட்டு, இறுதி காட்சியில் தன் கருத்தை நச் என்று பதிவு செய்திருக்கிறார். சீரியல் கில்லராக நடித்த நடிகர் மிக இயல்பாக நாடகத்தனம் இல்லாமல் நடித்திருக்கிறார்.

Friday, October 29, 2010

Reaction and Response



ஹோட்டலில் ஒரு பெண் மீது கரப்பான்பூச்சி அவள் மீது விழ, கத்தி ஆரபாட்டம் செய்துவிட்டாள். கத்தக்கள்ளி, குச்சுபுடி என்று பல நடனங்கள் ஆடியும் அவள் உடலில் இருந்து அது அகரவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் கணவன் தட்டி விட, அந்த கரப்பான் இன்னொரு பெண் மீது பவ்வியமாக அமர்ந்தது.

அந்த பெண் செய்தது இரண்டு மடங்கு நடனமாடி கரப்பான்பூச்சி தள்ளிவிடுகிறாள். அந்த கரப்பான் காபி கப் எடுத்து வரும் சர்வர் மீது கால் மேல் கால் போடாத குறையாக ஏறிக்கொண்டது.

அவன் அசரவில்லை. பொறுமையாக இருந்தான். அதன் அசைவுகளை தீவிரமாக கவனித்தான். தன் கையில் காபி கப்பை வைத்துவிட்டு, அது தப்பிக்க முடியாத நேரம் பார்த்து பிடித்து தூக்கி வெளியே ஏறிந்தான்.

அந்த ஹோட்டலில் நடந்த கலாட்டாவுக்கும் கரப்பான்பூச்சிக்கும் ஏதாவும் சம்மந்தமுண்டா ? இல்லை.

கரப்பான்பூச்சி தூக்கி ஏறிய சர்வர் காட்டிய நிதானத்தை அந்த இரண்டு பெண்மணிகள் காட்டவில்லை.

எந்த பிரச்சனையையும் நம் உடனே எதிர்விளைவை காட்டுவதிற்கு பதிலாக நாம் பொறுமையாக கையாள வேண்டும்.

வீட்டில் அப்பா திட்டுயதும், வாடி சென்று குழந்தைகள் அழுகிறது.

முதலாளி நம்மை திட்டிய பிறகு வேலையில் கோபத்தை காட்டி மேலும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறுகள் செய்வதற்கும், நம்மை திட்டியவர்களுக்கு எந்த சம்மந்தமில்லை. நாம் காட்டிய எதிர்விளைவு தான் காரணம்.

மேல் குறிப்பிட்ட பிரச்சனையில் பெரிதாக தெரிந்தது. காரணம், அந்த பெண் எதிர்விளைவை உடனே காட்டியது தான். சர்வர் பொறுமையாக கையண்டதால் பிரச்சனை மேலும் வளராமல் இருந்தது.

வரி விலக்கில்லாத ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்

We should not react in life, we should always respond.
Reactions are always instinctive whereas responses are always intellectual


***

மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சந்திருவுக்கு நன்றி :)

Wednesday, October 27, 2010

மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை

ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"

"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.

"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."

" அடி பின்னியிருப்பாங்களே ! "

" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "

"அப்புறம் ??"

" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "

***

கணவன் மனைவி இடையே பெரிய சண்டை.

கோபத்தில் மனைவி தன் அம்மாவிடம் போனில், " எனக்கும் அவருக்கும் மறுபடியும் பெரிய சண்ட. நா உன் கூட வந்திருக்கேன்" என்றாள்

" இல்லம்மா... ! உன் புருஷன் செஞ்ச தப்புக்கு வருத்தப்படனும். நா வந்து உன் கூட தங்குறேன் " என்றாள்.

***


கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.

ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.

சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இர நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.

கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.

அன்புள்ள கடவுளுக்கு,

நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.

எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.

அன்புடன்,
கார்த்திக்

Tuesday, October 26, 2010

காதல் கவிதைகள்

இயற்கை செய்த
க்ளோனிங்
அவள் மேல் விழுந்த
மழைத் துளி !

**

உன் திருமணத்திற்கு பரிசாக கொடுத்த
வைரமாலை கரைந்து விட்டதாக சொன்னாய் !
என் காதலை புரிந்து கொள்ளாத உனக்கு
என் கண்ணிர் துளியா தெரிய போகிறது !

**



உள்ளங்கையறித்தால்
பணம் வருமாம்
யார் சொன்னது ?
புதையல் நீ கை கொடுத்ததால்
எனக்கு
கை ரேகையே வந்தது !!

**

அதே புன்னகை
அதே காதல்
அதே மோகம்
அறுபது வயதில்... !

**

என் வீட்டு
எதிரே வந்த பிறகு
காலியாய் இருந்த
என் டைரி பக்கங்கள்
கவிதை வாசித்தது !!

**
என் பழைய கவிதைகளை
காட்டிய போது
ஒவ்வொரு பக்கமும்
தனியாக வருகிறது
என்று சொன்னாய் !

நன்றி கெட்ட கவிதை
எழுதியவனை விட்டுவிட்டு
எழுத தூண்டிய
உன்னை தேடி வருகிறது !!

Thursday, October 21, 2010

காவலன் – படம் பார்க்காதவனின் விமர்சனம்

பதிவுலகில் முதல் முறையாக படம் வெளிவரும் இரண்டு வார முன்பே வரும் விமர்சனம்.

எப்படியாவது ஒரு பணக்காரனுக்கு காவல்க்காரனாக வேண்டும் என்பது அர்ஜூனின் லட்சியம். அதனால், தன் ஹீரோயிசத்தை பயன்படுத்தி பெரிய தலைகளை கவர நினைக்கிறான். அவன் செய்யும் ஹீரோயிசம் எல்லாம் காமெடி பீஸாய் போகிறது.

பெரிய தாதாவாக இருந்து ரௌடிசத்தை விட்டு தன் குடும்பத்தோடு வாழும் ராஜ்கிரணுக்கு காவலனாக முயற்சிக்கிறான் அர்ஜூன். ராஜ்கிரண் மறுத்தும், பெரிய சிபாரிசுடன் வருகிறான். வேறு வழி இல்லாமல் அர்ஜூனை காவலனாக வேலைக்கொடுக்கிறார் ராஜ்கிரன். ஒரு சந்தர்ப்பத்தில் ராஜ்கிரண் உயிரை காப்பாற்றுகிறான் அர்ஜூன். அதனால், தன் மகள் மீராவின் காவலனாக அர்ஜூனை இருக்க சொல்கிறார்.



மீராவும், அவன் தோழி மித்ராவும் செல்லும் இடமெல்லாம் காவல்காக்கிறேன் என்ற பெயரில் அர்ஜூன் பின் தொடர்கிறான். அவன் தொல்லை தாங்க முடியாத இருவரும் முகம் தெரியாத பெண்ப் போல் அர்ஜூனின் செல்லுக்கு போன் செய்கிறார்கள். அர்ஜூனை காதலிப்பதாக சொல்கிறாள் மீரா. ஆரம்பத்தில் விளையாட்டாக போக ஒரு கட்டத்தில் அர்ஜூன் போன் பேசும் பெண்ணை காதலிக்கிறான். மீராவும் அர்ஜூனை காதலிக்க தொடங்குகிறாள். அர்ஜூன் காதலிப்பது தன்னை தான் என்று மீரா சொல்ல வரும் போது ராஜ்கிரண் அர்ஜூனை தன் மகளை காதலிப்பதை அறிந்து அடிக்கிறான். அர்ஜூனை காப்பாற்ற மீரா ராஜ்கிரணிடம் அர்ஜூன் காதலிப்பது தன் தோழி மித்ரா என்கிறாள். அர்ஜூனும் தன்னிடம் போனில் பேசியது மித்ரா என்று நினைத்துக் கொள்கிறான். மித்ராவும் வேறு வழியில்லாமல் தன் தோழிக்காக அர்ஜூனின் கரத்தை பிடிக்கிறாள்.

சில வருடங்களுக்கு பிறகு.... அர்ஜூனின் மனைவி மித்ரா இறந்துவிடுகிறான். இறப்பதற்கு முன் தன் மீராவைப் பற்றி தன் டைரியில் எழுதி வைத்ததை அர்ஜூனின் மகன் படிக்கிறான். மீராவை பார்க்க வேண்டும் என்று அர்ஜூனிடம் கேட்க, முதலில் மறுக்கும் அர்ஜூன் பிறகு சம்மதிக்கிறான். ( kuch kuch hota hai படம் ஞாபகம் வந்தால் நான் பொருப்பில்லை )

அர்ஜூன் தன் மகனோடு மீராவை பார்க்க வருகிறான். அர்ஜூனும், மீராவை இணைந்தார்களா ? அவர்கள் காதலுக்கு ராஜ்கிரண் சம்மதித்தாரா ? என்பது தான் மீதி கதை.

தீபாவளியில் வெளியாகும் 'காவலன்' படத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

அர்ஜூனாக விஜய். தன் முந்தைய படங்களில் ஹீரோயிசம் என்ற பெயரில் காமெடி செய்தவர், இதில் காமெடி என்ற பெயரில் ஹீரோயிசம் செய்திருக்கிறார். செயற்கைத்தனமாக இருக்கிறது. கதையே இல்லாமல் சுறா, வேட்டைக்காரன் நடித்தவர் கொஞ்சம் கதை இருக்கிற படத்தை தேர்வு செய்திருக்கிறார். அதற்காக பாராடியாக வேண்டும்.

மலையாளத்தில் திலீப் இயல்பாக செய்த நகைச்சுவையை விஜய் சில இடங்களில் படு மொக்கையாக்கி விட்டார்.

மீராவாக அசின். பல இடங்களில் முதிர் கன்னியாக தெரிகிறார். அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் தயாராகிவிட்டார் என்று தோன்றுகிறது.

அசினின் தோழியாக 'சூர்யன் சட்டக் கல்லூரி' நாயகி மித்ரா. மலையாளத்தில் செய்த அதே பாத்திரத்தை ஏற்று, கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்.

வேட்டி, சட்டையில் வந்த ராஜ்கிரணை கோர்ட், சூட் போட்டு அழகு பாத்திருக்கிறார்கள். ஆனால், பேச்சில் அதே கிரமாத்து நடை தான். அசினின் அம்மாவாக ரோஜா. 'நெஞ்சினிலே' படத்தில் விஜய்யுடன் ஆட்டம் போட்டவர், இதில் அவருக்கு அத்தையா...!! நினைக்கவே கொடுமையாக இருக்கிறது.

மலையாளப்படத்தில் ரீமேக் என்பதால் பல இடங்களில் மலையாள வாசம் இருக்க தான் செய்கிறது.

விமரசனத்துக்கு உதவியது :

பாடிகார்ட் ( மலையாளப்படம்)
விஜய் , அசின் முந்தைய படங்கள்
காவலன் படத்தின் வேலை செய்தவர்களின் பேட்டி


படம் பார்க்காமல் விமர்சனம் எழுதியதை கண்டிக்க நினைப்பவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

சொந்த கற்பனையில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம் என்று வெளி மொழி படங்களை ரீமேக் செய்தால், படம் பார்க்காமல் விமர்சனம் எழுதுபவர்கள் வரத்தான் செய்வார்கள்.

Friday, October 15, 2010

மகாபுல்வெளி : ஆன்டன் செகாவ்

உலக இலக்கிய ஆளுமைகள் உருவாக்கியதில் ரஷ்ய இலக்கியத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, கார்க்கி, கோகல், புஷ்கின், துர்கனேவ் என்று தொடரும் இந்த பெரிய பட்டியலில் செகாவ் மிகவும் முக்கியமானவர்.

ஜனவரி 29, 1860 அன்று ஆன்டன் செகாவ் பிறந்தார். தன் பெற்றோரின் ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் கிரேக்கம் கற்க கிரேக்க பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஆனால், கிரேக்க தேர்வில் இவரால் தேர்ச்சி பெற முடியவில்லை. ருஷ்ய மொழியில் மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார். பள்ளிப்படிப்பு முடித்து மருத்துவம் படிக்க மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.

குடும்ப சுவை, படிப்புக்கு பண தேவை, பொருளாதார உதவிக்காகவும் பணம் திறட்ட தான் செகாவ் எழுத தொடங்கினார். அவருடைய அரும்பு எழுத்துகளுக்கு ஒரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. Oskolki என்ற முன்னனி பதிப்பகத்தில் எழுத செகாவுக்கு வாய்ப்புகிடைத்தது. அந்த பதிப்பகத்திற்காக பல சிறுகதை எழுதினார்.

அவர் எழுதிய The Huntsman சிறுகதைக்கு அன்றைய காலத்தில் பெரிய எழுத்தாளராக கருதப்படும் க்ரிங்ரோவின்ச் அவரை பாராட்டி கடிதம் எழுதியிருந்தார். அவரின் பாராட்டு மேலும் பல சிறுகதை எழுத தூண்டியது.

A Dreary Story, The Murder, Peasants போன்ற சிறுகதைகள் எழுதியோடு The Seagull என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். ஆனால் அவரை அதிகம் புகழ் உச்சியில் கொண்டு சென்றது என்றால் ‘Steppe’ கதை தான்.

Severny Vestnik (The Northern Herald) என்ற பத்திரிகையில் Steppe’ கதை பிரசுரமானது.

ஒன்பது வயது சிறுவன்யின் பயணம் தான் கதையின் கரு. பெற்றோரை இழந்த ஒன்பது சிறுவன் தன் மாமாவுடன் ரயிலில் பயணம் செய்கிறான். பயணத்தில் அவன் சந்திக்கும் பாதரியார், பெண், இன்னும் சில நண்பர்கள், குதிரை பயணம் என்று ஒரு பயணத்தின் கதையாக செல்கிறது. சிறுவனின் பயணத்தில் உலகம் எவ்வாறு இயங்குகிறது என்று சில இடங்களில் செகாவ் கவிதை நடையில் அழகாக சொல்லியிருக்கிறார்.

ஆங்கிலத்தில் நாவல் வடிவத்தில் எழுதப்பட்ட சிறுகதை என்று ‘Steppe’ கருதப்படுகிறது. Steppe’ கதைக்கு கிடைத்த வரவேற்பு, Ivanov என்ற நாடகத்தை செகாவ் எழுத உத்வேகமாக இருந்தது.




இன்று பல இலக்கியவாதிகளின் பார்வையில் ஆன்டன் செகாவ் மாஸ்டர் பீஸ்ஸாக சொல்லுவது என்ற நாவலை தான். இதை ம.ந.ராமசாமி திறம்பட தமிழில் 'மகபுல்வெளி' என்ற பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார்.

புத்தகத்தை வாங்க.... இங்கே


செகாவின் ஆளுமையை பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் ‘செகாவின்மீது பனிபெய்கிறது' என்ற நூலை எழுதியிருக்கிறார்.

மகாபுல்வெளி :
ஆன்டன் செகாவ்
ரூ.80, பக் : 192
தமிழில் : ம.ந.ராமசாமி

Wednesday, October 13, 2010

இரத்த சரித்திரத்தின் கதை !

சீமான்களை எதிர்த்து நிலப்போரட்டத்தில் குதித்த ராமுல்லையாவை, நில முதலாளியான நாராயண ரெட்டி கொலை செய்கிறான். தன் தந்தை மரணத்திற்கு காரணமாக இருந்த நாராயண ரெட்டி, நர்சன்னா ரெட்டி என்று ஒரு குடும்பத்தையே போட்டு தள்ளுகிறான் பரிடலா ரவிந்திரா சௌத்ரி. தன் உயிரை பாதுகாத்துக் கொள்ள மாமா வீட்டுக்கும் வரும் ரவி, அவர் மகள் சுனிதாவை திருமணம் செய்துக் கொள்கிறான். தன் தோழர்களின் உதவியோடு அவன் இருக்கும் பகுதியில் கிரானைட் இருப்பதை கண்டு பிடிக்கிறான். அது தான் அவன் வாழ்க்கை திருப்புமுனையாக இருக்கிறது.



தெலுங்கு தேச கட்சியில் இணைந்து எம்.எல்.ஏவாகிறான். அதன் பின் அனந்தபுர மாவட்டத்தை தன் கையில் வைத்துக் கொள்கிறான். அவனால் பாதிக்கப்பட்ட கங்குல சூர்யநாராயண ரெட்டி என்கிற சூரி (நாராயண ரெட்டி யின் மகன்) ரவியை பழிவாங்க நினைக்கிறான்.

ரவியை கொல்ல ரிமோட் கன்ட்ரோல் கார் பாப் வைத்து கொலை செய்ய நினைக்கிறான் சூரி. ஆனால், ரவி அந்த தாக்குதலில் இருந்து தப்பித்து விடுகிறான். ஆனால், துரதிஷ்டவசமாக 26 பேர்கள் அதில் இறக்கிறார்கள். நாற்பதுக்கு மேல் படுகாயம் ஏற்ப்படுகிறது. இதனால், சூரிக்கு கோர்ட் ஆயுள் தண்டை வழங்குகிறது.

மாநில ஆட்சி தெலுங்கு தேச கட்சியிடம் இருப்பதால் ரவிக்கு பாதுகாப்பு பலமாகிறது. அவனை கொலை செய்யாமல் விட போவதில்லை என்ற வேட்கையில் சூரி இருக்கிறான். காரணம், 1983ல் நாராயண ரெட்டியை கொன்ற ரவி, 1993 சூரியின் குடும்பத்தின் உள்ள ஆறு பேரைக் கொன்று இருக்கிறான். அதன் கோபம் அவனை கொலை செய்ய எட்டு வருடங்களாக போராடுகிறான்.

2004 தேர்தலில், ரவி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் காங்கிரஸ் மாநிலத்தில் ஆட்சி அமைக்கிறது. ரவி கொடுக்கப்பட்ட பாதுகாப்பு நான்கு பேராக குறைகிறது. அவனுக்கு ஆதரவாக இருந்தவர்கள் சூரியால் கொல்லப்படுகின்றனர். அரசாங்கத்திடம் முறையிட்டும் ரவி சரியான பாதுகாப்பு கிடைக்கவில்லை.

24-1-2005 கட்சி மீட்டிங் முடிந்து திரும்பும் போது சூரியின் தோழர்களால் ரவி சுட்டுக் கொள்ளப்படுகிறான்.

இது ராம்கோபால் வர்மாவிடன் 'ரத்த சரித்திரம்' படத்தின் கதை மட்டுமல்ல.... ராயல் சீமா பகுதியில் நடந்த உண்மையான கதையும் இதுவே !!



அந்திராவில் இருக்கும் ராயல் சீமா பகுதி பாக்ஷனிசம் (factionism) பெயர் போன ஒன்று. கடப்பா, அனத்தப்பூர், குர்நூல் போன்ற மாவட்டங்களில் வெட்டு, குத்து, கொலை சர்வ சாதரனம். சாயல்சீமா பகுதியை வைத்து எத்தனையோ தெலுங்கு படங்கள் பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். வெற்றிப் பெற்றுயிருக்கிறது. தமிழில் இறக்குமதியும் செய்யப்பட்டிருக்கிறது. ஒரு உண்மையான சம்பவத்தை வைத்து எந்த மசாலாவும் இல்லாமல் ராயல்சீமா பகுதியின் அரசியலை படமாக வருகிறது 'இரத்த சரித்திரா'.

பொதுவாக ராம்கோபால் வர்மாவின் படங்களில் வன்முறை அதிகமாக இருக்கும். ஹீரோசியம் இல்லாமல் ரியலிசமாக இருக்க வேண்டும் எடுக்கும் காட்சிகளில் மெனக்கெட்டு படமாக்குபவர் தான். ஆனால், வன்முறை தூண்டும் காட்சிகளை தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்ப யோசிக்கும் போது அவர் மட்டும் ஏன் வன்முறையை நம்பி படம் எடுக்கிறார் என்று தெரியவில்லை. நான் வன்முறை படங்களை பெரிதாக பார்ப்பதில்லை. இருந்தும், இந்த படத்தை மிகவும் எதிர்பார்க்கிறேன்.

ஒரு ட்ரெய்லரை திரும்ப திரும்ப பார்த்தேன் என்றால் அது 'இரத்த சரித்திரம்' தான். காரணம், இந்த படத்தின் கதை பின்னனி. இன்னொன்று சூரியாவின் குரல்.

இதன் கதை பின்னனியை ஆராய்ந்தால் ஆந்திராவின் ராயல்சீமாவின் அரசியல் முகம் வெளுத்துவிடும்.

நான்கு முறை எம்.எல்.ஏவாக இருந்தவன், தெலுங்கு தேச பார்டியின் முக்கியமான பொருப்பில் இருப்பவன், ஆந்திராவின் மந்திரியாக இருந்தவன். இது தான் பரிடலா ரவிந்திரா பற்றி பத்திரிக்கை சொல்லும் செய்திகள். ஆனால், தன் தந்தை ராமுல்லையா வழியை தன் வாழ்க்கையையும் ஒரு நக்ஸ்லைட்டாக தொடங்கியிருக்கிறான். தன் பாதுகாப்பாக்காக அரசியலில் சேர்ந்தவன். ரெட்டி குடும்பத்தினர், காங்கிரஸ் கட்சியினர் என்று பலரை கொலை செய்திருக்கிறான்.

சூரியநாராயண ரெட்டி... அவன் மீது பல கற்பழிப்பு வழக்கு இருக்கிறது. இருப்பத்தியாரு பேரை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை கைதியாக இருந்து ஜனவரி, 2010 ஜெயிலில் இருந்து வெளியே வந்திருக்கிறான். சௌத்ரிகளுக்கும், ரெட்டிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியை ஆராய்ந்தால் ஆந்திராவில் இருந்து பல கதைகள் எடுக்கலாம்.

ரத்த சரித்திரம் படத்தில் ரவி பாத்திரத்தை விவேக் ஓப்ராய்யும், சூரி பாத்திரத்தை சூர்யாவும் நடிக்கிறார்கள். இரண்டு கதாநாயகர்கள் நடிப்பதால் சினிமா தர்மப்படி இரண்டு கொலையாளியின் வாழ்க்கை வடிவத்தை நியாயப்படுத்துவது போல் திரையில் காட்டலாம். ஆனால், இருவரும் பக்கா ரௌடிகள் என்பது உண்மை. அதற்கான தகவல்கள் இன்னும் கீழ் இருக்கும் தளத்தில் பார்க்கலாம்.

http://en.wikipedia.org/wiki/Paritala_Ravindra
http://royalchowdarys.wetpaint.com/page/Paritala+Ravindra+chowdary
http://www.rediff.com/news/2005/jan/28syed.htm
http://www.indianexpress.com/old/ie/daily/19971124/32850643.html
http://cbi.nic.in/pressreleases/PRelease2005/p27apr5.htm



நேதாஜி, பகத் சிங் போன்றவர்களை பற்றி படம் எடுக்க வேண்டாம். சுந்திரப்போராட்டம், சரித்திரப்படங்களும் எடுக்க வேண்டாம். ஆனால், குறைந்த பட்சம் ரௌடிகளை நாயகர்களாக சித்தரித்து அவர்கள் கொலை வாக்காளத்து வாங்கும் படங்களை என்னவென்று சொல்லுவது. இதை பதிவாக போட்ட என்னை என்ன சொல்லுவது :)

Monday, October 11, 2010

தேசியக் கொடி

சுதந்திர இந்தியாவின் அமைப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி ஒரு குழு அமைக்கப்பட்டது.

1906ல் இருந்து 1947 ஜூலை 21 வரை நமது கொடி பல்வேறு உருவ அமைப்புகளில் இருந்தது.

1947 ஜூலை 22 ஆம் தேதி அரசியல் சபையில்தான் தற்போதுள்ள தேசியக் கொடியை நேரு அறிமுகப்படுத்திப் பேசினார்.

தற்போதுள்ள தேசியக் கொடியை முடிவு செய்த குழுவில் இருந்தவர்கள்.

1. டாக்டர். ராஜேந்திர பிரசாத்
2. அபுல் கலாம் ஆசாத்
3. ராஜாஜி
4. திருமதி.சரோஜினி நாயுடு
5. கே.எம்.முன்ஷி
6. கே.எம்.பணிக்கர்
7. Dr.B.R.அம்பேத்கர்
8. பிராங் அத்தோணி
9. பட்டாபி. சீதாராமைய்யா
10. ஹிராயால் சாஸ்திரி
11. சத்யநாராயண சின்கா
12. பல்தேவ் சிங்
13. எல்.என்.குப்தா



நேரு கூறியதாவது:

1.நமது தேசியக் கொடி கதர்ட்துணியில் இருக்க வேண்டும்.
2. கொடியின் நீள அகலம் இரண்டிற்கு மூன்று 2:3 என்ற விகிதத்தில் இருக்கும்.
3.மேல்பட்டையில் செங்காவி நிறம் இருக்கும்.
4.நடுவில் வெண்மையாக இருக்க வேண்டும்.
5.அடிப்பகுதி பச்சை நிறமுள்ளதாக இருக்கும்.
6.கொடியின் நடுப்பகுதியில் 24 ஆரக்கால்களும் கூடிய,ஓர் ஆழ்நீல நிறத்தில் சக்கரம் மேல் பகுதியையும் ,கீழ்ப்பகுதியையும் தொடாதவாறு வடிவமைக்க வேண்டும்.இது அசோகரால் அமைக்கப்பட்ட சாரநாத் சிம்மஸ் தூபியைக் குறிக்கும் அசோக ம்ன்னர் ஆட்சி,இந்திய ஆட்சியில் முன்னுதாரணம் கொண்டது.உலகலாவிய நற்பெயர் பெற்றது.
7.கொடியின் மேற்புறம் செங்காவி நிறத்துடன் பறக்கவிடப் படவேண்டும்.தலைகீழாகப் (பச்சைநிற்ம்மேல் பகுதியில்)பறக்கவிடக்கூடாது.
8 கொடியில் விள்ம்பரமோ,பொன்மொழியோ கூடாது.
9.கொடியைப் பைகளாக ,மேஜை விரிப்புகளாக வேட்டி சேலைச் கரைகளால் பயன்படுத்த்ப்பட்டது.
10.சூரியன் உதிக்கும் நேரத்தில் ஏற்றி, அஸ்தமனம் ஆகும்போது இறக்கிவிட வேண்டும்.

நன்றி:செங்கரும்பு,ஆகஸ்ட்,2010

Friday, October 8, 2010

சவால் சிறுகதை : டைமண்ட்

நெற்றில் இரத்தம் சொட்ட சொட்ட இருந்தாலும் காமினி அழகாக இருந்தாள். அவளை காப்பாற்ற மருத்துவமனையில் வேலை செய்பவர்களை உதவிக்கு அழைத்தான் சிவா.

ஒருவன் ஸ்டெச்சர் கொண்டு வர, சிவா காமினியை படுக்க வைத்தான்.

"காமினி...! உனக்கு ஒண்ணுமாகாது. நா உன்ன எப்படியும் காப்பாத்துவேன்" என்று கத்தியப்படி அவளுடன் சென்றான் சிவா.

ஸ்டெச்சர் ஐ.சி.யூ வந்ததும் டாக்டர் சிவாவை நிறுத்தினார்.

"நீங்க உள்ள வரக் கூடாது "

"டாக்டர் ! என் ஓய்ப்ப எப்படியாவது காப்பாத்துங்க...?"

"டோன்ட் வொரி.... நாங்க பாத்துக்குறோம் " என்று டாக்டர் ஆறுதல் கூறி அவளை ஐ.சி.யூ அறைக்கு அழைத்து சென்றனர்.

பதற்றத்துடன் சிவா வெளியே நிற்க, டாக்டரும், நர்ஸூம் காமினிக்கு சிகிச்சையை பார்த்தனர்.

"சிஸ்டர் ! பெஷன்ட் உடம்புல இருக்குற பிலட்ட தொடைங்க... "

" டாக்டர்.... ! பீரித்திங் விட சிரமப்படுறாங்க..."

" மாஸ்க் எடுத்து மாட்டுங்க…! அப்புறம் ஹார்ட் பீட் வயர் எடுத்து அவங்க உடம்புல பிக்ஸ் பண்ணுங்க....”

"பெரிசா காயம் இருக்குற மாதிரி தெரியல... எதுக்கு இதெல்லாம் "

"மேடம் ! இங்க நீங்க டாக்டரா ! நான் டாக்டரா.... மாசம் ஆன உங்களுக்கு சம்பளம் தரனும்ல... எப்படி தரது. இப்படி சின்ன அடி வந்தவங்கள... பெரிசா காட்டினா தான் நாலு காசு பார்க்க முடியும்."

நர்ஸ் பேசாமல் இருந்தார்.

கொஞ்ச நேரத்தில் இரத்தம் நின்றது. காமினி இயல்பாக முச்சு விட தொடங்கினாள்.

" ஓ.கே சிஸ்டர். பக்கத்து ரூம்ல இருக்குற மந்திரிய கவனிங்க..."

" அவருக்கு தான் ஒண்ணுமில்லையே டாக்டர்" !

" ஹார்ட் அட்டாக் சொல்லி படுத்திருக்காரு. இப்படி எதாவது கவனிச்சா தான் பத்திரிகைக்காரங்க நம்புவாங்க... கிளம்பும் போது அவரும் நம்பள நல்ல கவனிப்பாங்க...”

டாக்டர் சொன்னும் சிஸ்டர் வெளியே சென்றார். கொஞ்சம் நேரத்தில் ரவுன்ட்ஸ் செல்ல டாக்டர் வெளியே வந்தார். பதட்டமாக இருந்த சிவாவுக்கு ஆறுதல் கூறி சென்றார்.

கண்ணாடி வழியே சிவா காமினியை பார்த்தான்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

எல்லாம் சிவாவின் திட்டப்படி சரியாக செய்தாள் காமினி.

**

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். உள்ளூர் வியாபாரிகள் கேட்கும் விலையை கொடுத்தால் பெரிதாக லாபம் இருக்காது. இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

**



வருமான வரிக்கு பயந்து மாஜி மந்திரி மாரடைப்பு என்று சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதோடு இல்லாமல், பல கோடி மதிப்புள்ள டைமண்ட்டை தன்னுடன் பத்திரமாக வைத்திருந்தார். போலீஸ் ஏமாற்றி, யாருக்கும் சந்தேக வராமல் இருக்க ஒரு பொய்யான விபத்தை ஏற்ப்பட்டுத்தி சிவா, காமினி மருத்துவமனையில் நுழைந்தனர்.

யார் கண்ணிலும் படாமல் இருக்க அந்த மாஜி மந்திரி டைமண்ட்டை பாத்ரூமில் வைத்திருப்பதாக அவனின் காரியதர்சி பரந்தாமன் கூட்டத்திற்கு உளவு சொல்லியிருப்பதை வைத்து அதை கொள்ளையடிக்க சிவா திட்டம் போட்டு மருத்துவமனைக்கு வந்திருக்கிறான். கிடைக்கும் லாபத்தில் 20% அந்த காரியதர்சிக்கு தர வேண்டும்.

ஐ.சி.யூவின் ஜன்னலில் வெளியே இருந்து மந்திரி ரூம்மின் பாத்ரூம் ஜன்னலுக்கு செல்ல முடியும். சிஸ்டர் மந்திரியை மருத்துவம் பார்க்கும் சமயத்தில் பாத்ரூம்மில் இருக்கும் டைமண்ட்டை எடுத்துவிட வேண்டும்.

இரண்டே நிமிடத்தில் மந்திரி பாத்ரூம் கண்ணாடியை அகற்றி பாத்ரூம்க்குள் நுழைந்தாள்.

அவர்களுக்கு உளவு சொன்னவர் ப்ளஷ் டாங்க்கில் வைத்திருப்பதை சொன்னதால், காமினிக்கு அதை எடுக்க அதிக நேரம் பிடிக்கவில்லை.

சிஸ்டர் மந்திரி சிகிச்சை பார்த்து வெளியே செல்லவும் , காமினி டைமண்டுடன் பாத்ரூம்மில் இருந்து குதிக்கவும் சரியாக இருந்தது.

**
" பரந்தாமன் ! எனக்கு முக்கியமான வேலை இருக்கு..." என்று சொல்லி விருந்தில் இருந்து முக்கிய வாடிக்கையாளர் ஒருவர் செல்ல இருந்தார்.

" இருங்க...! இன்னும் முக்கியமான சரக்கு வரல... அத பார்த்தீங்கன வாங்காம விடமாட்டீங்க..."

" ஓ.. அப்படியா..! வெய்ட் பண்ணுறேன்" என்று சொல்லி அந்த வாடிக்கையாளர் செல்போனில் காலதாமதமாக வருவதை கூறிக் கொண்டு இருந்தார்.

சிவா, காமினி எப்படியும் டைமண்ட்டோடு வருவார்கள் என்ற நம்பிக்கையில் பரந்தாமன் தன் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் வர வழைத்து விட்டான்.

பரந்தாமனுக்கு டென்ஷன் ஏறிக் கொண்டே இருந்தது.

**
காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை தன் ஜாக்கெட்டில் போட்டுக் கொண்டு முகத்தை மறைத்தப்படி மருத்துவமனை விட்டு வெளியே வந்தாள். நோயாளிகளில் அலறல், உறவினர்களின் கதறலுக்கு நடுவில் நோயாளி வேடத்தில் வந்து சென்ற காமினியை யாரும் கவனிக்கவில்லை.

அவர்களின் திட்டப்படி சிவா மருத்துவமனைக்கு வெளியே காரில் இருந்தான். காமினி சுற்றம் பார்த்து காருக்குள் நுழைந்தாள்.

" சிவா ! இந்த டைமண்ட் " என்று அவன் கையில் காமினி கொடுத்தாள்.

புன்னகைத்தப்படி சிவா காமினி கையில் இருக்கும் டைம்ண்டை வாங்கினான்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"டமால்" என்று காரில் இருந்து துப்பாக்கி சத்தம் கேட்டது.

**
இரண்டு முக்கிய வியாபாரிகள் வெளியே செல்ல தொடங்கினர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள். ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவ போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"

"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

மூன்று மாதங்களாக அவர்கள் கூட்டத்தில் நெருங்கி பழகி உளவு சொன்ன காமினி தன் உயிரை காப்பாற்றிக் கொள்ள சிவாவை சுட்ட விபரத்தை ஐ.ஜிக்கு விளக்கினாள்.

LinkWithin

Related Posts with Thumbnails