வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, May 29, 2017

கக்கூஸ் ( ஆவணப்படம்)

பார்க்க வேண்டிய முக்கியமான ஆவணப்படம். 

இதை ஏன் முதலில் சொல்கிறேன் என்றால் இந்த கட்டுரையை பாதியிலேயே வாசிக்காமல் நீங்கள் கடந்து செல்லலாம். தலைப்பு உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். அதனால், நீங்கள் அவசியம் பார்க்க வேண்டிய ஆவணப்படம் என்பதை முன்பே சொல்லிவிடுகிறேன். 

நமது தினசரி வாழ்க்கையில் காலைக்கடன் கழிப்பது என்பதை நிகாரிக்க முடியாத ஒன்று. உண்ட உணவு உடலில் தங்கிவிட்டால் நோய் அண்டிவிடும் என்ற அச்சத்தில் டீ, காபி என்று எதையாவது குடித்து ல்லது ஒரு சிலர் சிகரெட் பிடித்தாவது உடல் கழிவை வெளியேற்றி விடுகிறோம். ஆனால், நமது உடலின் கழிவு எங்கோ சென்று ஒரு இடத்தில் துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது. சுற்றுசூழலை பாதித்து கொண்டிருக்கிறது. அதை அப்புறப்படுத்தும் மனிதர்களை பற்றி நமக்கு தெரியாது. அவர்களுக்கான வாழ்க்கையை நாம் சிந்தித்திருக்க மாட்டோம். இவ்வளவு ஏன் ? அவர்கள் மனிதர்கள் என்பதை கூட நாம் யோசிக்காமல் கடந்து சென்று இருக்கிறோம். 



காலையில் கார்ப்ரேஷன் அலுவலகத்தின் முன்பு நில உடை அணிந்து செல்பவர்களை மட்டும் நமக்கு தெரியும். பொது கழிப்பிடத்தில் மலத்தை கைகளால் அள்ளும் மனிதர்களை இந்த ஆவணப்படம் காட்டுகிறது. பொது கழிப்பிடம் பக்கமே போகாதவர்களுக்கு “manual scavenging” எதோ சில இடங்களில் நடப்பதாக வாதிடலாம். சிங்கார சென்னையில் ப்ராட்வே, தி.நகர் போன்ற பகுதிகள் இன்னும் நடப்பதை தலையில் சுத்தி வைத்தி அடிப்பது போல் காட்டுகிறது. 

துணி துவைப்பதில் இருந்து சமையல் வரைக்கும் பல இயந்திரங்கள் வந்துவிட்டது. ஆனால், மனிதனின் மலத்தை சுத்தப்படுத்தும் இயந்திரம் ஏன் கண்டுப்பிடிக்கவில்லை ? ஒரு வேளை அப்படி ஒரு இயந்திரம் இருந்தால், கார்ப்ரேஷன் எதற்காக வாங்கவில்லை ? 

பல மரணங்கள் தவறிவிழுந்த விபத்தாகவே சித்தரிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தொகைக் கூட கிடைப்பதில்லை. எல்லையில் இராணுவ வீரன் நாட்டுக்காக உயிரை விடுகிறான் என்று சொல்வதை Trending ஆக இருக்கிறது. ஆனால், நமது மலத்தை அள்ளுவதில் பலர் இறந்திருக்கிறார்கள் என்பதை ஒரு வரி ஸ்டேடஸாக கூட இல்லாமல் நாம் கடந்து செல்லும் வாழ்க்கை வாழ்ந்துவருகிறோம். 

மலத்தை அள்ளுபவர்களின் உயிர் மலிவாகக் கருதப்படுகிறது என்பது அனைத்து கேள்விகளுக்கும் பதிலாக அமைகிறது. 

ஆவணப்படம் முடியும் போது பல கேள்விகளுடன் கனத்த மனதோடு செல்வோம். அவர்களின் வாழ்க்கையை நம்மால் மாற்ற முடியவில்லை என்றாலும் அவர்களை மனிதர்களாக மதிப்போம். 

ஆவணப்படம் இயக்கிய தோழர் திவ்யாவுக்கு வாழ்த்துகள் !!

LinkWithin

Related Posts with Thumbnails