வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 28, 2011

நியாயமான முடிவு ?

ஒரு கிராமத்தில் இரண்டு ரயில் தண்டவாளம் இருக்கிறது. முதல் தண்டவாளம் பழுதடைந்து, இயங்கப்படாமல் இருக்கிறது. மற்றொன்று சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் தான் வந்து செல்லும்.

கூட்டமாக நான்கு குழந்தைகள் ரயில் வே தண்டவாளத்தில் விளையாட வருகிறார்கள். ஒரு குழந்தை பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடலாம் என்று சொல்ல, மற்ற மூன்று குழந்தைகள் மறுத்ததோடு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் தண்டவாளத்தில் விளையாட செல்கிறார்கள். முதல் குழந்தை மட்டும் இயங்கும் தண்டவாளத்தில் விளையாட பயந்து, பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடுகிறது.



குழந்தைகள் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது ரயில் ஒன்று வேகமாக வருகிறது. விளையாடிக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்களும் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அடுத்த தண்டவாளத்தில் தனியாக இருக்கும் சிறுவனும் ரயில் வருவதை பார்க்கவில்லை. ரயில் வேகமாக மூன்று சிறுவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.

அந்த சமயத்தில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். வேகமாக வரும் ரயிலை பக்கத்து தண்டவாளத்தில் மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி செய்தால் தனியாக இருக்கும் சிறுவன் இறந்து விடுவான். எதுவும் செய்யவில்லை என்றால் மூன்று சிறுவர்கள் இறந்துவிடுவார்கள். இப்போது, மூன்று சிறுவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா ? ரயில் போகட்டும் என்று சும்மா இருப்பீர்களா ?

என்ன முடிவு நீங்கள் எடுப்பீர்கள் ??

மூன்று சிறுவர்கள் உயிரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு சிறுவன் உயிர் பெரியதில்லை. ஒரு சிறுவன் உயிர் போனாலும் மூன்று சிறுவர்களை காப்பாற்றுவேன் என்று பலர் பதில் அளிப்பார்கள். நானும் அப்படிதான் பதிலளித்தேன். ஆனால், அது தவறான முடிவு.

அஜாக்கிரதையாக ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்களுக்காக பாதுகாப்பாக விளையாடும் சிறுவனை எப்படி நாம் பலிக் கொடுக்க முடியும் ? ஆபத்தான தண்டவாளத்தில் விளையாடியது அந்த மூன்று சிறுவர்களின் தவறு. அதற்கான தண்டனை மரணம் என்றால் அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இரண்டாவது தண்டவாளம் பழுதடைந்து இயங்கப்படாமல் இருக்கிறது. மூன்று சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரயில் பாதையை மாற்றினால், ரயிலில் வரும் நூறு பேர் உயிர்களுக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்.

மூன்று முட்டாள் சிறுவர்களுக்காக ஒரு சிறுவனை பலிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் ரயில் எந்த நேரமும் வரலாம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பொறுப்பு.

இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஒரு அலுவகத்திலும், அரசியலிலும், நாட்டிலும் பெரும்பான்மையில் லாபத்திற்காக சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள் இல்லையென்றால் தண்டிக்கப்படுகிறார்கள். எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்று அலசப்படுவதில்லை.

**

மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் தங்கரங்கனுக்கு நன்றி :)

Monday, July 25, 2011

காதல் கவிதைகள் !

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
நாம் சதுரங்கம் விளையாடும் போது !

*

உன் ஒவ்வொரு குறுந்தகவலும்
உன் விரல் ஸ்பரிசத்தை கொடுக்கிறது
உன் ஒவ்வொரு அழைப்பும்
பிரிவின் சுகத்தை மறக்க வைக்கிறது !

*

பல புத்தகங்களை படித்த
மனநிறைவு கொடுக்கிறாய்
உன்னிடம் பேசும் போது !

*

உன்னிடம் பேசிப் பழகும் போது
கடவுளுக்கு ‘நன்றி’ சொல்லி
ஆத்திகனாகிறேன் !
சண்டையிட்டு பிரியும் போது
கடவுளை மறுத்து பேசும்
நாத்திகனாகிறேன் !

*

நீ கொடுக்கும்
சக்கரையில்லாத தேநீரை
சுவைத்து குடிக்கிறேன்
உன் புன்னகையில்
அரைகிலோ சக்கரை இருப்பதால் !

Wednesday, July 20, 2011

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்.இவற்றில் நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சிர்யம்.

LinkWithin

Related Posts with Thumbnails