வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, July 30, 2013

மாற்றம் தந்த இந்திய சினிமா - 5 :: ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி

மொழி : மராத்தி
இயக்கம் : பரேஷ் மோகஷி

இந்திய சினிமா நூற்றாண்டை கொண்டாடும் இத்தருணத்தில் நாம் கொண்டாட வேண்டியப்படம் ‘ஹரிஷ்சந்திரச்சி பாக்ட்ரி'.(Harishchandrachi Factory).

வருடம் வருடம் தாதாசாஹேப் பால்கே விருது சினிமா கலைஞர்களுக்கு வழங்குவது கேள்விப் பட்டிருப்போம். அந்த விருதைப் பற்றியும், விருந்தின் கௌரவத்தை பற்றியும் முதன் முதலாக சிவாஜி அவர்களுக்கு கொடுக்கும் போது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரிய ஆரம்பித்தது.


சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர்களுக்கு "தாதாசாகேப் பால்கே" விருது பெயரில் விருது வழங்குவதை தெரிந்திவர்களுக்கு, பால்கே என்பவர் பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை. சினிமாவில் இருப்பவர்களுக்கு இந்திய சினிமாவின் தந்தையாக தெரிந்திருக்கும். ஆனால், சினிமா என்று ஒன்று அறியப்படாத காலத்தில் முதன் முதலில் சினிமா எடுக்க நினைத்த பால்கேவின் கஷ்டம் தெரியுமா ? அதற்கான தொழிற்நுட்பத்தை எப்படி அறிந்துக் கொண்டார் என்பது தெரியுமா ? அவர்ப்பட்ட கஷ்டங்களை எல்லாம் ஒரு சொட்டு கண்ணீர் இல்லாமல் நகைச்சுவையாக, நல்ல தரமான உலக சினிமாவை கொடுத்திருக்கிறார்கள்.

"உலக சினிமா" என்றால் பார்வையாளனை அழ வைக்க வேண்டும் எழுதப்படாத விதியில் இருந்து இந்தப் படம் மாறுப்படுகிறது. முழுக்க முழுக்க பார்வையாளர்கள் ரசித்து சிரித்துப் பார்க்க முடிகிறது.


இந்திய சினிமா தொடக்க காலமான 1913ல் கதை தொடங்குகிறது. வறுமையில் வாடும் பால்கே, படம் எடுக்க வேண்டும் ஆசைப்படுகிறார். நண்பர்கள் மூலம் கடன் வாங்கி அதற்கான தொழிற்நுட்பத்தை கற்றுக் கொள்ள இங்கிலாந்து செல்கிறார். திரும்பி வந்த பால்கே, செடி வளர்வதை படம் பிடிக்கிறார். செடி வளர்வதை படப்பிடித்ததை வைத்து தான் எடுக்க இருக்கும் ‘ராஜா ஹரிசந்திரா’ படத்திற்கு நிதி திறட்டுகிறார்.

தன் படத்திற்கு வேலை செய்ய நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தேர்வு செய்கிறார். சரித்திரத்தில் இடம் பெறபோகிறோம் என்று தெரியாமலே வேறு வேலை கிடைக்காததால் அந்த கலைஞர்களும் சம்மதிக்கிறார்கள். கதாநாயகி மட்டும் கிடைக்காததால், ஆணுக்கு பெண் வேடமிட்டு நாயகியாக்குகிறார். ' ராஜா ஹரிசந்திரா' படம் எடுக்க சென்ற இடத்திலும், காவல்த்துறையினரால் கைது செய்யப்படுகிறார்கள். சினிமா என்றாலே தெரியாத காலக்கட்டத்தில் பால்கே சினிமாவைப் பற்றி விளக்குகிறார்.

ஒரு வழியாக பல இன்னல்கள் கடந்து, பால்கே படத்தை எடுத்து முடிக்கிறார். இந்தியாவில் இந்தியனால் எடுக்கப்பட்ட முதல் சினிமா ரசிகர்களால் பெரும் வரவேற்பு பெருகிறது. இங்கிலாந்திலும் அவரது படம் வெற்றி பெறுகிறது. அவரை இங்கிலாந்தில் படம் எடுக்க அழைப்பு விடுக்கும் போது, " நான் இங்கிலாந்து வந்துவிட்டால், இந்தியாவில் இந்த கலை எப்படி வளர வைக்க முடியும்" என்கிறார். "இந்திய சினிமாவின்" தந்தை என்ற பெயரை பெறுகிறார்.

பால்கேவின் நண்பர் படத்தின் ஒத்துகை பார்க்கும் இடம், நாயகிக்காக தாசிகள் இருக்கும் இடத்தில் தேடுவது, படத்தைப் பற்றி விவாதிப்பது, பால்கேவும், அவரது மனைவியின் உரையாடல் என்று நகைச்சுவை தழும்ப காட்சி அமைத்திருக்கிறார்கள். கலைக்காக போராடிய எல்லோருடைய வாழ்கையிலும் சோகம் நிறைந்து தான் இருக்கிறது. பால்கே வாழ்கையும் அப்படி தான்.

ஆனால், சினிமாவுக்காக உழைத்த மனிதரை அழுது வடிய விரும்பவில்லை. ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ரசிகர்களை பால்கே பாத்திரம் சிரிக்க வைத்திறது.

இந்திய சினிமாவை நூற்றாண்டை கொண்டாடும் வேலையில், இந்த படம் இந்திய சினிமா தந்தைக்கு மணி மகுடமாக “ஹரிசந்திரச்சி பாக்ட்ரி” அமைந்திருக்கிறது.

Monday, July 8, 2013

கவிதை : அப்பா

மகனின்
முதல் கதாநாயகன்
முதல் வில்லன்
அப்பா !

எந்த பாத்திரம்
ஏற்க போகிறார் என்பதில்
மகன் எழுதும்
திரைக்கதையில் தான் உள்ளது !

*

மகன் விழும் போது எழுவோம் என்று
நம்பிய முதல் மனிதர்
அப்பா !

அன்பை உள்ளே வைத்துக் கொண்டு
எதிரிப் போல் தெரியும் ஒரே உறவு
அப்பா !

‘முடியாது’ என்ற ஒற்றை வார்த்தையில்
கொடுத்த செயற்கை வலியால்
‘முடியும்’ என்ற நம்பிக்கையை
விதைத்தவர் அப்பா !

*

கொண்டுவந்தால் தான் தந்தை என்று
யார் பொய் சொன்னது
தான் கொண்டதை எல்லாம் கொடுப்பவர்
தந்தை உண்மை சொல்கிறது !

*

மகனிடம் தோற்பதை
   லட்சியமாய் கொண்டவர் !
மகன் தோற்றாலும்
   வெற்றிக்கு நம்பிக்கை கொடுப்பவர் !
மகன் நடைபயில
   மகன் வேகத்துக்கு நடப்பவர் !
மகன் ஒடுவதை
   ஒதுங்கி நின்று ரசிப்பவர் !

முதுமையில் மகன் கரம் பிடித்து
குழந்தைப் போல் நடப்பார்
அப்பா !

*

பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
    அம்மாவை பாட்டியாக பார்க்கலாம்
பேரன் பேத்தியிடம் விளையாடும் போது
   அப்பாவை குழந்தையாக தெரிவார் !

அம்மா – அன்பை அன்பாக காட்டுவார்
அப்பா – அன்பை கண்டிப்பாக காட்டுவார்

*
"மாறாத அன்பு
அம்மாவின் அன்பு" என்று
திருமணமாகதவன் சொன்னது !

"மாறாத அன்பு
அப்பாவின் அன்பு" என்று
திருமணமானவன் சொன்னது !

*

அம்மாவின் அன்பை விட
சிறந்த அன்பு உலகில்
இருக்கிறதென்றால்
அது அப்பாவின் அன்பு !


Monday, July 1, 2013

மத தீவிரவாதிகள்

மத தீவிரவாதம் என்று பேசும் போது உடனே மக்கள் பேசுவது 'இஸ்லாமிய தீவிரவாதத்தை பற்றி தான். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்கள் நடத்தும் குண்டு வெடிப்புகள், படுகொலைகள் தான் அவர்களுக்கு நினைவில் வரும் . உண்மையை சொல்லுவதென்றால் இஸ்லாமிய தீவிரவாதம் தொன்னூறு தொடக்கத்தில் தான் தொடங்கியது. அதுவும், அமெரிக்காவின் ஆப்கான் ஆதரவு என்ற பெயரில் வளர்த்த தீவிரவாத இயக்கத்தால் வந்தது. அதற்கு முன் மற்ற நாடுகளைப் போல இஸ்லாமிய நாட்டுக்குள் சில சில சண்டைகள், பிரச்சனைகள் நடந்திருக்கிறது.

மதத்தின் பெயரில் இஸ்லாமியர்கள் மட்டும் தான் தீவிரவாதம் நடத்துகிறார்களா ? என்றால் கண்டிப்பாக இல்லை.

எண்பதுகளில், தொன்னூறு தொடக்கத்தில் இந்தியாவுக்கு மிக பெரிய தலைவலியாக இருந்தது சீக்கிய தீவிரவாதம். கனிஷ்கா குண்டு வெட்டிப்பு, அரசு அதிகாரிகளை கொலை செய்வது, இந்திரா காந்தி படுகொலை என்று சீக்கிய தீவிரவாதத்தால் பல பிரச்சனைகளை இந்தியா சந்தித்துள்ளது.

இந்தியா இஸ்லாமிய தீவிரவாத தாக்குதலை உணர்ந்தது 1993ல் நடந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தான். ஆனால், அந்த தீவிரவாதத்தை உசுப்பி விட்டது பாபர் மசூதி இடிப்பு என்று இந்துக்கள் நடத்திய கலவரச் செயல். இது ‘இந்து தீவிரவாதம்’ என்பது சந்தேகமில்லை. பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ இந்தியாவின் இஸ்லாமியர்கள் உதவி கிடைக்காமல் தவித்தப் போது, இந்த சம்பவத்தை வைத்து இந்தியாவில் இருக்கும் இஸ்லாமியர்களை உசுப்பிவிட்டது.

இலங்கையில் நடக்கும் புத்த பேரினவாதம். தங்கள் இனத்தை தவிர வேறு இனமே இருக்கக் கூடாது என்று நினைக்கும் தேசமாக மாறியிருக்கிறது. இது பௌத்த தீவிரவாதம் என்ற வார்த்தையை ஏன் யாரும் பயன்படுத்தவில்லை.

இந்து தீவிரவாதத்தைப் பற்றி திராவிட கழங்கள் அதிகம் பேசியிருக்கிறார்கள். அமெரிக்காவும், அதன் அடிவரிடிகளும் இஸ்லாமிய தீவிரவத்தைப் பற்றி உலகம் முழுக்க பரப்பியிருக்கிறார்கள். ஆனால், நாம் பேசாமல் தெரியாமல் இருக்கும் எத்தனையோ மத தீவிரவாதங்கள் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது.

உலகில் தீவிரவாதி தாக்குதலுக்கு அதிகம் உள்ளாகும் நாடுகள் என்று எடுத்துக் கொண்டால் ஈராக், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா என்று வரிசைப்படுத்தி இருக்கிறது ஒரு புள்ளி விபரம். கடந்த இருபது ஆண்டுகளில் தீவிரவாத தாக்குதலில் பலியானவர்கள் இந்த நாட்டில் என்று கூறிப்பிட்டுயிருக்கிறார்கள். அதே சமயம், கடந்த இருபது ஆண்டுகளில் அடுத்த நாட்டுடன் போர் தொடுத்தவர்கள் என்று பட்டியலிட்டால் அதற்கு முதல் இடம் சந்தேகமில்லாமல் எல்லோரும் கை தூக்கி "அமெரிக்கா" என்பார்கள். ஆனால், அதற்கு அடுத்த நாடு என்று யாராவது சொல்ல முடியுமா ?

இஸ்ரேல்.

உலகில் மதத்தை முன் நிறுத்தி தீவிரவாத நடவடிக்கை செய்வத இஸ்லாம் மதத்தினர் என்று ஊடகம் காட்டிக் கொண்டு இருக்கிறது. காரணம், ஊடகத்தின் விளம்பரங்கள். பிரச்சாரங்கள். மதத்தை வைத்து ஒரு நாடே தீவிரவாத நடவடிக்கை செய்து வருகிறது. தாக்குதல் நடத்துகிறது. ஆனால், இதை போர் என்று சொல்கிறார்கள். இதை ஏன் ஜீயோனிச தீவிரவாதம் என்று யாரும் சொல்லவில்லை. பிரச்சாரம் செய்யவில்லை.

பிறந்து முழுசாக எழுபது வருடம் கூட ஆகவில்லை. ஒரு நூற்றாண்டு விழா கூட கொண்டாடாத தேசம். இவர்கள் நூற்றாண்டு விழா கொண்டாடினால் அமெரிக்க அண்ணன் வாழ்த்திவிட்டு கவிதைப் பாடி செல்வார்கள். ஏதாவது முன்னேற்ற தீட்டத்திற்கு பணத்தேவை என்றால், அமெரிக்க அண்ணன் ஓடிவந்து உதவுவான். போர் என்றால் சொல்லவே வேண்டாம். என்ன என்ன ஆயுதங்கள் வேண்டுமோ கேட்காமல் கொடுப்பான். புது ஆயுதங்களை அறிமுகப்படுத்தி பயற்சிக் கொடுப்பான். மொத்தத்தில், "முத்துக்கு முத்தாக... சொத்துக்கு சொத்தாக... " என்ற பழைய பாடலை பாடி இஸ்ரேலை வளர்த்து விட்டது அமெரிக்கா தான்.

அண்ணன் முதல் இடத்தில் இருக்கும் போது, தம்பி இரண்டாவது இடத்தில் இருப்பது தானே நியாயம்.

அமெரிக்கா உலக போலீஸ் என்றால், இஸ்ரேல் மத்திய கிழக்கு போலீஸ். என்ன எந்த மத்திய கிழக்கு நாடும் இஸ்ரேலுடன் சுமுகமான உறவு இருந்ததில்லை. மத்திய கிழக்கில் எந்த தேசமும் இஸ்ரேலில் மீது மதிப்பும், மரியாதை இல்லை. ஆனால், இஸ்ரேலின் உளவாளிகள் ஒவ்வொரு நாட்டில் ஒழிந்துக் கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்கு ஆபத்தாக எந்த நாட்டில் என்ன திட்டம் போடுகிறார்கள் என்பதை உடனே தகவல் அனுப்பிவிடுவார்கள். தங்களுக்கு பயனில்லை என்றாலும், அமெரிக்க அண்ணனுக்கு பயனாக இருந்தாலும் அந்த தகவலைக் கொடுத்து விஸ்வாசத்தைக் காட்டிக் கொள்வார்கள்.

கை விரலில் ப்ளேட் வெட்டி இரத்தம் வடியும் அளவில் தான் இஸ்ரேல் தேசம். ஆனால், மத்திய கிழக்கு பகுதியில் தலைவலியாக இருப்பவர்கள் இவர்கள். இஸ்ரேல் என்ற நாடு உருவானது இருந்து இவர்கள் நிம்மதியாக இருந்ததில்லை. மற்றவர்களையும் நிம்மதியாக இருக்க விட்டதில்லை.

இஸ்ரேல் என்ற ஒரு தேசம் உருவாகவில்லை என்றால் ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற தீவிரவாத இயக்கங்கள் தோன்ற வேண்டியதில்லை. இஸ்ரேல் என்ற யூத தேசம் மட்டுமல்ல. யூத தீவிரவாத தேசம்.

LinkWithin

Related Posts with Thumbnails