வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, November 28, 2018

We Can Books இரண்டாம் ஆண்டில்

நாளை (நவம்பர் 29) We Can Books முதல் வருடத்தை நிறைவு செய்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஒரு அலுவலகத்தில் பணிப்புரிந்து கொண்டு இதையெல்லாம் செய்கிறோமே என்ற சிறு உறுத்தல். ஒரே சமயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆடுபவன் மீது இந்த சமூகம் எப்போதும் பொறாமையை கண்ணோட்டத்தோடு பார்க்கும். இதையெல்லாம் மீறி புத்தகக் கடை எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் உள்ளூர இருந்தது. 





புத்தகக் கடை தொடங்கலாம் என்று யோசனை வரும் போது பலர் கூறியது கூட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க வேண்டும். நூல் வெளியிட்டு விழா, விமர்சனக் கூட்டம் நடத்துங்கள். பிரபலங்களை அழையுங்கள். இன்று பல புத்தகக் கடை அப்படி தான் பிரபலமாகியிருக்கிறது. அப்ப்பப்பா.. எத்தனை யோசனைகள். அறிவுரைகள். 

முதலில் என்னால் புத்தகக் கடை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. மாத சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கடைக்கு செலவு செய்யக் கூடாது என்று எனக்கு நானே வைத்துகொண்ட நிபந்தனை. முதலில் என் மேல் எனக்கு இருக்கும் சந்தேகத்தை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். இரண்டாவது, எனக்கு நான் வைத்துகொண்ட நிபந்தனையை நான் மீறக் கூடாது. 

புத்தகக் கடை என்றால் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். அதுவும் தி.நகரில் கடை. வாடகை அதிகம். உதவிக்கு வேலை ஆள் ஒருவர். அவருக்கு சம்பளம். அதுவும் புத்தகத்துறையில் ஆர்வமானவராக இருக்க வேண்டும். எப்படியும் மாதம் ரூ.35000-40000 வரை செலவு இருக்கும். 

குகன். ஒரு தனி மனிதன். எந்த இலக்கிய அமைப்பின் ஆதரவில்லை. அரசியல் பின்னனி கிடையாது. பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. இங்கிருந்து வந்தவன் என்று என்னை அடையாளம் காட்ட முடியாது. 

”ஒரு இலக்கிய அமைப்போடு சேர்ந்து செயல்படுங்கள். அவர்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்கள். அது தற்காலிகமாக வருமானத்தை கொடுக்கும். ஆனால், நான் செல்லவிருக்கும் தூரத்திற்கு பயணத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பு ஆதரவு மட்டும் போதாது. அப்படி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

 பலர் கொடுத்த யோசனைகள், அறிவுரைகள் ஒதுக்கிவிட்டு எனக்கு தோன்றிய ஒரு யோசனை தான் “Book Distributors”. 

பெரிய பதிப்பகங்களில் புத்தகங்களை மொத்தமாக அதிக கழிவில் வாங்கி புத்தக விற்பனையாளர்களுக்கு விற்பது. எதிர்காலத்தில் பதிப்பகங்களை விட சொந்தமாக நூல் வெளியிடும் எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அவர்களால் எல்லாக் கடைகளுக்கும் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது. புத்தக விற்பனைக்கென்று ஒரு அலுவலகம் வைத்துகொள்ள முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அந்த எழுத்தாளரின் எழுதும் நேரத்தை பாதிக்கும். இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தொடங்கப்பட்டது தான் “We Can Books”. 

தற்போது வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு, மஞ்சுல், வளரி வெளியீடு என்று நான்கு பதிப்பக நூல்களை புத்தக விற்பனையாளர்களுக்கு (Cash & Carry Basisல்) கொடுத்து வருகிறோம். இன்னும் சில எழுத்தாளர்களில் புத்தகங்களை விநியோகம் செய்கிறோம். 

புத்தக விநியோகக்கடை என்பதால் வாசகர்கள் நேரடியாக வந்தால், புத்தகம் கொடுக்க மாட்டோம் என்பதில்லை. எங்களுக்கு புத்தக விற்பனையாளர்கள் எந்த அளவுக்கு தேவையோ, வாசகர்களில் நேரடி ஆதரவு தேவை. 

இரண்டாம் வருடத்தில் நுழைவது வெற்றி அல்ல… வெற்றியை நோக்கியப் பயணம். 

முகவரி : 
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
www.wecanshopping.com 
Ph : 9940448599, 044 - 4286 7570

Wednesday, August 8, 2018

புதிய பராசக்தி

இந்த நீதிமன்றம் பல வழக்குகளை கண்டுள்ளது, புதுமையான மனிதர்களை கண்டுள்ளது. இந்த வழக்கும் விசித்திரமானது அல்ல… 

வழக்காடவந்தவனும் நானும் புதுமையாவன் அல்ல… கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன், கடவுள் இல்லை என்று கூறினேன். பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். இப்படியெல்லாம் குற்றச் சாட்டப்பட்டிருக்கிறேன். 

நீங்கள் எதிர்ப்பார்ப்பீர்கள் இதையெல்லாம் மறுக்கப் போகிறேன் என்று. இல்லை நிச்சமயாக இல்லை.

கோயிலில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்கினேன். அனைத்து சாதியினர் புன்னியம் கிடைக்கவேண்டும் என்பதற்காக அல்ல. கோயில் ஒரு சாதியினருக்கு சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதற்காக. 

கடவுள் இல்லை என்று கூறினேன். அவர் எனக்கு அருள் வழங்காததற்காக அல்ல. கடவுள் என்ற பெயரில் பக்தியை வியாபாரமாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக… 

பெண்களுக்கு சொத்துரிமை வழங்கினேன். பெண்களின் வாக்குவங்கிகாக அல்ல. பெண்கள் ஆண்களுக்கு நிகராக மதிக்கப்பட வேண்டும் என்பதற்காக… 

உனக்கு ஏன் அக்கரை. உலகத்தில் யாருக்கும் இல்லாத அக்கரை. என்று கேட்பீர்கள். 

நான் பாதிக்கப்பட்டவில்லை. நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்பட இல்லை. 

நடிப்பு என்பீர்கள். என் நடிப்பிலும் நல்ல எண்ணமே கலந்துள்ளது. 

ஆகாரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல. என்னை குற்றவாளி என்கிறீர்களே… இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும். 



பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில். படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன. 

தென்றலை தீண்டியதில்லை நான். தீயை தாண்டியிருக்கிறேன். 

கேளுங்கள் என் கதையை. தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள். தமிழ்நாட்டிலே இந்த திருவாரூலிலே பிறந்தவன் நான்.

தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா? சென்னை என் உயிரை வளர்த்தது. அண்ணாவின் தம்பியாக்கியது. ஐந்துமுறை முதல்வராக்கி அழகு பார்த்தது. ஆறாம் முறை முதல்வராக்கி காவிகளுக்கும், பச்சை இலைக்கும் சவாலாக இருக்கலாம் என்று தேர்தலில் போட்டியிட்டேன். 

தம்பியாக இருந்த ஒருவன் ம.ந.கூட்டனி என்ற பெயரில் எதிர்கட்சி அம்மையாரை முதல்வராக்கினார். அவர்கள் சரியான ஆட்சி செய்தார்களா? செய்யும் ஒவ்வொரு வேலையும் லஞ்சத்தை தட்சணையாக கேட்டார்கள்.

மருத்துவனையில் அந்த அம்மையார் அனுமதிக்கப்பட்ட எல்லாவற்றையும் மர்மமாகவே நடத்தினர். முதல்வர் உயிரோடு இருக்கிறாரா என்ற மக்களின் கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார்கள். 

முதல்வர் மரணத்திற்கு பிறகு முதல்வர் பதவியை பச்சை குழந்தை பந்தை தூக்கி விளையாடுவது போல் விளையாடினார்கள். இந்தியளவில் தமிழனின் மானத்தை பறக்கவிட்டார்கள். கூவத்தூர் ரெஸார்ட்டில் குடித்தனம் நடத்தினார்கள். 

’திராவிடம்’ என்ற பெயரில் சுயமரியாதை வளர்த்து ஆட்சி செய்தவன் முன் அடிமைகள் மத்தியிலிருப்பவர்களுக்கு அடிப்படிந்தனர். GST, Sterlite, NEET, எட்டு வழி சாலை என்று மக்கள் பிரச்சனைக்கு மௌனமாக இருந்தனர். 

மோடி வருகைக்கு கருப்பு கொடிக்காட்டினோம், 2ஜி வழக்கை காட்டி பயமுறுத்தினர். வழக்கில் வென்றெடுத்தோம். செயல் தலைவரை ஆட்சியை கலைக்காததால் செயல்ப்படாத தலைவர் என்றனர். 

வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார். 

இல்லை யார் வழக்கிற்க்கும் இல்லை. அதுவும் என் வழக்குதான். தமிழ்நாட்டு மக்களின் வழக்கு.

தமிழ் மொழிக்காக வாழ்க்கை முழுதும் போராடினேன். வங்கியிலும், தேர்விலும் ஹிந்தியை கட்டாயமாக்கினார்கள். போராடினேன். திருநங்கைகளுக்கு வாக்குரிமை வழங்கினேன். பெண்களை மானபங்கப்படுத்துவர்களுக்கு அடைக்களம் கொடுத்தார்கள். போராடினேன். 

பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் தேர்தலில் முன்னுரை வழங்கினேன். மாட்டிறைச்சி என்ற பெயரில் பிற்படுத்தப்பட்டவர்களை தாக்கினான். போராடினேன். 

விமர்சனங்களுக்கு பதிலளித்து பழக்கப்பட்டவன் நான். கேள்வி எழுப்பும் விமர்சனர்களை மதத்தின் பெயர் கொண்டே அடக்க முயன்றனர். போராடினேன். 

போராடினேன்… போராடினேன்… நான் மடிந்தப் பிறகும் கல்லறை செல்லும் வரை போராடினேன். எனது போராட்டத்தின் கோரிக்கை நிறைவேற்றியிருக்க வேண்டும். சமூக சமநிலை உருவாக்கியிருக்க வேண்டும். அவர்கள் தான் செய்தார்களா ? நான் எதிர்த்ததை அனைத்தும் மீண்டும் கொண்டு வந்தார்கள்.

பணம் பறிக்கும் கொள்ளைக்கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்? வாக்களித்த வாக்காளர்களின் குற்றமா ? நாம் தேர்வு செய்யாதவர்கள் ஆண்டு கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கும் மக்களின் குற்றமா ? 

சாமியார்களை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்? கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் காவிகள் குற்றமா? 

இந்த குற்றங்கள் களையப்படும் வரை கருணாநிதிகள் குறைய போவதில்லை. 

எனக்கு ஒதுக்குவதாக சொன்ன இரண்டு எக்கர் நிலத்தை பத்திரமாக பாதுகாத்துகொள்ளுங்கள். நாளை தமிழ்நாட்டு மக்கள் இந்த இடத்தை உங்கள் சடலத்திற்கு கூட தராமல் போகலாம்.

அடிமைகளை விரட்டுகள். காவிகள் தானாக திரும்பி செல்லும்…. 

வாழ்க திராவிடம்.

Wednesday, June 20, 2018

Tanna ( 2015 )

Tanna ( 2015 - Language : Nauvhal)

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் பழங்குடியினர் மக்கள் பின்னனி கொண்டப் படம். 

படம் முழுக்க ஆண்களும், பெண்களும் அரையாடையில் வருவதால், உங்களால் ரசிக்க முடியாமல் போகலாம். முழுப் படமும் உங்களுக்கு பிடிக்காமல் போகலாம். ஒவ்வொருவரின் முகமும் உங்களுக்கு அருவருப்பாக தோன்றலாம். ஆனால், இறுதிக்காட்சியில் நமது நெற்றிப்பொட்டில் அறைந்தது போல் இருக்கும். 

அப்படியென்ன பெரியக் கதை... 

பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பேர் காதலிக்கிறார்கள். எதிரி குழுவோடு சமரசரசப் பேச்சுவார்த்தையில் நாயகன் காதலிக்கும் பெண்ணை எதிரி குழுவில் ஒருவனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதிக்கிறார்கள். காதலர்கள் இருவரும் காட்டைவிட்டு ஓடிப்போகிறார்கள். நீண்ட நாள் அவர்களால் காட்டை விட்டு இருக்க முடியவில்லை. தங்கள் உறவுகளை பார்க்க மீண்டும் காட்டுக்குள் வருகிறார்கள். எதிர் குழுவினர்கள் தங்களை விடமாட்டார்கள் என்பதை உணர்ந்த காதலர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். 



இது என்ன பெரிய விஷயம். பல தமிழ் படங்களில் வந்த கதைத்தானே என்று நினைக்கலாம். 

இறுதி காட்சியில், பழங்குடியில் தலைவர் “இனி நமது குழுவில் உயிர் பிரியாமல் இருக்க காதல் திருமணத்தை அங்கிகரிக்கப்படும்” என்கிறார். 

மீண்டும், இது ஒரு பெரிய விஷயமா என்று கேட்பீர்கள்.

1978 ஆண்டில் அந்த குழுவில் காதல் திருமணத்திற்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டதாக எழுத்துகள் போகும். 

எந்த நாகரிகம் இல்லாமல், தொழிற்நுட்ப வளர்ச்சிப் பற்றி தெரியாதவர்கள், ஆடை என்றால் என்னவென்று தெரியாதவர்கள்… இப்படி என்ன வேண்டுமானாலும் சொல்லக் கூடிய பழங்குடியினர்கள் மக்களில் இருவர் காதலுக்காக தற்கொலை செய்துகொள்ளும் போது தங்கள் குழுவில் மாற்றம் கொண்டு வருகிறார்கள். 

யோவ் இதிலென்ன பெரிய விஷயம் ? 

நீங்கள் கௌரவ கொலை செய்வதில் எந்த மாற்றம் இல்லையே !! அவ்வளவு தான் விஷயம். 

படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் என்னுள் உருவான கேள்வி தான் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பு. மற்றப்படி படத்தை குறித்து பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் இந்தப்படத்தை தவிர்க்கலாம்.

Sunday, June 17, 2018

மர்லின் மன்றோ புத்தகம்

Marilyn Monroe பெயரில் ஏற்பட்ட ஈர்ப்பில் தான் Fred Lawrence எழுதிய “Norma Jean : Biography of Marilyn Monroe” புத்தகத்தைப் படித்தேன். படிக்க... படிக்க... மர்லின் என்ற நடிகை தாண்டி ஒரு பெண்ணாக அதிகம் கவர்ந்துவிட்டாள். மேலும், அவளைப் பற்றிய தகவலை இணையத்தில் மெய்ந்தப்போது ஸ்வார்சமாண தகவலைவிட அதிர்ச்சியான தகவல்கள் அதிகம் கிடைத்தது. 

குறிப்பாக Taya G Vellairoja அவ்வப்போது பகிரும் மர்லின் மன்றோ படங்கள் என்னை கவர்ந்து கொண்டே இருந்தது. ( நியாயமாக இந்தப் புத்தகத்தை தயாவுக்கு தான் சமர்ப்பணம் செய்திருக்க வேண்டும்.) 

எல்லாம் சேர்த்து ஒரு புத்தகமாக எழுதிவிட வேண்டும் என்று தோன்றியது. எழுதியும்விட்டேன். 



நான் non-fiction புத்தகம் எழுதுவதாக இருந்தால், மூன்று நான்கு அத்தியாயம் எழுதுவேன். அந்த நூலை வெளியிடுவதற்கான பதிப்பகத்தை முடிவு செய்து, அவர்களுக்கு அந்த அத்தியாயத்தை அனுப்பி வைப்பேன். அவர்கள் சம்மதம் பெற்றப் பிறகு தான், அந்த நூலை முழுமையாக முடிப்பேன். ஒரு வேளை நூலை வெளியிட குறிப்பிட்ட பதிப்பகம் தயக்கம் காட்டினால் வேறு பதிப்பகம் செல்வேன். அங்கும் வெளியிட தயக்கம் காட்டினால், அந்தப் புத்தகத்தை அப்படியே கிடப்பில் போட்டு அடுத்த வேலையை தொடங்குவேன். 

ஆனால், மர்லின் மன்றோ புத்தகத்திற்கு அப்படி நடக்கவில்லை. 

நீண்ட வருடத்திற்கு பிறகு ஒரு புத்தகம் முழுமையாக எழுதிவிட்டு வெளியிட பதிப்பகம் தேடியது “மர்லின் மன்றோ” புத்தகத்திற்கு தான். ஐம்பது வருடம் முன்பு இறந்த நடிகையை குறித்து புத்தகம் வெளியிட்டால், வரவேற்பு இருக்குமா என்ற சந்தேகம். அதனால் நான் சொந்தமாக கூட வெளியிடவில்லை. இரண்டு பதிப்பகம் புத்தகம் வெளியிடுவதாக சொல்லி போடாமல் அப்படியே வைத்திருந்தார்கள். 

ஒரு முறை, நான் எழுதிய புத்தகங்கள் என்று பேஸ்புக்கில் பதிவு எழுதியிருந்தேன். அதில், எழுதி முடித்து அச்சுக்கு வராதப் புத்தகப் பட்டியலில் “மர்லின் மன்றோ” வை குறிப்பிட்டிருந்தேன். அதை பார்த்து வானவில் புத்தகலாயத்தின் உரிமையாளர் கார்த்திகேயன் புகழேந்தி வெளியிட முன்வந்தார். 


“மர்லின் மன்றோ” புத்தகத்திற்கு ஒரு பதிப்பாளராக மட்டுமில்லாமல், Co-writerஆகவே பல தகவல் சேகரித்து “இதைப் புத்தகத்தில் சேர்க்கலாமா?” என்று கேட்டார். குறிப்பாக, ப்ளே பாய் இதழ் உரிமையாளர் Hugh Hefner பற்றிய சுவையான குறிப்பை கார்த்திக் இல்லையென்றால், ”மர்லின் மன்றோ” புத்தகத்தில் இடம் பெற்றுயிருக்காது. “மர்லின் மன்றோ” புத்தகத்தை மெருகேற்றுவதில் அவருடைய பங்கு மிக முக்கியமானது. 

புத்தகத்தின் Layoutவும் பிரமாதமாக வந்திருக்கிறது. 

”நடிகை” என்பவள் ஆண் உறுப்புக்கு உணர்ச்சியை கொடுப்பவள் மட்டுமில்லை. ஒரு பெண்ணை காதலிக்க கற்றுக் கொடுப்பவளும் ’அவள்’ தான். 

ஐம்பது வருடங்கள் தாண்டியும் மர்லின் மன்றோ நினைவில் இருக்கிறாள் என்றால் பல கோடி ஆண்களுக்கு காதலை கற்றுகொடுத்தவள் என்ற பெயரில் தான். கவர்ச்சியால் அல்ல. 


புத்தகம் கிடைக்குமிடம் : 

Vanavil Puthagalayam 
10/2(8/2), Police Quarters Road 
T.Nagar,Chennai-600017 
( Lane between W-25 T. Nagar Women's Police Station
 and T.Nagar Bus Stand,South Usman Road) 
*
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
Ph : 90032 67399

Friday, May 11, 2018

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம்

‘தல’ முதல் படத்தில் ஒரு தந்தையின் சோகம் அஜித் முதல் தமிழ் படம் ‘அமராவதி’ என்றாலும் அவர் அறிமுகமானது தெலுங்கு படமான “பிரேம புஸ்தகம்” தான். அந்தப் படத்தை இயக்கியவர் தெலுங்கு குணச்சித்திர நடிகர் கொல்லபுடி மாருதி ராவ். அவர் பல தெலுங்கு படங்களில் குணச் சித்திர நடிகராக நடித்திருக்கிறார். ‘ஹேராம்’, ‘தோனி’ போன்ற தமிழ் படங்களிலும் தோன்றியிருக்கிறார். பல நாடகங்கள், நாவல் எழுதியிருக்கிறார். 

ஒரு எழுத்தாளர், குணச் சித்திர நடிகர் படம் இயக்குவதில் பெரிய விஷயமில்லை. ஆனால், அவர் எதற்காக இயக்குனர் அவதாரம் எடுத்தார் என்பது தான் சோகக் கதை. 



’பிரேம புஸ்தகம்’ பூஜை போடும் போது இயக்குனராக அறிவிக்கப்பட்டவர் கொல்லபுடி மாருதி ராவ்வின் மகன் கொல்லபுடி ஸ்ரீனிவாஸ். நாயகன் அஜித், நாயகி கஞ்சன் வைத்து பத்து நாட்கள் ஷூட்டிங் சிறப்பாக நடந்தது. ஆரம்ப இயக்குனர் புது முகங்களை கொண்டு விரைவாக செயல்பட்டார். அவரின் போராதக் காலம் படப்பிடிப்பு தளத்தில் தண்ணீர் காட்சிக்காக திட்டமிடும் போது கால் தவறி கீழே விழுந்து இறந்தார். ‘பிரேம புஸ்தகம்’ அப்படியே நின்றுப் போனது. 

மகன் திரைத்துறையில் இயக்குனராக ஜோலிக்கப் போகிறான் என்ற கனவில் இருந்த தந்தை கொல்லபுடி மாருதி ராவ் மகனின் மரணம் தாங்கிகொள்ள முடியாத துயரத்தை தந்தது. புத்திரன் இழந்த சோகத்திலும் அவனது கனவு சிதைந்துவிடக்கூடாது என்று நினைத்தார். தானே அந்தப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார். 

இதற்கு முன் பல நாடகங்களில் இயக்கியிருக்கிறார். படங்களில் நடித்திருக்கிறார். படத்தை இயக்கப்போவது முதல் முறை. அப்பொது இவருக்கு வயது 54. திரைத்துறையில் இயக்குனராக வேண்டும் என்ற விருப்பம் கூட கிடையாது. ஆனால், ’பிரேம புஸ்தகம்’ எடுத்து முடிக்க வேண்டும் என்ற வேறி மட்டும் அந்த தந்தைக்கு இருந்தது. காரணம், மகனின் கனவு அழிந்துவிடக் கூடாது என்பது தான். 

’பிரேம புஸ்தகம்’ படத்தை இயக்கி வெளியிட்டார். படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை என்றாலும், ஒரளவுக்கு மக்களை சென்றடைந்தது. அந்த வருடம், சிறந்த திரைக்கதைக்காக நந்தினி விருது (1994) கொல்லபுடி மாருதி ராவ்வுக்கு கிடைத்தது. 

’பிரேம புஸ்தகம்’ படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த கொல்லபுடி மாருதி ராவ் மீண்டும் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. இயக்கவும் விரும்பவில்லை. 

மகனின் கனவுக்காக தொடங்கிய வேலை. அதுமட்டுமில்லாமல், முதல் படத்தில் இருக்கும் சோக மனநிலையோடு ஒவ்வொரு படத்தை இயக்க வேண்டியது இருக்கும் என்று இயக்குனர் வாய்ப்பை தவிர்த்தார். 

தனது மகனின் நினைவாக ’கொல்லபுடி ஸ்ரீனிவாஸ்’ விருது என்ற பெயரில் ஒவ்வொரு வருடம் சிறந்த அறிமுக இயக்குனர்களுக்கு விருது வழங்கிவருகிறார். 

சமிபத்தில் அஜித் குறித்து அவரிடம் கேள்வி கேட்டப்போது, “ அஜித் அப்போது பெரிய ஸ்டாராக வருவார் என்று நான் நினைத்துபார்க்கவில்லை. பிரேம புஸ்தகம் படத்தை நினைக்கும் போது பல ஸ்டார்களை உருவாக்க நினைத்த மகனின் மரணம் தான் நினைவுக்கு வருகிறது” என்றார்.

தந்தையின் கனவை மகன் நிறைவேற்றுவது கடமை. முதுமை வயதில் மகனின் கனவை தந்தை நிறைவேற்றுவதை என்ன வார்த்தை சொல்வதென்று தெரியவில்லை.

Thursday, February 15, 2018

USS Indianapolis: Men of Courage ( English - 2016)

USS Indianapolis: Men of Courage இரண்டாம் உலகப் போரில் எத்தனையோ கப்பல்கள் முழ்கியிருக்கிறது. பல வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். பல கோடி மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியிருக்கிறது. அடையாளம் தெரியாத பல கப்பல்களுக்குள் இன்னும் கடலில் இருக்கிறது. அதில், USS Indianapolis என்ற தாக்கப்பட்ட சம்மவமும் ஒன்று என்று ஒதுக்கமுடியாது. 

USS Indianapolis தாக்குதல் அமெரிக்காவின் அணு ஆயுத தாக்குதலுக்கு முன் நடந்த சம்பவம். USS Indianapolis போர் கப்பல் அல்ல. அணு ஆயுத உபரி பாகங்களை பாதுகாப்பாக ஏற்று செல்வதற்காக ரகசியமாகப் பயன்படுத்தப்பட்ட நீர்முழ்கி கப்பல். ஜப்பான் இராணுவம் போர் கப்பல் என்ற சந்தேகத்தில் USS Indianapolis கப்பலை தாக்க, அதில் இருக்கும் பாதுக்காப்பு வீரர்கள் தத்தலிக்கிறார்கள். ஐந்து நாள் உண்ண உணவின்றி நடுக்கடலில் உயிருக்காகப் போராடி மீட்பு பணி குழுக்களால் மீட்கப்படுகிறார்கள். 

1196 பேர் சென்ற USS Indianapolis கப்பலில் 317 மட்டுமே உயிருடன் மீட்கப்படுகிறார்கள். அதில் USS Indianapolis கப்பலின் கேப்டன் சார்லஸ் மெக்வே ஒருவர். சில காயங்களுடன் திரும்பிய கேப்டன் தங்களை மீட்பதற்கு ஏன் இவ்வளவு நாட்களானது என்று கேள்வி கேட்கிறார். ரெடியோ சரியாக கேட்கவில்லை, ஜப்பானின் சூழ்ச்சியாக இருக்கும் என்று நினைத்தோம், போதையில் யாராவது கத்துகிறார்கள் என்று நினைத்தோம் என்ற சப்பை பதில்கள் அளித்தார்கள். அதிகாரப்பூர்வமாக கேப்டனின் கேள்விக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. தங்களை காப்பாற்றிகொள்ள USS Indianapolis கப்பல் மூழ்கியதற்கு கேப்டன் சார்லஸ் மெக்வே தான் காரணம் என்று கூறினார்கள்.



USS Indianapolis முழ்கியதைக்குறித்து விசாரணை நடக்கிறது. ஜப்பான் தாக்குவதை அறிந்து கப்பலை ‘Zig-Zag’ திருப்பியிருக்கலாம். சாட்சியங்கள் கேப்டனுக்கு ஆதரவாக இருந்தும், கேப்டன் மீது குற்றம் சுமத்தி அவரை கோர்ட் மார்ஷல் செய்தார்கள். ( USS Indianapolis கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஜப்பானிய கேப்டன் தனது தாக்குதலிலிருந்து அவர்களால் தப்பிக்க வாய்ப்பில்லை என்று சாட்சி அளித்திருக்கிறார்.) 

இரண்டாம் உலகப் போரில் தண்டனைக்கு உள்ளான ஒரே அமெரிக்க கேப்டன் என்ற பெயரை சார்லஸ் மெக்வே பெற்றார். 1968ல் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொள்கிறார். அந்த தாக்குதலில் மீட்கப்பட்ட 150 வீரர்களின் முயற்சியால் 800 ஆவணங்கள் தயார் செய்து கேப்டன் சார்லஸ் மெக்வேவுக்கு அளிக்கப்பட்ட அநீதிக்காக போராடுகிறார்கள். 

2000ல் அதிபர் கிளிண்டன் கேப்டன் சார்லஸ் மெக்வே குற்றமற்றவர் என்று கூறி, அவரிடம் திரும்பப் பெற்ற பதக்கங்களை எல்லாம் அவரது வாரிசுகளுக்கு அளிக்க உத்தரவிடுகிறார். 

இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டப்படம் தான் ”USS Indianapolis: Men of Courage”. 

ஐந்து நாள் நடுக்கடலில் உண்ண உணவின்றி உயிருக்கு போராடிய தனது வீரர்களை கண்முன் கேப்டன் பார்க்கிறார். தனது வீரர்கள் சுறா மீன் கடித்து இறப்பதும், தனிமை புத்திப்பேதலித்ததும், கடலின் உப்பு தண்ணீர் குடித்து இறப்பதையும் மனவேதனை அடைக்கிறார். மிக காலத்தாமதமாக தங்களை மீட்க வந்ததில் கோபமடைகிறார். ஒரு கேப்டனாக கேள்வியை கேட்கிறார். அதற்கு பதலளிக்க முடியாமல் தண்டனை அளிக்கிறார்கள். 

கேப்டன் சார்லஸ் மெக்வே பாத்திரத்தில் Nicholas Cage. அவரின் இயல்பான நடிப்பை அதிகம் சொல்ல வேண்டியதில்லை. தனது வீரர்கள் கண்முன் இறக்கும் போது குற்றவுணர்வில் தவிக்கும் ஒரு இடம் போதும் அவரது நடிப்பைப் பற்றி சொல்வதற்கு. 

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணுகுண்டு வீசிய வீரர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கி அமெரிக்கா அழகுப் பார்த்தது. பல லட்சப் பேரை கொன்று குவித்தவரக்ளுக்கு விருது வழங்கியது. ஆனால், தனது வீரர்கள் கண்முன் இறப்பதைப் பார்த்து கேள்விக் கேட்ட கேப்டனுக்கு “கப்பலை Zig-Zagஆக திருப்பாததை குற்றமாக” கூறி தண்டனையை அமெரிக்கா வழங்கியிருக்கிறது என்பதை இந்தப்படம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களை கேட்டால் அதற்கான தண்டனை நிச்சயம் என்பதற்கு ” USS Indianapolis: Men of Courage” படம் ஒரு உதாரணம்.

LinkWithin

Related Posts with Thumbnails