வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, June 18, 2013

ஒரு செல் உயிர்கள் - வி.டெல்லிபாபு


ஒரு இலக்கிய நிகழ்வில், நண்பர் ஒருவர் "ஒரு செல் உயிர்கள்" என்ற கவிதை புத்தகத்தை எனக்கு பரிசாக அளித்தார். வி.டெல்லிபாபு எழுதியது.

நூல் அட்டை வடிவமும், கவிதைக்கான படங்களும் பார்த்த மாத்திறத்தில் படிக்க ஈர்த்தது. சில கவிதைகள் ரசிக்கும் படியாகவே இருந்தது.

அந்த நூலின் நான் மிகவும் ரசித்த கவிதைகள்.

சாயங்கால 
வரவேற்பறை 

வசதியான 
இருக்கைகளில் 
வந்து அமர்ந்தனர் 
குடும்பத்தில் எல்லோரும்

கதாபாத்திரங்கள் 
பேசிக் கொண்டன 

** 

ஒரே நிறம் தான் 
கருப்பு பலகையும் 
சவபெட்டியும் 

இரண்டும் போதிக்கின்றன 
முதலாவது அவனுக்கு 
இரண்டாவது 
அவன் மற்றவனுக்கு 

** 
நாளைய மழழை 

அம்மா... 
என்ன பறவை அது ? 
கத்துகிறதே 
உன் ரிங்டோன் போல 

** 

வேட்டி கட்டிய 
வேடத்திற்கு
விருது வாங்க 
'நடிகர்' வந்தார் 

'டை' கட்டி 

** 

அரசியல்வாதி 

இவர்கள் 
குதிரை பேரத்தில்
வாங்கிய மனிதர்கள்

** 

வந்துவிட்டது 
தடை 
பைகளுக்கு 

குப்பைகளுக்கு ?? 

** 

தாளுக்குத் 
தீயிட்ட பின் 
கல்வெட்டாயின 

உன் கடித வரிகள்

**

இன்று, அதிகமாக வெளிவரும் நூல் என்றால் 'கவிதை' நூல்கள் தான். அதே சமயம், வாசகனிடம் சென்றடையும் நூல்களில் குறைவாக சென்றடைவதும் கவிதை நூல் தான்.

வணிக நோக்கத்திற்காக எத்தனையோ கவிதைகள் இன்னும் அச்சுக்கு வ்ராமல் இருக்கிறது.எத்தனையோ கவிஞர்களை தொலைத்திருக்கிறது, இந்த சமூகம்.

கவிதை நூல்கள் பட்டியல் நீளுவதைப் போல, தொலைந்த கவிஞர்களின் பெயர் பட்டியலும் நீண்டுக் கொண்டே போகிறது.

Monday, June 17, 2013

தப்பு !!

எதோ பெயர் தெரியாத கிராமத்தில் ஏழாம் வகுப்பு படிக்கும் கண்மணியும், கருப்பனும் பள்ளி முடிந்து மரத்தடி நிழலை நோக்கி நடந்தனர்.

“கண்மணி ! இப்போ எல்லாம் என் கூட நடந்து வரவே மாட்டீங்கர...”

 “போடா... ! குத்த வெச்சதில்ல இருந்து அம்மா எந்த பசங்களோட பேசாத பலகாதனு சொல்லிக்கிட்டே இருக்கா....” வாடிய முகத்துடன் கருப்பன்,

“நா வேணும்னா பொண்ணா மாறட்டா....!”

 “போடா கிறுக்கா... கொஞ்சமாவது அறிவிருக்கா....”

 “ஏன் அப்படி சொல்லுற”

 “குத்த வெச்சதுல இருந்து எவ்வளவு கஷ்டம் தெரியுமா. உடம்பு வலிக்கும். சில சமயம் நடக்குறதுக்கு கஷ்டமா இருக்கும். எங்க போனாலும் துணைக்கு யாராவது கூட்டிட்டு போகனும்னு சொல்லுறாங்க... பையனா இருந்தா எவ்வளவு ஜாலி தெரியுமா !!”

 கருப்பன் அமைதியாக கண்மணி சொல்லுவதை கேட்டு கொண்டு இருந்தான். 

“சரி விடு ! எங்க வீட்டுல இருந்து ஜிலேப்பி கொண்டு வந்திருக்கேன். சாப்பிடு.” 

கருப்பன் கண்மணியிடம் இருந்து ஜிலேப்பி வாங்கி சாப்பிட்டான்.

 “என்டா ! நா பெரிய மனுஷியானா மாதிரி, நீ எப்போ பெரிய மனுஷனாவ...” 

“தெரியுல்ல... அப்படி நடந்தா உனக்கு செஞ்ச மாதிரி எனக்கு செய்வாங்களா ?” 

கருப்பன் சொன்னதை கேட்டு கண்மணிக்கு சிரிப்பு வந்தது. இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது கண்மணி அருகில் தேள் வருவதை கருப்பன் பார்த்தான்.

 “கண்மணி தேளு !!!”

 தேளை பார்த்ததும் கண்மணி எழுந்திருக்கும் போது கீழே விழுந்தாள். அவள் பாவாடை மேல வர, தேள் அவளை கண்மணியின் காலை நோக்கி வருகிறது. கருப்பன் தேளை கையில் எடுத்து வீசினான்.

 அப்போது அவர்கள் பள்ளி ஆசிரியை ஜமுனா வர, அவரின் பார்வைக்கு கருப்பன் கண்மணியை தொடுவதுப் போல் தெரிகிறது.

 “டேய் ! என்னடா பண்ணுற. மொலச்சு மூனு இலக் கூட விடல்ல... பொண்ணுக்கிட்ட இப்படி நடந்துக்குற..” என்று சொல்லி கருப்பனை அடிக்கிறாள். அவனின் பதிலுக்காக அவள் காதிருக்கவில்லை.

 “நா ஒண்ணும் பண்ணல்ல மிஸ்... நா ஒண்ணும் பண்ணல்ல....”

 ஜமுனா மாணவனை அடிப்பதை பார்த்த தலைமை ஆசிரியர் அவரை தடுகிறார். 

“மேடம்...! என்னாச்சு... ஏன் அவன இப்படி போட்டு அடிக்கிறீங்க..?”

 “இவன் செஞ்ச காரியத்துக்கு அடிக்காம என்ன பண்ணுறது...”

 மேலும் கருப்பனை அடித்தாள்.

 “ அவன எதுக்காக அடிக்கிறேனு சொல்லிட்டு அடிங்க...?”

 “அந்த பொண்ணு பாவடா விலகியிருக்கு அத தொட போண்ணான்..”

 “ ஐயோ இல்ல மிஸ். கண்மணி கால் கிட்ட தேள் வந்துச்சு அத எடுக்க போண்ணேன். வேணும்னா கண்மணி கிட்ட கேளுங்க...”

 “ஆமாம் மிஸ். தேள் என்ன கடிக்க வந்திச்சு. கருப்பன் தான் தூக்கிப் போட்டான்.”

ஜமுனாவுக்கு தன் தவறு புரிகிறது.

 “மேடம் ! பார்த்தீங்களா இப்ப நீங்க தான் தப்பு பண்ணியிருக்கிங்க. அப்படியே இவங்க தப்பு பண்ணுறதா நினைச்சா. கூப்பிட்டு நம்பிக்கையா நாலு வார்த்த பேசுங்க. சந்தேகப்பட்டு அடிக்கிறதால நாலு பேருக்கு தெரியாம தப்பு செய்ய தோணும். இதுவே அவங்க மேல நம்பிக்கை வச்சு பேசுங்க... அந்த நம்பிக்கையே அவங்க தப்பு பண்ண விடாது !” என்றார்.

 ஜமுனா தன் தவறை உணர்ந்து, அந்த இடத்தை விட்டு நகர்ந்தாள். தலைமை ஆசிரியரும் கருப்பனுக்கும், கண்மணிக்கும் இதைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்று சொல்லி சென்றார்.

 "கண்மணி ! நீ பெரிய மனுஷியாகமலே இருந்திருக்கலாம் "

 "எல்லாரும் ஒரு நாள் பெரியவங்களாக தானே பொறாங்க. ஆமா, அங்க கை வெச்சா என்னடா தப்பு ?" என்றாள் கண்மணி.

Friday, June 14, 2013

ஈழம் : ஹைக்கூ கவிதைகள் - 14

கடவுளிடம்
ஜாமீன் மனு
பாவ மன்னிப்பு !


**

மனிதனே
மனிதனை நினை
கடவுளின் வேண்டுதல் !

**

சாத்தனை பார்த்தும்
சிலையாய் நின்ற கடவுள்
திருப்பதில் ராஜபக்ஷே !!


**

வாழும்
ஒவ்வொரு நாளும் சாதனையே
ஈழத்தில் !

**

தினம் தினம்
தீபாவளி
யாழ் மண்ணில் !

**

LinkWithin

Related Posts with Thumbnails