வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, January 31, 2011

பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் !

நந்திதா ஹக்சர்

”இந்திய இலங்கைக்கு ஆயுதம் வழங்கி ஈழ கனவை சிதைத்து, பல உயிர்கள் இறந்ததற்கு இந்தியாவும் காரணமாக இருந்ததுள்ளது.

இந்திய ஈழத்திற்கு எதிராக நடந்துக் கொண்டதற்கு காரணம் சீனாவுடனான போட்டியாம்.

சீனாவின் ஆதரவால் இலங்கை விடுதலை புலியை அழித்திருந்தால், நாளை இந்தியாவுக்கு எதிராக மாறும் என்ற அச்சத்தில் இந்தியாவும் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது. இதனால், இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல் படாது என்று இதுவரை நம்பிவருகிறது. இந்தியா இலங்கைக்கு உதவியதற்கு இதுவும் ஒரு காரணமாக இன்று வரை சொல்லப்படுகிறது.”


இப்படி, இந்தியா – இலங்கை பற்றின பல விமர்சனங்கள் நாம் படிக்கும் வேலையில் மற்றொரு அண்டை நாடான பர்மா மீது இந்தியாவுக்கு இருக்கும் பார்வை நாம் தெரிந்துக் கொள்ள உதவும் நூல் தான் ‘வஞ்சக உளவாளி : பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம்’. Rogue Agent என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.

ஜனநாயக நாடான இந்தியா, ஏன் அண்டை நாடான பர்மாவில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை ? இந்தியாவின் உயர்ந்த விருது வழங்கிய சுகீயை ஏன் காப்பாற்ற நினைக்கவில்லை ?

சட்டத்திற்கு புரம்பாக செயல்படுபவர்களை கைது செய்வார்கள். ஆனால், சட்ட விரோதமாக இந்திய சிறையில் இருக்கும் 36 பர்மிய போராளிகளை இந்தியா ஏன் விடுவிக்கவில்லை ? பல வருடங்களாக அவர்கள் மீது ஏன் குற்றப்பதிரிகைக் கூட தாக்கப்படவில்லை ?

- இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.



முதல் ஐந்தாறு அத்தியாயங்கள் வழக்கறிஞரான நந்திதா ஹக்சர் தன் 36 கட்சிக்காரர்களைப் பற்றியும், அவர்கள் கைதான வழக்கைப் பற்றியும் சொல்லுகிறார். ஏதோ வழக்கு சம்பந்தமான நூல் என்றே நூறு பக்கங்களை நாம் கடக்க வேண்டிய இருக்கிறது. ஆனால், அதன் பின் அவர் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் நம் உளவுத்துறையை நினைத்து வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தன் நாட்டில் நடக்கும் சர்வதிகாரத்தனத்தை எதிர்த்து போராடும் பர்மிய போராளிகள் இந்திய உதவும் என்று நம்பினார்கள். ஆனால், இந்திய உளவாளிகளோ அவர்களுக்கு உதவ பேரம் பேசியிருக்கிறார்கள். போராளிகளும் கேட்ட பணத்தை தர சம்பதித்துள்ளனர். தங்கள் பணத்தை கர்னல் கிரேவாலுக்கு கொடுத்தனர். இருந்தும், குறிப்பிட்ட தொகை பர்மிய போராளிகளால் தர முடியாத்தால் பேச்சு வார்த்தையை இழுப்பறி செய்துள்ளார் கர்னல் கிரேவால் .

நாலரை ஆண்டுகளாக இந்திய உளவுத்துறையுடன் நடந்த பேரங்களுக்கு பிறகு 10,பிப்ரவரி,1998ல் லேண்ட் ஃபால் தீவில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தது. ‘ஆப்ரேஷன் லீச்’ என்ற பெயரில் 6 பர்மிய போராளிகளை பேச்சு வார்த்தையின் போது இந்திய உளவுத்துறை கொலை செய்துள்ளது. 36 பேரை கைது செய்துள்ளது. அவர்களை அந்தமான் சிறைசாலைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார்கள். (இந்திய போராளிகளுக்காக பிரிட்டிஷ் அரசு செய்த சிறைசாலை பர்மிய போராளிகளை விசாரிக்க பயன்ப்பட்டுள்ளது)

வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் போராளிகள் விடுவிக்க பத்து வருடங்களாக போராடி சி.பி.ஐ குற்றப்பத்திரிகை மட்டுமே பதிவு செய்ய வைக்க முடிந்தது. 34 பேர் ( இடைப்பட்ட காலத்தில் 2 பேர் தப்பிவிட்டார்களாம் !) வெளியே வரக்கூடாது என்பதில் சி.பி.ஐ மிக கவனமாக உள்ளது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் பர்மிய போராளிகளிடம் பேரம் பேசிய கர்னல் கிரேவால் பெயர் குற்றப்பதிரிகையில் இல்லை. வெளி உலகத்திற்கு சுதந்திர பறவையாக அந்த வஞ்சக உளவாளி வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடைசி சில அத்தியாயங்களில் பர்மா மீது இந்தியா தன் பார்வையை மாற்றிக் கொண்ட காரணத்துடன் சீனாவையும் முடிச்சுப் போடும் போது ஆரம்பத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு விடை தெரிகிறது.

இந்தியா பர்மிய போராளிகள் கைவிட்டத்தில் பர்மா இன்று வரை மியான்மராக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. எந்த நாட்டிலும் சர்வதிகாரம் நீண்ட நாட்களாக வாழ்ந்ததில்லை. என்றோ ஒரு நாள் மியான்மர் மீண்டும் பர்மாவாக மாறும். ஜன்நாயகம் மலரும். அப்படி மாறும் போது பர்மா இந்தியாவை மன்னிக்குமா என்பது சந்தேகம் தான்.

**

’சீனாவை எதிர்க்க வந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு அண்டை நாட்டு விவகாரத்தையும் இந்தியா கையாள்கிறது. நேபால், பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என்று யாருக்கு எதிராக குரல் கொடுத்தாலும், செயல்பட்டாலும் சீனா சண்டைக்கு வருமோ என்ற அச்சம் அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது. இந்திய மீனவர்கள் பலர் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஈழம், பர்மா என்று இந்திய உளவுத்துறை கைவிட்ட நாட்டின் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. பலம் இல்லாதவன் அஞ்சுவதில் தவறில்லை. ஆனால், பலசாலி அஞ்சும் போது அவனுக்கு எதிரிகள் அதிகமாவதை இந்தியா உணர வேண்டும். இந்தியாவை சுற்றி எதிரிகளாக இருப்பது அச்சமும் மிக முக்கிய காரணம்.

கணிணித்துறையில், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாக தெரிந்தாலும், துணிச்சலில் நாம் வளரும் நாடு தான்.

நூல் வாங்க... இங்கே

ரூ.170, பக் : 286
கிழக்கு பதிப்பகம்

Friday, January 28, 2011

மூன்றாவது அணி !!

நாளுக்கு நாள் தேர்தல்ப் பற்றி செய்திகள் சூடாக விவாதங்களை ஏற்ப்படுத்துகிறது. கட்சி தாவல், பொட்டி மாறுதல், கூட்டனி என்று ஏதாவது ஒரு செய்தி தாங்கி எல்லா பத்திரிகைகள் வந்துக் கொண்டு இருக்கிறது.

தி.மு.க

1996 - 2001 ஆண்டு தி.மு.க ஆட்சி செய்யும் போது அவர்களுக்கு எதிராக பெரிய ஊழல் குற்றமோ, கரும்புள்ளியோ பெரிதாக ஒன்றும் இல்லை. அடிப்படை பொருளின் விலை ஏற்றம் மீண்டும் அ.தி.மு.க வை 2001ல் ஆட்சியில் அமர வைத்தது. ஆனால், 2006 - 11 வரை தி.மு.க வுக்கு எதிராக பல கரும்புள்ளிகளும், ஊழல்களும் உள்ளது.

தி.மு.கவுக்கு எதிராக இருப்பது.

ஸ்பெக்ட்ரம் ஊழல்.
இலங்கை பிரச்சனை.
மீனவர்கள் கொலையை எதிர்த்து நடவடிக்கை எடுக்காமல் இருப்பது.
குடும்ப அங்கத்தினரை அரசியல், சினிமா ஈடுப்பட வைத்தது.
குடும்ப உள் அரசியல் பிரச்சனை
காவேரி பிரச்சனை. ( உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும் கர்நாட அரசிடம் இருந்து தண்ணீர் வாங்க தெரியாமல் இருப்பது)
கடந்த இருபது ஆண்டுகளாக யாரும் தொடர்ந்து ஆட்சி அமைக்கவில்லை.

தி.மு.க சாதகமாக இருப்பது.

ஒரு ரூபாய் அரிசி திட்டம்
கலைஞர் காப்பீடு திட்டம்
இலவச டி.வி வழங்கியது.
இலவச வீடு வழங்கும் திட்டம்

ஊழல், பிரச்சனை போன்ற பல விவகாரங்கள் இருக்கும் போது 'இலவச திட்டங்கள்' ஓட்டாக மாறுமா என்பது தேர்தல் முடிவு தான் பதில் சொல்ல வேண்டும்.

**
அ.தி.மு.க

தி.மு.க மீது இருக்கும் அதிருப்தி மட்டுமே அ.தி.மு.க வின் பலமாக உள்ளது. தொலை நோக்கு பார்வையோ, திட்டமோ அவர்களிடம் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. தேர்தல் பிரச்சாரத்தில் எதிர்பார்க்கலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் ?

சென்னை சங்கமம் அடுத்த வருடம் முதல் ரத்து செய்யப்படும்
மீண்டும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டாக அறிவிக்கலாம்
கலைஞர் காப்பீடு, ஒரு ரூபாய் அரிசி திட்டம் ரத்து செய்யப்படலாம் அல்லது பெயர் மாற்றப்படலாம்.
வாரிசுகள் கைது நடவடிக்கை மற்றும் பேரன்கள் வீட்டில் வருமான வரி சோதனை போன்ற நடவடிக்கை எடுக்கப்படலாம்.

வை.கோ வை தவிர அம்மாவுக்கு பக்க பலமாக பிரச்சாரத்திற்கு இதுவரைக்கு ஆள் கிடைக்கவில்லை. இந்த நிலை அடுத்த ஒரு மாதத்தில் மாறலாம்.

அ.தி.மு.க ஆட்சிக்கு வருவதை விட தி.மு.க ஆட்சிக்கு வரட்டும் என்பது அரசாங்க ஊழியர்களின் கருத்தாக இருக்கும். கொஞ்ச நேர்மையான இருக்கும் அதிகாரிகளை கூட சம்பள குறைப்பில் லஞ்சம் வாங்க வைத்துவிடுவார். எந்த அரசாங்க ஊழியர்களுக்கு சதகமாக அ.தி.மு.க அருசு இருக்க போவதில்லை என்பது அரசாங்க ஊழியர்களின் கருத்து.

**

தி.மு.க , அ.தி.மு.க என்று இரண்டும் கட்சிகள் மீது அதிருப்தி கொண்டவர்கள் வாக்கு தான் மூன்றாவது அணியின் பலமாக இருக்கும்.

ஒரு தி.மு.க நண்பர் என்னிடம், " நா எப்போது தி.மு.க தான் ஓட்டு போடுவேன். ஆனா, இந்த வாட்டி கண்டிப்பாக தி.மு.கவுக்கு ஓட்டு போட மாட்டேன்" என்றார். கண்டிப்பாக இவர் அ.தி.மு.கவுக்கும் ஓட்டு போட மாட்டார். இவரைப் போன்றவர்கள் வாக்கை கவர்வது தான் மூன்றாவது அணியின் நோக்கமாக இருக்க வேண்டும்.

யார் மூன்றாவது அணி அமைக்க முடியும் ?

இன்றைய அரசியல் நிலவரப்படி விஜயகாந்த் தவிர மூன்றவாது அணியை யாராலும் அமைக்க முடியாது. அ.தி.மு.கவுடன் கூட்டனி ஏற்ப்பட்டால் சந்தேகமில்லாமல் அடுத்த ராம்தாஸாக விஜயகாந்த் கருதப்படுவது உறுதி. அவரின் முதலமைச்சர் கனவு சிதைக்கப்படு ம் என்பதில் சந்தேகமில்லை. ஐம்பது சீட்டு, பொட்டி போன்ற விஷயங்களுக்கு ஆசைப்பட்டு அ.தி.மு.க வுடன் கூட்டனி ஆட்சி அமைத்தால் விஜய்காந்த் டம்மியாக தான் இருப்பார். அப்படி டம்மியாக இருப்பதை விட (ம.தி.மு.க, ப.மா.க உதாரணம்) விஜயகாந்த் தனித்து போட்டியிடுவது நல்லது. இதுவரை விஜயகாந்த் பலமாக இருப்பது தனித்து போட்டியிடுவது தான்.

அப்படி கூட்டனி அமைக்க நினைத்தால், நம் தமிழர் கட்சி, ப.ஜ.க போன்ற இதர கட்சிகளுடன் கூட்டனி வைத்துக் கொண்டால் விஜயகாந்த் தலைமையில் மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது.

எந்த முறையும் இல்லாமல் இந்த முறை தி.மு.க, அ.தி.மு.க எதிர்ப்பு அலை அதிகமாக தெரிகிறது. இதை விஜயகாந்த் பயன்ப்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முறை ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் குறைந்த பட்சம் எதிர்கட்சியிலாவது அமரலாம். பத்து, இருபது தொகுதியில் வெற்றி பெறலாம். ஆனால், மற்றவர் தலைமையில் இவர் கூட்டனி அமைத்தால்.... எதிர்காலத்தில் தே.மு.தி.க தமிழகத்தில் மற்றுமொரு கட்சியாக தான் இருக்கும்.

எது எப்படியிருந்தாலும் தமிழகத்தில் மீண்டும் கூட்டனி ஆட்சி அமைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த மைனாரிட்டி அரசு எது என்பது தான் தேர்தலின் முடிவாக இருக்கும்.

Tuesday, January 25, 2011

நீங்கதான் சாவி - திண்ணை.காம் விமர்சனம்

சுரேகாவை ஒரு வலைப்பதிவராக அறிவேன்.. அவர் எழுதிய சுய முன்னேற்றக் கட்டுரைகளின் தொகுப்பு இது.. வெளியீ்டு நாகரத்னா பதிப்பகம்.. விலை ரூ 50.

அட்டைப் படத்திலேயே மனிதனைச் சாவியாக., பிரச்சனைகளின் திறவுகோலாக சித்தரித்திருப்பது அருமை..



அறிவுரை சொல்பவர் அப்படியே இருப்பார்.. கேட்பவர்கள் வளர்ந்து விடுவார்கள்.. அப்படி இல்லாமல் அந்த அறிவுரைப்படி நாமும் இருக்க வேண்டும் என நினைத்ததனால் ஜேசிஐ ( JUNIOR CHAMBER INTERNATIONAL) மூலம் கற்றுக் கொடுத்து தன்னையும் சரி செய்து கொள்ள முடிந்ததாக தன்னுரையில் சொல்லி இருக்கிறார் சுரேகா.

இவர் ஒரு தன்னம்பிக்கை பயிற்சியாளர்..

சுதந்திரமாக செயல்பட அனுமதித்த பெற்றோருக்கும்., தன் குறைகளுடன் தன்னை ஏற்றுக்கொண்ட மனைவி குழந்தைகளுக்கும் நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறார்..

இனி விமர்சனம்..

மொத்தம் 18 தலைப்புக்கள் ..

ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் அதை ஒட்டிய சினிமா சம்பந்தப்பட்ட ஒரு தகவலையும் இணைப்பா கொடுத்திருக்கிறார்..

மொக்கச்சாமி என்ற காரெக்டர் மூலமா நாம பண்ற தவறுகளையும் சுட்டிக் காண்பிக்கிறார்..

”பென்சில் வாழ்க்கை”யில் நாம நம்மை கூர் தீட்டிக்கொண்டே இருந்தால்தான் ஜொலிக்க முடியும். பென்சில் மாதிரி நம் தப்பை அழித்து எழுதவும் தயாரா இருக்கணும்னு சரியான காரணங்களோட சொல்றார்..

டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் சொல்வராம் .. சிறிய ”லட்சியம்” ஒரு குற்றம்னு.. அதுனால பெரிய லட்சியங்களை கைக்கொள்ளுங்கள்.. தேடிச் சோறு நிதம் தின்று வீணாக்காமல் என்கிறார்..

” கால நிர்வாகம்” இதில் நேரத்தை நிர்வகிக்கும் கலையைத் தெரிஞ்சுக்கணும்., நேரத்தை வீணடிப்பது தெரிந்தே ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை குப்பைத்தொட்டியிலிடுவதற்குச் சமம்..

”பொருள் ஒழுங்கு” இதில் ஜப்பானிய தொழில் நேர்த்தியை குறிப்பிடுகிறார்.. 5S என்பது அதன் பெயர்.. செய்ரி., செய்ட்டன்., செய்சோ., செய்கெட்ஸு., மற்றும் சிட்சுகெ..எல்லாவற்றையும் புரியும்படி அடுக்கி வைத்து பழைய குப்பைகளை அகற்றுதல்தான் அது..

ஒற்றை நொடி வாழ்க்கையில் செய்யும் வேலைகளை அனுபவித்து அந்த நொடியில் வாழுங்கள்.. தொலையாமல் பேசுவோம் என்ற தலைப்பில் நாம் பேசும்போது போனை நோண்டிக் கொண்டிருக்கும் நபர்களையும் போனிலேயே வாழ்பவர்களையும் பற்றியும் நல்ல சாடல்..

எந்த வேலையையும் தள்ளிப் போடவே கூடாது.. சரியான திட்டமிடல் முக்கியம்..

வாயில் இருந்து வெளிப்படும் வார்த்தைகளுக்கும் ஒரு சென்சார் போர்டு வச்சு வெளியிடுங்க..வார்த்தைகளை கவனமா கையாண்டா நாமதான் தகவல் தொடர்பு குரு..யாரையும் புறம் கூ்றாதீங்க..

சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லியை அண்டவே விடக்கூடாது.. ஏனெனில் அதனால் நம்மை வெறியூட்ட நினைப்பவர்களுக்கு நாமே வழி செய்ததாகிவிடும்.

இதைப் படிக்கும்போது எனக்கு கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதத்தில் சொன்னது ஞாபகம் வந்தது.. .,” நீ எந்த விஷயம் நடக்கக் கூடாது என்று கோபப்படுகிறயோ அந்த விஷயம் நீ கோபப்பட்ட ஒரே காரணத்துக்காக நிகழ்ந்து விடும் “ என்று.. எனவே பாலகுமாரன் சொல்வது போலும் கோபத்தை பொறுமையில் ஊறப் போடுங்கள்.. ” பிழை பொறுங்கள்..

எது நம் திறமை.. என்று கண்டுபிடித்து அதில் செயலூக்கம் காட்ட வேண்டும்..எந்திரன் மாதிரி நம்ம கிட்ட திறமைகள் கொட்டிக் கிடக்கும். அதை அடையாளம் கண்டு சொல்லக் கூடிய நல்ல நண்பர்கள் வட்டத்தை பெருக்கிக்கணும்..

சேர்ந்து வாழ்தல் பற்றியும் .. (ஆணோ., பெண்ணோ., யாரும் யாருக்கும் உடைமை இல்லைன்னு நினைச்சுட்டாலே பாதி பிரச்சனை தீர்ந்திரும்.. )ஆண்டாண்டு காலமா சொல்லப்பட்டு வரும் கற்பு என்பதன் அர்த்தத்தையும் காமத்தை துரோகமா பார்க்கப்படுறது குறித்தும் சும்மா நச்சுன்னு சொல்லி இருக்கார்..

எதுவும் அளவோட இருக்கணும் அது சுய மதிப்பீடுன்னு சொல்லப்படுற ஈகோவா இருந்தாலும்.. இல்லாட்டி அதிகம் ஊதப்பட்ட பலூனாய் வெடிச்சிரும்..

ஒப்பீடும் எதிர்பார்ப்பும் இல்லாத வாழ்வு அருமையா இருக்கும். நம்ம தனித்துவத்தோட நாம வாழணும்..

நம்மோட சூழல் பற்றி அறிந்து வாழணும்.. வீடு., நிறுவனம்., அலுவலகம்., கல்லூரி இது பற்றி எல்லாம் விவரங்கள் தெரிஞ்சு வைச்சுக்கணும்..

எதிரிகள் யார் போட்டியாளர்கள் யார்னு தெளிவு இருக்கணும்.. அற்ப விஷயங்களுக்காகவெல்லாம் எல்லாரையும் எதிரியா கருதக் கூடாது.. அதை விட்டுட்டு நம்ம முயற்சிக்காக சக்தி முழுவதையும் செலவளித்து ஜெயித்து வாழ்ந்து காட்டணும்..

அநீதி நடந்தால் தட்டிக் கேளுங்கள்..தவறுகளுக்கு எதிராக குரல் கொடுங்கள்..தவறுகளைத் தட்டிக் கேக்கும் போது தன்னம்பிக்கை வளர்கிறது..

எந்த ஒரு பிரச்சனைன்னாலும் தீர்வைப் பாருங்க.. அநேக பிரச்சனைக்கு காரணம் நாமளாவே இருப்போம்.. உலகமே மோசம்னு நினைக்காம.. நாம அதை எப்பிடி நமக்கு சாதகமா திருப்பிக்கலாம்னு முயற்சி பண்ணனும்.. அந்த மந்திரச் சாவி நம் கையில் இருந்தால் உலகமே நம்வசம்தான்..ஏன்னா நம்ம வாழ்க்கைப் பூட்டுக்கு சாவி நாமதான்..

இந்த புத்தகம் முழுவதும் நான் மிகவும் ரசித்தது தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை., தன்னம்பிக்கை மட்டு்மே.. தமிழில் எண்ணம் போல் வாழ்வு என்று சொல்வார்கள்.. அது போல் தன்னை முன்னேற்றிக் கொள்ள தானாய்த்தான் முனைய வேண்டும்..

நம் வாழ்வெனும் பூட்டுக்கான அணுகுமுறை என்ற சாவி நம் கையில்.. எல்லாருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் இந்த செய்தியை அழுத்தமாகப் பதிந்திருக்கும் சுரேகாவுக்கு வாழ்த்துக்கள்..

- தேனம்மை லஷ்மணன்.

நன்றி : திண்ணை.காம்

நூலை வாங்க....

Wednesday, January 19, 2011

'மில்' நாவலுக்கு ஆ.வி விருது

சென்ற வருடத்தில் நான் வாசித்த நாவல்களில் மிக சிறந்த நாவல் என்றால்... ’மில்’ தான். அந்த நாவலை பதிப்பித்து, வெளியீட்டவர் என் நெருங்கிய நண்பர் உதயகண்ணன். இதில் கொடுமை என்னவென்றால் அவர் இந்த நாவலை வெளியீட்ட விபரமே எனக்கு தெரியாது. ‘சுஜாதா’ நினைவு – 2010 போட்டியில் சிறந்த நாவல் பரிசு பெரும் போது எனக்கு தெரிந்தது.



நாவலை படித்ததும் அதை பற்றி ஒரு பதிவு எழுதிவிட்டேன். தோழர் ச.தமிழ்செல்வன் கூட இந்த நாவலைப் பற்றி தன் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இருந்தும், இந்த நாவலுக்கு போதிய அளவில் உதயகண்ணனால் விற்பனை செய்யமுடியவில்லை. அவருக்கு உதவியாக ‘We can Books’ விற்பனை உரிமை வாங்கியது. இருந்தும், என்னால் பெரிதாக விற்பனை செய்ய முடியவில்லை.

சென்ற வருடத்தில் சிறந்த நாவலாக ஆ.வி விருது (ஆனந்த விகடன் விருது) ‘மில்’ நாவலுக்கு கிடைத்துள்ளது. இந்த விருது அறிவிப்பு வந்தவுடன் சென்னை புத்தகக் கண்காட்சியில் கொடுத்த அத்தனை புத்தகமும் விற்பனையாகிவிட்டது.

இதுப் போன்ற விருதுகள் கொடுத்து பதிப்பாளர், எழுத்தாளர்களை மட்டுமல்லாமல் நூல் என் போன்ற விற்பனையாளர்களையும் ஊக்கவிக்கும் ஆனந்த விகடன் குழுமத்திற்கு நன்றி.

மில் நாவலை இணையத்தில் வாங்க... இங்கே

தபால் செலவு இல்லாமல் புத்தக விலையை மட்டும் கொடுத்து வாங்க விரும்புபவர்கள் கீழ் காணும் முகவரிக்கு M.O/ D.D மூலம் அனுப்பலாம் அல்லது இணைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி தங்கள் முகவரியை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பவும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

Friday, January 7, 2011

நீதியின் கொலை : ராஜன் பிள்ளை

Wasted Death என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் ‘நீதியின் கொலை’ பெயரில் புத்தகமாக வந்திருக்கிறது.

நீதியின் கொலை என்ற ஒரு புத்தக ஒன்று இல்லை என்றால் 'ராஜன் பிள்ளை' என்ற ஒருவர் வாழ்ந்து, அரசு அதிகாரிகளின் கவனக் குறைவால் இறந்தக் கதை எனக்கு தெரிந்திருக்காது. பதினைந்து வருடம் முன் (1995) உலக புகழ்ப் பெற்ற ஒரு தொழிலதிபர் திஹார் ஜெயிலில் சரியான சிகிச்சை அளிக்கப்படாமல் இறந்திருக்கிறார் என்பதை இன்றைய தலைமுறைகள் அறிந்துக் கொள்ள வேண்டியது ஒன்று. அங்கு, 6000 கைதிகளுக்கு ஆறு மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள்.

சாதாரன தொழிலாளி இறந்திருந்தால் பெரிய செய்தியாக இருந்திருக்காது. பெரிய முதலாளி சிறையில் இறந்ததால்,அதுவும் சிங்கப்பூர் குற்றவாளி சிறையில் இறந்தது கைதிகளை அலட்சியமாக நடத்தும் அதிகாரிகளின் நிர்வாகத்தை காட்டியுள்ளது.

யார் இந்த ராஜன் பின்னை ?

பிரிட்டானியா கம்பெனியின் முதல் இந்திய சேர்மன். ‘பிஸ்கட் கிங்’ என உலகத்தோரால் அழைக்கப்படும் அளவுக்கு உயர்ந்தவர். கோகோ கோலாவை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டுவர முதலில் முயன்றவர்.... சாப்பிட்ட தொகைக்கு மேல் டிப்ஸ் கொடுக்கக்கூடியவர். ஒரு திருமணத்துக்கு அவர் தரும் பரிசு, திருமணச் செலவைவிட விலை கூடியதாக இருக்கும்.

இப்படி பெரும் புகழ்ப் பெற்ற தொழிலதிபர் பிஸினஸ் தில்லாலங்கடி வேலைகளை செய்திருக்கிறார்.

ஒரு நிறுவனத்தின் பணத்தைக் கொண்டே அதன் பங்குகளை வாங்கியிருப்பதாகவும், தனக்கு சொந்தமான இருந்த கூட்டு நிறுவனத்துக்கு ஒரு ட்ரேட் மார்க்கை விற்றதாகவும் போன்ற 29 வணிக குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் அவர் மீது சுமத்தியது. வணிகத்திற்காக சிங்கப்பூர் சட்டத்திற்கு எதிராக நிறுவணத்தின் பணத்தை செலவு செய்திருக்கிறார்.

சிங்கப்பூரில் தனக்கு எதிரான வழக்கில் இருந்து தப்பித்து இந்தியா வந்ததும், இந்திய அரசால் கைது செய்யப்படுகிறார். திஹார் ஜெயிலில் உடல் நலம் குன்றி இறக்கிறார்.

ராஜன் பிள்ளை எப்படி ‘பிஸ்கட் கிங்’ அழைத்தார்கள் என்று தெரியவில்லை.

1. ஜோதிடத்தில் அதிகம் நம்பிக்கை கொண்டவர்.

2. கோக்க கோலா நிறுவனத்துடன் கூட்டாக சேர்ந்து இந்தியாவில் வணிக செய்ய பல டாலர் முதலீடு செய்தார். இறுதியில், கோக்க கொலா நிறுவனம் தனியாக இந்தியாவில் வியாபாரம் செய்ய முடிவு எடுக்க பெரிய தொகையை இழந்தவர்.

3.ராஜேஷ் சக்ஸேனா போன்றவர்கள் தன்னை முந்திவிட அளவிற்கு பிஸினஸில் மெத்தமையாக இருந்தவர். சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் வியாபாரத்தில் நண்பர்களை நம்பி ஏமாற்றப்பட்டவர்.

4. 20 பாத் மதிப்புள்ள தாய் அக்ரி புட்ஸை பங்கை 80-103 பாத் வாங்கியவர்.

இந்த புத்தகத்தை எழுதியவர் ராஜன் பிள்ளையின் தம்பி ராஜ்மோகன் பிள்ளை.

ராஜ்மோகன் தன் அண்ணன் ராஜன் இந்தியாவுக்கு வந்தது மிக பெரிய தவறு. சிங்கப்பூர் ஜெயிலில் இருந்திருந்தால், நிச்சயமாகப் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் இறந்திருக்க மாட்டார். செய்யாத குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட்டிருக்க மாட்டார் என்று சொல்லுகிறார். பல இடங்களில் தன் அண்ணனை கதாநாயகனாக்கும் மனப் போக்கு அவர் எழுத்தில் தெரிந்தது.

உண்மையில், சிங்கப்பூரில் செய்யாத தவறை இந்தியாவில் தைரியமாக தெரிந்தே செய்யலாம். தனது நிறுவனத்தின் பணத்தில் பங்குகளை வாங்குவது, ஆட்களை வைத்து பங்கு சந்தையில் விலை ஏற்றுவது இங்கு சர்வசாதாரம். சத்யம், ரிலையன்ஸ் போன்ற நிறுவனம் செய்யாத தவறை ராஜன் பிள்ளை செய்துவிட்டார் என்று அப்பாவி தனமாக கேள்வி இந்த புத்தக முடிக்கும் போது தோன்றுகிறது.

ராஜன் பிள்ளை தண்டிக்கப்பட்ட ஒரே காரணம் வழக்கு சிங்கப்பூரில் நடந்த்தால் தான். ( இந்தியாவில் நடந்திருந்தால் வருட கணக்கில் இழுத்திருப்பார் என்பதை இந்த புத்தகத்தில் குறிப்பிடாமல் இல்லை.)

அதிகாரிகளின் மெத்த தனத்தை ஒரு முதலாளியின் மரணத்தின் மூலம் வெளிச்சதிற்கு வந்திருக்கிறது. பத்து வருடம் கழித்து இந்த புத்தகம் நினைவுப்படுத்தியிருக்கிறது.

புத்தகத்தை வாங்க.. இங்கே.

Thursday, January 6, 2011

சென்னை புத்தக கண்காட்சி(2).... உறுப்பினர் உள் அரசியல்

சென்னை புத்தக கண்காட்சி நுழைந்த்தும் நேராக ஆண்டாள் திரிஷக்தி (ஸ்டால் எண்.176)க்கு சென்றேன். கேபிளும், கே.ஆர்.பி.செந்திலும் போட்டோ செக்‌ஷனலில் பிஸியாக இருந்தனர். நாகரத்னா பதிப்பக புத்தகங்களை ஆண்டாள் திரிஷக்தி (ஸ்டால் எண்.176)யில் இறக்கிவிட்டு கே.ஆர்.பி.செந்திலுடன் பேசிக் கொண்டு இருந்தேன்.

நீங்கள் ஏன் ஸ்டால் போடவில்லை என்று கேட்டார் ? செந்தில்

இந்த முறை நான் வாடிக்கையாக ஸ்டால் போடுபவர்களுக்கு கூட அனுமதி மறுக்கப்பட்ட கதையை சொன்னேன். ஸ்டாலுக்கான அனுமதி தொகை, உறுப்பினர்களுக்கு இந்த முறை முக்கியத்துவம் போன்ற தெரிந்த சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டோம்.

பேசாமல் நீங்களும் மெம்மர் அயிடுங்க என்றார் செந்தில்.

அதில் தான் இருக்கு ஏகப்பட்ட உள் குத்து. நீங்கள் உறுப்பினராக வேண்டும் என்றால் ரூ.5000 டி.டி. எடுத்து விண்ணப்பப் படிவத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். உங்கள் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் உங்களுக்கு தெரிவிக்கப்படும். விண்ணப்பம் மறுக்கப்பட்டால் ரூ.5000 டி.டியை திருப்பி அனுப்புவார்கள். எனக்கு தெரிந்த நண்பரின் டி.டி.யை ஆறு மாதம் கலித்து திருப்பி அனுப்பியிருக்கிறார்கள்.

ஒரு வேளை விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டாலும், முதல் மூன்று வருடங்களுக்கு உறுப்பினர் அல்லாத தொகையை தான் ஸ்டாலுக்கு செலுத்த வேண்டும். இப்போது, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு ரூ.16,500/-, உறுப்பினர்களுக்கு ரூ.9500/- என்று உள்ளது. அதாவது, நான்காவது வருடத்தில் இருந்து தான் உறுப்பினரானது போல் உங்கள் பதிப்பகத்தை கருத்துவார்கள்.

பாபாஸி தேர்தலில் நிற்க விரும்பினால் இன்னும் மூன்று வருடம் உறுப்பினராக நீங்கள் இருந்திருக்க வேண்டும். அதாவது ஆறு வருடம் உறுப்பினராக இருந்தால் தான் தேர்தலில் நீங்கள் நிற்க முடியும் என்றேன்.

செந்திலுக்கு ஏன் தான் பதிப்பக தொழிலுக்கு வந்தோம் என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். நாங்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது உண்மைத் தமிழர் வந்தார். ( நான் எழுதிய நடைபாதை, என்னை எழுதிய தேவதைக்கு இரண்டு சிறுகதை தொகுப்புகளை வாங்கினார்... ஒரு விளம்பரம்).

உண்மை தமிழர் சென்றதும் பா.ரா தன் இரண்டு தளபதியோடு (ஆதிஷா, லக்கி) வந்தார். பிரபல பதிவர் என்று திட்டி எழுதிய பா.ரா அவர்கள் கேபிளை பார்த்தது பிரபல பதிவர் என்றார். (இதில் ஏதாவது உள்குத்து உண்டா என்று தெரியவில்லை.) காலையில் பல் விளக்கும் முன் கேபிள் பதிவை தான் பார்ப்பேன் பா.ரா கேபிளை பாராட்டினார் (?). ( நாங்க தான் வாஷ் பேஸினுக்கு தான் போவோம் என்றேன்.)

அங்கிருந்து, அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் ஸ்டாலுக்கு (எண்.272) சென்றேன். இன்னும் பல உறுப்பினர் புத்தகம் வந்து சேரவில்லை. பலர் கண்காட்சியில் புத்தகம் வைக்க இடம் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். உறுப்பினர்களுக்காக ஒரு சங்கம் ஸ்டால் எடுத்திருக்கும் போது அதில் உறுப்பினர்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பது மிகவும் வேதனையாக இருந்தது. என்னுடைய பையை அங்கு வைத்துவிட்டு புத்தகம் வாங்க சென்றேன்.

இன்று வாங்கிய புத்தகங்கள்.

எம்.ஆர்.ராதாவின் சிறை சிந்தனைகள் – வ.உ.சி நூலகம்
ரெட் சன் – சுதீப் சக்ரவர்த்தி – எதிர் வெளியீடு
ஸ்பெக்டரம் – பத்ரி – கிழக்கு பதிப்பகம்
காஷ்மீர் – பா.ராகவன் – கிழக்கு பதிப்பகம்

புத்தக கண்காட்சி தொடங்கும் முன்பே வாங்க நினைத்த புத்தகங்கள் ( பட்டியல் கீழே) வாங்கிவிட்டதால் எந்த புத்தகத்தையும் குறிப்பிட்டு தேடி வாங்கவில்லை.

வஞ்சக உளவாளி – நந்திகா ஹக்சர் – கிழக்கு
தேகம் – சாரு நிவேதிதா - உயிர்மை
ஒரு பாலியல் தொழிலாளியின் சுயசரிதை – நளினி ஜமீலா - காலச்சுவடு
பரத்தை கூற்று – சி.சரவணகார்த்திகேயன் – அகநாழிகை
ஞாயிற்றுகிழமை மதியப்பூனை – பொன்.வாசுதேவன் – உயிர்மை
வெயில் தின்ற மழை – நிலா ரசிகன் – உயிர்மை
வெள்ளைத் தீ – அறிவுமதி – தமிழ் அலை

புத்தக கண்காட்சியை விட்டு செல்ல இரவு 8.40 மணியானது. வரும் நாட்களில் முன்பை விட கூட்டம் அதிகமாக வரும் என்று சொல்கிறார்கள். வார நாட்களில் இந்த அளவிற்கு கூட்டம் வந்ததே பெரிய விஷயமாக எனக்கு தெரிந்தது. டூ விலர் பார்க்கிங் 90% வரை நிரம்பி இருந்தது. இதை விட அதிகமாக தொடர வேண்டும் என்பது தான் என் ஆவா....!

Wednesday, January 5, 2011

புத்தக கண்காட்சி... ஐய்யா... கலைஞர் வரலை !!

எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் புத்தக கண்காட்சி மிக அமைதியாக தொடங்கப்பட்டது. கலைஞர் வராமல் பல வாசகர்களுக்கு நல்லது செய்திருக்கிறார். பெரிய கெடுப்பிடியில்லாமல் வார நாட்களில் எளிதாக நுழைவது போல் முதல் நாள் புத்தக கண்காட்சியிருந்தது.

சில புத்தக கடைகள் புத்தகத்தை அடுக்கி வைத்துக் கொண்டு இருந்தனர். இன்னும் சில கடைகள் திறக்கவேயில்லை. சில இடங்களில் புத்தகம் சீராக அமைக்கப்பட வில்லை. இருந்ததும், புத்தக கண்காட்சிக்கு நுழைந்ததும் முதல் நாள் ’எந்திரன்’ படம் பார்த்த ரசிகனின் சந்தோஷம் இருந்தது.

நுழைவாயில் இரண்டாவது ஸ்டாலாக ‘தினத்தந்தி’ கடை இருந்தது. ‘வரலாற்றுச் சுவடுகள்’ என்ற ஒரு புத்தகத்தை வைத்து ஸ்டால் வைத்திருக்கிறார்கள். ரூ.375/- மதிப்புள்ள புத்தகம் ரூ.300/- விற்கப்படுகிறது. 842 பக்கங்கள். வண்ண புகைப்படங்கள் கொண்ட புத்தகம். முதல் நாளே 40 பிரதிகள் விற்பனையானதாம். புத்தக கண்காட்சி முடிவதற்குள் 2000 பிரதிகள் விற்கலாம் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு பல வரலாற்று தகவல் இந்த புத்தகத்தில் உள்ளது. வரலாற்று பிரியர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாங்குவார்கள் என்று நினைக்கிறேன். நானும் வாங்கிவிட்டேன்.

நாகரத்னா பதிப்பக புத்தகங்கள் இருக்கும் ஸ்டால் எண். 448க்கு சென்றேன். நாகரத்னா புத்தகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அடுக்கி வைத்திருப்பதை பார்த்தேன். வரும் நாட்களில் அப்படி இருக்குமா என்று சொல்ல முடியாது. 448ல் கொஞ்ச நேரம் செலவு செய்தேன். அதன் பின் வழக்கம் போல் கிழக்குக்கு சென்று பா.ராவுக்கு ஒரு அட்ட்டென்ஸ் போட்டேன். முகில், முத்துகுமார் இருவரிடம் இரண்டு நிமிடம் பேசிவிட்டு நகர்ந்தேன்.

அனைத்திந்திய எழுத்தாளர் சங்கள் (ஸ்டால் எண்.272) க்கு சென்றேன். கால் வாசி புத்தகங்கள் தான் இருந்தது. என்னுடைய புத்தகங்கள் எதுவும் வரவில்லை. நாளை தான் வரும் என்று சொல்லிவிட்டார்கள். தெரிந்திருந்தால் கையோடு என் புத்தகத்தை எடுத்து வந்திருப்பேன். பதிவர் உமாசக்தி வந்திருந்தார். ( என் புத்தகத்தை அவரை வாங்க வைத்திருப்பேன். தப்பித்துவிட்டார்.)

சில ஸ்டாலில் இருந்து புத்தக பட்டியலை வாங்கி வந்திருக்கிறேன். R&D வேலை செய்து என்ன புத்தக வாங்க வேண்டும் என்ற பட்டியலை தயார் செய்ய வேண்டும்.

இந்த முறை 646 அரங்குகள் புத்தக கண்காட்சியில் உள்ளது. ஆனால், பங்குப் பெற்ற நிறுவனங்கள் 376 மட்டுமே ! எந்த தடவையும் இல்லாமல் இந்த முறை உறுப்பினர்களுக்கு அதிக ஸ்டால் வழங்கியது போல் உள்ளது. உறுப்பினர் அல்லாதவர்கள் பங்கு தொகையை ரூ.14500 இருந்து ரூ.16500 ஆக உயர்த்தியும் 850 விண்ணப்பங்கள் வந்ததாக கேள்வி. பொதுவாக 20% உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அரங்கம் (தமிழ் 10% - பிற 10%) ஒதுக்குவார்கள். அப்படி உறுப்பினர் அல்லாதவர்களின் கடையில்க் கூட முன்னனி பதிப்பக பேனர்கள் பார்க்க முடிந்தது. முன்னனி பதிப்பகத்தின் புத்தகங்கள் தான் விற்பனைக்கு இருந்தது. இதனால், வாசகர்கள் பார்த்த புத்தகத்தையே பார்க்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். அதிக புத்தகங்கள் வாசகர் பார்வைக்கு வராமல் போகிறது. வழக்கமாய் ஸ்டால் போடும் சிறு பதிப்பாளர்களுக்கு ஸ்டால் கிடைக்கவில்லை என்று இன்னொரு தகவல்.

பொருட்காட்சி தீவுதிடலில் நடத்தும் போது ஏன் புத்தக கண்காட்சியும் அங்கு நடத்தக் கூடாது. 850 விண்ணப்பங்களுக்கும் தீவுதிடலில் ஸ்டால் கொடுக்க முடியும் என்பது என் கருத்து. அப்படி செய்தால், தங்கள் பதிப்பக புத்தக விற்பனை பாதிக்கப்படும் என்று முக்கிய பொருப்பில் இருப்பவர்கள் நினைக்கலாம்.

இப்படியே போனால் மூவேந்தர் கையில் இருக்கும் சினிமாத்துறைப் போல் பதிப்பகத் துறையும் வந்துவிடும். சிறு பதிப்பாளர்கள் வெளியே தள்ளி முன்னனி பதிப்பகங்கள் ஆக்கிரமிப்பாக இருந்துவிடும்.

என்ன தான் புரட்சி, கம்யூனிசம் போன்ற புத்தகங்கள் வந்தாலும், அதை வெளியிட்டவர்கள் முதலாளிகள் தானே !

அடுத்த இரண்டு வாரங்களுக்கு பதிவு போட நேரம் இருக்குமா என்று தெரியவில்லை. அப்படியே பதிவு போட்டாலும் புத்தகத்தை பற்றி அல்லது புத்தக கண்காட்சி பற்றியதாக தான் இருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails