வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, January 31, 2011

பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம் !

நந்திதா ஹக்சர்

”இந்திய இலங்கைக்கு ஆயுதம் வழங்கி ஈழ கனவை சிதைத்து, பல உயிர்கள் இறந்ததற்கு இந்தியாவும் காரணமாக இருந்ததுள்ளது.

இந்திய ஈழத்திற்கு எதிராக நடந்துக் கொண்டதற்கு காரணம் சீனாவுடனான போட்டியாம்.

சீனாவின் ஆதரவால் இலங்கை விடுதலை புலியை அழித்திருந்தால், நாளை இந்தியாவுக்கு எதிராக மாறும் என்ற அச்சத்தில் இந்தியாவும் இலங்கைக்கு ஆயுதம் வழங்கியது. இதனால், இலங்கை இந்தியாவுக்கு எதிராக செயல் படாது என்று இதுவரை நம்பிவருகிறது. இந்தியா இலங்கைக்கு உதவியதற்கு இதுவும் ஒரு காரணமாக இன்று வரை சொல்லப்படுகிறது.”


இப்படி, இந்தியா – இலங்கை பற்றின பல விமர்சனங்கள் நாம் படிக்கும் வேலையில் மற்றொரு அண்டை நாடான பர்மா மீது இந்தியாவுக்கு இருக்கும் பார்வை நாம் தெரிந்துக் கொள்ள உதவும் நூல் தான் ‘வஞ்சக உளவாளி : பர்மா போராளிகளை ஏமாற்றிய இந்திய இராணுவம்’. Rogue Agent என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கம்.

ஜனநாயக நாடான இந்தியா, ஏன் அண்டை நாடான பர்மாவில் நடக்கும் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை ? இந்தியாவின் உயர்ந்த விருது வழங்கிய சுகீயை ஏன் காப்பாற்ற நினைக்கவில்லை ?

சட்டத்திற்கு புரம்பாக செயல்படுபவர்களை கைது செய்வார்கள். ஆனால், சட்ட விரோதமாக இந்திய சிறையில் இருக்கும் 36 பர்மிய போராளிகளை இந்தியா ஏன் விடுவிக்கவில்லை ? பல வருடங்களாக அவர்கள் மீது ஏன் குற்றப்பதிரிகைக் கூட தாக்கப்படவில்லை ?

- இப்படி பல கேள்விகளுக்கு விடையளிக்கிறது இந்த நூல்.



முதல் ஐந்தாறு அத்தியாயங்கள் வழக்கறிஞரான நந்திதா ஹக்சர் தன் 36 கட்சிக்காரர்களைப் பற்றியும், அவர்கள் கைதான வழக்கைப் பற்றியும் சொல்லுகிறார். ஏதோ வழக்கு சம்பந்தமான நூல் என்றே நூறு பக்கங்களை நாம் கடக்க வேண்டிய இருக்கிறது. ஆனால், அதன் பின் அவர் சொல்லும் ஒவ்வொரு சம்பவமும் நம் உளவுத்துறையை நினைத்து வெட்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

தன் நாட்டில் நடக்கும் சர்வதிகாரத்தனத்தை எதிர்த்து போராடும் பர்மிய போராளிகள் இந்திய உதவும் என்று நம்பினார்கள். ஆனால், இந்திய உளவாளிகளோ அவர்களுக்கு உதவ பேரம் பேசியிருக்கிறார்கள். போராளிகளும் கேட்ட பணத்தை தர சம்பதித்துள்ளனர். தங்கள் பணத்தை கர்னல் கிரேவாலுக்கு கொடுத்தனர். இருந்தும், குறிப்பிட்ட தொகை பர்மிய போராளிகளால் தர முடியாத்தால் பேச்சு வார்த்தையை இழுப்பறி செய்துள்ளார் கர்னல் கிரேவால் .

நாலரை ஆண்டுகளாக இந்திய உளவுத்துறையுடன் நடந்த பேரங்களுக்கு பிறகு 10,பிப்ரவரி,1998ல் லேண்ட் ஃபால் தீவில் பேச்சு வார்த்தை நடத்த அழைத்தது. ‘ஆப்ரேஷன் லீச்’ என்ற பெயரில் 6 பர்மிய போராளிகளை பேச்சு வார்த்தையின் போது இந்திய உளவுத்துறை கொலை செய்துள்ளது. 36 பேரை கைது செய்துள்ளது. அவர்களை அந்தமான் சிறைசாலைக்கு அழைத்து சென்று விசாரித்துள்ளார்கள். (இந்திய போராளிகளுக்காக பிரிட்டிஷ் அரசு செய்த சிறைசாலை பர்மிய போராளிகளை விசாரிக்க பயன்ப்பட்டுள்ளது)

வழக்கறிஞர் நந்திதா ஹக்சர் போராளிகள் விடுவிக்க பத்து வருடங்களாக போராடி சி.பி.ஐ குற்றப்பத்திரிகை மட்டுமே பதிவு செய்ய வைக்க முடிந்தது. 34 பேர் ( இடைப்பட்ட காலத்தில் 2 பேர் தப்பிவிட்டார்களாம் !) வெளியே வரக்கூடாது என்பதில் சி.பி.ஐ மிக கவனமாக உள்ளது. இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால் பர்மிய போராளிகளிடம் பேரம் பேசிய கர்னல் கிரேவால் பெயர் குற்றப்பதிரிகையில் இல்லை. வெளி உலகத்திற்கு சுதந்திர பறவையாக அந்த வஞ்சக உளவாளி வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்.

கடைசி சில அத்தியாயங்களில் பர்மா மீது இந்தியா தன் பார்வையை மாற்றிக் கொண்ட காரணத்துடன் சீனாவையும் முடிச்சுப் போடும் போது ஆரம்பத்தில் கேட்கப்படும் பல கேள்விகளுக்கு விடை தெரிகிறது.

இந்தியா பர்மிய போராளிகள் கைவிட்டத்தில் பர்மா இன்று வரை மியான்மராக வாழ்ந்துக் கொண்டு இருக்கிறது. எந்த நாட்டிலும் சர்வதிகாரம் நீண்ட நாட்களாக வாழ்ந்ததில்லை. என்றோ ஒரு நாள் மியான்மர் மீண்டும் பர்மாவாக மாறும். ஜன்நாயகம் மலரும். அப்படி மாறும் போது பர்மா இந்தியாவை மன்னிக்குமா என்பது சந்தேகம் தான்.

**

’சீனாவை எதிர்க்க வந்துவிடுமோ’ என்ற அச்சத்தில் தான் ஒவ்வொரு அண்டை நாட்டு விவகாரத்தையும் இந்தியா கையாள்கிறது. நேபால், பர்மா, இலங்கை, பாகிஸ்தான் என்று யாருக்கு எதிராக குரல் கொடுத்தாலும், செயல்பட்டாலும் சீனா சண்டைக்கு வருமோ என்ற அச்சம் அப்பட்டமாக தெரிய தொடங்கிவிட்டது. இந்திய மீனவர்கள் பலர் கொல்லப்படுவதை அமைதியாக பார்த்துக் கொண்டு இருப்பதற்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கிறது.

ஈழம், பர்மா என்று இந்திய உளவுத்துறை கைவிட்ட நாட்டின் பட்டியல் பெருகிக் கொண்டே வருகிறது. பலம் இல்லாதவன் அஞ்சுவதில் தவறில்லை. ஆனால், பலசாலி அஞ்சும் போது அவனுக்கு எதிரிகள் அதிகமாவதை இந்தியா உணர வேண்டும். இந்தியாவை சுற்றி எதிரிகளாக இருப்பது அச்சமும் மிக முக்கிய காரணம்.

கணிணித்துறையில், தொழில்நுட்பத்தில் வளர்ந்த நாடாக தெரிந்தாலும், துணிச்சலில் நாம் வளரும் நாடு தான்.

நூல் வாங்க... இங்கே

ரூ.170, பக் : 286
கிழக்கு பதிப்பகம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails