வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 4, 2020

Seven Years of Night (2018) - Korean Movie

தென் கொரிய எழுத்தாளரான Jung Yoo-jung எழுதிய Seven Years of Night என்ற நாவலை அடிப்படையாக கொண்டு அதே தலைப்பில் வெளியானப் படம்.

ஒரு ஊரையே விழும் ஏரியில் காட்சி தொடங்குகிறது. அந்த ஏரியில் குதிப்பவர்கள் அந்த ஏரி உயிரை வாங்கிவிடும் என்று பேசிக்கொள்கிறார்கள். அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் ஒரு இளைஞன் ஏரியில் குதிக்கிறான். Seven Years of Night என்ற டைட்டில் கார்ட் வருகிறது.

பிரிந்து சென்ற தனது மனைவி மீது இருக்கும் கோபத்தை தனது மகளை மீது தினமும் அடித்து துன்புருத்துகிறான் மருத்துவர். தனது தந்தையை போல் இல்லாமல் தனது மகனுக்கு நல்ல அப்பாவாக நடந்துகொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து நடந்துகொள்கிறான் இன்ஜினியர்.



ஒரு நாள் இரவு சாலையில் இருவரும் ஒருவரை ஒருவர் கார் மூந்துவதில் அறிமுகம் தொடங்குகிறது. அந்த இரவின் நீட்சியில் ஒரு விபத்து நடக்க, மருத்துவரின் மகள் மீது இன்ஜினியர் கார் மோத அவள் இறக்கிறாள். பல நாள் தனது மகளை கொடுமைப்படுத்திய மருத்துவர் தனது மகளை கொன்றுருப்பார் என்று போலீஸ் சந்தேகப்படுகிறார்கள். அதனால், தனது மகளை கொன்றவனை தானே கண்டுபிடிப்பதாக மருத்துவர் முடிவெடுக்கிறார்.

ஒரு சிறுமியை கொன்ற குற்றவுணர்வில் இன்ஜினியர் தனது வழக்கத்துக்கு மாறான இயல்பில் நடந்துகொள்கிறான். இவர்கள் இருவருக்குள் நடக்கும் போராட்டத்தில் ஒரு கிராமமே அழிகிறது.

த்ரில்லர் வகைப் படமாக இருக்கும் என்று ஆரம்பத்தில் பார்வையாளனை கட்டிப்போடுகிறது. எதோ அமானுஷ்யம் ஒழிந்துகொண்டிருப்பது உணர்வைம் ஏற்படுத்துகிறது. ஆனால், அப்படியில்லாமல் இருவருக்குள் நடக்கும் பாசப் போராட்டமும், அதனால் விளையும் பழிவாங்கும் நடவடிக்கைதான் திரைக்கதையாக அமைகிறது. ஆரம்பக்காட்சியில் மனித உயிர்களை குடிக்கும் ஏரி சொன்னதற்கு இறுதி காட்சிக்கு முன் நடக்கும் சம்பவங்கள் விளக்குகிறது.

தனது மகளின் மரணத்திற்கு ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் போது நியாயம், தர்மம் எதுவும் உதவுவதில்லை. படித்த மருத்துவப் படிப்பு கூட உதவவில்லை என்பது மருத்துவர் பாத்திரம் காட்டுகிறது. மகளின் மரணத்திற்கு பழிவாங்கும் நினைக்கும் தந்தை ஒரு நாள் கூட மகளிடம் பாசமாக நடந்துகொள்ளவில்லை. தனது மனைவி மீது இருந்த கோபத்தைதான் காட்டுகிறான். அப்படிப்பட்டவன் ஏழு வருடங்களாக காத்திருந்து பழிவாங்கும் நடவடிக்கை கொஞ்சம் முரணாக தெரியலாம். இறுதுகாட்சியில், தன்னை வெறுக்கும் மனைவியை எவ்வளவு காதலிப்பதாக கூறும்போது அவன் மனதுக்குள் இருக்கும் அன்பு எப்படி பழிவாங்கும் உணர்வாக மாறியிருப்பது புரிகிறது.

ஏரியை மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்க நினைக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக இந்தப்படங்களை பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts with Thumbnails