வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 4, 2017

The Classified Files ( 2015 – Korean Crime Thriller)

பொதுவாக ஒரு குழந்தை கடத்தப்பட்டால் கடத்தல்காரர்கள் என்ன செய்வார்கள் ? குழந்தையின் பெற்றோர்களிடம் மிரட்டி பணம் கேட்பார்கள். எவ்வளவு விரைவாக பணத்தை பெற்றோர்களிடம் பெற்று, குழந்தையை அவர்களிடம் ஒப்படைக்கிறோமோ தங்களுக்கு பாதுகாப்பு என்று கடத்தல்காரர்கள் நினைப்பார்கள். அதே சமயம் பணத்தை கொடுக்க முடியாத பெற்றோர்கள் போலீஸிடம் சென்று, பணம் கொடுக்கும் போது பிடித்தால் என்ன செய்வது என்ற அச்சம் அவர்களுக்குள் இருக்கும். 

இந்த அடிப்படை உண்மையை தெரிந்த கடத்தல்காரர்கள் வழக்கமான யுக்தியை மாற்றுகிறார்கள். குழந்தையை கடத்தி, பதினைந்து நாள் வரை குழந்தையின் பெற்றோரை தொடர்பு கொள்ளாமல் இருக்கிறார்கள். போலீஸ் குழந்தை இறந்திருக்கும் என்று தங்களின் அடுத்த வேலைக்கு சென்றுவிடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெற்றோரிடம் மிரட்டி பணம் கேட்கலாம் என்று புதிய யுக்தியை கையாள்கிறார்கள். 

கோரியாவில் நடந்த உண்மை கடத்தல் சம்பவத்தை கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் ” The Classified Files”. 


கோரியாவில் இருக்கும் புசான் நகரத்தில் பள்ளி சிறுவ/சிறுமிகளை கடத்தும் நிஜ கடத்தல்காரர்களிடம் இருந்து 33 நாட்களுக்கு பிறகு ஒரு சிறுமியை மீட்ட உண்மை சம்பவத்தை கொண்டப் படம். 

பள்ளியில் இருந்து ஈன் – ஜூ என்ற சிறுமி கடத்தப்படுகிறாள். கடத்தப்பட்ட சிறுமியைக் குறித்து எந்த விதமான தகவல் இல்லை. போலீஸுக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. ஒரு வேளை சிறுமியை கொன்றிருக்கலாம் என்று போலீஸ் சந்தேகிக்கிறது. சிறுமியின் அம்மா தனது மகள் நிஜமாகவே இறந்துவிட்டாளா என்பதை தெரிந்துகொள்ள ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சனிடம் செல்கிறாள். அவளது மகள் உயிரோடு இருப்பதாக ஆரூடன் சொல்கிறான். கடத்தப்பட்ட வழக்கு ஜோங்-கில் என்ற காவலாளியிடம் வருகிறது. 

எந்த துப்பும் இல்லாத சமயத்தில் கடத்தியவர்கள் 15 நாள் கலித்து பெற்றோர்களை தொடர்பு கொண்டு பணம் கேட்கிறார்கள். பெற்றோர்களில் போன் கால்களை இடைமறைத்து கேட்கும் ஜோங்-கில், அவனுக்கு உதவியாக ஆரூடம் சொல்லும் கிம் ஜோங்-சன் இருக்கிறான். 

 சக காவலர்கள் அந்த சிறுமி இறந்திருப்பாள் என்று முடிவில் இருக்க, ஆரூடன் கிம் ஜோங்-சன் வார்த்தை மீது இருந்த நம்பிக்கையில் சிறுமியின் தேடலில் ஜோங்-கில் தீவிரமாக இயங்குகிறார். அவர்கள் இருவரும் சிறுமியை எப்படி மீட்டார்கள் என்பது தான் கதை. 

பகுத்தறிவுக்கு ஒப்பாத ஆரூடமும், காவலர்களுக்கு உதவும் பாத்திரமாக வருவது தான் ஏற்க முடியவில்லை. இத்தனைக்கும் உண்மை சம்பத்தை அடிப்படையாக கொண்டப் படம் என்று சொல்லும் போது ஆரூடம் க்ரைம் இன்வஸ்டிகேஷனுக்கு உதவுமா போன்ற கேள்வி தோன்றுகிறது. 

படம் முடியும் போது நிஜமான ஜோங்-கில் , கிம் ஜோங்-சன் படங்களை காட்டி இறுதி வரையில் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்ததாக காட்டப்படுகிறது. 

Must Watch Movie என்று சொல்ல மாட்டேன். ஆனால், காவலர்களுக்குள் இருக்கும் உள் அரசியல் விசாரணையை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதில் இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜோங்-கில் சிறுமி மீட்பதற்காக போராடும் போது சக காவலர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால், வெற்றி கிடைக்கும் போது அவனது பெயரை பின்னுக்கு தள்ளி பதக்கங்களை வாங்கிகொள்கிறார்கள். 

எல்லா ஊரிலும், அலட்சியம், ஈகோ, அடுத்தவன் உழைப்பில் குளிர்காய்யும் காவலர்கள் இருக்கிறார்கள் என்பதை இந்தப் படத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails