வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, December 30, 2008

"'குண்டு' குரு - 'மண்டு' மதன்" அறிமுகம் - புது நகைச்சுவை தொடர்

‘குண்டக்க – மண்டக்க’ நகைச்சுவை தொடரை படித்த பலர் என்னை இருந்தார்கள். அதில் கூறிப்பாக ‘ராஜ்’ அவர்களை சொல்ல வேண்டும். தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் வைத்து எழுதுங்கள் என்று கூறினார். அவரை போல் இன்னும் ஒரு சிலர் இதே அறிவுரை கூறினார்கள். சமிபத்தில் பதிவர் சந்திப்பில் கூட ‘கேபிள் சங்கர்’ அவர்கள் என் நகைச்சுவை தொடரை பாராட்டி, தனித்துவமான நகைச்சுவை கதாப்பாத்திரங்கள் பற்றி கூறியிருந்தார். அதனால், ‘குண்டக்க மண்டக்க’ தொடரை இன்னும் ஒரு கதையோடு முடித்துக் கொண்டு, புதிய நகைச்சுவை தொடராக 'குண்டு' குரு - 'மண்டு' மதன் தொடரை எழுதலாம் என்று இருக்கிறேன். (குண்டக்க மண்டக்க போல் கோர்வையாக இருப்பதால் குண்டு - மண்டு என்று தேர்ந்தெடுத்தேன்)

'குண்டு' குரு - 'மண்டு' மதன் இதற்கு முன் யாரவாது பயன் படுத்திருக்கிறார்களா என்று எனக்கு தெரியவில்லை. இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

'லாரன் - ஹார்டி' கதாப்பாத்திரங்கள் போல் இந்த இரண்டு பாத்திரம் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையில் ( பேராசையில்) 'குண்டு - மண்டு' என்று வைத்தேன். எழுத தொடங்கும் போதே பெரிய அளவில் யோசிக்கிறேன். தவறில்லை. அப்போது தான் ஒரளவாவது வெற்றி கிடைக்கும்.
இவர்கள் எப்படி இருப்பார்கள் என்று கற்பனை செய்ய வேண்டாம். என்னென்றால், அது எனக்கே தெரியாது. 'குரு' குண்டாய் இருப்பான். கொஞ்சம் புத்திசாலி. 'மதன்' ஒல்லியாக இருப்பான். சரியான மடையன். அவ்வளவு தான் இப்போதைக்கு. கார்டூன் மதன், மதி, மருது போன்றவர்கள் இந்த பாத்திரங்களை வரைந்துக் கொடுத்தால் நன்றாக இருக்கும். (ஓவர பேசுர ... இங்கையே நிறுத்திக்கோ... குகன்)

கதைக்கு ஏற்றவாரு... இவர்கள் பாத்திரப்படைப்புகள் எப்படி மாற்ற போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. ‘நாலு பேரு சிரிக்க வைக்க எதுவுமே தப்பிலே’ என்ற தைரியத்தில் தொடங்குகிறேன்.

'குண்டு' குரு - 'மண்டு' மதன் சிரிக்க வைக்க வருகிறார்கள்.

தாயாகுங்கள்… மன்னிக்கவும் தயாராகுங்கள்.

Thursday, December 18, 2008

சம்பளத்தை குறைத்துக் கொள்ளுங்கள்

பிரபல கார்ப்ரேட் நிறுவனம் ஒரு நடிகனுக்கு பத்து கோடி சம்பளம் கொடுத்து பெரிய அளவில் படம் தயாரிக்கிறார்கள். அந்த படமும் பெரிய வெற்றி படமாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு அந்த நடிகனின் சம்பளம் பத்து கோடியாக மாறிவிடுகிறது. சிறு தயாரிப்பாளர்கள் அந்த நடிகனிடம் நெருங்க கூட முடியாது. இப்படி ஒவ்வொரு நடிகனின் சம்பளம் கார்ப்பேரட் நிறுவனத்தின் உதவியால் சம்பளம் உயர்வதை பார்த்த சிறு தயாரிப்பாளர்கள் புதுமுகங்களை வைத்து படம் எடுக்கும் சூழ்நிலை வருகிறது. ஒரு சில தயாரிப்பாளர்கள் போட்டி போடாமல் ஒதுங்கி விடுகிறார்கள். சில வருடங்கள் பிறகு அந்த நடிகனை வைத்து தயாரித்த கார்ப்ரேட் நிறுவனத்தின் படங்கள் தோல்வி அடைகின்றன. அந்த கார்ப்ரேட் நிறுவனம் தயாரிப்பு செலவை குறைக்க நடிகனின் சம்பளத்தை குறைக்கிறார்கள். அந்த நடிகன் தன் சம்பளத்தை பத்து கோடியில் இருந்து ஒரு பைசா கூட குறைக்க மனமில்லை. அதனால், அந்த கார்ப்ரேட் நிறுவனம் புதுமுகங்களையும், குறைவாக சம்பளம் வாங்கும் நடிகர்களை வைத்து படம் எடுக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர்களும் அந்த நடிகனின் சம்பளத்தை பார்த்து அவரை நெருங்குவதில்லை. இனி திரையுலகில் அவர் நீடிக்க வேண்டும் என்றால் அந்த நடிகன் தன் சம்பளத்தை குறைத்தாக வேண்டும். அது தான் அவனுக்கு இருக்கும் ஒரே வழி. இப்போது இருக்கும் மென்பொருள் பொறியியலாளர்களின் நிலைமையும் அதுவே !

மேலே குறிப்பிட்டுள்ள நடிகனின் சம்பளம் ஏற்றமும், இறக்கமும் காலம் காலமாக நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனால், மென்பொருள் பொறியியல் வல்லுநர்கள் இப்படி ஒரு வீழ்ச்சியை சந்திப்பது இரண்டாவது முறை. (ஒரு சில இளைய பொறியியலாளர்களுக்கு 2000,2001 ஆண்டில் இப்படி ஒரு வீழ்ச்சி தெரிந்திருக்க வாய்ப்பில்லை). பல கார்ப்ரேட் நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு இளசுகளுக்கு சம்பளத்தை அதிகமாக கொடுத்தனர். அதிக பணம் வருவதால் கார், வீடு, மனை என்று வங்கி கடன் மூலம் வாங்கிவிட்டனர். இப்பொது இருக்கும் பொருளாதார வீழ்ச்சியால் எந்த நிறுவனத்தாலும் அதிக சம்பளம் கொடுக்க முடியவில்லை. கொடுக்கும் சம்பளத்தில் வங்கி கடன், செல்வுகளுக்கு போதவில்லை. விளைவு... தற்கொலை.

ஐந்து எண்களில் சம்பளத்தை வாங்கியவர் மீண்டும் நிலைமை சீராகும் வரை நான்கு எண்கள் சம்பளத்தை வாங்க தோன்றுவதில்லை. மனம் சிறு குழந்தையை போல் ஐந்து எண்கள் நாடுவதால் ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் உழியர்களை அனுப்பிவிட்டு குறைவான சம்பளத்தில் குறைந்த தகுதியுள்ளவனை தேர்வு செய்து பயிற்சி கொடுக்கிறார்கள். அனுபவமுள்ள ஒருவனுக்கு கொடுக்க படும் சம்பளத்தை ஆறு புதியவர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள். இது போன்ற சம்பளங்கள் ஒர் இரு நடிகர்களுக்கு நடக்கும் போது பெரிதாக தெரிவதில்லை. ஆனால், ஒட்டு மொத்த மென்பொருள் துறைக்கே இப்படி ஒரு பாதிப்பு வந்ததால் எல்லோருடைய பார்வையும் இதன் மேல் இருக்கிறது.

இந்திய பொருளாதாரமே சரிவை சந்திக்கும் போது மென்பொருள் பொறியியலாளர்கள் தங்கள் சம்பளத்தை குறைக்கப்படும் சூழ்நிலையில் தள்ளப்படுகிறார்கள். அப்போது தான் அவர்கள் வேலை செய்யும் நிறுவங்கள் இயங்க முடியும். இன்னும் பழைய சம்பளத்தை எதிர்பார்த்தால் ஜெட் ஏர்வே, சதியம், டி.சி.எஸ் என்று உழியர்களை வெளியே அனுப்பும் நிறுவனத்தின் பட்டியலிட வேண்டியது தான்.

சரி ! இன்னும் எனக்கு ஐந்து எண் சம்பளம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இனிப்பு, சிற்றுண்டி போன்ற கடைகள் வைக்கலாம். கிண்டலாக சொல்லவில்லை. கிருஷ்ணா ஸ்வீட்ஸ், மிட்டாய், அடையார் ஆனந்த பவன் ஆரம்பமே சின்ன இனிப்பு கடைதான். சரவண பவன், அஞ்சப்பர் ஆரம்பம் சிற்றுண்டி தான். இவர்கள் வளர்ச்சி அண்ணா எழுதிய 'ஒர் இரவு' போல் வந்து விடவில்லை. இந்த நிலையை தொட அவர்களுக்கு ஒரு தலைமுறை உழைப்பு தேவைப்பட்டது. இன்று அந்த ஸ்தாபனத்தின் இரண்டவாது, மூன்றாவது தலைமுறையை பார்க்கிறோம்.

அவர்களை போல் களத்தில் இறங்கி கஷ்டப்பட்டு உழைக்க வேண்டும். உங்கள் உழைப்பின் பலனை அடுத்த தலைமுறை அனுபவிக்கட்டும். இந்த தலைமுறையில் நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் சம்பளத்தை குறைத்து கொள்ள தான் வேண்டும். அதுவும் இல்லை என்றால் மென்பொருள் துறையை விட்டு வெளியே வந்து வேறு துறையில் கொடுக்கும் நியாயமான சம்பளத்தை வாங்கி வாழ்க்கை நடத்த வேண்டியது தான். இந்த அறிவுரை உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் தான். நானும் ஐந்து எண்கள் சம்பளம் வாங்கும் (வாங்கிய) மென்பொருள் பொறியியலாளர் தான்.

Monday, December 15, 2008

தமிழ் சினிமா 2008 - ஒரு பார்வை

இப்போது தான் 2007 ஆண்டு முடிந்தது போல் இருந்தது. உடனே 2009 ஆம் ஆண்டு நோக்கி சென்று கொண்டு இருக்கிறோம் என்றால் நம்ப முடியவில்லை. வேகமான உலகத்தில் கால சக்கரம் அதி வேகமாக சுழன்றுக் கொண்டு இருக்கிறது. தமிழ் சினிமாவின் வேகம் உலக தரத்தை நோக்கி செல்லும் முயற்சியில் ஈடுப்பட தொடங்கியிருக்கிறது. கிராமத்தில் நிலத்தை விற்று படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் எல்லாம் மறைந்து பல கார்ப்ரேட் நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் சினிமா தயாரிப்பில் நுழைந்து இருப்பது இந்த ஆண்டு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல நடிகர், நடிகைகளின் முகத்தில் சந்தோஷம் வர தொடங்கியிருக்கிறது. சரி ! இந்த வருடம் வெளிவந்த படங்களை ஒரு பார்வை பார்ப்போம்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ரஜினி, கமல் படம் ஒரே ஆண்டில் வெளிவந்துள்ளது. நடிப்பில் மட்டுமே ரஜினியை ஒவர்டேக் செய்த கமல், இந்த ஆண்டு வசூலிலும் முந்திவிட்டார். கமலின் 'தசாவதாரம்' இந்த ஆண்டு மிக பெரிய வசூல் குவித்த படம் என்று சொல்ல வேண்டும். பாடல் வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிச்சானை வரவழைத்து உலகின் முழு பார்வையை தமிழ் சினிமா மீது பட வைத்திருக்கிறார். (பாவம் ரவிசந்திரன் ! 'Oscar' என்ற தன் நிறுவனத்தின் பெயரை 'Ascar' என்று மாற்ற வேண்டிய நிலைவந்தது.)

பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்திய ரஜினியின் 'குசேலன்' படம் பெரிய தோல்வியை தழுவியது. 'பாபா' படத்திற்கு பிறகு ரஜினிக்கு தோல்வி அடைந்த படம். சில அரசியல் காரணங்களாலும், ரஜினிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாததாலும் 'குசேலன்' தோல்விக்கு காரணம் என்று சொல்லலாம். ( படத்தை வாங்கியவர்கள் நிஜமாகவே குசேலனாக மாறிவிட்டதாக கேள்வி)

இந்த வருடம் ரஜினி படமே தோல்வி அடைந்து விட்டதால் பலர் களத்தில் குதிக்காமல் இருந்துவிட்டனர். பிரஷாந்த், விக்ரம், ஆர்யா ( பீமா மற்றும் ஓரம் போ நீண்ட நாள் கிடப்பில் இருந்து வெளிவந்த படம்) போன்றவர்கள் இந்த வருடம் போட்டியில் இறங்கவில்லை. விஜய் (குருவி), அஜீத் (ஏகன்), விஜய்காந்த் ( அரசாங்கம்), மாதவன் (வாழ்த்துக்கள்), விஷால் ( சத்யம்) போன்ற நடிகர்கள் அட்டடென்ஸ் கொடுப்பது போல் இந்த வருடம் ஒரு படம் மட்டும் நடித்திருக்கிறார்கள். பெரிதாக சொல்லுவதற்கில்லை.

ஜீவாவின் 'தெனாவட்டு', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்' சமிபத்தில் தான் வெளிவந்திருப்பதால் அதன் வெற்றியை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனால், இந்த படத்தை வெளியிட்டவர்களின் தொலைக்காட்சியில் இதற்கு முதல் இடம் கிடைக்கும் என்பதில் எந்த வித சந்தேகமில்லை.

எப்போதும் இல்லாமல் இந்த வருடம் புதியவர்கள் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார்கள். 'சுப்பிரமணியபுரம்' மற்றும் 'சரோஜா' பெரிய நடிகர்கள் இல்லாமல் கதை, திரைக்கதையால் வெற்றி பெற்ற படங்கள். 'காதலில் விழுந்தேன்' முதல் இரண்டு வாரம் நல்ல வசூலை குவித்துள்ளது. 'பொய் சொல்ல போறோம்', 'ராமன் தேடிய சீதை' இந்த வருடத்தின் சிறந்த குடும்ப படங்கள் என்று சொல்லலாம். கதைக்கு முன்னுரை கொடுத்தால், கதாநாயகர்கள் யாராக இருந்தாலும் படம் வெற்றி பெறும் என்பதற்கு இந்த படங்களே உதாரணம்.

தனுஷ்யின் 'யாரடி நீ மோகினி' , 'ஜெயம்' ரவியின் 'சந்தோஷ் சுப்பிரமணியம்' வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் நல்ல குடும்ப படமாகவும் இருந்தன. ஒரு சில இடங்களில் பெண்களை முகம் சுழிக்க வைத்தாலும் 'அஞ்சாதே' நட்பு, கடமை என்று இரண்டும் கலந்த வெற்றிப் படம்.
நடிகைகளில் பிரியாமணிக்கு பருத்தி வீரனில் நடித்ததிற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகைக்கு தமிழ் படத்திற்கு என்று கிடைத்திருப்பது நான்காவது முறை. நயந்தாரா கவர்ச்சியில் என்ன புதுமை செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறார். மற்றப்படி தமிழ் சினிமா நல்ல நடிகையை தேடிக் கொண்டு தான் இருக்கிறது.

எழுத்தாளர் சுஜாதா, நடிகர் எம்.என். நம்பியார், நடிகை பத்மினி அவர்களின் மரணம் தமிழ் சினிமாவின் துயர பக்கங்களாக இந்த வருடம் இருக்கிறது. அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவோம்.

பழைய வெற்றிய படங்களின் தலைப்பை வைத்து புது படங்கள் வருவதால் அந்த தலைப்பை மட்டுமல்ல பழைய படத்தின் வெற்றியையும் கெடுத்துவிடுகிறது. அடுத்த வருடமாவது சொந்தமாக தலைப்பை யோசித்து படம் வெளியிட்டால் நன்றாக இருக்கும். 2009 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவை எப்படி இருக்கபோகிறது அடுத்த வருடம் பார்ப்போம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

( நன்றி : தமிழ்.சிஃபி.காம்
http://tamil.sify.com/columns/fullstory.php?id=14815216 )

Tuesday, December 9, 2008

நல்ல அனுகுமுறை வெற்றிக்கு அச்சானி

சித்தன் போக்கு சிவன் போக்கு என்பார்கள். பலர் வாழ வேண்டும் என்பதற்காக வாழ்க்கிறார்கள். வேலையை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள். தங்கள் தாங்களே கட்டாயப்படுத்தி தங்கள் கடமையை செய்கிறார்கள். இன்னும் ஒரு சில பேர் தங்கள் கடமைகளை மற்றவர் மூலம் நிரைவேற்ற நினைக்கிறார்கள். தங்கள் எண்ணங்களை வரும் தலைமுறைக்கு திணிக்கப்படுவதுமாக இருக்கிறார்கள். யாரிடம் எப்படி அனுகுவது என்றே தெரிவதில்லை.

சிறந்த கருத்துள்ள நூலை எழுதினாலும், நூலகத்தில் மற்றவர்கள் எடுத்து படிக்கும் அளவிற்கு நூலின் அட்டை வடிவம் இருக்க வேண்டும். தமிழை உயிர் என்று மதித்தாலும், வியாபாரத்திற்காக வெளிநாட்டாவர்களிடம் பேசும் போது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும். நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் விழாவிற்கு நேரில் சென்று அழைப்பித்ழ் வைத்தே அழைக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு காரியங்களிலும் அனுகுமுறை இப்படித் தான் இருக்க வேண்டும் என்று உள்ளது. எவ்வளவு செயல் திறன் கொண்டவர்களாக இருந்தாலும் நல்ல அனுகுமுறை மிகவும் முக்கியம்.

மீனை பிடிக்க வேண்டும் என்றால் தூண்டிலில் அதற்கு பிடித்த பூளுவைத்தான் வைக்க வேண்டும். நமக்கு பிடிக்கும் என்று கோழி கறியை வைத்து மீன் பிடிக்க நினைத்தால் எந்த மீனும் மாட்டாது. ஒரு பெண்ணை கவர்வது என்றால் அவர்களுக்கு பிடித்தை செய்ய வேண்டும். நமக்கு பிடித்தை மற்றவர்களுக்கு செய்தால் யாருக்குமே நம்மை பிடிக்காமல் போகும்.
உலகப்புகழ் பெற்ற துணித்துவைக்கும் சோப்பு இருந்தது. அதன் விளம்பரம் உலகம் முழுக்க பிரபலம். ஆனால், அந்த சோப்பை அரபியநாடுகளில் யாரும் வாங்கவில்லை. அந்த விளம்பரப்படங்களில் முதல் படத்தில் அழுக்கு துணியையும், இரண்டாவது படத்தில் சோப்பால் துணி துவைப்பதும், முன்றாவது படத்தில் வெண்மையாக இருக்கும் துணியும் இருந்தது. எல்லா நாடுகளில் இந்த சோப்பு நன்றாக விற்கப்பட்டாலும், அரபிய நாடுகளில் விற்கப்படாதா காரணம், அவர்கள் வலது புறத்திலிருந்து இடதுப்புறமாக படிப்பது தான். உலகப்புகழ் பெற்ற சோப்பாக இருந்தாலும் அந்த நாட்டில் சோப்பை விற்க எப்படி அனுகுவது என்று தெரியவில்லை.

அரசியல், மருத்துவம், சட்ட அலோசனை, பக்தி இப்படி எல்லாவற்றிக்கும் விளம்பரங்கள் தேவை என்றாகிவிட்டது. சேவை என்று கருதப்பட்ட தொழிலெல்லாம் பணத்தேவையை நிபர்த்தி செய்யும் வேலையாக மாறிவிட்டது. சேவைத் தொழிலுக்கு எப்பொது விளம்பர அனுகு முறை தேவைப்பட்டதோ மக்களும் அந்த தொழிலையெல்லாம் வியாபாரம் என்று நினைக்க தொடங்கிவிட்டார்கள்.

சேவை அனுகுமுறை இருந்த வரையில் மருத்துவம், பக்தி, வழக்கறிஞர் தொழில்களெல்லாம் மதிக்கப்பட்டது. வியாபார ரிதியாக அனுகுமுறை தேவைப்பட்டதோ எல்லா தொழில்களும் பணம் சம்பாதிப்பதே குறிக்கொள்ளாக ஆகிவிட்டது.

இன்று நல்ல அனுகுமுறையே தொழிலாக தொண்டுள்ளார்கள். ஆங்கிலம் தெரியாமல் வேலையில் கடினமா ? கவலை வேண்டாம். ஒரு மாதத்தில் ஆங்கிலம் கற்கலாம். எங்களிடம் வாருங்கள். நாங்கள் கற்று தருகிறோம்.

நடிக்க ஆசையா ? எங்களிடம் வாருங்கள். நடிப்பு பயிற்சி அளித்து சின்னத்திரையில் நடிக்க உதவிச் செய்கிறோம்.

எங்களிடம் கணிப்பொறி கற்றுக்கொள்ளுங்கள். பயிற்சி முடித்ததும் வேலை கிடைப்பதற்கு நாங்கள் உத்தரவாதம்.

யாரிடம் எப்படி அனுகுவது என்று தெரியாதவர்களை வியாபார ரிதியாக அனுகுவது இன்றைய தொழிலாகிவிட்டது. பணம் இருந்தால் போதும் நம்மை தேடி வந்து அனுகுகிறார்கள்.

முன்பெல்லாம் வங்கியில் கடன் வாங்குவது குதிரை கொம்பாக இருக்கும். ஆனால், மாத சம்பளம் ரூ.5000 வாங்குபவர்களை கூட தேடி கண்டு பிடித்து கடன் தருவதாக அனுகுகிறார்கள். கடன் வாங்க நல்ல அனுகுமுறை சென்று, கடன் கொடுக்க நல்ல அனுகுமுறை தேவைப்படுகிறது.

பேச்சு, உடை, திறமை இவை எல்லாவற்றிற்கும் நல்ல அனுகுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. நல்ல அனுகுமுறையால் மற்றவரை கவர்ந்துவிட்டால், அதன் பிறகு வரும் தவறுகள் கூட பெரிதாக தெரிவதில்லை.

இன்றைய இந்தியனுக்கு யாரை எப்படி அனுகுவது என்று நன்றாக தெரிந்திருக்கிறது. வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை தேடும் போது தேர்வுக்கு நன்றாக படித்து தன் திறமையை முதன்மையாக வைத்து தேடுகிறான். அரசாங்கத்தில் வேலை தேடும் போது சிபாரிசுகளும், பணத்தையும் மூலதனமாக கொண்டு வேலையை தேடுகிறான்.

உலக வங்கி கூட இந்தியாவிற்கு கடன் தருவது மனிதர்களை மதிக்கும் நல்ல அனுகுமுறையே காரணம்.

(நன்றி : சிஃபி.காம்
http://tamil.sify.com/fullstory.php?id=14585769 )

Monday, December 8, 2008

என் பதிவை பார்த்து ‘பெட்ரோல்’ விலை குறைந்தது.

டிசம்பர் 4. அன்று 'விலைக்குறையாத பெட்ரோல்' என்ற பதிவை எழுதினேன். ஏன் பெட்ரோல் விலைக்குறைக்காமல் இருக்கிறார்கள் என்பதை சொல்லியிருந்தேன். அடுத்த நாளே பாருங்கள், பெட்ரோல் விலை ஐந்து ரூபாய்யும், டீசல் விலை மூன்று ரூபாய்யும் குறைந்து விட்டது.

எப்படி என் பதிவு அரசாங்க பார்வைக்கு போச்சுனு தெரியல்ல... நல்ல முடிவு எடுத்திருக்காங்க.

எதோ என்னால முடிஞ்ச நல்ல காரியம் செஞ்ச திருப்தி.

காக்கை வர பணை மரம் விழுந்த கதை இல்ல... பண்ணை விழுந்த கதை :)

Thursday, December 4, 2008

விலைக்குறையாத பெட்ரோல்

சமிபத்தில் என் நண்பர் ஒருவர் கைபேசியில் எனக்கு அனுப்பிய செய்தி (எஸ்.எம்.எஸ்)...

“கடவுள் உன் மகிழ்ச்சியை
பெட்ரோல் விலைப் போல் உயர்த்தட்டும்
உன் சோகத்தை
நடிகையன் ஆடைப்போல் குறைக்கட்டும்”

நடிகையின் ஆடையால் நாட்டுக்கோ மக்களுக்கோ எந்த ஒரு நஷ்டமுமில்லை. ஆனால் பெட்ரோல் உயர்வால் பல தரப்பட்ட மக்கள் பாதிக்க படுகிறார்கள். அதனால் மிகப் பெரிய விவாதிக்க குரிய விஷயம் பெட்ரோல் உயர்வு தான்.

காய்கறி, அரிசி, பருப்பு உள்ளிட்ட அனைத்து அன்றாட தேவையான பொருட்களின் விலையும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது. ஏனெனில் இதை ஏற்றி செல்லும் போக்குவரத்துக்கு பெட்ரோல், டிசல் இன்றியமையாத தேவையாகிவிட்டது. அதே போல் நடுத்தர மக்களின் போக்குவரத்து தேவையான பேரூந்து, ஆட்டோ, இரு சக்கிர வண்டி என அனைத்து தேவைகளும் இந்த பெட்ரோல், டிசல் விலைப் பொருத்தே அமைகிறது.

சரியாக கணக்கு போட்டு பார்த்தால் நம் நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் இந்தியாவில் விலை ரூ. 21 முதல் ரூ. 27 வரை விற்கலாம்.

கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு கிடைக்கும் லாபத்தை விட நூகர்வோரிடம் அரசுகள் வசூலிக்கும் வரியே பெட்ரோலிய பொருட்களின் ஆகாய விலைக்கு காரணம் என்கிறது கச்சா எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு.

நவம்பர் 15 ஆம் தேதி, பாக்கிஸ்தானில் பெட்ரோல் விலை பத்து ரூபாயும், டிசல் விலை மூன்று ரூபாயும் இறங்கி உள்ளது.

பாகிஸ்தானில் மட்டும் குறைவான விலை... நமக்கு மட்டும் ஏன் இவ்வளவு உயர்வான விலை ? ஏனென்றால், மற்ற நாடுகளில் மானியங்கள் கிடையாது. அங்கெல்லாம் எண்ணை நிறுவனத்தை அரசு நடத்தவில்லை. தனியார் நிறுவனங்களும் நஷ்டத்தில் இயங்க மாட்டார்கள். அவர்களால் குறைவாக விற்க முடியும் என்றால் நம்மாலும் விற்க முடியும்.

இதில் நமக்கு மானியம் வழங்குகிறது என்று சொல்வது நம்மிடம் பிடுங்கி நமக்கே பிச்சையிடுவது போல் இருக்கிகறது.

பீளு கிராஸ் மட்டும் தடை விதிக்காமல் இருந்தால் காருக்கு பதிலாக ஒரு குதிரையில் வாங்கி அதில் பேர் சவாரி செய்திருக்கலாம்.

இன்று, ஒரு பேரல் கச்சா எண்ணை $45 கீழ் இறங்கியுள்ளது. ஆனால், $140 இருக்கும் போது ஏறிய பெட்ரோல் விலை, நம் நாட்டில் இன்னும் குறையாமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது தான் பெட்ரோல் விலையை குறைப்பார்களோ !!!

Saturday, November 29, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன் - இரண்டாவது பாகம்

'ஹிட்லரும் நல்லவர் தான்' என்ற தலைப்பில் வலைப்பதிவு எழுதியிருந்தேன். நண்பர் ராபின் அவர்கள் நான் ஹிட்லருக்கு வக்காளத்து வாங்கும் வழக்கறிஞர் என்று நினைத்துக் கொண்டாரோ என்னோவோ தெரியவில்லை. "கெட்டவர்களை நல்லவர்களாகவும் சித்தரிக்கும் மனப்பான்மை" என்று கூறி கண்டித்திருந்தார். அவர் கண்டித்தற்காகவே 'ஹிட்லரை' பற்றிய இந்த வலைப்பதிவில் எழுதியுள்ளேன். ஹிட்லர் நல்லவர் என்று நான் சொல்லவில்லை. ஆனால், அவரிடம் இருக்கும் நல்ல பண்புகளையும் நாம் பார்க்க வேண்டும் என்று தான் சொல்கிறேன்.

முந்தைய பதிவு ஹிட்லரை ஆதரிக்கும் நோக்கம் எனக்கு இல்லை. ‘அமெரிக்காவை காட்டிலும் ஹிட்லர் நல்லவர்’ என்று சொல்ல வந்தேன். ஆனால், இந்த பதிவு ஹிட்லருக்கு இருந்த நல்ல எண்ணத்தை சொல்லுவதே என் நோக்கம். அதற்கு முக்கிய காரணம், ஹிட்லருக்கு தன் தாய் நாட்டின் மீது இருந்த தேசப்பற்று யாருக்கும் தங்கள் தாய் நாட்டின் மீது இருந்திருக்காது.

ஒருவன் நொய்டாவில் எத்தனை சிறுமிகள் பாலியல் கொடுமையில் கொன்று புதைத்திருக்கிறான். இங்கிலாந்தில் பதினாறு வயதில் இருக்கும் பெண்கள் எண்பது சதவீதம் பேர் கற்பத்தை கலைத்துக் கொள்கிறார்கள். சிறு வயதில் பாலியல் ரிதியாக பாதிக்கப்படும் சிறுமிகளை பாதுக்காக்க பாலிய திருமணத்தை ஆதரித்தார் ஹிட்லர். பாலிய திருமணத்தால் பாலியல் ரிதியானா எண்ணங்கள் மாறிவிடிகிறது. சிறு வயதில் இருந்து பாலியல் உணர்ச்சி வளர்வதால் வாலிபவ பருவத்தில் பெண்களை கற்பழிப்பது, சிறிமிகளை கொலை செய்வது என்று மனதில் வளர்த்துக் கொள்கிறார்கள். இது போன்ற தவறுகளை தடுக்க பாலியல் திருமணமே சரியான வழி என்பது ஹிட்லரின் கருத்து. (பாலியல் திருமணத்தை நான் ஆதரிக்கவில்லை என்பதை இவ்விடத்தில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.)

மூன்று தலைமுறை முன்பு நம் நாட்டில் பாலியல் திருமணம் இருந்திருக்கிறது. கணவனை இழந்த சிறுமிகளை உடன் கட்டை எரிப்பதும், மொட்டை அடித்து காவி உடை அணிவிப்பதும் போன்ற கொடுமைகள் நடந்து உள்ளன. விதவைகளுக்கு பாதுகாப்பு இல்லாத வாழ்க்கையாக அன்று இருந்துள்ளது.(இதை எடுத்துக் காட்டியதே அன்றைய "பராசக்தி" படம் தான்.) இந்த கொடுமைகளை தவிர்க்க பாலிய விவாகம் அரசால் ரத்து செய்யப் பட்டது. ஆனால், நொய்டா சிறுமிகளை பாலியல் கொடுமையில் கொன்றது, மருத்துவம் பார்க்க வந்த பெண்களை நிலப்படம் எடுத்த மருத்துவர், போலி சாமியார்கள் மன்மத லீலைகள் இது போன்ற செய்திகளை தினமும் செய்திதாளிலும், தொலைக்காட்சியிலும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம். பாலியல் விவாகம் இருந்த காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடந்திருக்க வாய்ப்புகள் இருந்திருக்காது. பாலியல் உணர்ச்சி கட்டுப்படுத்தும் முயற்சியில் பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. இதை எல்லாம் படிக்கும் போதும், கேட்கும் போது பாலிய விவாகமே பரவாயில்லை தோன்றும் அளவிற்கு பல செய்திகள் நம் மனதை கொள்கிறது.

பாலியல் திருமணத்தை ஆதரித்த ஹிட்லரின் எண்ணம் பலருக்கு கோமாளித்தனமாக தெரிந்தாலும், பாலியல் கொடுமைகளை ஒழிக்க நினைத்த அவரது குணத்தை பார்க்க வேண்டும். ஹிட்லர் பாலியல் கொடுமைகளை ஒழிக்க பாலியல் விவாத்தை மட்டும் சொல்லவில்லை. சரியான தேக பயிற்சி, சண்டை பயிற்சி மூலம் பாலியல் உணர்ச்சிகளை குறைக்க முடியும் என்று சொல்லியிருக்கிறார். தேக பயிற்சி மூலம் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியும் என்று இன்றைய மருத்துவம் கணடறிந்த உண்மை. ஆனால், 1920 ஆம் ஆண்டுகளிலே ஹிட்லை இதை பற்றி எழிதியிருக்கிறார். இன்று மருத்துவம் சொல்லும் உண்மை, அன்றே ஹிட்லர் தெளிவுப்படுதியிருக்கிறார்.

ஹிட்லர் பாலியல் உணர்ச்சியில் தவறு செய்ய நினைத்த வாலிபர்களை தேக பயிற்சி செய்து இராணுவத்தில் சேர்வதற்கு உற்சாகமுட்டினார். இன்று எத்தனையோ இளைஞர்கள் மென்பொருளிலும், வன் பொருளிலும் வேலை செய்ய விரும்புகிறார்கள். அரசாங்கமும் அதற்கு தகுந்த உதவிகளை செய்து வருகிறது. ஆனால், ஹிட்லர் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதில் தான் உற்சாகமுட்டினார். மற்ற நாடுகளை பிடிக்க இராணுவத்தை பலப் படுத்தும் சுயநலம் ஹிட்லருக்கு இருந்தாலும், இளைஞர்களை தவறான பாதையில் செல்லாமல் நாட்டுக்காக சேவை செய்ய தூண்டிய பொதுநலமும் இருந்தது. பல இளைஞர்களுக்கு இராணுவத்தில் வேலைக் கொடுத்தால் ஜெர்மனியில் வேலையில்லாத திண்டாட்டம் ஹிட்லர் காலத்தில் ஒழிந்தது. (அமெரிக்கா இன்றும் தங்கள் நாட்டின் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க முடியாமல் தவிப்பதை நினைத்து பாருங்கள்.)

இன்று நம் நாட்டில் இளைஞர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தோமோ, ஹிட்லர் தன் நாட்டு இளைஞர்களை செயல் படுத்தி காட்டினார். நண்பர் கமல் சொன்னது போல் என்னதான் கொலைகாரனாக, கொடுங்கோலனாக இருந்தாலும் ஹிட்லர் காலத்தில் தான் ஜெர்மனி மிகப்பெரிய நாடாக வளர்ந்தது.

Thursday, November 20, 2008

வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...

வித்யாவுக்கு இன்று கடைசி நாள். எனக்கும் இன்று தான் கடைசி நாள். தினமும் அவளை பார்க்கிறேன். ஆனால், ஒரு நாள் கூட அவளிடம் நான் பேசியதில்லை. ஒரே குழுவில் தான் வேலை செய்கிறோம். இருந்தும் முகம் பார்த்து பேச எங்களுக்கு தோன்றவில்லை. ஒரு முறை ஆபிஸ் பார்ட்டியில் எல்லோரும் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு இருக்க, அவள் மட்டும் யாருடன் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

இது வரை அவளிடம் பேசாத நான், இப்போது பேசினால் நன்றாக இருக்குமா ? ஒரு முறை எனக்குள்ளே கேள்வி கேட்டுப்பார்த்தேன். இதில என்ன தப்பு இருக்கு ? எந்த கம்பேனி போறாங்கனு தெரிஞ்சா நமக்கும் யூஸ்சா இருக்கும். இப்படி கேள்வி கேட்பதும், அதற்கு அவனே பதில் சொல்வதும் ரகுக்கு புதிதில்லை. மெல்ல மெல்ல தயங்கி அவளிடம் பேசினான்.

"எந்த கம்பேனி போறீங்க...?" என்றான் ரகு. வித்யா விடுப்பு தாளை நிரப்பிக் கொண்டு இருந்ததில் ரகு சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

"வித்யா... உங்க கிட்ட தான்..."

"ம்.. சொல்லுங்க... ரகு..."

"போற கம்பேனி ரொம்ப ஸீக்ரெட்டா..."

" அப்படியெல்லாம் இல்ல பார்ம் பார்த்துக்கிட்டிருந்தேன். என்ன கேட்டிங்க..."

அவள் சற்று மனக் குழப்பத்தில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டேன். அதைத் தெரிந்து கொண்டது போல் காட்டிக் கொள்ளவில்லை.

"எந்த கம்பேனி போறீங்கனு கேட்டேன்..."

"எனக்கு வேலை செய்ய பிடிக்கல.. இனிமே வீட்டுல தான் இருக்க போறேன்.."

எனக்கு அவள் பேசியது முட்டாள் தனமாக தோன்றியது. வித்யா விவாகரத்தானவள். ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்த சூழ்நிலையில் வேலையை விட்டு அவள் என்ன செய்வாள் என்று தெரியவில்லை. பரம்பரைச் சொத்து ஏதும் இருக்கக் கூட வாய்ப்பில்லை. தினமும் அவள் பஸ்சில் தான் ஆபிஸ்க்கு வருகிறாள். இப்படிப்பட்ட நிலைமையில் அவளுக்கு வேலை நிச்சயமாக மிக முக்கியமான ஒன்று.

" தப்பா நினைக்காதீங்க... வேற ஏதாவது விதத்துல உங்க குடும்பத்துக்கு பண வரவு இருக்கா...!"

"அப்படி எதுவும் இல்ல. இந்த கம்பேனிய விட்டு போனா போதும்னு இருக்கு..."

அவளுடைய பதில் எனக்கு மேலும் வியப்பை தந்தது. எங்கள் குழுவில் வேலை சுமைகள் அவ்வளவு பெரிதாக கூட இல்லை.

" உங்களுக்கு இந்த கம்பேனி பிடிக்கலையா? வேல ரொம்ப ஜாஸ்தி கொடுக்குறாங்களா.." என்றேன்.

" வேலை புடிக்கல ரிசைன் பண்ணுறேன்... உனக்கு என்ன வந்தது. சும்மா கேள்வி கேட்டு தொந்தரவு பண்ணுற.." - இப்படி வித்யாவிடம் இருந்து பதில் வருமோ என்று பயந்தேன். நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை. பல நாள் பழகிய நண்பனிடம் தன் சோகத்தைக் கூறுவது போல் கூறினாள்.

"என் ஹஸ்பன்ட் இந்த ஆபிஸ்ல தான் இருக்காரு..." என்றாள்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது. ஒரு வேளை ஆபிஸின் பெரிய தலைகளில் ஒருவராக இருப்பாரோ என்ற சந்தேகம்.

" யார் அவரு...?"

" இப்ப... பாம்பேல இருந்து ட்ரான்ஸ்பர் வாங்கி வந்திருக்காறே... பிராஜக்ட் மேனேஜர் ராஜூ.. அவரு தான்.."

அவருக்கும் எங்கள் வேலை விஷயத்தில் எந்த சம்மந்தமும் இல்லை. அப்படி இருக்கும் போது வித்யா இந்த நிறுவனத்தில் தைரியமாக வேலை செய்யலாம். ஆனால், அவள் மனம் பட்ட பாடை என்னிடம் கொட்டித் தீர்த்தாள்.

" தினமும் அவர நான் பார்க்கனும்னா... எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும். அவர பார்க்கவே கூடாதுன்னு இருந்தேன். இப்ப மறுபடியும் அவர பார்க்க எனக்கு இஷ்டமில்ல. அதான் இந்த முடிவு..."

" மேடம்... நான் சொல்லுறேனு தப்பா நினைக்காதீங்க... இவ்வளவு வருஷமா பழகின ஒருத்தர உங்களால எதிர் கொள்ள முடியலைனா... எப்படி வாழ்நாள் முழுக்க பல பேர சந்திக்கப் போறீங்க.."

வித்யா ரகுவின் முகத்தை உற்று பார்த்தாள்.

"வாழ்க்கைன்னா ஆயிரம் இருக்கும். தனியா போராடனும் முடிவெடுத்திட்டு இப்படி கோழை மாதிரி ஒடிப்போகனும் நினைக்குறீங்களே ! நீங்க இப்படி இருந்தா நாளைக்கு உங்க பொண்ணும் இதே மாதிரி தானே வளர்வா..."

" அட்வைஸ் பண்ணுறது ரொம்ப ஈசியாயிருக்கும்.. அவுங்களுக்கு கஷ்டம் வந்தா தான் தெரியும்..."

" மேடம்... நான் இப்போ போற கம்பேனியில எனக்கு வேல கிடைச்ச காரணமே என் மனைவி தான்.... முன்னால் மனைவி..."

ரகு சொன்னதை கேட்டு வித்யா அதிர்ந்து நின்றாள்.

" என் மனைவிக்கும், அவ ஆபிஸ்ல வேல செய்றவனுக்கும் கொஞ்ச நாளா தொடர்பு இருந்தது. அதுக்கு அப்புறம் இரண்டு பேரும் சேர்ந்து வாழனும்னு அவ என் கிட்ட சொன்னா. முதல்ல கேட்கும் போது கஷ்டமா இருந்தது. எனக்குத் தெரியாம அவங்க தப்பு பண்ணுறதுக்கு தெரிஞ்சே செய்யட்டும்னு நான் விலகிட்டேன்..."

" விலகிட்டேன்னா..."

" நாங்க இரண்டு பேரும் டைவர்ஸ் பண்ணிக்கிட்டோம். அவங்க இரண்டு பேருக்கும் நான் கல்யாணம் பண்ணிவெச்சேன்."

என் கதையைக் கேட்டவுடன் வித்யாவின் கண்கள் நீர் தழும்பின. அவன் சோகத்தை சொல்லும் போது கூட மன தைரியம் இழக்காமல் பேசினான். அவன் பேச்சு வித்யாவுக்கு அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்தது.

" எப்படி... மறுபடியும் உஙளுக்கு துரோகம் பண்ணியவர்களிடம் பேச முடியுது..."

" மேடம் லைப்ல எல்லாமே ஈசியா எடுத்துக்கனும். முடியலையா ஈசியா எடுத்துக்க முயற்சி பண்ணனும். இல்ல வாழ்க்கையே சுமையா போய்டும். என் சி.விய அவள்தான் ரெஃப்பர் பண்ணி எனக்கு வேலை வாங்கி கொடுத்தா... தினமும் நாங்க இரண்டு பேரும் பார்க்க வேண்டியதா இருக்கும். முடிஞ்ச விஷயத்துக்காகக் கவலைப்படாம நடக்கப் போற விஷயத்தைப் பத்தி யோசிங்க..."

" உங்க கஷ்ட கேட்கும் போது என்னுடைய கஷ்டம் எவ்வளவோ பரவாயில்லைன்னு நினைக்கிறேன்."

" நம்மல விட கஷ்டப்படுறவங்க பல பேரு உலகத்துல இருக்காங்க... அத நினைச்சா போதும் நம்ம கஷ்டம் மறந்திடும் "

"த்தாங்க்ஸ் ரகு... என்னுடைய சி.வி. உங்களுக்கு ஃபார்வட் பண்ணுறேன். உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு சொல்லி ரெஃப்பர் பண்ணச் சொல்லுறீங்களா..."

" கண்டிப்பா! இந்தாங்க என் மெயில் ஐ.டி.." என்று என் மின்னஞ்சல் முகவரியை வித்யாவுக்கு கொடுத்தேன்.

வேலை செய்ய வேண்டாமென்று இருந்த வித்யாவின் எண்ணத்தைத் என் சோகக்கதையால் அவள் மனதை மாற்றிய என்னைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க...? கல்யாணத்தில ஏமாந்தவன்னுதானே...

கடைசியா ஒரு விஷயம் உங்க கிட்ட மட்டும் சொல்றேன்... நான் ஒரு கட்டப் பிரம்மச்சாரிங்க... இதை மட்டும் வித்யாகிட்ட சொல்லிடாதீங்க...


நன்றி : முத்துகமலம்.காம்
http://www.muthukamalam.com/muthukamalam_kathai21.htm

Thursday, November 13, 2008

ஹிட்லர் : ஒரு நல்ல தலைவன்

காதுவரை மீசை வளர்த்தால் வீரம் என்று நினைத்தவர்கள் மத்தியில் தன் அரை இன்ச் மீசையில் உலகை அளந்தவன். ‘ஹிட்லர்’ என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது சர்வாதிகாரமும், அவன் செய்த கொலைகளும் தான். அடிப்படையில் நல்ல ஒவியர், ஜெர்மன் நாட்டின் படை வீரன் என்று தன் வாழ்க்கையை தொடங்கினான். ஒரு உலகத்தை வியக்கும் அளவிற்கு மட்டுமல்லாமல், அச்சுருத்தும் அளவிற்கு வளர்ந்தான். இன்றும் ஹிட்லரை கெட்டவனாகத் தான் உலகம் பார்த்துக் கொண்டு இருக்கிறது.



சரித்திர பக்கங்கள் வெற்றியாளர்களை மட்டுமே கொண்டாடுகிறது. தோல்வி அடைந்தவர்களை மிகவும் கெட்டவனாகவும் அல்லது கோமாளியாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள். தோல்வியாளர்களின் சரித்திரத்தை யாரும் படிக்க விரும்புவதில்லை. வெற்றியாளர்கள் மீது எல்லோரும் கவனம் செலுத்துகிறார்கள். கிரிக்கெட் எடுத்துக் கொண்டாலும் ஆஸ்திரலேய அணி வெற்றி பெற்றால் அவர்கள் வெற்றி கையாண்ட விதத்தை சொல்கிறார்கள். தோல்வி அடைந்தால் அவர்கள் செய்த தவறுகளை சொல்கிறார்கள். பங்காதேஷ், கென்யா போன்ற வலுயில்லாத அணிகளை பற்றி யாரும் விமர்சனம் செய்வதில்லை. இவர்கள் வலுவான அணியிடம் வெற்றி பெற்றால், குறுட்டு அதிஷ்டம் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறோம்.

என்னை பொருத்த வரையில் ஹிட்லரும் ஒரு வெற்றியாளர் தான். ஒரு விடுதியின் காப்பாளர் விடுதியை கண்டிப்பாக வைத்துக் கொண்டால் அந்த காப்பாளருக்கு ஹிட்லர் என்ற புனைப் பெயர் வைப்பார்கள். ஆசிரியர் கண்டிப்பாக இருந்தாலும் அவர்களும் இதே பெயர் தான்.
வீட்டில் தந்தை சொல்வது தான் செய்ய வேண்டும். யாரும் அவரை எதிர்த்து பேசக் கூடாது என்று இருந்தால், அந்த வீட்டில் ‘ஹிட்லர் ராஜ்ஜியம்’ என்றே கேலி செய்கிறோம்.ஹிட்லரை நாம் மறைமுகமாக அங்கிகரித்திருக்கிறோம் என்பதற்கு இதுவே சாட்சி.

ஹிட்லரின் சர்வாதிகாரத்தை கேலிப் பேசுபவர்கள், இன்னும் ஒவ்வொரு நாட்டு ராணுவத்திலும் ஹிட்லர் முறையை தான் பயன் படுத்துகிறார்கள். ஹிட்லரின் சர்வாதிகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது என்றாலும், ராணுவத்தில் சர்வாதிகார ஆட்சியை தான் பின்பற்றுகிறார்கள். போர் நடக்கும் போது வீரனின் தாய் அல்லது மனைவி இறந்தாலும் அவன் போருக்கு தான் செல்ல வேண்டும். இந்த முறைகள் எல்லாம் ‘ஹிட்லர்’ கையாண்டது.

எந்த வேலையாகயிருந்தாலும் வேலை பிடிக்கவில்லை என்றால் மிக எளிதில் வேலையை விட்டு வெளியே வந்துவிடலாம். இராணுவத்தில் மட்டும் வேலையை விட்டு வருவது அவ்வளவு எளிதல்ல. காரணம், இராணுவத்தில் வேலையாக கருவதில்லை, நாட்டின் சேவையாகவே கருதுகிறார்கள். ஒருவர் குடும்பத்துகாக போரை விட்டு சென்றால், மற்றவர்களும் தங்கள் குடும்பத்தை நினைக்க தொடங்கி விடுவார்கள். இதனால் போரில் கிடைக்கும் வெற்றியை பாதிக்கும்.

போர் சமயத்தில் ஒருவனின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து ஊருக்கு அனுப்பினால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்லி ஊருக்கு செல்ல பார்ப்பார்கள். அதனால், இராணுவத்துறையில் மட்டும் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் நாட்டின் வெற்றியை மட்டும் மனதில் வைத்திருக்க வேண்டும். இராணுவ வீரர்கள் சற்றும் மனதளராமல் இருப்பதற்காக சர்வாதிகார முறையை கையாள்கிறார்கள். சர்வாதிகார முறை இருப்பதால் எல்லா வீரர்களும் தங்கள் மேலாளர்களின் கட்டளை கீழ்பணிவது தங்கள் கடமையாக கொண்டுள்ளனர். இராணுவ விதிப்படி மேலாளர் கட்டளை கீழ் பணியாதவர்கள் தண்டிக்கிறார்கள். அந்த சமயத்தில் ஜனநாயகத்தையும், மனித உணர்வுகளையும் பற்றி பேசிக் கொண்டு இருந்தால் கார்கில் யுத்தத்தில் வெற்றி பெற்றிருக்க முடியாது. இராணுவத்துறையில் மட்டும் ஹிட்லர் கையாண்ட சர்வாதிகார முறையே சரியானது.
இராணுவத்துறை தவிர வேறு எதிலும் சர்வாதிகார ஆட்சி செய்வது தவறானது. ஜனநாயகத்திற்கு எதிரானது. ஹிட்லர் தன் சர்வாதிகார ஆட்சியை இராணுவத்தில் மட்டுமே செலுத்தியிருக்க வேண்டும். ஆனால், அவர் மக்கள் மீது செலுத்தியதால் சரித்திர பக்கங்களில் அவரை கொடுங்கோளனாக பார்க்கிறார்கள்.

ஹிட்லர் தன் ஆட்சியில் பல நல்லதுகளை செய்துயிருக்கிறார். அவைகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகள் பின் பற்ற வேண்டிய ஒன்றாகும். ஒரு வேளை தன் ஆட்சி காலத்தில் முதல் நான்கு ஆண்டுகளில் ஹிட்லர் இறந்திருந்தால், உலகில் பெரும் தலைவர்களின் ஹிட்லர் பெருமையாக போற்ற பட்டிருப்பார். ஆனால், அதிகார பலம் தலைக்கு எறியதில் தலைக்கால் தெரியாமல் ஆடியதால் அவர் செய்த நன்மை யார் கண்ணுக்கும் தென்படுவதில்லை.

ஒசமா பில்லெடனுக்காக அமெரிக்க தாலிபன் நாட்டை எதிர்க்கும் விதமாக போர் செய்தது. இரண்டாம் உலகப்போரை ஹிரோஷிமா, நாகசாக்கியை அனுகுண்டு மூலம் அழித்தது முதல் தாலிபம் நாட்டை போர் வரை அமெரிக்கா உலகத்தின் காவலர்கள் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு லட்ச யூதர்களை கொன்ற ஹிட்லர் கேட்டவன் என்றால், ஜப்பானின் இரண்டு நகரத்தை அழித்த அமெரிக்காவை என்னவென்று சொல்வது ? தனி ஒரு மனிதனை பிடிக்க முடியாமல், அந்த நாட்டின் அப்பாவி மக்களை கொன்ற அமெரிக்காவின் போரில் எதாவது நியாயம் உண்டா ? மற்ற நாடுகளும் அமெரிக்காவிற்கு பயந்தே ஆதரிக்கிறார்கள். பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி அமெரிக்கா ஒன்றும் அறியாத மக்களை தான் கொன்று குவிக்கிறது. தாலிபன் வீரர்களை நிர்வானப்படுத்தி அமெரிக்க வீரர்கள் செய்ய செயலை செய்தித்தாளில் பார்த்திருக்கிறோம். இப்படி கொடுமை செய்பவர்கள், ஐ.நா.சபையில் உலக அமைதியை பற்றி இவர்கள் பேசுவதை மற்ற நாடுகள் கேட்கும் கட்டாயத்தில் இருக்கிறார்கள். எத்தனையோ பேர் மன வேதனையில் அமெரிக்காவைக் காட்டிலும் ஹிட்லரே பரவாயில்லை என்று சொல்லும் அளவிற்கு வந்துவிட்டது.

தாலிபன் நாட்டு உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நாடு என்று உலக அரசியலில் பேசும் அளவிற்கு செய்தது அமெரிக்கா. ஒரு வேளை அமெரிக்கா நிலைமை சரியும் போது ஹிட்லரை பேசுவது போல் அமெரிக்காவையும் பேசுவார்கள் போல் தெரிகிறது.

ஹிட்லரின் இறந்த பிறகே அவன் ஆட்சியை பலர் விமர்சனம் செய்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது அவரை எதிர்த்து பேச யாருக்கும் தைரியமில்லை. அமெரிக்காவில் யார் அதிபராக வந்தால் அவர்கள் குணத்தின் நிறம் மாற போவதில்லை. அவர்களை காட்டிலும் 'ஹிட்லர்' நல்லவர் தான்.

Tuesday, November 4, 2008

உரையாடலில் ஒளிந்திருக்கும் ஆபத்து

நுணலும் தன் வாயால் கேடும் என்பார்கள்.

ஒரு சிலர் நல்லவர்களாகவே இருந்தாலும் அவர்களை கேட்டவர்களாக பிரதிபலிப்பது அவர்களுடைய நாவு தான். எங்கு எதை பேச வேண்டும் என்பது தெரியாது. பேச வேண்டடுமே என்பதற்காக பேசிவிட்டு பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள்.

இந்த இசைப்பாளர் மற்ற இசைப்பாளர்ப் போல் இல்லை. மிக குறைவான காலத்தில் நல்ல இசைகளை அமைத்துக் கொடுப்பார் என்றார். இவர் புகழ்வது போல் மறைமுகமாக யாரோ இசையாமப்பாளரை தாக்குகிறார் என்று புரிகிறது. அந்த இயக்குநர் இசையாமப்பாளர் பெயரை கூறிப்பிட்டு பேசியிருந்தால் அந்த பேச்சே அவருக்கு எதிரியாய் போயிருக்கும்.

அந்த இயக்குநருக்கு மேடையல் எப்படி பேச வேண்டும் என்று தெரிந்து இருக்கிறது. சமிபத்தில் ஒரு நடிகை திருமணத்திற்கு முன்பு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று பேட்டி அளித்தார். அந்த பேட்டியே அவர்களுக்கு எதிரியாய் போனது. அவர்களுக்காக கோயில் கட்டியவர்கள் கூட அவர்களை எதிர்த்து நின்றார்கள்.

செய்கையால் வரும் பிரச்சனையை விட நாவால் வரும் பிரச்சனை அதிகம். நாவால் வரும் விளைவுகளும் அதிகம். அதனால் தான் வள்ளுவர் கூட எதை அடக்க விட்டாலும் நாவை அடக்க சொன்னார்.

தெனாலிராமனுக்கு 'விகடகவி' என பெயர் எடுத்துக் கொடுத்ததும் அவருடைய நகைச்சுவை பேச்சு தான்.

அண்ணாதுரைக்கு 'பேரறிஞர்' என பெயர் கொடுத்ததும் அவருடைய திறமையான பேச்சு தான்.

எந்த சேவை செய்யாமல் அரசியல்வாதிகளுக்கு மக்களிடம் இருந்து ஓட்டுகள் வாங்கி தருவதும் அவர்களுடைய பேச்சு தான்.

வாயுள்ள புள்ள பொலச்சிக்கும் என்பார்கள். நாம் திறமையா, அளவோடு பேசினால் அதை விட மிக பெரிய பலம் இல்லவே இல்லை.

இன்று கணிப்பொறி துறையில் திறமையில்லாமல் ஆங்கிலம் பேச தெரிந்துக் கொண்டு தன் பிழப்பை நடத்துபவர்கள் பல பேர் உண்டு. திறமையிருந்தும் ஆங்கிலம் பேச தெரியாமல் பல வாய்ப்புகளை தவர விட்டவர்களும் உண்டு.

எதை எப்படி பேச வேண்டும் என்ற வரம்பு முறைகளை நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.

பெண்களிடம் சென்று வயதை கேட்பதும், ஆண்களிடம் சென்று சம்பளத்தை கேட்பதும், சிறுவர்களிடம் சென்று மதிப்பெண்கள் கேட்பதும் இப்படி கேட்டவருக்கு எப்படி இருக்குமோ என்று தெரியாது. ஆனால் கேட்டபவருக்கு தர்ம சங்கடமாக இருக்கும். அதுப் போன்ற கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரியாமே பலர் கேட்கிறார்கள்.

நாம் கேட்கும் கேள்விகளுக்கு போய்யான பதில் வரும் என்று தெரிந்தால் அந்த கேள்வியை கேட்காமலே தவிர்ப்பது நல்லது. அவர்கள் போய்யான பதிலளிக்கும் போது மனதில் நம்மை எத்தனை முறை வெடித்துக் கொண்டாரோ என்பது யாருக்கு தெரியும்.

ஒரு சிலர் திருமணத்துக்கு முன்பு என்ன நடந்ததோ அப்படியே மனைவியிடம் சொல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி சொல்பவர்கள் பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்களே தவிர நிம்மதியாக வாழ்வது அறிது தான். மனைவியையும், அன்னைக்கு வரும் சண்டைகளை சமாததான படுத்த பல பொய்கள் சொல்லியாக வேண்டிய நிலையில் இருப்பார்கள். கண்வர்கள் உண்மையாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மனைவிமார்கள் கூட , கணவர்கள் சொல்லும் உண்மைகளை நம்புவதில்லை.

இங்கு அமைதியாய் இருக்கும் மூட்டாள்கள் அறிவாளியாக காணப்படுகிறார்கள். அதிகமாய் பேசும் அறிவாளியே மூட்டாளாக தெரிக்கின்றான்.

காதலில் எடுத்துக் கொண்டால் கூட அதிகமாய் பேசும் ஆண்களை விட அமைதியாய் இருக்கும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். காரணம், அதிகமாய் பேசும் ஆண்கள் தங்களை பற்றி விளம்பரம் செய்து கொள்வார்கள். ஆனால், அமைதியாய் இருப்பவர்கள் அப்படியில்லை. விளம்பரங்கள் வியாபாரத்திற்கு உதவலாம் காதலுக்கு உதவாது.

நம் நாட்டில் வாய் சொல்லில் வீரர்கள் பல பேர் உண்டு. பேசிய சாதித்து விடலாம் என்று பல பேர்கள் நினைப்பதால் கட்டப்படாத மேம்பாலம் பாதியிலே பல காரியங்கள் நிற்கிறது. அளவாய் பேச வேண்டும். அதற்குறிய செயல்கள் வேண்டும். இந்த இரண்டுமே என்றும் சிந்தனையில் இருக்க வேண்டும்.

(கல்வெட்டு பேசுகிறது, அக்டோம்பர்,2006 )

Monday, November 3, 2008

மனம் (+) மனம் (-) மனம் (!)

“அறிவுக்கும் மனசுக்கும்
சிக்கல் எற்படும் போது
நீ மனசு சொல்வதை மட்டும் கேள்
அறிவு சொல்வதை கேட்காதே !
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கும் உன்னை மட்டும் தான் தெரியும் !”
- விவேகானந்தர்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Mind is fater than wind”. காற்றை விட அதி வேகமாய் மனம் செல்லும். சென்னையில் சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், மனிதன் மனம் சென்னையில் இருந்துக் கொண்டு அமெரிக்காவுக்கு செல்வதைப் பற்றி யோசிப்பான்.

நூறு கிராம் தான் இதயம். ஆனால் அதில் டன் கணக்கில் ஆசைகள். பதவி, பெண், பொருள், பொன், புகழ், பணம், நிலம் இதிலேயே தன் மனதில் கவனம் செலுத்தி வருகிறான்.இவைகளை அடைவதற்காகவே பல முயற்சிகள் செய்து வருகிறான்.

விழித்திருக்கும் போது இதயத்துடிப்பு அதிகமாய் துடிக்கும். உறங்கும் போது அதை விட சற்றுக் குறைவாகவே இதயதுடிப்பு துடிக்கும். ஆனால், மனதில் இருக்கும் ஆசைகள் உறங்கும் போது கனவாய் உலாவருகிறது. விழித்த பிறகு அந்த ஆசைகள் மனதில் இரட்டிப்பாய் வளர்கிறது.

ஒரு முனிவர் பத்து வருடங்களாக தவம் செய்து தண்ணீரில் நடப்பதற்கு வரம் வாங்குகிறார்.வரம் வாங்கிய பிறகு யமுனை கரையை நடந்து சென்று நண்பனைப்பார்க்க செல்கிறார். முனிவர் நண்பனிடம் “நான் பத்து வருடங்களாக கடும் தவம் புரிந்து நீரில் நடந்து செல்ல வரம் வாங்கி வந்துள்ளேன். இப்பொதுக் கூட யமுனைக் கரையை நடந்தே கடந்து வந்தேன்” என்றார். அதற்கு அந்த நண்பர் “அவ்வளவுதானா .. இதற்கு பத்து ரூபாய் ஓடக்காரரிடம் கொடுருந்தால் அவன் யமுனைக் கரையை கடக்க உதவியிப்பான். இதற்காக பத்து வருடம் வீணாய் செலவு செய்து விட்டீரே” என்றார். அந்த முனிவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.

மற்றவர் நம்மை பாராட்டவே மனம் செயல் படுகிறது. நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலையும் செய்கிறோம். அதை யாரும் பாராட்டாத போது மனம் வாடுகிறோம்.

இளம் வயதில் உடலை வருத்திக் கொண்டு பணத்திற்காக மனம் உழைக்க சொல்லும். சற்று நரை வளர்த்த பிறகு உடல் நலத்திற்காக மனம் பணத்தை செலவு செய்ய சொல்லும். காலத்திற்கு ஏற்றதுப் போல் நம்மை அறியாமலே நம் மனது இயங்கும்.

நாம் மனதை ஆலயமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். குறைந்தது ஆலயத்தில் வெளியே கிடக்கும் செருப்பாக நம் மனம் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரி, அசோகன், சோழ நாட்டு மன்னர்கள் இவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டு பெயர் எடுத்தவர்கள். விவேகானந்தர், ராம கிருஷ்ணர், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் தங்கள் மனதையாண்டு பெயர் எடுத்தார்கள். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து பெயர் எடுப்பதை விட மனதை ஆட்சி செய்து பெயர் எடுப்பது சுலபம். ஆதலால், மனதர்களே மனதை ஆட்சி செய்யுங்கள்.

( நன்றி : 'தாய் மண்' இலக்கிய மாத இதழில் ஜூலை,2006 வெளிவந்தது )

Friday, October 31, 2008

தொலைந்து போன தொழிற்கல்வி

'ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது' என்ற ஒர பழமொழி உண்டு. இது எதுக்கு பொருந்துதோ இல்லையோ .... நம் நாட்டின் கல்விக்கு பொருந்தும்.

எல்லா தேர்வு முடிவுகளை விட 10வது, 12வது தேர்வு முடிவுகளே மாணவர்கள் அதிக ஆர்வத்துடன் எதிர்ப்பார்ப்aர்கள். இந்த தேர்வு மதிபெண்கள் வைத்தே எந்த கல்லூரியில் சேரலாம், என்ன படிப்பு படிக்கலாம் என்ற முடிவுக்கு வர முடியும். அந்த மதிபெண்கள் வைத்து தான் கல்லூரியில் இடம் கிடைக்கும்.

ஒரு புறம் ஜாதி, மதம் இட ஒதிக்கீட்டில் திறமையான மாணவர்களுக்கு இடம் கிடைக்காமல் போகும். மறுபுறம் தேர்வின் தோல்வி அடைந்த மாணவர்கள் தற்கொலை செய்துக் கொள்வது. தேர்வு முடிவு ஒரு சில மாணவர்களுக்கு வாழ்க்கை முடிவாகிவிடுகிறது. அந்த முடிவுக்கு வர காரணமாக இருப்பது மாணவர்களின் மனநிலை என்று சொல்லலாம். அந்த மனநிலை அவர்களுக்கு ஏற்பட்டது மிக பெரிய காரணம் அவர்களின் பெற்றோர்களும், கல்வி முறைதான் காரணம்.

தங்கள் பிள்ளைகளை ஊக்கவிக்க தெரியாத பெற்றோர்கள் கையாலும் முறையே மிக அபத்தமாக இருக்கும்.

“உன்னை யாருடனும் ஒப்பிடாதே .. அப்படி ஒப்பிட்டால் உன்னை நீயே அவமானம் படுத்திக் கொள்கிறாய்” - ஓஷோ

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிட்டு தங்கள் பிள்ளைகளை அவர்களே அவமானப்படுத்துகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் தன்னை நல்ல முறை ஊக்கவித்தார்கள். அதனால் நல்ல மதிப்பெண்கள் எடுத்தேன் என்று சொல்கிறார்களே ! தவிர, மற்றவரோடு ஒப்பிட்டார்கள் அதனால் நல்ல படித்தேன் என்று யாரும் சொல்வதில்லை. பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளை மனதில் தாழ்வு மனப்பான்மை வருவதற்கு மிக முக்கிய காரணம். படிப்பு இல்லை என்றால் வவாழ்க்கையில்லை என்றுமங, தங்கள் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும் ஆசையில் மன ஆழுத்தம் ஏற்படும் அளவிற்கு பேசுவதும் என்று பெற்றோர் செய்கிறார்கள். அதனால் ஒரு சில தோல்வி அடைந்த மாணவர்கள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்கிறார்கள். பெற்றோர்களுக்கு அவமானத்தை தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தி தற்கொலை செய்துக் கொள்கிறார்கள்.

ஒரு குற்றவாளி பெற்றோர் என்றால், இன்னொரு குற்றவாளி கல்வி முறைகள். புத்தகத்தில் இருப்பதை அப்படியே ஒரு வார்த்தை விடாமல் எழுதினால் அதிக மதிப்பெண்கள் என்ற கல்விமுறை. சிந்தனைகளுக்கு வேலைக் கொடுக்காமல், நினைவில் வைத்துக் கொள்ளும் ஆற்றலுக்கு முதலிடம் கொடுக்கும் கல்விமுறை மாற்ற வேண்டும். பெற்றோர்கள் ஒரு புறம் மன அழுத்தத்தை கொடுக்க, படித்ததை நினைவில் வைத்துக் கொள்ள தங்களை தாங்களே மன அழுத்ததிற்கு உள்ளகுகிறார்கள்.

இந்த முறைகளை மாற்றவே தொழிற்கல்வி தொடங்கப்பட்டது. தொழிற்கல்வி முலம் மாணவர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. ஓய்வு நேரத்தில் மாணவர்கள் வேலை செய்வார்கள்.

எனக்கு பள்ளி வகுப்பெடுத்த ஆசிரியர் ஒருவர் தொழிற்கல்வி கற்றவர். பள்ளி விடுமுறையில் ஓய்வு நேரங்களில் வாட்ச் பழுது பார்த்து சிறு வருமானம் வந்ததை சொல்லிக் கொண்டு இருந்தார். தொழிற்கல்வி பெருமைகளை பற்றி சொல்லிக் கொணடடி இருந்த ஆசிரியர், என் வகுப்பு நண்பர் ஒருவர் “நீங்க பேசாம்ம வாட்ச் கடையல வேலை பார்த்து இருக்கலாம்.. நாங்க உங்க கிட்ட மாட்டமா தப்பிச்சு இருப்போம்” என்று சொன்னான். அதன் பிறகு அந்த மாணவன் ஆசிரியரிடம் உதை வாங்கியது வேறு விஷயம்.

இப்படி எந்த கவலையில்லாமல் வாழும் மாணவர்கள், தற்கொலை செய்துக் கொள்ள ஆசையா படுவார்கள். அதில் வரும் தோல்விகளை பற்றி கவலைப்பட மாட்டார்கள். நற்றாக படித்து தேர்வு எழுதி, தேர்வு முடிவு எதிராக வரும் போது மாணவர்கள் தற்கொலை வெய்துக் கொள்கிறார்கள். இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி இருக்கும். அந்த குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

ஒரு வேலை தொழிற்கல்வி கற்ற மாணவர்களாக இருந்தால், எப்படியாவது தொழில் செய்தாவது பெற்றோர்களின் கனவுகளை நிஜமாக நினைத்து இருப்பார்கள்.அவர்கள் மன அழுத்தங்களும் குறைந்திருக்கும். என்ன செய்வது பெற்றோர்கால் வரும் மன அழுத்தம், சிந்திக்க வைக்காத கல்வி கொடுக்கும் மன அழுத்தம், பெற்றோர்களில் கனவுகளை சிதைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி.... முடிவு. பக்குவம் இல்லாத மனது தற்கொலை செய்துக் கொள்ள தூண்டுகிறது.

( நன்றி : 'செங்கரும்பு' இலக்கிய மாத இதழில் பிப்ரவரி, 2007 வெளிவந்தது )

Wednesday, October 15, 2008

பங்குச்சந்தை ஆலோசனை

'பங்குச்சந்தை ஆலோசனை' என்று என் நண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். பங்கு சந்தை விழுந்திருக்கும் இச்சமயத்தில் பெரிய யோசனை சொல்ல போகிறார் என்று ஆர்வமாக மின்னஞ்சலை படித்தேன்.

அதில்....

ஒரு வருடம் முன்பு $1000 Delta Airlines பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $33.

ஒரு வருடம் முன்பு $1000 AIG பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $46.

ஒரு வருடம் முன்பு $1000 Lehmann Brothers பங்குகளை வாங்கி இருந்தால் அதன் விலை இப்போது $0.

ஆனால்,

ஒரு வடும் முன்பு $1000 டின் பீர் ( Tin Beer) வாங்கி இருந்தால் , அதை குடித்ததோடு இல்லாமல், ரீசைக்கில் செய்ய பழைய கடையில் போட்டிருந்தால் $214 கிடைக்கும் என்று இருந்தது.

'எது சிறந்த முதலீட்டு என்று நீங்களே யோசித்துப்பாருங்கள்?' என்று இருந்தது.

பழைய பேப்பர் கடைக்காரன் கொடுக்கும் பணம் கூட பங்கு சந்தையில் கிடைப்பதில்லை என்று நகைச்சுவையாக அந்த மின்னஞ்சில் கூறியிருந்தார்கள். அந்த நண்பருக்கு நன்றி.


இப்போது முதலீடு செய்வது சரியான நேரம் என்று ஒரு சிலர் கூறிகிறார்கள். என்னை பொருத்த வரையில் இப்போது வெடிக்கை பார்ப்பது தான் நல்லது. BSE 9500 புள்ளிகள் இறங்கலாம் என்று இன்னொரு கருத்து உள்ளது என்பது காதில் வாங்கிக் கொண்டு முதலீடு செய்யுங்கள்

Tuesday, October 7, 2008

இந்திரா நூயி – இந்தியர்களை நிமிர வைத்த பெண்

'இந்திரா நூயி' பெயரை கேட்டால் எதோ வெறு மாநிலத்தில் பிறந்தவர் போல் தெரியும். இவர் 100% தமிழச்சி. இவரின் முழுப் பெயர் இந்திரா கிருஷ்ணமூர்த்தி நூயி. 1955 ஆம் ஆண்டு சிங்கார சென்னையில் பிறந்தவர். சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் 'B.Sc' படிப்பும், 'IIM'- கல்கத்தாவில் MBA படிப்பும், யெல் பல்கலைக்கழகத்தில் 'Public & Private Management' முதுநிலை பட்டம் பெற்றவர். 1976ல் 'Beardsell' டெக்ஸ்டைல் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதன் பின் ‘Asea Brown Boveri, Motorala, Bostan Consulting Group, Johnson & Johnson' என்று பல நிறுவங்களில் பணி புரிந்துள்ளார்.



பெப்ஸி நிறுவனத்தில் 1994ல் Vice-President, Strategic Planning & Development' ஆக சேர்ந்தார். தன் கடின உழைப்பால், இன்று பெப்ஸி நிறுவனத்தில் 'Chairman & CEO’ வாக பணிபுரிந்து வருகிறார். ஒரு நிமிடத்திற்கு ஆயிரம் ரூபாய் மேல் சம்பாதிக்கிறார். உலகில் பெப்ஸி நிறுவனம் இரண்டாம் இடத்தில் வர மிக முக்கிய பங்கு வகித்தவர். பெப்ஸி என்றவுடன் குளிர்சாதனம் பொருள் மட்டும் தயாரிக்கும் நிறுவனம் மட்டுமில்லை. உடல் ஆரோக்கியத்திற்காக கொழுப்பு சத்து குறைவுள்ள எண்ணெய், உப்பு போன்ற பொருட்களை கூட தயாரிக்கிறார்கள்.

இந்திரா நூயி யார் என்று தெரியாதவர்களுக்கு இது சிறு முன்னுரை மட்டுமே ( எனக்கும் பெரிய அளவில் அவரை பற்றி ஒன்றும் தெரியாது ) ! நான் சொல்ல வந்த விஷயமே வேறு !!
சமிபத்தில் பிஸ்னஸ் வோல்ட் இதழில் அவர் அளித்த பேட்டியை படித்தேன். அவர் பேட்டி என்னை மிகவும் கவர்ந்தது. ஒரு புறம், பெப்ஸி குளிர்பானத்தை தடை செய்ய வேண்டும் என்ற போராட்டம் இருக்க, பெப்ஸி குளிர்பான விற்பனையில் 'இந்தியா' முதல் ஐந்தாம் இடத்தில் உள்ளது. சென்னையை சேர்ந்த ஒரு பெண்மணி இவ்வளவு பெரிய சாதனை நிகழ்த்தியுள்ளதை யாராலும் பாராட்டாமல் இருக்க முடியாது.

2015ல் பெப்ஸி நிறுவனம் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு அவர் 2015ல் தன் நிறுவனம் அடைய போகும் லாபத்தை பற்றி பேசவில்லை. தன் குளிர்பான தயாரிப்பில் 20 சதவிகிதம் தண்ணீர், 20 சதவிகிதம் எண்ணெய், 25 சதவிகிதம் பெட்ரோல் குறைக்கப்படும் என்றார். அது மட்டுமில்லாமல். 25 சதவிகிதம் பெப்ஸி பாட்டில்களை ரீஸைக்கில் (Re-cycle) செய்து மீண்டும் பயன்படுத்துவதாக கூறினார்.
இப்போது அமெரிக்காவில் உள்ள பொருளாதார வீழ்ச்சியை பற்றி கேட்ட போது தங்கள் நிறுவனத்துக்கும் ஒரளவு பாதிப்பு இருப்பதை ஒப்புக் கொண்டார். உலகில் பல இடங்களில் தங்கள் நிறுவனங்கள் இருப்பதால் ஒரு இடத்தில் இறங்குமுகமாக இருந்தாலும், மற்றொரு இடத்தில் ஏறுமுகமாக இருப்பதை கூறினார். உலகளவில் பெப்ஸி விற்பனை இந்தியா அதிக உள்ளது என்பதை தெரிவித்தார். இந்தியர்கள் Purchase Capacity மற்ற நாடுகளை காட்டிலும் அதிகமாக உள்ளதையும் கூறினார்.

100 % வியாபாரியாக இல்லாமல் சுற்றுப்புறத்தை பற்றி நினைத்து செயல்ப்படுவதும், இவ்வளவு பெரிய பதவியில் இருந்தும் எளிமையாக இருப்பதும், அதிக சம்பளம் வாங்கும் CEO என்ற கர்வமில்லாமல் இருக்கிறார். உலகளவில் இந்தியர்களை தலை நிமிர வைத்த பெண்களில் இவருக்கு தனி இடம் கண்டிப்பாக உண்டு.

Thursday, September 11, 2008

"மனசாட்சி சொன்னது" - பரிசு வென்ற சிறுகதை

இந்த முறையாவது கிடைக்குமா... இது நம்முடைய மூன்றாவது முயற்சி... ஏன் இரண்டு முறை கிடைக்கவில்லை என்று கேட்டால் என்ன சொல்வது....? பல சிந்தனைகளை மனதில் ஓட்டிக் கொண்டு இருந்தான் ரமேஷ். ரமேஷ் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பொறியாளர். மூன்று வருடங்களாக கண்ட கனவு நாளை நிறைவேறுமா என்ற அச்சம். இது அவனுக்கு மூன்றாவது முறை... என்ன நடக்க போகிறது....?

ரமேஷின் பிராஜெக்ட் மேனேஜர் ராமன் அங்கு வருகிறான்.

"ஹெலோ ரமேஷ்.... என்ன ரொம்ப டென்ஷனா இருக்க..." என்றான்.

" ஆமா சார்.... ரொம்ப டென்ஷனா இருக்கு... இந்த தடவை கிடைச்சா..என் லைப்பே மாறிடும்..."

"கவலை படாத... இந்த பிராஜக்ட் சக்ஸஸ் ஆனதற்கு காரணம் நீ தான்.... கண்டிப்பா கிடைக்கும்... டோட் வொரி..."

யார் வேண்டுமானாலும் அறிவுரை சொல்லலாம்... ஆனால், நடந்து காட்டுவது வேறு... இரண்டு தடவை விசா கிடைக்கவில்லை... இது எனக்கு மூன்றாவது தடவை. கிடைத்தால், இரண்டு வருஷம் நல்ல சம்பளம்....இனி வாழ்க்கையில் வேலை கூட செய்ய வேண்டியதில்லை.... ஆனால், விசா கிடைத்த பிறகே எல்லாம் சாத்தியம்.

2001ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வர்த்தக மையம் இடிக்கப்பட்டதிலிருந்து, அமெரிக்காவுக்கு விசா கிடைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக உள்ளது. எந்த காரணத்திற்காக விசா மறுக்கப்படுகிறது என்ற காரணம் கூட தெரிவதில்லை.நாம் கொடுக்கும் தகவல்களில் ஒரு சிறு தவறு இருந்தால் கூட விசா கொடுக்க மறுத்துவிடுகிறார்கள்.

மறுநாள்....
அமெரிக்கா தூதரகத்தில் ரமேஷ் காத்துக்கொண்டு இருந்தான். மூன்று மணி நேரம் கழிந்தது, ஒவ்வொரு முறையும் இப்படி தான் பல மணி நேரம் பலருக்கு செலவாகிறது. விசா மறுக்கப்பட்டால் பல மணி நேரம் காத்து கிடந்ததற்கு பலன் இல்லாமல் போய்விடுகிறது.

"ரமேஷ்...." - என்று ஒரு வெள்ளைக்காரன் குரல் அழைப்பு.

ரமேஷ் உள்ளே செல்கிறான். அரை மணி நேரம் ஆகியும் இன்னும் வெளியே வரவில்லை.
"சோ... மிஸ்டர் ரமேஷ்... யூவர் எச்1பி விசா இஸ் கிரன்டட் ...."

"தாங்க் யூ சார்...."

"ஒ.கே.... ஆல் தி பெஸ்ட்...."

ரமேஷின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.... பல நாள் கனவு இன்றே நிஜமானது... இரண்டு வருடம் கஷ்டப்பட்டு வேலை செய்தால் போதும், வாழ்க்கையில் நல்ல நிலைமைக்கு வந்துவிடலாம்.
தனக்கு விசா கிடைத்துவிட்டதை தன் நிறுவனத்திற்கு போன் செய்து சொல்கிறான். தன் நண்பர்களுக்கு விருந்துகள் எல்லாம் கொடுத்து தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டான்.

அவன் நிறுவனத்தில் ஒரு மாதத்தில் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். அதற்கான வேலைகளை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அமெரிக்காவுக்கு புறப்பட நல்ல துணிகளை எடுத்து வைத்துக் கொண்டு இருந்தான். 2007ஆம் ஆண்டு தன் வாழ்க்கையில் நல்ல திருப்புமுனை ஆண்டாக இருக்கும் என்றே இருந்தான். அந்த நேரத்திலா அவன் தொலைக்காட்சியில் அதை பார்க்க வேண்டும்.. அதை பார்த்ததும் மிகவும் மனம் வேதனையுடன் அன்று இரவு பொழுது அவனுக்கு கழிந்தது.
மறு நாள் தன் அலுவலகதில் தன் மேனேஜர் ராமனை பார்க்கிறான்.

"சார்... நான்... அமெரிக்காவுக்கு போகல... நான் இங்கேயே இருந்து வேலை செய்றேனே.."

"என்ன... ரமேஷ்... என்ன ஆச்சு உங்களுக்கு... விசாக்காக ரொம்ப கஷ்டப்பட்டீங்க... இப்போ ஏன் இந்த தீடிர் முடிவு? "

"இல்ல...என க்கு அமெரிக்கா போக மனசு இல்ல... நான் இந்தியாவிலே இருந்து வேலை செய்யனும்னு ஆசை படுறேன்..."

சிரித்துக்கொண்டே ராமன் " அமெரிக்கா போயி வேலை செய்தா தேச திரோகம்னு யாராவது அட்வைஸ் பண்ணாங்கள...? அப்படி யாராவது சொன்னா நம்பாதிங்க... அமெரிக்கா போயி வேலை செய்தா இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் தான்.... யாரோ உங்கள நல்லா குழப்பி இருக்காங்க..."

"யாரும் என்ன குழப்பலை...இது நானா எடுத்த முடிவு தான்... அது மட்டும் இல்லாம நான் வேறொரு காரணத்திற்காக தான் போகலைனு சொன்னேன்"

" அப்படியா....சரி..! என்ன காரணம்... எனி பர்சனல் ரீசன்.."

" சொந்த காரணம் இல்லை... உலக காரணம்... அதான் போகலை...."

"புரியல..."

" நேத்து டி.வியில சதாம் ஹுசைனை தூக்குல போடுறத பார்த்தீங்களா...."

"பார்த்தேன்... ஆனா அதுக்கும் நீங்க சொல்ல வந்ததுக்கும் என்ன சம்மந்தம் இப்போ.."

" நம்மல மாதிரி சாப்ட்வேர் ஆளுங்க சம்பாதிச்சு... இரண்டு நாட்டுக்கும் நல்ல லாபம் வாங்கி தரோம்... ஆன அமெரிக்கா அந்த பணத்தை நல்ல வழியில செலவு செய்யல... மத்த நாடு கிட்ட சண்ட போடுரதுல தான் செலவு பண்றாங்க.."

"அதுனால நமக்கு என்ன ?... நம்ம இந்தியா மட்டும் என்ன... நல்ல விஷயத்துக்கா பணம் செலவு பண்றாங்க.... எத்தனையோ அரசியல்வாதி நம்ப வரி பணத்தை கொள்ளை அடிக்கிறாங்க.."

" நம்ம இந்தியாவால எந்த நாடும் கஷ்டப்பட்டது இல்ல.... ஒரு பிலைட் ஹைஜாக் பண்ணி தீவிரவாதிகளை விட சொன்னா கூட... எந்த உயிரும் சாகக் கூடாதுனு நாம தீவிரவாதியை விடுதலை பண்ணியிருக்கோம்.... ஆனா ஒரு பிரதமர கொன்னு.. ஈராக்ல கலவரத்த உண்டு பண்ணிட்டாங்க அமெரிக்கா.."

"ரமேஷ்... எனக்கும் விஷயம் தெரியும்... ஆனா உலக அரசியல் பேசி இவ்வளவு வருஷம் காத்திருந்து வாங்கின விசாவ தூக்கி எறியப் போறிங்களா"

"கண்டிப்பா நான் தூக்கி ஏறியதான் போறேன்.... அமெரிக்கா பண்ணுற காரியத்திற்கு மறைமுகமா நாம சம்மந்தம் படுறோம்... க்யூபா, ஜப்பான், ஆப்கானிஸ்தான், இப்போ ஈராக் இன்னும் எவ்வளவு நாட்டை அழிக்க போறாங்கனு தெரியலை.... ஆனா இவங்க பண்ணுரதுக்கு தைரியம் கொடுக்குறது நாம சம்பாதிச்சு கொடுக்கும் பணம் தான்...."

" அப்போ.. உங்க முடிவுல இருந்து மாறப் போறதில்லையா..."

" கண்டிப்பா மாற மாட்டேன்... நீங்க என்னை வர்புறுத்தி அமெரிக்கா போக சொன்னா வேலையை விட்டு தான் மாறுவேன்..."

ராமன் என்ன பேசுவது என்று தெரியவில்லை... ஆனால், இறுதியாக ராமன் "நான் வேற யாராவது இந்த பிராஜக்ட்காக அனுப்பிடுவேன்... உங்களுக்கு கிடைச்ச நல்ல சந்தர்ப்பத்தை நழுவவிடுறீங்க... அது தான் என்னால சொல்ல முடியும்"

"சந்தர்ப்பத்தை நழுவவிட்டா பரவாயில்லை... ஆனா, மத்தவங்க சாகுறதுக்கு நாம மறைமுகமாக காரணம் நினைக்கும் குற்ற உணர்ச்சியை விட பரவாயில்லைனு தோன்னுது..."

சரி..உங்க இஷ்டம்..." என்று சொல்லி ராமன் தன் குழுவில் இருக்கும் வேறொருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா செல்ல விசா வேலைகளை தொடங்க சொல்கிறான்.

ரமேஷ் செய்தது முட்டாள் தனமாக தெரிந்தாலும்..அதில் இருக்கும் உண்மை ராமனின் மனிதநேயம், அந்த குழுவில் வேலை செய்யும் எல்லோருக்கும் புரிந்தது. புரிந்தும் இந்த சுயநல உலகில் சுயநலமான முடிவைத்தான் எடுக்க வேண்டியுள்ளது. அந்த குழுவில் ஒருவன் அமெரிக்கா செல்கிறான்.

( "நம் உரத்தசிந்தனை" சிற்றிதழ் நடத்திய சிறுகதை போட்டியில் ரூ.250 பரிசுவென்றது. என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது.

என்னுடைய "நடைபாதை" நூலில் ஐந்தாவது கதையாக இடம் பெறுகிறது. "நடைபாதை" நூல் வெளியீட்டு விழா செப்.14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் விபரங்களுக்கு.....
http://tamilbookreview.blogspot.com/2008/09/14.html பார்க்கவும்)

Tuesday, August 12, 2008

குண்டக்க மண்டக்க – 4

(‘குண்டக்க மண்டக்க – 3 ’வின் தொடர்ச்சி.)

காட்சி 2: பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்



( ஒரு முறை சிக்னலில் மாட்டிக் கொண்டு பார்த்திபனிடம் பட்ட பிறகு வடிவேலு சிக்னல் விழுவது போல் தெரிந்தால் போதும், பத்தடி தொலைவில் நின்று விடுவார். பார்க்கும் ட்ராபிக் போலீஸ் எல்லாம் பார்த்திபன் போல் தெரிந்தது. இந்நிலை மீண்டும் அதே மவுன்ட் ரோட் சிக்னலில் பார்த்திபன் நிறுத்துகிறார்.)

பார்த்திபன் : வண்டிய நிறுத்து..
வடிவேலு : அடபாவி... மறுபடியும் நீயா...?

பார்த்திபன் : நானே தான்..!
வடிவேலு : இப்ப சிக்னல ஒழுங்க தானே வந்தேன்... எய்யா நிக்க சொன்ன...?

பார்த்திபன் : சும்மா... பொழுது போகல... பேச்சு துணைக்கு ஆள் வேணும் அதான் நிறுத்துனேன்.
வடிவேலு : இது உன்னகே கொஞ்சம் ஓவரா இல்ல.. பேச்சு துணைக்கு ஆள் வேணும்னா உன் பக்கதுல இருக்குற போலீஸ்கார கிட்ட பேசுறது... வண்டியில போறவன நிறுத்தி பேசனும் சொல்லுற... சின்ன புள்ளதனமா விளையாட்டா இருக்கு...

பார்த்திபன் : சரி அதெல்லாம் இருக்கட்டும்... லைசன்ஸ் எடு..
வடிவேலு : பேச்சு துணைக்கு நிறுத்துனேன்னு சொல்லிட்டு இதெல்லாம் கேக்குற..

பார்த்திபன் : வெட்டியா பேச முடியுமா...! எதோ உன் கிட்ட இருக்குற லைசன்ஸ், ஆர்.சி பூக், இன்ஷூரன்ஸ் எடுத்து காட்டினா அத பத்தி பேசலாம்.
வடிவேலு : உனக்கு பயந்து வண்டி ஒட்டும் போது சிக்னல் விழுது தெரிஞ்சதும் பத்தடி தூரம் வண்டி நிறுத்துறேன்... என்னையே ரவுட் கட்டி ஏன் புடிக்கிற...?

பார்த்திபன் : நா கேட்டது எடுக்க போறிய இல்லையா...?
வடிவேலு : சரி.. தரேன்... ஆள விடமாட்ட... இந்தா என் வண்டி இன்ஷூரன்ஸ், ஆர்.சி பூக், லைசன்ஸ்... போதுமா..

பார்த்திபன் ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கிறான்.
வடிவேலு : எல்லா சரியா இருக்கா.. நான் கிளம்புறேன்..

பார்த்திபன் : இரு.. பைன் கட்டிடு போ...
வடிவேலு : சொந்தக்கார வீட்டுல சொல்லுற மாதிரி பேசுற... எல்லா பேப்பரும் சரியா இருக்குல..

பார்த்திபன் : அப்படினு யார் சொன்னா... இன்ஷூரன்ஸ் நேத்தோட லாப்ஸ் ஆயிடுச்சு...
வடிவேலு : என்னது நேத்தோட முடிஞ்சு போச்சா... ( இன்ஷூரன்ஸ் பேப்பரை பார்க்க) அட ஆமா... நல்ல வேல நியாபகம் படுத்துன.. இப்போவே போய் ரென்யூ பண்ணிடுறேன்..

பார்த்திபன் : உனக்கு நியாபகம் படுத்த நான் என்ன உன் பி.ஏவா... ரென்யூ பண்ணாததுக்கு பைன் கட்டு.
வடிவேலு : யோவ்.. ஒரு நாள் தானே... ரென்யூ பண்ணிட்டு வந்து உனக்கு காட்டுறேன்

பார்த்திபன் : அப்படியா.... சரி லஞ்சமா அம்பது ரூபா கொடுத்திட்டு போ..
வடிவேலு : இத முன்னேடியே கேக்க வேண்டியது... இதுக்கு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு... இந்த வச்சிக்கோ.. நா போகட்டா..

பார்த்திபன் : சரி போ..
வடிவேலு : ( அப்பாடா...எதோ அம்பது ரூபாவோட போச்சு... ஆயிரம், இரண்டாயிரம் சொன்ன.. கையில் பணம் கூட இல்ல )

மவுட் ரோட் ப்லை ஓவரில் இருந்து கிளம்பிய வடிவேலும் தேனாம்ப்பேட்டை சிக்னலில் ட்ராபிக் போலீஸ் நிறுத்துகிறார்.

வடிவேலு : யோவ்... சிக்னலுக்கு சிக்னல் ஏன்ய்யா வண்டிய நிறுத்துறீங்க...
தேனாம்ப்பேட்டை போலீஸ் : மவுன்ட் ரோட் போலீஸ் போன் பண்ணி உன் வண்டிய நிறுத்த சொன்னாரு.. அத நிறுத்துனேன்.

வடிவேலு : இப்ப தான் மவுன்ட் ரோட் போலீஸ்க்கு பணம் கொடுத்தேன்.. ஒரு வேல ஆவனா இருப்பானோ...?
பார்த்திபன் பைக்கில் வந்து அங்கு இறங்குகிறான்.
வடிவேலு : அவனே தாய்யா...

பார்த்திபன் : என்னப்பா பிரச்சனை
வடிவேலு : நீ தான் பிரச்சன.. போன் பண்ணி வண்டிய ஏன் நிறுத்த சொன்ன...?

பார்த்திபன் : ( தேனாம்ப்பேட்டை போலீஸ்யிடம்) நீ போப்பா நான் பார்த்துக்கிறேன்... (வடிவேலுவிடம்) உன் லைசன்ஸ், இன்ஷூரன்ஸ் பேப்பர் எல்லாம் எடு...
வடிவேலு : நினச்சேன்... என்னடா வம்பு பண்ணாம அம்பது ரூபா வாங்கிட்டு விட்டானே சந்தோஷப்பட்டேன்.. என்ன விட மாட்ட.! மனசாட்சி தொட்டு சொல்லு போன சிக்னல தானே எல்லாத்தையும் பார்த்த..

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : ( என் பிட்ட எனக்கே போடுறியா..) இந்தா எல்லா பேப்பரையும் இன்னொரு வாட்டி பாரு...

பார்த்திபன் : எதுக்கு இன்னொரு வாட்டி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுறது.. இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... அதுக்கு பைன் கட்டு..
வடிவேலு : அதுக்கு தான் போன சிக்னல அம்பது ரூபா வாங்குனல்ல...

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : (மறுபடியும் அதே பிட்டா...) இப்ப என்ன தான் வேணும்.

பார்த்திபன் : அம்பது பணம் கொடுத்திட்டு போ...
வடிவேலு : போன சிக்னலையே நூறு ரூபா கேட்டா கொடுத்திருப்பேனே... எதுக்கு இன்னொரு சிகனல்லுக்கு வந்து அம்பது ரூபா வாங்குற..

பார்த்திபன் : இப்ப தரியா... இல்ல கேஸ் எழுத சொல்லவா..
வடிவேலு : என்னப்பா மிரட்டுறியே... இந்த அம்பது ரூபா... அடுத்த சிக்னல்ல வந்து நீ என்ன தொந்தரவு கொடுக்க மாட்டியே..

பார்த்திபன் : கவலப்படாத... அடுத்த சிக்னல்ல நா உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன் போதுமா..
வடிவேலு : ( அப்பாடா... எதோ நூறு ரூபாவோட போய் தொலையுது )

அடுத்து நந்தனம் சிக்னலில் வடிவேலு இன்னொரு ட்ராபிக் போலீஸால் நிறுத்தப்படுகிறார்.

வடிவேலு : (அடுத்தபிரச்சன வந்திடுச்சு...) இப்ப தான் இரண்டு சிக்னல்ல போலீஸ் நிறுத்துனாங்க... நீ வேறையா...?

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அம்பது ரூபா லஞ்சம் கொடுத்திட்டு போ...!
வடிவேலு : யோவ்.. இப்ப தான் வண்டிய நிறுத்த்தினேன்.. எந்த பேப்பரும் பார்க்காம லஞ்சம் கேக்குற...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : முன்னாடியே மவுன்ட் ரோட் போலீஸ் பார்த்திபன் கிட்ட இருந்து ஒயர்லஸ் இன்பர்மேஷன் கொடுத்திருடாரு...
வடிவேலு : என்னனு கொடுத்திடாரு...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : உன் இந்ஷூரன்ஸ் லாப்ஸ் அயிடுச்சு சொன்னாரு..
வடிவேலு : அடபாவிங்களா.... களவாளி பசங்கல புடிக்குறது ஒயர்லஸ் யூஸ் பண்ணமா... அப்பாவி என்ன புடிக்கிறது யூஸ் பண்ணுறீங்க..

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : பணம் எடு...
வடிவேலு : கொடுத்து வச்ச மாதிரி கேக்குற... நான் பேசாம பைன் கட்டுறேன்...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அது எல்லாம் முடியாது... லஞ்சம் வாங்க சொல்லி தான் எனக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க..
வடிவேலு : லஞ்சம் வாங்குறதுக்கு எல்லாம் ஆர்டர் போடுறாங்களா … கொடுக்கலைனா... ?
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : வண்டிய வாங்கி வச்சிக்க சொன்னாங்க...
வடிவேலு : ஆ ஆ ஆ... பாவி மக்கா... இப்படியும் ஒரு பொலப்பா...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : நீ ரொம்ப பேசுற... வண்டிய கொடு...
வடிவேலு : இல்லப்பா.. இல்லப்பா.. இந்த அம்பது ரூபா... ( காலையில யாரு முகத்துல முழிச்சேனோ.. எனக்கு நேரமே சரியில்ல...)

மூன்று சிக்னலிலும் அம்பது ரூபா லஞ்சம் கொடுத்த வடிவேலுவின் விதி விடவில்லை. அதான் பார்த்திபன் விடவில்லை. மீண்டும் சைதாப்பேட்டை சிக்னல் பார்த்திபனால் மடக்கப்படுகிறான்.

பார்த்திபன் : நான் சொன்ன மாதிரி போன சிக்னல்ல உன்ன தொந்தரவு பண்ணல பார்த்தியா...
வடிவேலு : யோவ்... விரட்டி விரட்டி வெட்டுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன்... விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குறத இப்ப தான் பார்க்குறேன்... பேசமா மவுன்ட் ரோட்டுலைய பைன் கட்டிருப்பேன். உங்களுக்கு லஞ்ச கொடுத்தே என் சம்பள பண போய்யிடும் போலிருக்கு...

பார்த்திபன் : சரி... பைன் கட்டனும் ரொம்ப ஆச படுற.. உன் ஆசைய ஏன் கெடுக்கனும்... ஆயிரம் ரூபா பைன் கட்டு...
வடிவேலு : அடபாவி... மூனு சிக்னல் லஞ்சம் வாங்குனது இல்லாமா... இப்போ அயிரம் ரூபா பைன் கட்ட சொல்லுறீயே.. இது உனக்கே நியாயமா தெரியுதா...

பார்த்திபன் : லஞ்சம் வாங்குறது எங்களுக்காக... பைன் கட்ட சொல்லுறதுக்கு கவர்மென்ட்காக...
வடிவேலு : இதுல பன்ச் டைலாக் வேற… அப்படினா... முன்னாடியே பைன் கட்ட சொல்ல வேண்டியது தானே

பார்த்திபன் : நீ நேர்மையான ஆளா இருந்த என்ன சொல்லிருக்கனும்... "இல்ல சார் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன்.. பேசாம பைன் கட்டுறேன் சொல்லிருக்கனும்"... இப்படி செய்யாம உன் புத்தி எங்க போச்சு...?
வடிவேலு : ( வ்...வ்..வ்.வ்) என் கிட்ட பணம் கூட இல்ல. இந்தா கிரடிட் கார்டு...

பார்த்திபன் : நாங்க லஞ்சம் வாங்குறதுக்கு மட்டும் தான் கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணிப்போம்.. கோர்ட் பைன் எல்லாம் பணம் மட்டும் தான் கட்டனும்
வடிவேலு : அடபாவி... எத்தன வாட்டி நீ கேக்கும் போதெல்லாம் பணம் கொடுத்திருக்கேன்... கொஞ்சம் மாச்சி கருண காட்டுறியா.

பார்த்திபன் : சரி... இவ்வளவு கெஞ்சுறதுனால... உன் வண்டிய இங்கையே விட்டு போய்டு...
வடிவேலு : விட்டு எங்க போறது...?

பார்த்திபன் : இந்த வண்டிக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிடு... பைன் கட்ட தேவையில்ல...
வடிவேலு : என்ன ஒரு புத்திசாலிதனம்... ஆயிரம் ரூபா லஞ்சத்துக்கு மூப்பதாயிரம் ரூபா வண்டிய விட்டு போ சொல்லுற... நல்ல இருக்கு.. நா பைன் கட்டுறேன் போதுமா...

பார்த்திபன் : பணம் இல்லனு சொன்ன...
வடிவேலு :(கோபமாக) போய் சொன்ன போதுமா.... நீ எல்லாம் உண்மைய மட்டும் பேசுற மாதிரி... இந்த ஆயிர ரூபா... எங்க போய் கட்டனும்

பார்த்திபன் : பைன் கட்டுறது ஒரு பக்க இருக்கட்டும்... பணம் வச்சிக்கிட்டு இல்லனு போலீஸ் கிட்ட போய் சொன்னியே அதுக்கு ஒரு கேஸ் எழுதனுமே....!
வடிவேலு : டேய்... இப்படியே பேச்சு கொடுத்து... உலகத்துல இருக்குற எல்லா தப்பையும் என் மேல கட்டிடுவியே... உன் கூட குடும்ப நடத்த என்னால முடியாது. நா ஜெயிலுக்கே போறேன்...

Friday, August 8, 2008

குண்டக்க மண்டக்க - 3

காட்சி : பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்

வடிவேல் வேகமாக மவுன்ட் ரோட் சிக்னலில் நிறுத்தாமல் வண்டி ஓட்டிவர, அதை ட்ராபிக் போலீஸ் பார்த்திபன் நிறுத்திகிறார்.

பார்த்திபன் : நிறுத்து.... வண்டிய ஒறங்கட்டு...
வடிவேலு : ( திரு திரு... முழியுடன்....)

பார்த்திபன் : ஏன்டா... சிகனல்ல வண்டிய நிறுத்தல...
வடிவேலு : சாரி..சார்... அவசரமா போகனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.. ஏன் சிக்னல்ல நிக்கல...
வடிவேலு : சார்... அவசரமா ஒரு இடத்துக்கு போனும்

பார்த்திபன் : அவசரமா போனும்னு சொல்லிட்டு… ஏன்டா ! என் கிட்ட பேசிக்கிட்டு இருக்க..
வடிவேலு : நீங்க தான் என்ன நிருத்தி ஒறங்கட்ட சொன்னிங்க...

பார்த்திபன் : ஓறம்மா நிக்க தெரிஞ்ச உனக்கு....சிக்னல்ல ஏன்டா நிறுத்த தெரியல...
வடிவேலு : அதான் சொன்னல்ல சார்...அவசரமா போனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.
வடிவேலு : (வ்வ்வ்வ்)... ஒரு இடத்துக்கு போனும்ப்பா...

பார்த்திபன் : போனும்னு சொல்லிட்டு... ஏன் பேசி டைப் வேஸ்ட் பண்ணுற..
வடிவேலு : ( ஆ.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துல இருந்தே பேசுறானே....) உங்களுக்கு என்ன சார் வேணும்

பார்த்திபன் : சிக்னல்ல வண்டி ஏன் நிறுத்தல்ல.... அதுக்கு பதில் சொல்லு
வடிவேலு : அட பாவி... இவ்வளவு நேரம் அத தான்டா சொன்னே... என்ன ஏய்யா படுத்துற

பார்த்திபன் : சரி...சிக்னல்ல நிறுத்தாதது பைன் கட்டு
வடிவேலு : எவ்வளவு கட்டனும்...?

பார்த்திபன் : ஆயிரம் ரூபா..
வடிவேலு : ஏய்..யார ஏமாத்துற... சிக்னல்ல வண்டி நிறுத்தலைன்னா நூறு ரூபா தான் பைன்... என்ன பார்த்தா கேன பைய மாதிரி தெரியுதா...

பார்த்திபன் : நா அதுக்கு கேஸ் போடல்ல... வாண்டிய ஓட்டும் போது செல்போன் பேசுனதா கேஸ் எழுதியிருக்கேன்
வடிவேலு : என் கிட்ட.. செல்போன்னே இல்லையடா...

பார்த்திபன் : செல்போனே இல்லன்னா.. புதுசா வாங்கு... இப்போ பைன கட்டு...
வடிவேலு : முடியாது... கோர்ட்க்கு போய் ஜட்ஜ் முன்னாடி … என் கிட்ட செல்போன் இல்லனு சொல்லுவேன்...

பார்த்திபன் : வர வழியா.. செல்போன் தூக்கிப் போட்டேனு நான் சொல்லுவேன்... இல்ல நீ வண்டியில வரும் போது ஸ்கூட்டியில போர பொண்ண கிண்டல் பண்ண சொல்லி பொய் சாட்சி வச்சு… ஈவ் டிசிங் கேஸ்ல உள்ள தள்ளுவேன்... உனக்கு வசதி எப்படி ?
வடிவேலு : யோவ்.. உனக்கு என்ன பாவம் பண்ண.. ஊரு உலகத்துல எத்தன பேரு சிக்னல்ல வண்டிய நிறுத்தமா போறான்... நான் தானா உனக்கும் கிடைச்சேன்...

பார்த்திபன் : யாரு ஏமாந்தவங்களோ அவங்கள தான் நாங்க புடிப்போம்.. என்ன சொல்ற..?
வடிவேலு : இந்த அம்பது ரூபவ லஞ்சமா வச்சிக்கோ..

பார்த்திபன் : டாய்... யாருக்கு லஞ்சம் கொடுக்க பாக்குற.. ஒரு நேர்மையான அதிகாரிய
வடிவேலு : யாரு நீ நேர்மையான அதிகாரி...?

பார்த்திபன் : ஒரு நேர்மையான அதிகாரிய கலங்க படுத்த பாக்குரியா.. இது இன்னொரு கேஸ் எழுதுறேன்..
வடிவேலு : உனக்கு என்னய்யா வேணும்... ஏன் உசுர வாங்குற...

பார்த்திபன் : ஒழுங்க பைன கட்டு...
வடிவேலு : இப்படி ரௌடினதமா ஆயிர ரூபா பைன் கட்ட சொல்லுறியே... உனக்கே நியாயமா இருக்கா...?

பார்த்திபன் : போலீஸ்கார பார்த்து 'ரௌடி' திட்டுற... அரசு காவல் அதிகாரி மதிக்காதது... இன்னொரு கேஸ் எழுதுறேன்...
வடிவேலு : (புதுசு.. புதுசா... டெக்னிக் கண்டு பிடிக்கிறாய்யா...) சரி... இந்தா ஆயிரம் ரூபா....

பார்த்திபன் : என்னது... ஆயிரம் ரூபா கொடுக்குற.. மூவாயிரம் ரூபா பைன்.
வடிவேலு : எப்படி..???

பார்த்திபன் : சிக்னல்ல செல்போன் பேசுனது, போலீஸ்க்கு லஞ்ச கொடுக்க முயற்சி பண்ணது, அப்புறம் போலீஸ ரௌடினு சொன்னது... மூனு கேஸ்சுக்கு மூவாயிரம் ரூபா...பைன்..
வடிவேலு : அடபாவி... ஒரு சின்ன கேஸ்ச வைச்சு பெரிய பெரிய கேஸ்ச எல்லாம் தன் தலைமேல கட்டுரானே... இப்படி பண்ணுவ தெரிஞ்சிருந்தா அப்போவே ஆயிரம் ரூபா கொடுத்திருப்பேன்..

பார்த்திபன் : என்ன கொடுக்குறியா.... ஜெயிலுக்கு போறியா...
வடிவேலு : என் கிட்ட ஆயிரம் ரூபா தாய்யா இருக்கு.. வேற எதுவும் இல்ல...

பார்த்திபன் : உண்மைய சொல்லு... வேற எதுவுமில்ல....
வடிவேலு : கிரடிட் கார்ட் இருக்கு..

பார்த்திபன் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
வடிவேலு : என்னது ?? கார்ட் அக்ஸப்ட்டா....????

பார்த்திபன் : அமா... இப்போ நிறைய பேர் பணம் கையில வச்சிக்கிறாது இல்ல... அவங்க வசதிக்காக நாங்க கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மிஷின் வாங்கிட்டோம். இனிமே நீங்க லஞ்சம், அன்பளிப்பு, பைன் எல்லாம் கிரடிட் கார்ட்ல கூட கட்டலாம். கூடிய சிக்கிரத்துல ‘ஆன் – லைன்ல’ கூட கட்டுறதுக்கு ஏற்பாடு செய்ய போறோம்...
வடிவேலு : என்னைய்யா... பகல் கொள்ளையா இருக்கு... லஞ்சம் வாங்குறத மீட்டிங் போட்டு யோசிப்பிங்களோ ?

பார்த்திபன் : மறுபடியும் போலீஸ திட்டுற...
வடிவேலு : இல்ல.. இல்ல... இந்தாப்பா கிரடிட் கார்டு... மூவாயிரத்துக்கு என்டிரி போட்டு கொடு...

பார்த்திபன் கார்ட்டை வாங்கி கிரடிட் கார்ட் மிஷினில் தெய்கிறார்.

பார்த்திபன் : இந்தா.. சிலிப்பல கையெழுத்து போடு.
வடிவேலு : என்னது... இது மூவாயிரத்தி அம்பது போட்டிருக்க...

பார்த்திபன் : நாங்க கட்ட வேண்டிய.. சர்வீஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ் சேர்த்து என்டிரி போட்டிருக்கேன்.
வடிவேலு : தினிசான லஞ்சமா இருக்கு...? இன்கம் டாக்ஸ் சேர்த்து லஞ்சம்மா...?? ரோம்ப முன்னேறிடிங்க..

பார்த்திபன் : இப்போ கையெழுத்து போடுறீயா... இன்னும் ஏதாவது பைன்...
வடிவேலு : கைழுத்து போடுறேன்... ஆளா விடுடா சாமி...

பார்த்திபன் : ம்ம்... இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் முடிஞ்சது....
வடிவேலு : என்னது... லஞ்சம் வாங்குறதுக்கு டார்க்கெட்டா..???

Tuesday, May 6, 2008

ராம். கோபலனுக்காக இதோ தசாவதாரம் கதை !!



தசாவதாரம் கதை படத்தை தடை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பாளர் ராம். கோபாலன் வழக்கு போட்டுள்ளார். அவருக்காக இந்த தசாவதாரம் கதையை வெளியிடுகிறேன்.

வயதை குறைத்து இளமையாக காட்டிக் கொள்வதில் கமலுக்கு நிகர் கமல் தான்.

12 ஆம் நூற்றாண்டில் இருந்து கதை துவங்குகிறது. குலோத்துங்க மன்னன் ( நெப்போலியன் ) போரில் தோல்வியுற்ற விரக்தியில் தன் நகரத்தில் இருக்கும் பெருமாள் சிலையை கடலில் தூக்கி ஏறிய சொல்கிறார். கோயிலில் பணி புறியும் கமல் இதை எதிர்க்கிறார். அதனால், அவரையும் சேர்த்து பெருமாள் விக்கிரகத்தை கடலில் எறிகிறார்கள்.

இப்போது கதை 12ஆம் நுற்றாண்டில் இருந்து 21ஆம் நூற்றாண்டுக்கு நகர்கிறது. அமெரிக்க சி.ஐ.ஏ ஏஜேன்டுக்கள் மல்லிகா உட்பட கடலில் விழுந்த பெருமாள் விக்கிரகத்தை தேடி இந்தியா வருகிறார்கள். காரணம், அந்த விக்கிரகத்தில் விஞ்ஞானப் பூர்வமான சக்திகள் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அங்கு பணி புறியும் விஞ்ஞானி கமல் சி.ஐ.ஏ எஜேன்டுக்கு தெரியாமல் விக்கிரகத்தை காப்பற்ற இந்தியா வருக்கிறார். அசின் அவருக்கு உதவியாக இருக்கிறார். பாட்டி கமல் பல நூற்றாண்டுக்கள் முன் நடந்த சம்பவந்தை கூறி விஞ்ஞானி கமலுக்கு உதவி செய்து, பெருமாள் விக்கிரகத்தை இந்தியாவை விட்டு தூக்கி செல்லாமல் காப்பற்றுவது தான் மீது கதை. இதில் அமெரிக்க அதிபர் வேடத்தில் வருவதும் கமல் தான்.

கதையை உறுதி செய்துக் கொள்ள திரைப்படத்தை பார்க்கவும். :)

படம் பார்க்காமல் சர்ச்சை செய்து பெயர் வாங்வதில் அரசியல்வாதிகளுக்கு அடுத்து, ஆன்மீகவாதிகளும் இறங்கிவிட்டனர்.

Monday, April 21, 2008

வடிவேல் கம்ப்யூட்டரின் கதை

( இன்று உலகம் முழுக்க கணினியின் ஆக்கிரமிப்பு தான் அதிகம். பல மென்பொருள் நிறுவனங்கள் வளர்ந்த நிலையில் ஒரு கணினியின் புலம்பலே இந்த கதை.)

" நம்மல இப்படி அஸ்ஸம்பில் பண்ணுறத பார்த்தா... யாரோ புது டெவலபர் வாறான் போலிருக்கு..... இவனாவது நல்ல கோடிங் அடிக்கிறானா பார்ப்போம்...."

அந்த நிறுவனத்தில் புதிதாக சேர்ந்த டெவலபரை அந்த குழுவில் இருக்கும் அனைவருக்கும் அறிமுகம் செய்து வைக்கிறார்கள். ஒவ்வொருவரின் அறிமுகங்கள் முடிந்தவுடன் கம்ப்யூட்டர் முன் அமர்கிறான்.

"வந்துடாய்யா.... வந்துடான்... இவ்வளவு நாள நம்பல ஜாலியா விட்டாங்க... இப்போ ஒரு டெவலபர போட்டு நம்மல வேல செய்ய வைக்கிறாங்க போலிருக்கு... இவன பார்த்தா அஞ்சு வருஷமாவது எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும்னு நினைக்கிறேன்... முதல்ல என்ன செய்ய போறானு பார்ப்போம்"

புது டெவலபர் தன் மெயில் பாக்சை திறந்தான்.

"அடபாவி நீயுமாட... இதுக்கு முன்னாடி இருந்தவன் தான் மத்தவங்களுக்கு பார்வட் மெயில் அனுப்புசிக்கிட்டு இருந்தான்... இவனும் மெயில் பாக்சை திறக்குறான்... சரி முதல் நாள்ல வேல இருக்காது போலிருக்கு... என்ன தான் மெயில் அடிக்கிறான்னு பார்ப்போம்..

டியர் செல்லம்,

இன்னைக்கு ஆபிச்ல ஜாயின் பண்ணிட்டேன். இது தான் என் அபிசியல் மெயில் ஐ.டி. : ABC@COMPANY.com

ஐ லவ் யூ செல்லம்..

வித் லவ்,
ABC

"இவரு தமிழ இங்கிலீஷ்ல தான் டைப் பண்ணுவாரு போலிருக்கு... தமிழ் பான்ட் நெட்டுல டௌன் லோட் பண்ணி தமிழ டைப் பண்ணு... இல்ல இங்கிலீஷ்ல டைப் பண்ணு... ஏன்ட ரெண்டும் சேர்த்து என்ன கொழப்புறீங்க.... பாரு ரெட் லைன் போட்டு ஸ்பெல்ச்செக் மிஸ்டேக்னு (Spell check) காட்ட வேண்டியதா இருக்கு...."

அந்த மெயிலில் சப்ஜெக்ட் (Subject) போட்டு பி.சி.சியில் ஐந்து பெண்களின் மெயில் ஐ.டி. போட்டு அனுப்பினான்.

"கொய்யால... ஒரே நேரத்தில அஞ்சு பொண்ணுங்ககிட்ட ஐ லவ் யூ சொல்லுறானே... அஞ்சு வருஷம் எக்ஸ்பிரியன்ஸ் இருக்கும் பார்த்தா... அஞ்சு பொண்ணுங்கல மடக்குன எக்ஸ்பிரியன்ஸ் இருக்குறவன இருக்கானே.."


"என்னடா எதோ ரிப்லை மெயில் வர மாதிரி இருக்கு.... அ ஆ... அஞ்சு பொண்ணுங்களும் ரிப்லை அடிச்சிருக்காங்க... எப்போ இவன் மெயில் அடிப்பான்... எப்பொ ரிப்லை அனுப்பனும் இருந்திருக்காங்கையா..."

ரிப்லை மெயிலில்

ஐ லவ் யூ ட செல்லம்
ஆல் தி பெஸ்ட் செல்லம்
பெஸ்ட் ஆப் லக் செல்லம்

" அடப்பாவிகளா..... அந்த பொண்ணுங்களும் செல்லம் போட்டு அனுப்பிச்சிருக்காங்க்டா.... அவ எத்தனை பேருக்கு பி.சி.சி(BCC) போட்டு அனுப்புச்சிருக்காளோ யாருக்கு தெரியும்"

"சரி விடு... மெயில் பாக்ஸ் க்ளோஸ் பண்ணிட்டான்... இனிமே வேல பார்ப்பானு நினைக்கிறேன்"

"இன்டர்நெட் எக்ஸ்போலர் ஓபன் பண்ணி ஏதோ வெப் சைட் அடிக்கிற மாதிரி தெரியுது..."

"அட நாதாரிபயலே.... யாஹூ மெசேஜர் டௌன்லோட் பண்ணுறான்யா... ஆபிஸ் விட்டு போற வரைக்கும் யாஹூ மெசேஜர்ல கடலைய போடுவானே..."

"டேய்... நாலு வின்டோ ஓபன் பண்ணி கடலைய போடுரான்னே... யாரும்மே இவன கேட்க மாட்டிங்களா... ஒரு மெசேஜ் டைப் பண்ணி... நாலு வின்டோவிலும் காபி அன்ட் பேஸ்ட் ( copy & paste ) பண்ணுறானே.... கொஞ்சமாவது வேலைய பாருங்கடா... ஐய்யோ என்னால வாய திறந்து சொல்லக்கூட முடியலியே..."

"எனக்கு மட்டும் வாய் இருந்தா உங்க ப்ராஜக்ட் மேனேஜர் கிட்ட போட்டு கொடுத்திருப்பேன்.. நீங்க வேலையா பண்ணுறீங்க..."

அந்த டெவலபர் எழுந்து சென்று மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்தான்.

"எங்கடா போய்ட்டு வர... காபி மிஷின்ல காபி எடுத்திட்டு வருயாடா... ஓசி காபினா ஒரு நாளைக்கு நாலு வாட்டி குடிப்பிங்களே...

காபிக்கு, லன்சுக்கு, ரெஸ்ட்ரூமுக்கு தவிர வேற எதுக்கும் எழுந்திருக்க மாட்டான் போலிருக்கு.."

மீண்டும் எழுந்து பக்கத்து க்யூப் (cube) யில் தலையை விட்டு பேசிக்கொண்டு இருந்தான்.

"டேய் கடவுளுக்கே அடுக்காதுடா... பக்கத்து க்யூபில இருக்குறவ வேற ப்ராஜக்ட்டுட...உன் ப்ராஜக்ட பத்தி அவளுக்கு எப்படி தெரியும்... சந்தேகம் கேக்குற சாக்குல கடலைய போடுறானே... டாய்.. உன் ப்ராஜக்ட் டீம்ல இருக்குறவங்க கிட்ட சந்தேகம் கேளுடா...."
" நல்ல வேளை... உன் டீம்ல பொண்ணுங்க இல்ல.... வேலை சமயத்துலக் கூட கடலை போட்டிருப்பான்..."

மாலை 6 மணியானதும்.. அவன் செல்போனில் அலாரம் ஒலித்தது.

"எதுக்குடா... அலாரம் வச்சிருக்க.. ஆறு மணிக்கு மேல தான் வேல செய்வியா?..."

"அடப்பாவி... என்ன CTTL+ALT+DEL போட்டு எங்கட போறே..."

"ஆ...வீட்டுக்கு போய்டான்யா.. என்ன ஷட் டௌன் (shut down) பண்ணிட்டு போக கூடாதா... அது என்ன லாக் பண்ணிட்டு போறது... கரன்ட் பில் உங்க அப்பன் வந்து கட்டுவானா... கரன்ட ஏன்டா வேஸ்ட் பண்ணுறீங்க..."

" இவங்க மட்டும் ராத்திரியானா நல்லா தூங்குறாங்க... என்ன லாக் பண்ணி ராத்திரி தூங்க விடாம வேலை செய்ய வைக்கறாங்க... எத்தன வைரஸ் வந்து என்ன அட்டாக் (attack) பண்ணப்போதோ தெரியலையே..."

"அட... இது வேற.. எனக்கு சைடுல வந்து தொல்ல கொடுக்குது... இந்த வைரஸ் பேரு கூட எனக்கு தெரியுல... உன் பேரு என்ன...?"

"என் பேரு தெரிஞ்சு என்ன பண்ண போற.. ஸ்கேன் பண்ணப்போறியா..."

"அது இல்லப்பா.... சும்மா தெரிஞ்சுக்க கேட்டேன்"

"உன் நெட்வோர்க் ஆளுவந்து கண்டு பிடிப்பான்... அப்ப தெரிஞ்சுக்கோ..."

"இந்த வைரஸ்...யாருக்கோ சிக்னல் கொடுக்குற மாதிரி தெரியுது..."

" மச்சி... நான் பி2 வைரஸ் பேசுறேன்... இங்க அன்டி வைரஸ் சாப்ட்வேர் இல்லாத கம்ப்யூட்டர் இருக்கு.. நீ ப்ரியா இருந்தா அவன ஆட்டாக் பண்ணிட்டு போ..."

" க்யூல... வந்து அட்டாக் பண்ணுறாங்களே... ஒன்னு, இரண்டு, மூன்னு..."

" என்ன எவ்வளவு வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் அடிவாங்குற மாதிரி அப்படியே எண்ணிக்கிட்டு இருக்குற..."

"போறவன் வந்தவன் எல்லாம் வைரஸ் ப்ரொகிராமுல ரூம் போட்டு அட்டாக் பண்ணுறீங்க... ஒரு கணக்கு வச்சிக்க வேண்டாமா..."

"எத்தனை வைரஸ் வந்து அட்டாக் பண்ணாளும் தாங்குதே... ரொம்ப நல்ல கம்ப்யூட்டர்டா.." என்று ஒரு வைரஸ் சொன்னது.

அடுத்த நாள் காலையில்....

கடவுச்சொல் ( Password) அடித்து புது டெவலபர் தன் வேலையை தொடங்குகிறான்.

"வந்துட்டான்யா... வந்துட்டான்... அது என்னடா பாஸ்வாட் செல்லம் வச்சிருக்க.... மனசுல பிரகாஷ் ராஜ் நினைப்பு... எனக்கு மட்டும் கை கால் இருந்துச்சு உன்ன கில்லி மாதிரி அடிச்சிருப்பேன்..."

"மறு படியும் மெயில் பாக்ஸ் ஓபன் பண்ணுறானே... யாருய்யா இவனோட ப்ராஜக்ட் மேனேஜர் இவன கேள்வியே கேட்க மாட்டீங்களா..."

"ஒருத்தன் வந்து அவன் கிட்ட பேசுறான்.. என்ன தான் பேசுறானு கேட்போம்..."

இந்த இருவரும் பேசி முடிந்ததும் கணினி தன் புலம்பலை தொடர்ந்தது.

"அடபாவி... நீ தான் ப்ராஜக்ட் மேனேஜரா... அது தான் உன் கிட்ட வந்து ஸ்டேடஸ் ரிப்போட் சொல்லுறாங்களா... ஐய்யோ.. இவன் எக்ஸல் ஷீட் தவிர எதையும் ஓபன் பண்ணி வேல செய்ய மாட்டானே... தினமும் இப்படி தான் வேலை செய்யாம கடலை போடுறத நான் பார்க்கணுமே... அந்த கடவுள் தான் என்ன காப்பாத்தணும்..."

"என்னால முடியாது... நான் ஹாங் ஆக போரேன்... யாரு என்ன வேணும்னாலும் பண்ணிக்கோங்க..."

அந்த ப்ராஜக்ட் மேனேஜர் கம்ப்யூட்டரை ரிஸ்டார்ட் செய்கிறான்.

"அப்பா... ஒரு நிமிஷம் நமக்கு ரெஸ்ட் கொடுத்திட்டான்.... சந்தோஷம்...."

தன் புலம்பலை ஒரு நிமிடம் நிறுத்திக் கொண்டது. மீண்டும் தன் புலம்பலை தொடரும்........

Wednesday, April 2, 2008

ஜெயா நியூஸ் vs சன் நியூஸ்

JAYA NEWS MANAGER : என்னப்பா.... நியூஸ் படிக்க நம்ம ஆளு எங்க...?
ASST.. MANAGER : அவரு நேத்து resign பண்ணி வேற டி.வியில சேர்ந்துட்டாரு...

JAYA NEWS MANAGER : அட பாவி... இப்போ அவன் எந்த டி.வியில இருக்கான்..?
ASST.. : மெகா டி.வி ஆபர் இருந்தது... அத வச்சு சன் டி.வி ஆபர் வாங்கி... இப்போ ராஜ் டி.வியில நியூஸ் படிக்கிறான்...

JAYA NEWS MANAGER : : வர..வர... டி.வி க்கூட ஐ.டி கம்பெனி மாதிரி ஆயிடுச்சு... சரி..அத விடு... இப்போ நமக்கு நியூஸ் படிக்க போற ஆளு யாரு...?
ASST.. : ஒரு புது ஆளு... நல்ல தமிழ் பேசுவான்...

JAYA NEWS MANAGER : அந்த பையன கூப்பிடு....
ASST.. : தம்பி இங்க வாப்பா... இவ பேரு ரவி....
ரவி : வணக்கம்...

JAYA NEWS MANAGER : இப்போ வணக்கம் வை... 2 வருஷம் கலிச்சு சன் டி.வி, கலைஞர் டி.விக்கு போய் எங்களுக்கே ஆப்பு வை...
ரவி : ???????

JAYA NEWS MANAGER : இந்த தம்பி கிட்ட அப்புறம் பேசுறேன்... இன்னைக்கு DMK Government என்ன பன்னாங்க..?
ASST.. MANAGER. : 1. கலைஞர் ரூ.2 அரிசி திட்டம்.
2. இலவச கலர் டி.வி கொடுத்தாங்க.
3. ராமர் பாலம் ஆலோசனை.
4. புதுசா இரண்டு பாலம் கட்டுறாங்க...

JAYA NEWS MANAGER : ரவி தம்பி... நான் சொல்லுறத அப்படியே எழுது...
முதல....DMK Government கொடுத்த அரிசியில பயங்கர கல்லு...
ரவி : ஒரு சந்தேகம்...
JAYA NEWS MANAGER : வந்த அன்னைக்கேவா...சொல்லு..
ரவி : இப்போ தான் சார் உங்களுக்கு நியூஸ் சொன்னாரு...அதுக்குள்ள அப்படி அரிசியில கல்லு சொல்லுறீங்க...
JAYA NEWS MANAGER : இங்க பாருங்க தம்பி... DMK Government பண்ணரத அப்படியே சொன்னா கலைஞர் டி.விக்கும், நமக்கும் என்ன வித்தியாசம். நான் சொல்லுற அப்படியே எழுது. ASST..! அடுத்த நியூஸ் மறந்திட்டேன்...

ASST.. MANAGER. : இலவச கலர் டி.வி கொடுத்தாங்க.
JAYA NEWS MANAGER : ஆ... அந்த டி.வி எல்லாம் Blackல 1000 ரூபாய்க்கு வித்தாங்க சொல்லு...
ASST.. MANAGER.: இதுக்கு Evidence காட்டினா நல்லா இருக்கும்..
JAYA NEWS MANAGER : அப்படியா... இரண்டு பேரு டி.விய வித்ததுக்கு போலீஸ் அரஸ்ட் பண்ணதா நியூஸ் சொல்லு... யாராவது இரண்டு பேர புடிச்சு கவர் பண்ணு...நாளைக்கு அவங்கள ஜாமின்ல எடுத்துடுவோம். அடுத்த நியூஸ்....

ASST.. MANAGER : ராமர் பாலம் ஆலோசனை.
JAYA NEWS MANAGER : அ த BJP பாத்துப்பாங்க... இருந்தாலும் நம்ம பங்குக்கு... எதாவச்சு சொல்லுங்க... அடுத்து...
ASST.. MANAGER : புதுசா இரண்டு பாலம் கட்டுறாங்க...
JAYA NEWS MANAGER : இந்த நியூஸ பெரிசா கவர் பண்ணுங்க...
ASST.. MANAGER : எப்படி சார்...?
JAYA NEWS MANAGER : பாலம் கட்டுறதுக்கு இரண்டு கோயில கவர்மென்ட் இடிச்சாங்க சொல்லு... நாலு பொம்மளைங்கள வாய்லையும், வயுத்துலையும் அடிச்சு கத்துற மாதிரி நம்ம கெமிராமென்ன கவர் பண்ணி வர சொல்லு...
ASST.. : கோயிலுக்கு எங்க போறது...
JAYA NEWS MANAGER : AVM Studio வுல set பொட்டு இடிங்க.... ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிப்பு நிஜம்மா இருக்கனும்... Jaya TV Set-upனு தெரிய கூடாது...
ASST.. : ஒ.கே சார்...
JAYA NEWS MANAGER : தம்பி ரவி... நான் சொன்னத நோட் பண்ணியா...
ரவி : எஸ் சார்...
JAYA NEWS MANAGER : படிங்க ...
ரவி : கலைஞர் அவர்கள் இரண்டு ரூபாய் அரிசியில் மக்கள் கல்லிருப்பதா அதிருப்தி தெரிவித்துள்ளனர்....
JAYA NEWS MANAGER : தப்பு தப்பா படிகாதிங்க...
ரவி : கரெக்டா தான் சார் படிச்சேன்...
JAYA NEWS MANAGER : நியூஸ் கரெக்ட் தான்... சொல்லும் போது கலைஞர் மரியாதையா சொல்ல கூடாது... அத நீங்க சன் டி.வி, கலைஞர் டி.வியில படிக்கும் போது சொல்லுங்க... Jaya T.V ல சொல்லுங் போது மைனாரிட்டி தி.மு.க ஆட்சினு தான் சொல்லனும்.
ரவி : சரி சார்....

JAYA NEWS MANAGER : ஒரு பன்ட்ச் டைலாக்....
" I.T எடுத்தா... சன் கம்பனியில... JAVA தான் முக்கியம் !
T.V எடுத்துக்கிட்டா... சன் டி.விக்கு... JAYA தான் எதிரியா இருக்கும் !" -இத ஞாபகம் வச்சி படிங்க....

ரவி : சரிங்க....

Monday, March 24, 2008

மறுக்கப்பட்ட மனிதநேயம்

உலகில் இரண்டாவது இடத்தில் நம் மக்கள் தொகை. உலக மக்கள் தொகையில் ஆறில் ஒரு பங்கு கொடுத்தோம். நாட்டின் முன்னேற்றத்திற்கு என்ன கொடுத்தோம் ?

மனித எண்ணிக்கைகள் தான் அதிகமே தவிர, மனித நேயத்தில் இல்லை. இன்று வாகன விபத்துக்கள் நடப்பது மிக சகஜமான விஷயமாகிவிட்டது. அதிலும் விபத்தில் பெரும் பாலும் இறப்பது இளைஞர்கள். இரு சக்கர வாகனத்தில் விபத்தில் சிக்கி உயிருக்காக போராடும் போது அவனிடம் இருக்கும் செயின், பணம், பொருள் எல்லாம் திருட நினைக்கிறார்களே தவிர அவனை மருத்துவமனையில் சேர்த்து உதவ நினைப்பதில்லை. அப்படியெ மருத்துவமனையில் சேர்த்தலும் போலீஸ், கோர்ட் எல்லாம் செல்ல வேண்டுமே என்று அஞ்சுகின்றனர். உதவுவதற்கு அஞ்சுகின்றனர், திருடுவதற்கு அஞ்சுவதில்லை. இப்படி நம் நாட்டில் மனித நேயம் வளர்ந்துக் கொண்டு இருக்கிறது.

ஐந்து நிமிடம், பத்து நிமிடம் தாமதத்தில் எத்தனை உயிரை இழந்து இருக்கிறோம். பத்து நிமிடம் முன்னாடி வந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று மருத்துவர் கூறும் போது நாம் யாரை நோந்துக் கொள்வது.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பற்றி கவலை படமுடியாத அவசர உலகத்தில் இருக்கிறோம்.

ஹைவேயில் லாரியை வேகமாக ஓட்டி ஒரு மனிதர் மீது இடித்து விடுகிறான். சுற்றி எல்லோரும் வேடிக்கை பார்க்கிறார்களே தவிர மருத்துவமனையில் சேர்ப்பவர்கள் மிக குறைவானவர்கள் தன். அந்த வண்டி ஓட்டுனர் கூட அபராதம் மட்டும் கட்டிவிட்டு வெளiயே வந்துவிடுவான். இறந்தவர் குடும்பத்தை பற்றி யாரும் கவலைபடுவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை மதிக்காமல் தான் வண்டியை ஓட்டி செல்கிறான்.

மனிதர்களை பாதுகாக்கும் சட்டங்களை விட மான்களை பாதுகாக்கும் சட்டங்கள் சரியாகவே இயங்குகின்றன. காரணம், மானின் தோளுக்கு மதிப்பு உண்டு. ஆனால் மனிதனின் தோளுக்கும், உயிருக்கும் மதிப்பே இல்லாமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

மிஞ்சி இருக்கும் மனி நேயம்
இப்பொது பிச்சையாக மாறும் நேரம்

- என்று கருதி கை, கால் இருப்பவர்கள் பிச்சை எடுக்கிறார்கள். பேரூந்து நிலையம், பொது இடம் போன்ற இடத்தில் நின்று பேசுபவர்களiடம் அம்மா தாயே.. குழந்தைக்கு பசிக்குதுமா... தர்ம பிரபுவே... இப்படி எத்தனை வார்த்தைகளை சேகரித்து வைத்து இருக்கும் மனிதநேயத்தை காசாக மாற்றுவது தான் இவர்களது முதல் வேலை. நம் நாட்டில மனிதநேயத்தை காசாக மாற்ற பல வித்தைகளை கற்றவர்கள் இருக்கிறார்கள். ஆனால் மனிதநேயத்தை வளர்க்கத் தான் யாருமில்லை.

உதவி செய்பவர்களை ஏமாற்றிக் கொண்டு இருப்பதால் தான் மனித நேயங்கள் செத்துக் கொண்டு இருக்கின்றன. உதவி செய்வது போல் ஏமாற்றுபவர்களை நாம் வாழ்வில் தினமும் பார்க்கிறோம். ஆனால் இரக்கப்பட்டு உதவி செய்ய செல்லும் போது நம்மை ஏமாற்றும் அனுபவமே மிகவும் கசப்பாக இருக்கிறது. இது போன்ற சில நிகழ்ச்சிகளால் நாம் மற்றவர்களுக்கு உதவி செய்ய தயங்குகிறோம். நம் நாட்டில் பாதி மனிதநேயங்கள் செத்ததற்கு மிகப் பெரிய காரணம் உதவி செய்ய வந்தவர்களை ஏமாற்றி லாபம் அடைவது தான்.

மிக இக்கட்டான நேரத்தில் பணம் வேண்டும் என்று காலில் விழாத குறையாக விழுந்து கெஞ்சுவார்கள். பணம் கொடுத்த பிறகு அவர்களிடம் பணம் வாங்க நம்மை அலைக்கடிப்பார்கள். கடன் வாங்குவது அவமானம் என்று கருதிய காலம் சென்று பணம் கொடுத்தால் திரும்பி வருமோ என்ற அச்சம் தான் பெரும் பாலானவர்களுக்கு இருக்கிறது.

இன்று உதவி செய்யச் சென்றாலும் அதில் வரும் ஆபத்துகளை மனதில் வைத்தே செல்ல வேண்டிய காலத்தில் இருக்கிறோம். எந்த அச்சமும் இல்லாமல் மற்றவர்களுக்கு உதவும் மனிதநேயத்தை வளர விடுங்கள். இனியாவது மனிதனை மனிதனாய் வாழவிடுங்கள்.

Thursday, February 28, 2008

மிருக கதை - 2

ஒரு மாலை நேரத்தில் முயல் மும்முரமாக ஒன்றை எழுதிக் கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியில் வந்த நரி

நரி : என்ன செய்துக் கொண்டு இருக்கிறாய் ?

முயல் : தன் கண்டுபிடிப்பின் செய்முறை விளக்கத்தை எழுதிக்கிறேன்.

நரி : என்ன உன் கண்டுபிடிப்பு ?

முயல் : முயல் எப்படி நரியை சாப்பிடும் என்பதை பற்றியது.

நரி : நீ என்ன முட்டாளா ! யாராவது இதை நம்ப முடியுமா ?

முயல் : என்னுடன் வா ! நான் உனக்கு காட்டுகிறேன்.

நரியும், முயலும் ஒரு மரத்தின் பின்னால் சென்றது. சிறிது நேரம் கழித்து முயல் நரியின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. அதன் பின் தன் எழுதும் வேலையை செய்துக்கொண்டு இருந்த போது, அங்கு ஓனாய் முயலிடம் விசாரித்தது.

ஓனாய் : என்ன செய்கிறாய் ?

முயல் : முயல் எப்படி ஓனாய்யை சாப்பிடும் என்பதை பற்றி எழுதுகிறேன்

ஒனாய் : உனக்கு என்ன பைத்தியமா ? யாரும் நம்ப மாட்டார்கள்.

முயல் : என்னுடன் வா ! உனக்கு காட்டுகிறேன்.

ஓனாயும், முயலும் அதே மரத்தின் பின்னால் சென்றது. சற்று நேரம் கழித்து முயல் ஓனாயின் எழும்பைக் கொண்டு வெளியே வந்தது. இறுதியாக ஒரு கரடி முயலிடம் மற்றதை போல் அதே கேள்வியை கேட்டது.

முயல் அந்த கரடியை மரத்தின் பின் அழைத்து சென்றது. அங்கே, மரத்தின் பின் இருக்கும் சிங்கமிடம் கரடிக்கு அறிமுகம் செய்து வைக்கிறது.

செய்தி : நாம் நம்பும் படி வேலை செய்கிறோம் என்பதை விட நம் மேல் அதிகாரி பிடித்திருந்தால் தான் நாம் எந்த வேலையிலும் நிடிக்க முடியும்.

மிருக கதை - 1

சமிபத்தில் ஒரு மின்னஞ்சலில் வந்த ஆங்கில மிருக கதையை தமிழாக்கம் செய்துள்ளேன். இந்த கதையில் வந்த செய்தி மிகவும் நன்றாக இருந்தது.

அதிகாலை வேளை சூரியன் சுடும் நேரத்தில் ஒரு சிங்கம் தன் குகையில் உறங்கிக் கொண்டு இருக்கும் போது அந்த வழியாக நரி ஒன்று வந்துக்கொண்டு இருந்தது.

நரி : இப்போது நேரம் என்னவென்று தெரியுமா ? என் கை கடிகாரம் ஒட வில்லை.

சிங்கம் : என்னிடம் கொடு. உனக்காக நான் சரி செய்து தருகிறேன்

நரி : மிகவும் கஷ்டமான காரியம்... நகங்கள் கொண்ட கையில் செய்தால்... அந்த கடிகாரம் அழிந்துவிடும்

சிங்கம் : ஒன்றும் ஆகாது.... நான் சரி செய்வேன்

நரி : இது முட்டாள் தனமாக உள்ளது. நீண்ட நகங்கள் கொண்ட கையால் சரி செய்ய முடியாது.

"என்னால் சரி செய்ய முடியும்" என்று சொல்லி அந்த கடிகாரத்தை எடுத்துக் கொண்டு தன் குகைக்குள் நுழைந்தது. சற்று நேரத்தில் வேளியே வந்தது. நரிக்கு ஒரே அதிர்ச்சி. நரி மகிழ்ச்சியுடன் தன் கடிகாரத்தை வாங்கி சென்றது. சோம்பேரி சிங்கம் மீண்டும் தன் உறக்கத்தை தொடர்ந்தது. அப்போது ஒரு ஓனாய் சிங்கத்தின் குகைக்கு வந்தது.

ஓனாய் : இன்று உன் குகைக்குள் தொலைக்காட்சி பார்க்க வரலாமா ? என் தொலைக்காட்சிப் பேட்டி உடைந்து விட்டது.

சிங்கம் : என்னிடம் கொடு. நான் சரி செய்து தருகிறேன்

ஓனாய் : இதை நான் நம்புவேன் என்று நினைக்கிறாயா? எப்படி உன் நீண்ட நகங்கள் கொண்ட கையினால் சரி செய்வாய் ?

சிங்கம் : கவலை வேண்டாம். என்னால் முடியும்.

ஓனாய் தன் தொலைக்காட்சி பெட்டியை சிங்கத்திடம் கொடுத்தது. சிங்கம் அந்த தொலைக்காட்சி பெட்டியை தன் குகைக்குள் எடுத்து சென்றது. சற்று நேரத்தில் சரி செய்து தொலைக்காட்சி பெட்டியை ஓனாய்யிடம் கொடுத்தது. ஓனாய் மிகழ்ச்சியுடன் வாங்கி தன் இருப்பிடத்தை நோக்கி நடந்தது.

வெளியே தெரியாத காட்சி : சிங்கத்தின் குகைக்குள் ஆறு முயல்கள் இருந்தன. ஆறு முயல்களும் மென்னையான கைகளையும், நல்ல அறிவு திறனும் இருப்பதால் அந்த பணியை செம்மையாக முடித்தன. சிங்கம் அவர்கள் செய்யும் வேலையை மேற்பார்வை மட்டுமே பார்த்தது.

செய்தி : நிர்வாகியர் தன் கீழ் வேலை செய்பவர்களால் பெயர் எடுக்கிறான்.

Tuesday, February 5, 2008

13.இருபதாம் நூற்றாண்டில் மில்டன்

காலம் யாரையும் விட்டு வைத்ததில்லை. மில்டன் மட்டும் இதில் விதி விளக்காக எப்படி இருப்பார். இங்கிலாந்து மக்களுக்காக புரட்சி கவிதைகளை எழுதியவர். வாழ்க்கையை ஒரு போராட்டமாக வாழ்ந்தவர். அனைத்தும் முற்றுப்புளி போல் அவர் மரணம் வந்தது. நவம்பர் 8, 1674 அன்று தன்னுடிய அறுபத்தியைந்தாவது வயதில் லண்டனில் இறந்தார்.

சேக்ஸ்பியர் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்ட மில்டன் தன் எழுத்துக்களாலும் பலரை கவர்ந்திருக்கிறார். மில்டனின் எழுத்துக்கள் பல கவிஞர்கள் உருவாக காரணமாக இருந்தது என்று கூட சொல்லலாம். அலெக்ஸாண்டர் போப், வில்லயம் பிலேக், வில்லியம் வொட்ஸ்வொர்த், ஜெப்ரி ஹில், ஜான் கீட்ஸ் இப்படி பல வரலாறு புகழ் பெற்ற கவிஞர்களுக்கு மில்டன் ஒரு வழி காட்டியாகவே திகழ்ந்தார்.

உடல் ஊனமுற்றவர்களுக்கும் மில்டன் என்று உத்வேகமாக இருந்திருக்கிறார். 1928ஆம் ஆண்டு மில்டன் பெயரில் கண், காது இல்லாதவர்களுக்காக் ஜான் மில்டன் அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டது. அதை தொடங்கியர் யார் தெரியுமா... ஹெல்லன் கெல்லர் !! ஆம். அவரை கூட நாம் பாட புத்தகத்தில் படித்திருப்போம். பிறவியில் கண் இல்லாமல், காது கேட்காமல் பிறந்தவர். அதனால், வாய் பேசாமல் கூட முடியாமல் ஊமையானார். ஹெல்லன் கெல்லருக்கும் உத்வேகமாய் இருந்தவர் ஜான் மில்டன் தான் !!

இன்று, பலர் சாத்தானை பற்றியும், சாத்தானை அழிப்பது பற்றியும் மாயா ஜால கதைகள் வந்துக் கொண்டு இருக்கிறாது. ‘Lord of the Rings’, ‘Harry Potter’ போன்ற கதைகளுக்கு 'Paradise Lost' நூல் மூலம் பிள்ளையார் சுழி போட்டவரும் நமது ஜான் மில்டன் தான்.

இன்று எல்லா ஆங்கில பாட புத்தங்களிலும் மில்டன் பாடல் இல்லாமல் இல்லை. 'On his blindness' பாடலை படிக்காத மாணவன் இருக்க முடியாது. அவரின் சோனட் (Sonnet) கவிதைகள் ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புத்தகத்திலும் இருக்கும். இன்றும் மேல்நிலைப்பட்டங்களுக்காக பலர் மில்டனின் கவிதைகளை ஆராய்ச்சி செய்கிறார்கள்.

இருபதாம் நூற்றாண்டில் மில்டன் பெருமையுடன் நினைத்து பார்க்கும் வேளையிலும் மில்டன் கவிதைகளை கடும் விமர்சனம் செய்யும் செய்திகளும் வந்துக் கொண்டு தான் இருக்கின்றன. யார் என்ன சொன்னாலும் இந்த கவிதை உலகில் மில்டன் என்றுமே ஒரு மைக்கல். அதை யாராலும் மறுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.

12.மில்டனின் மற்ற படைப்புகள்

Defensio pro Populo Anglicano -மில்டன் லத்தின் மொழியின் எழுதிய கவிதைகள். 1651ல் வெளியிடப்பட்டது. முதல் சார்லஸ் மன்னரின் மரண தண்டனை விதித்ததையும், அலிவர் க்ரம்வெல் பொது நல அரசை ஆதரித்தும் மில்டன் லத்தின் மொழியில் எழுதியிருந்தார்.

History of Britain- ஜாம் மில்டன் அவர்கள் இந்த படைப்பை 1670ல் எழுதினார். சிவில் யுத்ததின் நியாயங்களையும், சிவில் யுத்தம் நடத்திய வரலாறு குறித்தும் எழுயிருக்கிறார். இந்த நூலை எழுத மில்டன் 1649ல் தொடங்கியிருப்பார் என்று சொல்லப்படுகிறது. இந்த நூலில் முதல் நான்கு அத்தியாயங்களை 1649லே எழுதினார். பிறகு 1650ல் மேலும் இரண்டு அத்தியாயங்கள் எழுதினார். இருபது வருடங்கள் முன் இந்த நூலை எழுத தொடங்கியிருந்தாலும், இந்த நூலில் முதல் பதிப்பு 1670ல் தான் வெளி வந்தது.

Of True Religion - 1673ல் இந்த நூலை வெளியிட்டார். மதங்களை பற்றிய தன் கருத்துகளையும், மதம் பெயர் திருசபையில் குருமார்க்கள் செய்தும் கொடுமைகளை பற்றியும் இந்த நூலில் கூறியுள்ளார்.

Samson Agonistes(1671) - பிரடைஸ் ரீகைன் வெளிவந்த அதே ஆண்டில் வெளிவந்தது. மில்டன் பொதுவாக நாடக கதைகளை பற்றி எழுதியதில்லை. ஆனால், இந்த முழுக்க முழுக்க நாடக கதையை தன் பாடல்கள் மூலம் எழுதியிருக்கிறார். இந்த கதையில் வரும் சாம்சன் ஒரு குருடன். கண் பார்வை இழந்து வேதனை இருந்த மில்டன் தன் சோகத்தை சாம்சன் கதாப்பாத்திரத்தில் கூறியிருக்கிறார். அதனாலையே சாம்சன் நாடக்கதை படிக்கும் போது நம்முக்கூட கண்ணீர் வரும் அளவிற்கு சோகத்தை கொட்டி இருப்பார் மில்டன். பிரடைஸ் ரீகைன் எழுதும் போதே இந்த நூலை எழுதினாலும், பிரடைஸ் ரீகைன் வெளி வந்த பிறகே சாம்சன் நூலை வெளியிட்டார்.

L'Allegro - 1631ல் எழுதியது. மில்டன் முழுக்க முழுக்க மகிழ்ச்சியான உற்சாகம் கொண்ட பாடல்களை எழுதியிருந்தார்.'L'Allegro ' லத்தின் மொழியில் மகிழ்ச்சியான மனிதன் என்பது பொருள்.

Il Penseroso - இது 1631ல் மில்டன் எழுதியது தான். 'L'Allegro ' நூலுக்கு எதிர்மதரையாக எழுதியுள்ளார்.

Tetrachordon - மில்டன் 1645ல் எழுதியது. Areopagitica பிறகு மில்டன் எழுதிய படைப்பு.

Colasterion - ' Tetrachordon ' நூலுடன் இந்த படைப்பை வெளியிட்டார். இரண்டு படைப்புகளும் விவாகரத்து பற்றி மில்டன் எழுதியது.

மில்டனின் கவிதைகள் - மில்டன் பல சூநிலையில் எழுதிய கவிதைகளை தொகுப்பாக இந்த நூலை அன்ரூ மார்வல் 1673ல் வெளியிட்டார். இந்த தோக்குப்பில் மில்டன் எழுதிய லத்தின் மற்றும் ஆங்கில மொழியில் எழுதிய கவிதைகள் இரண்டு தொகுக்க பட்டுள்ளது.கோமஸ், லிசிடஸ் நூலில் இருந்த சில கவிதைகள் இதைல் இடம் பெற்றன.

11. 'உதவியாளர்' அன்ரூ மார்வல்

மில்டன் வாழ்க்கை தொடக்கத்தின் அத்தியாயங்களில் பல பக்கங்கள் வேறும் கருப்பு பக்கங்களாகவே இருந்தன. முதல் திருமணத்தில் வந்த கசப்பு, இரண்டு மனைவிகள் இழப்பு, 'பிரடைஸ் லாஸ்ட்' நூலின் எதிர்ப்பு, கண் பார்வை இழந்தது - இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம்.தன் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போகுமோ என்று இருந்தவரு அன்பு காட்டியவர் அவரது மூன்றாவது மனைவி எலிசபத் மின்ஷூல். ஆனால், குருடனாய் இருந்த மில்டனுக்கு எழுத உதவியது அவரது மனைவி இல்லை !!

மில்டன் பிறக்கும் நல்ல உடல் நிலையில் தான் பிறந்தார். இடையில் வந்த உடல் நல குறைவால் தன் கண் பார்வை இழத்தவர் அதிகம் கவலை பட்டது தன் எழுத்து பணியை பற்றியது தான். பிறவி குருடராக இல்லாதவர் எப்படி எவ்வளவு படைப்பு படைக்க முடியும் என்ற வியப்பு வருவது சரி தான். அந்த வியப்புக்கு காரணமாய் இருந்தவர் அன்ரூ மார்வெல் என்ற கவிஞர். ஜான் மில்டன் உணர்வுகளை தன்னுள் வாங்கிக் கொண்டு, அவர் சொல்வதை எழுதுவார். அன்ரூ மார்வல் மில்டனுக்கு துணையாக உதவியதால் கண்ணில்லாதது அவருக்கு ஒரு குறையாக தெரியவில்லை. ஜான் மில்டனை பாராட்டும் போது அன்ரூ மார்வலை பாராட்டாமல் இருக்க முடியாது.

அன்ரூ மார்வல் மார்ச் 31, 1621 ஆ ண்டு பிறந்தார். ஜான் மில்டனிடம் வந்து சேர்ந்த முதல் உதவியாளர் அன்ரூ மார்வல் தான். பதினெடாவது வயதிலே கேம்பிரிட்ஜ்யில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றவர். சிறுகாலத்திலே உலகத்தின் பெரும் பகுதியை பார்த்தவர். நான்கு மொழிகளை கற்றவர். மில்டனால் அதிகம் ஏர்க்கப்பட்டவர்.

மில்டன் முழுமையாக கண் இஅழந்த நிலையில், 1657ல் மார்வல் மில்டனிடம் உதவியாளராக சேர்ந்தார். மாதம் 200 பௌன்ட் சம்பளம். மில்டன் ஒலிவர் கிரோம்வெல் சபையில் லத்தின் செயலாளராக இருந்த போது மில்டனுக்கு மார்வல் மிகவும் உதவியாக இருந்துள்ளார்.அதன் பின் 1660ல் மீண்டும் இரண்டாம் சார்லஸ் மன்னராக வந்த போது மில்டனுக்கு பக்க பலமாகவும் இருந்தார். சார்லஸ் மன்னராக வந்த பிறகு மில்டன் சிறையில் அடைததோடு இல்லாமல் பல படைப்புகள் மக்கள் முன் எறிக்க உத்தரவிட்டார். அன்ரூ மார்வல் பேசிய பிறகு இரண்டு நூல்கள் (ஏகொன்க்லஸ்டேஸ் (Eikonklastes) மற்றும் டிபேன்சியோ(Defensio))மட்டும் எரிக்கப்பட்டது. மில்டனும் தண்டனையில்லாமல் விடுதலையானார். அதுமட்டுமில்லாமல், 'பிரடைஸ் லாஸ்ட்' இரண்டாம் பதிப்பில் வெளி வர அதிகம் உதவியவர் அன்ரூ மார்வல்.
அன்ரூ மார்வலும் ஒரு கவிஞர் தான். தன் கற்பனையை கலக்காமல் ஜான் மில்டன் சொல்வதை அப்படியே எழுதுவார். இந்த பணியை சாதான ஒரு எழுத்தாளர் செய்யலாம். ஆனால், எழுதும் போது கவிஞர்களுக்கு என்று சொந்த கற்பனைகள் வரும். தன்க்கென்று சொந்த கற்பனைகளை மறந்து ஜான் மில்டனின் கண்ணாகவும், எழுத்துக்கோளாகவும் இருந்தவர் அன்ரூ மார்வல்.

10. மில்டன் ஒரு நாத்திகனா ?

நாம் முன்பே பார்த்தது போல் புராட்டஸ்டண்ட் மக்கள் கத்தோல்க் கிறித்துவ மதத்திற்கு மாற ம றுத்தவர்களை ப டுகொலை செய்ததை மில்டன் எதிர்த்தார். அதனால், மில்டன் மன்னராட்சியை எதிர்த்தும், கத்தோலிக் மத குருக்களை எதிர்த்தும் எழுதினார். அ தனால், பலர் மில்டன் கடவுள் நம்பிக்கையற்ற பழுத்த நாத்திகவாதி என்றே கருதினர்.

மில்டன் நாத்திகன் என்று உறுதி செய்தும் வகையில் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலும் அமைந்தது. சாத்தான் மனிதனை வெல்வதும், சாத்தான் கடவுளை எதிர்த்து புடட்சி செய்வதும் போன்ற நூலில் வரும் கட்டங்கள் மில்டன் ஒரு நாத்திகன் என்ற வாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் இருந்தது.

பொய்யான குருமார்க்கர்களை தன் எழுத்து மூலம் மிகவும் சாட்டியவர் மில்டன். பொய்யான குருமார்க்கர்கள் தங்கள் சுயநலத்திற்காக எதையும் செய்வார்கள் என்று உணர்ந்தவர். தங்கள் நலனுக்காக யார் காலிலும் விழ வருத்தப்பட மாட்டார்கள், அதே சமயம் யார் காலையும் வார அஞ்ச மாட்டார்கள் என்று மில்டன் கூறுவார். பொய்யான குருமார்க்கர்களை பலர் ஏமாற்றி ஆலத்திற்குள் நுழைந்தவர் என்று சாட்டினார். மில்டனின் ஆரம்ப காலப்பாடல்களில் பொய்யான குருமார்கர்களை சாட்டி பல பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படி சமய சீர்த்திருத்தம் செய்த மில்டன் பலர் நாத்திகன் என்று முத்திரை குத்தி அவரின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள். ஆனால், உண்மையில் மில்டன் நாத்திகன் இல்லை என்பது தான் உண்மை.

மில்டன் ஆரம்ப காலத்தில் ஆலய பாதரியாராக வர தான் விருப்பபட்டார். அதன் போக்கை வேறுத்து தன் கவனத்தை இலக்கியத்தில் திசை திருப்பினார். அது மட்டுமில்லாமல், இறுதிகாலத்தில் அவர் எழுதிய பாடல்கள் இறை நம்பிக்கை அடிப்படையாக கொண்டது.

எதற்கு எடுத்துக்காட்டாக மில்டன் எழுதிய 'கோமஸ்'(1634) என்ற நாடக நூலை சொல்லலாம். கோமஸ் என்ற மந்திரவாதி காட்டில் ஒரு பெண்ணின் பாடல் ஒலி கேட்டு அவளை மனைவியாக அடைய விரும்புகிறான். அதனால் அவளை கவர்ந்து செல்கிறான். அந்த பெண்ணை தேடி போகும் சகோதரர்கள் களைத்து போகிறார்கள். அப்பொது ஒரு தேவதை அந்த பெண்ணின் சகோதரர்கள் முன் தோன்றி அந்த மந்திரவாதியை எந்த ஆயுதங்களாலும் கொல்ல இயலாது என்கிறாள். அந்த மந்திரவாதி கயில் இருக்கும் மது கிண்ணத்தை உடைக்க வேண்டும் என்ற யோசனையை சொல்கிறாள். அந்த சகோதரர்களும் மந்திரகிண்ணத்தை உடைக்கிறார்கள். கோமஸ் பயந்து தப்பி ஓடுகிறான். ஆனால், மந்திரவலை பிணைந்து இருக்கும் சகோதரியை மீட்க முடியவில்லை. மீண்டும் அந்த தேவதை அவர்கள் முன் தோன்றி அந்த பெண்ணை மந்திர வலையில் இருந்து அவிழ்த்து விடுகிறாள். இது மில்டனின் இசை நாடக கதை. இந்த கதையில் மில்டன் கோமஸ் என்ற மந்திரவாதியை புனித ஆவியாக கருதப்படும் தேவதை வீழ்த்த உதவுவதை சொல்கிறார். இந்த நூலை படிப்பவர்கள் மில்டன் கடவுள் நம்பிக்கை உடையவர் என்று தான் சொல்வார்கள்.

'பிரடைஸ்ட் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தவர்கள் மில்டனின் 'பிரடைஸ்ட் ரீகைன்' வர வேற்றனர்.'பிரடைஸ்ட் ரீகைன்' காவியத்தில் மனித இனம் எப்படி சாத்தானை வென்று சொர்க்கத்திற்கு மீண்டும் செல்கிறது என்பதை விழக்குகிறார். 'பிரடைஸ்ட் ரீகைன்' காவியம் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' அளவிற்கு பெரிய நூல் இல்லை என்றாலும் 'பிரடைஸ்ட் ரீகைன்'மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலுக்கு இரண்டாம் பாகமாக இருந்தது.

ஆரம்பகாலத்தில் அவர் எழுதிய பாடல்களை நியாயம் படுத்துவது போல் இறுதிகாலத்தில் இறைப்பாடல்களை எழுதியுள்ளார் என்று பலர் கூறுவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் மில்டன் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. தனது லட்சியமான பாதரியார் ஆவதை துரந்தவர். ஆலய குருமார்க்கர்கள் மன்னருக்கு துணையாக இருந்தது மில்டனுக்கு பிடிக்கவில்லை.

மில்டன் ஆலய மூடநமிக்கைகளை எதிர்த்து பல பாடல்கள் எழுதினார். ஆனால், மதவெறியர்கள் மில்டனை நாத்திகராக பிரதிபலித்து அவர் எழுதிய பாடல்களை புறக்கணித்தனர்.

மில்டன் 'பிரடைஸ்ட் லாஸ்ட்' நூலில் எழுதிய பின்னனியை பலரும் சிந்திப்பதில்லை. அந்த நூலில் சாத்தான் கடவுளை பழிவாங்கும் வகையில் புரட்சி வேளை செய்வதாக ஜான் மில்டன் கூறியுள்ளார். கடவுளுக்கு பதிலாக சார்லஸ் மன்னரையும், சாத்தான் பதிலாக மக்களையும் மனதில் வைத்து தான் எழுதினார். இதை தெரிந்தும் இன்னும் சில பேர் மில்டன் ஒரு நாத்திகர் என்று தான் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.

கடவுளை எதிர்த்து பல பாகங்களாக எழுதி விட்டு 'பிரடைஸ் ரீகைன்' காவியம் மூலம் சரி செய்ய பார்க்கிறார் என்று ஒரு சிலர் கூறிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

மில்டன் பொய்யான குருமார்க்கர்களை எதிர்த்தார். மதங்களை எதிர்க்கவில்லை.குருட்டு தனமாக மதத்தை பின்பற்றுபவர்களை எதிர்த்தார். தெய்வத்தை பழித்து ஒரு போதும் எழுதவில்லை.

9. பிரடைஸ் லாஸ்ட் ( சொர்க்க நீக்கம் )

குடும்பத்தை பற்றி நடக்கும் பட்டி மன்றங்களில் பெரும்பாலிம் ஜான்மில்டனின் பிரடைஸ் லாஸ்ட் மற்றும் பிரடைஸ் ரீகைன் நூல் பெயர் அடிப்படும். ஒரு பட்டி மன்றத்தில் ஆண்களுக்கு ஆதரவாக பேசும் பேச்சாளர் " ஜான் மில்டன் மனைவி கூட வாழும் போது பிரடைஸ் லாஸ்ட் என்னும் உலக காவியத்த எழுதினாரு...அவர் மனைவிய விட்டு போனதும்.... பிரடைஸ் ரீகைன் இன்னொரு காப்பியத்த எழுதியிருக்காரு..." என்று பேசினார். இது போதுவாக நகைச்சுவைக்காக பட்டி மன்றத்தில் பேசுவார்கள். ஜான் மில்டன் அண்ணாதுரை அவர்கள் ஒர் இரவில் 'ஒர் இரவு' நூலை எழுதியது போல் 'பிரடைஸ் லாஸ்ட் ' காப்பியத்தை எழுதவில்லை. மில்டன் பிரடைஸ் லாஸ்ட் நூலை எழுத எத்தனையோ ஆண்டுகளை செலவிட்டார். பல ஆண்டுகள் எழுதி வெளியீட்ட நூலுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். ஆனால்,அதுவுமில்லை. அந்த காப்பியத்தை யாரும் வாங்க முன் வரவில்லை. அது மட்டுமில்லாமல் பலர் அந்த காப்பியத்தை வெளிவரக் கூடாது என்று தான் எதிர்த்தார்கள். மில்டனுக்கு பல மிரட்டல்களை சந்திக்க வேண்டியது இருந்தது.

உலகப் புகழ் பெற்ற 'பிரடைஸ் லாஸ்ட்' வெளிவந்து பதினோரு வருடங்களில் மூவாயிரம் பிரதிகள் மட்டுமே விற்கப்பட்டது. ஆனால், அதை பற்றி மில்டன் கவலைப்படவில்லை. எண்ணிக்கை குறைந்த போதிலும் தகுதி படைத்த வாசகர்கள் கிடைத்தை நினைத்து ச்ந்தோஷப்பட்டார். குறைவான பிரதிகள் விற்கப்படுவதை நினைத்து ஒரு நாள் கூட வருத்தப்பட்டதில்லை. வாசகர்களின் எண்ணிக்கைகளை விட அவர்களின் அறிவுத்திறமை தான் விரும்புவார்.

உலகப்புகழ் பெற்ற பிரடைஸ் லாஸ்ட் காவியம் ஏன் அதிகம் விற்கப்பட்டாமல் இருந்தது ? பலரும் எதிர்க்கும் அளவிற்கு அப்படி என்ன 'பிரடைஸ் லாஸ்ட்' காப்பியத்தில் என்ன எழுதினார் ?

'பிரடைஸ் லாஸ்ட்' முன்னுரையாக எழுதப்பட்ட வரிகள் பழைய கவிதை மரபினையை கைவிட்டதை கூறுகிறார். அது மட்டுமில்லாமல் எதுகை மோனையைத் தவிர்த்து செய்யுள் முறையில் இக்காவியத்தை எழுதியுள்ளார். இப்படி மில்டன் செய்திருப்பது ஆங்கில மொழிக்குப் புதியது.செய்யுள் வடிவமாக இருந்தாலும் படிப்பதற்கு எளிமையாக இல்லமல் மிகவும் கடினமாக இருக்கும்.

முதல் பதிப்பில் பத்து நூல்களாக 1667ல் வெளிவந்தது. அதன் பின் இரண்டாவது பதிப்பில் பன்னிரண்டு நூல்களாக 1674ஆம் ஆண்டு வெளிவந்தது.பிரடைஸ் லாஸ்ட் நூலில் முக்கிய கதாப்பாத்திரங்களாக லுசிபையர் என்னும் சாத்தானும், ஆதாம், ஏவாள் மற்றும் கடவுள் வருகிறார்கள்.

பலர் மில்டனின் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்த முக்கிய காரணம் அவர் சாத்தானை மையமாக வைத்து எழுதியிருந்தார். சாத்தானிடம் மனிதன் எப்படி வீழ்ச்சி அடைந்தான் என்பதை பன்னிரண்டு நூல்களாக 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தில் எழுதினார். சாத்தான் வெற்றி பெரும் கதையை யாராலும் எற்றுக் கொள்ள முடியவில்லை. மனிதனின் வீழ்ச்சிக்கு காரணமாய் இருந்த சாத்தனிடமிருந்து தன் கதையை தொடங்கிருக்கிறார் மில்டன். சாத்தான் கடவுளை எதிர்த்து புரட்சி செய்த காரணத்திற்காக விண்ணுலகிலிருந்து விரட்டப்படுகிறான். தனக்கு உதவியாய் இருந்த தேவர்களும் நரகத்தில் தள்ளப்படுகிறார்கள். சாத்தானுக்கு அடுத்தப்படியாக இருக்கும் பெயல்செபு என்பவனுடன் கடவுளை வீழ்த்த சாத்தான் ஆலோசனை நடத்தினான். தன்னுடன் இருக்கும் வீழ்ந்து கிடப்பவர்களிடம் புதிய விண்ணுலகத்தை வெற்றி பெற ஊக்கப்படுத்துகிறான். கடவுளை வெற்றிப் பெற ஆலோசனை நடத்த மண்டபம் கட்டுகிறார்கள். இது எல்லாம் 'பிரடைஸ் லாஸ்ட்' வரும் முதல் நூலின் சுருக்கம்.

இரண்டாவது நூலில் கட்டப்பட்ட மண்டபத்தில் நடந்த ஆலோசனைகளை பற்றி விவரிக்கிறார். அந்த ஆலோசனையில் கடவுளை வெல்ல இன்னொரு யுத்தத்தை பற்றியும், கடவுள் உருவாக்க போகும் இன்னோரு உலகத்தை பற்றியும் பேசினார்கள். புதிய உலகம் கடவுள் உருவாக்கும் செய்தியை உறுதி செய்து கொள்ள சாத்தான் புரப்படுகிறான். அது வரை நரத்தில் இருந்த சாத்தான் வெளியே வந்து புதிய உலகம் பார்க்க வருகிறான். சாத்தானுடன் இருந்த தேவர்களும் அவனை வழி அனுப்பி வைக்கிறார்கள்.

முன்றாவது நூலில் கடவுள் சாத்தான் வருவதை தன் தீர்க்க தரிசனத்தால் தெரிந்து கொள்கிறார். மனிதன் சாத்தானை வெல்ல ஆற்றல் இருந்தும் சாத்தான் மனித குலத்தை வெற்றி கொள்ள போவதை உணர்கிறார். மனிதன் வீழாமல் இருக்க வேண்டும் என்றால், அவன் குற்றம் புரியாமல் இருக்க வேண்டும். மனிதன் குற்றம் புரிந்தால் தண்டனையில் இருந்து தப்பிக்க முடியாது. ஆதனால், மனிதனுக்கான தண்டனை ஏற்றுக் கொள்ள கடவுள் தேவகுமாரணை அனுப்புகிறார்.

நான்காம் நூலில் சாத்தான் தேவன் உருவத்தில் புதிய உலகத்தை அடைகிறான். அங்கு வசிக்கும் ஆதாமுக்கும், ஏவாளுக்கும் அறிவுக்கனி உண்ண தடையிருப்பதை சாத்தான் தெரிந்து கொள்கிறான். ஏவாள் காதில் தீய உரைகள் நிகழ்த்தும் போது அங்கு இருந்த காவலாளிகளிடம் மாட்டிக் கொண்டு, இறுதியில் சாத்தான் அஞ்சி ஒடுவதாக முடிகிறாது.

ஐந்தாவது ஏவாள் தான் கண்ட கெட்ட கனவை ஆதாமிடம் கூறுவதும், அதற்கு ஆதாம் ஆறுதல் கூறுவதாக தொடங்குகிறது. மனிதனின் எதிரி மிக அருகில் தான் இருக்குறான் என்று சில தேவர்கள் ஆதாமுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். மனிதனை கடவுளிடம் இருந்து பிரித்து கடவுக்கு எதிராக தன் பக்கம் மனிதனை சேர்த்துக் கொள்ளும் தீய சக்தி பற்றி இங்கு விவரிக்கிறார்.

ஆறாவது நூலில் தேவர்கள் சாத்தானின் புரட்சியை பற்றி விளக்குவதில் தொடங்குகிறார். சாத்தான் எதிர்க்கும் போரில் தேவ குமாரர்கள் வெல்ல வேண்டும் என்று கடவுள் விரும்புவதாக கூறுகிறார். ஏழாவது நூலில் ஆதாமுக்கு உலகத்தை பற்றி தேவர்கள் கூறும் அறிவுரை தொடர்கிறது. ஆதாமுக்கு உலகத்தை பற்றி எழும் சந்தேகங்களை தேவர்கள் நிவர்த்தி செய்வதாக எட்டாவது நூல் அமைகிறது.

இவ்வளவு பெரிய காவியத்தில் திருப்புனையாக இருப்பது ஒன்பதாம் நூலில் அமைகிறது. சாத்தான் பாம்பு வடிவத்தில் ஏவாளுக்காக காத்திருக்கிறான். தோட்ட வேலைக்காக வந்த ஏவாளிடம் அவளை புகழ்ந்து பேசுகிறான். ஒரு பாம்பு பேசுவது ஏவாளுக்கு மிக பெரிய விஷயமாக இருந்தது. பாம்புக்கு எப்படி பேசும் திறன் வந்தது என்று ? ஏவாள் கேட்டாள். அதற்கு பாம்புருவில் இருந்த சாத்தான் தடை செய்யப்பட்ட அறிவுகனியை உண்டதால் பேச முடிந்தது என்று கூறுகிறார். மலைப்படைந்த ஏவாள் அந்த கனியை உண்ண ஆசைப்படுகிறாள். மனதில் இருந்த பயத்தால் அது வரை தொட தங்கிய ஏவாள், சாத்தானின் இனிமையான வார்த்தைகளின் தூண்டுதலில் பேரில் அந்த கனியை உண்டாள். அந்த கனியை உண்ட ஏவாள் ஆதாமுக்கும் கொண்டு செல்கிறாள். ஆதாம் அதிர்ச்சி அடைக்கிறான். எனினும் ஏவாள் மீது உள்ள காதலாலும், அவள் கட்டாய படுத்தியதாலும் ஆதாமும் அந்த கனியை உண்கிறான். அதன் பின் ஒருவருக்கு ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறார்கள்.

பத்தாவது நூலில் புதிய உலகிற்கு வந்த தேவர்கள் குற்றம் செய்த ஆதாமையும், ஏவாளையும் தண்டிக்கிறார்கள். இருவரையும் சொர்க்கத்தை விட்டு விரட்டியடிக்க உத்தரவிடுகின்றனர். கருணையை வேண்டி ஆதாமும், ஏவாளும் கடவுளை வேண்டினர். மனிதனை வென்ற சாத்தான் தன் வெற்றியை தன் கூட்டத்தினறிடம் கூறுகிறான். சாத்தான் கூட்டத்தினர் அவனை பாராட்டாமல் சாத்தானை திட்டினர். சற்று நேரத்தில் சாத்தான் உட்பட அந்த கூட்டத்தில் அனைவரும் பாம்பாக மாறினர்.

பதினொன்றாம் நூலில் ஏவா ளும் ஆதாமும் பிராத்தனை செய்ததில் கடவுள் கருணை புரிகிறார். இருவரையும் சொர்க்கத்தில் இருந்து வழி அனுப்ப மைக்கேல் வருகிறார். மைக்கேல் ஆதாமிடம் தேவக்குமாரன் மனிதகுலத்தில் பிறந்து சாத்தானை வென்று மனிதகுலத்தை பாவத்தில் இருந்து மீட்பான் என்று மைக்கேலுக்கு ஆறுதல் கூறுகிறார்.

இறுதி நூலில் ஆறுதல் அடைந்த ஆதாமும், ஏவாளும் சொர்க்கத்தை விட்டு வெளியெறினர். மைக்கேல் இருவரும் வழி நடத்தி சொர்க்கத்தை விட்டு வெளியே அனுப்பினார். இருவரும் வருகாலத்தை பற்றி கனவு கண்டு சொர்க்கத்தை விட்டு வெளியே வந்தனர்.

இது தான் பன்னிரண்டு நூல்களின் சாரம். இப்பொது புரிந்திருக்கும் ஏன் பலர் 'பிரடஸ் லாஸ்ட்' நூலை எதிர்த்தார்கள் என்று. சாத்தான் மனிதனை வென்ற கதை. குற்றத்திற்கு தண்டனையாக மனிதன் சொர்க்கத்தை விட்டு வெளியேறியது. சாத்தானை நாயகன் அளவிற்கு உயர்த்தி எழுதியது. இப்படி பல காரணங்களால் 'பிரடைஸ் லாஸ்ட்' காவியத்தை எதிர்த்தனர்.'பிரடைஸ் லாஸ்ட்' பிறகு மில்டன் எழுதிய நூல்களை யாரும் எதிர்க்கவில்லை என்பது குறிப்பட தக்கது.

இக்காலத்தில் 'சாத்தானின் கவிதைகள்' என்று நூலை எழுதிய சல்மான் ருஸ்டி எதிர்ப்புகளை விட மில்டனுக்கு அதிகம். இக்காலத்திற்கே இப்படி என்றால் அக்காலத்தின் மக்களின் மனம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். ஒரு சிலர் 'பிரடைஸ் லாஸ்ட்' நூலை கூட எறித்தார்கள். அன்று பலரு எதிர்த்த நூல் இன்று ஆங்கிலத்தில் மிக பெரிய இதிகாசமாக கருதப்படுகிறது. நல்ல நூல் காலம் கழிந்து தான் அங்கிகாரம் கிடைக்கும் என்பதற்கு 'பிரடைஸ் லாஸ்ட்' நூல் ஒரு உதாரணம்.

LinkWithin

Related Posts with Thumbnails