வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, January 30, 2009

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் எப்படி இருக்கும் என்று ஒரு சின்ன கற்பனை...

முதலாளி : மாஸ்டர் ! நம்ம ஹோட்டலுக்கு கஸ்டமர்ஸ் அதிகமா வரதுக்கு ஐ.டி கம்பேனியில வேலை செஞ்சவங்கள கூப்பிட்டு வந்திருக்கேன். அவங்கள வச்சி வேலை வாங்குறது உங்க பொறுப்பு...!

சரக்கு மாஸ்டர் : கவலைய விடுங்க... நம்ப ஹோட்டல் சேல்ஸ் எப்படி பிச்சிக்கிட்டு போகுது பாருங்க...

முதலாளி : சரி ! நான் போய்ட்டு சாய்ங்காலம் வரேன்..

மாஸ்டர் ஒருவரிடன் சென்று....

மாஸ்டர் : ஐ.டி. கம்பேனியில என்னவா இருந்தீங்க...
அவன் : நான் PM ஆ இருந்தேன்..

மாஸ்டர் : என்னது Prime Minister ராவா...????
அவன் : இல்லைங்க.... Project Manager ரா இருந்தேன்.

மாஸ்டர் : அப்படி முழுசா சொல்லு.... சூப்பர்வைசர் வேலை தானே....
PM : இல்லைங்க... வேலை செய்யுறதுக்கு எத்தன பேரு வேணும், எவ்வளவு நேரம் எடுக்கும்னு ப்ளான் போட்டு கொடுத்து... அவங்க வேலை செய்யுறத கவனிக்குற வேலைங்க....

மாஸ்டர் : அதுதான்.... சூப்பர்வைசர் வேலை...
PM : நாங்க ப்ளான் போட்டு.... அதுக்கு தகுந்தா மாதிரி மத்தவங்கள வேலை செய்ய சொல்லுவேன்.

மாஸ்டர் : நாங்களும் திட்டம் போடுவோம். ஒரு நாளைக்கு எத்தன பேரு வருவாங்க..வந்தவங்க கணக்கு ஜாஸ்தியான எப்படி சமாளிக்கனும். காய்கறி வெட்டுறதுக்கு எத்தன பேரு. நல்லா சமைக்கிறாங்களா.... இப்படி திட்டம் போட்டு தான் சமைக்கவே ஆரம்பிப்போம்.

PM : இது பேரு தான் ப்ளானிங்....
மாஸ்டர் : அடபாவி.... நாங்க எல்லாம் ப்ளான் பண்ணி எல்லா வேலையும் செய்யுறோம். ப்ளான் மட்டும் பண்ணுறத்க்கு தனி ஆளுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்திட்டு இருக்காங்க...

ப்ராஜக்ட் மேனேஜரிடம் பேசிய பிறகு மாஸ்டர் கிட்சனுக்கு சென்றார். அங்கு ஒரு டெவலப்பர் நீண்ட நேரமாக சமைத்துக் கொண்டு இருந்தான்.

மாஸ்டர் : தம்பி... இத்தன நேரமா சமைக்காம கம்ப்யூட்டர்ல என்ன பண்ணுற....
டெவலப்பர் : சாம்பார் ரொம்ப சப்புனு இருக்கு. என்ன பண்ணனும்னு கூகுல் அடிச்சு பார்த்திட்டு இருக்கேன்.

மாஸ்டர் : சப்புனு இருந்தா உப்பு போடு... கூகுல் வந்து என்னடா பண்ண போது....
டெவலப்பர் : யாராவது சாம்பார் வச்சிருந்தா.... டௌன்லோட் பண்ணி கொஞ்சம் மாத்தி கொடுக்கலாம்னு நினைச்சேன்,

மாஸ்டர் : விட்டா அடுப்பு பத்த வைக்கிறது கூட கூகுள் அடிச்சு பார்ப்ப போலிருக்கு....

இவனிடம் பேசி வேலைக்காகது என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். ஒருவன் எல்லா சாப்பாட்டையும் உற்று பார்த்து கொண்டு இருப்பதை கவனித்தான்.

மாஸ்டர் : நீ என்னவா இருக்க....?
அவன் : டெஸ்டரா இருக்கேன்.

மாஸ்டர் : ஏன் எல்லா சாப்பாட்ட பார்த்திட்டு இருக்க...
டெஸ்டர் : கலர் பார்க்குறேன்.

மாஸ்டர் : எதுக்கு...??
டெஸ்டர் : இத Sanity Testingனு சொல்லுவாங்க...

அந்த டெஸ்டர் சாம்பரை சுவைத்து பார்த்தான்.

மாஸ்டர் : இதுக்கு என்ன பேரு....??
டெஸ்டர் : Functional Testingனு சொல்லுவோம். சாம்பர்ல உப்பு கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு...

டெவலப்பர் : நான் சரியா தான் போட்டேன்.
டெஸ்டர் : நீ சாப்பிட்டு பாரு... உப்பு எவ்வளவு ஜாஸ்தினு....

மாஸ்டர் : சரி...சரி... உங்க சண்டைய விடுங்க... நான் சரி பண்ணுறேன்.

சாம்பாரில் உப்பு அதிகமாக இருப்பதை உணர்ந்த மாஸ்டர் கொஞ்சம் பருப்பு போட்டு சாம்பாரில் இருக்கும் உப்பை சரி செய்கிறார். இப்போது, டெஸ்டர் ரசத்தை ருசித்து பார்க்கிறான்.

டெஸ்டர் : ரொம்ப காரம்மா இருக்கு...

மாஸ்டர் தண்ணீர் ஊற்றி சரி செய்கிறார்.
டெஸ்டர் : இப்ப நல்லா இருக்கு...

டெஸ்டர் மீண்டும் சாம்பரை சுவைத்து பார்க்கிறான்.

மாஸ்டர் : எதுக்கு மறுபடியும் சாம்பார டேஸ்ட் பண்ணுற...
டெஸ்டர் : இத நாங்க Regression Testingனு சொல்லுவோம்.

மாஸ்டர் : அடபாவி.... டெஸ்டிங் பண்ணுறனு சொல்லி பாதி சாம்பர், ரசத்த சாப்பிடியடா....

மாலையானதும் முதலாளி வந்து கல்லாவை பார்க்கிறார். ஒரு பைசா கூட இல்லாமல் காலியாக இருந்தது.

முதலாளி : என்ன மாஸ்டர் ! கஸ்டமர் யாரும் வரலையா....
மாஸ்டர் : இன்னும் சமையல முடிக்கலைங்க.... டெஸ்டர் மட்டும் அண்டா அண்டாவா சாம்பர், ரசம் குடிச்சிட்டான்.

ஹோட்டல் முதலாளி ஸ்வீட் செய்திருப்பதை பார்க்கிறார்.

முதலாளி : ஸ்வீட் இருக்குல... அது ஏன் கட முன்னாடி வைக்கல....?
மாஸ்டர் : ஸ்வீட் பொறுப்ப... 'SQA' கிட்ட கொடுத்தேன். கொஞ்சம் இனிப்பு கம்மியா இருக்குனு சொல்லி.... கடைசி வரைக்கும் எந்த ஸ்வீட்டையும் கஸ்டம்மர் கண்ணுல காட்டாம உள்ளையே வச்சிட்டு இருந்தாங்க...

முதலாளி : $$@#$@##$

( ஐ.டி ஊழியர்கள் யாரும் என்னை திட்ட வேண்டாம். நானும் ஒரு ஐ.டி. ஊழியன் (SQA) என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். )

Thursday, January 22, 2009

'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகருடன் குரு – மதன்

சினிமாவில் சேர நினைத்த குருவும், மதனும் 'ஊர்' பெயரில் இயக்கும் இயக்குனர்டம் உதவி இயக்குனர்களாக சேர்ந்தனர். 'ஊர்' இயக்குனர் தனது புது படத்தில் 'வம்பு' நடிகனை கதாநாயகனாக போட்டு பட பூஜை நடத்துவதாக அறிவித்திருந்தார். 'ஊர்' இயக்குனர், 'வம்பு' நடிகர் கூட்டனியில் கதைக்கு பஞ்சம் இருந்தாலும் 'பன்ச்' டைலாக்குக்கு பஞ்சம் இருக்காது என்று பத்திரிக்கை எல்லாம் பாராட்டி எழுதியிருந்தனர்.

பட பூஜையை பிரமாண்டமான அலங்காரங்கள் செய்யப்பட்டு நடந்துக் கொண்டு இருந்தது. 'வம்பு' நடிகர் பெரிய ரசிகர் பட்டாளத்துடன் வந்து பட பூஜைக்கு இறங்கினார். 'வம்பு' நடிகருடன் வேலை செய்வதை நினைத்து குருவும், மதனும் உடல் புரித்து இருந்தனர். 'ஊர்' இயக்குனரும், 'வம்பு' நடிகரும் பேசியே படத்தை நூறு நாள் ஓட்டி விடுவார்கள் என்ற நம்பிக்கை குருவுக்கும், மதனுக்கும் இருந்தது. தாங்கள் இயக்க போவும் படத்திற்கு 'வம்பு' நடிகனை கதாநாயகனாக வைத்து எடுக்க வேண்டும் என்று கதை கூட தாயர் செய்துவிட்டனர்.

நாட்கள் செல்ல செல்ல ஷூட்டீங் ஸ்பாட்டில் குரு, மதனுக்கு பல உண்மைகள் தெரிய வருகிறது. தன் ரசிகர்கள் என்ற பெயரில் மாத சம்பளம் இரண்டாயிரம் தருகிறாராம். அது மட்டுமில்லாமல், முதல் நாள் தன் படம் பார்க்க வருகிறவர்கள் முட்டை பிரியானி எல்லாம் தருவாராம்.

" ஒரு வேல... அவர் அப்பா அரசியல்ல இருக்குறதால... இந்த தாக்கம் இருக்குமோ !" என்று மதன் குருவின் காதில் சொன்னான்.

"ஏதாவது பேசி இருக்குற வேலை போக போது..." என்று குரு மதனின் வாய்யை அடைத்தான்.

ஷூட்டீங் ஸ்பாட்டில் குடும்ப செண்டிமென்ட் சீன் பற்றிய காட்சியை படமாக்கி கொண்டு இருந்தனர். குரு, மதன் யோசனையை வாங்கி தன் சொந்த கற்பனை என்று சொல்லி 'ஊர்' இய க்குனர் 'வம்பு' நாயகனுக்கு விளக்கிக் கொண்டு இருந்தார்.

இயக்குனர் : ஸார் ! நீங்க ஊருல இருந்து உங்க கிராமத்துக்கு வரீங்க..

வம்பு : நோ...நோ... என் ரசிகர்கள் சிட்டி ஆளுங்க... வில்லேஜ் கதையெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது...

இயக்குனர் : பரவாயில்ல... லீவுக்கு உங்க சொந்தக்காரங்க கிராமத்துக்கு வரீங்க... ஸ்கேண்ட் ஆப் டெல்லியில கதைய மாத்திருவோம்.

வம்பு : வெரி குட்.... இத தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன். ஒரு படத்துல இரண்டு கதை சொல்லி ரசிகர்கள திருப்தி படுத்துர உங்கள மாதிரி இயக்குனர் இருக்குற வரைக்கு தமிழ் சினிமா ரொம்ப நல்லா இருக்கும்.

'ஊர்' இயக்குனர் தன் காலரை உயர்த்தி கொண்டார். 'ஊர்' இயக்குனர் தயாரிப்பாளருக்கு படத்தின் புது பட்ஜெட்டை பற்றி சொல்ல செல்கிறார். பாதி படம் பணம் போட்ட தயாரிப்பாளர் இன்னொரு வீடு விக்க வேண்டிய நிலையில் இருந்தார்.

சைக்கில் கேப்பில் மேக்கப் போட்டு கொண்டு இருந்த நாயகியிடம் 'வம்பு' நாயகன் ' உன்ன பார்த்தா என் இரண்டாவது காதலி மாதிரி இருக்கு..." கடலை போட தொடங்கினான்.

நாயகி : உங்களுக்கு மொத்தம் எத்தன காதலி...?

'வம்பு' நாயகன் : எனக்கு இது வரைக்கும் ஒரே காதலி தானு தமிழ் நாட்டுக்கே தெரியும்...

நாயகி : ஸாரி... நான் ஆந்திரா. எனக்கு தெரியாது. (மனதுக்குள்) ஆடியன்ஸ பார்த்து பேசுற மாதிரி பேசுறான். இப்ப தான் தெரியுது ! தமிழ் தெரியாத ஹீரோயின்ஸ் ஏன் தமிழ் படத்துல நடிக்குறாங்கனு...? இந்த மாதிரி ஹீரோவோட மொக்கைய கேக்க வேண்டியதா இருக்கே...!

'வம்பு' நாயகன் : என் பழைய காதலி ஒண்ணும் ரொம்ப அழகி இல்ல... நீ என்ன பத்தி தெரிஞ்சிக்கிட்டா போதும்..

நாயகி : “உங்கள பத்தி நல்லா தெரியுமே... இது தான் உங்க முதல் படமில்ல...”
'வம்பு' நடிகன் கோபமாய் பார்க்க, "ஐ மின் அதிகம் நடிக்க வாய்ப்பிருக்குற முதல் படம்னு சொல்ல வந்தேன்" என்று நாயகி சமாளித்தாள்.

'வம்பு' நாயகன் போடும் மொக்கை கேட்டுக் கொண்டு மதனால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. அவனை அடிக்க வேண்டும் போல் மதனுக்கு இருந்தது. குரு மதனை கட்டுப்படுத்தி பொறுமையாக இருக்க சொன்னான்.

இயக்குனர் : வாங்க...! ஷார்ட் எடுக்கனும்.
என்று நாயகன், நாயகி, துணை நடிகர்களை அழைத்தான். இயக்குனர் நாயகனிடம் " ஸார்... நீங்க கார விட்டு இறங்கியதும். நீங்க உங்க அத்த கிராக்டர பார்த்து எப்படி இருக்கீங்கனு கேக்கனும். இது தான் முதல் ஷார்ட்." என்றார். வம்பு நடிகனும் 'சரி' என்று தலையாட்டினான்.

எல்லோரும் காட்சி எடுக்க வேண்டிய இடத்தில் நின்றனர்.

இயக்குனர் : ரேடி... ஸ்டார்ட்.. ஆக்ஷன்....

'வம்பு' நடிகன் : அத்த...எப்படி இருக்கீங்க... ?
என்று வசனத்தை கதாபாத்திரத்தை பார்த்து பேசாமல் கேமரா பார்த்து பேசினான்.

இயக்குனர் : என்ன ஸார்... கிரெக்டர் பார்த்து பேசாம... கேமரா பார்த்து பேசுறீங்க...??
வம்பு நடிகன்: பன்ச் டைலாக்க ஆடியன்ஸ் பார்த்து பேசுன தான் நல்லா இருக்கும்.

இயக்குனர் : நீங்க உங்க அத்தை நலம் விசாரிக்குறீங்க.... இது எல்லாம் பன்ச் கிடையாது ஸார்...

'வம்பு' நடிகன் : "இது எப்படி இருக்குனு” சொன்னா பன்ச் டைலாக்க எடுத்துக்குறீங்க. "எப்படி இருக்கீங்கனு?" பன்ச் டைலாக் கிடையாதா...

இதை கேட்டதும் மதனுக்கு கோபம் தலைக்கேறியது.

மதன் : நேத்து வந்த பய நீ. எங்க தலைவரோட உன்ன கம்பார் பண்ணுற
என்று கோபமாய் வம்பு நடிகனை அடித்தான். குரு மதனை தடுக்க அவன் கையை பிடிக்கிறான். கோபத்தில் குரு கையை மதன் தள்ளி விட குருவின் கை இயக்குனரின் கண்ணித்தில் படுகிறது.

வம்பு நடிகன் கோபத்தில் 'பேக்கப்' என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். நஷ்டம் அடைந்த தயாரிப்பாளர் நாயகன், இயக்குனர் தாக்கியதற்காக குருவையும், மதனையும் போலீஸ்யிடம் ஒப்படைக்கிறார்.

மதன் கோபத்தால் குருவும் போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்ல வேண்டியதாக வந்தது. ‘வம்பு’ நடிகன் படத்தை பார்த்த ரசிகர்கள் அவனை அடிப்பதற்காக தேடிக் கொண்டு இருந்தனர்.

Sunday, January 18, 2009

கமலா , புத்தகம் : இரண்டு அரை நிமிட கதைகள் !

கமலா

சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.

"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.

"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.

சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.

" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

நன்றி : அதிகாலை.காம்

*************

புத்தகம்

பரபரப்பாக புத்தகக் கண்காட்சியில் இறுதி நாள் நடந்துக் கொண்டு இருந்தது. புத்தக கடைகளின் பெயரை பார்த்து நடந்ததில் பலர் என்னை இடித்து சென்றாதை கூட தெரியாமல் இருந்தேன். பாரதியார், புதுமைபித்தன், கல்கி என்று பெரிய எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை வாங்கினேன். அப்போது ஒரு புத்தக கடையில் ஆர்வமாக நுழைந்தேன். இந்த கடையில் இருக்கும் புத்தகங்களை பார்ப்பதற்காகவே தினமும் ஐந்து ரூபாய் டிக்கெட் வாங்கிக் கொண்டு கண்காட்சிக்கு வந்திருக்கிறேன். அந்த கடையின் உரிமையாளர் என்னை பார்த்து சிரித்து விட்டு, அவர் கடையில் இருந்த பத்து பிரதிகள் கொண்ட புத்தகத்தை என்னிடம் கொடுத்தார். வாடிய புத்தகத்துடன் அந்த புத்தகங்களை வாங்கினேன்.

உலக புகழ் பெற்ற எழுத்தாளர்களின் புத்தகங்களோடு விற்க படாத நான் எழுதிய புத்தகளையும் கையில் சுமந்தப்படி புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியே வந்தேன்.

*****

ஒரு நிமிட கதைகளுக்கு போட்டியாக அரை நிமிட கதைகள் எழுதியிருக்கிறேன். இது ஒரு சோதனை முயற்சி மட்டுமே... திட்ட நினைப்பவர்கள் தனியாக மின்னஞ்சல் அனுப்புங்கள்.

Monday, January 12, 2009

முதலில் சத்யம்.. அடுத்து விப்ரோ

உலக வங்கி நிறுவனம் எட்டு வருடங்களுக்கு சத்யம் சேவையை தூண்டிப்பதாக அறிவித்திருந்தன. இதை அடுத்து, மேடாஸ் நிறுவனம் விவகாரம், கணக்கு மோசடி, ராமலிங்க ராஜூ வாக்குமூலம் என்று சத்யம் நிறுவனத்திற்கு எதிராக பல செய்திகள் நாளேடு வணிக பக்கங்களை நிரப்பிக் கொண்டு இருக்கிறது. இதை அடுத்து இன்று, உலக வங்கி நிறுவனம் ‘விப்ரோ’ நிறுவனத்தின் சேவை நான்கு வருடம் நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இந்த செய்தி ஐ.டி நிறுவனங்களுக்கு மேலும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது.

உலக வங்கியிடம் வணிகம் செய்யும் எந்த நிறுவனமும் அதன் வங்கி ஊழியர்களுக்கு தனிபட்ட முறையில் பரிசு, அன்பளிப்பு, பணம் என்று எதுவும் கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் அந்த வங்கி நீதிப்படி ‘லஞ்சம் கொடுப்பது போல்’ ஆகும். விப்ரோ நிறுவனம் தங்கள் பங்குகளை குறைந்த விலையில் உலக வங்கி ஊழியர்களுக்கு விற்றுள்ளது. இதனால் உலக வங்கி விப்ரோ நிறுவனத்தின் சேவை உறவை தூண்டித்துள்ளது. இதே போல் மேகா ஸ்பாட் என்று இன்னொரு நிறுவனத்தின் உறவையும் நான்கு ஆண்டு தூண்டித்துள்ளது.
மேகா ஸ்பாட் நிறுவனம் உலக வங்கி வணிகம் செய்யும் அதே துறையில் கால் பதிக்க உள்ளதால், மேகா ஸ்டாப் நிறுவனத்தை போட்டி நிறுவனமாக கருதி உறவை முடித்துள்ளனர். உலக வங்கியின் இந்த அதிரடி முடிவால் விப்ரோவின் பங்குகள் 10 சதவீதமும், மேகா ஸாப்ட் பங்குகள் 8 சதவீதம் இறங்கியுள்ளது.

சத்யம் விவகாரம் முதலில் தொடங்கி வைத்தவர் 'உலக வங்கி' என்பது குறிப்பிடதக்கது. உலக வங்கி முடிவுக்கு பிறகு தான் சத்யம் நிறுவனத்துக்கு அடி மேல் அடி விழுந்தது. இப்போது உலக வங்கி இதே முடிவை விப்ரோ நிறுவனத்துக்கு எதிராக எடுத்திருப்பதால் ஐ.டி. துறையில் மேலும் தள்ளாட்டம் ஏற்ப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல், உலக வங்கி உறவு முடித்துள்ள இந்த மூன்று நிறுவனங்களுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் இந்திய நிறுவனங்களுக்கு இன்னொரு கருப்பு புள்ளியாக இருக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இன்னும் என்ன நடக்க போகிறதோ என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Saturday, January 10, 2009

கை மாறிய சத்யம் நிறுவனம்

இரண்டு, மூன்று நாட்களாக முழு பக்க கட்டுரையாக வந்த 'சத்யம்' ராமலிங்க ராஜூ விவகாரம், ஒரு வழியாக கைது செய்யப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. எந்த நிறுவனமும் சத்யம் நிறுவனத்தை வாங்க முன் வராததால், மத்திய அரசு கட்டுப்பாட்டு கீழ் வந்துள்ளன. . பத்து போர்ட் மெம்பர்ஸ் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த செய்தி எப்படியும் நாளைய நாளிதழில், வாரயிதழில் வரும் (நாளடைவில் இது பெட்டி செய்தியாக மாறும்.) இன்று Times of India படித்த இரண்டு விஷயங்களை பற்றி சொல்லியாக வேண்டும். முதல் விஷயம் என் மனதை நெருடியது. அடுத்த விஷயம் அதிர்ச்சி உள்ளாக்கியது.

ஐ.டி துறையில் யூனியன் இருந்தால் இந்த பிரச்சனை வராமல் இருந்திருக்கும் என்று பலர் பேட்டி அளித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு வேளை யூனியன் இருந்திருந்தால், நிறுவனம் நஷ்டப்பட்டாலும் தங்களுக்கு மாத சம்பளம் வேண்டும் என்று எல்லா ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கி இருப்பார்கள். ஆனால், சத்யம் விஷயத்தில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் அப்படி எதுவும் நடந்துக் கொள்ளவில்லை.


நேற்று, ஹைதிராபாத்தில் சத்யம் ஊழியர்கள் நிறுவனத்தின் முன்பு ‘Spirit of Satyam’ என்று வண்ண நிறங்களாலும், பேனாவாலும் கையெழுத்து போட்டனர். ஒரு நிறுவனம் வீழ்ச்சி காணும் நிலையில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மேலும் தொந்தரவு கொடுக்காமல் ‘துணையாக இருப்போம்’ என்று கூறுவதை பார்க்கும் போது மெய் சிலிர்க்க வைக்கிறது. (15,000 பேர் வெளியில் வேலை தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். தேடினாலும் வேலை கிடைக்க வேண்டுமே...!)

இது வரை வந்த செய்தி, ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பது போல் எந்த பேச்சு வார்த்தையும் நடக்கவில்லை. இரண்டு மாதம் சம்பளம் கொடுக்க முடியாத நிலையில் நிறுவனம் இருக்கிறது. இதை எப்படி எதிர்கொள்ள போகிறார்கள் என்பது தெரியவில்லை. மீண்டும் 'சத்யம்' துடித்து எழுந்தால், 'இந்த கஷ்டத்தில் ஆதரவாய் இருந்த ஊழியர்களுக்கு நிச்சயமாக அதிக பங்கு இருக்கும்.

‘Spirit of Satyam’ மனதை நெருடிய செய்தியை படிக்கும் போது இன்னொரு செய்தியையும் படித்தேன். செப்டம்பர் 30,2008 முடிவில் சத்யமின் மொத்தம் ஊழியர்கள் 52,865. ஆனால், நேற்று வரை(ஜனவரி,2009) சத்யம் ஊழியர்கள் எண்ணிக்கை 47,570 பேர்கள். அதுவும் வெளியே துரத்தப்பட்ட ஊழியர்கள், தானாக வேலையை விட்டு சென்ற ஊழியர்கள் தகவல்கள் சரியாக டேடா பேஸ்யில் இல்லை என்பது தான். வங்கி கணக்குகள் ஊழியர்கள் பெயரில் இருக்கிறது. ஆனால், அந்த ஊழியர் அந்த நிறுவனத்தை விட்டு சென்று விட்டார் என்கிறார்கள். பெரும்பாலான ஊழியர்கள் கொத்தாக சென்றதால், அவர்களில் தகவல்கள் சரியான முறையில் அப்டேட் (update) செய்ய முடியவில்லை.

மேடாஸ் விவகாரத்தில் 30% வீழ்ச்சி, முக்கிய வாடிக்கையாளர் உலக வங்கி கொடுத்த புகார், ராமலிங்க ராஜூவின் வாக்குமுலத்தின் 78% வீழ்ச்சி என்று தினமும் எதாவது ஒரு அதிர்ச்சியான தகவல் சத்யம் நிறுவனத்திற்கும், ஊழியர்களுக்கும் வருகிறது. ஜனவரி 7 அன்று புதன்கிழமை நிஃப்டி 700 புள்ளிகள் வீழ்ச்சிக்கு சத்யம் பங்குகள் இருந்ததால், ஜனவரி 12 முதல் சத்யம் நிறுவனம் நிஃப்டியில் இருந்து விலக்கப்படுகிறது. சத்யம் பங்குகளை வாங்கியவர்கள் இது வரை 13,000 கோடி இழந்துள்ளார்கள்.

கை மாறிய சத்யம், ஊழியர்களுக்கு மத்திய அரசு என்ன செய்ய போகிறது என்று பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும். ‘துணையாக இருப்போம்’ என்று கூறிய ஊழியர்களுக்கு மத்திய அரசும் துணையாக இருக்க வேண்டும் என்பது தான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும்.

Friday, January 9, 2009

கவிதை எழுதி கைதான குரு – மதன்

எதோ பெரிதாக செய்ய போவது போல் பரப்பரப்பாக குருவின் அறைக்கு வந்தான் மதன். இங்கும், அங்கும் எதையோ தொலைத்து விட்டு தேடுவது போல் நின்றான். அறையில் இருக்கும் ஒவ்வொரு துணியும் ( குருவின் ஜட்டி உட்பட ) எடுத்து போட்டுவிட்டு மதன் திவிரமாக தேடினான்.

குரு : என்ன மதன்.... எத தேடுற...??
மதன் : ஒண்ணு எழுதனும்... பேனா இருக்கா..

குரு : அடபாவி பேனாவுக்கு தான் இவ்வளவு பெரிய பரபரப்பா..
மதன் : சிக்கிரம் கொடு...கவிதை எழுதனும்.. அதுக்குள்ள மறந்திட போறேன்.

குரு : அடபாவி... நல்ல தானே இருந்த...யாராவது லவ் பண்ணுறியா
மதன் : இல்ல குரு.. தலைவர் 'பழம்' புலி இருக்கார்ல... அவரு இடை தேர்தல்ல நிக்கிறாரு...

குரு : அவரு தேர்தல்ல நிக்கிறதுக்கு... நீ கவிதை எழுதுறதுக்கும் என்ன சம்பந்தம்.
மதன் : 'பழம்' புலி கூட்டனி ஆதரவு பத்திரிக்கை...அவருக்கு ஆதரவா கவிதைய பிரசுரம் பண்ணுறாங்க... 'பழம்' புலி எனக்கு போன் போட்டு அவர பத்தி எழுதி தர சொன்னாரு.

குரு : அவர பத்தி எழுதனும்னு... அவரே சொன்னாரா...
மதன் : ஆமா குரு..

குரு : என்ன தலைவருடா அவரு.?? என்ன எழுதனும்னு அவரே கேக்குறாரே.. அசிங்கமா இல்ல...
மதன் : இப்ப இது தான் ‘அரசியல்’ குரு...
குரு : என்ன கருமம்மோ விடு... இந்த பேனாவ எடுத்து தொல

மதன் பேனாவை வாங்கி தலையை தட்டி தட்டி பார்த்தான். கவிதை வர வில்லை. தலையில் இருந்து முடி தான் உதிர்ந்தது. பிறகு பேனாவை வாயில் வைத்து யோசித்தான். பாவம் ! அப்போது கூட மதனுக்கு கவிதை வரவில்லை.

மதன் வாயில் பேனா வைப்பாதை பார்த்து குரு "வ்வே...வ்வே.." என்று குரு வாந்தி எடுப்பது போல் செய்தான்
மதன் : என்ன குரு.. ஏதாவது கண்ணடத சாப்பிட்டியா...

குரு : பேனாவ ஏன்டா வாய்ல வச்ச..??
மதன் : ஸாரி குரு... ஐடியா வரனும் பேனாவ வாயில வச்சேன்.

குரு : அந்த பேனாவ நிறைய வாட்டி காது நோண்டுருக்கேன்.
மதன் : பேனாவால காது நோண்டுனியா... வ்வே...வ்வே..

குரு : வாந்தி எடுத்தது போதும்... சிக்கிரம் எழுதிட்டு பேனாவ கொடு...
மதன் : குரு... நீயே ஒரு நல்ல கவிதை சொல்லேன்.

குரு : அடபாவி... தமிழுக்கு இது வரைக்கும் நான் மட்டும் தான் கொடும பண்ணாம இருந்தேன். என்னையும் சேர்த்துக்க பார்க்குறீயா...
மதன் : என்ன குரு... நீ, நானும் அப்படியா பழகினோம்... எனக்காக ஒரு சின்ன உதவி தானே...

குரு : சரி...சரி... ரொம்ப குழையாத.. நா சொல்லுறத அப்படியே எழுது...
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க

மதன் : குரு.. ஒரு சின்ன சந்தேகம்
குரு : என்ன சொல்லு..?

மதன் : மக்கள், மண்ணு காக்குறது ஓ.கே... ஆன வானத்த எப்படி காப்பாங்க...?
குரு : கவிதைனா உணரனும்... ஆராய்ச்சி பண்ண கூடாது.. ரொம்ப கேள்வி கேட்டா எனக்கு கவிதை வராது.

“போஸ்ட்டர், ஃபேனர்ல படிச்ச சொன்ன.. இப்படி கேள்வி கேக்குறானே” என்று குரு மனதில் நினைத்துக் கொண்டான்.

குரு : மாறுபடியும் முதல்ல இருந்து சொல்லுறேன்....
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க
'பழம்' புலிக்கு ஆதரவு தந்து
வெற்றி பெற செய்வீர் !

எப்படி இருக்கு...?

மதன் : நா எதிர்பார்த்த அளவுக்கு இல்ல... பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்.

குரு : எல்லா என் நேரம்..

குரு சொல்லியதை அப்படியே எழுதி மதன் 'பழம்' புலி ஆதரவு பத்திரிக்கைக்கு அனுப்பி வைத்தான். அந்த ஆதரவு பத்திரிக்கையும் அப்படியே தங்கள் பத்திரிக்கையில் மதன் கவிதையை போட்டது. மதனின் போறாத நேரம்... அந்த கவிதை படித்த இன்ஸ்பெக்டர் கண்ணாயிரம் மதனை தேடி அவர் அறைக்கு வருகிறான்.

குருவை பார்த்து... "நீ தான் புலிக்கு ஆதரவா பத்திரிக்கையில எழுதினியா.." என்று கண்ணாயிரம் கேட்டான்.

“இல்ல ஸார்... இவன் தான்" என்று மதனை காட்டினான் குரு.

கண்ணாயிரம் : புலிக்கு ஆதரவா பேசினா சட்டப்படி நடவடிக்கை எடுப்பாங்க தெரிஞ்சும்.. நீ ஆதரவா பத்திரிக்கையில எழுதுறியா..

மதன் : நா 'பழம்' புலிக்கு ஆதரவா தானே எழுதுன...
கண்ணாயிரம் : என்னடா... பழம், மாபழம் விளையாட்டு காட்டுற... இது நீ எழுதுனது தானே...

மதன் : உரக்க குரலில்...
மக்களை காக்க
மண்ணை காக்க
வானத்தை காக்க
'ஈழம்' புலிக்கு ஆதரவு தந்து
வெற்றி பெற செய்வீர் !

மதன் : ஐயோ...! சின்ன எழுத்து பிழ...நான் எழுதுனது ‘பழம்’ புலி பத்தினது.... எப்படி 'ஈழம்' புலி வந்தது தெரியில்ல...

கண்ணாயிரம் : இப்படி சொல்லுவனு தெரிஞ்சு தான்... நீ பத்திரிக்கை எழுதி அனுப்புச்ச பேப்பரையும் எடுத்து வந்திருக்கேன்.

குரு அந்த பத்திரிக்கையை வாங்கி பார்க்க... 'பழத்திற்கு' பதில் 'ஈழம்' என்று அச்சாகியிருந்தது.

குரு : டேய்.... அறிவிருக்காடா... 'ப' எங்க இருக்கு...' ஈ' எங்க இருக்கு.. எப்படிடா மாத்தி எழுதுவ...
.
மதன் : என்ன குரு... என்ன மட்டும் தப்பு சொல்லுற... நீ சொல்ல சொல்ல தானே நான் எழுதுன.. ஸ்பெல்லிங் மிஸ்டெக் பார்த்து கொடுத்திருக்கலாம்ல..
குரு : நானே சொந்தமா எழுதின மாதிரி சொல்லுற...

கண்ணாயிரம் : ஓ..ஓ.. உனக்கும் இதுல சம்மந்தம் இருக்கா... அப்போ இரண்டு பேரும் போலீஸ் ஸ்டேயனுக்கு நடங்க...

குரு : அடபாவி... வாய வச்சி கிட்டு சும்மா இருக்க மாட்டியா... என்ன சேர்த்து ஜெயிலுக்கு கூப்பிட்டு போறாங்க...
மதன் : நல்ல வேளை.... என்ன மட்டும் அரஸ்ட பண்ணுறாங்களே கவலைப்பட்டேன். எனக்கு துணையாக உன்னையும் அரஸ்ட் பண்ணிட்டாங்க...

குரு : உன்ன என்ன பண்ணுறேன் பாரு...
குரு மதன் முதுகில் நாலு அடி கொடுத்தான். உடனே கண்ணாயிரம்...

கண்ணாயிரம் : என்டா.. அப்ருவரா மாறுனவன அடிச்சு கொலை பண்ணவா பார்க்குற...

"ஐயோ... கொலை கேஸ் வேறையா..." என்று பயந்த படி போலீஸ் ஜிப்பில் குரு ஏறினான். குரு, மதன் இருவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர்.

Wednesday, January 7, 2009

எங்கு போகிறது சத்யம் நிறுவனம் ?

கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களிடம் அவர்களுடைய டிரீம் கம்பேனியை (கனவு நிறுவனம்) பற்றி கேட்டால் அவர்கள் கூறும் பதில் ‘Infosys, TCS, Satyam’. இந்த பதிலை கேட்கும் போது ரொம்ப பெருமையாக இருக்கும். காரணம், இந்த மூன்றுமே இந்திய நிறுவனங்கள் என்பதால் தான். ஆனால், இன்று ராமலிங்க ராஜூவின் ராஜினாமாவும், பல ஆண்டுகள் நடந்த மோசடிகளும் அதில் வேலை செய்யும் 50,000 ஊழிகளின் வாழ்க்கை கேள்வி குறியாக்கியுள்ளது.

நெற்று 178 ரூபாய் இருந்த சத்யம் பங்கு இன்று நாற்பது ரூபாயாக உள்ளது. அவரது சகோதரின் முன்னால் நிறுவனமான சிஃபி பங்குகள் கூட உலக பங்கு சந்தையில் வீழ்ச்சியை கண்டது. ஒரு மாதமோ அல்லது இரண்டு மாதமோ மீண்டும் அதன் பங்கு ஏறலாம். முதலீட்டாளர்களுக்கு லாபம் வரலாம். ஆனால், அங்கு வேலை செய்பவர்கள் நிலை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. எந்த பதிவுகளும் அவர்களுக்காக வருத்தம் கூட தெரியவில்லை. இப்போது இருக்கும் பொருளாதார சூழ்நிலையில் அவர்களுக்கு வேலை போனால் பல பேரின் வாழ்க்கை என்னாகும், அவர்கள் வேலைக்கு பாதுகாப்பு உள்ளதா என்று எந்த ஊடகமும் செய்தி தரவில்லை.

இரண்டு மாதங்களாக சத்யம் ஊழியர்களை எப்படி வேலையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டார்கள் என்று பலருக்கு தெரியாது. Dress Code அடிப்படையில் நூற்றுக்கு மேற்ப்பட்டவர்கள் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பினர். ஷூ போடாமல் அலுவலகத்திற்கு வருவது, ஷர்ட்டை டக் இன் செய்யாமல் இருப்பது, அரை மணி நேரம் காலதாமதம் போன்ற விஷயங்களை பெரிதாக்கி வேலையை விட்டு போக சொன்னார்கள். மதியம் 2 மணிக்கு தனிப்பட்ட முறையில், ஒரு ஊழியருக்கு ஹெச்.ஆரிடம் இருந்து போன் வரும், 'மாலை 5 மணிக்குள் வேலையை விட்டு போகவில்லை என்றால் உன்னை வேலையை விட்டு அனுப்பிவிடுவோம் (Termination)' என்று மிரட்டுவர்.

Termination கொடுத்து விட்டால் எந்த நிறுவனத்திற்கு சென்று வேலை வாங்க முடியாது. அதனால், தங்கள் பயம் காரணமாகவே பல சத்யம் ஊழியர்கள் வேலையை விட்டு சென்றனர். வேலையில்லாமல் சத்யம் நிறுவனத்தில் இருப்பவர்களின் நிலை இன்று வரை இது தான். எந்த நேரமும் தங்களுக்கு ஹெச்.ஆரிடம் இருந்து இப்படி ஒரு போன் வரலாம் என்ற பயத்தில் தான் அங்கு வேலை செய்கிறார்கள்.

மிக அமைதியாக பத்திரிக்கைகளுக்கு தெரியாமல், தொலைக்காட்சி மீடியாவை ஏமாற்றி தனது ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பிய சத்யம் நிறுவனத்தின் உரிமையாளர் ராமலிங்க ராஜூ "எல்லா பணத்தை என் நிறுவனத்தின் ஊழியர்களுக்காக செலவு செய்தேன். அதில் இருந்து ஒரு பைசா கூட நான், என் உறவினர்கள் எடுக்கவில்லை” என்று கூறுகிறார். தனது நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக இருந்தால் வளர்ந்த நிறுவனத்தோடு தங்களை இணைத்துக் (M&A) கொண்டு இருக்கலாம். பொய்யான லாபத்தை காட்டி சத்யம் பங்குகளின் விலையை உயர்த்தி மக்கள் பணத்தை ஏன் ஏப்பம் விட வேண்டும்? இனி தவறு மறைக்க முடியாத நிலையில் "ஊழியர்களின் பெயரை சொல்லி கருணை சம்பாதிக்க பார்க்கிறார்”. தன் தவறு தனது ஊழியர்களிடம் இருந்து ஆதரவு எதிர்பார்க்கிறார்.

தனது நிறுவனம் செய்த மோசடிக்கு யாரூக்கு சம்மந்தமில்லை என்பது எல்லோர் காதிலும் (செஃபி உட்பட) பூ சுத்துவது போல் தனது ராஜினாமா கடிதத்தில் ஒன்று குறிப்பிடுயிருந்தார். தன் நிறுவனத்தில் நடந்த மோசடி எந்த போர்ட் மெம்பர்ஸ்க்கும் தெரியாது என்று கூறியுள்ளார். சத்யம் ஆடிட் செய்த ஆடிட்டர்கள், போர்ட் மெம்பர்ஸ் எல்லோருக்கும் இதில் கண்டிப்பாக பங்கு இருக்க வேண்டும். மாதம் சம்பளம் வாங்கும் நாமே வீட்டு வரவு, செல்வை பார்க்கும் போது கோடி கணக்கில் முதலீட்டு செய்த போர்ட் மெம்பர்ஸ் ஆண்டு நிதி கணக்கை பார்க்காமல் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்பது மிக அபத்தமாக உள்ளது. படிக்காத பாமரன் கூட எவ்வளவு செலவானது என்று கேள்வி கேட்பான். அந்த கேள்வி கூட கேட்க தெரியாதவர்கள் போர்ட் மெம்பர்ஸ்யில் இருக்கிறார்களா ? அல்லது கேள்வி கேட்காதவர்களை போர்ட் மெம்பர்ஸாக வைத்திருக்கிறார்களா ? என்று புரியவில்லை.

சிறு முதலீட்டாளர்கள் சார்பில் கேள்வி கேட்க வேண்டிய சுதந்திர போர்ட் இயக்குநர் (Independent Board Director) சில நாட்களுக்கு முன்பு தான் தன் வேலையை ராஜினாமா செய்தார். பல ஆண்டுகள் நடந்த மோசடியை கேள்வியை கேட்காமல் அமைதியாக இருந்தவர், திடீர் நல்லவன் போல் சத்யம் விட்டு ஒதுங்கிய அந்த Independent Board Director மீதும் தவறு இருக்கிறது.

இப்படி சத்யம் நிறுவனத்தில் பல பேர்களுக்கு பங்கு உண்டு என்பது தெளிவாக புரிக்கிறது. ஆனால், ராமலிங்க ராஜூ தன் மீது தவறை சுமத்திக் கொண்டு மற்றவர்களை காப்பாற்ற நினைக்கிறார். சத்யம் நிறுவனத்தின் மோசடியால் உலக வர்த்தக பார்வையில் இந்திய ஐ.டி நிறுவனங்களின் நேர்மையை சந்தேகிக்கும் அளவிற்கு கொண்டு சென்றுள்ளது.

முதலீட்டாளார்களின் பணத்திற்கு செஃபி தலையிட்டு ஒரு தீர்வு காணும். சத்யம் நிறுவனத்தை வாங்க வேறு ஒரு நிறுவனம் முன் வரும். ஆனால், அங்கு வேலை செய்பவர்களுக்கு வேலை போனால்...... இன்னும் வேலையில்லாத திண்டாட்டம் அதிகமாகும். பண மோசடி போன்ற போன்ற பிரச்சனை வரமால் செஃபி எடுக்கும் நடவடிக்கை ஒரு பக்கம் இருக்கட்டும். வேலையில்லாத திண்டாட்டம் வரமால் இருக்க என்ன செய்ய போகிறார்கள் ????

கேள்விகள் மட்டுமே உள்ளன. பதில் பண முதலைகளிடம் உள்ளது. விழுங்கிய பணத்தை ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பதால் விடைக்காக பலர் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

( பின் குறிப்பு : இந்த வருடம் ஆரம்பமே சரியில்லை சார்...!)

Tuesday, January 6, 2009

புத்தாண்டை கொண்டாடிய குரு - மதன்

(தண்ணி அடித்து போலீஸிடம் மாட்டிய வாலிபர்களுக்கு இந்த நகைச்சுவை சமர்ப்பணம்.)

தண்ணீர் இல்லாமல் எந்த உயிரினமும் வாழ முடியாது. அதே போல் புத்தாண்டு என்றால் 'அந்த தண்ணீர்' இல்லாமல் புது ஆண்டை வரவேற்பது போல் இருக்காது. 'அந்த தண்ணீருக்கு அப்படி ஒரு மகிமை. புத்தாண்டை கொண்டாடுவதற்கு குருவும், மதனும் மிக தயாராக அலுவலகத்தில் இருந்து சிக்கிரமாக கிளம்பினர். இருவரும் சரக்கை டாஸ்மார்க் கடையில் வாங்கி அங்கேயே அருந்தினர்.

குரு : வேண்டாம் மண்டு...ரொம்ப ஜாஸ்தியா குடிக்குற..
மதன் : போட்டா குண்டு... புது வருஷம் கொண்டாடும் போது எந்த காரியத்த முதல்ல செய்யிரோம்மோ.. அதையே தான் வருஷ முழுக்க இருப்போம் தெரியுமா..

போதை தலைக்கேறியதில் மதன் தலை, கால் தெரியாமல் உலரினான்.

குரு : அப்போ.. இந்த வருஷம் முழுக்க தண்ணீ அடிக்க போறீயா...?
மதன் : அப்படி இல்ல குரு.... இன்னைக்கு சந்தோஷமா இருந்தா... வருஷம் முழுக்க சந்தோஷமா இருக்கலாம்னு சொல்ல வந்தேன்.

குரு : சந்தோஷமா இருக்குறதுக்கும் தண்ணீ அடிப்பதக்கும் என்னடா சம்மந்தம்.?
மதன் : தண்ணீ அடிச்சா நா சந்தோஷமா இருப்பேன். அப்போ நா சந்தோஷமா இருக்கனும்னா தண்ணீ அடிக்கனும்ல...

குரு : குடிக்கிறதுக்கு ஒரு சாக்கு வேணும்.... சரி குடிச்சு தொல...
மதன் : நீ குடி குரு..

குரு : வேண்டாம்ப்பா.. யாராவச்சி ஒருத்தன் ஒரளவுக்கு தெளிவா இருந்தா தான். இரண்டு பேரும் சேர்ந்து வீட்டுக்கு போக முடியும். நா அளவோட நிருத்திக்கிறேன்.
மதன் : என்னைக்கோ ஒரு நாள் தானே குரு...

குரு : எனக்கு இது போதும்... நீ குடி..
மதன் : ரொம்ப நன்றி குரு...

என்ற படி அதிகமாக மது அருந்தினான். குரு அளவோடு அருந்திவிட்டு மதன் பாட்டிலை சப்பி குடித்து முடிக்கும் வரை அவனை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். மதன் மது அருந்திய பிறகு சர்வருக்கு பணம் கொடுத்திட்டு வெளியே வந்தனர்.
மதன் : வண்டி சாவிய கொடு... நான் ஓட்டுறேன்..
போதை கலந்த குரலில் பேசினான் மதன்.
குரு : வேண்டாம்டா அதிகமா குடிச்சிருக்க.... நா ஓட்டுறேன்...

மதன் : என்ன குரு... என்ன ரொம்ப இன்சல்ட் பண்ணுற. எவ்வளவு தண்ணி அடிச்சாலும் நான் ரொம்ப ஸ்டெடியா இருக்கே பாரு....
என்று சொல்லி வண்டி மீது விழுந்தான் மதன்.

மதனிடம் வண்டி சாவியை கொடுத்தால் சொர்க்கத்திற்கு தான் செல்வோம் என்று குருவுக்கு நன்றாக தெரியும். போதையில் இருந்த மதனுக்கு புரிய வைக்க முடியவில்லை. புத்தாண்டு கொண்டாட நேரம் குறைந்துக் கொண்டே இருந்தது. வேறு வழியில்லாமல் வண்டி சாவியை மதனிடம் கொடுத்து அவன் பின்னால் அமர்ந்தான். மதன் போதையில் வளைத்து வளைத்து வண்டி ஓட்டுவதை பார்த்த குரு சொர்க்கத்துக்கு 'பாய்ட் டூ பாய்ட்' பஸ்ஸில் செல்வது போல் இருந்தது.

குரு : டேய் மதன் போலீஸ்... வண்டி முன்னாடி இருக்கு திருப்பி போடா....
மதன் : சரி குரு...
என்று கூறி வண்டியை நேராக ஓட்டினான்.

குரு : டாய் வெண்ண... நேரா போறடா.. போலீஸ் வண்டி இருக்கு... திருப்புடா
மதன் : திருப்பி தான் போறேன் குரு..
என்று சொல்லி மதன் வண்டியை நேராக போலீஸ் வண்டி மீது மோதினான். போலீஸ் வண்டியில் இருந்து முறுக்கி மீசை வைத்த ஒருவன் இறங்குகிறார்.

போலீஸ் : ஏன்டா ! எவ்வளவு தைரியம் இருந்தா போலீஸ் வண்டி மேல வந்து இடிப்ப...
மதன் : நீங்க ஏன் வண்டிய நாங்க போற வழியில ஓட்டுறீங்க...??

போலீஸ் : நின்னுட்டு இருந்த வண்டி மேல இடிச்சிட்டு... வண்டி போய்ட்டு இருக்கா சொல்லுற.. தண்ணியடிச்சிருக்கியா..
குரு : இல்ல சார்
மதன் :அவன் கம்மியா அடிச்சான். நான் ஜாஸ்தியா அடிச்சேன்

குரு : (மெதுவாக மதனிடம்) டாய் இப்போ தான் உனக்கு உண்ம பேச தொணும்மா... வாய முடுடா
போலீஸ்: எவ்வளவு அடிச்சிங்க...
குரு : கொஞ்சம் தான் ஸார்..

போலீஸ் : அதான் எவ்வளவு கேக்குறேன்...
குரு : க்வாட்டர் இருக்கும் ஸார்..
மதன் : டேய்.. நான் க்வாட்டரா அடிச்சேன்... போய் சொல்லுறான் ஸார்... இரண்டு ஃபுல் அடிச்சோம்.
குரு : (மெதுவாக )வாய் வச்சிக்கிட்டு கம்முனு இருடா

போலீஸ் : இராத்திரி நேரத்துல Drunk & Drive பண்ணிருக்கீங்க.. ஃபைன் இங்க கட்டுறீங்களா... கோர்ட்ல கட்டுறீங்களா...
குரு : என் கிட்ட அம்பது ரூபா தான் இருக்கு...
மதன் : கவலப்படாத குரு... என் கிட்ட க்வாட்டர் பாட்டில் இருக்கு.. போலீஸ்க்கு லஞ்சமா கொடுத்திடலாம்.

போலீஸ் : ஏன்டா...என்ன பார்த்தா தண்ணியடிக்கிறவன் மாதிரி தெரியுதா...
என்று கோபமாக கூறி இருவரையும் அடித்து வெறு ஜட்டியுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு இழுத்து செல்கிறார் போலீஸ்காரன். போதையில் இருந்த மதன், குருவை போலீஸ் கண்முன் தெரியாமல் அடிக்கிறது. காலையில் போதை தெளிந்த மதன்…

மதன் : என்ன குரு... சட்டையில்லாம..ஜட்டியோட உக்காந்திருக்க...
குரு : நான் மட்டுமாடா அப்படி இருக்கேன்... உன்னையும் கொஞ்சம் பாருடா.

மதன் : என்ன குரு ! நானும் சட்டையில்லாம இருக்கேன். புது வருஷம் கொண்டாட அந்த மாதிரி இடத்துக்கு கூட்டிட்டு வந்தியா... இராத்திரி போதையில என்ன பண்ணேனு ஞாபகமில்ல... இன்னொரு நாளு போதையில்லாம இந்த இடத்துக்கு வரனும்..

குரு : அட பாவி... உடம்பு டெரஸ் இல்லனா ‘அந்த மாதிரி’ இடத்துல இருக்கேன் நினைக்கிறியா... நாம போலீஸ் லாக்கப்புல இருக்கோம்...

மதன் : எதுக்கு நம்பல்ல போலீஸ் அரஸ்ட் பண்ணிச்சு...
என்று அதிர்ச்சியுடன் கேட்டான்.

குரு : இராத்திரி ரவுட்ஸ் வந்த போலீஸ் கிட்ட க்வாட்டர் நீட்டுனா.. அடிச்சு ஸ்டேஷன்ல்ல போடாம்ம என்ன பண்ணுவாங்க....
மதன் : ஏன் க்வாட்டர் அவருக்கு பத்தலையா...

குரு : டாய்... இப்படி பேசி பேசியே என்ன ஜெயில்ல போட வச்சிட்ட.. வருஷத்துக்கு முதல் நாளே போலீஸ் லாக்கப் இருக்கோம். இந்த வருஷம் முழுக்க ஜெயில் தான் இருக்க போறோம்.

பாவம் ! இருவரும் கண்ணீருடன் புத்தாண்டை போலீஸ் லாக்கப்பில் கழித்தினர்.

LinkWithin

Related Posts with Thumbnails