வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label புத்தக பார்வை. Show all posts
Showing posts with label புத்தக பார்வை. Show all posts

Monday, February 10, 2020

கலாவிக் ( அறிவியல் புனைவு)

சுஜாதா பிறகு தமிழில் அறிவியல் புனைவு இவ்வளவு ஜாலியாக யாரும் எழுதியில்லை.

இரண்டு மணி நேரத்தில் வாசித்து விடலாம்.ஆகஸ்ட், 2020 புவி கிரகத்தில் ஐந்து பேர் கொண்ட குழு அண்டார்டிக்காவில் ஆராய்ச்சி மேற்கொள்கிறார்கள். 2368 கி.பி ஆண்டில் கலாவிக் என்ற கிரகத்தில் இயந்திர மனிதனை டாக்டர் நீனா என்ற பெண் ஆராய்ச்சி செய்கிறாள். புவியில் இருக்கும் விஞ்ஞானியில் நினைவுகள் கலாவிக் கிரகத்தில் இருக்கும் இயந்திர மனிதனுக்கு வருகிறது. இயந்திர மனிதனுக்கு இருக்கும் நினைவுக்குள் புவி கிரகத்தில் இருக்கும் விஞ்ஞானிக்கு வருகிறது. இரண்டு நிகழ்வுகளும் ஒரே சமயத்தில் நடக்கிறது.

எதிர்காலத்தில் இருந்த ஒருவனுடைய நினைவு எப்படி நிகழ்காலத்தில் வாழும் மனிதனுக்கு வந்தது? நிகழ்காலத்தில் வாழும் மனிதனின் நினைவு எப்படி எதிர்காலத்தில் வாழும் இயந்திர மனிதனுக்கு வந்தது? டாக்டர் நீனா, விஞ்ஞானிகள் எல்லோரும் குழம்புகிறார்கள். அதன்பிறகு என்ன என்பதை நாவலை வாசிக்கவும்.

இலக்கிய நாவல், வரலாற்று நாவல், குடும்ப பெண்கள் நாவல் என்று அதற்காக தனி வாசகர் கூட்டம் இருக்கிறது. ஆனால், அறிவியல் புனைவுக்கு வாசகர்கள் இருந்தாலும் அவர்களுக்கான படைப்புகள் தொடர்ந்து வராமல் இருப்பது துரதிஷ்டம்தான். அந்த துரதிஷ்டத்தை போக்க “கலாவிக்” சரியான நாவலாக இருக்கும்.

நாவலின் குறை என்று சொன்னால் புத்தகத்திற்கு பயன்படுத்திய Fontம், பக்க வடிவமைப்பும் தான் சொல்ல வேண்டும். மிகவும் சுமார்.

ணையத்தில் வாங்க...

Wednesday, November 28, 2018

We Can Books இரண்டாம் ஆண்டில்

நாளை (நவம்பர் 29) We Can Books முதல் வருடத்தை நிறைவு செய்து இரண்டம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 

ஒரு அலுவலகத்தில் பணிப்புரிந்து கொண்டு இதையெல்லாம் செய்கிறோமே என்ற சிறு உறுத்தல். ஒரே சமயத்தில் இரண்டு இன்னிங்ஸ் ஆடுபவன் மீது இந்த சமூகம் எப்போதும் பொறாமையை கண்ணோட்டத்தோடு பார்க்கும். இதையெல்லாம் மீறி புத்தகக் கடை எப்படி நடத்தப்போகிறோம் என்ற அச்சம் உள்ளூர இருந்தது. 





புத்தகக் கடை தொடங்கலாம் என்று யோசனை வரும் போது பலர் கூறியது கூட்டம் நடத்துவதற்கான இடமாக இருக்க வேண்டும். நூல் வெளியிட்டு விழா, விமர்சனக் கூட்டம் நடத்துங்கள். பிரபலங்களை அழையுங்கள். இன்று பல புத்தகக் கடை அப்படி தான் பிரபலமாகியிருக்கிறது. அப்ப்பப்பா.. எத்தனை யோசனைகள். அறிவுரைகள். 

முதலில் என்னால் புத்தகக் கடை நடத்த முடியுமா என்ற சந்தேகம் எனக்கே இருந்தது. மாத சம்பளத்தில் இருந்து ஒரு ரூபாய் கூட கடைக்கு செலவு செய்யக் கூடாது என்று எனக்கு நானே வைத்துகொண்ட நிபந்தனை. முதலில் என் மேல் எனக்கு இருக்கும் சந்தேகத்தை தன்னம்பிக்கையாக மாற்ற வேண்டும். இரண்டாவது, எனக்கு நான் வைத்துகொண்ட நிபந்தனையை நான் மீறக் கூடாது. 

புத்தகக் கடை என்றால் வாடிக்கையாளர்கள் வர வேண்டும். அதுவும் தி.நகரில் கடை. வாடகை அதிகம். உதவிக்கு வேலை ஆள் ஒருவர். அவருக்கு சம்பளம். அதுவும் புத்தகத்துறையில் ஆர்வமானவராக இருக்க வேண்டும். எப்படியும் மாதம் ரூ.35000-40000 வரை செலவு இருக்கும். 

குகன். ஒரு தனி மனிதன். எந்த இலக்கிய அமைப்பின் ஆதரவில்லை. அரசியல் பின்னனி கிடையாது. பூர்வீக சொத்து என்று எதுவுமில்லை. இங்கிருந்து வந்தவன் என்று என்னை அடையாளம் காட்ட முடியாது. 

”ஒரு இலக்கிய அமைப்போடு சேர்ந்து செயல்படுங்கள். அவர்கள் மூலம் பல வாடிக்கையாளர்கள் வருவார்கள்” என்றார்கள். அது தற்காலிகமாக வருமானத்தை கொடுக்கும். ஆனால், நான் செல்லவிருக்கும் தூரத்திற்கு பயணத்திற்கு ஒரு இலக்கிய அமைப்பு ஆதரவு மட்டும் போதாது. அப்படி என்னை அடையாளப்படுத்திக் கொள்ளவும் விரும்பவில்லை. 

 பலர் கொடுத்த யோசனைகள், அறிவுரைகள் ஒதுக்கிவிட்டு எனக்கு தோன்றிய ஒரு யோசனை தான் “Book Distributors”. 

பெரிய பதிப்பகங்களில் புத்தகங்களை மொத்தமாக அதிக கழிவில் வாங்கி புத்தக விற்பனையாளர்களுக்கு விற்பது. எதிர்காலத்தில் பதிப்பகங்களை விட சொந்தமாக நூல் வெளியிடும் எழுத்தாளர்கள் தான் அதிகமாக இருப்பார்கள். அவர்களால் எல்லாக் கடைகளுக்கும் புத்தகங்களை விநியோகம் செய்ய முடியாது. புத்தக விற்பனைக்கென்று ஒரு அலுவலகம் வைத்துகொள்ள முடியாது. அப்படி செய்ய முயற்சித்தால் அந்த எழுத்தாளரின் எழுதும் நேரத்தை பாதிக்கும். இந்த விஷயத்தை மனதில் வைத்து கொண்டு தொடங்கப்பட்டது தான் “We Can Books”. 

தற்போது வம்சி புக்ஸ், எதிர் வெளியீடு, மஞ்சுல், வளரி வெளியீடு என்று நான்கு பதிப்பக நூல்களை புத்தக விற்பனையாளர்களுக்கு (Cash & Carry Basisல்) கொடுத்து வருகிறோம். இன்னும் சில எழுத்தாளர்களில் புத்தகங்களை விநியோகம் செய்கிறோம். 

புத்தக விநியோகக்கடை என்பதால் வாசகர்கள் நேரடியாக வந்தால், புத்தகம் கொடுக்க மாட்டோம் என்பதில்லை. எங்களுக்கு புத்தக விற்பனையாளர்கள் எந்த அளவுக்கு தேவையோ, வாசகர்களில் நேரடி ஆதரவு தேவை. 

இரண்டாம் வருடத்தில் நுழைவது வெற்றி அல்ல… வெற்றியை நோக்கியப் பயணம். 

முகவரி : 
We Can Books 
57, Ground floor, PMG Complex, 
Near T.Nagar Bus Terminus 
T.Nagar, Chennai - 600017 
www.wecanshopping.com 
Ph : 9940448599, 044 - 4286 7570

Monday, October 9, 2017

நீயும் பொம்மை நானும் பொம்மை – ராஜேஷ் குமார்

முதல் இரண்டு அத்தியாயம் படித்ததும் ராஜேஷ் குமார் நாவல் தவறாக நினைத்து, இந்திரா சௌந்தரராஜன் நாவல் படிக்கிறோமோ என்ற சந்தேகம் வந்து அட்டைப்படத்தை திரும்பி பார்த்தேன். அத்தியாயம் செல்ல செல்ல எழுத்தாளர் பெயர் தவறாக அச்சடிக்கப்பட்டதோ என்ற சந்தேகம் கூட வந்தது. காரணம், கதை நடக்கும் களம் உச்சிமலைச் சித்தர் குறித்தக் கதை. நாவல் முடியும் போது அக்மார்க் ராஜேஷ் குமார் நாவலாக முடிந்தது. 



இறந்தப் பெண்ணின் உயிரை மீண்டும் கொண்டு வரும் சித்தர். அதை செய்தியாக வெளிகொண்டு வர நினைக்கும் பத்திரிகையாளர்கள். அவரை கொள்ள துடிக்கும் தீவிரவாதிகள் என்று கதை முழுக்க உச்சிமலை சுத்தியே நடக்கிறது. கடைசியில் எல்லா கேள்விக்கும் விடைக்கிடைக்கிறது. 

Low budget thriller படம் எடுக்க நினைக்கும் இளம் இயக்குனர்கள் ராஜேஷ்குமார் அவர்களிடம் அனுமதிப் பெற்று இதை திரைக்கதையாக்கலாம். கோரியன், ஹாலிவுட் படங்களில் இருக்கும் திரில் படங்களை சுடுவதை விட நம்மவூர் பட்டுக்கோட்டை பிரபாகர், சுபா, ராஜேஷ்குமார் நாவல்களை உரிமைப் பெற்று திரைப்படமாக்கினால் Minimum Guanertee வெற்றிக்கிடைக்கும். 

உதாரணத்திற்கு, The Client என்ற கோரியன் படம். ஆரம்பத்தில் நடக்கும் கொலையும், அதை தொடர்பான வழக்கும் தான் கதை. இறுதியில் வரும் க்ளைமாக்ஸ் காட்சி நல்ல ட்விஸ்டாக இருக்கும். ஆனால், ட்விஸ்டை ராஜேஷ் குமார் நாவலை வாசிக்கும் வாசகர்களுக்கு பழக்கமான ஒன்று. 

திரைப்படங்களுக்கு நல்ல எழுத்தாளர் இல்லை என்பது பெரிய குறையாக இருக்கிறது பல இயக்குனர் நண்பர்கள் சொல்ல கேட்டிருக்கிறேன். 

நம்மவூருக்கான கதை நிறைய எழுதப்பட்டிருக்கிறது. எழுத்தாளருக்கு Credit கொடுத்து திரைப்படமாக்கும் நல்ல இயக்குனர்கள் இல்லை என்பது தான் உண்மை. 

**
நீயும் பொம்மை நானும் பொம்மை
– ராஜேஷ் குமார்
- Rs.70

இணையத்தில் வாங்க....

Tuesday, October 3, 2017

வெட்டாட்டம் - ஷான்

சுஜாதாவின் அத்மா ஷான்னின் பேனா வழிப்புகுந்து எழுத வைத்திருக்கிறது. உண்மையில் சுஜாதா உயிரோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நாவலை தொடராக எழுதியிருப்பார். வெட்டாட்டம் எழுதிய ஷானை ஆயிரம் முறை பாராட்டலாம் !! 

செம்பரப்பாக்கம், கூவத்தூர் ரெஸார்ட், மருத்துவமனையில் முதல்வர் என்று அனைத்து சமக்கால சம்பவ அரசியல் சம்பவங்களை புனைவுகளாக கோர்க்கப்பட்டு எழுதப்பட்ட த்ரில்லர் நாவல். 

ஆரம்பத்தில் நாவலின் ஒன் – லைன் பற்றி கேள்விப்படும் போது தெலுங்குபடம் Leader தான் நினைவுக்கு வந்தது. ( ஜகன் மோகன் ரெட்டி கொஞ்சம், ராகுல் காந்தி கொஞ்சம் மனதில் வைத்து எடுக்கப்பட்ட படம் அது). ஏறக்குறைய சில அத்தியாயங்கள் அந்தப்படத்தில் வரும் காட்சியை நினைவுப்படுத்தினாலும், பல விஷயத்தில் நாவலும், படமும் வேறுப்படுகிறது. 



பல முறை விளையாடிய தாயக்கட்டை விளையாட்டு, வெட்ட வெட்ட தாயக்கட்டை உருட்ட இன்னொரு வாய்ப்பு கிடைக்கிறது. எதிரிகளின் காய்களை வீழ்த்தும் போது ஒரு சந்தோஷம் பிறக்கிறது. எதிரிகள் முன்பு நமது காய்களை பழுக்க வைப்பதில் சுகம். 

நாம் வெற்றிப்பெற்றுவிட்டோம் என்பதை விட எதிரியை வீழ்த்திவிட்டோம் என்ற பூறிப்பு தான் தாயக்கட்டை விளையாட்டின் எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். அந்த அளவுக்கான சந்தோஷம் நாவலை முடிக்கும் போது வருகிறது. 

இப்படி ஒவ்வொரு அத்தியாய தொடக்கத்திலும் தாயக்கட்டை ஆட்டத்தின் விதிமுறைகள் கூறப்படுகிறது. அந்த விதிமுறையும், அந்த அத்தியாயத்திற்கும் தொடர்புடையதாக இருக்கிறது. அரசியல் சதுரங்க விளையாட்டில் ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என்ன செய்யப்போகிறது, பிரச்சனை எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்று விறுவிறுப்பாக செல்கிறது. மொத்தம் ஐந்து மணி நேரத்தில் வேகமாக படித்து முடிக்கலாம். ஒரு திரைப்படத்திற்கான கதை, திரைக்கதை இதில் இருக்கிறது. ஆனால், தற்போதிய ஆட்சி கலைக்கப்பட்டால் மட்டுமே இந்த நாவல் திரைப்படமாக மாறுவது சாத்தியம். 

ஷான்னுக்கு ஒரு வேண்டுக்கோள், 

தயவு செய்து தீவிர இலக்கியம் பக்கம் வந்துவிட வேண்டாம். அப்படி ஒரு ஆசை இருந்தால் மறந்துவிடுங்கள். தீவிர இலக்கிய எழுத்தை மேற்கொள்ள பலர் இருக்கிறார்கள். ஆனால், இதுப் போன்ற Pulf-Fiction எழுத ஆட்கள் குறைவாக இருக்கிறார்கள். 

**
வெட்டாட்டம் 
- ஷான்  
- யாவரும் பதிப்பகம்
- Rs.240
 

Wednesday, July 5, 2017

அஜ்வா – சரவணன் சந்திரன்

நபிகள் நாயகம் உண்ட பழத்தின் பெயரான ‘அஜ்வா’ பெயர் தாங்கி நாவல் பழமாக வந்திருக்கிறது. 

சென்னை புத்தகக் கண்காட்சியில் பல வாசக நண்பர்களிடம் ஜீவ கரிகாலன் “அஜ்வா” நாவலை பற்றி சொல்லும் போது எனக்கும் அந்த நாவலை படிக்க வேண்டும் என்பது போல் இருந்தது. ஒரு இனிய மாலைப் பொழுதில் ‘அஜ்வா’ வாசிக்க வாய்ப்பு கிடைத்தது. 


போதை மருந்து உட்கொள்பவனும், அவனை சுற்றி நடக்கும் உலகமான கதையில் நம்மை அறியாமல் போதை மருந்து மீது விருப்பத்தை வளர வைக்கிறார். போதை மருந்துக்கும், குடிப் போதைக்கும் கொடுக்கும் ஒப்பீடு ரசிக்க முடிகிறது. ஆனால், கருத்தளவில் என்னால் ஏற்க முடியவில்லை. 

”எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாக பெருதன்மையுடன் நடந்துகொள்வதும் பழிவாங்கும் உணர்ச்சிதான்.” இப்படி பல இடங்களில் பாத்திரங்கள் பேசும் வசனம் போதை மருந்தை உண்பதற்கான பல நியாயங்களை கற்பிக்கிறது. 

குறிப்பாக 16வது அத்தியாயத்தில் கிண்டி சமாதியில் போதை மாஃபியா எப்படி இயங்குகிறது சொல்கிறார். 

80களில் சிவசங்கரி எழுதிய “ஒரு மனிதனின் கதை” குடிப்போதையில் பாதிக்கப்பட்ட தியாகு பாத்திரத்தை பேசியதோ, போதை மருந்தால் பாதிக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கையை பேசுவதில் “அஜ்வா” முக்கிய நாவலாக திகழ்கிறது. 

வாழ்த்துகள் சரவணன் சந்திரன் !! 

இணையத்தில் வாங்க...

Wednesday, June 14, 2017

உலக சினிமா - ஓர் பார்வை

சரியாக 5 வருடங்களுக்கு முன்பு வந்த புத்தகம். 'உலக சினிமா' என்ற பெயரைக் கேட்டாலே டூ-ஸ்டெப்-பாக் போய்க்கொண்டிருந்த என் போன்றவர்களிடமும் ஈரான், சௌத் கொரியா, லத்தீன் அமெரிக்கா என்று கொஞ்சம் கொஞ்சமாக தரமான சினிமா படிப்படியாக பிரபலமாகத் தொடங்கியிருந்த காலகட்டம். கடை கடையாக ஆங்கிலப் பட டி.வி.டி-களைத் தேடிக்கொண்டிருந்த நான், உலக சினிமா டி.வி.டி-களை சேகரிக்கத் தொடங்கியிருந்தேன். ப்ளாகராக நான் தொடர்ந்து வாசித்து திரு. குகன் கண்ணன் ( www.wecanshopping.com ) சென்னைப் புத்தகக்கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை வெளியிடும் தகவல் அறிந்து ஆன்-லைனில் வாங்கினேன். உலக சினிமா கட்டுரைகளை எளிய நடையில் எழுதி வந்த வெகுசில ப்ளாகர்களில் குகனும் ஒருவர். ஸினாப்சிஸ் அளவில் தான் கதையைச் சொல்வார் என்பதால் வளவளவென்று பெரிய பதிவுகளாக இல்லாமல் படம் பார்க்கும் முன் நமக்கு என்ன தெரியவேண்டுமோ அதை மட்டும் தரும் சிறிய பதிவுகளாகவே இருக்கும்.



கமர்ஷியல் சினிமா தாண்டி உலக சினிமா என்று வகைபடுத்தப்படும் இது தான் தரமான, நல்ல சினிமா நீங்கள் பார்க்கும் கமர்ஷியல் மசாலா குப்பைகள் அல்ல என்று விஷயம் தெரிந்தவர்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அந்த வகை சினிமாக்களில் அப்படி என்ன தான் ஸ்பெஷலாக இருக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அருமையான அறிமுக கைடு. எடுத்த எடுப்பிலேயே பெலினி, கோடார்டு, பெர்க்மென் என்று முயற்சி செய்தால் அடுத்து உலக சினிமா என்றாலே மிரளத் தொடங்கிவிடுவீர்கள். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிப்பது போன்ற ஆபத்தான முயற்சி அது (பெர்சனலான என்னைக் கேட்டால் குப்ரிக், குரசோவா, ஹிட்ச்காக், மஜித் மஜிதி படங்களிலிருந்து தொடங்கலாம்). மெல்ல மெல்ல உங்களைத் தயார் படுத்ததிக்கொள்ள இந்தப் புத்தகத்தில் திரு. குகன் அறிமுகப்படுத்தியிருக்கும் 19 படங்கள் நல்லதொரு ஆரம்பம். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் மிக முக்கியமான திரைப்படங்கள். The Stoning of Saroya M என்ற அற்புதமான படத்தை இந்த புத்தகத்திலிருந்து தான் தெரிந்து கொண்டேன். 

எழுத்தாளர் குகன் இதுவரை - 'உலகை உழுக்க வைத்த இனப்படுகொலைகள்', இந்திய உளவுத்துறை, தேவர், முசோலினி, கலைஞரின் நினைவலைகள், பெரியார் ரசிகன், என்னை எழுதிய தேவதைக்கு, எனது கீதை, உலக சினிமா, கார்ப்பரேட் சாமியார்கள், உளவு ராணிகள், கலாம் கண்ட கனவு, கவிதை உலகம், நடைபாதை (சிறுகதைகள்) என்று சினிமா தவிர்த்து கட்டுரைத் தொகுப்பு, கவிதை, அரசியல் என்று வெவ்வேறு ஏரியாக்களில் புத்தகங்கள் எழுதியுள்ளார். 

இந்தப் புத்தகத்தை எடுத்துக்கொண்டால் ஒரே ஒரு சிறிய குறை. பார்த்தவுடன் கையில் எடுத்துப் பிரித்துப் பார்த்து உடனே வாங்கத் தூண்டும் ஃபினிஷிங் இல்லை. நல்ல கன்டென்ட் இருக்கிறது ஆனால் கண்டவுடன் கவர்ந்திழுக்கும் 'கவர்ச்சி' இல்லை. என்ன செய்வது, a book cannot be judged by it's cover என்பது உண்மை தான். a good book should also have a good cover என்பது நிதர்சனம். கவர் கவரவில்லை என்றால் நம்மாட்கள் வாங்க மாட்டார்கள்.

நன்றி பிரதீப் செல்லத்துரை. 

** 
பதிப்பகம் - கௌதம் பதிப்பகம் 
விலை - ரூ. 50/-

Friday, June 2, 2017

பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்

19ஆம் நூற்றாண்டில் துருக்கி மொழியில் ஐந்து தொகுதிகளாக வந்த நூலின் சுருக்கம். அச்சில் வெளிவந்தது பத்தொம்பதாம் நூற்றாண்டாக இருந்தாலும் எந்த ஆண்டில் எழுதப்பட்டது என்று சரியான குறிப்புகள் இல்லை. 18ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் எழுதப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

பல நூற்றாண்டு முன் இலக்கியமல்லாத ஒரு புத்தகம் இவ்வளவு முக்கியத்துவம் பெரும் காரணம், இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமையை எப்படி சீர்குழைக்க வேண்டும் என்று பிரிட்டன் பேரரசு இரகசியமாக சேகரித்த முக்கியமான ஆவணமாக இருப்பதால் தான். 



18ஆம் நூற்றாண்டில் ஓட்டோமன் பேரரசை சீர்குழைக்க இஸ்லாமிய வேடத்தில் பிரிட்டிஷ் உளவாளியான ஆலிவர் ஹெம்பர் ஊடூருவினார். அங்கு அவர் மேற்கொண்ட அனைத்து வழிமுறைகளை தனது நினைவுக்குறிப்புகளாக இந்த நூலில் எழுதியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல், இஸ்லாமிய நாடுகளை தகர்க்க பிரிட்டன் அரசு ஆவணப்படுத்தியிருக்கும் ரகசிய அறிக்கையும் இதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 

அந்த அறிக்கையில் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதற்கு ஒரு நூற்றாண்டு காலம் தேவைப்பட்டாலும், தங்களுக்கு அடுத்து வரும் பிரிட்டன் அதிகாரிகளுக்கும், பேரரசுக்கும் உதவியாக இருக்கும் என்பது தான் அந்த உளவாளியின் நோக்கம். ஏற்கக்குறைய அவர்களின் நோக்கப்படி சில இஸ்லாமிய தேசங்களை அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார்கள். பாகிஸ்தான் அமெரிக்க அனுதாபியாக இருக்கிறது. ஓட்டோமன் சாம்ராஜ்ஜியத்தில் இஸ்ரேல் தேசம். இன்னும் சில இஸ்லாமிய தேசங்கள் அமெரிக்காவுக்கு அஞ்சி அமைதியாக இருக்கிறது. 

பிரிட்டனுக்கு பதிலாக அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இஸ்லாமிய தேசங்களை தகர்ப்பதில் ஆர்வம் காட்டுகிறது. இதில் பிரிட்டன் தயாரித்த இரகசிய அட்டவனையில் எந்த மாற்றம் செய்யாமல் திட்டம் போட்டு செயல்படுத்திவருகிறார்கள். 

இஸ்லாமிய தேசம் ஒன்றுப்படாமல் இருப்பதற்கு ஏகாப்பத்திய நாடுகளில் இரகசிய அறிக்கையாகவே இந்தப் புத்தகம் இருக்கிறது. அவசியம் வாசிக்க வேண்டிய நூல்… !!! 


***
பிரிட்டிஷ் உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் 
- ஆலிவர் ஹெம்பர் ( தமிழில் : நாஞ்சிலான்)
- அடையாளம் வெளியீடு
 - ரூ.80

இணையத்தில் வாங்க...

Thursday, March 30, 2017

கேளிக்கை இரவுகள் - நக்ஷத்ரா

சென்னையின் இரவு வாழ்க்கையைப் பற்றிய புத்தகம். குடி, செக்ஸ் பற்றி தான் அதிகம் பேசுகிறது. தலைவர் சாரு பேசாததா என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு பெண் இவ்வளவு வெளிப்படையாக சொல்லும் போது இந்தப் புத்தகம் அதிக முக்கியத்துவம் பெருகிறது. 

தான் குடிப்பதாக இருந்தால், தனது பார்டனை குடிக்கக்கூடாது என்று சொல்லிவிடுவாராம். செக்ஸின் போது இருவருமே போதையில் இருந்தால் முழுமையான உறவு பெற முடியாது என்பதை கூறுகிறார். ( நான் உடன்படாத கருத்து. செக்ஸ் இருவருமே சுயநினைவில் அனுபவிக்க வேண்டிய ஒன்று. ஒருவர் போதையில் சுயநினைவில்லாமல் இருக்கும் போது செக்ஸ் என்பது கற்பழிப்புக்கு சமம்.) 



இப்படி நூல் முழுக்க கருத்தளவில் நீங்கள் மறுக்கும் பகுதிகள் ஏராளமாக இருக்கிறது. ஆனால், ஒரு பெண் குடியின் ரசனையோடு எழுதியதால் எனக்கு இந்தப் புத்தகம் பிடித்திருந்தது. வாசிக்கும் போது இரண்டு பேக் அடிக்க வேண்டும் என்று கூட தோன்றியது. 

 ஒரு முறை ஜெயமோகன் தமிழை ஆங்கிலத்தில் எழுதலாம் என்று சொல்லி சர்ச்சையை கிளப்பியது நினைவில் இருக்கலாம். ‘கேளிக்கை இரவுகள்’ ஆங்கிலத்தை தமிழில் எழுதிய நூல். அதிகமான ஆங்கில வார்த்தை தவிர்த்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். முகம் தெரியாத ’ நக்ஷத்ரா’ வுக்கு என் வாழ்த்துகள். 

**

கேளிக்கை இரவுகள்
- நக்ஷத்ரா
- Rs.50
- மின்னம்பலம் வெளியீடு

நூலை இணையத்தில் வாங்க....

Thursday, February 23, 2017

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் – ச.தமிழ்ச்செல்வன்

தனிப்பட்ட முறையில் எனக்கு கம்யூனிசக் கொள்கையில் பெரிய ஈடுபாடு கிடையாது. காரணம், நான் நாளைய முதலாளி. என்றாவது ஒரு நாள் முதலாளியாகிவிடுவோம் என்று நம்பிக்கையில் உழைப்பவர்களால் கம்யூனிசத்தை ஏற்பது கடினம். முதலாளி கனவோடு இயங்குபவர்கள் எட்டு மணி நேரத்திற்கு மேல் உழைக்கத் தயாரானவர்கள். அவர்களுக்கு கம்யூனிசக் கொள்கை ஏற்புடையதாக இருக்காது.

ஆனால், ஒரு தொழிலாளருக்கு பிரச்சனை என்று வரும்போது அவர்களுக்காக களம் இறங்கிப்போராடும் தொழிற்சங்க இயக்கம் என்பதை மறுக்க முடியாது. அதனால், அவர்கள் மீது ஒரு சாப்ட்கார்னர். 

முக்கியமாக அரசாங்க ஊழியர்கள் சார்ந்திருக்கும் அமைப்புகளையும், இயக்கங்களை குறிப்பிட்டு சொல்ல வேண்டும். சம்பளம், போனஸ், பஞ்சப்படி போன்ற எல்லா விஷயத்திலும் அவர்களுக்காக பேசக்கூடியவர்கள், போராடக்கூடியவர்கள் இவர்கள் தான். அதனால், ஊழியர்கள் தங்கள் நலனுக்காக இதில் இணைத்துக்கொள்வதில் நன்மை இருக்கிறது. 




ச.தமிழ்ச்செல்வன் அஞ்சல்துறையில் பணியாற்றும் தொழிலாளர் சங்கத்தின் ஏற்ப்பட்ட அனுபவங்கள், சங்கத்தோழர்கள் குணாதியங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் என்று பல தரப்பை சொல்கிறது. ஒவ்வொருத்தரோடு பற்றிய அனுபவக் கட்டுரையும் தனி சிறுகதையாக வர வேண்டியது என்று சொல்லலாம். 

தோழர்களின் தத்துவம் சாமான்யங்களுக்கு ஏதார்த்தத்திற்கு ஏற்புடையதாக தெரியாது. ஆனால், தோழர்களுக்கு தத்துவம் தப்புக்கிடையாது, அது நடைமுறை கோளாறு என்பார்கள். 

இந்தப் புத்தகம் அவர்களின் போராட்டத்தை மட்டும் பேசவில்லை. அவர்களுக்குள் இருக்கும் அன்பு, பழக்கம், உதவும் மனப்பான்மை போன்ற பல விஷயங்கள் பேசுகிறது. சொந்தப் பணத்தில் கூட்டம் நடத்துபவர்களைப் பார்த்து அனுதாபப்படவில்லை. ”சங்கத்துக்கு கைப்பணத்தை செலவழிப்பதும், சங்கப்பணத்தை சொந்தச் செலவுக்கு எடுப்பது ஒரே விளைவைத்தான் ஏற்படுத்தும்” என்ற அறிவுரை கூறுகிறார். 

ஒரு தோழன் வீழ்ந்தால்… இன்னொரு தோழன் எழுவான் என்ற வாசகம் என்ற வாசகத்தோடு முடிக்கும் போது, “அது நான் தான்” என்று தமிழ்ச்செல்வன் சொல்லும்போது வாசகன் சத்தமாக ” ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று சொல்லத்தோன்றும். 

பிறந்த நாள் பரிசாக இந்தப் புத்தகத்தை பரிசளித்த உரத்த சிந்தனை அமைப்புக்கும், உதயம்ராமுக்கும் நன்றி !! 

** 

ஜிந்தாபாத் ஜிந்தாபாத் 
– ச.தமிழ்ச்செல்வன் 
- Rs.130 

Monday, February 13, 2017

இல்லுமினாட்டி – கார்த்திக் ஸ்ரீநிவாஸ்

ஒரு நாட்டை ஆட்சி செய்பவர்கள் அரசியல்வாதிகள் அல்ல. கார்ப்ரேட் நிறுவனங்கள். அவர்களின் மகுடிக்கு அதிகாரவர்கம் ஆடுகிறது என்று நினைத்திருந்தேன். ஆனால், அந்த அம்பானி, அதானி போன்ற கார்ப்ரேட் நிறுவனங்களையே ஆட்டி வைக்கும் ஒரு குழு இருக்கிறது. பில் கேட்ஸ், வாரன் ஃபவர்ட் போன்று உலகின் நம்பர் 1 பணக்காரர் பந்தயத்தில் அவர்கள் கலந்து கொள்ளவதில்லை. அந்த நம்பர் 1 பணக்காரர் யார் என்பதை தீர்மானிப்பவர்கள் !! 

நம்பர் 1 பணக்காரர்களை விட அதிகப் பணம் வைத்திருப்பவர்கள். அதிகாரம் வைத்திருப்பவர்கள். உலகத்தை நோட்டம் விடுபவர்கள். இந்த உலக அரசியலை தங்களுக்காக மாற்றுபவர்கள். தங்களுக்கு எதிராக இருப்பவர்களை ஒழித்து கட்டுபவர்கள். எல்லா சம்பவங்களுக்கு பின்னால் அவர்கள் இருக்கிறார்கள். 

அவர்களின் பெயர் ”இல்லுமினாட்டி”. 



இவர்களின் அருளில்லாமல் எதுவும் நடவாது. யாராவது எதிர்த்தால் அவர்களுடைய உடலில் ஒரு அணுவும் அசையாது. அடையாளம் தெரியாமல் தொலைந்து போவார்கள். அல்லது திட்டமிட்ட விபத்தில் இறப்பார்கள். வழக்கு, நீதி மன்றம் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர்கள். 

ராக் ஃபெல்லர், ஜான் எஃப்.கென்னடி, லீ குவான் யூ என்று இல்லுமினாட்டி பெயர்களை இந்த நூல் பட்டியலிடுகிறது. ஒரு கட்டத்தில் இந்த உலகத்தில் யார் தான் உண்மையான உழைப்பில் உயர்ந்தார்கள் என்ற சந்தேகத்தை இந்த நூல் விதைக்கிறது. இன்னும் சொல்லப்போனால் நம்மை சுற்றியிருக்கும் உலகத்தை சந்தேகப்பட வைக்கிறது. 

ஒவ்வொரு அத்தியாயம் மிக ஸ்வாரசியமாக இருக்கிறது என்பதை விட மிக அதிர்ச்சியான தகவல் கொண்டிருக்கிறது. 

அவசியம் வாசிக்க வேண்டிய நூல். 

** 
இல்லுமினாட்டி 
– கார்த்திக் ஸ்ரீநிவாஸ் 
- Rs.133 

Thursday, February 2, 2017

மாண்புமிகு உளவுத்துறை - வே.இராமநாதன்

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ரிப்போர்ட்டை விடக்கட்சிக்காரர்களைத்தான் அதிகமாக நம்புவார். செல்வி ஜெயலலிதாவோ உளவுத்துறையையும் நம்பமாட்டார், கட்சிக்காரர்களையும் நம்பமாட்டார். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யக் கூடியவர். 


தமிழகத்தின் வரலாற்றில் கலைஞருக்கு மிக முக்கிய இடமுண்டு. மிகச்சிறந்த ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் உடைய தலைவர்கள் அவருக்கு நிகராக இந்திய வரலாற்றில் யாரையேனும் சொல்ல வேண்டுமென்றால் வெகுநேரம் யோசிக்க வேண்டியிருக்கும். 


தன் பாதுகாப்பு அதிகாரிகளை நல்ல முறையில் நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அவர்கள் சாப்பிட்டார்களா ? என்ன சாப்பிட்டார்கள் ? எது அவர்களுக்கு பிடிக்கும் என்பதையெல்லாம் கவனித்துக்கொள்வார். ஏதாவது விசேஷம் என்றால் அன்பளிப்புகளைத் தாராளமாக வழங்குவார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குப் போவதென்றால் போலீஸாருக்குக் குஷிதான். ஆனால், ஒரு விஷயம். எம்.ஜி.ஆரின் மேடைப்பேச்சு அவரது புகழுக்கு ஏற்ற வகையில் தெளிவாக இருக்காது. 




இப்படி முக்கியமான அரசியல் தகவலை கொடுத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. 1964 – 1999 வரை 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய வே.இராமநாதன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அரசியல் ஆர்வமுள்ளவர்கள், உளவுத்துறை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இணையத்தில் வாங்க....

Tuesday, November 22, 2016

காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு - பா. தீனதயாளன்

ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ். 

திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு. திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார். 



 “எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !!  ) 

மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம். 

சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான். 

ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!! 

”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது. நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி. 

இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது. 

ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார். 

பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன். 

 “Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.

கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.


Monday, October 24, 2016

எப்படி ? இப்படி ? - பட்டிக்கோட்டை பிரபாகர்

ஒவ்வொரு மர்ம நாவலுக்கு பின்னால் எதோ உண்மையான குற்றம் ஒழிந்திருக்கிறது. உண்மையும், புனைவும் கலந்த ஒரு புள்ளி தான் மர்ம நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அப்படி மர்ம நாவலின் ஆசானான பட்டிக்கோட்டை பிரபாகர் புனைவு அல்லாத உண்மை சம்பவங்களின் குற்றத்தைப் பற்றி எழுதியிருக்கும் நூல் ‘எப்படி ? இப்படி ?’. 



தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் மர்லின் மன்றோ மரணம் பின் வரை நடந்த சம்பவங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று 31 உண்மை குற்றச் சம்பவங்களை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவம் மர்மமான சிறுகதை போல் இருக்கிறது. சில வழக்கின் தீர்ப்புகள் இந்திய நீதிமன்றத்தில் பணம் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. 

உண்மை குற்றவியல் சம்பவங்களை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்… 

Wednesday, October 19, 2016

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன் !

என் பிரியமான போட்டியாளர் என்.சொக்கன். 

“இதை நான் சொல்லும் போது எனக்கு நீயெல்லாம் போட்டியாளனா என்று சொக்கன் நினைக்கக்கூடும். 

ஐம்பதுக்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருப்பார். நான் முப்பது புத்தகம் கூட தாண்டியிருக்க மாட்டேன். அதில் பாதி அச்சில் கூட வரவில்லை.

சொக்கன் எழுத்தில் சந்திப்பிழை இருக்காது. எனக்கு சந்தி தாண்டவமாடும். ( இந்தப் பதிவில் எத்தனை சந்திப்பிழை இருக்கிறது என்பதை பார்த்தால் உங்களுக்கே என்னைப் பற்றி தெரியும்.) 

ஏணி வைத்து எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் சொக்கனை நான் ஏன் போட்டியாளராக நினைக்க வேண்டும்? 

அதற்கும் காரணம் இருக்கிறது. கிழக்கு பதிப்பகத்தில் புத்தகம் எழுத பா.ரா தொடர்பு கொள்ளும் போதெல்லாம், “இந்த புக் சொக்கன் எழுதுறான்” என்பார். அல்லது சொக்கன் எழுதி முடித்து புத்தகமாக வந்திருக்கும். ஒவ்வொரு முறையும் கஷ்டப்பட்டு ஏதாவது தலைப்பு நான் யோசிப்பதற்குள், சொக்கன் செயலில் இறங்கிவிடுவார். 

ஐ.டி.ஊழியர்களைப் பற்றி எழுதலாம் ? என்று பா.ராவிடம் சொல்லும் போது, சொக்கன் விகடன்ல “வல்லினம் மெல்லினம் இடையினம்” தொடர் எழுதுவதாக கூறினார். 

I give up. கிழக்கில் எழுதுவது தான் பிரச்சனை. Prodigy எழுதலாம் என்று “கலீலியோ கலீலி”, ”ரைட் சகோதரர்கள்” எழுதினேன். 

”RAW இந்திய உளவுத்துறை” எழுதலாம் என்று நினைக்கும் போது, “ அப்பா சொக்கா !!! RAW நீங்க எழுத தொடங்கலையே” என்று கேட்டேன். 

“எழுதலாம் நினைச்சேன். வேற வேலையில விட்டுட்டேன்.” என்றார்.

”புண்ணியமா போகும். எழுதாதீங்க… நா எழுதுறேன்” என்று சொல்லி எழுதத் தொடங்கியது தான் R.A.W. 

F.B.I., C.I.A., Mossad, K.G.B என்று எழுதியவர் ‘R.A.W’ எழுதவிடாமல் செய்த அவரின் பணிகளுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். 

ஓ.கே… ஜோக்ஸ் அப்பார்ட். 



ஜிப்ரான் கதைகளை மிட்டாய் கதைகள் என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார். வாழ்க்கை வரலாறு, வரலாறு, தொழிட்நுட்ப கட்டுரைகள் பல எழுதியிருக்கிறார். ”தினம் ஒரு பா” என்று மரபு இலக்கியத்தையும் விட்டு வைக்கவில்லை. ‘நல்ல தமிழில் எழுதுவோம்’ என்று இலக்கணத்தையும் விட்டு கொடுக்கவில்லை. 

சமக்காலத்தில் ஒரு Versatile Writer என்று சொன்னால் என்.சொக்கனை குறிப்பிடுவேன். நேர்த்தியான நடையை முழுவதுமாக குத்தகைக்கு எடுத்து எழுதியது போல் இருக்கும். 

அவர் ஆரம்பக்கால சார்லி சாபிளின் வரலாறு தொடங்கி அம்பானி, நாராயண மூர்த்தி, அயோத்தி, F.B.I., C.I.A., Mossad, K.G.B, அக்பர் என்று அவரின் பெரும்பாலான புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். 

இப்போது சொக்கனை பற்றி எழுதுவதற்கு முக்கிய காரணம் “வண்ண வண்ணப் பூக்கள்” நூல். 

இயல், இசை, நாடகம் குறித்து அவர் கூறும் விளக்கம், பொருள் என்று வித்தியாசமான அனுபவத்தை கொடுத்தது. குறிப்பாக, பாடகர்கள் மாற்றி உச்சரிக்கும் வார்த்தைகளால் பாடலாசிரியர் எழுதிய பொருள் மாறுப்படுவதை எடுத்து கூறிய விதம் ரசிக்கும் படியாக இருந்தது. 

இந்தப் புத்தகம் வாசிப்புக்கான நூல் இல்லை. ரசனைக்கான நூல். இன்னும் சொல்லப்போனால் ரசனையோடு வாசிக்கப்பட வேண்டிய புத்தகம். இதை வாசித்தப் பிறகு அவர் குறிப்பிட்டிருக்கும் பாடலை மீண்டும் கேட்கிறேன். இந்த அளவுக்கு நுணுக்கமான ரசனை கொண்டவரா சொக்கன் என்று வியக்க வைக்கிறார். 

ஒரு முறை பத்ரி கூறியிருக்கிறார், “புத்தகம் எனக்கு விற்பனை பண்டம்” என்று. எனக்கும் அப்படி தான். என் பொருளாதார நிலைமை அப்படி நினைக்க வைக்கிறது. ஆனால், சொக்கனுக்கு புத்தகம் என்பது புத்துயிர் கொடுக்கும் அமிர்தம். 

குறிப்பாக, “ஏழு கருவிகள்” என்ற கட்டுரையில், ”எல்லாம் ஒழுங்காக வர வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் இல்லை. கலை மீது இருக்கும் அக்கறை, தன்னுடைய படைப்பின் மீது இருக்கும் முனைப்பு. 

 உண்மையில், சொக்கனிடம் இருந்து நான் கற்க நினைத்து, இன்று வரை கற்க முடியாமல் நிரம்ப இருக்கிறது. 

Monday, August 1, 2016

என் கதை – கமலாதாஸ்

இந்தியாவில் அதிகம் விற்பனையான பெண் சுயசரிதை என்றால் கமலாதாஸின் “என் கதை” தான். 

இதற்கு முன் தமிழில் காப்புரிமையில்லாமல் கமலாதாஸின் “என் கதை” சுமாரான எழுத்துநடையில் வந்திருக்கிறது. எதுவும் வாசிக்க உகந்ததாக இல்லை. காலச்சுவடு பதிப்பகம் முறையாக காப்புரிமை வாங்கி வெளியிட்டு இருக்கிறார்கள். 

இந்த நூல் மலையாளத்தில் “என்டே கதா” என்ற பெயரில் வெளியிட்ட வருடம் 1973. அப்போது, கமலாதாஸூக்கு வயது 39. இரண்டு குழந்தைக்கு தாய். கணவனோடு வாழ்ந்து வருபவர். இப்படிப்பட்ட குடும்பப் பின்னனியில் இருப்பவர், தனது பதின்ம வயதில் அனுபவம் தொடங்கி, திருமணம் உறவு, அந்தரங்க காதல், காமம் என்று அனைத்தும் துணிவோடு பகிர்ந்து இருக்கிறார். தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கபட்டும் என்ற அச்சத்தை ஒடைத்து எரிந்தெரிந்திருக்கிறார். 

 “என் கணவரின் முன்பு எனக்குக் காமவேட்கை எழுந்ததில்லை. அவரெதிரில் என் காமவேட்கை எங்கோ போய் ஒளிந்து கொள்கிறது. அறிவாற்றல் மிகுந்த எனது காதலர் என்னிடம் எப்போதும் பித்துப்பிடித்த பாலியல் மோகத்தை எழுப்புகிறார். அவர் என்னைத் திருப்திப்படுத்தியபோதிலும் அவர் திருப்தியடைவதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். ஒரு முறை உடலுறவுக்குப் பிறகு நான் அரைத்தூக்கத்தில் இருந்தபோது என் கன்னங்களை அழுத்திக்கொண்டிருந்த அவரது உள்ளங்கை சட்டென்று மென்மையடைவதாக எனக்குத் தோன்றியது. அவர் ரகசியமாக மெல்ல எனது பெயரை உச்சரிப்பதைக் கேட்டேன். "

 இப்படி ஒரு பெண் சொல்லும் போது நமது சமூகம் அவளது ஒழுத்ததை கேள்வி கேட்கும். ஒரு பெண் உடலுறவின் கொண்டாட்டத்தை வெளிப்படையாக சொல்வதே தவறு. அதுவும் கணவனல்லாத ஒரு ஆண்ணுடன் கொண்ட உறவை, கணவனோடு கொண்ட உறவோடு ஒப்பிட்டு அதைவிட தனது காதலனுடன் இருந்த உறவை பெருமையாக பேசுவதை தங்கள் பண்பாட்டை கட்டிக்காப்பதாக சொல்லும் மாயச் சமூகம் ஏற்காத விஷயம். 

இந்தச் சமூக ஏற்றுகொண்ட ஓழுக்க விதிகளை கமலாதாஸ் பொருட்படுத்தியதில்லை. அதை ஏற்றுகொண்டதும் இல்லை. ஒழுத்தை பற்றி அவர் கூறும் கருத்து இது தான். 

 ”அழியக்கூடிய மனித உடலே இந்த ஒழுக்கத்தின் அடிக்கல். அழிவற்ற மனித ஆத்மாவில் அல்லது அதைக் கண்டறியக்கூடிய உருவாக்கப்பட வேண்டியதுதான் உன்னதமும் வணங்கத்தக்கதுமான ஒழுக்கம் என்று நம்புகிறேன்.” 

எழுபதுகளில் ஒரு பெண் இவ்வளவு துணிவோடு எழுதியதில்லாமல், தன்னுடைய சுயசரிதை இது என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் கமலாதாஸ். சர்ச்சை நிறைந்த இந்த புத்தகம் அதிக விற்பனையானதற்கு இதுவும் ஒரு காரணம். 



 ** 
திருமண பந்தத்தில் வரும் காமம் வேறு, காதலில் வரும் காமம் வேறு…. இரண்டும் காமம் என்ற கண்ணோட்டத்தோடு பார்க்கக் கூடாது. 

திருமண பந்தத்தில் வரும் காமம் ஒரு commitment. சில சமயம் ஒருவர் விருப்பமில்லை என்றாலும், இன்னொருவர் விருப்பத்திற்காக ஈடுப்பட வேண்டியதாக இருக்கும். இருவரின் ஒருவரே திருப்தியடைந்த உறவாக முடியும். இருவருக்கும் வேறு சாய்ஸ் இல்லாத உறவு என்று கூட சொல்லலாம். 

 ஆனால், காதலில் வரும் காமம் அப்படியில்லை. இருவரும் கொண்டாட நினைக்கும் விஷயம். இருக்கும் கொஞ்ச நேரத்தை வீணடிக்காமல் உறவை முழுவதுமாக அனுபவிக்க நினைக்கும் உறவு. பண்பாடு, கண்ணியம் எல்லாம் மறந்து, கட்டிலில் தங்களை தாங்களே அடையாளம் கண்டுக் கொள்ளும் உறவு. உறவு முடிந்து இருவரும் தங்கள் வேலையை பார்க்க செல்லலாம். ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்த முடியாது. 

 இந்த இரண்டு உணர்வின் வித்தியாசத்தை கமலாதாஸ் “என் கதை” நூலின் தெளிவான நீரோடைப் போல் பதிவு செய்திருக்கிறார். 

தனது அந்தரங்கக் காதலைப் பற்றி ஆண்களே வெளிப்படையாக பேச தயங்கும் காலத்தில் இருக்கிறோம். ஆனால், கமலாதாஸ் 70களில் தனது காதலனோடு இருக்கும் பொழுதை இப்படி விவரிக்கிறார். ஒரு மூதாட்டி என்னிடம் கூறினாள் 

“ மேம்சாஹிப். நீங்க அந்த எடத்துக்குப் போகாதீங்க. அங்க போறது ஆபத்தானது”. ராஜாவுக்கு ஏழைகளின் மத்தியில் எந்தவித நற்பெயரும் கிடையாது. ஆனால், அவரெதிரில் போய் நின்று அவரை விமர்சிக்க யாருக்கு தைரியமில்லை. 

வாரத்தில் ஓரிருமுறை ஒரு மணப்பெண்ணின் ஆடையலங்காரங்களுடன் அவரைச் சந்திக்கப் போனேன். ஓய்வறையின் கதவு சாத்தப்படும்போது அவர் தாகம் நிறைந்த உதடுகளுடன் என்னை ஓயாமல் முத்தமிடுவார். அந்த அறையில் மாட்டப்பட்டிருந்த பல கண்ணாடிகளில் எங்கள் முத்தம் பிரதிபலித்தது. 

தான் நோயுற்று இருக்கும் போது கணவனோடு இருந்த நெருக்கத்தை விவரிக்கிறார். மற்ற ஆண்கள் மீது காதலனையும் கொண்டாடுகிறார். பதின்ம வயதில் கண்ணாடி முன் தனது உடலை நிர்வாணமாக ரசித்ததை கூறுகிறார். குழந்தை பெற்றப்பிறகு உடலில் ஏற்பட்ட மாற்றத்தையும் சொல்கிறார். 

ஒரு பெண் தனது சொந்த வாழ்க்கையை இந்த அளவிற்கு பகிரங்கமாக, அதுவும் தனது உடல் சார்ந்த விஷயத்தை புத்தக வடிவில் பகிர்ந்ததை இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன். 

’ஒழுங்கீனம்’ என்பதை மனிதன் இன்னொரு மனிதனை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கியது. அதை பொருட்படுத்தாமல் இருக்கும் மனிதன் சுதந்திரமாக தெரிகிறான். சுதந்திரமாக திரியும் மனிதன் அடிமையாய் இருக்கும் மனிதனின் கண்ணுக்கு ஒழுக்கமற்றவனாக தெரிகிறான். 

 ’ஒழுக்கம்’ என்ற வார்த்தை கூட ஒருவரை அடிமையாக்குறது அல்லது அடுக்குமுறை கையாள்கிறது என்பதை இந்த நூல் உணர்த்துகிறது. 

 ** 
என் கதை 
- கமலாதாஸ் 
- Rs.145 
- காலச்சுவடு பதிப்பகம்

Friday, July 15, 2016

இந்துத்வ இயக்க வரலாறு – ஆர்.முத்துக்குமார்

“நான் சீர்திருத்தங்களின் ஆதரவாளன்தான். ஆனால், சீர்திருத்தம் என்ற பெயரில் இந்து மதத்தின் நம்பிக்கைகளைச் சீர்குலைக்கப் பார்ப்பதை வேடிக்கை பார்க்கமாட்டேன்”
– இது பாலகங்காதர திலகர் கூறியது. 

 இந்து மதமாக பார்க்கும் போது ஆயிரம் சர்ச்சைகள். உள்குத்து, வேறுபாடு, பிரிவினை நிறைய இருக்கிறது. ஆனால், இந்துத்வம் ஜாதிகளையோ, அதில் இருக்கும் உட்பிரிவையோ ஆதரிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் உருவ வழிப்பாட்டைக்கூட ஆதரிப்பதில்லை. எல்லோரும் ‘இந்து’ என்ற ஒற்றைக்குடைக்குள் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறது. தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ’இந்துத்வம்’ என்பது மதம் அல்ல… அது வாழ்வியல் முறை. இந்து மதத்தினர் மட்டும் தான் பின்பற்ற வேண்டும் இல்லை. இஸ்லாமியர், கிறிஸ்துவர்கள் கூட பின்பற்றலாம். 

கேட்க நன்றாக தான் இருக்கிறது. அப்படி இருக்கும் போது ஏன் இந்துத்வ கொள்கையை சுற்றி இத்தனை சர்ச்சைகள். எதிரான இத்தனை கருத்துகள். இந்துத்வத்தை இந்துக்களே பலர் ஏன் எதிர்க்கிறார்கள். 

காரணம், இந்துத்வத்தை முழுமையாக உள்வாங்காமல் ”நான் இந்துத்வவாதி” என்று சொல்லிக் கொள்பவர்கள். உதாரணத்திற்கு, இந்துத்வம் ஜாதி அடையாளத்தை ஆதரிப்பதில்லை. ஜாதியையும் ஆதரிப்பதில்லை. ஆனால், நிஜத்தில் அப்படி இல்லை. ‘நான் பிராமணன்’, ‘நான் தேவர்’, ‘நான் கவுண்டர்’ என்ற சாதிய அடையாளத்தை காட்டிக் கொண்டு, பெருமையாக நினைப்பவர்கள் தான் ‘இந்துத்வம்’ பேசுகிறார்கள். அதாவது, ‘நான் இந்து’ என்ற கருத்தை விட ‘நான் இன்னார் ஜாதியை சேர்ந்தவன்’ என்பதை காட்டிக் கொள்வதில் அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. 


அரசியல் சட்டப்படி ‘தலித்’துகள் ‘இந்து’வாக கருதப்படுகிறார்கள். ஆனால், நிஜத்தில் அவர்களுக்கான உரிமை பல இடங்களில் மறுக்கப்படுகிறது. அதற்கு, காரணமாக தங்களை மேல் ஜாதி என்று நினைத்து கொள்பவர்கள். தன்னை ‘மேல் ஜாதி’ என்று கருதுபவன் ‘இந்துத்வத்தை’ பேசும் போது, அவன் மீது இருக்கும் வேறுப்போடு இந்துத்வத்தின் மீதும் சேர்ந்து வேறுப்பாக மாறுகிறது. 

மொத்தத்தில் இந்துத்வ தியரியில் பல நல்ல விஷயங்கள் இருக்கிறது. அதை தவறாக புரிந்துகொண்டு பின்பற்றுபவரை பார்ப்பதால், இந்துத்வத்தை புரிந்துகொள்ளும் முயற்சியை பலர் கைவிடுகிறார்கள். தவறாக புரிந்துக்கொண்டவர்களால் ‘இந்துத்வம்’ தவறாக பரப்பப்படுகிறது. இந்துத்வம் தவறாக தெரிகிறது. அதற்கு காரணம், இந்துத்வ எதிரிகள் அல்ல. இந்துத்வத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் அல்ல. இந்துத்வ ஆதரவாக செயல்படுகிறோம் என்று சொல்பவர்கள். 

இதை நான் சொல்லும் போது இந்துத்வத்தை தவறாக புரிந்துகொண்டவர்கள் இந்துத்வத்தில் மட்டும் தான் இருக்கிறார்களா? இஸ்லாமிய மதத்தில் இல்லையா ? கிறிஸ்துவத்தில் இல்லையா ? என்று என்னை இந்துத்வவாதிகள் கேள்விக்கேட்கலாம். 

இந்துத்வவாதிகள் அடுத்த பிரச்சனை இது தான். அவர்களை விமர்சிக்கும் போது அதற்கான பதில் வரலாது. அதே கேள்வியை எதிர் கேள்வியாக கேட்பார்கள். குறிப்பாக கேள்வி கேட்பவன் இஸ்லாமியன், கிறிஸ்துவன் அல்லாமல், நாத்திகன், திராவிட கொள்கை ஏற்ற இந்துவாக இருந்தாலும் கூட அவனைப் பற்றி, அவன் கொள்கையைப் பற்றி பேசாமல் விவாதத்தில் பங்குபெறாத முஸ்லிம், கிறிஸ்துவத்தை வம்புக்கு இழுப்பார்கள். 

அவர்களின் கொள்கையை முழுமையாக புரிய வைக்கும் முயற்சியை விட இஸ்லாம், கிறிஸ்துவத்தை விமர்சிப்பதில் அதிக கவனத்தை செலுத்துவது ஹிந்துத்வவாதிகளின் அடுத்த பிரச்சனை. அதைவிட ‘எல்லோரும் சமம்’, ‘ஒன்றே தெய்வம்’ என்று நினைக்கும் செக்குலர்களை சேர்த்து விமர்சித்து வம்புக்கு இழுப்பது. இதனால், இந்துத்வவாதிகள் மத ஒற்றுமையில் விரும்பாதவர்கள் என்ற பிம்பத்தை சாமான்யர்கள் மத்தியில் அவர்களே உருவாக்கி கொள்கிறார்கள். 

இந்துத்வத்தைப் பற்றிய தெளிவு ஏற்படுத்தாமல், அதற்கான கட்டிடம் கட்டும் முயற்சியை தான் இந்துத்வவாதிகள் பல வருடங்களாக செய்து வருகிறார்கள். 

*



இப்படி பல வருடங்களாக சர்ச்சைகளோடு இயங்கி, வளர்ந்து வந்த இந்துத்வ இயக்க வரலாற்றை ஒரு வருட கடின முயற்சியால் ஆர்.முத்துக்குமார் பதிவு செய்திருக்கிறார். 

இந்த புத்தகம் ஆர்.எஸ்.எஸ் தொடக்கத்தில் தொடங்கவில்லை. ஹெட்கேவார் பேசும் முன்பே பலர் இந்துத்வத்தை பற்றி பேசியிருக்கிறார்கள். அதனால், சுவாமி தயானந்த சரஸ்வதியில் இருந்து இந்துத்வ இயக்க வரலாறு தொடங்குகிறது. ஆரிய சமாஜத்தின் தொடக்கத்தில் இருந்து வாசகன் பயணம் செய்கிறான். 

இந்து மதத்தில் பல தெய்வங்கள் இருப்பதை தவிர்த்தால் மட்டுமே இந்துக்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்ற விரஜானந்தரின் கருத்தையும் இந்த நூல் பதிவு செய்கிறது. லாலா லஜபதி ராய், பாலகங்காதர திலகர், சர்தார் வல்லபாய் பட்டேல் போன்ற சுதந்திர போராட்ட வீரர்கள் இந்துத்வத்தின் அபிமானிகளாகவே இருந்திருக்கிறார்கள். 

இந்துத்வ கொள்கை பரப்புவதற்காக ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தொடங்கிய ஹெட்கேவார், “ஆர்.எஸ்.எஸ். இந்துத்வ இயக்கத்தின் முத்திரை அல்ல அது தான் அவர்களின் முகவரி” என்கிறார். அவர்களுக்கான சட்டத்திட்டங்களும் உருவாக்குகிறார். 

இப்படி, சிறுக சிறுக இந்துத்வ கொள்கையை இந்தியா முழுக்க பரப்பிக் கொண்டு இருந்தவர்கள் ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரியாக பார்க்கத் தொடங்கியது காந்தி படுகொலையில் தான். இந்துத்வ அனுதாபியான பட்டேல் ஆர்.எஸ்.எஸ் மீது தடை விதிக்கும் அளவிற்கு கொண்டு சென்றது. அவர்களின் முன்னேற்றத்திற்கு அவர்களாகவே தோண்டிய புதைக்குழி ‘காந்தி படுகொலை’. 

இதற்கு, வரலாற்று ரிதியாக அவர்கள் எவ்வளவு விளக்கம் கூறினாலும், சாமாதானம் செய்தாலும் அது மன்னிக்கப்படாத குற்றமாக கருதப்படுகிறது. அதை உணராமால் செய்தது மிகப்பெரிய தவறு. 

1961ல் நடந்த இந்தியா – சீனா போரில் ஆர்.எஸ்.எஸ் தங்கள் தேசப்பற்றை காட்டினர். நேரு நட்பு நாடு என்று நினைத்த சீனா முதுகில் குத்த, எதிரி என்று நினைத்த ஆர்.எஸ்.எஸ் களப்பணியில் உதவி செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் கடின முயற்சியால் அவர்கள் மீது இருந்த தடை விலகியது. இந்திய சுதந்திரத்தின அணி வகுப்பில் சேர்க்கப்பட்டார்கள். 


இன்று வரை, அவர்கள் மீது பல விமர்சனங்கள் இருக்கிறது. அவர்கள் பல தவறு செய்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் தேசப்பற்று சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது. யுத்தக்காலத்தில் தங்களுக்கு எதிரான மத்திய அரசுக்கு ஆதரவு தந்திருக்கிறார்கள். யுத்தக்களத்திற்கு சென்று சேவை செய்திருக்கிறார்கள். 


அது இருக்கட்டும். பாதிக்கப்பட்ட எல்லை வீரர்களுக்கு சேவை செய்வது தேசப்பற்று என்றால், இந்திய எல்லைக்குள் பொருட்கள் நாசம் செய்யலாமா ? இஸ்லாமியர்கள் நடத்தும் வணிக வலாகத்தை தாக்கலாமா ? இது இந்திய வளர்ச்சியை பாதிக்கும் என்பது தெரியாதா ? உண்மையில் அதற்கு நியாயமாக பதில் அவர்களால் அளிக்க முடியாது. எந்த நாச வேலைகளை யார் செய்தாலும் நியாயமான காரணம் கிடையாது என்பது உண்மை. 


முதல் ஐந்நூறு பக்கங்கள் இந்துத்வ வரலாற்றை விறுவிறுப்பாக பேசும் இந்தப்புத்தகம், ஜனதாக் கட்சி தொடங்கியதும் கொஞ்சம் சோர்வாக செல்கிறது. பா.ஜ.க கட்சி பற்றி தொடங்கியதும் இயக்க வரலாறாக இருந்த நூல். அவர்களின் தேர்தல் அரசியல் வரலாறாக மாறிவிடுகிறது. பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் எப்படி ஈடுப்பட்டார்கள், யாரோடு எப்படி கூட்டணி வைத்துகொண்டார்கள், தங்கள் கொள்கையில் எப்படி சமரசம் செய்து கொண்டார்கள் என்ற விபரம் தான் அதிகமாக இருக்கிறது. 

பா.ஜ.க. தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ் எந்த அளவுக்கு உதவினார்கள், அவர்களின் சமரசத்திற்கு ஆதரவாக இருந்தார்களா போன்ற விபரங்கள் கொஞ்சம் குறைவாக இருக்கிறது. 

பாபர் மசூதி தொடங்கும் போது கொஞ்சம் விறுவிறுப்பு எடுக்க, 1996ல் தேர்தல் தொடங்கியது மெதுவாக செல்கிறது. குஜராத் கலவரம் மீண்டும் விறுவிறுப்பு எடுக்கிறது. 

** 

இந்த நூல்… இந்துத்வத்திற்கு ஆதரவாகவோ, எதிராகவோ இல்லை என்பதை குறிப்பிட வேண்டும். இந்துத்வ வரலாற்றை தெரிந்து கொள்ள நினைக்கும் இந்துத்வ ஆதரவார்களும், எதிர்த்து பிரச்சாரம் செய்யபவர்களும், இந்துத்வத்தைப் பற்றி தெரிந்துக் கொள்ள நினைப்பவர்களும் வாசிக்கலாம்.

இந்திய இறையான்மை இஸ்லாமியர்கள் வெடிகுண்டால் பாதிக்கப்படுகிறது என்று சொல்லும் இந்துத்வவாதிகள், அவர்கள் கையால் இருக்கும் கத்தியாலும் பாதிக்கப்படுகிறது என்ற உண்மையை உணர வேண்டும். 

அவர்கள் வெடிகுண்டு எடுத்ததை கேட்காமல், நான் கத்தி எடுத்தது உனக்கு தவறாக இருக்கிறதா ? என்று இந்துத்வவாதிகளிடம் கேள்வி வரலாம். 

அதற்கு பதில் ‘இந்த நூல் விமர்சனம்’ இத்தோடு முடிவடைந்தது என்பது  

 ** 

இந்துத்வ இயக்க வரலாறு 
 – ஆர்.முத்துக்குமார் 
- Rs.999 

Tuesday, June 21, 2016

இறைவியும், ஜன்னல் மலர் நாவலும் !!

‎இறைவி‬ படத்தின் Inspiration என்று பலர் கூறியதால் , படத்தை பார்த்த கையோடு இந்த நாவலை வாசித்துவிட்டேன். 

சுஜாதாவின் வழக்கமான மர்மம், நகைச்சுவை ஸ்கோப் இல்லாத கதைக்களன். ஆனால், வழக்கமான வேகம் கொண்ட எழுத்துநடை. ஒரு மணி நேரத்தில் வாசித்து முடிக்ககூடிய குறுநாவல். 



நாவலில் வரும் சோமுவின் பாத்திரமும், இறைவியில் விஜய்சேதுபதியின் பாத்திரம் ஒன்று தான். மீனா பாத்திரத்தில் அஞ்சலி, ஜகன் பாத்திரத்தில் பாபி சிம்ஹா, தேவராஜன் பாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா காஸ்ட்டிங் செய்யப்பட்டிருக்கிறது. 

ஒரு இயக்குனருக்கான கற்பனை திறனுக்கு எஸ்.ஜே.சூர்யா பாத்திரத்திற்கு கதை பகுதி உருவாக்கி படம் எடுத்திருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். அதேப் போல், விஜய்சேதுபதி மலரோடு இருக்கும் உறவும் இயக்குனருடைய கற்பனை தான். 

க்ளைமாக்ஸ் தவிர்த்து நாவலில் இருப்பதை அனைத்தும் இறைவியில் இருக்கிறது. அப்படியென்றால், எப்படி Inspiration என்று சொல்ல முடியும் ?

நாவலை தழுவி திரைப்படம் எடுக்கும் போது அப்படியே காட்சிப்படுத்த முடியாது என்பது உண்மை தான். ஆனால், நாவல் வரும் நாயகனை இரண்டாவது கதாநாயகனாகவும், துணை பாத்திரத்தை முக்கியத்துவம் கொடுத்து கதாநாயகனாக்கியிருப்பதும் தான் ஏன் என்று புரியவில்லை. கதை தழுவல் தெரியக்கூடாது என்பதாலா ? 

Inspiration என்ற வார்த்தையில் எழுத்தாளருக்கு கிடைக்க வேண்டிய சரியான அங்கிகாரம் கிடைக்காமல் செய்துவிடுகிறது. அதனால், ”ஜன்னல் மலர்” நாவலுடைய Inspiration தான் ”இறைவி” படம் என்று சொல்வதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. 

இறைவி – Based on அல்லது Adapted from “ஜன்னல் மலர்” நாவல் என்று சொல்லுவதே சரி என்று தோன்றுகிறது!!


Thursday, June 16, 2016

விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் "போர்த்திரை "

சினிமா, வரலாறு இரண்டும் எனக்கு பிடித்தமான விஷயம். அதனால், விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் “போர்த்திரை” புத்தகம் என்னை மிகவும் ஈர்த்தது.

வழக்கமான சினிமா விமர்சனம் போல் இல்லாமல், சினிமா எடுக்கப்பட்ட அரசியல் நிலவரத்தையும் சேர்த்து சொல்கிறார். அவர் முன்மொழியும் பல படங்கள் அந்த நாட்டின் அரசியல் புரியவில்லை என்றால், படத்தை முழுமையாக புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு சில படங்கள் அவர் கூறிய அரசியல் பிரச்சனைக்காகவே பார்க்கலாம். 



ஹிட்லரையும், இரண்டாம் உலகப் போரை சுற்றியும் எடுக்கப்பட்ட பல படங்கள் பலருக்கு தெரிந்ததிருக்கும். ஆனால், வியட்நாம் போர், சீனா – ஜப்பான் போர் போன்ற யுத்தங்களை பேசும் படத்தை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த புத்தகம் பல போர் படங்களை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. 

இறுதியில் எழுத்தாளர் சுஜாதாவிடம் வெளிநாட்டு நிருபர் கேட்ட கேள்விக்கு, அவர் பதில் சொல்ல முடியாமல் தினறியது ‘நச்’. உண்மையில் தமிழ் இயக்குனர்கள் யாரும் அந்த கேள்விக்கு பதில் அளிக்க முடியாது. சினிமா பிரியர்கள், வரலாற்று பிரியர்கள் இருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் !! 

 வாழ்த்துகள் விஜய் ஆம்ஸ்ட்ராங் !!

Tuesday, May 24, 2016

Yes, I am Yasmin ! - டிடெக்டிவ்

பெண் துப்பறியும் நிபுணர்களை பற்றிய தமிழில் வந்த முதல் புத்தகம் என்று சொல்லலாம். என்ன தான் பெண்ணியம், பெண் உரிமை பேசினாலும் பெரும்பாலான பெண்கள் சமூகத்தில் ஆண் காட்டிய பாதையில் தான் பயணிக்க வேண்டியதாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆண்களே அஞ்சக்கூடிய ‘ஜெம்ஸ்பாண்ட்’ வேலையான துப்பறியும் வேலையை தேர்ந்தெடுத்திருக்கிறார் யாஸ்மின். 



துப்பறியும் துறையில் தன்னை தேடி வந்த வழக்குகள், அதை எப்படி எதிர்கொண்டார், அதை கையாளும் போது சந்தித்த சவால்கள் என்று யாஸ்மின் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், இந்தப் புத்தகத்தில் பெண் உளவாளி, RAW பற்றிய ஒரு சில தகவல்களும் உண்டு. 

யாஸ்மினின் வாழ்க்கை வரலாற்று நூலாக இருந்தாலும், வெளிநாட்டு உளவாளிகளை பற்றிய தகவல்கள் என்று இந்த புத்தகத்திற்கு தேவையில்லாதது என்று தோன்றுகிறது. 

யாஸ்மின்னை பேட்டிக் கண்டு சலீம் அக்பர் என்பவர் எழுதியிருக்கிறார். யாஸ்மின் நேரடியாக எழுதியிருந்தால் அல்லது அவரே நேரடியாக விளக்குவது போல் எழுதப்பட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். 

**
 Yes, I am Yasmin ! - டிடெக்டிவ் 
- சலீம் அக்பர்
- Rs.100

 இணையத்தில் வாங்க… 

Wednesday, April 20, 2016

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம் + மாயா = தாரகை

முந்தைய தினம் நண்பர் விநாயக முருகன் என் பதிவின் பின்னூட்டத்தில் “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து என்றெல்லாம் பிரித்து சொல்லும் இலக்கிய அத்தாரிட்டிகள் யார்?” என்று கேட்டார். 

”இது ஒரு நல்ல கேள்வி” என்பதோடு நான் ஜெகா வாங்க வேண்டியதாக இருந்தது. இலக்கிய உலகத்தில் யாரும், எதற்கும் அத்தாரிட்டி கிடையாது என்பது தான் என் கருத்து. ஒருவர் ”இது வெகுஜன எழுத்து, அது இலக்கிய எழுத்து” என்று கருத்து கூறினால் அதை ஏற்றுக் கொள்ள ஒரு கூட்டம் இருக்கிறது. அதேப் போல், “வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து இரண்டும் ஒன்று தான்” சொன்னாலும் அதை ஏற்று கொள்ள இன்னொரு கூட்டம் இருக்கிறது. 

அவரவர் ரசனைக்கும், வாசிப்பும் தகுந்தாற்போல் வெகுஜன எழுத்து, இலக்கிய எழுத்து பிரித்து பார்த்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு, சுஜாதாவின் எழுத்து ஒரு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வேறு சிலருக்கு இலக்கிய எழுத்தாக தெரியலாம். வாசகன் தனக்கு பிடித்ததை தீர்மானிக்கும் உரிமை அவனுக்கு இருக்கிறது. அது அவனுக்கான சுதந்திரம். 

தமிழ்மகன் எழுதிய தாரகை நாவலுக்கும், வெகுஜன - இலக்கிய எழுத்துக்கும், மிக பெரிய தொடர்பு இருக்கிறது. 



தாரகை - இரண்டு நடிகையைப் பற்றிய கதை. ஒன்று தீபிகாவுடையது. இன்னொரு மாயாவுடையது. இரண்டும் ஒரே சமயத்தில் பயணிக்கிறது. ஏறக்குறைய இரண்டு கதையும் ஒரே மாதிரியாக தோன்றும். ஒரு சில விஷயங்களில் உண்மை இருக்கிறது. இன்னும் சில விஷயங்களில் பொய் கலந்திருக்கிறது. இதில் எது உண்மை, பொய் என்பதை தீபிகா – மாயாவுக்கு மட்டுமே தெரியும். அது தான் அவர்களுக்குள் இருக்கும் வித்தியாசம்.

தமிழ்மகன் “தாரகை” நாவலில் பலரது நடிகையை நகல் எடுத்து காட்டுகிறார். அவர்களின் வாழ்க்கையின் பிரதி எடுத்து நம்மோடு புத்தகமாக உரையாடுகிறார். அவளுக்கான நியாயத்தை நம்மிடம் சொல்கிறார். அவளின் நியாயத்தை நாம் கேட்கும் போது நமக்கான அறத்தை மறந்து அவளுடைய அறத்தை மட்டுமே வாசிக்கிறோம். 

’தாரகை’ வித்தியாசமான இலக்கியப்படைப்பாக தெரியலாம். ஆனால், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா என்று இரண்டு வெகுஜன நாவலின் கலவை. 

தமிழ்மகன் 2006ல் எழுதிய ”ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம்”, 2008ல் எழுதிய “மாயா” பலரது கவனம் பேராத நாவல்கள். இரண்டும் வெகுஜன இதழில் தொடராக வந்தது. ஸ்வாரஸ்யம் குறையாத விறுவிறுப்பானது. இரண்டுமே நடிகையைப் பற்றியது. வெகுஜன நாவல் வரிசையில் வரக்கூடியது. 

ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா இரண்டும் கலந்து, அதற்கான தொடர்பை உருவாக்கி, ஒரு சில திருத்தங்கள் செய்து இரண்டு நடிகையோடு ஒரே சமயத்தில் நம்மை வாசிக்க வைக்கும் ”தாரகை” நாவலாக தந்திருக்கிறார். 

இரண்டு வெகுஜன நாவலை கலந்து ஒரு அழகிய இலக்கிய படைப்பாக எப்படி உருவாக்க முடியும் என்பதற்கு ‘தாரகை’ மிகப் பெரிய உதாரணம். வெகுஜன நாவலை எப்படி இலக்கிய வரிசையில் கொண்டு வரலாம் என்பதற்கு முன் உதாரணமாக இருக்கிறது. 

என்னுடைய ரசனைக்கு, தாரகையை இலக்கிய படைப்பாகவும், ஏ.வி.எம் ஸ்டூடியோ ஏழாவது தளம், மாயா வெகுஜன படைப்பாகவும் பிரிக்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனைக்கு பிரித்துக் கொள்ளலாம். அதில் நான் தலையிட முடியாது. 

LinkWithin

Related Posts with Thumbnails