வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label குண்டக்க மண்டக்க. Show all posts
Showing posts with label குண்டக்க மண்டக்க. Show all posts

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

Tuesday, August 12, 2008

குண்டக்க மண்டக்க – 4

(‘குண்டக்க மண்டக்க – 3 ’வின் தொடர்ச்சி.)

காட்சி 2: பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்



( ஒரு முறை சிக்னலில் மாட்டிக் கொண்டு பார்த்திபனிடம் பட்ட பிறகு வடிவேலு சிக்னல் விழுவது போல் தெரிந்தால் போதும், பத்தடி தொலைவில் நின்று விடுவார். பார்க்கும் ட்ராபிக் போலீஸ் எல்லாம் பார்த்திபன் போல் தெரிந்தது. இந்நிலை மீண்டும் அதே மவுன்ட் ரோட் சிக்னலில் பார்த்திபன் நிறுத்துகிறார்.)

பார்த்திபன் : வண்டிய நிறுத்து..
வடிவேலு : அடபாவி... மறுபடியும் நீயா...?

பார்த்திபன் : நானே தான்..!
வடிவேலு : இப்ப சிக்னல ஒழுங்க தானே வந்தேன்... எய்யா நிக்க சொன்ன...?

பார்த்திபன் : சும்மா... பொழுது போகல... பேச்சு துணைக்கு ஆள் வேணும் அதான் நிறுத்துனேன்.
வடிவேலு : இது உன்னகே கொஞ்சம் ஓவரா இல்ல.. பேச்சு துணைக்கு ஆள் வேணும்னா உன் பக்கதுல இருக்குற போலீஸ்கார கிட்ட பேசுறது... வண்டியில போறவன நிறுத்தி பேசனும் சொல்லுற... சின்ன புள்ளதனமா விளையாட்டா இருக்கு...

பார்த்திபன் : சரி அதெல்லாம் இருக்கட்டும்... லைசன்ஸ் எடு..
வடிவேலு : பேச்சு துணைக்கு நிறுத்துனேன்னு சொல்லிட்டு இதெல்லாம் கேக்குற..

பார்த்திபன் : வெட்டியா பேச முடியுமா...! எதோ உன் கிட்ட இருக்குற லைசன்ஸ், ஆர்.சி பூக், இன்ஷூரன்ஸ் எடுத்து காட்டினா அத பத்தி பேசலாம்.
வடிவேலு : உனக்கு பயந்து வண்டி ஒட்டும் போது சிக்னல் விழுது தெரிஞ்சதும் பத்தடி தூரம் வண்டி நிறுத்துறேன்... என்னையே ரவுட் கட்டி ஏன் புடிக்கிற...?

பார்த்திபன் : நா கேட்டது எடுக்க போறிய இல்லையா...?
வடிவேலு : சரி.. தரேன்... ஆள விடமாட்ட... இந்தா என் வண்டி இன்ஷூரன்ஸ், ஆர்.சி பூக், லைசன்ஸ்... போதுமா..

பார்த்திபன் ஒவ்வொன்றாய் எடுத்து பார்க்கிறான்.
வடிவேலு : எல்லா சரியா இருக்கா.. நான் கிளம்புறேன்..

பார்த்திபன் : இரு.. பைன் கட்டிடு போ...
வடிவேலு : சொந்தக்கார வீட்டுல சொல்லுற மாதிரி பேசுற... எல்லா பேப்பரும் சரியா இருக்குல..

பார்த்திபன் : அப்படினு யார் சொன்னா... இன்ஷூரன்ஸ் நேத்தோட லாப்ஸ் ஆயிடுச்சு...
வடிவேலு : என்னது நேத்தோட முடிஞ்சு போச்சா... ( இன்ஷூரன்ஸ் பேப்பரை பார்க்க) அட ஆமா... நல்ல வேல நியாபகம் படுத்துன.. இப்போவே போய் ரென்யூ பண்ணிடுறேன்..

பார்த்திபன் : உனக்கு நியாபகம் படுத்த நான் என்ன உன் பி.ஏவா... ரென்யூ பண்ணாததுக்கு பைன் கட்டு.
வடிவேலு : யோவ்.. ஒரு நாள் தானே... ரென்யூ பண்ணிட்டு வந்து உனக்கு காட்டுறேன்

பார்த்திபன் : அப்படியா.... சரி லஞ்சமா அம்பது ரூபா கொடுத்திட்டு போ..
வடிவேலு : இத முன்னேடியே கேக்க வேண்டியது... இதுக்கு ரொம்ப நேரம் பேசிக்கிட்டு... இந்த வச்சிக்கோ.. நா போகட்டா..

பார்த்திபன் : சரி போ..
வடிவேலு : ( அப்பாடா...எதோ அம்பது ரூபாவோட போச்சு... ஆயிரம், இரண்டாயிரம் சொன்ன.. கையில் பணம் கூட இல்ல )

மவுட் ரோட் ப்லை ஓவரில் இருந்து கிளம்பிய வடிவேலும் தேனாம்ப்பேட்டை சிக்னலில் ட்ராபிக் போலீஸ் நிறுத்துகிறார்.

வடிவேலு : யோவ்... சிக்னலுக்கு சிக்னல் ஏன்ய்யா வண்டிய நிறுத்துறீங்க...
தேனாம்ப்பேட்டை போலீஸ் : மவுன்ட் ரோட் போலீஸ் போன் பண்ணி உன் வண்டிய நிறுத்த சொன்னாரு.. அத நிறுத்துனேன்.

வடிவேலு : இப்ப தான் மவுன்ட் ரோட் போலீஸ்க்கு பணம் கொடுத்தேன்.. ஒரு வேல ஆவனா இருப்பானோ...?
பார்த்திபன் பைக்கில் வந்து அங்கு இறங்குகிறான்.
வடிவேலு : அவனே தாய்யா...

பார்த்திபன் : என்னப்பா பிரச்சனை
வடிவேலு : நீ தான் பிரச்சன.. போன் பண்ணி வண்டிய ஏன் நிறுத்த சொன்ன...?

பார்த்திபன் : ( தேனாம்ப்பேட்டை போலீஸ்யிடம்) நீ போப்பா நான் பார்த்துக்கிறேன்... (வடிவேலுவிடம்) உன் லைசன்ஸ், இன்ஷூரன்ஸ் பேப்பர் எல்லாம் எடு...
வடிவேலு : நினச்சேன்... என்னடா வம்பு பண்ணாம அம்பது ரூபா வாங்கிட்டு விட்டானே சந்தோஷப்பட்டேன்.. என்ன விட மாட்ட.! மனசாட்சி தொட்டு சொல்லு போன சிக்னல தானே எல்லாத்தையும் பார்த்த..

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : ( என் பிட்ட எனக்கே போடுறியா..) இந்தா எல்லா பேப்பரையும் இன்னொரு வாட்டி பாரு...

பார்த்திபன் : எதுக்கு இன்னொரு வாட்டி பார்த்து டைம் வேஸ்ட் பண்ணுறது.. இன்ஷூரன்ஸ் நேத்தோட முடிஞ்சு போச்சு... அதுக்கு பைன் கட்டு..
வடிவேலு : அதுக்கு தான் போன சிக்னல அம்பது ரூபா வாங்குனல்ல...

பார்த்திபன் : அது போன சிக்னல்... இது இந்த சிக்னல்.
வடிவேலு : (மறுபடியும் அதே பிட்டா...) இப்ப என்ன தான் வேணும்.

பார்த்திபன் : அம்பது பணம் கொடுத்திட்டு போ...
வடிவேலு : போன சிக்னலையே நூறு ரூபா கேட்டா கொடுத்திருப்பேனே... எதுக்கு இன்னொரு சிகனல்லுக்கு வந்து அம்பது ரூபா வாங்குற..

பார்த்திபன் : இப்ப தரியா... இல்ல கேஸ் எழுத சொல்லவா..
வடிவேலு : என்னப்பா மிரட்டுறியே... இந்த அம்பது ரூபா... அடுத்த சிக்னல்ல வந்து நீ என்ன தொந்தரவு கொடுக்க மாட்டியே..

பார்த்திபன் : கவலப்படாத... அடுத்த சிக்னல்ல நா உன்ன தொந்தரவு பண்ணமாட்டேன் போதுமா..
வடிவேலு : ( அப்பாடா... எதோ நூறு ரூபாவோட போய் தொலையுது )

அடுத்து நந்தனம் சிக்னலில் வடிவேலு இன்னொரு ட்ராபிக் போலீஸால் நிறுத்தப்படுகிறார்.

வடிவேலு : (அடுத்தபிரச்சன வந்திடுச்சு...) இப்ப தான் இரண்டு சிக்னல்ல போலீஸ் நிறுத்துனாங்க... நீ வேறையா...?

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அம்பது ரூபா லஞ்சம் கொடுத்திட்டு போ...!
வடிவேலு : யோவ்.. இப்ப தான் வண்டிய நிறுத்த்தினேன்.. எந்த பேப்பரும் பார்க்காம லஞ்சம் கேக்குற...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : முன்னாடியே மவுன்ட் ரோட் போலீஸ் பார்த்திபன் கிட்ட இருந்து ஒயர்லஸ் இன்பர்மேஷன் கொடுத்திருடாரு...
வடிவேலு : என்னனு கொடுத்திடாரு...

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : உன் இந்ஷூரன்ஸ் லாப்ஸ் அயிடுச்சு சொன்னாரு..
வடிவேலு : அடபாவிங்களா.... களவாளி பசங்கல புடிக்குறது ஒயர்லஸ் யூஸ் பண்ணமா... அப்பாவி என்ன புடிக்கிறது யூஸ் பண்ணுறீங்க..

நந்தனம் ட்ராபிக் போலீஸ் : பணம் எடு...
வடிவேலு : கொடுத்து வச்ச மாதிரி கேக்குற... நான் பேசாம பைன் கட்டுறேன்...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : அது எல்லாம் முடியாது... லஞ்சம் வாங்க சொல்லி தான் எனக்கு ஆர்டர் கொடுத்திருக்காங்க..
வடிவேலு : லஞ்சம் வாங்குறதுக்கு எல்லாம் ஆர்டர் போடுறாங்களா … கொடுக்கலைனா... ?
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : வண்டிய வாங்கி வச்சிக்க சொன்னாங்க...
வடிவேலு : ஆ ஆ ஆ... பாவி மக்கா... இப்படியும் ஒரு பொலப்பா...
நந்தனம் ட்ராபிக் போலீஸ் : நீ ரொம்ப பேசுற... வண்டிய கொடு...
வடிவேலு : இல்லப்பா.. இல்லப்பா.. இந்த அம்பது ரூபா... ( காலையில யாரு முகத்துல முழிச்சேனோ.. எனக்கு நேரமே சரியில்ல...)

மூன்று சிக்னலிலும் அம்பது ரூபா லஞ்சம் கொடுத்த வடிவேலுவின் விதி விடவில்லை. அதான் பார்த்திபன் விடவில்லை. மீண்டும் சைதாப்பேட்டை சிக்னல் பார்த்திபனால் மடக்கப்படுகிறான்.

பார்த்திபன் : நான் சொன்ன மாதிரி போன சிக்னல்ல உன்ன தொந்தரவு பண்ணல பார்த்தியா...
வடிவேலு : யோவ்... விரட்டி விரட்டி வெட்டுவாங்கனு கேள்வி பட்டிருக்கேன்... விரட்டி விரட்டி லஞ்சம் வாங்குறத இப்ப தான் பார்க்குறேன்... பேசமா மவுன்ட் ரோட்டுலைய பைன் கட்டிருப்பேன். உங்களுக்கு லஞ்ச கொடுத்தே என் சம்பள பண போய்யிடும் போலிருக்கு...

பார்த்திபன் : சரி... பைன் கட்டனும் ரொம்ப ஆச படுற.. உன் ஆசைய ஏன் கெடுக்கனும்... ஆயிரம் ரூபா பைன் கட்டு...
வடிவேலு : அடபாவி... மூனு சிக்னல் லஞ்சம் வாங்குனது இல்லாமா... இப்போ அயிரம் ரூபா பைன் கட்ட சொல்லுறீயே.. இது உனக்கே நியாயமா தெரியுதா...

பார்த்திபன் : லஞ்சம் வாங்குறது எங்களுக்காக... பைன் கட்ட சொல்லுறதுக்கு கவர்மென்ட்காக...
வடிவேலு : இதுல பன்ச் டைலாக் வேற… அப்படினா... முன்னாடியே பைன் கட்ட சொல்ல வேண்டியது தானே

பார்த்திபன் : நீ நேர்மையான ஆளா இருந்த என்ன சொல்லிருக்கனும்... "இல்ல சார் நான் லஞ்சம் கொடுக்க மாட்டேன்.. பேசாம பைன் கட்டுறேன் சொல்லிருக்கனும்"... இப்படி செய்யாம உன் புத்தி எங்க போச்சு...?
வடிவேலு : ( வ்...வ்..வ்.வ்) என் கிட்ட பணம் கூட இல்ல. இந்தா கிரடிட் கார்டு...

பார்த்திபன் : நாங்க லஞ்சம் வாங்குறதுக்கு மட்டும் தான் கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணிப்போம்.. கோர்ட் பைன் எல்லாம் பணம் மட்டும் தான் கட்டனும்
வடிவேலு : அடபாவி... எத்தன வாட்டி நீ கேக்கும் போதெல்லாம் பணம் கொடுத்திருக்கேன்... கொஞ்சம் மாச்சி கருண காட்டுறியா.

பார்த்திபன் : சரி... இவ்வளவு கெஞ்சுறதுனால... உன் வண்டிய இங்கையே விட்டு போய்டு...
வடிவேலு : விட்டு எங்க போறது...?

பார்த்திபன் : இந்த வண்டிக்கும் உனக்கும் சம்மந்தம் இல்லனு சொல்லிடு... பைன் கட்ட தேவையில்ல...
வடிவேலு : என்ன ஒரு புத்திசாலிதனம்... ஆயிரம் ரூபா லஞ்சத்துக்கு மூப்பதாயிரம் ரூபா வண்டிய விட்டு போ சொல்லுற... நல்ல இருக்கு.. நா பைன் கட்டுறேன் போதுமா...

பார்த்திபன் : பணம் இல்லனு சொன்ன...
வடிவேலு :(கோபமாக) போய் சொன்ன போதுமா.... நீ எல்லாம் உண்மைய மட்டும் பேசுற மாதிரி... இந்த ஆயிர ரூபா... எங்க போய் கட்டனும்

பார்த்திபன் : பைன் கட்டுறது ஒரு பக்க இருக்கட்டும்... பணம் வச்சிக்கிட்டு இல்லனு போலீஸ் கிட்ட போய் சொன்னியே அதுக்கு ஒரு கேஸ் எழுதனுமே....!
வடிவேலு : டேய்... இப்படியே பேச்சு கொடுத்து... உலகத்துல இருக்குற எல்லா தப்பையும் என் மேல கட்டிடுவியே... உன் கூட குடும்ப நடத்த என்னால முடியாது. நா ஜெயிலுக்கே போறேன்...

Friday, August 8, 2008

குண்டக்க மண்டக்க - 3

காட்சி : பார்த்திபன் - ட்ராபிக் போலீஸ், வடிவேலு - டூ வீலர் ஒட்டுநர்

வடிவேல் வேகமாக மவுன்ட் ரோட் சிக்னலில் நிறுத்தாமல் வண்டி ஓட்டிவர, அதை ட்ராபிக் போலீஸ் பார்த்திபன் நிறுத்திகிறார்.

பார்த்திபன் : நிறுத்து.... வண்டிய ஒறங்கட்டு...
வடிவேலு : ( திரு திரு... முழியுடன்....)

பார்த்திபன் : ஏன்டா... சிகனல்ல வண்டிய நிறுத்தல...
வடிவேலு : சாரி..சார்... அவசரமா போகனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.. ஏன் சிக்னல்ல நிக்கல...
வடிவேலு : சார்... அவசரமா ஒரு இடத்துக்கு போனும்

பார்த்திபன் : அவசரமா போனும்னு சொல்லிட்டு… ஏன்டா ! என் கிட்ட பேசிக்கிட்டு இருக்க..
வடிவேலு : நீங்க தான் என்ன நிருத்தி ஒறங்கட்ட சொன்னிங்க...

பார்த்திபன் : ஓறம்மா நிக்க தெரிஞ்ச உனக்கு....சிக்னல்ல ஏன்டா நிறுத்த தெரியல...
வடிவேலு : அதான் சொன்னல்ல சார்...அவசரமா போனும்...

பார்த்திபன் : அவசரம்னா ... பாத்ரூம் போ.
வடிவேலு : (வ்வ்வ்வ்)... ஒரு இடத்துக்கு போனும்ப்பா...

பார்த்திபன் : போனும்னு சொல்லிட்டு... ஏன் பேசி டைப் வேஸ்ட் பண்ணுற..
வடிவேலு : ( ஆ.. மறுபடியும் ஆரம்பிச்ச இடத்துல இருந்தே பேசுறானே....) உங்களுக்கு என்ன சார் வேணும்

பார்த்திபன் : சிக்னல்ல வண்டி ஏன் நிறுத்தல்ல.... அதுக்கு பதில் சொல்லு
வடிவேலு : அட பாவி... இவ்வளவு நேரம் அத தான்டா சொன்னே... என்ன ஏய்யா படுத்துற

பார்த்திபன் : சரி...சிக்னல்ல நிறுத்தாதது பைன் கட்டு
வடிவேலு : எவ்வளவு கட்டனும்...?

பார்த்திபன் : ஆயிரம் ரூபா..
வடிவேலு : ஏய்..யார ஏமாத்துற... சிக்னல்ல வண்டி நிறுத்தலைன்னா நூறு ரூபா தான் பைன்... என்ன பார்த்தா கேன பைய மாதிரி தெரியுதா...

பார்த்திபன் : நா அதுக்கு கேஸ் போடல்ல... வாண்டிய ஓட்டும் போது செல்போன் பேசுனதா கேஸ் எழுதியிருக்கேன்
வடிவேலு : என் கிட்ட.. செல்போன்னே இல்லையடா...

பார்த்திபன் : செல்போனே இல்லன்னா.. புதுசா வாங்கு... இப்போ பைன கட்டு...
வடிவேலு : முடியாது... கோர்ட்க்கு போய் ஜட்ஜ் முன்னாடி … என் கிட்ட செல்போன் இல்லனு சொல்லுவேன்...

பார்த்திபன் : வர வழியா.. செல்போன் தூக்கிப் போட்டேனு நான் சொல்லுவேன்... இல்ல நீ வண்டியில வரும் போது ஸ்கூட்டியில போர பொண்ண கிண்டல் பண்ண சொல்லி பொய் சாட்சி வச்சு… ஈவ் டிசிங் கேஸ்ல உள்ள தள்ளுவேன்... உனக்கு வசதி எப்படி ?
வடிவேலு : யோவ்.. உனக்கு என்ன பாவம் பண்ண.. ஊரு உலகத்துல எத்தன பேரு சிக்னல்ல வண்டிய நிறுத்தமா போறான்... நான் தானா உனக்கும் கிடைச்சேன்...

பார்த்திபன் : யாரு ஏமாந்தவங்களோ அவங்கள தான் நாங்க புடிப்போம்.. என்ன சொல்ற..?
வடிவேலு : இந்த அம்பது ரூபவ லஞ்சமா வச்சிக்கோ..

பார்த்திபன் : டாய்... யாருக்கு லஞ்சம் கொடுக்க பாக்குற.. ஒரு நேர்மையான அதிகாரிய
வடிவேலு : யாரு நீ நேர்மையான அதிகாரி...?

பார்த்திபன் : ஒரு நேர்மையான அதிகாரிய கலங்க படுத்த பாக்குரியா.. இது இன்னொரு கேஸ் எழுதுறேன்..
வடிவேலு : உனக்கு என்னய்யா வேணும்... ஏன் உசுர வாங்குற...

பார்த்திபன் : ஒழுங்க பைன கட்டு...
வடிவேலு : இப்படி ரௌடினதமா ஆயிர ரூபா பைன் கட்ட சொல்லுறியே... உனக்கே நியாயமா இருக்கா...?

பார்த்திபன் : போலீஸ்கார பார்த்து 'ரௌடி' திட்டுற... அரசு காவல் அதிகாரி மதிக்காதது... இன்னொரு கேஸ் எழுதுறேன்...
வடிவேலு : (புதுசு.. புதுசா... டெக்னிக் கண்டு பிடிக்கிறாய்யா...) சரி... இந்தா ஆயிரம் ரூபா....

பார்த்திபன் : என்னது... ஆயிரம் ரூபா கொடுக்குற.. மூவாயிரம் ரூபா பைன்.
வடிவேலு : எப்படி..???

பார்த்திபன் : சிக்னல்ல செல்போன் பேசுனது, போலீஸ்க்கு லஞ்ச கொடுக்க முயற்சி பண்ணது, அப்புறம் போலீஸ ரௌடினு சொன்னது... மூனு கேஸ்சுக்கு மூவாயிரம் ரூபா...பைன்..
வடிவேலு : அடபாவி... ஒரு சின்ன கேஸ்ச வைச்சு பெரிய பெரிய கேஸ்ச எல்லாம் தன் தலைமேல கட்டுரானே... இப்படி பண்ணுவ தெரிஞ்சிருந்தா அப்போவே ஆயிரம் ரூபா கொடுத்திருப்பேன்..

பார்த்திபன் : என்ன கொடுக்குறியா.... ஜெயிலுக்கு போறியா...
வடிவேலு : என் கிட்ட ஆயிரம் ரூபா தாய்யா இருக்கு.. வேற எதுவும் இல்ல...

பார்த்திபன் : உண்மைய சொல்லு... வேற எதுவுமில்ல....
வடிவேலு : கிரடிட் கார்ட் இருக்கு..

பார்த்திபன் : நோ பிராப்ளம்... நாங்க எல்லா கிரடிட் கார்ட் அக்ஸப்ட் பண்ணுவோம்
வடிவேலு : என்னது ?? கார்ட் அக்ஸப்ட்டா....????

பார்த்திபன் : அமா... இப்போ நிறைய பேர் பணம் கையில வச்சிக்கிறாது இல்ல... அவங்க வசதிக்காக நாங்க கிரடிட் கார்ட் ஸ்வைப்பிங் மிஷின் வாங்கிட்டோம். இனிமே நீங்க லஞ்சம், அன்பளிப்பு, பைன் எல்லாம் கிரடிட் கார்ட்ல கூட கட்டலாம். கூடிய சிக்கிரத்துல ‘ஆன் – லைன்ல’ கூட கட்டுறதுக்கு ஏற்பாடு செய்ய போறோம்...
வடிவேலு : என்னைய்யா... பகல் கொள்ளையா இருக்கு... லஞ்சம் வாங்குறத மீட்டிங் போட்டு யோசிப்பிங்களோ ?

பார்த்திபன் : மறுபடியும் போலீஸ திட்டுற...
வடிவேலு : இல்ல.. இல்ல... இந்தாப்பா கிரடிட் கார்டு... மூவாயிரத்துக்கு என்டிரி போட்டு கொடு...

பார்த்திபன் கார்ட்டை வாங்கி கிரடிட் கார்ட் மிஷினில் தெய்கிறார்.

பார்த்திபன் : இந்தா.. சிலிப்பல கையெழுத்து போடு.
வடிவேலு : என்னது... இது மூவாயிரத்தி அம்பது போட்டிருக்க...

பார்த்திபன் : நாங்க கட்ட வேண்டிய.. சர்வீஸ் டாக்ஸ், இன்கம் டாக்ஸ் சேர்த்து என்டிரி போட்டிருக்கேன்.
வடிவேலு : தினிசான லஞ்சமா இருக்கு...? இன்கம் டாக்ஸ் சேர்த்து லஞ்சம்மா...?? ரோம்ப முன்னேறிடிங்க..

பார்த்திபன் : இப்போ கையெழுத்து போடுறீயா... இன்னும் ஏதாவது பைன்...
வடிவேலு : கைழுத்து போடுறேன்... ஆளா விடுடா சாமி...

பார்த்திபன் : ம்ம்... இந்த மாசம் லஞ்சம் வாங்குற டார்கெட் முடிஞ்சது....
வடிவேலு : என்னது... லஞ்சம் வாங்குறதுக்கு டார்க்கெட்டா..???

LinkWithin

Related Posts with Thumbnails