வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, May 27, 2014

பத்து நிமிட காமம் !!

“கார்த்திக் சார் ! இன்னைக்கு கன்பார்ம்மா வந்திருவீங்களா !” கொஞ்சம் சலிப்புடனே வினோத் குரல் இருந்தது.

பல முறை வருவதாக சொல்லி பயந்துக் கொண்டு எதாவது வேலையிருப்பதாக சொல்லி சமாளித்துவிட்டேன். உள்ளுக்குள் ஆசை இருக்கும் அளவிற்கு பயமும் இருக்கிறது. ஆனால், இந்த முறை கண்டிப்பாக சென்றாக வேண்டும். எவ்வளவு நாள் தான் அடக்கி வைத்துக் கொள்வது. இந்த முறை சென்று விட வேண்டும்.

வேசி, விலைமகள், பரத்தை, விபச்சாரி என்று பல ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்பவளுக்கு தமிழில் இத்தனை பெயர்கள். வேசன், விலைமகன், பரத்தன், விபச்சாரன் என்ற வார்த்தைகள் தமிழில் இல்லை என்று சொல்கிறார்கள். எனக்கு என்னவோ ‘இல்லை’ என்பதை விட, நாம் பயன்படுத்தவில்லை என்ற தோன்றுகிறது.

தமிழ் இலக்கியம், வார்த்தைகள் பேசும் அளவிற்கு நான் மிக பெரிய அறிவாளியல்ல.. உத்தம புத்திரன் அல்ல. விலைமாதுவிடம் செல்ல வேண்டும் என்று ஆறு மாதமாக ஆசைப்பட்டு, ஒரு மாதமாக முயற்சி செய்து, ஒரு வாரமாக பயந்து.. இப்போது தைரியமுடன் செல்ல இருக்கும் சராசரி இருபத்தியைந்து வயது இளைஞன் தான்.



வினோத் வரச் சொன்ன இடத்திற்கு சரியாக வந்தேன். தெருமுனையில் வண்டியில் வண்டியை நிறுத்தச் சொல்லி வந்துவிட்டான். சினிமாவில் வருவது போல் ஏதோ சந்து சந்தாக அழைத்து செல்லப் போகிறானோ என்று தோன்றியது. ஆனால், தெருவின் இடது பக்கத்திலே அவன் சொன்ன வீடு இருந்தது.

வீத விதமான பெண்கள், கவர்ச்சிகரமான உடையில் நம்மை பார்வையாளே அழைப்பார்கள் என்ற எதிர்பார்த்தேன். குறிப்பாக தொப்புள் தெரியும் படி புடவை கட்டியிருப்பார்கள் என்று நினைத்தேன். அனைத்து கற்பனைக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. ஒரு சாரசரி நடுத்தர வீட்டில், மூன்று பெண்களுடன் ஒரு அம்மா இருந்தான். மூன்றுமே பார்க்க அழகாக இல்லை. மூன்றும் பிடிக்கவில்லை. இருப்பதில் யார் சிறந்தவர்கள் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை.

திருமணத்துக்கா பெண் பார்க்கிறோம். ஒரு மணி நேரத்துக்கு தானே ! அதுவும் இல்லாமல் அந்த மூன்று பெண்களை முகத்தைப் பார்க்க எனக்கு மாதிரியாக இருந்தது. உள்ள வரும் வரை இருந்த பயம் குற்றவுணர்வாக இருந்தது.

என் ஆண் திமிரு தான் இவர்களுக்கு சாப்பாடு போட போகிறது. இந்த கடையில் பொருள் சரியில்லை என்று சொல்லி வேறு கடைக்கு செல்வது போல் இங்கு முடியாது. வினோத் போன்ற ஆட்களை மாமா பயல் என்று சொன்னாலும், இவனை போல ஆட்களை தேடுவது கடினம். இவனை மாதிரியான ஆட்களால் மட்டுமே இருந்த இடத்தில் காரியத்தை சாதிக்க முடியும்.

எதிர்காலத்தில் மாமா வேலை பார்க்கும் வினோத் பெரிய ஆளாக வருவான். ஆனால், கௌரவம், உழைப்பு, நேர்மை என்று பேசுபவர்கள் வினோத் அளவுக்கு உயர முடியாது என்பது நிதர்சன உண்மை.

இருப்பதிலே பார்ப்பது கொஞ்சம் சுமராகவும், பார்க்க 20 வயது போல இருக்கும் பெண்ணை தேர்ந்தெடுத்தேன். அந்த அம்மா என்னை ஒரு அறைக்கு போகச் சொன்னார். பெண்ணுக்கு பதிலாக வினோத் உள்ளே வந்தான்.

”அந்த பொண்ணு சின்ன பொண்ணுனால 1000 ரூபா ரேட் ஜாஸ்தி.” என்றான்.

முதல் முறை செய்யும் போது கொஞ்ச சின்ன வயது பெண்ணாக இருக்கட்டுமே. சந்தோஷத்திற்கு ஏது விலை என்று கேட்கும் பணத்தை கொடுத்துவிட்டேன். பேரம் பேச தோன்றவில்லை. இந்த இடத்தில் பேசவும் தோன்றவில்லை.

என் முதல் இரவு கனவோடு கட்டிலில் அமரலாம் என்று இருந்தேன். ஆனால், அந்த அறையில் கட்டில் இல்லை. சுருட்டப்பட்ட மெத்தை மட்டும் இருந்தது. கீழே செய்ய போகிறோமா என்று நினைப்பதற்குள்ளே, அந்த பெண் அறைக்கு வந்தாள்.

அறையில் தாபல் சரியாக இல்லை. பேருக்கு என்ற போடப்பட்டுயிருந்தது. உள்ளே எதாவது பிரச்சனை, அலறல் சத்தம், அதிகம் நேரம் எடுத்துக் கொள்வது போன்ற சமயங்களில் உடைத்து உள்ளே வர முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும்.

அந்த பெண் கிட்ட வரும் போது தெரிந்தது, என் தோள் கீழே உயரம். அதனால், அவளின் நெற்றி வேர்வையோடு ஒரு முத்தம். நான் சொல்வதற்கு முன்பே அவள் ஆடைகளை கலைக்க தயாராள்.

“இருங்க கொஞ்சம் பேசலாம்.”

ஒரு கனம் அவளுக்கு புரியவில்லை. இங்கு வந்து பேசுவதற்கு என்ன இருக்கிறது என்பது போல் அவளது பார்வையிருந்தது.

பணத்திற்கு வந்தவளிடம் காதலையும், அன்பையும் எதிர்பார்க்க முடியாது தான். அதே சமயம் பணத்திற்காக படுக்க வரும் எல்லாப் பெண்களாலும் நடிக்க முடியாது என்பது அவள் பார்வையில் தெரிந்தது.

காதலோடு அனைத்தேன். அவளுக்கு பிடிக்கவில்லை. கொடுத்த காசுக்கு செய்யாமல் எப்படி இருப்பது. அவள் கழுத்தில் முத்தம். பெண் உறுப்புகளில் தடவினேன். அவள் என்னை தொடுவது எல்லாம் தடுப்பது போல் இருந்தது.

சீக்கிரம் செய்யலாமே என்பது போல் அவளது செய்கையிருந்தது. அவளின் ஒவ்வொரு செய்கையில் என் ஆர்வத்தை குறைப்பது போல் தான் இருந்தது. பேசாமல் வெளியே சென்றுவிடலாமா என்ற எண்ணம். பணம் கொடுத்தாகிவிட்டது. கொடுத்த பணத்தை திரும்பி பெற முடியாத இடம்.

நான் யோசித்துக் கொண்டு இருக்கும் போதே ஆடைகளை கலைத்து விட்டு நிர்வாணமாக நின்றாள். சில அணைப்புகள், முத்தங்கள், விளையாட்டுகளுக்கு பிறகு நான் செய்ய நினைத்த காரியத்தை இரண்டாவது நிமிடத்தில் செய்துவிட்டாள்.

ஒரு பெண் நிர்வாணமாக இருக்கும் போது நான் மட்டும் ஆடையை கலைக்காமல் எப்படி இருப்பது. என் ஆடைகளை ஒவ்வொருன்றாக கலைத்தேன். என் வேற்றுடல் அவளை எந்த விதத்திலும் உணர்ச்சி வசப்படுத்தவில்லை. பல ஆண்கள் உடலை பார்த்த கண்களுக்கு நான் வித்தியாசமாக தெரிய நியாயமில்லை தான். எனக்கு முதல் பெண் நிர்வாணத்தை நேரடியாக ரசிக்கிறேன்.

 என் தலையை கொய்து, சில தீண்டல் எல்லாம் செய்ய வேண்டுமென்றே செய்தாள். அவள் ஒவ்வொரு தொடுதலிலும் செயற்கை தனம் அதிகமாக இருந்தது. இதையெல்லாம் யோசித்துக் கொண்டு இருக்க முடியவில்லை. கிடைத்த ஒரு மணி நேரத்தில் முடிந்தவரை அவளை அனுபவிக்க வேண்டும்.

அதே சமயம், எனக்கு ஏதாவது பேச வேண்டும் போல் இருந்தது. இந்த அணைப்பில் என்ன பேசுவது என்று புரியவில்லை.

“முதல்ல இப்படி பண்ணுவோம். அப்புற வேற மாதிரி பண்ணுவோம்.”

”இல்லைங்க… ஒரு வாட்டி மேல செய்யக் கூடாது. செஞ்சா வர சவுட்ல கதவு தட்டுவாங்க..”

அடப்பாவிங்களா.. ஒரு வாட்டிதானே. என்னிடம் ஒரு மணி நேரம் என்று கூறினானே. நுகர்வோர் வழக்கு போட முடியாதது. கர்ணனுக்கு கிடைத்த நாகஸ்திரம் போல் ஒரு முறை தான் பயன்படுத்த வேண்டும். இரண்டாவது முறை பயன்படுத்த நினைத்தாலும், அதற்கான உரிமையில்லை.

முடிந்த அளவுக்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டே செய்ய வேண்டும் தோன்றியது. 

”இங்க ரொம்ப நேரம் இருக்க முடியாது. ரொம்ப ரிஸ்க்” என்றாள்.

 நான் எதுவும் கேட்காமல் அவளாக எதற்காக இப்படி சொன்னாள். இவளை அனுபவிக்கும் இன்பத்தை ஒரு நிமிடம் கூட தர மாட்டேன் என்கிறாள். காசு கொடுத்து ஒட்டுக் கேக்குறாங்களா என்ற பயம் தோன்றியது.

கொடுத்த காசுக்கு முடித்துவிட்டு கிளம்ப வேண்டியது தான் நல்லது. சந்தோஷமாக செய்ய வேண்டிய உறவை காசுக்காக செய்யும் போது சில குறைகள் இருக்க தான் செய்யும். அந்த உறவே மிக குறையாக இருந்தது.

உதட்டில் முத்தம் கொடுத்தேன் துடைத்துக் கொண்டாள். மீண்டும் உதட்டில் முத்தம் கொடுக்கக் கூடாது என்றாள்.

ஆடையில்லாமல் நான் நெருங்கும் முன்பே எனக்கு ஆண்ணுறை மாட்டிவிட்டாள். விந்து அவள் உடலில் பட அவள் விரும்பவில்லை.

 “செய்யும் போது போடுறேனே. இப்போ எதுக்கு..”

 “இல்ல எனக்கு இன்பென்ஷன் அச்சுனா கஷ்டம். அடுத்தது யாரும் வரமாட்டாங்க.” என்றாள்.

 அவள் பெண்ணுருப்பில் விரல் வைக்க அனுமதிக்கவில்லை, கிட்டதட்ட உடலுறவில் எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இவர்களைப் போன்ற விலைமாதுக்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். தன் உடல் தான் முதலீடு என்பதால் மிக கவனமாக செயல்படுகிறாள்.

அவள் அங்கங்கள் என்னை திருப்தி படுத்துவது போல் இல்லை. முடிந்த அளவுக்கு செய்தேன். கால் மனது திருப்தியோடு ஆடைகளை மாற்றிக் கொண்டேன்.

"கார்த்திக் இதெல்லாம் உனக்கு தேவையாடா” என்று உள்ளூர நினைத்துக் கொண்டேன்.

“எனக்கு டிப்ஸ் கொடுப்பீங்களா !” என்று ஒரு மாதிரி சிரித்தப்படி கேட்டாள். இது வரை நடித்ததில் மிக சிறந்த நடிப்பு இதுவாக தான் இருந்தது. வெளியே வரும் போது தான் புரிந்தது அவள் என்னை ஒரு முறைக் கூட முத்தம் கொடுக்கவில்லை.

அவளுடன் கொண்ட காமம் எனக்கு திருப்தி அளிக்கவில்லை. அவளுக்காக நான் கொடுத்த பணம் வீண் தான். ஆனால், அவள் ஒரு மிக பெரிய காரியம் செய்திருக்கிறாள். அவள் அப்படி செய்திருப்பது அவளுக்கே தெரியாது.

என்னுடன் இருந்த பத்து நிமிடத்தில் அவள் என்னை மீண்டும் மனிதனாக்கியிருக்கிறாள். இனி பக்கத்து வீட்டில் இருந்து விளையாட வரும் சிறுமி, யூவதியை தவறாக பார்க்க தோன்றாது. பழகும் சக தோழிகளிடம் தவறான எண்ணத்தில் தொட தோன்றாது. அவர்களின் அங்கங்கள் என்னை வசீகரிக்கத்தாலும், இந்த பெண்ணின் உருவம் வந்து போகும். இல்லை என்றால் இன்னொரு முறை இங்கு வந்து செல்ல வேண்டியது தான்.

எனக்கு வரப் போகும் மனைவிக்கு துரோகம் செய்கிறேனா, இங்கு வந்து நோய் பெறப் போகிறேனா என்பது பற்றி எனக்கு கவலையில்லை.

வருத்தமுமில்லை. நான் சாகும் போது என்னால் எந்த பெண்ணும் உடலால் பாதிக்கப்பட்டிருக்க மாட்டாள். நான் யாருக்கும் பாதிப்பு கொடுக்காத மனிதனாக சாகுவேன். அதற்காகவாவது மாதம் ஒரு முறை வந்து போகவது எனக்கு தவறாக தெரியவில்லை.

Monday, May 19, 2014

Netaji Subhas Chandra Bose : The forgotten hero

சமிபத்தில் ' Netaji Subhas Chandra Bose: The Forgetten Hero' என்ற ஹிந்தி படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படம். போஸாக சச்சின் கெடேகர் (தமிழில் தெய்வ திருமகள், மாற்றான் படத்தில் நடித்தவர்.) 200% நேதாஜியாக பொருந்தியிருக்கிறார்.

வரலாற்று படம் என்பதால் வழக்கம் போல் வணிக ரீதியாக தோல்வி படம் தான். ஆனால், இந்த படத்தில் நிறைய வரலாற்று கேள்விகள் எழுப்ப வேண்டியதாக இருக்கிறது.

போஸ் ஆரம்பக்காலத்தில் படம் தொடங்கவில்லை. நேதாஜி இளமை பருவம் அவரின் சுதந்திர போராட்டத்தின் வேட்கையை காட்டவில்லை. குறைந்தபட்சம் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பணியாற்றியதையாவது சொல்லியிருக்கலாம். இரண்டும் இல்லாமல், காந்தியுடன் விவாதம் நடத்தி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வந்ததில் இருந்து படம் தொடங்குகிறது. அதாவது 1940ல் இருந்து ஆகஸ்ட், 1945ல் விமானம் ஏறியது வரை படம் செல்கிறது.



நேதாஜியின் வாழ்க்கையை இளமைப் பருவத்தில் காட்டியிருந்தால் காந்தி காங்கிரஸ் தனது சொந்த ஸ்தாபனமாக நடத்தியதை வெளியே தெரிந்திருக்கும். இன்னும் எத்தனைக் காலம் காந்தியின் உண்மை முகத்தை திரையில் காட்டாமல் இருக்க போகிறோமோ தெரியவில்லை.

1934ல் வெனினாவில் சந்தித்த எமிலியை தனது உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். பிறகு 1937ல் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், படத்தில் நேதாஜி ஜெர்மனியில் அடைக்களமாக இருக்கும் போது (1941 பிறகு) திருமணம் செய்து கொண்டது போல் காட்டுகிறார்கள்.

ஒரு வருடம் ஜெர்மனியில் தங்கிய பிறகு நேதாஜி ஹிட்லரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

தனது முதல் சந்திப்பிலே அவரது புத்தகத்தில் ’மெயின் கேம்ப்’ (எனது போராட்டம்) புத்தகத்தில் இந்தியர்களை பற்றி குறிப்பட்டது தவறு என்கிறார். "எனது போராட்டம்" ஹிட்லர் சிறையில் இருக்கும் போது எழுதியது. கிட்ட தட்ட 15 வருடங்களுக்கு முன் இருக்கும். ஹிட்லரே எழுதியதை மறந்திருப்பார். இந்திய சுதந்திரத்திற்காக இராணுவ உதவி பெற வந்த இடத்தில் நேதாஜி ஹிட்லரின் புத்தகத்தைப் பற்றி பேசியிருப்பாரா ?

ரஷ்யா மீது படை எடுத்தது தவறு என்று ஹிட்லர் முன் தைரியமாக நேதாஜி கூறுவது போல் காட்டுகிறார்கள். நேதாஜி கூறியதும் ஹிட்லர் பொறுமையாக பதிலளிக்கிறார். நேதாஜி துணிச்சல் மிக்கவர் தான். தனது நாட்டுக்காக உதவி வாங்க வந்த இடத்தில் தனது சொந்த கருத்தை ஹிட்லர் முன்பே கூறியிருப்பாரா ? என்ற சந்தேகம் எழுகிறது. தனது ஆலோசகர்கள் கூறியே ஏற்காத ஹிட்லர், நேதாஜி சொல்லியா கேட்டுவிடவா போகிறார். இதை நேதாஜி அறியாதவரா என்ன ? ஹிட்லர் பொறுமையாக பதில் அளிக்கக் கூடியவரா ?

ஹிட்லரிடம் இருந்து எந்த உதவி கிடைக்காததால், கடைசியாக ஜப்பானுக்கு செல்ல உதவி கேட்கிறார். விமானத்தில் செல்ல விரும்புவதாக போஸ் சொல்ல, ஹிட்லர் நெடுந்தூரம் விமானப் பயணம் மிகவும் ஆபத்தானத், தனது யூ போட்டில் (நீர்முழுகி கப்பல்) செல்ல சொல்கிறார். முதல் சந்திப்பிலேயே நேதாஜி மீது ஹிட்லருக்கு அப்படி என்ன அக்கரை என்று சொல்லும் அளவிற்கு தோன்றுகிறது.

படத்தின் புணைவுக்காக இப்பட்டிப்பட்ட காட்சிகள் சேர்க்கப்பட்டதா அல்லது உண்மையிலேயே நேதாஜி ஹிட்லரிடம் இப்படி தான் பேசினாரா என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா என்று தெரியவில்லை.

நேதாஜியின் சர்ச்சைக்குரிய மரணத்தை அதிகம் தொடாமல் விட்டுவிட்டார் என்று தோன்றுகிறது.

இறுதியில் வெள்ளையர்கள் பேசும் போது, "இந்தியாவை நாம் இன்னும் அடிமையாக வைத்திருந்தால், இந்திய இராணுவம் நமக்கு உதவி செய்யுமா என்பது சந்தேகம். அந்த அளவுக்கு ஐ.என்.ஏ இந்திய இராணுவத்தில் பெரிய பாதிப்பு ஏற்படுத்தியிருகிறது" என்கிறார்.

இராணுவ உதவி கிடைக்காத நாட்டை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்வது என்பதால் கூட வெள்ளையர்கள் நம்மை விட்டு சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.

பல அரசியல் காரணமாக நேதாஜியின் வாழ்க்கையை முழுமையாக அலசவில்லை என்பதை ஏற்கலாம். சுதந்திரத்திற்காக போராடிய ஒருவரை மறந்துவிடக் கூடாது என்பதற்காக இந்த படத்தை எடுத்திருக்கிறார்கள் என்பதற்காக பாராட்டலாம். வரலாற்று பிழை இருப்பதை தான் இந்த படத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

Friday, May 9, 2014

பள்ளி மாணவர்களின் ஆயுதப் புரட்சி : Chittagong, Khelein Hum Jee Jaan Se


இரண்டு படங்களும் ஒரே உண்மை சம்பவத்தை தான் சொல்கிறது. இரண்டுமே வியாபார ரீதியாக தோல்வி அடைந்த படங்கள். ஆனால், திரைக்கதை, கதை சொன்ன நேர்த்தியும், வித்தியாசத்தையும் ரசிக்க வைக்கிறது.

வெள்ளையர்களின் காலனி காலத்தில் அடிமையாய் இருந்த சிட்டங்காங் (இப்போது பங்களாதேஷ்யில் இருக்கிறது) நடந்த ஆயுத எழுச்சி தான் படத்தின் கதை. சுதந்திரப் போராட்டத்தில் இவர்களின் போராட்டம் மிக முக்கியமானது. காரணம், இதில் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய 56 பதின்ம வயது சிறுவர்கள். அவர்களை வழி நடத்தியவர் ’மாஸ்டர்டா’ என்று அழைக்கப்படும் சூர்யா சென்.

சரியான திட்டமிடலும், சரியான நேரத்தில் நடத்திய தாக்குதலிலும் சிட்டங்காங் நகரத்தை ஒரு நாள் முழுவதும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறார்கள். இந்திய தேசிய கோடியை ஏற்றுகிறார்கள். வெள்ளையர்களின் இராணுவம் வருவதை அறிந்து தப்பிச் செல்லும் போது வெள்ளையர்களால் ஒவ்வொரு சிறுவர்களாக சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். ஒரு சில சிறுவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். அதில் ஜூக்கு என்ற சிறுவன் மிக முக்கியமானவன்.

மாணவர்களை போராட்டத்திற்கு வழி நடத்திய ஆசிரியர் சூர்யா சென்னும் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்படுகிறார். Khelein Hum Jee Jaan Se படத்தின் கதை இத்தோடு முடிகிறது.

Chittagong படத்தில் ஜூக்கு சிறையில் இருந்து வாலிபனாக வெளியே வந்து வெள்ளையர்களுக்கு எதிராக தனது கிராமத்தை போராட வைக்கிறான். தனது முதுமைக் காலத்தில் இளமைப் போராட்ட நினைவுகளை கூறுவது போல் படம் முடிகிறது.



Khelein Hum Jee Jaan Se  படத்தில் சூர்யா சென் முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. அபிஷேக் பச்சன், தீபிகா படுகோன் போன்ற பெரிய நட்சத்திர பலத்தோடு களம் இறங்கியப் படம். வணிக ரீதியாக திரில், செண்டிமெண்ட், ஒரு காட்சிக்கு காதல் என்று பொருத்தி திரைக்கதை அமைத்திருப்பார்கள்.

Chittagong படத்தில் சூர்யா சென்னிடம் பயிற்சி பெற்ற 56 மாணவர்களின் ஒருவனான ஜூக்குவை முதன்மை பாத்திரமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 14 வயது சிறுவன் வெள்ளையர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி, அவர்களின் செய்யும் கொடுமையை அனுபவித்து சிறையில் இருந்து வருகிறான். அவனின் அனுபவம் ஒரு கிராமத்தின் போராட்டத்தை தலைமை தாங்க வைக்கிறது. எந்த நட்சத்திர பலம் இல்லாதப்படம். ஒரே நேர்கோட்டில் மிக மெதுவாக செல்லும் கதை. 2012ல் சிறந்த இயக்குனர் உட்பட மூன்று தேசிய விருதுகள் பெற்று இருக்கிறது.

பெரும்பாலும் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டதால் இரண்டு திரைக்கதையையும் இது மோசம், இது சிறந்தது என்று சொல்ல விரும்பவில்லை. இரண்டு இயக்குனர்களும் தங்களுக்கு எது தேவை என்று முன்பே தீர்மானித்து தான் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள். தங்கள் தேவைக்கு சரியாக தான் படம் இயக்கியிருக்கிறார்கள்.

இரண்டு படங்களிலும் தோல்வி என்றாலும் இதில் கற்க வேண்டிய விஷயங்கள் இருக்கிறது. ஒரு உண்மை சம்பவத்தை எப்படி சொல்லலாம் என்பதற்கு இரண்டு விதமான திரைக்கதை சொல்லும் படங்கள். திரைக்கதை படிப்பினைக்கான கண்டிப்பாக இந்த இரண்டு படங்களும் உதவும் என்று தோன்றுகிறது.

வாய்ப்புள்ள நண்பர்கள் அவசியம் பாருங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails