வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, November 29, 2016

Demonetization நகைச்சுவை !!

செந்தில் : அண்ணே ! நிலைமை சரியாயிடிச்சு. பாருங்க ATMல கூட்டமே இல்ல...

கவுண்டமணி : டேய் ! அந்த ATM காசே இல்லடா !!

செந்தில் : அதனால என்ன அண்ணே ! ATMல கூட்டமே இல்லல்ல.... அப்போ எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு தானே அர்த்தம்.

கவுண்டமணி : டேய் ! ATMல பணம் இருந்தா தானே காசு எடுக்க ஆளுங்க வருவாங்க...

செந்தில் : நீங்களே சொல்லுங்க... ATMல கூட்டம் இருக்கா ? இல்லையா ? ... கூட்டம் இல்லனு போது எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு அண்ணே ! 

கவுண்டமணி : ஐய்யோ ராமா $#$#$ !!



**
கைதி 1 : எதுக்கு உன்ன கைது பண்ணாங்க... ?

கைதி 2 : அரசாங்கத்துக்கு உதவி பண்ணேன். கைது பண்ணிட்டாங்க...

கைதி 1: அட பாவமே ! அப்படி என்ன உதவி பண்ண..?

கைதி 2 : கவர்மெண்ட் கிட்ட பணமில்லனு அவங்களுக்கு உதவியா நானே சொந்தமா ரூ.2000 நோட்ட பிரிண்ட் பண்ணேன். அதுக்கு கைது பண்ணிட்டாங்க...

**
இன்று பாரத் பந்த் (28.11.16) சொன்னாங்க....

எத்தன மணி, எந்த சேனல்ல படம் போடுறாங்கனு சொல்லவே இல்ல..



**
ரூபாய் நோட்டு அடிக்கும் ஆர்டரை சிவகாசி பிரிண்ட்டிங்க்கு கொடுத்திருந்தால் இரண்டு நாட்களில் தேவையான பணத்தை அச்சடித்திருப்பார்கள்.

**
இன்று ஒருப் பெண் personal loanக்காக போன் செய்ய... “ Rs.XXX Amount லோன் வேண்டும்..” என்றேன்.

“உங்கக்கிட்ட Pay slip, PAN card, Bank details எல்லாம் இருக்கா சார்...” என்று கேட்டார்.

“இருக்கு. லோன்ன Cash தானே தருவீங்க...” என்று கேட்டேன்.
"இல்ல சார்... உங்க அக்கவுண்ட்ல போட்டுடுவோம். நீங்க Withdraw பண்ணிக்கலாம்...”

“ஏம்மா... Bankல இருக்குற என் காச Withdraw பண்ண முடியலைனு தான் லோன் கேக்குறேன்” என்றேன்.

போன் கட்...

**


ரேஷன்ல
அரசிக் கொடுத்து பார்த்திருப்ப
பருப்பு கொடுத்து பார்த்திருப்ப
சக்கரை கொடுத்து பார்த்திருப்ப
மண்ணணெய் கொடுத்து பார்த்திருப்ப

ரேஷ்னவிட பேங்க்ல
கூட்டத்த பார்த்திருக்கிறியா...
வெறித்தனமா
அடிச்சுட்டுப் பார்த்திருக்கிறா...
நம்ப பணத்த ரேஷன்ல கொடுக்குற மாதிரி
அளவா கொடுப்பாங்க...
ஒரு நாளைக்கு ரூ.4000 தான் தருவாங்க...
பார்க்குறியா... பார்க்குறியா... !

 **
பள்ளி நாட்களில் India is My Country என்று உறதிமொழி எடுக்கச்சொன்னார்கள். இனி ’India is Mai (மை) Country’ என்று சொல்ல கட்டளையிடுவார்கள்.

**
வீட்டிலிருக்கும் 500, 1000 நோட்டுகளைக் என் மனைவி கொடுத்தார். எனக்கு தெரியாமல் வீட்டில் நடந்த ஊழல் இப்போது தெரிய வந்திருக்கிறது

**

மோடி வெளிநாட்டு போறாரு கவலைப்பட்டாங்க. ஒரு அறிவிப்பு கொடுத்தாரு, அவரு வெளிநாட்டுலேயே இருந்திருக்கலாம் நினைக்க வச்சிட்டாரு

Tuesday, November 22, 2016

காதலன் : ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு - பா. தீனதயாளன்

ஜெமினியை வைத்துப் படம் எடுப்பது சின்னக் குழந்தையை வெச்சு முடிவெட்டற மாதிரி” – நாகேஷ். 

திரையுலகின் மூவேந்தர் நடிகர்களில் ஒருவர். அரசியல் சாயம் இல்லாத நடிகர். காதலை வாழ்க்கையாகக் கொண்டவரின் வாழ்க்கை வரலாறு. திரையுலகில் எம்.ஜி.ஆர், சிவாஜி குறித்து பல நூல்கள் இருக்கிறது. காரணம், எம்.ஜி.ஆர் அரசியல் பிரமுகர். சிவாஜி நடிப்பின் அகராதி. ஆனால், ஜெமினி கணேசன் அப்படியில்லை. கிசுகிசு தவிர எதிலும் சிக்காதவர். பல ஆண்களின் பொறாமையை சம்பாதித்தவர். மக்கள் நடிகர்களுக்கு மத்தியில் இவர் இயக்குனர்களின் நடிகராக இருந்தவர். இயக்குனர் எது தேவையோ அதை மட்டுமே தனது நடிப்பில் கொடுப்பவர். அதனால், ஸ்ரீதர், கே.பாலசந்தர் போன்றவர்களின் விருப்பதிற்குரிய நடிகராக இருந்தார். 



 “எப்படி பெண்கள் உங்களிடம் தேடி வந்து பேசுகிறார்கள்” என்று ஜெமினியிட கேட்டப்போது, “பொதுவாக செட்டில் சுமாரான அழுகுள்ள பெண்களிடம் முதலில் பேச்சு கொடுப்பேன். அழகான பெண்கள் தானாகவே வந்து என்னிடம் பேச ஆரம்பித்து விடுவார்கள். எப்படி என் ட்ரிக் !” என்றார். (Hunterrr Style அறிமுகப்படுத்தியவர் இவரே !!  ) 

மனம் போல் மாங்கல்யத்தில் பைத்தியக்காரன் வேடத்தில் ஜெமினி பிரமாதமாக நடித்திருப்பார். அதைப் பற்றி அவரது முதல் மனைவி பாப்ஜி, “அது ஒன்றும் அவருக்கு க்ஷ்டமானது அல்ல ! அவர் சுபாவமே அப்படித்தானே!” என்று சொல்லிவிட்டார். எவ்வளவு கடுமையான – உண்மையான விமர்சனம். 

சிவாஜி அளவுக்கு நடிப்பு வராது என்று வெளிப்படையாக ஒத்துக்கொண்டவர். அதேச் சமயம், சிவாஜியின் கால்ஷீட் கிடைக்கவில்லைஎன்றால் அடுத்து தயாரிப்பாளர் அனுகுவது ஜெமினி கணேசனை தான். 

ஒரு மனிதன் செக்ஸ் எப்போது அற்றுப் போகிறதோ அதற்கு மேல் வாழ்க்கை பயனற்றதுதான். ஆனால் செக்ஸ் வைத்துக் கொள்ள முடியும் என்றால் எத்தனை வயதானாலும் இளமையாக வாழலாம்” – இதை தனது அதிகார பூர்வமான நான்காவது திருமணம் செய்யும் போது கூறியது. அப்போது அவருக்கு வயது 79 !!! 

”1934ல் பதிமூன்று வயதில் பள்ளியில் நாடகம் போட்டார்கள். அப்போதும் கிருஷ்ணன் வேஷம்தான் எனக்கு முதன்முதலாக வந்து சேர்ந்தது. நாடகத்தில் குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்துவிட்டது விதி. 

இப்போது ‘காதல் மன்னன்’ என்ற பட்டப் பெயரைக் கேட்டாலே மனத்தில் வெறுப்புதான் எழுகிறது.” – தனது கடைசிக் காலத்தில் தனது ‘காதல் மன்னன்’ பட்டத்தை வெறுத்த தருணத்தை அவரே கூறியது. 

ஜெமினி யாரையும் விரட்டி விரட்டிக் காதலித்ததில்லை. பெண்கள் அவரைத் தேடி வந்து காதலிப்பார்கள். பின்பு, அவர்களாகவே பிரிந்து செல்வார்கள். அவர் எப்போதும் போல இயல்பாகவே இருப்பார். 

பிராமணராக பிறந்ததால் பிராமணப்பாத்திரத்தை ஏற்றுகொள்வதில் தயக்கம் காட்டினார். ’கௌரவம்’ படத்தில் ஆரம்பத்தில் ஜெமினிக்கு சொல்லப்பட்ட கதை. ஆனால், தன்னை விட சிவாஜி சிறப்பாக செய்வார் என்று கூறியவர் ஜெமினி கணேசன். 

 “Youth is not a time of Life. It’s a state of mind. 85 வயசுலயும் இளைஞனைப் பார்க்கலாம் 35 வயசுலயும் கிழவனைப் பார்க்கலாம். நான் இதுல முதல் ரகத்தைச் சேர்ந்தவன்.” – ஜெமினி கணேசன்.

குறிப்பு : கிழக்கு பதிப்பகத்தின் பழைய வெளியீடு.

கிடைப்பது சிரமம். பழையப் புத்தகக்கடையில் அல்லது Lending Library யில் கிடைத்தால் வாசிக்கவும்.


Monday, November 21, 2016

உலக சினிமா : Pelé: Birth of a Legend (2016)

ஒரு மகன் தந்தைக்கு கொடுக்கும் உண்மையான வலி என்ன ? 

தான் தோற்றுப்போன கனவை மகன் நினைவுப்படுத்துவது. 

அதேப் போல், மகன் தந்தைக்கு கொடுக்கும் மிகப் பெரிய சந்தோஷம் என்ன ?

 தந்தை தோற்றுப்போன கனவை மகன் வெற்றிப் பெற்றுக்காட்டுவது. 

*




Pelé: Birth of a Legend கடைசி இருபது நிமிடங்கள் Peleவின் தந்தை இடத்தில் பார்த்தால் என்னவோ, கண்ணில் நீர் தழும்பப் படத்தை பார்த்தேன். Pelé என்ற தனி மனிதனின் வாழ்க்கை வரலாறோ, ஒரு விளையாடு வீரனைப் பற்றிய கதையோ இல்லை. 

1950ல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ‘Ginga’ என்ற ஸ்டைலில் தான் பிரேசில் தோற்றதாக பரவலாக நம்பப்பட்டது. 1958ல் இறுதிப் போட்டியின் ஸ்விடன் பயிற்சியாளர் பிரேசில் விளையாட்டு வீரர்களில் உடலில் இருக்கும் ஒவ்வொரு குறைப்பாடுகளை சொல்கிறார். பிரேசில் வீரர்கள் மனமுடைந்து போகிறார்கள். ஸ்விடன் நாட்டில் ஸ்விடனை வெற்றிக்கொள்வது என்பது இயலாத காரியம் என்று நினைக்கிறார்கள். 

17வயதான Pelé அவர்களை உத்வேகப்படுத்துகிறான். அவர்களுடைய இயல்பான விளையாட்டை நினைவுப்படுத்துகிறான். பிரேசிலின் பயிற்சியாளரும் ‘Ginga’ முறை தான் ஸ்விடனை வெற்றிக்கொள்ள உதவும் என்று நம்புகிறார். இறுதிப்போட்டில் பிரேசில் வரலாறுக்காணாத 5-2 என்று வெற்றிப் பெறுகிறது. 

அதுவரை யாரும் மதிக்காத Ginga’ ஸ்டைலை கால்பந்தின் மிக அழகான ஸ்டைல் என்று வர்ணிக்கப்படுகிறது. கால்பந்து விளையாட்டில் மிகப் முக்கியமான ஸ்டைலாகவும் கருதப்படுகிறது. 


படம் முடியும் Pelé என்கிற Edson Arantes do Nascimento வரின் சாதனையை காண்பிக்கப்படுகிறது. இதுவரை 1283 கோல் அடித்திருக்கிறார். மூன்று முறை பிரேசில் உலகக்கோப்பை வெற்றி பெற உதவியிருக்கிறார். இறுதியாக சொல்லப்படும் சாதனையானாலும் முறியடிக்க முடியாத சாதனை ஒன்று குறிப்பிடப்படுகிறது. அது ஒரே ஆட்டத்தில் ஐந்து கோல் அடித்த ஒரே சர்வதேச வீரர் Pelé மட்டும் தான். இந்தச் சாதனையை ஒரு க்ளப் கால்பந்து போட்டியில் ஒருவர் ஐந்து கோல் அடித்து சாதனை செய்திருக்கிறாரான். அவர் Pelé வின் தந்தை Dondinho !!! 

பிரேசில் நாடே Peléவின் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறது. மகனின் வெற்றியில் Dondinho பேசமுடியாமல் வாயடைத்து கண்ணீர்ப்பட நிற்கும் காட்சி ஒரு தந்தையின் வெற்றியை காட்டுகிறது. படம் தொடக்கத்தில் இவர் கால்பந்தின் சச்சின் டெண்டுல்கர் என்று நினைத்தேன். படம் முடியும் போது பிரேசில் கால்பந்து உலகத்தின் கடவுளாக தெரிந்தார். 


படத்தின் பின்னனி இசை நமது ஏ.ஆர்.ரகுமான். இசை தான் வாழ்க்கை என்று இருக்கும் ஏ.ஆர்.ரகுமானுக்கு Pelé பற்றியோ, கால்பந்து பற்றியோ எதுவும் தெரியாது. அவருக்கு தெரிந்தது பிரேசிலியன் இசை மட்டுமே !!! 

Pelé படத்திற்காக இசையமைக்க ஏ.ஆர்.ரகுமான் கேட்டப்போது Peléவை பற்றி கூகுள் அடித்து தேடியிருக்கிறார். Peléவின் சாதனைக்கு Ginga ஸ்டைல் மிக முக்கியக் காரணம் என்று அறிந்துக்கொண்டார்.

வெஸ்டன் கலந்த பிரேசிலியன் இசையை பின்னனி கொடுத்ததோடு இல்லாமல் “Ginga” என்ற promo song யை உருவாக்கினார். Pelé படத்தின் திரைக்கதையில் இந்தப்பாடல் இல்லை. “Ginga” முறையை பயன்படுத்தி தான் Pelé வெற்றிப்பெற்றிருக்கிறார். அதனால், இந்தப்பாடல் அவசியம் என்று ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து அதற்கான புரோமோ பாடலில் பாடியும், தோன்றியும் இருக்கிறார். 


** 

Pelé: Birth of a Legend ஒரு தனி மனிதனின் சாதனைப் படம் மட்டுமல்ல… ஒரு தந்தையின் கனவு வெற்றியைப் பற்றியப் படம். கால்பந்து என்ற விளையாட்டை பிரேசில் மக்கள் மனதில் விதைத்தவனின் படம். #worldmovie #உலக_சினிமா

Thursday, November 10, 2016

திரும்பப் பெற்ற ரூ.500, ரூ.1000 நோட்டு – யார் பாதிக்கப்படப் போகிறார்கள் ?

ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற அறிவுப்பு மூலம் கள்ள நோட்டு புழக்கம் அதிகமாக குறையும். கறுப்பு பணம் முழுவதுமாக ஓழியாவிட்டாலும் ஒரளவு குறையும். 

கார்ப்ரேட் முதலாளிகள், அமைச்சர்கள் பாதிக்கப்படுவார்களா ? 

மோடியின் அறிவிப்பில் கார்ப்ரேட் நிறுவனமும், பெரிய அரசியல்வாதிகளும் இல்லை. இவர்கள் Higher Upper-Class வகையினர்கள். அவர்களிடம் பெரிய ஆடிட்டர், வழக்கறிஞர் டீம் இருக்கிறது. இதை எளிதில் கையாள்வார்கள். ஏற்கனவே அவர்களின் கறுப்புப் பணம் தங்கமாகவோ, வெளிநாட்டில் சொத்துகளாகவோ வாங்கியவர்கள். அவர்களிடம் இருக்கும் கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர இந்த அறிவிப்பு உதவப் போவதில்லை. (அவர்கள் மீது எதிர்ப்பாராத ஐ.டி ரைட் மட்டுமே சிறந்த வழி.) 

அப்போது, யார் பாதிக்கப்படுவர்கள் ? 

அமைச்சர் போன்ற பெரிய அரசியல்வாதிகள் பாதிப்பு இல்லையென்றாலும் கவுன்சிலர், எம்.எல்.ஏ அளவுக்கு இருக்கும் அரசியல்வாதிகள் பாதிக்கப்படுவார்கள். ஒவ்வொரு கடையிலும் வாங்கிய கமிஷன் வருமானத்தை எப்படி மாற்றியாக வேண்டும். பலரை ஏமாற்றி சம்பாதித்தது, சில கொலைகள் செய்து, சில பல உறவுகள் வேண்டாம் என்று பணத்தின் பின்னால் சென்றவர்கள் இந்த தருணத்தில் யோசிக்க வேண்டும். 

இருபது வருடம் மேல் இருக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள். வட்டிக்கு விட்டு சம்பாதித்தவர்கள். அவர்கள் வருமான வரி கட்டியிருக்கமாட்டார்கள். அவர்கள் தங்கள் வருமானத்தை இப்போது வங்கியில் செலுத்தியாக வேண்டும். பத்து லட்சம் மேல் வங்கியில் செலுத்தினால் வரி ஏய்ப்பு செய்ததாக கருதப்படும். அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.



தாசில்தாரர் அளவில் இருக்கும் அரசாங்க ஊழியர்கள் தங்கள் பணத்தை வங்கியில் போட்டால் மட்டுமே பயன்படுத்த முடியும். 

அதேப் போல், திரைத்துறை, ரியர் எஸ்டேட், காய்கறிப வணிகம் போன்ற Unorganized துறையினர் சிரமப்படுவார்கள். குறிப்பாக, கறுப்புப் பணத்தில் கட்டவிருந்த ப்ளாட் கட்டும் பிராஜெக்ட் நிறுத்தினாலும் நிறுத்துவார்கள். பணத்தேவைக்காக ஏற்கனவே கட்டப்பட்ட ப்ளாட்டுக்கு அதிக விலை சொன்னவர்கள் குறைக்க வேண்டியதாக இருக்கும். 

வரிக்கட்டாமல் பல கோடி வைத்திருப்பவர்கள் வங்கியிலோ அல்லது குறுக்கு வழியிலோ மாற்ற முயற்சிப்பார்கள். இவர்கள் எத்தனை வழி கண்டுப்பிடித்தாலும், என்ன செய்தாலும் கடைசியில் அத்தனைப் பணமும் வங்கியில் செலுத்தினால் மட்டுமே பயன்படுத்த முடியும். யாருக்கும் பயன்படாமல் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தப் பணம் வங்கிக் கணக்குக்கு வருகிறதென்றால் அரசாங்கக் கணக்குக்கு வருகிறது என்று அர்த்தம்.

மொத்தத்தில், வருமான வரி கட்டாத Upper Class, Upper Middle-class வர்கத்தினர்களுக்கு சம்பாதித்தவர்களுக்கு இதுப் பெரிய Check. 


மோடியின் நல்லிரவு அறிவிப்பை பலர் எதிர்க்கிறார்கள். கால அவகாசம் கொடுத்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களுக்கு நேரம் கொடுத்தால், தங்கள் பணத்தை தங்கத்திலோ அல்லது வெளிநாட்டில் முதலீடு செய்து வெள்ளையாக மாற்றிவிட வாய்ப்பு இருக்கிறது. நல்லிரவு அறிவிப்பு என்பது சரியானது தான். 


அடுத்தது அரசு என்ன செய்ய வேண்டும் ? 

எந்த அளவுக்கு விரைவாக அறிவிப்பு கொடுத்தாரோ, அதை சரிசெய்யும் விதமான சரியாக திட்டமிடல் இருக்க வேண்டும். 

அடுத்த இரண்டு மாதத்திற்கு 80C பெற்ற N.G.O கணக்குகளை வருவாய் துறையினர் கவனிக்க வேண்டும். யார் யார் எவ்வளவு நன்கோடை கொடுக்கிறார்கள் என்பதையும், அவர்கள் கணக்கில் இருந்து எந்த வங்கிக் கணக்குக்கு பணப்படுவாட நடக்கிறதது என்பதை கண்காணிக்க வேண்டும்.

வங்கி ஊழியர்கள், குறிப்பாக மேனேஜர் அளவில் இருப்பவர்களையும் கண்காணிக்க வேண்டும். ரூ.4000 மாற்ற வரும் வாடிக்கையாளரின் PAN Cardயை அடையாள அட்டையை நகல் எடுத்து, கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் உதவி செய்ய வாய்ப்பு இருக்கிறது. 

அடுத்து , தங்கம் மார்க்கெட்டின் அதிக முதலீடு வரும். தங்க முதலீட்டார்களையும் கண்காணிக்க வேண்டும். 

இதைச் செய்யாதப் பட்சத்தில் 500, 1000 நோட்டுகளை திரும்பப் பெற்ற உத்தரவில் எந்த பயனும் இருக்காது. 

** 

சரி… அதற்காக, அன்றாடம் வாழும் மக்கள் பாதிக்கப்படலாமா ? இயல்பு வாழ்க்கை பாதிக்கபடலாமா ? 

ஒழுங்காக வருமான வரிக் கட்டியவர்கள் இரண்டு நாள் தான் அவஸ்தை. இவர்கள் Middle-Class, Lower Middle-Class, Lower-Class வகையினர். சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் என்று தொடங்கி வெளியூருக்கு செல்பவர்கள் வரை அனைவருக்கும் இரண்டு நாள் அவஸ்த்தை என்பதில் சந்தேகமில்லை. ஆனால், வருமான வரிக்கட்டாதவர்களுக்கு அடுத்த இரண்டு மாதம் அவஸ்தைப்பட போகிறார்கள். 

கவுன்சிலர்கள், ரியல் எஸ்டேட் வாதிகள், அரசாங்க ஊழியர்கள் போன்றவர்கள் நமது பணத்தை லஞ்சமாகவோ, கமிஷனாகவோ கொடுத்தது பழக்கப்படுத்தி நாம் தவறு செய்கிறோம். குறைந்தப்பட்சம் வேடிக்கைப்பார்த்து கொண்டு அமைதியாக இருந்திருக்கிறோம். அந்த தவறுக்கு இரண்டு நாள் அனுபவிப்போம். 

நமது பணத்தை ஆட்டையப் போட்டவர்கள் இரண்டு மாதம் அவஸ்தைப்படட்டும். வருமான வரி துறையினரிடம் மாட்டி நஷ்ட ஈடுக்கட்டடும். 

மோடி அரசு எடுத்து வைத்திருப்பது முதல் அடியாக இருந்து, தொடர்ந்து கார்ப்பிரேட் ஆசாமிகள் மீது சில அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் கறுப்புப்பணம் ஒழிப்பு நடவடிக்கையில் நிச்சயம் பலன் தரும். கறுப்புப் பணத்தை ஒழிக்க இந்த ஒரு நடவடிக்கைப் போதும் என்று நினைத்தால், புது ரூ.500, ரூ.2000 நோட்டு வந்ததும் ஆறு மாதத்தில் பழைய நிலைமைக்கு திரும்பிவிடும்.

Wednesday, November 9, 2016

ரூ.500 - ரூ.1000 நோட்டு இல்லாத முதல் நாள் அனுபவம் !

காலையில் வண்டி டயர் பஞ்சராகி, மெக்கானிக் டயர்–டுயூப் இரண்டையும் மாற்ற வேண்டும் என்று சொல்லிவிட்டார். ரூ.1500 ஆகும். கையில் பணம் இருந்தும் அதற்கு மதிப்பில்லை.



“கிரெட் கார்ட் வாங்குவியானு” கேட்டேன். 

“இந்தியாவுலேயே பஞ்சர் கடைக்கு வந்து கிரெட் கார்ட் வாங்குவியானு கேட்ட முதல் ஆள் நீங்க தான்!” என்று கேட்பது போல் ரியாக்‌ஷன் கொடுத்தார். 

1.5. கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் MRF Dealer ஒருவர் இருப்பதாகவும், அவரிடம் கிரெட் கார்ட் மூலம் டயர் வாங்கிட்டு வாங்க என்று மெக்கானிக் கூறினார். 

MRF Dealer யிடம் நிலைமையை சொல்ல, என் கையில் இருக்கும் ஒரு ஆயிரம், ஒரு ஐந்நூறு நோட்டை வாங்கி புது டயர் கொடுத்தார். 

** 

பெட்ரோல் பங்க்கில் அவரவர் ரூ.100, ரூ.200 க்கு பெட்ரோலுக்கு ரூ.500 நீட்ட, சில்லரை குறைவாக இருக்கும் வேலை செய்யும் பெண் ”சில்லரை அதிகமா இல்லை. மத்தவங்களுக்கு கொடுக்கனும். இரண்டு மூனுப் பேர் ஷேர் பண்ணிக்கோங்க..” என்றாள். 

500/1000 ரூபாய் வாங்க மறுப்பது, பெட்ரோல் பங்க்யை மூடி வைப்பதை விட இது நல்ல யோசனையாக இருக்கிறது. 

அடுத்த இரண்டு நாளுக்கு பெட்ரோல் பங்க்கு இரண்டு, மூன்று வண்டியில் சென்று பெட்ரோல் போடுவது நல்லது. அவர்கள் சில்லரைத் தர வேண்டியதில்லை. உங்கள் தேவையும் நிறைவேறுகிறது. 

இதுப் போன்ற சூழ்நிலையில் எதிர்ப்பு, ஆதரவு என்ற இரண்டு குரலும் உங்களுக்கு உதவப் போவதில்லை. பேஸ்புக், டிவிட்டரில் லைக் மட்டுமே பெற்று தரும். 

ஒருவருக்கு ஒருவர் உதவி, நம்பிக்கை, பரஸ்பர ஒப்புதல் மட்டுமே இதுப் போன்ற இக்கட்டான சூழ்நிலையில் மீண்டு வர முடியும்.

Thursday, November 3, 2016

அரசு அலுவலகச் சிஸ்டம்

எங்கள் பகுதி தபால் நிலையத்தில் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் கவுண்டரில் வயதானப் பெண்மணி ஒருவர் வேலை செய்கிறார். போன் பில், EB Bill போன்ற விஷயத்திற்கு தனி கவுண்டரெல்லாம் கிடையாது. எல்லாரும் அந்த கவுண்டரை தான் பயன்படுத்த வேண்டும். 

அந்த வயதானப் பெண்மணிக்கு கம்யூட்டர் ஆப்ரேட் செய்வதைப் பார்த்தால் ஆமையை விட மெதுவாக இயக்குவார் (வீடியோவில் இருக்கும் பெண்மணி மேல்). ஒவ்வொரு நாளும் அந்த கவுண்டரில் நிற்பவர்கள் அவரை வசவுப்பாடாமல் இருக்கமாட்டார்கள். கூட்டத்தின் கோபத்தை கட்டுப்படுத்த அந்தச் சமயத்தில் வேறு ஒருவரை உட்கார வைத்து வேலையை முடிப்பார்கள். சில சமயம் வசவு வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டு வேலை செய்வார். 

இது போதாதென்று அந்த பெண்மணிக்கு தமிழ் தெரியாது. வாடிக்கையாளர்கள் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் முகவரியை தமிழில் எழுதி வந்தால், அந்த அம்மாவின் நிலை அவ்வளவு தான். 

அவருக்கு கணக்கும் சரியாக தெரியாது. பல சமயம் சில்லரை கொடுக்கும் போது அதிகமாகவே கொடுப்பார். நியாயமாக இருப்பவர்கள் திருப்பி கொடுத்துவிடுவார்கள். சிலர் வந்தது லாபம் என்று எடுத்துச் செல்வார்கள். அந்த அம்மா தனது கை காசைப் போட்டு கணக்கு முடிப்பார். 

பல முறை தலைமை தபால் ஆபிஸரிடம் சொல்லியும் அந்தப் பெண்மணியை மாற்றவில்லை. காரணம், அவரை தவிர அந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை. வாடிக்கையாளரை சந்திக்கும் கவுண்டரின் ஓய்வு கிடைப்பது குறைவு. மத்தியச் சாப்பாடு வரை கூட்டம் வந்துக் கொண்டே இருக்கும். மாதக்கடைசியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த பெண்மணி ஏமாந்தவர் என்பதால் இந்த வேலையை அவர் தலையில் கட்டிவிட்டார்கள். 

அவரைப் பற்றி விசாரித்தப் போது தான் தெரிந்தது கணவர் சர்வீஸில் இருக்கும் போது இறந்ததால் அவருக்கு தபால்துறையில் வேலை கொடுத்திருக்கிறார்கள். மகன் பத்தாவதோ, +1 படிக்கிறான். கணவர் இருக்கும் வரை வீடு தான் உலகம் என்று இருந்தவர், அவரின் மறைவுக்கு பிறகு தனது மகனையும், தன்னையும் காப்பாற்றுவதற்காக தெரியாத வேலையை கஷ்டப்பட்டு செய்கிறார். 

ஒரு வருடமாக அவரை கவனிக்கிறேன். முன்பைவிட பராவாயில்லை. அவர் தட்டுத்தடுமாறி எப்படியோ கம்யூட்டரை ஒரளவுக் கற்றுக் கொண்டுள்ளார். பாவம் தமிழ் படிக்கத்தான் தெரியவில்லை. கணக்கு போடுவதற்கு Calculator பக்கத்திலேயே வைத்திருக்கிறார். 

நியாயமாக அந்தப் பெண்மணி மீது கோபப்படுவது சரியா ? 


பொதுவாக, ஐ.டியில் வேலை செய்யாதவனுக்கு விழும் திட்டை விட அவர்களது மேலாளருக்கு தான் அதிக திட்டு விழும். காரணம், வேலை தெரியாதவனுக்கு வேலை கொடுத்தது அந்த மேலாளரின் தவறு. யாருக்கு என்ன வேலைக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் மேலாளரின் வேலை. அதை செய்யத் தெரியாதவன் நல்ல மேலாளராக இருக்க முடியாது. இப்படித்தான் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இப்படி தான் நடக்கிறது. 

அரசு அலுவலகத்தில் மேலாளர்கள் விதிவிளக்காக வேலை செய்வார்கள். யார் ஏமாந்தவர்களோ அவரின் தலையில் வேலையை கட்டிவிடுவார்கள். அவர்களும் தனக்கு தெரிந்த வேலையை கொடுங்கள், தெரியாத வேலை கொடுக்காதீர்கள் என்று எதிர்த்து மேலாளரிடம் பேசமுடியாது. 

இன்று ஒரு நாள் பலு குறைவான வேலையை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அவரது வேலை செய்ய யாராவது ஒருவர் முன்வர வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த வேலையை அவர்கள் தான் செய்தாக வேண்டும். அப்போது தான், அவர்களது பிழைப்பு ஓடும். 

வங்கியில் இருக்கும் காஷியர் முதல் பேரூந்தை மெதுவாக ஓட்டும் ஓட்டுநர் வரை அவர்களது நிலைமை இது தான். தனக்கு கீழ் இருப்பவர்கள் எப்படி வேலைச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் ஏசி அறையில் இருக்கும் அரசு மேலாளர்களை பொதுமக்கள் எளிதாக சந்திக்க முடியாத அரசு அலுவலகச் சிஸ்டம் செயல்படுகிறது. 

சொல்லப்போனால் பிரச்சனை அவர்களிடத்தில் மட்டும் இல்லை. இந்த சிஸ்டம் இப்படி தான் இயங்குகிறது என்று ஏற்க மறுக்கும் நம்மிடத்திலும் இருக்கிறது.

LinkWithin

Related Posts with Thumbnails