வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, October 30, 2009

கவிதை அனுப்பிய பதிவர்கள்

'காந்தி வாழ்ந்த தேசம்' கவிதை தொகுப்பு நூலுக்காக இதுவரை 14 கவிதைகள் வந்துள்ளன. அதில் கீழ் காணும் பதிவர்களின் கவிதை தேர்வு செய்யப்படுள்ளது.

1.மதுரை பாபாராஜ்
2.கார்த்திக் சுப்பிரமணி
3.தவப்புதல்வன்
4.ஈ.ரா
5.வி.என்.தங்கமணி

கவிதை அனுப்பிய சக பதிவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

கவிதை அனுப்ப விரும்பும் பதிவர்கள் நவம்பர் 2ஆம் தேதிக்குள் அனுப்பவும்.

கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
nagarathna_publication@yahoo.in மற்றும் kannan@gurumurthy@gmail.com.

இஞ்ஜினியரிங்...எது படிக்கலாம் ???



திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா போன்ற அழகுள்ள நான்கு பெண்கள் உங்களை திருமணம் செய்து கொள்ள கேட்டால், எந்த பெண்ணை தேர்வு செய்வீர்கள். உங்களுக்கு பிடித்த பெண்ணை சொல்லுவதறு கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்வீர்கள். ஒவ்வொரு பெண்ணிலும் ப்ளஸ் எது ? மைனஸ் எது ? யோசிப்பீர்கள். மற்றவர் 'ஸ்னேகா' என்று கருத்து சொன்னாலும் நம் மனம் 'நமீதா' என்று சொல்லும். இதற்கு, பதில் சொல்ல எவ்வளவு யோசிப்பார்களா +2 படித்து முடித்த மாணவன் எந்த பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்பதையும் அதிகம் யோசிக்க வேண்டும்.

படிப்பை தேர்ந்தெடுப்பதும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது போல தான். அதை வைத்து தான் நமக்கு வேலை, சம்பளம், சமூகத்தில் மரியாதை எல்லாமே !

பொறியியலில் Chemical, Civil, Electrical போன்ற பிரிவுக்கு என்று மதிப்பு உண்டு. இருபது வருடம் முன்பு பொறியியலில் இந்த மூன்று பிரிவு மட்டும் தான் இருந்தன. ஆனால், Computer, Marine, Aeronautics என்று பல எஞ்ஜுனியரிங் படிப்புகள் வந்து விட்டன. கண்டிப்பாக இதில் எது படிக்க வேண்டும் என்ற குழப்பம் பல மாணவர்களுக்கு இருக்கும். பெற்றோர்களும் தங்கள் சொந்தத்தில் இருப்பவர்கள் படித்த படிப்பை விசாரித்து அதையே தங்கள் பெண்ணை, மகனை படிக்க சொல்லுவார்கள். எந்த யோசனை இல்லாதவர்களும் பெற்றோர்கள் சொன்னப்படி கேட்பார்கள். வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர், தம்பி ! இந்த படிப்பு படி. நல்ல எதிர்காலம் இருக்கு. உனக்கு நான் வேலை வாங்கி தரேன்.' என்பார். உறவினர், ' பாரும்மா ! இன்னைக்கு கம்யூட்டர் படிச்சா வெளிநாட்டு வேலை கிடைக்கும். அது படி !'.

எந்த துறையை விரும்பமாக உங்களுக்கு உள்ளதோ அந்த துறை படித்தவர்களிடம் கேளுங்கள். ப்ளஸ், மைனஸ் பார்த்து நமக்கு எது ஏற்றதாக இருக்கும் யோசித்து சேருங்கள். முதல் வருடம் Electrical Engg. படித்த மாணவன் பெரிய ஆளை பிடித்து அதே கல்லூரியில் இரண்டாவது வருடம் Computer Engg வகுப்பு வந்தான். மூன்றாவது வருடம், 'I.T. down' என்ற செய்தி கேட்டவுடன் 'பேசாமல் நாம Electrical லே படிச்சிருக்கலாம்' தோணும், இன்னொருன் " போடா.. Circut theory படிச்சு அரியர் வைக்கிறதுக்கு, 'கம்யூட்டரே பெஸ்ட். என்று சக மாணவன் சொல்லுவான்.

படிப்பில் எதுவுமே வேஸ்ட் என்பது கிடையாது. பலர் 'பெஸ்ட்' என்று சொல்லுவது அதில் சம்பாதிக்கும் பணத்தை வைத்து தான். எந்த படிப்பு படித்து ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், நாம் முன்னேற முன்னேற சம்பளம் அதிகமாகும். இது எல்லா படிப்புக்கு பொருந்தும்.

திருஷா, நயந்தாரா, ஸ்னேகா, நமீதா - இதில் யார் உங்களுக்கு யார் பிடிக்கும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும். அடுத்தவர்கள் அல்ல....!!

--

பிரபல வார இதழுக்காக எழுதிய கட்டுரை. பிரசுரமாகததால் பதிவெற்றிவிட்டேன் :(

Wednesday, October 28, 2009

இண்டர்வியூ டிப்ஸ்



எஸ்.எல்.வி. மூர்த்தி

படம் பார்த்து விட்டு வரும் ரசிகனிடம், " படம் எப்படி இருக்கு?" என்று கேட்கும் போது, " முதல் அரை மணி நேரம் ஒரே போர் ஸார், அதுக்கு அப்புறம் படம் பார்க்கலாம்" என்று சொல்லுவது போல், ஒரு வாசகனாக இந்த புத்தகத்தை வாசிக்கும் போது தோன்றியது.

‘இண்டர்வியூ டிப்ஸ்' என்ற தலைப்பு வைத்திருப்பதால் இந்த புத்தகம் வேலை தேடும் இளைஞர்/ இளைஞிகளுக்காக என்ற எண்ணத்தோடு தான் படிக்க தொடங்கினேன். ஆனால், முதல் மூன்று அத்தியாயம் படித்ததும் ஒரு சிறு குழப்பம் வந்தது. இந்த புத்தகம் இண்டர்வியூ செல்பவர்களுக்காக ? அல்லது இண்டர்வியூ எடுப்பவர்களுக்காக ? என்று. காரணம் அந்த மூன்று அத்தியாயங்கள் நிறுவனத்தின் தேவைகள், அதற்கு தேவையான ஆட்கள் எண்ணிகை என்று நிறுவனத்தின் கண்ணோட்டத்தில் நூல் இருந்தது. அதன் பின் வரும் அத்தியாயங்களில் தான் இண்டர்வியூ செல்வபர்களுக்கு டிப்ஸ்யை வாரி வழ்ங்கி இருக்கிறார்.

1905 ஆம் ஆண்டு ஆல்ஃப்ரட் பினெட் (Alfred Binet) கண்டு பிடித்த தேர்வு முறையை நாம் இன்றளவு பின்பற்றுகிறோம். (இவ்வளவு நாள் யார் இந்த முறையை கண்டு பிடிச்சாங்க தெரியாமல் இருந்தேன்.)

நூறு வருடங்கள் கடந்த பின்னும் அந்த முறையை இன்றளவு நாம் கடைப்பிடிக்கிறோம். அதில் தேர்ச்சி பெற பாவனை, அடிப்படை யூக்தி, நடை, உடை என்று ஆச்சரியப்படு அளவிற்கு தேர்வு முறையை வளர்ந்திருக்கிறது. ஒவ்வொரு மனிதனின் விதியையும் தேர்வு தான் தீர்மானிக்கிறது. வாழ்க்கையின் வெற்றியை தேர்வின் வெற்றி முடிவு செய்கிறது.

இண்டர்வியூ வருபவர்கள் இப்படி தான் வர வேண்டும், இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்படாத சில விதி முறைகள் உள்ளன. புதிதாக கல்லூரி முடித்து வருபவர்களுக்கு அந்த விதி முறைகள் தெரிய நியாயமில்லை. அனுபவம் பெற்ற சில பேரிடமோ அல்லது ஆசிரியரிடமோ தான் ஆலோசனை பெற முடியும். இருந்தாலும் அவர்களுக்கு ஒரளவு தான் இது உதவும். இண்டர்வியூ கற்று கொடுக்கும் அனுபவம், அடுத்த இண்டர்வியூக்கு உதவும். அடுத்த இண்டர்வியூ என்ற பேச்ச வராமல், முதல் இண்டர்வியூ வெற்றி பெற நினைப்பவர்கள் ஒரு சிலர் தான் வெற்றி பெறுகிறார்கள். அப்படி வெற்றி பெறாத பலருக்கு ஒரு நல்ல வழி காட்டியாக இந்த புத்தகம் இருக்கும்.

மைக்ரோசாஃப்ட், கூகிள் கம்பெனிகள் படாத பாடு பட்டு தயாரித்த ஒரு சில கேள்விகளை குறிப்பிட்டு நம் தலையை சுற்ற வைத்திருக்கிறார். குறிப்பாக இந்த கேள்வி...

'How many golf ball can fit in a schoolbus ?'

இந்த மாதிரி கேள்விக்கு யோசித்து பதில் சொல்வதாக இருந்தால் அந்த வேலையே எனக்கு வேண்டாம். இவ்வளவு சொல்லுபவர் ஏன் மைக்ரோசாஃப்ட், கூகிள் போன்ற நிறுவனத்தில் வேலைக்கு சேரவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். அப்படி இருந்தால், அவர் ஏன் இந்த புத்தகத்தை எழுதிக்கொண்டு இருக்க போகிறார்.

பயோடேட்டா, இணைப்புக் கடிதம், ரெக்ரூட்மெண்ட் ஏஜென்ஸி என்று விண்ணப்பம் அனுப்பும் முறைகளை மிக எளிதாக விளக்கியுள்ளார். அதை போல் இண்டர்வியூ செல்லும் முறைகளையும், அங்கு எதிர்கொள்ளும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறமை, அடிப்படை நல் ஒழுக்கங்கள் போன்ற தகவல்கள் புதிதாய் கல்லூரி படித்து முடித்து விட்டு வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். ( முக்கியமான Target Audience அவர்கள் தானே !)

இவை எல்லாவற்றிக்கும் மேலாக, நாம் எந்த கம்பெனியில் வேலை செய்யலாம் போன்ற தகவலுக்கு To Best Companies to Work for 2008 - சர்வேவையும் கொடுத்திருக்கிறார்கள். இறுதி அத்தியாயத்தில் கொடுத்திருக்கும் 230 கேள்விகள் (50 கேள்விகளுக்கு தான் பதில் உள்ளது) கொடுத்து நேர் முக தேர்வுக்கு வாசகனை முழுமையாக தயார் படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.

'இண்டர்வியூ டிப்ஸ்' என்று புத்தகத்தின் தலைப்பு வைத்து விட்டு, புத்தகத்தின் உள்ளே பல இடங்களில் 'பேட்டி' என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறார்கள். படிக்கும் போது படு செயற்கை தனமாக உள்ளது. ( நல்ல வேளை 'பேட்டி ஆலோசனை' என்று புத்தகத்தின் தலைப்பு வைக்கவில்லை)

எஸ்.எல்.வி.மூர்த்தி எழுதிய 'ஹலோ ! உங்களை தான் தேடுகிறார்கள்' என்ற புத்தகத்தை வாசித்தவர்களா நீங்கள் ! அப்படி வாசித்திருந்தால் இந்த புத்தகத்தை பாதி படித்தது போல் தான். அந்த புத்தகத்தில் உள்ள பல தகவல்கள் இதிலும் உள்ளன. ஒரு சில இண்டர்வியூ கேள்விகள், வேலை செய்வோர் எண்ணிக்கை கணக்கு என்று அசல் அந்த புத்தகத்தில் இருப்பதை அப்படியே காபி அடித்திருக்கிறார்கள். ஸாரி... அப்படியே மறு பதிப்பு செய்திருக்கிறார்கள். (இரண்டு புத்தகத்தின் ஆசிரியரும் எஸ்.எல்.வி.மூர்த்தி தானே !)

இண்டர்வியூ செல்பவர்கள் தங்களை முழுமையாக இல்லாவிட்டாலும் ஒரளவு தயாராக செல்ல இந்த புத்தகம் உதவும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.


இந்த புத்தகத்தை வாங்க... இங்கே.

பக்கங்கள்.152,
விலை.75
கிழக்கு பதிப்பகம்

Tuesday, October 27, 2009

யாரோ ஒருத்தி



சிறுவயதில் இருந்து விரல் சப்பி பழக்கப்பட்ட எனக்கு, சிகரெட் தான் சரியான ஆல்டர்னெடாக இருந்தது. இருபது வயதானவன் விரல் சப்பினால் எவ்வளவு கேவலமாக இருக்கும் ? வயதானாலும், உதடு சுவைத்துக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. தற்சமயம் அந்த எதோ ஒரு தேவை.... சிகரேட் தான். நண்பனை கிங்ஸ் வாங்க அனுப்பி விட்டு, சாலையில் செல்லும் வாங்கனங்களையும், சிகனலையும் பார்த்துக் கொண்ட்டு இருந்தேன்.

பச்சை.... மஞ்சல்....சிவப்பு.... சிவப்பு.. பச்சை.. மஞ்சல்.

பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்னல் எவ்வளவு கொடுமையானவை. மனிதன் வசதிகாக கண்டு பிடித்தது எல்லாம் மனிதனுக்கு எதிரியாக இருப்பது வியப்போன்றுமில்லை. அதில் சிக்னல் தவிர்க்க முடியாத ஒன்று.

எதிர் சாலையில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மார்டன் ட்ரெஸ் போட்ட பெண் சாலையை கடந்து நான் நிற்கும் பஸ் நிற்கும் பஸ் பயணிகள் குடைக்குள் வந்தாள். நெற்றியில் சிவப்பு பொட்டு, ஸ்லீவ் லெஸ் பச்சை டி ஷர்ட், ஜீன்ஸ் என்று அணிந்திருந்தாள். ஸ்லீவ் லெஸ் டி ஷர்ட் போடும் பெண்களை ஒரு ஆண் எதை பார்த்து ரசிப்பானோ அதையே தான் நான் பார்த்து ரசித்தேன்.

ஒரு நிமிடம் சிக்னலையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்தேன். மஞ்சல் நிறத்தை அவள் உடம்பில் எங்காவது மறைத்து வைத்திருப்பாளா ?? ச்சே... அவள் நிறமே மஞ்சலாக இருக்கும் போது இன்னொரு மிஞ்சல் எதற்கு ? அவள் நடமாடும் சிக்னலாக தெரிந்தாள். திரும்பி என் நண்பனை பார்த்தேன். அவன் கடைக்காரனிடம் சில்லரை பற்றி பேசிக் கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அவன் வராமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது எனக்கு சிகரெட்டை விட அந்த பெண் அழகு தான் முக்கியமாக இருந்தது.

நாள் அவளை பார்ப்பதை தெரிந்து விட்டது போல் என்னை திரும்பி பார்த்தாள். ஓட்டு போட்ட மக்களை கண்டுக் கொள்ளாத அரசியல்வாதி போல் நான் என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் அவளை பார்ப்பதை உள்ளூர ரசிக்கிறாள். அல்லது ரசிப்பது போல் பாவனை செய்கிறாள்.

தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசினாள். அவள் பேசி முடித்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டு பேர் வந்து அவளிடம் பேசினர்.குறிப்பாக செல்போன் வைத்திருப்பவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அவள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது. இரண்டு பேரில் ஒருவன் அவளிடம் கை நீட்டி பேசினான். இன்னொருவன் அவனை அழைத்து சென்று சமாதானப்படுத்தினான். அந்த பெண் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. காதல் சண்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அந்த பெண் திரும்பி பார்த்து, என்னை நோக்கி வந்தாள். அப்போது பஸ் நின்று இருந்ததாள், அதுக்காக வருகிறாளோ என்று யோசிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை.

அவள் என்னிடம், "டி.நகருக்கு என்ன பஸ் போகும் ?" என்றாள்.

இவ்வளவு நேரம் பார்த்து ரசித்த பெண்ணிடம் இருந்து எதிர்பாராத அறிமுகம்.

தட்டு தடுமாறி '27C' என்றேன். அவள் அந்த இடத்தை விட்டு நகர விரும்பவில்லை. என்னுடன் பேச்சை தொடர விரும்புவது போல் இருந்தது. எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இருப்பது போல் என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொண்டேன். ஆனால், உண்மை அது தான்.

" இங்க கீரின் போர்ட், யெல்லோ போர்ட் பஸ் நிக்குமா ?" என்றாள்.

"ம்..." என்று தலை அசைத்தேன்.

அவளிடம் கோபப்பட்டவம் எங்களை முறைத்தவாரு இருந்தான். கண்டிப்பாக அவன் அவள் காதலானாக தான் இருக்க வேண்டும். அவனை பொறாமைப்பட வைக்க அந்த பெண் என்னிடம் வந்து பேசுகிறாள் என்று யூகிக்க முடிந்தது.

அவள் காதலனுடன் வந்தவன் அந்த பெண்ணை ஒரு நிமிடம் அழைத்தான். அந்த பெண் போகமாட்டாள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அவனிடம் பேச சென்றாள். சற்று ஏமாற்றத்தோடு அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். ஆனால், அவர்கள் காதலில் என்னால் வீண் பிரச்சனை வரும். வந்தாள்... பேசினாள்... சென்றாள். அவ்வளவு தான்.

ரசித்த சந்தோஷத்தோடு... பேசிவிட்டு சென்று இருக்கிறாள். இது வரை நான் சைட் அடிக்கும் பெண்களிடம் பேசியதில்லை. இது தான் முதல் தடவை. ஒவ்வொரு முறை பெண்களிடம் பேசும் போது இப்படி தான் நினைத்துக் கொள்வேன்.

அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அந்த பெண் தன் காதனுடன் கை குழுக்கிக் கொண்டாள். தன் காதலனின் நண்பனுடன் ஒரு காரில் ஏறி சென்றாள். அவர்கள் சமரசமாகி விட்டார்கள் என்று அவர்களின் புன்னகையில் தெரிந்தது. எதோ என்னை அறியாமல் ஒரு காதலுக்கு உதவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் உருப்படியாக செய்த முதல் காரியம் இது தான்.

நான் அந்த பெண் செல்வதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது என் தோள் மீது யாரோ கை போட்டனர். என் நண்பன் தான். இரண்டு சிகரெட்டை வாங்கி இப்போது தான் வந்தான். அந்த பெண்ணை நினைத்து ஏக்க பெரு மூச்சு விட கண்டிப்பாக எனக்கு சிகரெட் தேவை. சிகரெட்டை வாங்கி ஆறாவது விரலாக சொருகிக் கொண்டு பற்ற வைத்தேன்.

" என்ன... மாமா..." என்று என் நண்பன் சிரித்தப்படி கேட்டான்.

எப்போது 'மாப்பிள்ள' என்று அழைப்பவன். வழக்கத்துக்கு மாறாக என்னை 'மாமா' என்று அழைத்தான்.

"என்னடா...புதுசா...." என்றேன்.

"உன்ன வச்சு அந்த பொண்ணு ரேட்ட ஏத்திட்டா...." என்றான்.

"என்ன சொல்லுற..."

" டேய்... அந்த பொண்ணு இரண்டு பேருக்கு இரண்டாயிரம் கேட்டா... வந்த பசங்க ஆயிரம் தான் தருவேன்னு கராரா இருந்தான். உன் கூட வந்து பேசுனதும்.... எங்க நீ தள்ளிட்டு போய்டுவியோ பயந்து இரண்டாயிரத்துக்கு ஒத்துக்கிட்டாங்க...."

"அட...ச்சே... சும்மா பொய் சொல்லாத... நான் அந்த பொண்ணு கிட்ட பேசுனத இவ்வளவு பொறாமையா பார்த்தான்..."

"டேய்...அது ஐடம்டா ! அந்த இரண்டு பேரும் சிகரெட் வாங்குன கடை பக்கத்துல நின்னு எனக்கு கேக்குற மாதிரி தான் பேசுனாங்க. அந்த பையன் தான் கஷ்ட பட்டு போன் பண்ணி அந்த பொண்ண வர சொன்னா... நீ தள்ளிட்டு போற மாதிரி இருந்தா கோபம் வராதா..." என்று சொல்லி என்னை ஏளனமாக சிரித்தான்.

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் அந்த மாதிரி பெண்ணா இருப்பாளோ என்று சந்தேகம் வர தொடங்கியது.

ச்சே... இவ்வளவு நேரம் அந்த மாதிரி கேவலமான பெண்ணிடமா பேசிக் கொண்டு இருந்தேன். அவளின் காதலனாக நினைத்த நான், அவளை பொறாமையில் பார்த்தான். தான் படுக்க வேண்டும் என்றால், விபச்சாரியிடம் கூட கற்பை எதிர்பார்க்கும் ஆளாக இருப்பான் போலிருக்கு. கடைசியில் என் மரியாதையை நானே கெடுத்துக் கொண்டேன். இனிமேல் எந்த பெண்ணும் வழிய வந்து பேசினால் நான் பேச கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருக்கும் சிகரெட்டை அனைத்தேன்.

" இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவ போன் நம்பர் வாங்கி இருந்திருக்கலாம் " என்று மனதில் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Monday, October 26, 2009

ஒழுக்கம்

இராவணன் ஒழுக்கம் தவறினான்
இராமயணம் பிறந்தது !
துரியோதனன் ஒழுக்கம் தவறினான்
பாரத போர் பிறந்தது !
இயற்கையின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
வறட்சி பிறந்தது !
இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் ஒழுக்கம் தவறியது
டிசம்பர் ஆறு பிறந்தது !

ஆராய்ச்சியில் ஒழுக்கத்தை சிதைத்தனர்
அணுகுண்டு பிறந்தது !
அணுக்கள் ஒழுக்கமில்லாமல் செயல் பட்டன
ஊனமுற்ற குழந்தைகள் பிறந்தன !
ஓட்டுநர் ஒழுக்கம் தவறினான்
சாலையில் விபத்துக்கள் பிறந்தது !
அரசாங்க அதிகாரி ஒழுக்கம் தவறினான்
லஞ்சம் பிறந்தது !

ஒரு சிலர் ஒழுக்கம் தவறினர்
AIDS பிறந்தது !
காற்றின் ஒழுக்கத்தை கெடுத்தனர்
SWINE FLU பிறந்தது !

ஒழுக்கம் தவறி பிறந்தது எல்லாம்
மக்களை கொல்லும் கத்தியாய் எதிரே !
அதை எதிர்த்து போர் செய்ய
நம் கையில் இருக்கும்
ஒரே ஆயுதம் ஒழுக்கம் !

--

ஒரு பள்ளி மாணவன் தன் பள்ளி கவிதைப் போட்டிக்காக 'ஒழுக்கம்' தலைப்பில் கவிதை கேட்டிருந்தான். அந்த கவிதையை பதிவில் ஏற்றியிருக்கிறேன்.

Wednesday, October 21, 2009

கவிதை தேவை.... கதை ஒத்திவைப்பு

நாகரத்னா பதிப்பகம் சார்பாக 'காந்தி வாழ்ந்த தேசம்', 'ஒரு நிமிட கதை' என்று இரண்டு தொகுப்பு நூல் வெளியீடுவதாக அறிவித்திருந்தேன்.

ஒரு சில காரணங்களுக்காக தற்காலிகமாக கதை தொகுப்பு நூல் வேலையை ஒத்திவைத்துள்ளேன். கதை அனுப்பியவர்கள் தங்கள் பதிவில் போட்டுக்கொள்ளலாம். கதை தொகுப்பு நூல் பற்றின அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்' திட்டமிட்டபடி வெளியீட இருக்கிறோம். அதனால், கவிதை நூலுக்கான படைப்பு அனுப்பும் தேதி 2.11.09 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒரு சில கவிதைகள், காந்தி பற்றி இல்லாமல் இந்தியாவை பற்றி கவிதை எழுதியிருந்தார்கள். கவிதை நன்றாக இருந்ததால், நிராகரிக்க முடியவில்லை. அதனால், இந்த தலைப்பில் காந்தியை பற்றி தான் எழுத வேண்டும் என்று இல்லை. இந்தியாவை பற்றியும் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதைக்கான நிபந்தனைகளில் வேறு எதுவும் மாறவில்லை.

தொகுப்பு நூலுக்கான முந்தைய பதிவு.

உங்கள் சந்தேகங்களை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Monday, October 19, 2009

யார் இந்த பாப்லோ நெருடா , ஏர்னெஸ்ட் ஹெமிங்வே???

எஸ்.ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா எழுத்துகளை வாசிக்கும் போது அடிக்கடி அவர்கள் சொல்லும் பெயர் தாஸ்தாயேவ்கி, ஹேமிங்வே, பாப்லோ நெருடா. இவர்கள் குறிப்பிடும் எழுத்தாளர்கள் அவ்வளவு பெரிய ஆளா...? சும்மா... இந்த எழுத்தாளர்கள் புராணமே பாடுகிறார்கள். படித்து பார்த்து விட வேண்டியது தான் என்று அவர்கள் எழுதிய ஆங்கில மொழி பெயர்ப்பு நூல்களை தேடிபார்த்தேன். அதிஷ்ட வசமாக பாப்லோ நெருடா, ஹேமிங்வே அவர்களை பற்றி தமிழ் புத்தகமே கிடைத்தது.

மஹாகவி பாப்லோ நெருடா
விலை.80
நிழல் வெளியீடு

வாழ்க்கை வரலாறு, கவிதைகள், நினைவலைகள், நேர்முகம், நோபல் பரிசு ஏற்புரை என்று பாப்லோ நெருடா சம்மந்தமான எல்லா கலவை சேர்ந்து தொகுத்த நூல். அதனால், கவிதை, கட்டுரை, வரலாறு என்று எந்த வகையிலும் பிடிப்படாத நூலாக இருக்கிறது. பலர் ஒவ்வொரு பகுதியை மொழிப்பெயர்த்து இருப்பதால், சில இடங்களில் மொழிப்பெயர்ப்பு சுமாராக தான் இருக்கிறது.

சில கவிதைகள் படிக்கும் போது என்னை அறியாமல் ஈழத்தில் நடக்கும் போராட்டத்தை ஒப்பிட தோன்றியது. அவர் கவிதைகளில் எனக்கு பிடித்த சில கவிதைகள்...

இன்றிரவு என்னால் எழுத முடியும்

இனி அவளை நான் காதலிப்பதில்லை. அது நிச்சயம்
எனினும் அவளை எவ்வளவு நேசித்திருந்தேன்
காற்றைத் தேடியலைந்தது என் குரல், அவள் செவிப்புலனைத்தோட
இன்னொருவனின் உரிமையாவாள் அவள்
எனது முந்திய முத்தங்கள் போல
அவளுடைய குரல், பிரகாசமான உடல் முடிவற்ற கண்கள்
இனி அவளை நான் கதலிப்பதில்லை
அது நிச்சயம் எனினும். காதலிக்க நேரலாம்.



நான் சில விஷயங்கள் விளக்குகிறேன்

ஸ்பெயினின் ஒவ்வொரு மூட்டிலிருந்தும்
ஸ்பெயின் வெளிவருகிறது
ஒவ்வொரு இறந்த குழந்தையிலிருந்தும்
கண்களுடன் ஒரு துப்பாக்கி
குண்டுகள் உருவாகின்றன ஒவ்வொரு குற்றத்திருந்தும்
அவை ஒரு நாள்
உம் இதயத்த்தின் மையத்தை தேடும்


தனிப்பாசுரம்

என்னைப் போல் உள்ள மற்ற மனிதரை
எப்பொழுதும் நேசித்தத் தாயாராய் உள்ள
ஏழை மனிதன் நான்


நாம் பலர்

முறையாக நானே எனக்கு
மெய்யாலும்மே தேவைப்பட்டால்
என்னை நானே மறைந்து கொள்ள
அனுமதிக்கக் கூடாதல்லவா ?


அமெரிக்காவின் வன்கொடுமையாளர்கள்

காலியான பாழ்நிலத்தில் எனது கவிதைக்குள்
கைதிகள் நிரப்பப்படுகின்றனர்

புத்தகம்

காதலின் உறுதியற்ற கணம்
தனது முத்தத்தை ஒரு பொதும் எழுதி வைக்காத
மனதின் சூறையாடல்

ஸ்பெயின் போராட்டமும், ஈழத்தில் போராட்டமும் நடக்கும் காலகட்டம் வேவ்வெறாக இருக்கலாம். ஆனால், போராட்டம் ஒன்று தான்.


--

கடலும் கிழவனும்



பல நாட்களாய் கடலுக்கு சென்று வெற்றுக்கையுடன் கரைக்கு திரும்புகிறான் கிழவன். அவனுக்கு ஆறுதல் கூறும் சிறுவன், அடுத்த பயணத்தில் தானும் வருவதாக கூறுகிறான்.

இருந்தும், மீண்டும் தன்ந்தனியாக கடலுக்கு செல்கிறான். நடுகடலில் மீனுக்காக காத்திருக்கிறான். தான் ஒரு துரதிஷ்டசாலி என்று நினைத்துக் கொண்டு இருந்தவனுக்கு, பெரிய மீன் அவன் வலையில் வந்து மாட்டிக் கொள்கிறது. இரண்டு நாட்களாக கடுமையாக போராடி அந்த மீன்னை கொள்கிறான்.

அந்த மீன் படகை விட பெரிதாக இருப்பதால், தன் படகில் கட்டி இழுத்து வருகிறான். கரைக்கு வரும் வழியில் அந்த பெரிய மீன்னை சுறா மீன் வருகிறது. அதனோடு யுத்தம் செய்து கரைக்கு மீனோடு திரும்புவது தான் கதை. இடையில், பேஸ்பால் போட்டியில் யார் வென்றிருப்பார்கள் என்று எண்ணுவதும், அந்த சிறுவன் இருந்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பதும், தனியே உறக்க கத்துவதும் என்று நாவல் முழுக்க கிழவன் மட்டுமே தான் வாழ்கிறார்.

ஒரு கதாபாத்திரம் வைத்து நாவலின் பெரும் பகுதியை ஸ்வாரஸ்யமாக நகர்த்தியிருக்கிறார் ஹெமிங்வே.

உரையாடல் வசனங்கள் சுத்த தமிழில் இருப்பதால், மீனவர்கள் வாழும் இடத்தில் கொண்டு செல்ல நம்மை தடுக்கிறது. மொழிபெயர்ப்பு நாவல் என்று அவ்வபோது நியாபகம் படுத்தும் வசங்களாகவே இருக்கின்றன.

ஏர்னெஸ்ட் ஹெமிங்வே
வ.உ.சி.நூலகம்
விலை.50

****

மனதை தொடும் நிகழ்வுகளை மொழிபெயர்ப்பு செய்யும் போது கோட்டை விட்டது போல் உள்ளது. இதனால், நோபல் பரிசு பெற்ற இரண்டு பெரும் எழுத்தாளர்களில் படைப்பை படித்த திருப்தி முழுமையாக கிடைக்கவில்லை.

Sunday, October 18, 2009

ஈழ கவிஞன்

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

என் கையாளகாத தனத்திற்கு
எதற்கு விருது ?
புலம் பேர்ந்தவர்களின்
புலம்பலை பதிவு செய்ததற்கு
சால்வை எதற்கு ?

மிஞ்சியவர்களை
காப்பாற்ற முடியாமல்
பேனா பிடித்து
எழுதும் என் போன்றோர்களால்
உணர்வுகளை மட்டுமே
தட்டி எழுப்ப முடியும் !
உயிர்களை அல்ல...!!

எதற்காக எனக்கு பாராட்டு ?
யாருக்கு வேண்டும் உங்கள் பூ மாலை.. ?

**

பாப்லோ நெருடா கவிதைகள் படிக்கும் போது எனக்கு தோன்றிய கவிதை.

Thursday, October 15, 2009

வரம்பு மீறிய சாரு நிவேதிதா



கருத்து சண்டை, குத்து சண்டை, கும்மாகுத்து சண்டை என்று பல சண்டை பதிவில் நடந்துக் கொண்டு இருக்கும் சமயத்தில், 'சண்டை நாயகன்' சாரு நிவேதிதா அவர்களை நாம் கண்டுக் கொள்ளாமல் இருக்கிறோம் என்று தோன்றியது. அதான், அவர் எழுதிய 'வரம் மீறிய பிரதிகள்' புத்தகம் பற்றிய என் பார்வையில் ஒரு பதிவு.

“சாரு நிவேதிதா இலக்கியம் இலக்கியச் சூழல் தொடர்பாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இது. தமிழ் இலக்கியச் சூழலின் நிறுவப்பட்ட கருத்தாக்கங்களுக்கு எதிராகக் கடும் விமர்சனங்களையும் எள்ளலையும் இக்கட்டுரைகள் முன்வைக்கின்றன. இலக்கியம்சார்ந்த அதிகாரச் செயல்பாடுகளைக் குறித்து கேள்வி எழுப்புகின்றன. அதே சமயம் எழுத்தின் வரம்புகளை உடைத்தெறிந்த ழார் பத்தாய், கேத்தி ஆர்க்கர், ஹோஸே மரியா ஆர்கெதா, சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி, க்ரிஸ்டினா பெரி ரோஸி, அல் முகமது ஷுக்ரி போன்றோரின் படைப்புகள் குறித்து மிக ஆழமான அறிமுகத்தை இந்நூல் வழங்குகிறது.”

பின் அட்டையில் அச்சான வாசங்கள்.

சாரு மீது பலர் (என்னையும் உட்பட்) பல விதமான விமர்சணங்கள் முன் வைத்தாலும், அவரின் (எழுத்து) தேடலை படித்து பல முறை பிரம்பித்து போயிருக்கிறேன். பொதுவாக ஆறு மாதத்திற்கு படிக்க வேண்டிய நூல்களை வாங்கி மூன்று மாதத்தில் படித்து முடித்து விட வேண்டும் என்று நினைப்பேன். இதில் என் எழுத்துலக நண்பர்கள் எழுதிய சில மொக்கை புத்தகங்கள் அடங்கும். ( கஷ்டப்பட்டு சொந்தமாக புத்தக போட்டவர்களை என்னால் முடிந்த வரை ஒரு பிரதி வாங்கி படித்து தொலைப்பேன்.)

“நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க எனக்கு இரண்டு ஜென்மம் வேண்டும்” என்று பல முறை நினைத்திருக்கிறேன். சாரு தன் வலைத்தளத்தில் "நான் படிக்க நினைக்கும் புத்தகங்களை படிக்க மூன்று ஜென்மம் வேண்டும்" என்று குறிப்பிட்டு இருந்தார். இவருக்கே மூன்று ஜென்மம் தேவை பட்டால், நான் பத்து ஜென்மம் எடுத்து வந்து தான் அத்தனை புத்தகங்களை படிக்க வேண்டும்.

சாரு எழுதிய இலக்கிய கட்டுரைகள் படித்தால், கண்டிப்பாக ஒரு ஜென்மம் எடுத்து படிக்க வேண்டிய புத்தக பட்டியல் குறையும். இந்த புத்தகம் சாரு ஒரு எழுத்தாளர் என்பதை விட அவர் ‘ஒரு நல்ல வாசகர்’ என்று காட்டுகிறது.

இந்த நூலில் நகுலனை பாராட்டும் சாரு, சுந்தர ராமாசாமி, புதுமைபித்தன் போன்றோரை தன் விமர்சனத்தால் Total damage செய்திருக்கிறார்.

இதில் , சில கட்டுரைகள் ஒரு சிலருக்கு பிடிக்காமல் இருக்கலாம். பல மொழி புத்தகங்களின் சாரத்தையும், ஆழமான சிந்தனையும் நம்மிடம் பகிர்ந்து கொள்வதும், அந்த புத்தகங்களை படிக்க தூண்டுவதும் பல கட்டுரைகள் இருக்கின்றன.

என் பார்வையில்… சாரு அவர்கள் எழுதிய நூல்களில் படிக்க வேண்டிய நூல் இது என்று கருதுகிறேன்.



சாரு சொன்ன படிக்க வேண்டிய நூல்கள்

Blood and Guts in high school - Kathy Acker
Main Currents of Marxism - கோலகோவ்ஸ்கி
Fear in Chile - Patricia Politzer
Islo 10 - அயிந்தே
The offical Story –
Funny dirty little war - ஒஸ்வால்தோ ஸொரியானோ
Report to Grew – கஸான்லொகி
Real life of Alejandro Marta - யோசா
One hundred of solititude
El Ilano en ilamas ( எனியும் சமவெளி ) - ருல்போ
Waiting for an angel - Helon Habila
Ship of fools - மார்த்தாத் ராபா
Sexual/Textual politices : A feminist theory - Toril moi
என் கதை - வெ.ராமலிங்கம் பிள்ளை
தமிழவனின் நாவல்கள்
புனர்ஜென்மம் (சிறுகதை) - கு.பா.ரா
மகாகவி பாரதியார் - வ.ரா. - சந்தியா பதிப்பகம்
புயலிலே ஒரு தோணி - ப.சிங்காரம்
வேண்டப்படாதவன் (சிறுகதை) - லா.ச.ரா

கடுமையாக விமர்சித்த நூல்கள்

ஜே.ஜே. சில குறிப்புகள் - சு.ரா
விஷ்ணுபுரம் - ஜெயமோகன்
உபபாண்டவம் - எஸ்.ராமகிருஷ்ணன்
ராமாயணம்


பக்கங்கள்:278
விலை.170
உயிர்மை பதிப்பகம்

Wednesday, October 14, 2009

நகம்



பொழுது சாய்ந்த பிறகு நகத்தை வெட்டுவது வீட்டுக்கு ஆகாது என்பார்கள். ஆனால், இதை விட நல்ல பொழுது இல்லை என்று சிதம்பரம் சொல்பவன். அலுவக வேலை பலுவுக்கு நடுவில் தன் நகத்தை கடித்து எடுத்துவிடுவான். டென்ஷனாக இருந்தாலும், சந்தோஷமாக இருந்தாலும் அவன் கையில் நகம் வளர விடமாட்டான். வளர்வதும் பிடிக்காது.

இரவு சாப்பிட்டு கட்டிலுக்கு பாலுடன் வந்த மனைவியின் விரலை பார்த்தான். ஒவ்வொரு விரலின் நகம் பெரிதாக இருந்தது. ஆடி மாதம் முடிந்து நேற்று தான் அம்மா வீட்டில் இருந்து மல்லிகா வந்தாள். ஒரு மாத பிரிவில் அவளை அனைப்பதிலும், முத்தமிடுவதிலும் ஆசையாய் இருந்த சிதம்பரம் அவள் நகத்தை கவனிக்க வில்லை. இப்போது தான் பார்த்தான்.

"என்ன இவ்வளவு பெருசா நகத்த வளர்த்திருக்க..."

"தினமும் சாப்பாடு போட்டு வளர்க்கிறேன்" என்று கிண்டலாக கூறினாள்.

சிதம்பரம் செல்லமாக அவளை முறைத்தாள். மல்லிகா சிரித்தபடி, " பின்ன என்ன ! நகத்த வெட்டல வளர்ந்திடுச்சு....!"

"இரு வெட்டுறேன்...."

" இராத்திரி நேரத்துல வேணாம். காலையில வெட்டுங்க..."

" நேத்து ‘அந்த’ சமயத்துல என்ன கீறிட்ட. அப்போ எனக்கு பெருசா தெரியல. இப்போ வெட்டுனா தான் அது செய்ய எனக்கு மூடு வரும்...!!"

மல்லிகா தன் கையை எடுக்க நினைத்தும், சிதம்பரம் விடாமல் அவள் கையை இழுத்தான். தன் கையில் நகம் இல்லாததால் அவள் நகத்தை வாய்யால் கடித்து வெட்டினான்.

" ஐய்யோ ! இப்போ தான் பாத்திரம் கவுவின..."

" பராவாலே...! " அவளின் நகத்தை கடித்தப்படி சொன்னான்.

" ஒரு மாச ஊருல இருந்தியே...! உங்க சொந்தகார எல்லாரு வீட்டுக்கு போனீயா..!!" என்றான்.

" எங்க டைம்மே இல்ல. அம்மாவோட கோயிலுக்கு போனேன். அண்ணா பசங்களோட விளையாடுவேன். உங்க கிட்ட போன் பேசுனேன். அவ்வளவு தான்."

" ஒரு மாசமா இந்த வேல தானா ???"

" பின்ன... நம்ப ஊரு மாதிரி சுத்தி பாக்குற மாதிரி அந்த ஊருல எதுவும் இல்லையே...."

வடது கையில் நான்கு விரலில் நகத்தை எடுத்து விட்டு கட்டை விரலின் நகத்தை எடுத்து காகிதத்தில் போட்டான்.

" அப்புறம் சொல்ல மறந்திட்டேன். உங்க பெரியம்மாவ கோயில்ல பார்த்தேன். வீட்டுக்கு வர சொன்னாங்க... எனக்கு தான் போக நேரமில்ல. அத்த வீடு, சித்தி வீடு போறத்துக்கு சரியா இருந்துச்சு...."

" அடிபாவி ! இப்போ தான் எங்கையும் போகல சொன்ன..."

" அதுக்காக சொந்தகார வீட்டுக்கு போகமா இருப்பாங்களா..."

ஒரு மாச பிரிவில் தன் சொந்தகாரர்கள் வீட்டில் போகாதத் பெரிதாக தெரியவில்லை. அவள் நகம் தான் பெரிதாக தெரிந்தது. பொறுமையாக இடது கையில் விரல்களில் நகத்தை கடித்தான்.

" ஆமா ! எங்க மாமாவுக்கு 500 ரூபா தரணும் சொன்னனே தந்தியா....!"

" இல்லங்க...! அண்ண பசங்களுக்கு எதுவும் வாங்கிட்டு போலியா.... பொம்மை வாங்கி கொடுத்திட்டேன்..."

" ஐந்நூறு ரூபாய்க்கும் பொம்மையா..." என்று நடுவிரல் நகத்தை கடித்தபடி அதிர்ந்தான்.

" பின்ன...! பெரிய அண்ணன் பசங்க இரண்டு, சின்ன அண்ண பசங்க மூனு... ஆளுக்கு 100 ரூபா வச்சாலும்... ஐந்நூறு வருதா..."

"ம்ம்ம்....சரி..." என்று ஆள்காட்டி விரலை கடித்தான்.

இந்த சமயத்தில் ஐந்நூறு ரூபாய்க்கு சண்டை போடுவது சரியில்லை என்பதற்காக அமைதியாக இருந்தான். கட்டை விரல் நகத்தை கடித்து, நகங்கள் வைத்த பேப்பரை குப்பையில் போட்டான்.

தன் சொந்தக்காரர்களை பார்க்காதது சிதம்பரத்துக்கு பெரிதாக தெரியவில்லை. பெரிதாக இருந்த நகம் வெட்டியாகிவிட்டது. எதுவாக இருந்தாலும் காலையில் பேசலாம். சண்டை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம்.

மல்லிகாவை படுக்க வைத்து சிதம்பரம் அவள் மேல் படுத்து முத்தமிட தொடங்கினான். நேற்று அவனை கீறிய நகம், இன்று இல்லாதது சிதம்பரத்துக்கு நிம்மதியாக இருந்தது.

Tuesday, October 13, 2009

என் பழைய நண்பா !



என் பழைய நண்பா !
இதை நான் சொல்லும் போது
உன் கண்கள் சிவந்திருக்கும்
பற்கள் ஒன்றொடு ஒன்று
மோதிக் கொள்ளும்
விரல்கள் இறுக்கி
அடிக்க நினைக்கும்
காதை திருகி
கடலில் போட தோன்றும்

நாம் இது வரை
பழகிய நினைவுகள் அந்நியமாக்கப்படும்
பரிமாரிக் கொண்டது எல்லாம்
பஞ்சாய் பறந்துப் போகும்
தேவையில்லா வார்த்தையின்
நீளம் குறையும்

பழைய நண்பா !
இதை நான் சொல்லும் போது
நான் உனக்கு அந்நியனாக இருப்பேன் !

***

பதிவில் கருத்து சண்டை இருக்க கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தேன், இப்போது குத்து சண்டையே வந்துவிட்டது.

Monday, October 12, 2009

நடிகர் சங்கம் vs பத்திரிகையாளர்கள்

புவனெஸ்வரி என்ற தனி நபர் விபச்சார வழக்கு எப்படி எல்லாம் திசை மாறி நடிக சங்கம் - பத்திரிகையாளர்கள் சண்டையாக மாறிவிட்டது. கடைசியில், வழக்கில் கைதான புவனெஸ்வரியை மறந்து விட்டனர். மூன்று நாட்கள் பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, இப்போது ஒரு மாதத்திற்கு பெரிய செய்தியாக மாறிவிட்டது.

தினமலர் வெளியிட்ட விபச்சார நடிகைகள் பட்டியலை வெளியிட்ட கண்டன கூட்டத்தில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் உண்மையான குணம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாருக்கு பிறந்தவர்கள் என்பதை பத்திரிகையாளர்களை திட்டியதில் தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக கூடிய கூட்டத்தில் கூட இத்தனை ஆவேசத்தை காட்டவில்லை. இலங்கை இராணுவத்தை எதிர்த்து பேச வாய்வரவில்லை. அங்கு நடக்கும் பிரச்சனையை எழுதிய பத்திரிகையாளர் குடும்பத்தை சேர்த்து திட்டுவதற்கு இவர்களுக்கு பல வார்த்தைகளை கண்டு பிடித்து பேசி இருக்கிறார்கள்.

தினமலர் மீது மான நஷ்ட வழக்கு போட்டு முடிய வேண்டிய விஷயத்தை, தன் நண்பர் விஜயகுமார் மனைவி (மஞ்சுளா) பெயரை பிரசுரம் செய்ததற்காகவே நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பெரிதாக ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.

இவ்வளவு பெரிய பிரச்சனை ஆன பிறகு, தினமலர் தங்கள் ஆதாரத்தை வெளியீட வேண்டும். அப்போது தான் அவர்கள் சொன்னது உண்மை என்று நம்ப வைக்க முடியும். இல்லை என்றால், அவர்கள் வெளியீட்ட செய்தி யூக மாக கருதப்படும்.

எது எப்படியோ ஒரு மாதத்திற்கு இது தான் "Headlines"

டிஸ்கி : பத்திரிகையாளருக்கு எதிரான மனுவை முரசொலி ஆசிரியர் (முதல்வர்) நடவடிக்கை எடுக்க கொடுத்திருக்கின்றனர். முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா.... அவர் பதவியை நடிகர் சங்கம் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் நாட்டமைக்கு தான் வெளிச்சம்...

Tuesday, October 6, 2009

கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா - ஓர் எதிர்வினை

கேபிள் சங்கர் அவர்களின் 'கொள்ளை..கொள்ளையாம்.. முந்திரிக்கா' பதிவை படித்து மிகவும் மன வேதனை அடைந்தேன். அவருக்கு இவ்வளவு குறுகிய பார்வை என்பதை இந்த பதிவு காட்டிவிட்டது. அதுமட்டமில்லை... எம்.ஆர்.பியை விட 3 ரூபாய் அதிகமாக கொடுப்பது தான் அவர் கண்ணுக்கு தெரிந்திருக்கிறது. கேபிள் சங்கர் இவ்வளவு சுயநலமானவர் என்று நான் நினைக்கவில்லை.



டாஸ்மாக் கடையில் ஒரு ப்ளாஸ்டிக் க்லாஸ்யின் (அசல் விலை 1 ரூ.) விலை 2.5 ரூபாய். ஒரு வாட்டர் பாக்கெட்டின் (அசல் விலை 1 ரூ) விலை 2.5 ரூபாய். ஆக, ஒரு க்வாட்டர் குடிப்பவன் கண்டிப்பாக ப்ளாஸ்டிக் க்லாஸ், தண்ணீர் இல்லாமல் குடிக்க முடியாது என்பதால் அவன் வாங்கி தான் திற வேண்டும். இதில் 3 ரூபாய் டாஸ்மாக் கொள்ளை அடிக்கிறான். ஒரு நாளைக்கு 200 பேர் குடிக்கிறார்கள் என்றால், 600 ரூபாய். மாதத்திற்கு 18,000 ரூபாய்.

டாஸ்மாக்கில் கடை போட்டு முட்டை, சிக்கன் விற்பவன் தனக்கு ஆகும் விற்பனையில் இருந்து 2 சதவீதம் அரசுக்கு கொடுக்க வேண்டும். ஆதாவது நீங்கள் வாங்கும் சிக்கன், மட்டன், பீப், கடலை, ஆம்லேட் எல்லாவிற்றில் இருந்து இரண்டு சதவீதம் கொடுக்க வேண்டும். டாஸ்மாக் கடையில் வாங்கி குடிப்பவர்கள் யாரும் பில் வாங்குவதில்லை. ஒரு நாளுக்கு இவ்வளவு தான் சேல்ஸ் என்று சொன்னாலும் நம்பி தான் ஆக வேண்டும். அதில், டாஸ்மாக் அநியாய லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இது எல்லாம் போக் நீங்கள் குடித்து விட்டு பாட்டில் அங்கேயே வைத்து விட்டு வந்தால், பழைய கடையில் ஒரு பாட்டில் ஒரு ரூபாய்க்கு கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 200 பாட்டில் என்றால் 200 ரூபாய். ஒரு மாதத்திற்கு 6000 ரூபாய். வருடத்திற்கு 72,000 ரூபாய்.

இது எல்லாவற்றிக்கும் மேலாக... இரவு 10 மணிக்கு கடையை மூட வேண்டும். ஆனால், 9:45 மணிக்கு 'Closed' என்பான். நீங்கள் கேட்டால், அக்கௌண்ட்ஸ் பார்த்து மூட வேண்டும் என்பான். கொஞ்சம் குரலை உயர்த்தி செட்டு சேர்ந்து கத்தினால் கொடுப்பான். சில சமயம் செட்டு சேரவில்லை என்றால்... அவ்வளவு தான். தர மாட்டான். 10 மணிக்கு மேல், 60 ரூபாய் க்வாட்டரை அங்கு சிக்கன் கடை போட்டவன் 100 ரூபாய்க்கு விற்பான். அந்த சமயத்தில் குடிக்க வேண்டும் என்று நினைப்பவன் சொல்லும் விலையில் வாங்கி தான் ஆக வேண்டும். இதில் டாஸ்மாக் அநியாய அநியாயத்திற்கு லாபம் சம்பாதிக்கிறார்கள்.

இவர்களிடம் பங்கு வாங்குவதற்கு போலீஸ் காத்திருப்பு தனி கதை...!!

டாஸ்மாக்கில் இத்தனை விஷயம் இருப்பதை Part-time குடிகாரனான எனக்கு இவ்வளவு தெரியும் போது, ஒரு Full-time (?) சீனியர் குடிமகனான நீங்கள் சொல்லாமல் விட்டதை என்னால் மன்னிக்க முடியாது. இன்னும் நான் ஏதாவது சொல்லாமல் விட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

படித்ததில் பிடித்தது : ஈழ கவிதைகள்

நண்பர் ஒருவர் எனக்கு SMSயில் ஈழ கவிதைகளை அனுப்பியிருந்தார். அதில் எனக்கு பிடித்த கவிதையை தொகுத்து பதிவு ஏற்றியுள்ளேன்.



முடி சூடிய தமிழினம்
முள்வேளி கம்பிக்குள் !

- ஈழபாரதி, புதுக்கோட்டை

**

சிங்கள பெண்கள்
உதட்டு சாயம்
ஈழ தமிழர் குருதியில் !

- கணேசன், காங்கேயம்

**

பணிக்கூடம் உடைத்து
தொப்புல் கொடி அருத்தார்கள்
துடிக்கிறது ஈழம் !

- அமீர்ஜான், திருநின்றவூர்

**

அம்மனமாய் தமிழன்
அகிலமே பதைக்கிறது
உடன் பிறப்புக்கு தமிழ் மாநாடு !

- ஏழைதாசன், புதுக்கோட்டை - 2

**

புத்த தேசத்திற்கு
ஆயுதம் கொடுத்தது
காந்தி தேசம் !

- எஸ்.விஜயகுமார், புதுக்கோட்டை

**

ஆனாதையாக அமைதி
தத்தெடுக்க துடிக்கும் ஈழம் !

- ஜஸ்டின், கொடைக்கானல்.

Sunday, October 4, 2009

கவிதை, கதை எழுதுபவர்கள் எங்கே ???

'நான் சொந்தமாக பதிப்பகம் தொடங்க போறேன்.என்ன செய்யலாம் ?' என்று கேட்டேன். அவர், 'நல்ல தானே இருந்த. என்னப்பா ஆச்சு..?' என்று கிண்டலாக கேட்டார்.

உண்மையாக புத்தகம் எழுதுவதை விட புத்தகம் வெளியீடுவது அதை விட சிரமம் என்று அனுபவ ரீதியாக உணர்ந்தேன்.

பதிவு போடாமல் இதை சாதிக்க வேண்டும் என்று இருந்தேன். வேறு வழியில்லாமல் என் விரதத்தை விட்டு பதிவு போடுகிறேன். ஆர்வமுள்ளவர்கள் உங்கள் படைப்பை அனுப்புங்கள்.

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீடப்படும் இரண்டு தொகுப்பு நூல்

'ஒரு நிமிட கதை'- சிறுகதை தொகுப்பு

1.கதை ஒரு பக்க அளவில் இருக்க வேண்டும். அதிகப்படி 250 வார்த்தைகள் இருக்கலாம்.

2.கதை எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். ஆபாசமான கதைகள் இருக்க கூடாது. அவ்வளவு தான்.

3.தேர்வு செய்யப்படும் கதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

'காந்தி வாழ்ந்த தேசம்'- கவிதை தொகுப்பு

1. 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. காந்தி வாழ்ந்த காலம், இப்போதைய இந்தியா, காந்தி அரசியல், காந்தி இல்லாத அர்சியல் என்று எது பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுகவிதை - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

தயவு செய்து காந்தியை தாக்கி கவிதை எழுத வேண்டாம்.

( சத்தியமாக நான் காந்தியவாதி இல்லை. ஆனால், அவரை பற்றி தொகுப்பு நூல் போட வேண்டும் என்று தோற்றியது. அதான், இந்த தலைப்பு....!!)

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.10.09

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO :nagarathna_publication@yahoo.in
CC : kannan.gurumurthy@gmail.com போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.

தயவு செய்து பதிவில் போட்ட படைப்புகளை அனுப்ப வேண்டாம். உங்கள் படைப்பு தேர்வாகாத பட்சத்தில், நீங்கள் உங்கள் படைப்பை பதிவில் போட்டுக் கொள்ளுங்கள்.

இது என்னுடைய முதல் முயற்சி என்பதால் நீங்கள் அனுப்பும் கவிதைக்கும், கதைக்கும் உதவி தொகை கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Saturday, October 3, 2009

வாடிய மல்லி !

"பிச்ச வாங்கி தான் வாழனும்னு மனசுல பச்ச குத்தியிருக்காங்க போலிருக்கு..." என்று மனதில் நினைத்துக் கொண்டான் கோகுல்.

மதுரை செல்லும் வரை ட்ரெயினில் போழுது போகவில்லை என்று ஒரு பழைய புத்தகம் வாங்கி படித்துக் கொண்டு இருந்தான். ஒருவன் அமர்ந்த படி இறுக்கையில் இருந்தவர்களின் கால் கீழ் இருக்கும் குப்பையை சுத்தம் செய்து பிச்சைக் கேட்டு வந்தான். ஸ்வரஸ்யமாக படித்துக் கொண்டு இருக்கும் போது அந்த பிச்சைக்காரன் கோகுலின் காலை தொட்டு பிச்சை கேட்டான்.

" ஏப்பா உக்காந்த இடத்துல ஷூ பாலீஷ் போடலாம், பேப்பர் கடை வைக்கலாம். எதுக்கு பிச்ச எடுக்குற " என்று சொல்ல கோகுல் வாய் எடுத்தான். வார்த்தைகள் தொண்டை வரை நின்றது. " காசு இருந்தா போடு. வெட்டி பேச்சு பேசாத ! " என்று அந்த பிச்சைக்காரன் சொல்லிவிட்டால், மதுரை வரும் வரை மற்ற பயணிகள் ஒரு மாதிரியாக பார்ப்பார்கள். எதுக்கு வம்பு என்று காசு கொடுக்காமல் அமைதியாக மீண்டும் புத்தகம் படித்தான்.

ஆர்வமாக படித்துக் கொண்டு இருக்கும் போது மீண்டும் பிச்சை கேட்கும் குரல். கவனிக்காமல் இருந்தான். இரண்டு கை தட்டல் சத்தம் கேட்டது. பிச்சை கேட்பவனை அடித்து துரத்த வேண்டும் என்று கோபமாக நிமிர்ந்து பார்த்தான். ஒரு திருநங்கை பிச்சை கேட்டு நின்றது.... மன்னிக்கவும் நின்றார்.



கோகுல் மனதில் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை. தன் பையில் இருந்து 10 ரூபாய் எடுத்துக் கொடுத்தான்.

" மகராசனா இருக்கனும்..!" என்று வாழ்த்தி விட்டு அந்த திருநங்கை சென்றார். அவனுடன் பயணம் செய்தவர்கள் யாரும் அந்த திருநங்கைக்கு காசு போடவில்லை. ஊனமுற்றவனுக்கு காசு போடாதவன், திருநங்கைக்கு பணம் கொடுத்த கோகுலை பலர் ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

அவன் அதை பற்றி கவலைப்படாமல் தன் கையில் இருக்கும் புத்தகத்தை படித்தான்.

" பிஷ்மர் மரணத்திற்குக் காரணமான சிகண்டி ஒரு அலி, அர்ஜூனன் அலியின் உருவத்தோடு இருக்கும் போது தான் கௌரவப்படைகள் தன்னந்தியாய் தோற்கடித்தான். கடவுள் ஆண் வடிவாகவோ அல்லது பெண் வடிவாகவோ பாராபட்சமாய் இருக்க முடியாது. அலி வடிவத்தில் தான் இருக்க வேண்டும்"

மதுரை வரும் போது, சு. சமுத்திரம் எழுதிய 'வாடா மல்லி' புத்தகத்தை படித்து முடித்தான்.

--
குட்டி கவிதை

இவர்களை 'அவன்','அவள்'
என்று அழைக்க முடியாதது தான் !
'அது' என்று அழைக்காமல்...
'அவர்' என்று அழைப்போம் !!

LinkWithin

Related Posts with Thumbnails