வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Friday, December 30, 2011

உலக சினிமா : Dr.Babasaheb Ambedkar

ஒவ்வொரு வருடமும் தூர்தர்ஷனில் அல்லது ஏதாவது ஒரு தொலைக்காட்சியில் 'காந்திஜி' படம் போடுவார்கள். ஒரு வெள்ளையன் காந்தியாக நடித்திருந்தாலும் காந்தியின் வரலாற்று படமாக அதை போற்றி டி.வியில் போட்டுக் கொண்டுயிருக்கிறார்கள். 1982 ல் வெளிவந்த காந்தி திரைப்படம், எத்தனை முறை தொலைக்காட்சியில் போட்டியிருப்பார்கள் என்று கணக்கே இல்லை. காந்தியை பற்றியும் அவரது கொள்கையை பற்றியும் மக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்று பிரச்சாரமாக 'காந்தி' படம் இருக்கிறது. ஆனால், அம்பேத்கரை பற்றி 2000ல் வெளியான படத்தை எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என்று விரல் விட்டு எண்ணிவிடலாம்.

மகாராஷ்ட்ரா அரசின் நிதி உதவியோடு 1998ல் எடுக்கப்பட்ட 'அம்பேத்கர்' திரைப்படம் 2000ல் தான் வெளிவந்தது. 1998ல் சிறந்த கலைப்படத்திற்கும், சிறந்த நடிகர் ( மம்மூட்டி) க்கான தேசிய விருதை இந்த படத்திற்கு கிடைத்தது. மற்ற கலைப் படம் போல் இல்லாமல் அம்பேத்கர் படம் வசூலிலும் ஒரளவு நன்றாகவே இருந்தது.



காந்தி, அம்பேத்கர் இரண்டு படங்களிலும் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கை வரலாற்றை தான் பதிவு செய்கிறது. காந்தி படத்தில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அம்பேத்கர் படத்தில் பல உண்மைகள் வெட்டப்பட்டுள்ளது.

‘காந்தி’ படத்தில் காந்தி வில்லன் என்று எடுத்துக் கொண்டால் வெள்ளையன். அவனை விரட்டி அடிப்பதே காந்தியின் போராட்டமாக இருக்கும். ஆனால், அம்பேத்கர் வாழ்க்கை வரலாற்றில் வில்லன் என்று எடுத்துக் கொண்டால் அது ‘காந்திஜி’ தான். இரண்டாவது வட்ட மேஜை மாநாட்டில், தாழ்த்தப்பட்டவர்களுக்கு வெள்ளைக்காரனே சிறப்பு சலுகை தர முன்வந்தும், காந்திஜி அதை எதிர்க்கிறார். தன் உயிரை ஆயுதமாக்கி பூனா பேக்ட் ஒப்பந்தத்தில் அம்பேத்கரை கையெழுத்திட வைக்கிறார்.

அம்பேத்கர், காந்தி இருவருக்குள் பல பணிப் போர் இருக்கிறது. ஆனால், 3 மணி நேர திரைப்படத்தில் ஓரளவு பதிவு செய்திருக்கிறார். சரி.. படத்திற்கு வருவோம்.

தலித்தை இந்து மதத்தில் இருந்து பிரித்து விட்டால் எதிர்காலத்தில் இந்தியாவில் இந்து மதம் சிறுபான்மையினராக மாறிவிடுமோ என்று காந்தி அஞ்சுகிறார். அதே சமயம் தலித்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் சரியாக காலமாகும். அதுவரை பொறுமையாக இருங்கள் என்கிறார். இன்று வரை, பல கிரமங்களில் அந்த காலத்திற்காக தான் காத்திருயிருக்கிறார்கள்.

மழைக்கு கோயிலுக்குள் ஒதுங்கிய தலித்தின் மரணத்தில் கதை தொடங்குகிறது. அமெரிக்காவில் தன் பட்டப்படிப்பு படிக்கும் அம்பேத்கர் அமெரிக்காவில் வாழும் கருப்பர்களையும், இந்தியாவில் வாழும் தீண்டாமையை ஒப்பிட்டு பேசுகிறார். பரோடா அரசு நிதி உதவியில் படிக்கும் அம்பேத்கர் தன் படிப்பு முடித்ததும் பத்து வருடம் பரோடா மஹானத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனை. ஆனால், படிப்பு முழுமை பேராமலே பரோடா அரசுக்கு வேலை செய்ய அழைப்பு வருகிறது.

தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்ததால் வீடு கிடைக்காமல் அவதைப்படுவதும், தனக்கு கீழ் வேலை செய்பவர்கள் மரியாதை இல்லாமல் நடத்துவதும், தூசிப்படிந்த அறை தங்குவதும் போன்ற அவமானங்களை சந்திக்கிறார். பின்பு, பரோடா மன்னர் பத்து வருடம் வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை தளர்த்திக் கொள்கிறார். தன் மனைவி ரமாபாய்யுடன் வறுமையில் வாடுகிறார். தன் நான்கு குழந்தைகளை இழக்கிறார்.

வழக்கறிஞர் பட்டம் பெற்ற அம்பேத்கர் தன் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கிறார். தீண்ட தகாதவர்களை அணியாக திரட்டி மகாத்தில் இருக்கும் குளத்தில் நீர் குடிக்கிறார். பிராமினர் சஹரபுத்தேவுடன் சேர்ந்து மனு தர்மத்தை எரிக்கிறார். அனைத்து ஐரோப்பிய சைமன் கமிஷனில் பம்பாய் மகான அமைப்பு உறுப்பினராக நியமிக்கப்படுகிறார். அம்பேத்கர் காங்கிரஸ் பற்றி தன் அதிருப்தி கருத்துக்களை தெரிவிக்கிறார். இதை கேள்வி பட்ட காந்தி அம்பேத்கரை பார்க்க அழைக்கிறார்.

காந்தி, அம்பேத்கர் சந்திப்பில் இருந்து அக்‌ஷன் படத்திற்கு உண்டான விருவிருப்பு இந்த கலை படத்தில் இருக்கிறது. காந்திக்கு எதிராக பல வசனங்கள் இந்த படத்தில் பார்க்க முடிந்தது.

“He is not Mahatma. He is an moderm politican"

" மகாத்மா வருவார்கள். போவார்கள். ஆனால் காலம் காலமாக தீண்டப்படாதவன் தீண்டப்பட்டாமல் ஒதுக்கப்படுகிறான்"


காந்தியிடம் " அடிக்கடி உண்ணாவிரதத்தை ஆயுதமாக பயன்படுத்தாதீங்க..."

இன்னும் பல வசனங்கள் இருந்திருக்கும் என்றே நினைக்க்க தோன்றுகிறது. சென்சார் போர்ட்டின் கை வண்ணம் தெரிகிறது.

காந்தி, அம்பேத்கர் முதல் சந்திப்புக்கு பிறகு, காந்தி தன் காரியதரிசியிடம் “ என்னது அம்பேத்கர் மார் இனத்தை சேர்ந்தவரா ? நான் அவரை பிராமனர் என்று நினைத்தேன். நீங்கள் ஏன் சொல்லவில்லை” என்று கோபப்படுகிறார். இந்த வசனத்தில் பல அர்த்தங்கள் உள்ளது.

தனி நாடு கேட்கும் ஜின்னாவிடம் தன் அதிருப்தியை தெரிவிக்கிறார். காங்கிரஸ் உறுப்பினர் இல்லாத அம்பேத்கர், காந்தி சிபாரிசால் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்கிறார். ( காந்தி அம்பேத்கர் பெயர் சொல்லும் போது, நேருவின் முகம் மாறுவதை சற்று உண்ணிப்பாக கவனிக்க வேண்டும்). இந்து மதத்தை புரக்கணிக்க போவதாக அறிவிப்பு விட, ஒவ்வொரு மதத்தினரும் அம்பேத்கரை தங்கள் மதத்திற்கு அழைக்கிறார்கள். குறிப்பாக, கிறித்துவ மதத்தினருக்கு அம்பேத்கர் கேட்கும் கேள்வி சென்சார் போர்ட் வெட்டாமல் விட்டதை பாராட்டியாக வேண்டும்.

தனது உடல்நலம் கவனித்துக் கொள்ள சாராத கபீரை மணந்துக் கொள்கிறார். சுதந்திர இந்தியாவின் சட்டங்கள் வகுக்கிறார். இந்து கோட் சட்டத்தை கொண்டு வர நினைக்க, போதிய ஆதரவு இல்லாதததால் அந்த சட்டம் அமலாக்க அவரால் முடியவில்லை. தனது சட்ட அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறார். இந்து மதத்தின் அதிருப்தியால் ஐந்து லட்ச ஆதரவாளர்களோடு புத்த மதத்தை தழுவிகிறார்.

புத்தகர் மதம் தழுவிய இரண்டு மாதத்தில் இறந்து விட்டதாக எழுத்துக்கள் வர படம் முடிகிறது. இன்னும் பல இடங்கள் தீண்டாமை உள்ளது என்பதையும் படம் முடிவில் எழுத்துக்களை ஓட விட்டிருக்கிறார்கள்.

இந்த படம் மக்களிடம் கொண்டு செல்லாமல் இருந்ததற்கு இரண்டு காரணம். ஒன்று, அரசு தயாரிப்பு. இன்னொரு, நான் சொல்ல வேண்டியதில்லை. பலருக்கு தெரிந்த காரணம் தான்.

இப்படத்தை விமர்சனம் செய்வதை விட பலருக்கு கொண்டு செல்வதே நோக்கம் என்பதால், படத்தில் பணியாற்றிய இயக்குனர், நடிகர் பற்றி அதிகம் குறிப்பிட விரும்பவில்லை.

இப்படம் இணையத்தில் இருப்பதை பரிந்துரை செய்த நண்பர் கார்க்கிக்கு என் நன்றிகள் பல..

இந்த படத்தை முழுமையாக பார்க்க...

Thursday, December 29, 2011

ஐரோம் ஷர்மிளா : மணிப்பூரின் இரும்பு பெண்மணி

தாழ்த்தப்பட்டவன் ஆயுதம் எடுத்தால் நக்ஸலைட். தமிழன் ஆயுதம் எடுத்தால் விடுதலை புலி. இன்று தேசிய அளவில் இப்படி பலரது எண்ணங்கள் ஓடிக் கொண்டு தான் இருக்கிறது. அகிம்சை அறிமுகப்படுதிய இந்தியாவில் மக்கள் ஏன் வன்முறையில் இறங்குகிறார்கள் ? என்று காந்தி ஆதரவாளர்கள் வக்கனையாக பேச தெரியும். அன்னா ஹசாரே உண்ணா விரதத்திற்கு கூட்டமாக சென்று ஆதரவு அளிக்க தெரியும். ஊடகத்தில் அகிம்சையை பற்றி பேச தெரியும். ஆனால், இவர்களுக்கு முன்பு பதினொரு வருடங்களாக தன் இளமையை தொலைத்து ஒரு பெண்மணி தன் மாநிலத்திற்காக போராடி வருகிறாள். அவளுக்காக குரல் கொடுக்கவோ, ஆதரவு தெரிவிக்கவோ யாருமில்லை. வருடத்துக்கு ஒரு முறை, ஷர்மிளா பத்து வருடம் உண்ணாவிரதம் முடித்துவிட்டார், பதினொரு வருடம் முடித்துவிட்டார் என்று செய்தி வெளியீடுவது சடங்காகவே இருக்கிறது. அவர் போராட்டத்திற்கு பெரிய முன்னேற்றமில்லை.

மணிப்பூர். இந்தியாவின் கிழக்கு பக்கத்தில் இருக்கும் ஓரமான மாநிலம் மட்டுமல்ல. இந்திய அரசு ஓரம் கட்டிய மாநிலம். இயற்கை வளம். அழகான தேயிலை தோட்டம். வடகிழக்கில் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் ஒன்று. இப்படி பல வர்ணனை வார்த்தைகள் மணிப்பூரை சொல்கிறார்கள். ஆனால், அந்த மாநிலம் பிரிவினைவாதிகளிடமும், இந்திய இராணுவத்திடமும் சிக்கி தவித்துக் கொண்டு இருக்கிறது. ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் மணிப்பூர் கிராமத்து மக்களை மிரட்டி தங்களுக்கு தேவையான உணவு, பணம் வாங்கிவருகிறார்கள். அவர்களை பிடிக்க முடியாத இந்திய இராணுவம் உதவி செய்த மக்களை வன்கொடுமை செய்திருக்கிறது. உள்ளூர் காவல்துறையினரும் ஒன்றும் செய்ய முடியாதவர்களாக நிற்கின்றனர்.



அப்பாவி மக்களை சுட்டு, அவர்களை பிரிவினைவாதிகள் என்று சொல்லி ஒவ்வொரு பிணத்தையும் இந்திய இராணுவம் கணக்கு சொல்லியது. பெண்களை கற்பழித்து, பிறகு தங்கள் தோட்டாக்கள் மூலம் பெண்ணுறுப்பை அழித்தனர். இந்திய சட்டமும் அதற்கு உதவியாகவே இருந்தது. தட்டிக் கேட்கவும் முடியாது. கேட்டாலும், தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவார்கள். கிட்டதட்ட, ஜனநாயக நாட்டில் இராணுவ ஆட்சி நடக்கும் மாநிலமாக மணிப்பூர் இன்று வரையும் இருந்து வருகிறது.

இந்திய இராணுவம் நடந்த பல தாக்குததில் ஒரு தாக்குதல் மலோம் கிராமத்தை அதிர வைத்தது. பஸ்க்காக காத்திருந்த பத்து கிராமத்தினரை பிரிவினைவாதிகள் என்று சொல்லி இந்திய இராணுவம் சுட்டு தள்ளியுள்ளது. இறந்த பத்து அப்பாவினர் குடும்பத்திற்கும் அரசிடம் இருந்து எந்த ஆதரவும் இல்லை. அவர்களுக்கு நியாயமும் கிடைக்கவில்லை. இவர்களுக்கு நியாயம் கிடைக்க, இது போல் சம்பவம் மீண்டும் நடக்காமல் இருக்க இந்திய அரசு மணிப்பூரில் இருக்கும் இராணுவத்தை திரும்ப அழைக்க வேண்டும். விராசனை இல்லாமல் கொல்லப்படுவதை திருத்த வேண்டும் என்று துடித்து எழுந்து தனி பெண்ணாக களத்தில் குதித்தார் ஐரோம் ஷர்மிளா.

மனித வெடி குண்டாக மாறவில்லை. துப்பாக்கி எடுத்து யாரையும் சுடவில்லை. தன் உடல் தான் ஆயுதம். காந்தி வழி தான் சிறந்த வழி. நவம்பர் 2, 2000 இந்திய அரசுக்கு எதிராக உண்ணா விரதத்தை மேற்க் கொண்டார். ’தற்கொலை முயற்சி’ என்று அவரை அரசு கைது செய்தது. காவலில் இருக்கும் போது இறந்து விடக் கூடாது என்பதற்காக வலுக்கட்டாயமாக உணவு குழாய் பொருத்தினர்.

தான் இறந்து போராட்டத்தில் வெற்றிப் பெற முடியாது அவரும் ஏற்றுக் கொண்டார். இன்றளவும், உணவு, தண்ணீர் இல்லாமல் உணவு குழாய் மூலம் வாழ்ந்து வருகிறார்.

ஷர்மிளா உண்ணாவிரதம் இருந்த பதினொரு ஆண்டுகள் பல முறை தற்கொலை முயற்சி (IPC 309) சட்டத்தில் கைது செய்து உள்ளது. ஆனால், இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற யோசித்ததுக் கூட இல்லை. காந்தி வழியில் நியாயம் பிறக்கும் என்ற நம்பிக்கையில் போராட்டம் நடத்துகிறார்.

பல மாதர் சங்கங்கள் ஷர்மிளா போராட்டத்திற்கு ஆதரவாக உள்ளது. 2005 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுக்கு ஷர்மிளா பெயர் பரிசிலனை செய்யப்பட்டது. மணிப்பூரின் ”இரும்பு பெண்மணி” என்று பலராலும் போன்றபடுகிறார்.

ஊடகங்கள் அண்ணா ஹசாரேவுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஐரோம் ஷர்மிளாவுக்கு கொடுக்கப்படவில்லை. ஹசாரே கேட்கும் லோக் பால் மசோதாவை விட ஷர்மிளாவின் கோரிக்கை மிகவும் மலிவானது. இந்திய அரசு இராணுவத்தை திரும்ப பெற வேண்டும். ஆனால், அதற்காக அவர் பதினொரு வருங்களாக காத்துக் கொண்டு இருக்கிறார்.

ஹசாரேவுக்கு குரல் கொடுக்கும் தோழர்கள் இவருக்கும் கொஞ்சம் கொடுங்கள்.

Wednesday, December 28, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் புது வெளியீடுகள் !

சென்னை புத்தக கண்காட்சி நெருங்க நெருங்க, எல்லா பதிப்பகங்களும் மண்டை உடைத்துக் கொள்வது “அடுத்து நாம் என்ன புத்தகம் போட வேண்டும்?” என்பது தான். பதிப்பாளரிடம் அதிகம் கேட்கப்படும் கேள்வி, “ என்ன புத்தகங்கள் வெளியீட போறீங்க?” என்பது தான்.

நான் அதிகம் மண்டை உடைத்துக் கொள்ளவில்லை. காரணம், பதிப்பகத்தை தொழிலாக நினைக்கவில்லை. பதிப்பகத்தில் நான் அதிகம் கவனம் செலுத்தவில்லை. இரண்டாவது கேள்விக்கு பதில் இரண்டு புத்தகம். இரண்டுமே கவிதை.

விழிப்பறிக் கொள்ளை - உமா சௌந்தர்யா
பக். 80, விலை. ரூ.40



ஒரு பதிப்பகம் கவிதை நூல் வெளியீட முடிவு செய்ய பிறகு, கண்டிப்பாக ஒரு காதல் கவிதை தொகுப்பு நூல் அவர்கள் வெளியீட்டு பட்டியலில் இருப்பது நல்லது. புத்தக கண்காட்சிக்கு காதல் கவிதைக்கு என்று ஒரு தனி இளைஞர்கள் கூட்டம் வருகிறது. யார் எழுத்தாளர்கள் என்று பார்ப்பதில்லை. காதல் கவிதை புத்தகங்களை வாங்கிவிடுகிறார்கள் அல்லது அங்கேயே முழுமையாக படித்து வைத்து விடுகிறார்கள்.

அப்படி காதல் கவிதை வெளியீடலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்கும் போது நண்பரும் குறும்படம் இயக்குனருமான பொன்.சுதா மூலம் அறிமுகமானவர் உமா சௌந்தர்யா அவர்கள். “காதல் கவிதை” நூல் என்றது பெரும்பாலும் ஆண்கள் தான் எழுதியிருக்கிறார்கள். பெண்கள் பார்வையில் காதல் கவிதை நூல்கள் மிக குறைவாகவே வந்துள்ளது.

காதல் கவிதை பெண் பார்வையில் படிக்கும் போது ஸ்வாரஸ்யமாக உள்ளது. குறிப்பாக தொகுப்பில் என்னை கவிர்ந்த கவிதை.

எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை
எல்லாம்
எனக்காகவே செய்தாய்
என்பதைத் தவிர.

**

நுணலும் தன்
வாயால் கெடும்
நானும்தான் உன்
காதலை சம்மதித்து


ஆண் பார்வையில் வெற்றி பெறும் காதல் கதை, பெண் பார்வையில் வெற்றி பெறுவதில்லை. (உதாரணம், அழகி, பூ படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்). காதல் ஆண் கோணத்தில் வாசித்த வாசகர்களுக்கு பெண் கோணத்தில் இருந்து வாசிக்க இந்த கவிதை புத்தகம் உதவும் என்று நம்புகிறேன்.

பிணம் தின்னும் தேசம் - கருவை சு.சண்முகசுந்தரம்
பக். 80, விலை. ரூ.40



ஈழப் போர் முடிந்து விட்டது என்று எதிரிகள் குரல் எழுப்பினாலும் இன்னும் முடியவில்லை என்று தமிழகத்தின் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஈழ தொடர்பான கட்டுரை நூல் அல்லது விமர்சன நூல் கொண்டு வர வேண்டும் என்று எண்ணிய போது, தம்பி கனியம் செல்வராஜ் மூலம் அறிமுகமானவர் கருவை சு.சண்முகசுந்தரம்.

கவிதை நூல் என்று சண்முகசுந்தரம் சொல்லும் போது நான் ஆர்வமில்லாமல் இருந்தேன். அவர் எழுதியதை வாங்கும் போது கூட எனக்கு ஆர்வமில்லை. படித்தவுடன் கண்டிப்பாக இந்த நூலை நான் தான் வெளியீட வேண்டும் என்று முடிவே செய்துவிட்டேன். பல பக்கங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை விட, இவரின் ஐந்து வரி கவிதைகள் இதயத்தை பதம் பார்த்துவிடுகிறது.

குறிப்பாக கீழ் காணும் கவிதைகள்...

மனைவியைப் பிரிந்து
துறவு பூண்டான்
புத்தன்
பூட்டிய வீட்டிற்குள்
அத்துமீறும்
புத்தனின் பிள்ளைகள்

**

பசி வந்தால்
பத்தும் மறக்குமாம்
மறக்கவில்லை
நாங்கள்
தனிநாடு.

**

தமிழன் என்பதால் தாக்கப்பட்டோம்
அதைக்கண்டு
நாங்கள் வளர்த்த மாடுகள்
”அம்மா!” வென்று கத்தி
கண்ணீர் வடித்தன.

மாடுகளையும்
அவர்கள்
விட்டபாடில்லை.

**

இன்னும் பல கவிதைகள் தொட்டாக்களாக வரவிருக்கிறது.

“ஓயாத அலை” என்ற தலைப்பில் வந்த கவிதை தொகுப்பை, “பிணம் தின்னும் தேசம்” என்று தலைப்பை மாற்றினேன். நெல்லை ஜெய்ந்தா, அப்துல் காதர் அவர்கள் அணிந்துரையை பக்கத்தின் காரணமாக குறைக்க வேண்டியதாக இருந்தது. மற்றப்படி, சண்முகசுந்தரத்தின் படைப்பில் பதிப்பாளராக நான் கை வைக்க மனம் வரவில்லை. நாகரத்னா பதிப்பகத்தில் வெளிவந்த நூல்களில் எனக்கு மிகவும் மன நிறைவு கொடுத்த நூல் "பிணம் தின்னும் தேசம்” தான். கண்டிப்பாக இந்த நூலுக்கு ஒரு விருது உண்டு என்று என் உள்மனம் சொல்கிறது.

***

இரண்டு கவிதை நூலும், சென்னை புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்படுகிறது. நூல் வெளியீட்டு பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

நூல் வாங்க விரும்புபவர்கள் tmguhan@yahoo.co.in என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளுங்கள்.

Monday, December 26, 2011

காதல் பயணங்களில்.... – கு.சுரேஷ்

அன்புள்ள கு.சுரேஷ் அவர்களுக்கு,

தங்கள் அனுப்பிய கடிதமும், கவிதை புத்தகமும் கிடைத்தது. நூல் அனுப்பியதற்கு நன்றி.

கல்லூரி படிப்பு முடித்ததும் குறுகிய காலத்தில் புத்தகம் வெளியீட்டுள்ளீர்கள் என்று நினைக்கிறேன். பல இடங்களில் உங்களின் கல்லூரி காதல் அழகாய் தெரிகிறது.

குறிப்பாக சில கவிதைகள்...

சந்திப்பு சலனமாகிறது (பக்.21)

முழுமையாய்க் காதலைச் சொன்னவள்
முதன் முதலாக என் காதலுக்கு
முடிவுரை எழுதிவிட்டாள்...

Pg.22
திருமணப் பத்திரிக்கையுடன்
என்னைப் பார்க்க வந்தவள்
என் காதல் பத்திரத்தைத் திருப்பி தந்துவிட்டாள்...
ஒரு இடைவேளையில் இந்தச்
சந்திப்பு சலமாகிறது

ஒரு செவ்விதழ் (pg. 30)

வேஸ்ட் பேப்பருக்குள்
ஒரு வேட்பு மனு
அவள் காதல் கையொப்பத்துடன்...

வார்த்தைகள் நடுவில் வண்ணங்கள்
சிதறிக்கிடந்தன என் இதயத்தின்
குப்பைத் தொட்டியில்...

நானும் – அவளும் (பக்.41)

அவள் தோன்றி – அவளுடன்
இன்னொரு காதலும் தோன்றியது
நான் இல்லாமல்...

மேல் சொன்ன கவிதைகள் என்னை கவர்ந்தாலும், ஒரு சில கருத்துக்களை சொல்ல விரும்புகிறேன். நூல் வடிவ அமைப்பு மிக சுமாராக உள்ளது (முன் அட்டையில் உங்கள் பெயர் இருப்பது கூட தெரியவில்லை). போதுவாக இதுப் போன்ற காதல் கவிதை நூல்களுக்கு கவிதைக்கு தகுந்தால் போல் படங்கள் இருப்பது நல்லது. வாசகனை வாங்க இது போன்ற படங்கள் மிகவும் உதவும்.

நெடுங்கவிதைகளை விட நான்கு வரி கவிதைகள் தான் அதிகம் வாசகர்கள் விரும்புவார்கள். நான் மேற்கோள் காட்டிய கவிதையே அதற்கு உதாரணம்.

எல்லா கவிதைகளும் ஆண் பார்வையில் இருந்த கவிதை, “கல்லறை பதிவு” கவிதை மட்டும் ஏன் திடீர் என்று பெண் வடிவில் மாறியது என்று தெரியவில்லை. நூல் தொகுக்கும் போது ஒத்த கருத்துள்ள கவிதைகளை தேர்வு செய்யுங்கள்.

எழுத்துக்களில் மிகவும் கடினமானது எழுத்துக்களை கோர்த்து கவிதை வடிவம் தருவது தான். ஆனால், பலர் முதல் நூலாக கவிதை நூல் எழுத தான் ஆசைப்படுகிறார்கள். அதையே தான் நீங்களும் முயற்சித்துள்ளீர்கள். உங்கள் முயற்சித்துக்கு என் வாழ்த்துக்கள்.
கவிதை என்ற குறுகிய வட்டத்தில் சிக்கிக் கொள்ளாமல், சிறுகதை, கட்டுரை என்று உங்கள் கவனத்தை செலுத்துங்கள்.

அன்புடன்,
குகன்

**

வெளியீடு
கு.சுரேஷ்
சேனை தலைவர் மண்டபம்,
கட்த்தூர் (அஞ்சல்)
பாப்பிரெட்டிபட்டி (வட்டம்),
தருமபுரி மாவட்டம்.
பேசி : 04348 - 241169
விலை. ரூ.30/- பக் : 48

Friday, December 23, 2011

போராளிகளின் துப்பாக்கி வரிகள் - செந்தமிழன் சீமான்

தம்பி சண்முகசுந்தரத்தின் கவிதை வரிகளில் “போராளிகளின் துப்பாக்கிகளில் இருந்து வரும் தோட்டாக்களுக்கு நிகரான வலிமை கொண்டுள்ளன”. எட்டிப் பார்க்கும் தூரத்தில் இருக்கும் நம் சொந்தங்களின் அவலங்களைத் தீர்க்க முடியவில்லையே என்ற இயலாமையில் மண்ணுக்கேற்ற வீரமும் மானமும் தம்பியின் கவிதைகளில் இயல்பாய் இருக்கின்றன.

நான் சிறுவயதில் என் சொந்த மண்ணிலிருந்து என் ஈழ உறவுகளை எப்படிப் பார்த்தேனோ அதே பார்வையில் என் உணர்வுகளைப் பிரதிபலிப்பதாக இந்த கவிதை வரிகள் அமைந்துள்ளது.
முகவை மண்ணின் உப்புக்கலந்த காற்று என் உறவுகளின் உணர்வை பிரதிபலிக்கும். அந்த உப்புக்கான உணர்ச்சியோடு தம்பியின் கவித்துவம் அமைந்துள்ளது.

ஓயாத அலைகளென ஆரம்பித்து ‘சங்கார நிசமென சங்கே முழங்கு’ என்று என் மூத்தவன் பாரதிதாசன் சொல்லுவதைப் போல் ஈழ மக்களின் போராட்டங்களின் நியாயங்களையும் தீர்வையும் அழகாய் சொல்லியுள்ளார்.

”எத்தனை உயிர்களை கொடுத்தோம்
இன்னும்
எத்தனை உயிர்களை வேண்டுமென்றாலும்
கொடுப்போம்
ஒருபோதும் நிற்காது
ஓயாத அலைகள்”


என்று தமிழரின் வீரத்தைப் பறைசாற்றியுள்ளார்.

காந்தி தேசம் கொடுத்த ஆயுதத்தில் புத்த தேசம் குண்டு போட்டு கொன்றது காந்தியும், புத்தனும் குற்றவாளிகளாய், தமிழ் மக்களின் நீதிமன்றத்தில், காந்தியும் புத்தனும் எங்களுக்கு உதவவில்லை. அதனால் தான் பகத்சிங்கை துணைக்கு அழைத்தோம் என்று நம் பக்கத்தில் உள்ள நியாயத்தையும் காந்தி தேசத்திலிருந்து புத்த தேசத்திற்குச் சொல்லியுள்ளார்.

சிங்களவின் இனப்பசிக்கு எங்களின் உரிமைகளை இழிந்தோம், உடமைகளை இழந்தோம், உயிரையும் கொடுத்தோம். ஆனால், இன்னும் இந்த தேசங்களின் தனி நாடு கேட்பது தவறென்கிறது என்பதை தம்பியின் வரிகள் அழகாய் சொல்லுகிறது.

“தனிநாடு கேட்பது தவறா ?
அப்படியானால்
உலக நாடுகளே ஒன்றினையுங்கள்”


தம்பியின் இந்த வரிகளில் எங்களின் கோபமும் எங்களின் நியாயமும் தென்படுக்கின்றது.

தம்பி உன் உணர்வுகளோடு இறுதியாய் எங்கள் வட்டுக்கோட்டை தீர்மானத்தைப் போல் அழகாய் இந்த கவிதைகளுக்கு முடிவுரை கொடுத்துள்ளாய்.

”இன்று
நாளை
நாளை மறுநாளென்று
என்றேனும்
ஒரு நாள்
நடைமுறைக்கு வரும்
தனி நாடென்னும்
நேற்றைய தீர்மானம்”


என்று தம்பி சண்முக சுந்தரத்திற்கு வாழ்த்துக்கள்.

என்றும் உங்கள் அன்பு உடன்பிறப்பாய்,
சீமான்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் கருவை சு.சண்முகசுந்தரம் எழுதிய "பிணம் தின்னும் தேசம்" - ஈழ கவிதை நூலுக்காக செந்தமிழன் சீமான் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Thursday, December 22, 2011

"மழைக்கால துளசி போல...." - வித்தகக் கவிஞர் பா.விஜய்

குளிர் காலத்தின் அதிகாலையில், ஜன்னல் திறந்தும் உள்ளே அனுமதி கேட்காமல் நுழையும் பனிக்காற்று போல, கவிதையும் எழுதுபவரின் அனுமதி கேட்காமல்தான் படைப்பாய் பரவும்.

கவிதையின் சௌகரியமே இஷ்டத்திற்கு வளைத்து நெளித்துக் கொள்ள து சம்மதிப்பது தான். கவிதையைப் போல சொன்னபடி கேட்கும் குழந்தையும் இருக்க முடியாது. கவிதையைப் போல சொல் பேச்சு கேட்காத குழந்தையும் இருக்க முடியாது.

விழிப்பறிகொள்ளை புத்தகத்தை எழுதிய உமா சௌந்தர்யா, அவருடைய கணவர் மூலமாக பற்பல ஆண்டுகளுக்கு முன்பே எனக்கு அறிமுகமானவர். எனது தந்தையுடன் நூற்பாலையில் சேர்ந்து பணிபுரிந்த இனிய நண்பர் தான் உமா சௌந்தர்யாவின் கவிதைகளுக்கும் இன்று நண்பராய் இருக்கின்ற அவரது கணவர் திரு. முருகேசன்.

ஒரு பெண் குடும்பத்தின் பணைப்புகளுக்குள் மூழ்கி கிடக்கும் போது, தளக்குள் இருந்து ஏதோ ஒரு தனித்துவத்தை உலகின் பார்வைக்கு பதிவுசெய்வதற்காக வெளியே வருவது மிக மிக ஆரோக்கியமாக, விழி அரங்கங்கள் நிரம்ப, கைதட்டல்களால் வரவேற்கக் கூடிய ஒன்று.

அலுவலகங்களோ, குடும்பங்களோ சம்பாத்தியம் இல்லாத அல்லது சமாத்தியத்துடன் கூடிய கை விலங்குகள்தான் பெண்களுக்கு. அதையும் மீறி, ஆத்மாவின் பாடலை படைப்புகளாய் வெளிவரச் செய்யும் பெண்மைகள் போற்றப் பட வேண்டியவை.

இந்த கவிதை தொகுப்பிற்குள்,

"என் வானம்
திரண்டு கிடக்கிறது
உன் நினைவுகள்
எப்போது வேண்டுமானாலும்
பெய்யாலாம்
விழிகளில் மழையாய்..."


என்ற கவிதையில் இதயமும் சேர்ந்து நனைந்தது.

"சிதைந்து போன
இதயத்தை தூக்கிக் கொண்டு
ஒடோடி வருகிறேன்

உடைந்த உன் மனதை
அள்ளிக்கொண்டு அப்போது தான்
சென்றதாய்
அக்கம் பக்கம் தகவல்

திரும்பும் வழியில்
கிடைக்கலாம்
இன்னொரு இதயம்
உனக்கோ எனக்கோ
"

இந்த தொகுப்பில் பளிச்சென்று மனதில் பதியம் போட்டுவிட்டு ஒடிப்போன ஒரு ஆழமான நிகழ்ச்சியின் ததும்பல் இந்த கவிதை.

"குவளையில் தேநீர்
அருந்தும் சாக்கில்
விழிகளால் என்னை
உறுஞ்சும் உன் உயிர்"


இந்த கவிதையில் சொற்களுக்குள் உணர்ச்சியை பிசைந்து தருகிற கலப்பியல், உமா சௌந்தர்யாவிற்கு கை வந்திருக்கிறது. அத்னால்தான் தலைப்பிலே கூட, வழிப்பறிக் கொள்ளை என்ற வழக்கு வார்த்தையை உடைத்து, விழிப்பறிக் கொள்ளை என்ற பெயரை உருவாக்க முடிந்திருக்கிறது.

வார்த்தைகளில் புதிது செய்வது ஒரு படைப்பாளனுக்கு மிக மிக அவசியம். அப்படி அழகான திரிபுகள் பல, இத்தொப்பிலே வாசல் கோலத்தின் புள்ளிகளை போல, மிக நேர்த்தியாய் வைக்கப்பட்டிருக்கிறது.

மழைக்காலத்தில் சில்லென்று ஆடிக்கொண்டிருக்கும் துளசி இலைகள் மாதிரிதான் நல்ல கவிதைகளை படிக்கும்போது மனதிற்குள் ஒரு கம கம வாசமும், சில்லென்ற மனோநிலையும் பதமாக உருவாகும். விழிப்பறிக் கொள்ளையில் அப்படி ஒரு மனோநிலை உருவாகிறது.

தொடர்ந்த எழுத்து முயற்சி இன்னும் அழகான படைப்புகளை நோக்கி உமா சௌந்தர்யாவை அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன். அவருடைய முதல் படைப்பிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

நம்பிக்கையுடன்,
பா.விஜய்

**

நாகரத்னா பதிப்பக சார்பில் உமா சௌந்தர்யா எழுதிய "விழிப்பறிக் கொள்ளை" - காதல் கவிதை நூலுக்காக வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் எழுதிய அணிந்துரை.

Monday, December 19, 2011

தினமணியில் பாரதியாரின் 130வது பிறந்தநாள் !

உரத்த சிந்தனை அமைப்பு சார்பில் மகாகவி பாரதியின் 130வது பிறந்த தின சிறப்பு நிகழ்ச்சி , எழும்பூர் கன்னிமாரா நூலகத்தில் 11.12.11 அன்று நடைப்பெற்றது.அதைப் பற்றிய செய்தி தொகுப்பு 16.12.11 தினமணியில் வந்துள்ளது.

நான் எழுதி படித்த " நான் பாரதியானால் " கவிதைப் பற்றி செய்தியும் இடம் பெற்றுள்ளது. நண்பர்களின் பார்வைக்கு....

Friday, December 16, 2011

உலக சினிமா : Shadow of Time

மனிதன் வாழ்க்கையில் காதல் எந்த காலத்திலும் பிரிக்க முடியாது. பதின் வயதில் வரும் காதல் சந்தோஷத்தை கொடுக்கும். வாலிய வயதில் வரும் காதல் சுகத்தை தரும். நடுத்தர வயதில் வரும் காதல் ஆறுதலை தரும். முதுமையில் வரும் காதல் இறப்புக்கு முன் நிம்மதி தரும். ஒவ்வொரு காலத்திலும் மற்றவர் மீது வைத்திருக்கும் காதல் தான் நம் வாழ்க்கையில் நம்மை பயணிக்க வைக்கும். ஆனால், ஒவ்வொரு காலகட்டத்தில் இந்த காதல் ஒரு பெண்ணின்/ஆண்ணின் மீது மட்டும் இருக்கிறதா என்பது தான் சந்தேகம். ஆனால், வாழ்க்கையில் வரும் இந்த நான்கு காலகட்டத்திலும் காதலர்களுக்குள் பயணமாகும் அன்பை காட்டியிருக்கும் படம் தான் ‘Shadow of Time’.

1940 ல், கல்கத்தாவில் உள்ள குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யும் நெசவு தொழிற்சாலையில் தந்தையால் ரூ.25க்கு விற்கப்படுகிறாள் சிறுமி மாஷா. அங்கு ரவி என்ற சிறுவனின் நட்பு அவளுக்கு கிடைக்கிறது. பிஞ்சு மலர்களை கசப்பதற்காக பிரத்தேயமாக தயாரிக்கப்பட்ட தொழிற்சாலை வேலை அவர்களை நசுக்கிறது. அந்த வேலை பலுவிலும் இருவருக்குள் இருக்கும் ஒரே சந்தோஷம் அவர்களுடைய நட்பு தான். தன் தந்தை பணம் சம்பாதித்து தன் தந்தை திருப்பி அழைத்து செல்வார் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாஷாவிடம், ரவி அவர் வரமாட்டார் என்று சொல்கிறான். இருவருக்குள் சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் நெசவு தொழிற்சாலை மேலாளர் மாஷாவை ஒரு சீமானுக்கு விற்றுவிடுகிறார். அவளை காப்பாற்ற ரவி தன் கையில் இருக்கும் ரூ.35 யை கொடுக்கிறான். ஒரு நாளுக்கு 2 பைசா என்று தன் சம்பளத்தில் பிடித்து மாஷாவை மேலாளரிடம் விடுவிக்கிறான்.



மாஷா தன் தந்தையை தேடி நகரத்துக்கு செல்லும் போது, ஒவ்வொரு பௌர்நமி அன்றும் சிவன் கோயிலில் அவனுக்காக காத்திருப்பதாக சொல்கிறாள். பெரியவர்களானதும் நாம் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லி தன் தந்தையை தேடி செல்கிறாள் மாஷா. சந்தர்ப்ப சூழ்நிலையில் அவள் விபச்சார விடுதியில் மாட்டிக் கொள்ள, அவள் அங்கு வளர்கிறாள்.

காலம் கடக்கிறது. மாஷா விபச்சார விடுதியில் நடனக்காரியாக இருக்கிறாள். வாலிப வயதில் இருக்கும் ரவி தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தை தன் மேலாளரிடம் கொடுத்து தன்னை தானே விடுவித்துக் கொள்கிறான். தன் சம்பளத்தை இரண்டு மடங்காக மாற்றுவதாக சொல்லியும், ரவி அங்கிருந்து வெளியே வருகிறான். சம்பளமில்லாமல் உணவுக்காகவும், தங்க இடத்திற்காகவும் பழைய கம்பளக் கடையில் வேலைக்கு சேர்கிறான். அந்த கடையின் உரிமையாளர் ஒரு முதியவர். அவர் பேத்தி தீபா ரவியை விரும்புகிறாள். ஆனால், ரவி இரவு நேரங்களில் மாஷாவை தேடி கல்கத்தா முழுக்க அழைகிறான். விபச்சார விடுதி பெண்களிடம், தரகர்களிடம் என்று மாஷாவைப் பற்றி விசாரிக்கிறான். ஒரு கட்டத்தில் மாஷா ரவியை அடையாளம் கண்டு அருகே வர நினைக்கும் போது, சிவன் கோயிலில் ரவி தீபாவிடம் பேசுவதை பார்க்கிறாள். ரவி திருமணமானதாக நினைத்துக் கொண்டு, மாஷா ஒதுங்கிக் கொள்கிறாள். கம்பளக்கடை உரிமையாளர் இறக்க, ரவி தீபாவை திருமணம் செய்துக் கொள்கிறான். ரவி கம்பளக்கடை பெரிய கம்பள நிறுவனமாக மாறுகிறது. வெளிநாடுகளுக்கு கம்பளங்களை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு தொழில் முன்னேறுகிறான்.

ஒரு சமயம், ரவியின் 200 கம்பளம் வெளிநாட்டுக்கு போகாமல் தடைப்பட சுங்க அதிகாரி அலுவலகத்துக்கு செல்கிறான். அங்கு தனது பழைய வாடிக்கையாளர் மிஷ்ரா சுங்க அதிகாரியாக இருப்பதை பார்க்கிறான். மிஷ்ரா ரவி உதவி செய்ததோடு இல்லாமல், இரவு விருந்துக்கு அழைக்கிறான். மிஷ்ரா ரவியிடம் அவர் மனைவியை அறிமுகம் செய்து வைக்க, அது தன் பாலிய காதலி மாஷா என்று புரிந்துக் கொள்கிறான். விருந்தில் தனியாக இருந்த ரவியிடம் மாஷா கோயிலில் அவனை மனைவியுடன் பார்த்ததை கூறி, தன்னை ஏமாற்றிவிட்டதாக கோபப்படுகிறாள். அடுத்த நாள், அவள் வீட்டுக்கு சென்று "அன்று மட்டும் அவள் தன்னிடம் பேசியிருந்தால் இந்த பிரிவு வந்திருக்காது" என்கிறான். மாஷா ரவியை தேடி அவன் நிறுவனத்திற்கு செல்கிறாள். மீண்டும் அவர்களுக்குள் பழைய காதல் துளிர்விடுகிறது. மாஷா தன் கணவனுக்கு தெரியாமல் ரவியுடன் உறவு வைத்துக் கொள்கிறாள்.

மிஷ்ரா கல்கத்தாவில் இருந்து கேரளாவுக்கு வேலை மாற்றல் கிடைத்ததால், தன் மனைவி மாஷாவை அழைத்து செல்லப்போவதாக கூறுகிறான். மாஷா ரவி இழக்க விரும்பவில்லை. ஆனால், ரவி தன் மனைவிக்கும், தன்னை நம்பும் மிஷ்ராவையும் ஏமாற்ற முடியாமல் தடுமாறுகிறான். மிஷ்ரா, மாஷா வை ரயிலில் ஏற்றி விடும்போது, மாஷா கர்ப்பமாக இருப்பதை மிஷ்ரா சொல்லி சந்தோஷப்படுகிறான். ரவி தான் தவறு செய்துவிட்டோமோ என்று நினைத்து முடிப்பதற்குள் ரயில் அங்கிருந்து செல்கிறது.

மீண்டும் காலம் பயணிக்கிறது. நடுத்தர வயதில் ரவி, தீபா இரண்டு குழந்தைகளோடு இருக்க அவனை பார்க்க மிஷ்ரா வருகிறான். மிஷ்ரா தனக்கு மகன் பிறந்தான் என்றும், ஆனால் அந்த தனக்கு பிறக்கவில்லை என்றும் கூறுகிறான். தன் மனைவி இன்னொருத்தருடன் தொடர்பு வைத்திருந்ததால் அவளை விரட்டிட்டதாக கூறுகிறான். இவ்வளவு வருடம் கலித்து, தன்னை சந்திக்க வந்து “ஏதற்காக இதை சொல்ல வேண்டும்?” என்று ரவி கேட்க, மிஷ்ரா “ தவறு செய்த நீ மட்டும் எப்படி நிம்மதியாக இருக்க முடியும் ?” என்கிறான். மிஷ்ராவுக்கு எல்லா உண்மையும் தெரிந்திருக்கிறது அந்த வார்த்தைகளிலே தெரிந்துக் கொள்கிறான் ரவி. மீண்டும் மாஷாவை தேடி சிவன் கோயில், விபச்சார பகுதிகளுக்கு செல்கிறான். ஒரு வீட்டில் மாஷா, தன் மகனுடன் இருப்பதை பார்க்கிறான் ரவி. மாஷா ரவியை திட்டி அனுப்புகிறாள். தன் கையில் இருக்கும் பணத்தை மாஷாவின் வீட்டு ஜன்னலில் வைத்துவிட்டு ரவி செல்கிறான். மாஷா ரவி தேடி வருவதற்குள், ரவி சென்று விடுகிறான்.

கதை தற்காலத்திற்கு வருகிறது. முதியவனான ரவி தான் சிறுவயதில் வேலை செய்த நெசவு தொழிற்சாலைக்கு வருகிறான். அங்கு ஒரு சிறுமியை பார்க்கிறான். அவள் சிறுவயதில் பார்த்த மாஷாப் போல் இருக்கிறாள். அந்த சிறுமி தன் பாட்டிக்கு தண்ணீர் தருவதை பார்த்து, அந்த பாட்டி மாஷா என்று அடையாளம் கண்டுக் கொள்கிறான். கண்ணிழந்த முதிய வயதில் தன் மகன் இறந்ததையும், இவ்வளவு நாட்கள் கஷ்டப்பட்ட கதைகளை ரவியிடம் சொல்கிறாள். “நான் தான் ரவி” என்று சொல்ல முடியாமல் குற்றவுணர்ச்சியில் ரவி அங்கு விட்டு செல்கிறான். சிறுமி தன் பாட்டி வந்தது யார் என்று கேட்க, “அவர் தான் ரவி” என்கிறாள். ரவி செல்வதை சிறுமி பார்த்த மாதிரி படம் முடிகிறது.

ஒவ்வொரு காலக்கட்டங்களும் ஒவ்வொரு பகுதியை சிறுகதைகளாகவும், அதற்கு ஒரு முடிவும் வைத்து படத்தை அழகாக காட்சி அமைத்திருக்கிறார்கள். படத்தின் பின்னனி கல்கத்தாவில் நிகழ்வதால், ஆறுபது வருடங்கள் நகரத்தில் நிகழும் மாற்றங்கள் காட்சிப்படுத்திருக்கிறார் இயக்குனர் ப்ளோரின் கல்லேன்பெர்கர்.

ஜெர்மன் நாட்டை சேர்ந்த இவர் ஒரு ஆய்வுக்காக 2001ல் இந்தியா வந்தார். ஒன்றரை வருடம் கல்கத்தாவில் தங்கியிருந்த ப்ளோரின் அதன் பின்னனியில் இந்த காதல் கதையை எழுதினார். மற்றவர்கள் போல் இந்த கதையை ஆங்கிலத்தில் அவர் எடுக்க விரும்பவில்லை. பெங்காளி மற்றும் ஜெர்மன் மொழியில் எடுத்தார்.

2004ல் வெளியான இப்படம் பல ஐரோப்பா திரைப்பட நிகழ்வுகளில் திரையிடப்பட்டது. ஜெர்மன் திரைப்பட விருதுதான பெவேரியன் விருது இப்படத்திற்கு கிடைத்துள்ளது.

Tuesday, December 13, 2011

நான் பாரதியானால் !!

நான் பாரதியானால்
நடிகன் பிறந்தநாள் கொண்டாடும் இத்தினத்தில்
ஒரு நாள் தமிழுக்காக உழைக்கச் சொல்வேன் !

நான் பாரதியானால்
நெய்வேலி மின்சாரம் போல்
கடனாய் கொடுத்த வீரத்தை
மீண்டும் உடம்பில் பாய்ச்சிடுவேன் !



நான் பாரதியானால்
ஆறு ரீட்டர் பூகம்பம் தாங்காத கட்டிட நடுவில்
அணு உலை எழுப்புவதை தடுத்திடுவேன் !
தமிழன் அராய்ச்சி பொருளாய் மாறுவதை
வேடிக்கை பார்க்க மாட்டேன் !

நான் பாரதியானால்
நினைவுச் சின்னங்களாக இருக்கும் இடங்களை
மக்கள் நினைவலையில் பதியவைத்திருப்பேன் !

நான் பாரதியானால்
மக்கள் புரட்சி
ரஷ்ய, அரபு நாடுகளில் மட்டுமல்ல
தமிழனுக்கும் பொதுவென்று
உணர்த்தியிருப்பேன் !

நான் பாரதியானால்
தமிழனை தமிழனே வஞ்சிக்கும் சூழலில்
தமிழனுக்கு ஒரு நாட்டை உருவாக்கி தந்திருப்பேன் !

நான் பாரதியானால்
ஆடை குறைப்பில் போட்டிகள் நிறுத்தி
அறிவை வளர்க்கும் போட்டிகள் நட்த்துவேன் !
பொருட்காட்சியில் இருக்கும் தமிழ் பாரம்பரியத்தை
இன்று வரை வாழ வழி வகுத்திருப்பேன் !!

நான் பாரதியானால்
டாஸ்மார்க் அரசு நடத்துவதை நிறுத்தி
விவசாயத்தை அரசு நடத்தச் சொல்வேன் !
மூடு விழா மட்டும் அரங்கேரும் வேளையில்
திறப்பு விழா செய்ய அரசுக்கு கட்டளையிடுவேன் !

நான் பாரதியானால்
தமிழனை ‘தமிழன்’ என்று உணர வைப்பேன் !!

”நான் பாரதியானால்”
என்ற கற்பனைக்கு இங்கு முற்றுபுள்ளி வைக்கிறேன்
என் வீட்டுக்கு
ஆட்டோ அடியாட்கள் வரவிரும்பவில்லை
பைத்தியக்காரன் என்று
பகடி வார்த்தைகளை கேட்ட விரும்பவில்லை
இறுதியாக,
என் மரணத்திற்கு
பதினொரு பேர் வர விரும்பவில்லை

நான் நானாக இருக்கிறேன்
பாரதி என்றும் சரித்திரமாக இருக்கட்டும் !!



11.12.11 அன்று கன்னிமாரா நூலகத்தில் நம் உரத்தசிந்தனை அமைப்பு பாரதியார் பிறந்தநாளுக்காக நடத்திய கவியரங்கில் வாசித்த கவிதை. கவிதைக்கு ரூ.200/- பரிசு கிடைத்தது.

Thursday, December 8, 2011

கவிதை : தாலாட்டு

பிறந்த தினத்தில்
அம்மாவின் ஸ்பரிசத்தில்
கிடைத்தது முதல் தாலாட்டு !

நடைபயின்று
ஓடி விளையாடிய பிறகு
தாலாட்டு கேட்கவோ நேரமில்லை
தாலாட்டு பாடவோ தாயில்லை !

அழகான இயற்கைக்கு
ப்ளாஸ்டிக் ஆடை வேண்டாம் என்றேன்
வணிகர்கள் காதுக்கு தாலாட்டாய் கேட்டது !

உணர்ச்சிகள் பீரிட்டு
ஊழலுக்கு எதிராக குரல் ஏழிப்பேன்
ஊழல்வாதிகளுக்கு தாலாட்டாய் ஒலித்தது !

போபாலாக கூடாங்குளமாகி
விட கூடாது என்றேன்
விஞ்ஞானிகளின் காதுக்கு தாலாட்டாய் கேட்கிறது !

வெளிநாட்டில் வேலை செய்ய
விருப்பமில்லை என்றேன்
மேலாளருக்கு தாலாட்டாய் இருந்தது !

என் உணர்வுகள்
என் ஆதங்கம்
என் கோபம்
என் எண்ணம்
எல்லோருக்கும் தாலாட்டாய் கேட்கிறது !

என் இறுதி துக்கத்திற்கு
தாலாட்டு
யார் பாட போகிறார் ?

Monday, December 5, 2011

மரம் : ஹைக்கூ கவிதைகள் - 10

காடுகள் அழித்து
குடி வர வீடு கட்டினோம்
மழை வரவில்லை !

**

காகித கப்பல் செய்யும்
குழந்தைகளுக்கு தெரிவதில்லை
அது மரத்தின் எச்சமென்று !!

**

பணத்தை திங்க முடியாது
என்று உரைத்தது
பாலைவனத்தில் !

**

மரங்கள் வெட்டப்படுவது
நிறுத்தப்படும்
அதற்கு வாக்குரிமை அளித்தால் !

**

மரத்தின் மரணம்
பல உயிர்களை காத்தது
ஈழப்படகு !

Thursday, November 17, 2011

உலக சினிமா : The Isle

ஒரு மனிதனால் எவ்வளவு நேரம் தனிமையில் இருக்க முடியும் ? ஒரு மணி நேரம், இரண்டு... ஒரு நாள் ...!! அதன் பிறகு பேச்சு துணைக்கு ஆள் கிடைத்தால் அந்த ஆள்ளிடம் எவ்வளவு நேரம் பேசுவோம் என்று நமக்கே தெரியாது. தனிமையின் வலி நம்மை அதிக நேரம் பேச வைக்கிறது என்று தெரியாமல் பேசுவோம். அப்படி தனிமையின் வலி, அதனால் வரும் காமம், குரோதம் என்று சொல்லும் படம் தான் ‘The Isle’.

ஊமைப் பெண்ணான ஹீ-ஜின் மிதவை படகு விடுதி நடத்தி வருபவள். தன் விடுதிக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை வாங்கி வந்து கொடுப்பாள். பெண்கள் உட்பட. சில சமயம் இவளே வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்துவாள். தனிமை, மௌனம் இரண்டும் அவள் உடன் பிறந்த சகோதரிகளாக அவளுடன் வாழ்கிறது.



சட்டத்திடம் தப்பித்து ஹியூன் ஷிக் ஹீ-ஜின் விடுதியில் வந்து தங்குகிறான். கம்பிகளை வலைத்து பொம்மை செய்வதில் வல்லவன். அவன் தன் காதலியை கொன்றதை நினைத்து தூங்க முடியாமல் தவிக்கிறான். ஹியூன் ஷிக் அழுவதும், அவனுக்காக வைத்த உணவு சாப்பிடாமல் இருப்பதை பார்த்தும் ஹீ ஜின் அவனும் தன்னைப் போல் தனிமையில் வாடுவதை புரிந்துக் கொள்கிறாள். குற்ற உணர்வில் ஹியூன் ஷிக் தற்கொலைக்கு முயற்சிக்கும் போது ஹீ ஜின் காப்பாற்றுகிறாள். அவன் தனிமையை போக்க ஹீ-ஜின் விலைமாதுவை வர வழைக்கிறாள். ஹியூன் ஷிக் அவளிடம் உடல் சுகத்தை விட பேசவே விரும்பினான். விலைமாது பெண்ணுக்கு ஹியூன் ஷிக் கம்பிகளால் வலைத்து செய்த பொம்மை மிகவும் பிடிக்கிறது. அவனுடன் அதிக நேரம் இருக்க விரும்புகிறாள். இருவரும் பேசிக் கொண்டு இருக்கும் போது விலைமாதுவின் தரகன் அடித்து இழுத்து செல்கிறான்.

ஹியூன் ஷிக் தேடி காவலர்கள் வரும் போது, ஹியூன் ஷிக் மீண்டும் தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறான். மீன் பிடிக்கும் தூண்டிலை தொண்டையில் விழுங்கி இரத்த சொட்ட சொட்ட இறக்க நினைக்க, ஹீ-ஜின் மீண்டும் அவனை காப்பாற்றுகிறாள். அவனை காப்பாற்றிய பிறகு, அவனுடன் உறவுக் கொள்கிறாள் ஹீ-ஜின்.

அடுத்த நாள் விலைமாது ஹியூன் ஷிக் பார்க்க வருகிறாள். அன்று இரவு இருவரும் உடல் உறவு கொள்வதை ஹீ ஜின் மறைந்திருந்து பார்க்கிறாள். ஹியூன் ஷிக் விலைமாதுவுக்கு பணம் கொடுக்க, தான் விரும்பி வந்ததாக சொல்கிறாள். அவனிடம் இருந்து கம்பி பொம்மையை எடுத்துக் கொள்கிறாள். அந்த விலைமாது மீது ஹீ ஜின் பொறாமை ஒட்டிக் கொள்கிறது. அவளை அழைத்து கரைக்கு விட ஹீ ஜின் படகு செலுத்தாமல் இருக்கிறாள்.

ஒரு கட்டத்தில், ஹியூன் ஷிக் படகுக்கு செல்லாமல் வேறொரு படகு வீட்டுக்கு விலைமாதுவை அழைத்துச் சென்று கட்டி வைக்க, அதில் தப்பிக்க நினக்கும் போது விலைமாது இறக்கிறாள். அவளை தேடி வரும் தரகனும் ஹீ ஜின்னால் கொல்லப்படுகிறான். விலைமாது இல்லாத ஹியூன் ஷிக் தனிமையை பயன்படுத்தி ஹீஜின் அவனுடன் உறவுக் கொள்கிறாள்.

ஹீ ஜின் இரண்டு பேரைக் கொன்றது ஹியூன் ஷிக் தெரிய வர, அவன் படகு வீட்டை விட்டு செல்ல முயற்சிக்கிறான். ஆனால், ஹீ ஜின் அவனை செல்லவிடாமல் தடுகிறாள். ஹியூன் ஷிக் தண்ணீரில் விழுத்து நீந்திச் செல்கிறான். ஹியூன் ஷிக் தடுக்க மீன் தூண்டிலை தன் பெண் உருப்பில் சொருகிக் கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறாள். ஹீஜின் அலறல் சத்தம் கேட்டு ஹியூன் ஷிக் ஹீஜின்னை காப்பாற்றி அவள் பெண் உருப்பில் இருக்கும் தூண்டில் கம்பிகளை அகற்றுகிறான்.

அந்த படகு விடுதியில் தங்கி இருக்கும் பணக்காரரின் ரோலெக்ஸ் வாட்ச் தண்ணீரில் விழ, அதை எடுப்பதற்கு உள்ளூர் ஆட்களை அழைக்கிறான். அப்போது, விலைமாதுவின் உடலும், அவளது தரகனின் உடலும் எடுக்கப்படுகிறது. இதை பார்த்த ஹீ ஜின் தன் படகில் இருக்கும் மோட்டாரை படகு வீட்டில் மாட்டி இருவரும் தப்பி செல்கின்றனர். ஹியூன் ஷிக் தண்ணீரில் இருந்து வெளியே வர, படகில் ஹீ ஜின் நிர்வாணமாய் இறந்து இருப்பதோடு படம் முடிகிறது.

பலருக்கு இறுதி கட்டம் புரிந்துக் கொள்வது சற்று கடினமாக இருக்கும். நாயகன் தன் காதலியை கொன்றதுப் போல் ஹீஜின்னை கொன்று இருக்கலாம் அல்லது பெண் உருப்பில் காயம் பட்ட நாயகி இறந்திருக்கலாம். இந்த இரண்டு யூகங்களில், முதல் யூகத்திற்கு தான் அதிக வாய்ப்புள்ளது.



மென்மையான மனம் கொண்டவர்கள் இந்த படத்தை பார்ப்பதை தவிர்ப்பது நல்லது. சுயவதையை இந்த அளவுக்கு கொடூரமாக யோசிக்க முடியுமா என்று தெரியவில்லை. நாயகன், நாயகி இருவரும் தனிமையில் வாடும் போது தங்களை தாங்களே வருத்திக் கொள்கிறார்கள். நாயகன் தற்கொலை செய்துக் கொள்வதற்கு மீன் தூண்டிலை விழுங்குவதும், நாயகி தற்கொலை செய்துக் கொள்வதற்கு தன் பெண் உருப்பில் செழுத்துவதும் பார்ப்பவர்களால் ஜீரனிக்க முடியாத காட்சிகள்.

மீன்கள் பயன்படுத்தி எடுக்கப்பட்ட சில காட்சிகள் சிறப்பாக இருக்க நிஜ மீன்களை அதிகம் துன்பப்படுத்தியிருக்கிறார்கள். சில மீன்கள் இறந்தும் இருக்கின்றன.

கிம் கி டுக் இயக்கத்தை பாராட்டுவது அமெரிக்காவுக்கே ஆயுதம் வழங்குவது போன்றது. இயற்கையோடு தன் கதையை நடக்க விட்டுயிருக்கிறார். அமைதியான பெரிய ஏரி. அதற்குள் மிதக்கும் சின்னச் சின்ன மிதவை வீடுகள். அவற்றில் தங்கி ஓய்வெடுக்கும், மீன்பிடிக்கும் வாடிக்கையாளர்கள் என்று நம்மையும் கொண்டு சென்றுயிருக்கிறார்.

பொதுவாக, முடிவை பார்வையாளனுக்கு விடுவதில் குறும்படத்திற்கு நன்றாக இருக்கலாம். ஆனால், முழு நீள படத்திற்கு இறுதி கட்டத்தை பார்வையாளனுக்கு விட்டதில் இந்த படம் உள்ளூரில் சரியாக போகததிற்கு காரணம். ஆனால், வென்னிஸ் திரைப்பட விழாவில் பலரது பாராட்டுகளை பெற்றுள்ளது.

Wednesday, November 16, 2011

ஹைக்கூ கவிதைகள் - 9

வரி பணம் வீணாகும் போது
ஊழல் தவறில்லை தோன்றியது
அண்ணா நூலகம் !

**

இரண்டு மாதம்
ஒரு முறை சம்பள உயர்வு
பெட்ரோலுக்கு !

**

கட்டப்பட்ட மேம்பாலங்கள்
அஞ்சி நடுங்குகிறது
அடுத்தது நாமோ !!

**

தமிழில் காஞ்சிபுரம்
தெலுங்கில் குண்டூர்
‘ஏழாம் அறிவு’ போதிதர்மர் !

Thursday, November 3, 2011

அண்ணா நூலகம் !!



எல்லோரும் அண்ணா நூலகத்தைப் பற்றி எழுதி விட்டதால், என் கண்ணீரை மட்டும் இங்கு பதிவு செய்கிறேன்.

Wednesday, November 2, 2011

MKB நகரில் புத்தகக் கண்காட்சி

நாகரத்னா பதிப்பகம், We Can Books distributors மற்றும் முரண்களரி புத்தக நிலையம் இணைந்து நடத்தும் புத்தகக் கண்காட்சி.

இடம் : முரண்களரி புத்தக நிலையம்
ஆண்டாள் தையல் பயிற்சி மையம்
130, முதல் மாடி ( ஜானகி மகால் எதிரில்)
மகாகவி பாரதி நகர், சென்னை - 39


நேரம் : காலை 10 மணி முதல் இரண்வு 9 மணி வரை

கீழ் காணும் புத்தகங்கள் புத்தகக் கண்காட்சியில் இடம் பெறுகிறது.

1. நடைபாதை - குகன்
2. காந்தி வாழ்ந்த தேசம் - தொகுப்பு : குகன்
3. நீங்கதான் சாவி - சுரேகா
4. கலைஞரின் நினைவலைகள் 100 - தொகுப்பு : குகன்
5. கலாம் கண்ட கனவு - தொகுப்பு : குகன்
6. என்னை எழுதிய தேவதைக்கு - குகன்
7. உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி - கனியன் செல்வராஜ்
8. லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயண்
9. டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா
10. எனது கீதை - குகன்
11. 555 பொன்மொழிகள் – தொகுப்பு : சோலை தமிழினியன்
12. இரை தேடும் பறவை - கருவை ஷண்முகசுந்தரம்
13. சாமானியனின் கதை - என்.உலகநாதன்
14. வீணையடி நீ எனக்கு - என்.உலகநாதன்
15. மீண்டும் ஒரு காதல் கதை - சங்கர் நாராயண்
16. கொத்து பரோட்டா - சங்கர் நாராயண்
17. நாகம்மாள் - ஷண்முகசுந்தரம்
18. இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
19. தூரன் கட்டுரைகள் - தூரன்
20. பசியின் நிறம் வெள்ளை
21. கீதாரகஸ்யம்
22. வாழ்வும் தியானமும் - 'யோசன்' மோகன பாலகிருஷ்ணன்
23. இணையதளம் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
24. உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம் - சந்திரசேகரன்
25. பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி ? - சந்திரசேகரன்
26. வளமுடன் வாழ்வோம் வா - துருவன்
27. சிவபெருமானின் திருவிளையாடல்
28. புத்திர பாக்கியம் தரும் பரிகார தலங்கள்
29. எனது காத்திருப்பும் அவனின் கையசைப்பும்
30. மதுக்கடைகளை மூடு
31. நோய் தீர்க்கும் பாரம்பரிய வைத்தியம்
32. பாலபாரதி எழுத்து பயிற்சி – 1
33. பாலபாரதி எழுத்து பயிற்சி -2
34. பாலபாரதி எழுத்து பயிற்சி -3
35. பாலபாரதி எழுத்து பயிற்சி -4
36. பாலபாரதி எழுத்து பயிற்சி-5
37. அம்மன் பாடல்கள்
38. நினைவு திறன் வளர்த்தல் - பால சங்கரன்
39. தேர்வு செல்லும் மாணவர்களுக்கு - பால சங்கரன்
40. வள்ளுவர் காட்டும் வெற்றி நிர்வாகம் - பால சங்கரன்
41. சிந்திக்க வைக்கும் விடுகதைகள்
42. எம் மாணவனையும் பொன்னாக்கலாம்
43. மாணவர்களுக்கான யோகாசனங்கள்
44. புத்தி தரும் பஞ்சதந்திர கதைகள்
45. 10 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
46. 9 ஆம் வகுப்பு தமிழ் இலக்கணம்
47. படித்தவுடன் மனப்பாடம் - பால சங்கரன்

வட சென்னையில் புத்தக கடை இல்லை என்ற குறையை முரண்களரி புத்தக நிலையம் போக்கியுள்ளது. அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் வடசென்னை பகுதியில் இருப்பவர்கள் புத்தக நிலையத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

பெரம்பூர், வியாசர்பாடி, கண்ணதாசன் நகர், ரெட்டேரி போன்ற பகுதியில் இருப்பவர்கள் செல்லக்குடிய தொலைவில் தான் உள்ளது.

மேலும் விபரங்களுக்கு...

குகன் – 99404 48599
யாழினி முனுசாமி – 98413 74809

Thursday, October 20, 2011

முள்வலி : தொல். திருமாவளவன்

ஈழ நாடு மலர வேண்டும் என்று விரும்பிய கோட கோடி தமிழர்களில் நானும் ஒருவன். ஆயுத போராட்டம் சிறந்த வழி என்று எதிரிய நமக்கு உணர்த்திய பிறகு, அந்த பாதையில் ஈழம் மலரும் என்று இருந்தேன். 2009ல் தேர்தல் முடிவு அடுத்த ஐந்தாண்டுக்கான இந்திய வளர்ச்சியை கேள்விக்குறியாக்கியது போல், ஈழக் கனவையும் கேள்விக் குறியாக்கியது. பிரபாகரன் மீது எனக்கு சில விமர்சனங்கள் இருந்தாலும் அவரை தவிர்த்து ஈழத்தை தனியாக பார்க்க முடியாது என்பது நிதர்சன உண்மை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா ? இல்லையா ? என்ற விவாதத்தை தவிர்த்து அடுத்து மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.

அதே சமயம், ஈழத்தை வைத்து தமிழகத்தில் அரசியல் நடத்தும் எந்த ஒரு கட்சி (இந்த நூலின் ஆசிரியர் உட்பட) மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.

போருக்கு பிறகு இலங்கைக்கு சென்ற ஆறு பேர் கொண்ட குழுவில் திருமாவை தவிர வேறு யார் தகவல் சொன்னாலும் நம்பும் படியாக இருக்காது. காரணம், மற்ற ஐவர் காங்கிரஸ், தி.மு.க கட்சியினர். தங்கள் ஆட்சிக்கு பாதிக்க அளவில் தான் தகவல் வெளியே விடுவார்கள். இந்த நூலில் கூட, திருமா தி.மு.க வுடன் தனது உறவு பாதிக்க கூடாது என்பதில் கவனமாக வார்த்தைகளை பயன்படுத்தியிருக்கிறார்.



அதிகம் பேச வேண்டும் என்று நினைத்த இடத்தில் கூட்டம் முடிந்து விட்டதாக குழு தலைவர் டி.ஆர்.பாலு அறிவித்துள்ளார். திருமாவால் மாவட்ட ஆட்சியாளரை டி.ஆர்.பாலு கண்டித்துள்ளார். கலைஞரிடம் அதைப் பற்றி குறிப்பிடும் போது அவரை ‘டேரர்’ பாலு என்றே குறிப்பிட்டுள்ளார். கலைஞரும் நகைச்சுவை உணர்வுடனே எடுத்துக் கொண்டார்.
’போருக்கு பிறகு ஈழம்’ என்ற பதிவில் இந்த புத்தகம் இடம் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை . இதில் தகவல் மறைக்க பட்டிருக்கலாம். ஆனால், மிகைப்படுத்தி சொல்லப்பட்ட தாக தெரியவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இராம சம்பந்தன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரவூஸ் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்கள், ‘பிளாட்’ இயக்கத் தலைவர் சித்தார்த்தன், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கத் தலைவர் சிறீகரன் ஆகியோரையெல்லாம் 10-10-2009 அன்று மாலை ‘இந்தியா அவுஸ்’ என்ற தூதருக்கான இல்லத்தில் சந்தித்தோம். தனித்தனியே அந்த சந்திப்புகள் நடந்தன. தமிழினத்துக்கு இவ்வளவு பெரிய பாதிப்புகள் நேர்ந்துள்ள நிலையிலும், தமிழருக்கான இயக்கத் தலைவர்கள் நம்மை சந்திக்க ஒன்றாக வரவில்லையே என்று வருந்தினேன்.

என்ற திருமா மன வருத்தத்தோடு மூன்றாவது அத்தியாயம் தொடங்குகிறது. அவருக்கு மட்டுமல்ல, மிஞ்சிய உயிர்களை காப்பாற்ற நினைக்கும் அனைவருக்குமே இது வருத்தம் தரும். இவர்களது ஒற்றுமையின்மையில்லாமல் அகதி மீட்பு பணியில் கால தாமதம் ஏற்படலாம்.
பல இடங்களில் 2002, 2004ல் ஈழத்து வந்து சென்ற தன் பயண நினைவுகளை குறிப்பிடுகிறார். 2004 பயணத்திற்கும், 20009 பயணத்திற்கும் ஒரே வித்தியாசம், அன்று வரவேற்றது விடுதலை புலிகள், இன்று வரவேற்பவர் சிங்களவர்கள்.

சில முகாம்களை வீடியே பதிவு செய்வதை கண்டித்த போது அதை கவலைப்படாமல் படம் பிடித்தேன் என்கிறார். ஆனால், அதை ஊடகப்பார்வைக்கு கொடுக்கப்பட்டதா என்று இதுவரை தெரியவில்லை.

திருமா வீடியோ பதிவு செய்யும் போது, ஒரு பெரியவர் அவரிடம்,
”எங்களை வைத்து நீங்கள் அரசியல் பண்ணுகிறீர்கள். பிராந்திய நலனுக்காக எங்களைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறீர்கள். இந்தியாவும் உலக நாடுகளும் எங்களை ஏமாற்றிவிட்டன. நாங்கள் யாரும் புலிக்கொடி பிடித்தவர்கள் இல்லை. அப்பாவி சனங்கள் ! எங்களுக்குப் புலிச் சாயமில்லை. நான் சொல்லுவேன். திருமாவளவனுக்கு புலிச் சாயமுண்டு. புலிக்காக நீங்கள் இந்தியாவில் கொடி பிடிக்கிறவர், நாங்கள் அப்படியில்லை. ஆனாலும், எங்களை இப்படி முள்வேலிக்குள் ஏன் இந்த அரசாங்கம் அடைத்து வைத்துக் கொடுமை செய்கிறது. எங்களை எங்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள்; அது போதும் !”.

” எங்களுக்கு நம்பிக்கையில்லை. காங்கிரசும் தி.மு.கவும் ஒன்று போலத்தான் தெரிகிறது”

”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !”

”பாம்புக் கடியால் பல பேர் இறந்திருக்கிறார்கள். ஏராளமான அளவில் பாம்புகள் உள்ளன. கொசுக்கடியும் தாங்க முடியவில்லை”


தன் உள்ள குமுறலைக் கொட்டியுள்ளார் அந்த பெரியவர். முகாமில் உள்ளவர்கள் தங்கள் முகாமில் வசதியின்மை பற்றி குறிப்பிட்டும் போது அங்குள்ள அதிகாரிகள் பெரிதாக எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை.

ராஜபக்‌ஷேவுடன் சந்திப்பின் போது, இராணுவத்தைப் பற்றி பஷிலிடம் கேளுங்கள் என்றார். பஷில் குழு கேட்ட கேள்விகளுக்கு மழுப்பலான பதில் தான் அளித்திருக்கிறார். இவர்களிடம் என்றைக்கும் தெளிவான பதில் வராது என்பது நாம் அறிந்த்து என்றாலும், அழித்தவனிடம் சென்று தமிழர் பாதுகாப்பை பற்றி பேச வேண்டிய கட்டாயத்தில் இருப்பது மிகவும் வருத்ததுக்குரியது.

இந்த நூலை முடிக்கும் போது, ‘அண்ணன் இருக்கிறார்’, ‘ ஈழம் மலரும்’ என்ற நம்பிக்கை வார்த்தைகளில் முடிக்கிறார். இப்போது தேவை நம்பிக்கை வார்த்தையல்ல... இருக்கும் உயிர்களை காப்பாற்றும் செயல் திட்டங்கள். முகாமில் இருப்பவர்களுக்கான விடுதலை. அவர்களுக்கான வாழ்வாதாரம்.

முகாமில் ஒரு பெரியவர் திருமாவிடம், “”எங்கள் கை, காலை வைத்து நாங்கள் உழைத்துப் பிழைத்துக் கொள்வோம். எங்களை விட்டால் போதும். வேறொன்றுமே வேண்டாம். இப்படிக் கையேந்திப் பிழைக்க கேவலமாக இருக்கிறது !” என்றார்.

இந்த நிலைமை மாறினால் போதும்.


பக் : 142, விலை. ரூ.65/-
விகடன் பிரசுரம்,
757, அண்ணா சாலை,
சென்னை - 600 002

Wednesday, October 12, 2011

உடல் பயிற்சி செய்பவர்களுக்கு !!!

தினமும் தேக பயிற்சி, டயட், யோகா என்று தங்கள் உடல் மேல் அதிகம் அக்கரை செலுத்தும் நண்பர்களுக்காக வந்த மின்னஞ்சல். அனுப்பியவர் நாகேஷ்வர். அதன் தமிழாக்கம்.

**

தினமும் நடப்பதும், சைக்கிளில் செல்வதும் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அப்படியென்றால், எல்லா போஸ்ட்மென்களின் உடல் சீரும் சிறப்புமாகவும் இருக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க நீச்சல் அடிப்பது நல்லது. அப்படியென்றால், சுறா மீன் தினமும் நீந்திக் கொண்டு தான் இருக்கிறது. மீன், தண்ணீர் இரண்டையும் தவிர எதையும் சாப்பிடுவதில்லை. அப்படி ஏன் சுறா குண்டாக இருக்கிறது?

தினமும் ஓடினால் சக்கரை வியாதி குறையும் என்கிறார்கள். அதிகம் ஓடும் முயல் ஏன் 15 வருடங்கள் வாழ்கிறது?

ஆமை ஓடுவதில்லை. அதிகம் நடப்பதில்லை. எதுவுமே செய்வதில்லை. ஆனால், 450 வருடங்கள் வரை உயிருடன் இருக்கிறது.

**

மின்னஞ்சல் இத்தோடு முடிகிறது.

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......

உடல்பயிற்சிக்கு குட்பை !
உணவிற்கும், தூக்கத்திற்கும் ஹாய் ! ஹாய் !!

Monday, October 10, 2011

மன்மோகன் சிங்கும் , அன்னா ஹசாரேவும் – ஹைக்கூ பார்வை

இரண்டாவது சுதந்திரத்திற்கும்
இதுவரை ஆயுதங்களை நம்பவில்லை
அகிம்சை !

*

ஓய்வு பெற்ற பிறகும்
ஒயாமல் வேலை செய்கின்றனர்
மன்மோகனும், ஹசாரேவும் !

*

மக்களுக்காக உண்ணா விரதம்
மக்களை உண்ணும் மனிதன்
புது சோஷலிசம் !

**

வித்தியாசம்

ஒருவர் – மற்றவருக்காக உண்ணா விரதம் இருக்கிறார்.
இன்னொருவர் – மற்றவர் வார்த்தைகளை மட்டும் கேட்கிறார்.

**

எங்கோ படித்தது

ஊழல் செய்பவனுக்கு, எதிர்ப்பவனுக்கும்
ஒரே இடம்
திகார் ஜெயில் !

Friday, September 30, 2011

ஒரு நாடகம் அரங்கேறியது !!



2009ல் ரெஸிஷன் நேரத்தில் “ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?” என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் எழுதி பதிவிட்டிருந்தேன். அதை, சென்ற வருடம் எங்கள் அலுவலக 'Humour Club' க்காக அரங்கேற்றினோம்.

ஹோட்டல் முதலாளியாக வருவன் அடியேன் தான். ஹோட்டல் சரக்கு மாஸ்டராக சுஜய் நடித்தார். அவருடைய உடல் மொழி, டயலாக் டெலிவரி நாடகத்திற்கு மேலும் நகைச்சுவையுட்டியது.

பதிவியிடும் போது இல்லாத நகைச்சுவை வசனங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம். அதன் (சுமாரான) வீடியோ தற்போது தான் யூட்யூப்பின் ஏற்றினோம்.

நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும். நன்றி.

Tuesday, September 27, 2011

சுயமுன்னேற்ற நூலின் அவசியம்

ஒவ்வொரு புத்தக்க் கண்காட்சியிலும் அதிகமாக விற்பனையாகும் நூல் என்றால் ஜோதிடம், சமையல் என்பார்கள். ஆசிரியர் யாராக இருந்தாலும் இந்த இரண்டு பிரிவு நூல்களை வாங்கும் கூட்டம் இருந்துக் கொண்டு தான் இருக்கும். இந்த இரண்டை தவிர்த்து அடுத்து அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள் சுயமுன்னேற்றம் தான். குட்டி கதை, தன்னம்பிக்கை தரும் வரிகள், உத்வேகம் தரக்கூடிய தலைப்பு இருந்தால் போதும் சுயமுன்னேற்ற நூல்கள் விற்பனையாகிவிடும்.

ஒரு முறை ஆதிஷா, லக்கியிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது ஒரு நடிகர் சுயமுன்னேற்ற நூலை கடுமையாக சாடினார் என்பதை கூறிப்பிட்டார்கள். ”சுயமுன்னேற்ற நூல் எழுதுபவர்கள் எல்லோரும் என்ன சாதித்துவிட்டார்கள் ? பணம் சம்பாதிப்பது எப்படி ? என்று புத்தகம் போட்டு பணம் சம்பாதிக்க பார்க்கிறார்கள். புத்தகம் வாங்குபவன் அப்படியே தான் இருக்கிறான்” என்பதை அந்த நடிகர் குறிப்பிட்டதாக கூறினார். அப்போது அவரிடம் பதில் கூறும் நிலையில் இல்லை. ஆனால், அதற்கு பதில் இந்த கட்டுரையில் சொல்லியாக வேண்டும்.

வாழ்க்கையில் முன்னேறி அதிகம் பணம் சம்பாதித்தவர்கள் தான் சுயமுன்னேற்ற நூல் எழுத வேண்டும் என்றால் அம்பானி, பில் கேட்ஸ் மட்டுமே நூல் எழுத முடியும். ஆனால், அவர்கள் வாழ்க்கையை படித்து, அறிந்து எத்தனையோ பேர் தன்னம்பிக்கை வளர்த்திருக்கிறார்கள். அப்படி பலரது தன்னம்பிக்கை வளர்த்த அம்பானி, பில் கேட்ஸ் வாழ்க்கை வரலாற்றை எழுதிய ஆசிரியர் பங்கு இருப்பதை நாம் மறந்து விடக்கூடாது.

சுயமுன்னேற்ற நூல் எல்லாம் பேத்தல் என்று சொல்லும் அந்த நடிகர் எத்தனை வெற்றிகளை குவித்துவிட்டார். சோர்வு பெற்ற மனதிற்கு குடி, தற்கொலை என்று காட்டிலும் தன்னம்பிக்கை தரக் கூடிய சுயமுன்னேற்ற நூல்கள் மிகவும் நல்லது.

பொதுவாக, சுயமுன்னேற்ற நூல் ஒரு பொழுதுபோக்கு நூல் இல்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். பத்திரிகை செய்திப் போல் அல்லது சிறுகதை, நாவல் போல் பரபரப்பாக வாசிக்க முடியாது. வாசிக்கவும் கூடாது. தோல்வி அடைந்தவர்களுக்கு வெற்றி அவர்கள் காலடியில் ஒளிந்திருப்பதை காட்டுவது சுயமுன்னேற்ற நூலின் தலையாத கடமை.

உண்மையில், சுயமுன்னேற்ற நூலை வாசிக்கும் போது ஏற்கனவே நமக்கு தெரிந்து விஷயத்தை வாசிப்பது போல் தான் இருக்கும். புதிதாக இல்லாத ஒன்றுக்காக பணம் கொடுத்து புத்தகம் வாங்கினோம் என்று கூட தோன்றும். ஆனால், ஒன்று நாம் மறந்துவிடுகிறோம். இந்த புத்தகம் படிக்கும் வரை நமக்கு தெரிந்த விஷயம் ஏன் ஞாபகத்திற்கு வரவில்லை. ஒவ்வொரு வரியும் வாசிக்கும் போது நமக்கு தெரியாத புதுசா என்ன சொல்லிவிட்டான் ? என்ற எண்ணத்துடன் எந்த புத்தகத்தை அணுக்க கூடாது.

சுயமுன்னேற்ற நூல்களை நல்ல நண்பனாக அணுக வேண்டும். கருத்துக்கள் ஏற்றுக் கொள்கிறோமோ இல்லையோ முழுமையாக படித்துவிட வேண்டும். அதன் பிறகு அதற்கு எதிர்வாதங்கள், கேள்விகளும் கேட்கலாம். மன சோர்வு அடையும் போது தன்னம்பிகையுட்டும் நண்பர்கள் இருந்தால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள். அப்படி அமையாதவர்களுக்கு சுயமுன்னேற்ற நூல் ஒரு வரப்பிரசாதம்.

ஆரம்பக்காலத்தில் எனக்கு அதிகம் தன்னம்பிக்கைம் கொடுத்தது ‘You Can Win’ புத்தகம் தான். இதுவரை, நானே பதினைந்து பேருக்கு பரிசாக இந்த புத்தகத்தை கொடுத்திருக்கிறேன். இதை விட சிறந்த தன்னம்பிக்கை புத்தகங்கள் (Neopolean Hill, Richard Templar புத்தகங்கள்) பல இருந்தாலும், நான் தோல்வி விலும்பில் இருக்கிறேன் என்று நினைக்கும் போது ‘You Can Win’ புத்தகத்தை தான் வாசிப்பேன்.

ஒவ்வொரு பூஜையறையில் பகவத் கீதை, குரான், பைபிள் என்று இருப்பது போல் உங்கள் புத்தக அலமாரியில் உங்கள் விருப்பமான சுயமுன்னேற்ற நூல் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல் நல்லது மட்டும் சொல்லி, நல்லதே செய்யக் கூடிய நண்பர்கள் அமைவது கடினம். நல்ல சுயமுன்னேற்ற நூல்களை வாசிப்பது சுலபம். உங்கள் வாழ்க்கைக்கான விடை உங்களிடம் இருக்கிறது எனபதை உணர உதவுவது சுயமுன்னேற்ற புத்தகங்கள் தான்.

Tuesday, September 6, 2011

நாகரத்னா பதிப்பக இரண்டாம் ஆண்டு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் !

கவியரங்க அமர்வு

கனியம் செல்வராஜ், பாண்டி மு.வேலு, மாம்பலம் சந்திரசேகர், பாண்டுரங்கன், ’நம்ம ஊர்’ கோபிநாத், கோ.கணேஷ்





”கலாம் கண்ட கனவு” நூல் வெளியீடு

குகன், அரிமா இளங்கண்ணன்,அமுதா பாலகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், கார்முகிலோன், அரிமா ராசரத்னம், மோகன் பாலகிருஷ்ணன்





கலைஞரின் நினைவலைகள் - 100 நூல் வெளியீடு
குகன், அரிமா இளங்கண்ணன்,அமுதா பாலகிருஷ்ணன், மாம்பலம் சந்திரசேகர், கார்முகிலோன்




கேபிள் சங்கர் தனது ராயல்டி தொகையை அமுதா பாலகிருஷ்ணனிடம் இருந்து பெறுகிறார்



சுரேகா தனது ராயல்டி தொகையை அரிமா இளங்கண்ணனிடம் இருந்து பெறுகிறார்




கனியன் செல்வராஜ் தனது ராயல்டி தொகையை ’யோசன்’ மோகன் பாலகிருஷ்ணனிடம் இருந்து பெறுகிறார்



”யோசன்” மோகன் பாலகிருஷ்ணன்




சுரேகா




”கேபிள்” சங்கர்



குகன்

Monday, September 5, 2011

தினமணியில் நாகரத்னா பதிப்பகம் !



இன்று (5.9.11) தினமணியில் (சென்னை பதிப்பு), நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டாம் ஆண்டு விழாவின் பற்றிய புகைப்படம் மூன்றாவது பக்கத்தில் வெளிவந்துள்ளது. பார்க்கவும்.

நிகழ்ச்சிக்கு வருகை தந்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி !

நிகழ்வு குறித்த புகைப்படங்கள் விரைவில் பதிவேற்றப்படும்.

Friday, September 2, 2011

மங்காத்தா - விமர்சனம்



மூன் மூர்த்திகளில் இரண்டு மூர்த்திகள் ஒருவர் தயாரிக்க, இன்னொருவர் வெளியீட்டுயிருக்கும் படம் ‘மங்காத்தா’. ஆட்சி மாற்றத்தால் படம் இவ்வளவு நாள் வாங்க பயந்து ஒரு வழியாக வெளியீட்டுயிருக்கிறார்கள். இத்தனை போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றுயிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஐ.பி.எல் பைனல் மேட்ச் பிக்ஸ்க்காக மும்பையில் 500 கோடி வருவதை அறிந்த நான்கு பேர் கொள்ளை அடிக்க திட்டம் போட, இடையில் சஸ்பென்ஷனில் இருக்கும் போலீஸ் அஜித்தும் திட்டத்தில் சேர்ந்துக் கொள்கிறார். இதற்கு இடையில், அர்ஜூன் புக்கிங் பணத்தை கைப்பற்ற ஒரு குழுவோடு அலைகிறார். ஐந்து பேரும் கொள்ளை அடித்த பணத்தை பிரித்துக் கொண்டார்களா ? அர்ஜூன் அவர்களை கைது செய்தாரா ? என்பது தான் இரண்டாவது பாதி கதை.




அஜித்துக்கு நாயகன் வேஷத்தை விட வில்லன் வேஷம் தான் கச்சிதமாக பொருந்துகிறது. வாலி, வரலாறு, பில்லா என்று நெகட்டிவ் பாத்திரத்தில் பட்டை கலப்பியது போல் இதிலும் செய்திருக்கிறார். அதுவும் இடைவேளைக்கு முன்பு சேஸ் போர்ட் வைத்து தனியாக பேசும் காட்டி கொஞ்சம் நீளம் என்றாலும், சூப்பர். தல Rocks again.

மேட்ச் பிக்ஸ்சிங் புக்கர்ஸ்யை கைது செய்யும் போலீஸ் பாத்திரத்தில் அர்ஜூன். பழக்கமான வேடம் என்றாலும், இதில் கொஞ்சம் ஸ்டைலாக தெரிகிறார். அஜித்துக்கும், அர்ஜூனுக்கும் நடக்கும் கேட் அண்ட் மவுஸ் கேம் ரசிக்க முடிகிறது.

த்ரிஷாவுக்கு படத்தில் பெரிய வேலையில்லை. அஞ்சலி, அண்டிரினா வில்லன்கள் மிரட்ட பயன்பட்டிருக்கிறார்கள். மற்றப்படி லஷ்மி ராய் ஆட்டம் கொஞ்ச நேரம் திக்கமுக்கு ஆட வைக்கிறது.

ராபரி படம் என்றதும் முதல் பாது வேகமாக போகாமல் கொஞ்சம் மெதுவாக தான் போகிறது. இரண்டாவது பாதில், யார் யாரை டபுள் க்ராஸ் செய்கிறார்கள் என்ற காட்சியும், அடுத்து என்ன நடக்க போகிறது என்ற ஆர்வம் படத்தை வெற்றி பெற வைத்திருக்கிறது.

ஆடிப்பாரு மங்காத்தா, ஆடாம ஜெய்சோமடா பாடல்களை தவிர மற்ற எல்லா பாடல்களும் மொக்கை தான். பாடல்கள் நடுவில் அப்பா ட்யூனை சுட்டுயிருக்கிறார் யுவன்சங்கர்.

வழக்கம் போல் ஆங்கில படத்தை காபி அடித்து, தமிழுக்கு பொருந்துவது போல் படம் எடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. ஓசன் 11, இட்டாலியம் ஜாப் போன்ற படங்களை பார்த்தவர்கள் இந்த படம் பெரிய பாதிப்பு இருக்காது. தமிழ் படம் மட்டும் பார்ப்பவர்களுக்கு இது கண்டிப்பாக சூப்பர் படம்.



படத்தின் குறை என்று சொன்னால், நாற்பது வயது போலீஸ் ஆபிசரை எப்படி த்ரிஷா காதலித்தார் ? மும்பையில் நடப்பதாக கதை சொன்னாலும் முக்கிய பாத்திரங்கள் ஹிந்தி பேசவில்லை. இப்படி சின்ன ஓட்டைகள் இருந்தாலும் இரண்டாவது பாதியின் ‘ரேஸ்’ திரைக்கதையில் படம் போவதே தெரியவில்லை.

மங்காத்தா – New Game for Tamil movie

Tuesday, August 30, 2011

இரண்டாம் ஆண்டு விழாவின் அழைப்பிதழ் !



நாகரத்னா பதிப்பகத்தின்
இரண்டாம் ஆண்டு விழா
நூல் வெளியீட்டு மற்றும் அறிமுக விழா
எழுத்தாளர்களுக்கு விருது வழங்கும் விழா

இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை
நேரம் : காலை 10 மணிக்கு (செப்டம்பர் 4,2011)

தமிழ் தாய் வாழ்த்து : திரு. வரதராஜன் மற்றும் திருமதி. சாந்தா வரதராஜன்

வரவேற்புரை : தொலைப்பேசி மீரான்

தலைமை தாங்கி நூல் வெளியீடுபவர் : 'மாம்பலம்' சந்திரசேகர், Chairman, Chandra Builders

எழுத்தாளர்களுக்கு விருது வழங்குபவர் : திரு. சுகுமார், Properitor, Anush Furniture

வெளியிட்டு விழா

குகன் தொகுத்த 'கலைஞரின் நினைவலைகள் 100'
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கருணாகரன், ex-partner Anand Theatre
குகன் தொகுத்த கலாம் கண்ட கனவு’ (கவிதைத் தொகுப்பு)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : கார்முகிலோன்

நூல் அறிமுகம் மற்றும் விருது வழங்கும் விழா

சங்கர் நாராயண் எழுதிய லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அமுதா பலகிருஷ்ணன், Chairman, Amutha Matriculation school

பரிசல் கிருஷ்ணா எழுதிய ‘டைரிக் குறிப்பும் காதல் மறுப்பும்’ ( சிறுகதை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா ராசரத்தினம்

சுரேகா எழுதிய ‘நீங்கதான் சாவி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : அரிமா இளங்கண்ணன்

கனியன் செல்வராஜ் எழுதிய ‘உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி’ ( சுயமுன்னேற்ற கட்டுரை)
நூல் முதல் பிரதி பெற்று உரையாற்றுபவர் : டாக்டர். மோகன பாலகிருஷ்ணன், Yozen mind

ஏற்புரை : குகன்

நன்றியுரை : சங்கர் நாராயண் (‘cable’ சங்கர்)

நிகழ்ச்சி தொகுப்பாளர் : சுரேகா

Wednesday, August 17, 2011

போஸ்டர் - குறும்பட விமர்சனம்

நாளைய இயக்குனர் - 2 ல் பார்த்து ரசித்து சிரித்த படம். குறும் படம் என்றால் கருத்து சொல்ல வேண்டும், நீதி இருக்க வேண்டும், நெஞ்சை வருட வேண்டும் போன்ற எழுதப்படாத விதிகளை தகர்த்த படம்.

சிறுகதை, நாவலை வாசித்தவர்கள் திரையில் படமாக பார்க்கும் போது படத்தை எடுத்தவர்களை திட்டாமல் இருக்க மாட்டார்கள். வாசிக்கும் போது கொடுத்த அனுபவம் காட்சிப்படுத்தும் போது இயக்குனர் தவறிவிட்டார் என்பது தான் பலரது விமர்சனமாக இருக்கும். ஆனால், "போஸ்டர்" சிறுகதையை வாசித்த பிறகு குறும்படமாய் பார்க்கும் போது வாசித்த அனுபவத்தை விட திரையில் பார்த்த அனுபவம் சிறப்பாக இருந்தது. இன்னும், சொல்லப் போனால் வாசிக்கும் போது கிடைக்காத நகைச்சுவை உணர்வு, நடிகரின் உடல் மொழியில் சிரிப்பு வர வழைத்தது.

"பட்டப்பகலில் ஒன்றாவது மெயின் ரோட்டில் விபச்சாரம் செய்யும் சாந்தியே உன்னை தட்டிக் கேட்க ஆளில்லையா?" என்ற போஸ்டரை காவல்துறையினர் கிழிப்பது போல் படம் தொடங்குகிறது. பொது இடத்தில், அதுவும் தன் கட்டுப்பாட்டில் இருக்கும் இடத்தில் இப்படி ஒரு போஸ்டர் ஓட்டியிருப்பது பத்திரிகைக்காரர்களுக்கு தெரிந்தால் தன் வேலைக்கு வெட்டு வந்து விடும் என்று பயப்படுகிறான் இன்ஸ்பெக்டர் சாமிநாதன். பயந்த மாதிரி மேலிடத்தில் இருந்து விசாரிக்க சொல்லி அழுத்தம் வருகிறது.

அதே சமயம், ஒரு பெரிய வீட்டில் வயதான பெண்மனி சாந்தி தன் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கற்புற ஆராதனை காட்டுகிறாள். வேலை செய்பவனிடம் தெலுங்கில் தன் வாடிக்கையாளரிடம் புது பெண் வந்திருப்பதை சொல்ல சொல்லுகிறாள்.

சாமிநாதன் அந்த ஏரியாவில் போஸ்டர் ஒட்டுபவர்களை விசாரிக்கிறான். அதில் ஒருவன், "போஸ்டர் ஓட்டியது எங்க ஆளே இருக்க மாட்டான்" என்பதை தீற்கமாக சொல்லுகிறான். தங்கள் ஆட்கள் ஒட்டியிருந்தால் போலீஸால் இவ்வளவு விரைவில் எல்லா போஸ்டர்களையும் அப்புறப்படுத்தியிருக்க முடியாது என்கிறான்.

விபச்சார விடுதியில் இருப்பவன் தன் வாடிக்கையாளருக்கு போன் போடுவதற்கு பதிலாக குடிப்போதையில் காவல்துறைக்கு போன் போட்டு விலாசமும் சொல்லுக்கிறான். காவல்துறையினர் அவர்களை கைது செய்கிறது.

உண்மையில் இந்த போஸ்டர் ஒட்டியது யார் என்பதை குறும்படத்தில் பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

இணைய எழுத்தாளர் சங்கர் நாராயண் எழுதிய "லெமன் ட்ரீயும் இரண்டு ஷாட் டக்கீலாவும்" என்ற சிறுகதை தொகுப்பில் இருந்து இயக்குனர் ரவிகுமார் இயக்கியுள்ளார். இந்த சிறுகதைக்கு கதை எழுத்திய எழுத்தாளரே திரைகதை அமைத்திருப்பது கூடுதல் சிறப்பு.





(நன்றி : ஆகஸ்ட்,2011, பொதிகை மின்னல் - மாத இதழ்)

Tuesday, August 16, 2011

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

மனித வளம் மற்றும் சுயமுன்னேற்ற பயிற்சி நிறுவனமான Vision Unlimited தனது மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ஒரு நாள் கருத்தரங்கத்தை ஹோட்டல் சவேராவில் வரும் 20ஆம் தேதி,ஆகஸ்ட் அன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

நினைப்பது முடியும் – ஒரு நாள் கருத்தரங்கம்

Self Concept – Focus in Life
புது வரம் நீ உனக்கு

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் ’ Vision Unlimited’ நிறுவனத்தின் தலைவர் டாக்டர். பாலசாண்டில்யன்

Enhancing & Empowering Personality
தொடங்கட்டும் ஒரு மகிழ்ச்சிப் பயணம்

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு. லேனா தமிழ்வாணன்

Work Life Balance
பெரிய பூட்டு சின்ன சாவி

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் கே.சுமதி, வழக்கறிஞர்

It’s now or never !
நாளை எனும் நம்பிக்கை

- என்ற தலைப்பில் பேசவிருப்பவர் திரு.உதய சான்றோன்


ரூ.3000/- மதிப்புள்ள் இந்த ஒரு நாள் கருத்தரங்கம் ரூ.1200/- க்கு தரவிருக்கிறார்கள். இதில், ரூ.600 மதிப்புள்ள சவேரா ஹோட்டல் உணவு, சிற்றுண்டி, தேநீர் மற்றும் ரூ.600 மதிப்புள்ள பயிற்சி பொருட்கள் வழங்கவிருக்கிறார்கள்.


விருப்பமுள்ள நண்பர்கள் Vision Unlimited த்தின் தலைவர் திரு. பாலசாண்டில்யன் – 9840027810 மற்றும் உதய சான்றோன் – 91711 71473 தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல் : balasandilyan@yahoo.com
இணையம் : www.visionunlimited.in

Friday, August 12, 2011

We Can books – புத்தக புது வரவுகள்

பூமணி – கதை 1 களம் 10
ம.காமுத்திரை



நல்லதண்ணிக் கிண்றுக்காக திருப்பூர் தமிழ் சங்க விருது, ’மில்’ நாவலுக்காக 2010ல் சுஜாதா விருதுப் பெற்ற
ம.காமுத்திரையின் அடுத்த படைப்பு. ஒரே கதையை பத்து களத்தில் எழுதி சிறுகதையாக தொகுத்துள்ளார்.

**

சதுரங்கப்பட்டணம்
ம.ந.ராமசாமி
பக்.144, ரூ.70



யுகமாயினி இலக்கிய மாத இதழ் நடத்திய அமரர் நகுலன் நினைவுப் போட்டியில் பரிசு பெற்ற நாவல்.

**
1999-ன் சிறந்த சிறுகதைகள்
தொகுப்பு : எஸ்.ஷங்கர்நாராயணன்
பக்:144, ரூ.40/-



2000ல் பதிப்பித்த புத்தகம். பா.ரா, பாரதிபாலன், கந்தர்வன், தேவகாந்தன், நீல. பத்மநாபன், வெ.சுப்பிரமணிய பாரதி, பாலு சத்யா போன்ற எழுத்தாளர்கள் 99ல் எழுதிய சிறுகதைகளை எஸ்.ஷங்கர்நாராயணன் தொகுத்துள்ளார்.

**
நாகம்மாள்
ஆர். சண்முகசுந்தரம்
பல்:128, விலை : 55/-



1942இல் வெளியான இந்நாவல்தான் வட்டார நாவல் வகையைத் தொடங்கி வைத்தது. கொங்கு தமிழில், தனித்தன்மை வாய்ந்த மொழி நடையில் உணர்ச்சிகளைக் கலந்து படைக்கப்பட்டது நாகம்மாள். எழுபது ஆண்டுக்கு முந்தைய கிராம வாழ்வை அழகுற விவரிக்கும் நாகம்மாள் நாவலின் தொடக்கமும் முடிவும் தனித்தன்மை வாய்ந்தவை. கல்லூரியில் பாடத்திட்டமாக வைக்க ஏற்ற நூல்.

**
தூரன் கட்டுரைகள்
பெ. தூரன்
பல்:80, விலை : 50/-
பெரியசாமி தூரன் அவர்களின் தேர்ந்தெடுத்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். கல்லூரி மாணவர்களுக்கு பாட நூலாக வைக்க ஏற்ற நூல்.

**
பகவத் கீதை யெனும் கீதாரகஸ்யம்
இரா.பொன்னாண்டான்
பல்:256, விலை : 100/-



பகவத் கீதை உபதேசிக்கப்பட்ட காலத்தின் பின்னாலிலிருந்து இந்நாள் வரை நமது மதிப்பிற்குரிய முனிவர்கள், ஆன்ம ஞானிகள், மகான்கள், பெரியோர்கள், பண்டிதர்கள், ஆசிரியர்கள், சொற்பொழிவாளர்கள் இன்னும் பிற அறிஞர்கள் எல்லோருமே நமக்கு உபதேசிக்கும் அனைத்து வாழ்வியல் சிந்தனைகளும் கண்ணனின் கீதையிலிருந்து எடுக்கப்பட்டவைகளே. வடிவங்கள் வேறாக இருக்கலாம். மூலவஸ்து அதுதான். நமது ஒவ்வொரு இல்லத்திலும் இருக்க வேண்டிய அருமையான நூல் இது. இந்த நூலை குழந்தைப் பருவம் தொடங்கி வயோதிகர் வரை ஐயமற படித்துத் தெளியலாம். அவ்வாறு கற்றால் நமது சமூகம் மேன்மையுறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

**
உங்கள் இணையதளத்தை நீங்களே உருவாக்கலாம்
விலை - ரூ.50

பங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

இணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி?
விலை - ரூ.50

சுவையான 100 இணையதளங்கள்
விலை - ரூ.60

இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்
விலை - ரூ.60

மற்றும்




ழ பதிப்பக புத்தகங்களின் விற்பனை உரிமையும் பெற்றுள்ளது.

****

புத்தகம் வாங்க விருப்பமுள்ளவர்கள் nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சலுக்கு தங்கள் பட்டியலை அனுப்பவும் அல்லது 9940448599 என்ற தொடர்பு கொள்ளவும்.

Wednesday, August 10, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா !

வணக்கம்,

சுரேகாவின் “ நீங்கதான் சாவி”, கனியன் செல்வராஜ்ஜின் “உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி” நூல்களுக்கு பிறகு நாகரத்னா பதிப்பகம் தனது அடுத்த நூல்களை வெளியீட உள்ளது.


கலைஞரின் நினைவலைகள் 100
பக் :64, ரூ.35/-)

கலைஞர் அவர்கள் மேடை பேச்சு, பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தது, அவ்ரது திரைப்பட குறிப்புகள், அவரது நகைச்சுவை நயம் என்று 100 தகவல்களை தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளோம். முடிந்த வரையில் அரசியல் கலக்காமல் அவரது குறிப்புகளை சேகரித்துள்ளோம்.

கலைஞர் அவர்கள் பதவியில் இருக்கும் போது வெளியிட்டு இருந்தால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்று சில நண்பர்கள் கூறினர். ஆனால், அவர் பதவியில் இல்லாத இந்த சமயத்தில் நூல் வருவது சரியான தருணம் என்று எங்களுக்கு தோன்றியது.

( எட்டு மாதங்களாக என் பதிவில் இடது இடம் பக்கம் இருந்த நூலின் அட்டை படம் இப்போது நூலாக கொண்டு வர முடிந்தது.)

கலாம் கண்ட கனவு
(பக் :64, ரூ.35/-)

45 கவிஞர்கள் கலாமைப் பற்றியும், இந்திய தேசத்தைப் பற்றியும், இளைஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைத் தொகுப்பு. இந்த புத்தகத்தில் பதிவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது சற்று வருத்தம் தான். ஆனால், எங்கள் முந்தைய தொகுப்பு நூலை விட மிக சிறப்பாக வடிவமைத்து வந்துள்ளது.

இரண்டு நூல் வெளியீட்டு விழாவோடு இல்லாமல் நாகரத்னா பதிப்பகத்தில் எழுதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. அவர்களது நூலின் அறிமுக நிகழ்ச்சியும் நடைப்பெற இருக்கிறது.

தேதி : 4.9.2011, காலை 10 மணிக்கு
இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை.


வெளியிடுபவர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

Thursday, July 28, 2011

நியாயமான முடிவு ?

ஒரு கிராமத்தில் இரண்டு ரயில் தண்டவாளம் இருக்கிறது. முதல் தண்டவாளம் பழுதடைந்து, இயங்கப்படாமல் இருக்கிறது. மற்றொன்று சீராக இயங்கிக் கொண்டு இருக்கிறது. தினமும் ரயில் இரண்டாவது தண்டவாளத்தில் தான் வந்து செல்லும்.

கூட்டமாக நான்கு குழந்தைகள் ரயில் வே தண்டவாளத்தில் விளையாட வருகிறார்கள். ஒரு குழந்தை பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடலாம் என்று சொல்ல, மற்ற மூன்று குழந்தைகள் மறுத்ததோடு இல்லாமல் இயங்கிக் கொண்டு இருக்கும் தண்டவாளத்தில் விளையாட செல்கிறார்கள். முதல் குழந்தை மட்டும் இயங்கும் தண்டவாளத்தில் விளையாட பயந்து, பழுதடைந்த தண்டவாளத்தில் விளையாடுகிறது.



குழந்தைகள் அழகாக சிரித்து விளையாடிக் கொண்டு இருக்கும் போது ரயில் ஒன்று வேகமாக வருகிறது. விளையாடிக் கொண்டு இருக்கும் மூன்று சிறுவர்களும் ரயில் வருவதை கவனிக்கவில்லை. அடுத்த தண்டவாளத்தில் தனியாக இருக்கும் சிறுவனும் ரயில் வருவதை பார்க்கவில்லை. ரயில் வேகமாக மூன்று சிறுவர்களை நோக்கி வந்துக் கொண்டு இருக்கிறது.

அந்த சமயத்தில் நீங்கள் அங்கு வருகிறீர்கள். வேகமாக வரும் ரயிலை பக்கத்து தண்டவாளத்தில் மாற்ற வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி செய்தால் தனியாக இருக்கும் சிறுவன் இறந்து விடுவான். எதுவும் செய்யவில்லை என்றால் மூன்று சிறுவர்கள் இறந்துவிடுவார்கள். இப்போது, மூன்று சிறுவர்களை காப்பாற்ற நினைப்பீர்களா ? ரயில் போகட்டும் என்று சும்மா இருப்பீர்களா ?

என்ன முடிவு நீங்கள் எடுப்பீர்கள் ??

மூன்று சிறுவர்கள் உயிரை கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு சிறுவன் உயிர் பெரியதில்லை. ஒரு சிறுவன் உயிர் போனாலும் மூன்று சிறுவர்களை காப்பாற்றுவேன் என்று பலர் பதில் அளிப்பார்கள். நானும் அப்படிதான் பதிலளித்தேன். ஆனால், அது தவறான முடிவு.

அஜாக்கிரதையாக ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்களுக்காக பாதுகாப்பாக விளையாடும் சிறுவனை எப்படி நாம் பலிக் கொடுக்க முடியும் ? ஆபத்தான தண்டவாளத்தில் விளையாடியது அந்த மூன்று சிறுவர்களின் தவறு. அதற்கான தண்டனை மரணம் என்றால் அதை அவர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். இரண்டாவது தண்டவாளம் பழுதடைந்து இயங்கப்படாமல் இருக்கிறது. மூன்று சிறுவர்களை காப்பாற்றும் முயற்சியில் ரயில் பாதையை மாற்றினால், ரயிலில் வரும் நூறு பேர் உயிர்களுக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பார்கள்.

மூன்று முட்டாள் சிறுவர்களுக்காக ஒரு சிறுவனை பலிக் கொடுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. ரயில் இயங்கும் தண்டவாளத்தில் விளையாடும் சிறுவர்கள் ரயில் எந்த நேரமும் வரலாம் என்பதை அறிந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது அவர்களின் பொறுப்பு.

இந்த நிகழ்ச்சியில் மட்டுமல்ல... ஒரு அலுவகத்திலும், அரசியலிலும், நாட்டிலும் பெரும்பான்மையில் லாபத்திற்காக சிறுபான்மை நசுக்கப்படுகிறார்கள் இல்லையென்றால் தண்டிக்கப்படுகிறார்கள். எந்த பக்கம் நியாயம் இருக்கிறது என்று அலசப்படுவதில்லை.

**

மின்னஞ்சல் அனுப்பிய நண்பர் தங்கரங்கனுக்கு நன்றி :)

Monday, July 25, 2011

காதல் கவிதைகள் !

உன்னை வெற்றிக் கொள்ள
என் படைகள் திணறுதடி
நாம் சதுரங்கம் விளையாடும் போது !

*

உன் ஒவ்வொரு குறுந்தகவலும்
உன் விரல் ஸ்பரிசத்தை கொடுக்கிறது
உன் ஒவ்வொரு அழைப்பும்
பிரிவின் சுகத்தை மறக்க வைக்கிறது !

*

பல புத்தகங்களை படித்த
மனநிறைவு கொடுக்கிறாய்
உன்னிடம் பேசும் போது !

*

உன்னிடம் பேசிப் பழகும் போது
கடவுளுக்கு ‘நன்றி’ சொல்லி
ஆத்திகனாகிறேன் !
சண்டையிட்டு பிரியும் போது
கடவுளை மறுத்து பேசும்
நாத்திகனாகிறேன் !

*

நீ கொடுக்கும்
சக்கரையில்லாத தேநீரை
சுவைத்து குடிக்கிறேன்
உன் புன்னகையில்
அரைகிலோ சக்கரை இருப்பதால் !

Wednesday, July 20, 2011

ஓர் எழுத்து ஒரு சொல் !

ஒரு எழுத்து தனியாக நின்று ஒரு சொல்லாகுமானால் அந்த எழுத்து ஒரெழுத்து ஒரு சொல் ( அல்லது) ஒரெழுத்து ஒரு மொழி என்பார்கள்.

ஈ, மை, நீ, கை, கோ, வா, பூ, போ, பை போன்ற ஒரெழுத்து ஒரு சொல்லை பேச்சு வழக்கில் நாம் பயன்ப்படுத்துவோம். ஆனால், தமிழில் நாற்பத்தி இரண்டு எழுத்துக்கள் ஒரெழுத்து ஒரு சொல் உள்ளது.

ஒரு எழுத்து சொல்லாகி தருகிற அர்த்தங்களோடு பார்ப்போம்.

ஆ - பசு
ஈ - பறவை
ஊ - இறைச்சி
ஏ - கணை
ஐ - தலைவன்
ஓ - வியப்பு
மா - பெரிய
மீ - மேல்
மூ - மூப்பு
மே - மேன்மை
மை - இருள்
மோ - மோதுதல்
தா - கொடு
தீ - நெருப்பு
தூ - தூய்மை
தே - தெய்வம்
தை - மாதம்
சா - சாதல்
சீ - இலக்குமி
சே - எருது
சோ - மதில்
பா - பாட்டு
பூ - மலர்
பே - நுரை
பை - பசுமை
போ - செல்
நா - நாக்கு
நீ - முன்னால் இருப்பவர்
நே - அருள்
நை - இகழ்ச்சியை குறிப்பத்து
நோ - வலி
கா - பாதுகாப்பு
கூ - வெல்
கை - ஒப்பணை
கோ - அரசன்
வீ - மலர்
வை - வைக்கோல்
வௌ - கைப்பற்றுதல்
யா - கட்டுதல்
நொ - துன்பம்
து - உணவு

இந்த அனைத்து ஓர் எழுத்து சொற்களையும் கவனித்தீர்களானால் ஓர் ஆச்சர்யம் உங்களுக்குத் தெரியும்.இவற்றில் நொ,து,என்ற இரண்டு எழுத்துக்கள் மட்டும் தான் குறில் என்கிற குறைந்த கால அளவுடைய எழுத்துக்கள்.மற்றவை எல்லாம் நீண்ட ஒலி அளவுடைய நெடில்கள் என்பதுதான் அந்த ஆச்சிர்யம்.

Tuesday, June 21, 2011

கவிதை உலகம் – ஓர் எதிர்வினை



வணக்கம்.

என் 65வது வயது (8.6.11) அன்று உரத்தசிந்தனையாளர்கள் ‘கவிதை உலகம்’ எனும் நூல் பரிசளித்து அகமகிழ்ந்தனர். நூலை ஆழ்ந்து படித்துப் பார்த்தேன். சிறந்த தலைப்பு, தலைப்புக்கேற்ற முகப்போவியம், நூல் நேர்த்தி ஆகியன சிறப்புடையன.

சில இலக்கணப்பிழைகள் தவிர, இலக்கிய நோக்கில் படைப்பு மிக அருமை.

குறிப்பாக ”மணம் வீசும் மலர்கள்” கவிதை நல்கிய செல்வன். து.செ. கவியரசின் படைப்பு என்னை மிகவும் ஈர்த்தது. அந்த மலர் “பாரதி கோட்டுக்கு ரோஜா ! மேலும் மேலும் ஊக்குவிக்கப்பட்டு, பெருவெளிச்சம் காட்டப்பட வேண்டிய விளக்கு... “கனவு பலிக்குமா !” (அமுதா பாலகிருஷ்ணன்), தமிழன் கவிதைகள், வெகு நேர்த்தி !

தாய்மை காப்போம்” (அ.காசி) , “காகித ஆசை” (பி.காமகோடி), “என தருமை யாருக்கும் தெரியவில்லை” (புதுயுகன்), இம் மூன்றில் முன்னது பண்பட்ட கவிதை. மற்றிரெண்டில் புதிய கோணங்கள். மூன்றும் முழுமையான படைப்புகள். முதலைந்து ஹைக்கூக்கள், திரு. பிரதீப் பாண்டியனது நேர்த்திக் கோர்வைகள்.

பல படைப்புகளில் தனித்துவம் இருக்கின்றன. ஒரே சாயலில், இரு கவிதைகள் இல்லவே இல்லை.

மேன்மேலும் கவிதை உலகுக்கு காரியம் ஆற்றுங்கள், கருமமே கண் என; யுக கவிஞன் பாரதி, ஆசி தருவான் வாரிவாரி !!

இத்தயாரிப்பில் சம்பந்தப்பட்ட அனைத்து கவிஞர்களுக்கும், ஏனைய பிற பங்கேற்பாளர்களுக்கும், நலம் நாளும் தர வேண்டி அரங்கன் அரண்மையில் என் அன்புத் தொழுகைகள்.

வாழிய நலம்.
பேரன்புடன்,

வை.முத்துகிருஷ்ணன்.
எழுத்தாளர் & பாடலாசிரியர்
திருச்சி – 620 006.

**

நூல் வாங்க.... இங்கே.

Monday, June 20, 2011

அவன் – இவன் எங்கே இருக்காங்க ??



பாலாப போல் படம் எடுக்க ஆசைப்பட்டு யாரோ ஒரு இயக்குனர் இயக்கியது போல் உள்ளது. இயற்கை காட்சிகள் நிறம்பிய இடம், அதை ஓட்டிய காட்சிகள், இடையில் கொஞ்சம் நகைச்சுவை, செண்டிமெண்ட், இறுதி காட்சியில் மரணம், சோகம்... எல்லாம் பாலா டெம்ளேட் தான். ஆனால், பாலா டச் இந்த படத்தில் இருப்பதாக தெரியவில்லை.

திருட்டு தொழில் செய்யும் குடும்பத்தில் இரண்டு தாரத்திற்கு பிறந்த இரண்டு மகன் தான் நாயகர்கள். முதல் தாரத்திற்கு பிறந்தவன் ஒண்டரை கண் விஷால். இரண்டாவது தாரத்திற்கு பிறந்தவன் ஆரியா. இவர்கள் குடும்பத்தில் ஒருவனாக பலகிவரும் பணக்கார ஜமீன் பெரியவர் ஐரிஸ். தன் வயதுக்கு மீறி ஆரியா, விஷாலிடம் நண்பனாக பழகுகிறார். ஒரு கட்டத்தில் வில்லன் ஆர்.கேவால் ஐரிஸ் கொலைச் செய்யப்பட, விஷால், ஆரியா என்ன செய்கிறார்கள் என்பது மீதி கதை.



பொதுவாக பாலா படத்தில் நாயகன் இறக்க வேண்டும். அல்லது நாயகி இறக்க வேண்டும். இந்த படத்தில் இரண்டுமில்லாமல் பெரியவர் ஐரிஸ் இறக்கிறார். அவரை நிர்வாணப்படுத்தி கொலைச் செய்யும் காட்சி முகம் சுழிக்க வைக்கிறது தவிர, அந்த பாத்திரத்தின் மீது இயல்பாக வர வேண்டிய பரிதாபம் எதுவும் வரவில்லை.

இடைவேளை வரை படம் எதை நோக்கி செல்கிறது என்று கூட தெரியவில்லை. பாடல்கள் இளையராஜா கைக் கொடுத்த அளவிற்கு கூட யுவன்சங்கர் பாலாவுக்கு கைக் கொடுக்கவில்லை.



நாயகர்களை அதிகம் பெண்டு எடுக்கும் பாலா அதையும் முழுதாக செய்யவில்லை.

ஆரியா விஷாலை கேலி செய்யவும், அம்மாவுடன் ஆட்டம் போடவும், குடிக்கவும் மட்டுமே செய்திருக்கிறார். சூர்யா முன் நடித்துக் காட்டும் போது விஷாலை நன்றாக வேலை வாங்கியிருக்கிறார். மற்ற இடங்களில் விஷாலின் ஒண்டரைக் கண் க்ளோசப் மேக்கப் மென்னை தான் பாராட்ட வைக்கிறது. விஷால் ஆரியா மீது பாசமாக இருக்கிறா என்பதற்கான காட்சிகளும் படத்தில் வைக்கவில்லை.

இப்படி பல இல்லைகள் இருப்பதால்... பாலா படம் போல் இல்லை.

பாலா சார்... We want more emotions...!!

அவன் இவன் - எவனா இருந்தா எனக்கென்ன ?

Tuesday, June 14, 2011

"கலாம் கண்ட கனவு" தலைப்பில் கவிதை தேவை !!

நாகரத்னா பதிப்பகம் சார்பில் வெளியீட இருக்கும் 11வது நூல் – “கலாம் கண்ட கனவு”. எங்கள் பதிப்பக சார்பில் வரவிருக்கும் 4வது கவிதை நூல்.

“கலாம் கண்ட கனவு” தொகுப்பு நூலுக்கு கவிதைகள் தேவைப்படுகின்றன.ஆர்வமுள்ளவர்கள் இந்த தலைப்பில் கவிதை எழுதி அனுப்பலாம்.

கவிதை அனுப்புவதற்கான விதிகள்.

1. கவிதை 24 வரிகள் மேல் இருக்க கூடாது.

2. கலாமின் கனவு, இப்போதைய இந்தியா, கலாமின் இளைஞர்கள் என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கவிதை இருக்கலாம்.

3. ஹைக்கூ, மரபு, புதுக்கவிதை, நவீனம் - எந்த வகையில் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், 24 வரிகள் மேல் தாண்டக்கூடாது.

4. தேர்வு செய்யப்படும் கவிதைகள் தொகுப்பு நூலாக வெளியீடப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 20.6.11

நூல் அடுத்த மாதமே வெளியீட இருக்கிறோம். அதன் விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

படைப்புகள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி :
TO : nagarathna_publication@yahoo.in
CC : tmguhan@yahoo.co.in
போடவும்.

பொது விதிமுறைகள்.

நீங்கள் அனுப்பும் படைப்புகள் யுனி கோட்டில் இருக்க வேண்டும்.

மின்னஞ்சலில் அனுப்புபவர்கள் 'In-text' மெயிலாக அனுப்பவும். Download செய்யும் போது சில சமயம் பிரச்சனை வரலாம். உங்கள் படைப்பை Attachment யில் அனுப்புவதை தவிர்க்கவும்.


நன்றி,

அன்புடன்,
குகன்

பி.கு : மேலும் கேள்விகள் இருந்தால், பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

Friday, June 10, 2011

காமம் இருந்த பொழுது

கிழக்கு கடற்கரை சாலை விடுதி. என்னைப் போன்ற தவறு செய்பவர்களுக்காகவே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடம். மனைவிக்கு துரோகம் செய்ய நினைப்பவர்கள், கணவனால் திருப்தியடையாதவர்கள், பாலியல் தொழில் செய்பவர்கள் என்று பலர் சஞ்சலிக்கும் இருப்பிடம். நானும் என் மனைவிக்கு துரோகம் செய்ய இங்கு வருவேன் என்று ஒரு நாளும் நினைத்ததில்லை.

என் பெயர் சேகர். மார்க்கெட்டிங் சேல்ஸ் எக்ஸ்கிட்டிவ். பல முறை மனைவியால் ஏமாற்றப்பட்டவன். மனைவியால் ஏமாற்றப்பட்டவன் என்றவுடன் என் மனைவி எனக்கு துரோகம் செய்துவிட்டால் என்ற அர்த்தமில்லை. மனைவி செய்ய வேண்டிய சராசரி கடமை எனக்கு செய்யாததால் ஏமாற்றப்பட்டவன்.



எனக்கும், காமினிக்கும் திருமணமாகி ஐந்து வருடமாகிறது. பெற்றோர்களால் பார்த்து செய்த திருமணம். தஞ்சாவூர் அருகே இருக்கும் ஊரில் காமினி படித்து, வளர்ந்தவள். எங்களுக்கு திருமணமாகி 1825 நாட்களில் ஐம்பது முறை உறவு வைத்திருந்தாலே அதிகம். மனைவியுடன் உறவு வைத்துக் கொண்டதை கணக்கு வைத்து சொல்கிறானே... மிக கேவலமான ஆள் என்று என்னை நீங்கள் நினைக்கலாம். தப்பில்லை. காம ஆசைகள் உச்சத்தில் இருக்கும் போது கூட மனைவி மறுத்தலால், என் ஏமாற்றத்தை எண்ணிக்கையை எண்ண வேண்டியதாகிவிட்டது.

திருமணம் ஆன இரண்டாவது மாதத்திலே காமினி கர்ப்பமாகிவிட்டாள். குழந்தைக்கு எதுவுமாகக் கூடாது என்று அவள் பயந்தாள். குழந்தை பிறக்கும் ஒன்பது மாதவரை எங்களுக்குள் எதுவும் நடக்கவில்லை. குழந்தையை விட அந்த உறவு எனக்கு பெரிதாக தெரியவில்லை. சிஸ்ரிங் மூலம் பெண் குழந்தை பிறந்தது. கத்திப்பட்ட உடம்பு என்பதால் காமினியை நான் குழந்தை பிறந்து நான்கு மாதம் வரை தொந்தரவு செய்யவில்லை. அதன் பிறகு நான் தொட்டப்போது அவள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. மீண்டும் கரு உருவாகிவிடுமோ பயந்தாள். காண்டம் பயன்படுத்தலாம் என்றேன். காண்டம் முழுமையான பாதுகாப்பு இல்லை என்று காண்டம் கவரில் குறிப்பிட்ட்தை காட்டினாள். 90 சதவிகிதம் பாதுகாப்பாக இருந்தாலும், 10 சதவிகிதத்தில் மீண்டும் கருவுற்றால் கரு கலைக்க வேண்டும் அல்லது குழந்தையை மீண்டும் சுமக்க வேண்டும் என்று பயந்தாள்.

மளிகைப் பொருள், மருந்துப் பொருள் வாங்கும் போதெல்லாம் எக்ஸ்பெரி டேட் பார்த்து வாங்கும் போது பாராட்டியதில் பின்விளைவு என்றே தோன்றியது.

டாக்டர் எக்ஸ், அந்தரங்கம் போன்ற சனிக்கிழமை இரவு டி.வி நிகழ்ச்சியை காட்டி காமினி சம்மதிக்க வைத்து உறவுக் கொள்வேன். ஒன்றை வருடம் கலித்து என் மனைவியுடன் நான் சந்தோஷமாக இருந்தேன். அதன் பிறகு பெரிய அவஸ்தை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. காலை நாங்கள் படுத்த படுக்கை துணி எல்லாம் தொய்க்கப் போட்டாள். பல் விளக்கும் முன்பே காலையில் என்னை குளிக்க சொன்னாள்.

”நாம என்ன பாவ காரியமா செய்தோம்”

“நாம சுத்தமா இல்லேனா குழந்தைக்கு ஆகாது” என்றாள்.

இத்தோடு முடியவில்லை. போட்டிருந்த துணி தலைக்கு குளிக்கும் முன்பு நனைக்க வேண்டும். மறந்துப் போய் வேறு துணியை தொட்டுவிட்டால் அதையும் நனைக்க வேண்டும். கிட்டதட்ட சாவு வீட்டுக்கு சென்று வந்தால் என்ன செய்ய வேண்டுமா உறவு வைத்த பிறகு செய்ய வேண்டும் என்றாள். அன்று இரவு அனுபவித்த சந்தோஷம் அடுத்த நாள் காமினி போடும் கேடுப்பிடியில் தொலைந்துவிடும். காமினி மனம் கஷ்டப்படக்கூடாது என்று அவள் சொல்லப்படியே செய்தேன். நாளாக நாளாக.... இரவு வைத்துக் கொண்ட உறவு விடியற்காலை 5, 6 மணியானது. உறவு வைத்துக் கொண்ட பிறகு போட்ட துணியை தவிற வேறு துணியை நனைக்க வேண்டாமே என்பதற்காக தான்.

காமம் வீட்டில் நேரம், காலம் கிடையாது என்பார்கள். என் வீட்டில் மட்டும் உறவு வைத்துக் கொள்ள நேரம் உண்டு. நாள் உண்டு. ஆம் ! மாத விலக்கு வந்து 25 நாட்கள் பிறகு உறவுக்கே சம்மதிப்பாள். 16-24 நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் குழந்தை பிறக்க அதிக வாய்ப்புண்டாம்.

அடுத்த குழந்தை வேண்டாம் என்பதற்காக சராசரி கணவனுக்கு கிடைக்க வேண்டிய சந்தோஷம் எனக்கு கிடைக்கவில்லை. சந்தோஷம் கிடைத்த நாளில் அடுத்த நாளில் நிலைப்பதில்லை.

காமம் மட்டுமே திருமண வாழ்க்கை என்று நான் சொல்லவில்லை. அவளின் அன்பு மேல் துளிக் கூட எனக்கு சந்தேகமில்லை. என்னை தவிற இன்னொரு ஆண்ணை நினைத்துப் பார்க்க மாட்டாள். அவள் மீது எனக்கு என்று நம்பிக்கை உண்டு. ஆனால், உறவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்காவிட்டால் திருமண வாழ்க்கை எப்படி கசந்து போகிறது என்பதை அனுபவப்புர்வமாக உணர்ந்தேன்.

உறவுக்காக இன்னொரு திருமணம் செய்து என் மனைவியை உயிருடன் கொலை செய்ய விரும்பவில்லை. இன்னொருத்தரின் மனைவியுடன் கள்ள உறவு வைத்து அடுத்த குடும்பத்தை கெடுக்க நினைக்கவில்லை. அதே சமயம் என் மனைவியின் பயத்தையும் என்னால் போக்கவும் முடியவில்லை. அந்த சந்தோஷம் பல நாட்களாக எனக்கு மறுக்கப்பட்டுயிருக்கிறது. அதன் விளைவு தான் இப்போது கிழக்கு கடற்கரை சாலை விடுதியில் இருக்கிறேன்.

என் நண்பன் குமார் அடிக்கடி விபச்சாரி வீடுகளுக்கு செல்வான். அவன் மூலமாக தான் கிழக்குக் கடற்கரை சாலையில் அறை எடுத்தேன். குமார் அனுப்பிய பெண் வந்தாள்.

அவள் பெயர் ? கேட்கவில்லை. கேட்டாலும் உண்மையான பெயர் வராது.

புதுப்பெண் போல வெட்கப்பட்டாள். அவளின் சேர்க்கைத்தனத்தில் அவள் புதியவள் அல்ல என்று தெரிந்தது. வாடிக்கையாளர் புதுப்பெண்ணை தொடுவதுப் போல் நினைக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு முறையும் வெட்கப்படுவாளாம்.

எதற்கு தேவையில்லாமல் வெட்க நடிப்பு என்றேன். வெட்கத்தை தூக்கிப் போட்டு என் தோள் மேல் கைப் போட்டு பேசினாள். வெட்கம் இல்லாமல் ஒரு பெண்ணை ரசிக்க முடியாது என்று அப்போது தான் உணர்ந்தேன். ஒர் இரவுக்கு வெட்கம் எனக்கு பெரிதாக தெரியவில்லை.

அவள் அனுமதியுடன் அவளின் ஆடைகளை கலைத்தேன். பெண்ணின் நிர்வாணம் எனக்கு புதியது இல்லை என்றாலும் மனைவியை தவிற இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பது முதல் முறை. அவளை கட்டில் படுக்க வைத்து பாம்புப் போல் அவள் உடல் மேல் எளிந்தேன். முத்தமிட்டேன். என் ஒவ்வொரு அசைவுக்கும் ஒத்துழைப்பு கொடுத்தாள். ஆனால், என்னுடைய எந்த தீண்டலுக்கும் அவள் தன் உணர்ச்சியை காட்டிக் கொள்ளவில்லை. வேறுமையாக படுத்துக் கிடந்தாள்.

” என்ன பிடிக்கலையா....!” என்றேன்.

அவள் சிரித்தாள். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“பணம் வாங்குனதுக்கு அப்புறம் பிடிக்கலைனு சொன்னா விட போறிங்களா...! இன்னைக்கு நீங்க நாலாவது கஸ்டமர் அதான் பிலிங் அதிகம் காட்ட முடியல...” என்றாள்.

எந்த உணர்வும் இல்லாமல் பிணம்ப் போல் படுப்பவளை அனுபவிக்க மனம் வரவில்லை. விபச்சாரியிடன் கூட நான் எதிர்பார்க்கும் சந்தோஷம் மறுக்கப்படுகிறது. என் ஆடையைப் போட்டுக் கொண்டு வெளியே அறையை விட்டு வெளியே வந்தேன்.

LinkWithin

Related Posts with Thumbnails