வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, July 29, 2010

சிரிப்புக்கு நான் Guaranty !

ஐ.டி. துறையை இந்த கலாய்பது என்றால் ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கே சந்தோஷம் தான். அதுவும் PM,TL வைத்து காமெடி பண்ணினால், அவர்கள் ஜூனியர்ஸ் விழு விழுந்து சிரிப்பார்கள்.

'Jagguboys' குறும்படம் ஐ.டி துறையில் இல்லாதவர்களுக்கு கூட புரியும் படி நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.சமிபத்தில் வரும் சினிமா படங்களில் நகைச்சுவை காட்சிகளை விட நன்றாகவுள்ளது.குறிப்பாக, ஆணி புடுங்கும் இடம் Ultimate நகைச்சுவை.

22 நிமிட முழு நீள நகைச்சுவை குறும்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன்.

ஒவ்வொரு Successful Employee பின்னாடி ஒரு Satisfied Manager இருக்கான் என்ற தத்துவத்தை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

Part -1



Part -2




Part -3

Tuesday, July 27, 2010

லெஸ்பியனும் சில தற்கொலைகளும்

" ஜோஸ்னா ! இனி நாம் இனி பார்க்க முடியாது. நம் பழக்கம் என் அப்பா, அம்மாவுக்கு தெரிந்துவிட்டது."

" நம் இருவரின் காதலை பற்றி சொன்னாய்யா ?"

" சொன்னேன் ஜோஸ்னா ! அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. என் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள்"

" உன்னை பற்றி, என்னை பற்றி, நம் உறவை பற்றி முழுவதும் சொன்னாய்யா ஜெயா ?" என்று கலங்கிய குரலில் கேட்டாள் ஜோஸ்னா.

" எல்லாவற்றையும் சொன்னேன். அவர்கள் மறுத்துவிட்டனர். அவர்கள் என்ன ? இந்த உலகில் யார் தான் நம் உறவை ஏற்றுக் கொள்ளமுடியும்." என்று கண்ணீர் விட்டு அழுதாள் ஜெய ஸ்ரீ.

"நாம் பிரிவது தான் முடிவா ?"

" நாம் பிரிய வேண்டும் என்பது என் பெற்றோர்களின் முடிவு. அப்படியே சேர்ந்து வாழ நினைத்தாலும், இந்த சமூதாயம் என்ன சொல்லும் ? புத்திக்கெட்ட பெண்கள் என்று தானே. அந்த விமர்சனம் நமக்கு தேவையா"

" தேவையில்லை தான். பிரியாமல் ஒன்றாக இருக்க ஒரு வழி சொல்லவா " என்றாள் ஜெய ஸ்ரீ.

பாலைவனத்தில் பழரசம் கிடைத்தது போல் ஜோஸ்னா முகம் மலர்ந்தது. ஜெய ஸ்ரீ சேர்ந்து சாக எடுத்திருக்கும் முடிவை கூறினாள். ஜெய ஸ்ரீ பிரிந்து வாழ்வதை விட அவளுடன் இறக்க ஜோஸ்னாவும் சம்மதிக்கிறாள்.

இருவரும் தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அடுத்த நாள் செய்தி தாளில் இரண்டு பெண்கள் இறந்ததை விட அவர்கள் இறந்ததற்கு காரணத்தை தான் பெரிதாக எடுத்துக் கொண்டு பேசினார்கள்.

இந்த சம்பவம் 1979 ஆண்டு டெல்லியில் நடந்தது. ( ABVA 1991 : 70)



ஆக்டோபர் 29, 1980 அன்று மல்லிகா, லலிதாம்பிகா (20 வயது) இருவரும் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சித்துள்ளனர். ஆனால், அவர்கள் விருப்பதத்துக்கு மாறாக காப்பாற்றப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். (ABVA 1991 : 70)

ஆக்டோபர், 1988 கீதா டார்ஜி என்ற பெண், தன் நர்ஸ் தோழியான கிஷோரி ஷாவிடம் இருந்தது தன் கணவன் பிரிக்கப்பட்டதால் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டாள். ( இந்தியா டூடே, 1988)

ஆகஸ்ட், 1990, வந்தனா என்ற பெண் தன் தோழி சிம்மி கப்பூருக்கு (21 வயது) திருமணம் நிச்சயமாகி இருந்ததால் அவளை சுட்டுக் கொன்று, தன்னையும் சுட்டுக் கொண்டாள். (தாகூர் 1990 : 33)

இது போல் தங்கள் லெஸ்பியன் உறவுகளை வெளியே சொல்ல முடியாமல், கணவனுடன் வாழவும் முடியுமால் வாழ்ந்து கொண்டு இருக்கும் பெண்கள், சில சமயம் இது போல் விபரித முடிவை எடுக்கிறார்கள்.. எல்லா இடங்களில் இருக்கும் ஆணாதிக்கத்தனம் இருப்பது போல், ஓரின சேர்க்கையிலும் இருப்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை.

தென் குஜராத் மாநிலத்தின் இளவரசனாக கருதப்படும் மன்வேந்திர சிங் கோஹில் ஆரம்பத்தில் அவரும் இப்படி தான் இருந்ததாக சொல்லியிருக்கிறார். இப்போது, தன்னை போல் இருக்கும் கே நண்பர்களுக்கு லக்ஷியா என்ற அமைப்பை தொடங்கியிருக்கிறார். ராஜ்கோட், சூரத், வடோடாரா போன்ற இடங்களில் இந்த அமைப்பு இயங்கிவருகிறது.

நடிகர் வேள் எம்.ஆர்.ராதா தன்னுடைய சிறை அனுபவங்கள் பற்றி எழுதிய புத்தகத்தில், நாடகம் நடத்திய காலங்களையும் பகிர்ந்துள்ளார். அதில், தனது நாடகத்தில் நடித்த அழகான யுவன்களை சீமான் மார்கள் அழைத்து சென்றதை சொல்லியிருக்கிறார். ( தகவல் : ஞாநியின் 'அறிந்தும் அறியாமலும்')

‘Page 3' என்ற படத்தில் மேல்தட்டு வர்கத்தினர் அனாதை ஆசிரமத்தில் இருந்து சிறுவர்களை அழைத்து வந்து உறவு வைத்துக் கொள்வது போல் காட்டியிருப்பார்கள். பணக்கார வர்கத்தினர் தங்கள் பணபலத்தால் சாதித்ததில் ஓரின சேர்க்கையும் ஒன்று என்று படத்தில் காட்டியிருப்பார்கள். போலி சாமியார்கள் மாட்டிய பிறகு, தங்களை தேடி வரும் யுவன்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட செய்திகளை சமிபத்தில் பார்த்து வருகிறோம்.

பணம், பதவி, பொருள் என்று ஏதாவது ஒன்று பயண்படுத்தி ஓரின சேர்கை ஆண்கள் தங்கள் ஆசையை தீர்த்துக் கொள்கிறார்கள். இல்லை என்றால், மனைவியுடன் சேர்ந்து வாழ முடியாமல் குடும்பத்தோடு ஒட்டவும் முடியாமல் விலகிவிடுகிறார்கள். ஆனால், பெண்களால் அப்படி இருக்க முடியவில்லை. குறிப்பிட்டு காலத்திற்கு மேல் தங்கள் திருமணத்தை தள்ளி போட முடியாது. திருமணமான பின்னும் கணவனிடம் உண்மையை சொல்ல முடியாது. பிரிந்து வந்தாலும் தவறான பார்வையில் இருந்து தப்பவும் முடியாது. இப்படி பல சிக்கல்களில் ஆண்களை பெண்கள் ஓரின சேர்க்கையில் அவதை படுகிறார்கள்.

இரண்டு ஆண்கள் நீண்ட நாட்கள் ஒன்றாக வாழுவதை ஏற்றுக் கொள்ளும் உலகம் இரண்டு பெண்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ முடிவதில்லை. தங்களையும் ஏமாற்றிக் கொள்ள முடியாமல், சமூகத்தையும் ஏமாற்ற முடியாமல் போகும் போது தான் இது போன்ற தற்கொலை நிகழ்வுகள் நடக்கின்றன.

‘திருமணம் வேண்டாம்’ என்று சொல்லும் ஆண்ணையும், பெண்ணையும் விமர்சிப்பதில் எந்த வித்தியாசம் தெரிகிறதோ அதே வேறுபாடு ஓரின சேர்க்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் விமர்சிக்கப்படுகிறார்கள். பல விமர்சனங்கள் வரும் என்று தெரிந்து துணிந்து சில பெண்கள் சேர்ந்து வாழ்ந்திருக்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள் பற்றி சொல்லும் போது சேர்ந்து வாழ்ந்தவர்கள் பற்றியும் சொல்லியாக வேண்டும். இல்லையா !

கிராமத்தில் ஆசிரியராக பணி புரிந்த அருணா சொம்பை ஜெய்சிங்பாய் கோகில் ( வயது 31) தன் தோழியாக சுதா அமர்சின் மோகன்சின் ரடன்வாடியா (வயது 29) ஒரு வருடம் மேல் ஒன்றாக வாழ்ந்த பிறகு 'மைதிதி கரர்' (நட்பு ஒப்பந்தம்) என்ற ஒப்பந்தம் செய்துக் கொண்டதாக அறிவித்துக் கொண்டனர். (ABVA 1991 : 67 )

ஊர்மிலா என்ற பெண் தான் திருமணம் செய்யவிருக்கும் ஆண்ணை நிராகரித்து விட்டு 28 வயது நிரம்பிய போலீஸ் கான்ஸ்டேபிள் லீலா நம்டேவும் ஒன்றாக வாழ தொடங்கினார். ஊர் மக்கள் இவர்களை கண்டித்தும் கேட்காமல் இருந்ததால், ஊரை விட்டு ஒதுக்கி வைத்தனர். (ABVA 1991 : 67 - 68, India abroad 1993)

சமூகத்தின் முன் இந்த பெண்கள் நகைச்சுவை பொருளாக தான் தெரிவார்கள். ஊடகங்களும் இவர்களை பற்றி பெரிதாக காட்டுவார்கள். ஆனால், தற்கொலை செய்து கொள்வதாகட்டும், துணிந்து தன்னை பற்றி வெளிப்படையாக சொல்வதாகட்டும் ஓரின சேர்க்கையில் பெண்களுக்கு இருக்கும் துணிச்சல் ஆண்களுக்கு இல்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.

கட்டுரைக்கு உதவியது :

Sexualities – edited by Nivedita Menon, Kali for Women publication
http://www.dnaindia.com/india/report_the-prince-comes-out-of-closet_1018219
http://www3.interscience.wiley.com/journal/118947120/abstract?CRETRY=1&SRETRY=0

Monday, July 26, 2010

படித்ததும் பார்த்ததும் - 26.7.10

ஓரின சேர்கை பற்றி எழுதி வரும் தொடர்களுக்கு பெரிதாக பின்னூட்டம் இல்லை என்றாலும், அதை பற்றி வாசகர்கள் பலர் மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். அவர்கள் மின்னஞ்சலில் ஒன்று தெளிவாக புரிந்தது. ஓரின சேர்கையை ஆதரிப்பதாகட்டும், எதிர்ப்பதாகட்டும் வெளிப்படையாக சொல்ல தயங்குகிறார்கள். உள்ளூர சிறு அச்சம் இருப்பதை சில வாசகர்களின் மின்னஞ்சலில் புரிந்துக் கொள்ள முடிந்தது.

குறிப்பாக, ஒரு மின்ஞ்சல் என்னை அதிர வைத்துவிட்டது. 'ஓரின சேர்கை பற்றி எழுதுறீங்களே ! ஒரு வேல... அவங்க தான் நீங்களுமா' என்று கேட்டிருந்தார்.

தொடர் தொடங்கும் முன்பே "ஓரின சேர்கை பற்றி ஆதரிக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை. அவர்களை பற்றி புரிந்து கொள்ளவும், அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ள தான் எழுதுகிறேன்" என்று சொல்லியிருந்தேன்.

தயவு செய்து இது போன்ற மின்னஞ்சல் அனுப்ப வேண்டாம். தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நான் அவன் இல்லை !!!

--

Rescaling Transnational "Queerdom": Lesbian and "Lesbian" Identitary–Positionalities in Delhi in the 1980s
- Paola Bacchetta

ஒரின சேர்க்கை பற்றி எழுதிய தொடருக்கு இந்த கட்டுரை மிகவும் உதவியாக இருந்தது. எங்கும் ஆணாதிக்கம் நிரம்பியிருக்கும் உலகில், "தான் ஒர் லெஸ்பியன்" என்று ஒரு பெண் சொல்லுவதற்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும், மன உறுதி இருக்க வேண்டும் என்ற கூறூகிறார். பல இடங்களில் நடந்த லெஸ்பியன் தற்கொலைகள், வாழ்ந்துக் கொண்டு இருக்கும் லெஸ்பியன் மேற்கொள் எழுதியிருக்கிறார்.

அந்த கட்டுரையை வாசிக்க... இங்கே

--

நேற்று (25.7.10), ஒரு டி.வி நிகழ்ச்சியில் பேச என்னை அழைத்திருந்தார்கள். காலை 9 மணிக்கு வந்துவிட்டால், 15 நிமிடங்களில் பேசிவிட்டு சென்றுவிடலாம் என்றனர். வழக்கத்துக்கு மாறாக ஞாயிறுகிழமை சீக்கிரம் எழுந்து குளித்துவிட்டு (ஞாயிறு என்றால் மதியம் தான் குளியல்) 8:40 அவர்கள் சொன்ன இடத்தில் இருந்தேன்.

பேப்பரில் எழுதி இதை தான் பேச வேண்டும் என்று சொல்லாத குறை. தலைப்பை கொடுத்து விட்டு எப்படி பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்று பதினைந்து நிமிடத்துக்கு விளக்கம் கொடுத்தார்கள். சென்று விடலாம என்று கூட தோன்றியது. என்னை அழைத்த நண்பர் மிகவும் நெருங்கியவர் என்பதால் பொருத்துக் கொண்டேன்.

சில தோழில்நுட்ப காரணங்களால் 10:30 மணிக்கு தான் ஷூட்டீங் தொடங்கியது. அமைதியாக இருந்தேன். கொஞ்ச நேரத்தில் என்னை போலவே பேச பலர் வருவதை பார்த்தேன். என்னை அழைத்த நண்பர் பிஸியாக இருந்ததால் எதுவும் அவரிடம் பேச முடியவில்லை. 11:30 மணியானது. எனக்கு பின் வந்தவர்கள் ஒரு சிலர் பேசிவிட்டு செல்வதை கவனித்தேன். நான் வந்திருக்கும் நிகழ்ச்சிக்கு தான் அவர்களும் வந்திருப்பதை தெரிந்ததும் கோபம் தலைக்கேறியது. காலதாமததிற்கு காரணத்தை கேட்க, 'டி.வி ஷூட்டிங்னா அப்படி தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க' என்றார்.

இது பற்றி முன்பே தெரிந்தவர், பதினைந்து நிமிடத்தில் சென்றுவிடலாம் என்று என்னிடம் சொல்லியிருக்க கூடாது. காலையில் சாப்பிடமால் எந்த இடத்துக்கு சென்றது கிடையாது. அரை மணி நேரத்தில் வந்து விடலாம் என்று நினைத்ததற்கு நல்ல பாடம் கிடைத்தது.

ஐந்து நிமிடம் டி.வியில் வருவதற்கு அரை நாள் இழந்துவிட்டேன். இன்னும் காத்திருந்து விடுமுறை நாளை இழக்க விரும்பவில்லை. அந்த பொது இடத்தில் என் நண்பர் மீது கோபத்தை காட்ட விருப்பமும் இல்லை. எனக்கு அவசரமாக வேலை இருப்பதாக சொல்லி வந்துவிட்டேன்.

சாரு அந்த டி.விய திட்டுறது தவறு இல்லை என்பதை அனுபவம்யுர்வமாக உணர்ந்தேன்.

***

"கவிதை உலகம்" - கவிதை தொகுப்புக்கு தேர்வான கவிதைகள் கீழே



1.கனவு பலிக்குமா..? - அமுதா ப. பாலகிருஷ்ணன்
2.தமிழன் - கார்முகிலோன்
3.இந்தியா ஒளிர்கிறது - எஸ்.செல்வராஜ்
4.வறுமையும் கல்வியும் - இளையராஜா
5. தாய்மை காப்போம் ! - அருட்கவிஞர் காசி
6. நன்றி பயவா வினை - த.கருணைச்சாமி பி.இ.
7. வானம் வசப்படும் - மு.வேடியப்பன்
8. தமிழ் மொழி செம்மொழி - சி. உண்ணாமலை
9. ஆலமரம் - கே.கிருஷ்ணன்
10. வாய் - க.சிவசண்முகம் 11. அர்த்தமுள்ள இந்துமதம் ! - நங்கவள்ளி
12. பூனைக்கு மணிக்கட்டுவது யார்?- கிருஷ்ணசாமி
13. போகர் சித்தர் (பழனி) - பா.பிரதாப்
14. உண்மை இல்லை - சாப்டூர் சதுரகிரியான்
15. பணம் - எஸ்.ராஜேந்திரன்
16. இறந்தவனின் புகழ் - இ.நி. நந்தகுமாரன்
17. பெருமை - ந.முராரி
18. பாட்டும் ! பாவையும் ! - பெ.து. இராதா
19. மறவேனே ! - க.காத்தப்பன்
20. காகித ஆசை - பி. காமகோடி
21. குடியரசு - பு.மகேந்திரன்
22. கவிவிழி - இரா.சக்திவேல்
23. காதல் விடை பெற்றால் ! - எல். காந்தி
24. கவிதையே..! நீ தானோ! – ஷாலினி
25. மணம் வீசும் மலர்கள் - து.செ.கவியரசு
26. பேரறிஞர் வள்ளுவர் -செ.வெங்கடேசன்
27. அன்பே எங்கே இருக்கிறாய் ? -டி.கோபிசந்துரு
28. மனித நேயம் - பி. ராஜசோழன்
29. என தருமை - புதுயுகன்
30. அவலத்தின் பிஞ்சுகள் - அன்னை சிவா
31. அன்பு தேவதையே ! - ஜன்னி அந்தோணிராஜ்
32. இதோ கடவுள் - ஓட்டேரி செல்வக்குமார்
33. புதியதோர் உலகம் - ஓட்டேரி செல்வக்குமார்
34. உலகமகா உண்மை - ஓட்டேரி செல்வக்குமார்
35. நம் காதல் - கோ.கணேஷ்
36.தமிழ்! தமிழ் !! தமிழே! - 'அய்யம்பேட்டை' ராஜா
37.ஹைக்கூ கவிதைகள் - P.Mathar
38. விழியுற்ற மனிதன் - ஆ.முத்துராமலிங்கம்
39. காதல் - யாழ் அகத்தியன்
40. ஹைக்கூ கவிதைகள் - பிரதீப் பாண்டியன்
41.முரண்கள் - என்.விநாயக முருகன்
42. கிராமம் தேடி - Rajakamal
43. பூனைகளும், சில நியதிகளும் - சேரல்
44. மண்ணியல் - சேரல்
45. கனவு சாம்பல் - நேசமித்ரன்
46. ஞாபகங்கள் இல்லாது - செல்வராஜ் ஜெகதீசன்
47.நட்புக்காலம் - மகிழினி சரவணன்
48. கடவுள் பேசுகிறேன்.. - K.R.P.Senthil kumar
49. நினைவின் நாணம் - Safeer Hafiz
50.அவள் - கலாநேசன்
51.கூண்டுக்கிளி - எஸ்.எம். ஜுனைத் ஹஸனீ
52.கண் விருந்து கலை - ப.தங்கவேலன்
53.சாத்தானின் தாசியன் - பொன்.வாசுதேவன்
54.அம்மா - மணிஜீ
55.ஒரு அழகான குடிசை - Subburajan Mylandan
56. குட்டி குட்டி கவிதைகள் - நவயுக தமிழச்சி.
57.வேண்டும் வரம் – அகல்விளக்கு
58. உயிர்மிருகம் - நிலாரசிகன்
59. துய‌ர‌த்தின் ம‌ர‌ம் - லாவண்யா சுந்தரராஜன்

கவிதை தொகுப்பு விரைவில் வெளிவர உள்ளது. தேதி, மற்ற விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும்.

Thursday, July 22, 2010

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !

இந்தியாவில் அதிக கேமிரா விற்கும் நிறுவனம் எது ?

நீங்கள் சோனி, கேனான், நிக்கான் என்று பதிலளித்தால், அது தவறு. இதில் யாருமே இல்லை. நோகியா தான் அதிக கேமிரா விற்கிறார்கள். ஆனால், அவர்கள் கேமிரா விற்பனையாளர்களாக தெரிவதில்லை. செல்போன் விற்பனை செய்பவர்களாக தெரிகிறார்கள்.

செல்போனோடு கேமிராவருவதால் கேமிரா விற்பனை குறைந்து போயிருக்கிறது. செல்போனிலே கேமிரா இருப்பதால் பலர் தனியாக கேமிராவை வாங்குவதில்லை. கேமிரா வாங்க வேண்டும் என்று இல்லை. செல்போனை கூட வாங்கலாம் என்பது தான் இன்றைய நிதர்சனம்.

இந்தியாவில் அதிக கேமிரா இசை பாடல்கள் விற்பனை செய்யும் நிறுவனம் எது ?

HMV இல்லை. ச-ரி-க–ம. அதும் இல்லை. ஏர்டெல் தான். காலர் டுயூன் என்ற பெயரில் ஒவ்வொரு நொடிக்கு பணம் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இசை ஆல்பம் நிறுவனங்களை விட ஏர்டெல் அதிகமாக சம்பாதிக்கிறது. அதுவும் நிமிடங்களில்..!



ஏர்டெல் இசை நிறுவனமில்லை. தொலைப்பேசி சேவை நிறுவனம் மட்டுமே. காலர் டியூன் தங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக கொடுக்கும் சேவை. ஆனால், மற்ற இசை நிறுவனங்களை விட காலர் டியூனில் ஏர்டெல் லாபம் சம்பாதிக்கிறார்கள்.

ஆப்பிள் நிறுவனத்தின் 'ஐ-போன்', கூகிள் நிறுவனத்தின் 'அன்திராய்ட்' போன்ற வரவால் தங்கள் விற்பனை பாதிக்க படலாம் என்று நோக்கியா நிறுவனம் தெரிவித்துள்ளது. கூகிள், ஆப்பிள் செல்போன் விற்கும் நிறுவனமாக மாறபோகிறதா என்ன ? இல்லை.

நோக்கியாவுக்கும், கேனானுக்கு என்ன சம்பந்தம் ? ஏர்டெலுக்கும், எச்.எம்.விக்கும் என்ன சம்பந்தம் ? ஆனால் இதில் ஒரு நிறுவனத்தால் இன்னொரு நிறுவனத்தின் விற்பனை பாதிக்கிறது. மறைமுகமான போட்டியாளராக இருக்கிறார்கள்.

இந்தியாவின் மிக பெரிய யுத்த காவியம் என்று கேட்டால் 'மகாபாரதம்' என்று சொல்லுவார்கள். ஆனால், நாளை மிக பெரிய யுத்தம் இதுவாக தான் இருக்க முடியும். ஆம்... யார் நம் போட்டியாளர் ?

என் மாணவனிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன் " ஆப்பிள் நிறுவனம் சோனி நிறுவனத்துக்கு என்ன செய்தது, சோனி நிறுவனம் கோடாக் நிறுவனத்துக்கு என்ன செய்தது ?" . பதிலிது தான். சோனி நிறுவனம் ஒலியை விற்பனை செய்கிறார்கள். கோடாக் நிறுவனம் ஒளியால் படத்தை விற்பனை செய்கிறார்கள். ஆனால், ஆப்பிள் நிறுவனம் இந்த இரண்டையும் உள்வாங்கி கொண்டு தனது கணினியில் ஒலி (sound) மற்றும் ஒளி (Light)யை காட்டுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் கணினி சோனி, கோடாக் நிறுவனத்தை விழுங்கும் ஆபாயம் உள்ளது.



முன்பெல்லாம் கோடாக் பிலிம் வாங்கி புகைப்படத்தை எடுத்துக் கொண்டு இருந்தோம். டிஜிட்டல் காமிரா வந்ததும் கோடாக் பிலிம் வாங்குவது குறைந்துவிட்டது. காமிராவுக்காக தான் கோடாக் நிறுவனம் பிலிம் தயாரித்தது. ஆனால், பிலிம் இல்லாமல் காமிரா வரும் என்று கோடாக் நிறுவனம் யூகித்திருப்பார்களா ??

2008 ஆண்டில், பிரிட்டிஷ் ஆர்வேஸ் நிறுவனத்துக்கு இந்தியாவில் யார் போட்டியாளராக இருந்தார்கள் தெரியுமா ? சிங்கபூர் ஆர்லைன்ஸ். இல்லை. இந்தியன் ஆர்லைன்ஸ். அதுவும் இல்லை. எச்.பி , சிஸ்கோ நிறுவனத்தின் டெலி கான்பிரன்ஸ் தான் பதில். யூகிக்க முடியாத பதில் தான். ரெசிஷன் சமயத்தில் நிறுவனங்களின் செலவுகளை குறைக்க பல மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் மேலதிகாரிகளை வெளியூர் அனுப்புவதற்கு பதிலாக, டெலிகான்பிரன்ஸ் முறையில் பேசி தங்கள் வேலையை முடித்துக் கொண்டனர். ரெசிஷன் சரியாகி மீண்டும் பழைய நிலையில் திரும்பினாலும், ஆர்லைன்ஸ்யை விட டெலிகான்பிரஸ் முறையை தான் பயன்படுத்துவார்கள்.

இந்திய மக்களுக்கு இரண்டு பொழுது போக்கு விஷயம், ஒன்று சினிமா. இன்னொன்று கிரிக்கெட். டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி நடந்த வரையில் சினிமாவுக்கும், கிரிக்கெட்டுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. கிரிக்கெட்டில் ஷேவாக், தோனி கடவுள் என்றால், சினிமாவில் ரஜினி, கமல் கடவுள். இரண்டும் வெவ்வேறாக தான் இருந்தது. ஆனால், 20-20 ஓவர் IPL ஆட்டம் வந்ததும் பல படங்கள் வெளியிட தயங்கினர். சில திரையரங்குகளில் 20-20 IPL கிரிக்கெட் ஆட்டத்தை பிரத்தியேக முறையில் ஒளிபரப்பினர். படங்களை திரையிட கூட திரையரங்கு கிடைக்கவில்லை. காரணம், 20-20 கிரிக்கெட், சினிமாவும் மூன்று மணி நேர பொழுது போக்கும் அம்சம் கொண்டது. 3 மணி நேரம் படம் பார்த்தால் என்ன ? கிரிக்கெட் பார்த்தால் என்ன ? ரசிகர்களின் எண்ணம் சினிமாவை ஓறம் கட்டியது.

முப்பது வருடங்களுக்கு முன்பு, கருப்பு வெள்ளை படம், டைப் ரைட்டர், ஃபௌன்ட்டன் பேன் பயன்படுத்தினர். இப்போது அது எல்லாம் நினைவு சின்னம் தான். கணினி வந்த பிறகு டைப் ரைட்டரை யாரும் பயன்படுத்துவதில்லை. விஞ்ஞான வளர்ச்சி பல கருவிகள் உருவாக்குகிறது மட்டுமல்ல, உருவாக்கின கருவிகளை அழித்தும் இருக்கிறது.

இன்று காலையில் சிக்கிரம் விழிக்க யார் ஆலாரத்தை நாடுகிறார்கள். எத்தனை பேர் வீட்டில் ஆலார கடிகாரம் இருக்கிறது. செல்போன் எடுத்தோமா , நேரத்தை செட் செய்தோமா... அவ்வளவு தான். காலையில் திரைப்பட பாடலோடு விழிக்கலாம். ஆனால், இதில் பாதிக்க பட்டது டைட்டன் நிறுவனம் தான். ஆலார கடிகாரத்தை டைட்டன் நிறுவனம் இப்போது தயாரிப்பது இல்லை.

நாளைய புத்தகங்களுக்கு பதிலாக ஈ -புக் இருக்கும் என்று சொல்லுகிறார்கள். ஏன் பாடம் சொல்லி தரும் ரோபோவாக இருக்க கூடாது ? ஆசிரியர், புத்தகம் இரண்டுமே தேவையில்லை. நினைத்தமாத்திரத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம்.

நாளை ஆப்பிள் நிறுவனம் கதை சொல்லி இயந்திரத்தை தயாரித்தால் என்னாகும். எழுத்தாளர்கள் எல்லோரையும் பின்னுக்கு தள்ளும். வணிகத்தில் தங்கள் போட்டியாளர்களை வைத்து தான் தங்கள் தயாரிப்பை நிர்ணயம் செய்தார்கள். ஆனால், இப்போது போட்டியாளர் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம்.

நீங்கள் செய்ய வேண்டியது..... ‘யார் நம் போட்டியாளர் ?’ என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

வேகமாக செயல்படு அல்லது மிக வேகமாக செயல்படு !!

***

மேல் சொன்ன கட்டுரை ஐ.ஐ.எம், பெங்களூர் பிரோபஸர் டாக்டர் ஒய்.எல்.வி. மூர்த்தி அவர்கள் “Have breakfast .. or be breakfast” என்ற தலைப்பில் எழுதியது. இந்த கட்டுரை ஆங்கிலத்தில் மின்னஞ்சலில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை தமிழ் வடிவமாக்கியுள்ளேன்.

நான் படித்த சிறந்த தன்னம்பிக்கை கட்டுரைகளில் இதுவும் ஒன்று. பத்து முறைக்கு மேல் வாசித்தேன்.

Wednesday, July 21, 2010

இன்டர்நெட் திருடர்கள் ஜாக்கிரதை !!

ரமேஷ்க்கு XXX வங்கியில் இருந்து ஒரு ஈ - மெயில்...

உங்கள் வங்கியில் வாடிக்கையாளர் தகவல் தொழில்நுட்ப காரணமாக அழிந்துவிட்டது / பழுதடைந்துவிட்டது . கீழ் காணும் இணையதளத்தில் உங்கள் பயப்பெயர் (Username) மற்றும் கடவுச்சோல் (Password) கொடுக்கவும். நீங்கள் தகவல் கொடுத்தவுடன், உங்களை பற்றிய எல்லா தகவல்களும் எங்கள் தளத்தில் புதுப்பித்து பழைய நிலையில் திரும்பிவிடும்.

உதாரணத்திற்கு. http://www.xxxbank.co.in/yourdetails.html



இந்த தளத்தில் ரமேஷ் சென்றான். பார்ப்பதற்கு வங்கி தளம் போல் இருந்தது. ரமேஷ் தன் வங்கி பயண பெயர், கடவுசொல் போன்ற எல்லா தகவலையும் சரியாக கொடுத்தான். அடுத்த நாள் தன் வங்கி கணக்கை பார்க்கும் போது இருப்பு தொகை பூஜ்ஜியமாக இருந்தது.

ஆரம்ப காலம், இணைய வங்கி தொடங்கும் போது பலர் ரமேஷ் போல் தங்கள் தகவலை கொடுத்து வங்கி கணக்கு, கிரடிட் கார்ட் கணக்கு பணத்தை கதைகள் கேள்வி பட்டிருப்போம்.

நாம் கொடுக்கும் தகவலை வைத்து நம் வங்கியில் இருக்கும் சேமிப்பு பணத்தை யார் வங்கி கணக்கில் வேண்டுமானாலும் மாற்ற முடியும். தொழில் நுட்பம் வளர வளர நுட்பமான திருடர்கள் வந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். இதை தடுப்பது மிகவும் கடினம். அதனால், வங்கியில் இருந்து போன்ற மின்னஞ்சல் வந்தால் அதை நிராகரிப்பதே நல்லது.

இணையத்தில், நமது பயன பெயர் மற்று கடவுச்சொல் ரகசியமாக வைத்துக் கொள்வது மிகவும் முக்கியம். நம் வீட்டு சாவி சேர கூடாத நபரிடம் சேர்ந்தால் எப்படி நம் வீட்டு பொருளுக்கு உத்தரவாதம் இல்லையோ.... அது போல், நமது பயன பெயர், கடவுச்சொல், கிரடிட் கார்ட் எண், கிரடிட் கார்ட் CVC எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் தவறாக பயன்படும் என்பதில் சந்தேகமில்லை.

நான் மேலே குறிப்பிட்டது பல விதமான திருட்டுகளில் ஒரு வகை. அவ்வளவு தான்.

ஒரு பிரபல எழுத்தாளரின் மின்னஞ்சலை 'hack' செய்து, அவர் மின்னஞ்சலில் இருந்து அவருடன் தொடர்புள்ள எல்லா மின்னஞலுக்கு ஒரு செய்தி செல்கிறது.

"நான் இங்கிலாந்தில் இருக்கிறேன். வந்த இடத்தில் எனக்கு அவர பணதேவை. என் கையில் 50 பவுன்ட் மட்டுமே உள்ளது. இந்தியாவுக்கு வர எனது நண்பரின் இந்த வங்கியில் பணம் செலுத்துங்கள்" என்று வருகிறது.

இதை படித்த அவருடைய வாசகர், என்ன எதும் விசாரிக்காமல் பணத்தை அனுப்பிவிட்டார்.

பிறகு தான் தெரிந்த்து, மின்னஞ்சல் அனுப்பியவர் எழுத்தாளர் இல்லை. அவருடைய மின்னஞ்சல் களவாடப்பட்டது என்று...!

இது போல் தெரிந்த நபர்களிடம் இருந்து பண உதவி வேண்டும் என்று கேட்டு, குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணம் செலுத்த சொல்லி மின்னஞ்சல் வந்தால், அந்த நபரிடம் போன் போட்டு உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

இன்று தீவிரவாதிகளுக்கு பணம் அந்நிய நாட்டில் இருந்து மட்டும் வருவதில்லை, இது போல ஹாக்கிங் முறையிலும் தங்கள் இயக்கத்திற்கு பணம் திரட்டுகிறார்கள் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

இப்படி பல நுதன திருடர்கள் இணையத்தில் வலம் வந்துக் கொண்டு இருக்கிறார்கள். இணையத்தில் கிரடிட் கார்ட் / டெபிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

***

என் பழைய கட்டுரை. ஒரு சிற்றிதழ்காக எழுதியது. புதிதாக எதுவும் எழுதாததால் இதை பதிவில் ஏற்றிவிட்டேன்.

Tuesday, July 20, 2010

ஐயப்பன் திருமணமாகாததற்கு இது தான் காரணமா ?

நமது புராண கதையில் எடுத்துக் கொண்டால், சிவன் அப்பாவி தனமாக வேண்டிய வரத்தை அரக்கர்களுக்கு கொடுத்துவிடுவார். விஷ்ணு தன் தந்திரத்தை பயன்படுத்தி அரக்கர்களை ஒழிப்பார். தேவர்களுக்கு பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிவன் தன் இஷ்டத்துக்கு வரம் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார். அப்படி, ஒரு அரக்கனிடம் அவன் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை வெடித்து இறந்து விடுவதாக வரம் கொடுத்து விடுகிறார். கொடுத்த வரத்தை சோதித்து பார்க்க சிவன் தலையில் கை வைக்க அரக்கன் வருகிறான். விஷ்ணு விஜய் போல் எண்ட்ரி கொடுத்து பெண் வேடத்தில் அரக்கனை கொல்கிறார். விஷ்ணுவின் பெண் உருவத்தை பார்த்து சிவன் மயங்க, இருவருக்கும் 'ஐயப்பன்' என்ற ஆண் குழந்தை பிறக்கிறது. முதல் ஆண் – ஆண் உறவால் பிறந்த குழந்தை 'ஐயப்பன்' என்று புராண கதைகள் சொல்லுகிறது.



புராணத்தின் பல கதைகள் நம்பும் படியானது இல்லை. நல்லது மட்டும் எடுத்துக் கொண்டு கற்பனைகளை ஒதுக்கி வைக்க வேண்டிய கதைகள் பல உள்ளது. இதில் 'கே' உறவில் பிறந்த ஐயப்பன் என்பதை விட, இரண்டு ஆண்ணின் மகன் என்று கொஞ்சம் கௌரவமாக சொல்லுவோம். என்ன தான் அரசக் குடும்பத்தில் வளர்ந்தாலும், இரண்டு ஆண்களுக்கு பிறந்ததால் பெண்கள் மீது ஈர்ப்பு வராமல் திருமணம் செய்யாமல் இருந்தாரா என்ற சந்தேகம் வரலாம்.

விஞ்ஞான ரீதியாக இரண்டு ஆண்ணுக்கும், இரண்டு பெண்ணுக்கும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை. ஆனால், லெஸ்பியன், கே தத்தெடுக்கும் குழந்தைகளுக்கு இவர்கள் பாதிப்பு இருக்குமா என்ற சந்தேகம் நிலவிவருகிறது. பலர் கே, லெஸ்பியன் போன்றவர்களை மன நோயாளியாக பார்ப்பதால் சட்டப்படி இவர்கள் குழந்தை தத்தெடுப்பதில் சிக்கல் உள்ளது.

இந்தியாவில், ஒரு குழந்தையை தத்தெடுக்க வேண்டியது இருந்தால் திருமணமான ஆண்,பெண் சேர்ந்து தத்தெடுக்கலாம் அல்லது திருமணமாகாத / தனிமையில் வாழும் பெண்கள் தத்தெடுக்கலாம். அதனால், கே, லெஸ்பியன் ஜோடிகள் சட்டப்படி குழந்தைகளை தத்தெடுக்க முடியாது. இவர்கள் தத்தெடுக்க மூன்று விதமான பிரச்சனைகளை நேரில் சந்திக்கிறார்கள்.

1. கே, லெஸ்பியன் பராமரிப்பில் வளர்ந்தால் அந்த குழந்தைக்கு தன் பால் உணர்வு குறித்து சந்தேகம் வரலாம். தன்னையும் அவர்கள் வளர்ப்பு பெற்றோர்களை போலவே எண்ணிக் கொள்ளும் அபாயம் உள்ளது.
2. குழந்தை கே, லெஸ்பியனுடன் வளர்ந்தால் சுற்றி இருக்கும் சமூகம் இவர்களை மனநோயாளிகளாக பார்ப்பது போல் அந்த குழந்தையை பார்க்கும். அதன் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும்.
3. கே, லெஸ்பியன் குழந்தைகள் பள்ளியிலோ அல்லது விளையாட்டிலோ அவர்களது நட்பு வட்டத்தில் கேலியாக பேசலாம். உதாசினம் செய்யலாம். இதனால், அந்த குழந்தைக்கு தன் மீது தாழ்வு மனப்பான்மை வர வாய்ப்புள்ளது.

கே, லெஸ்பியன் போன்றவர்கள் குடும்பத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு தனிமையாக்கப்பட்ட போதும், அவர்களுக்கு என்று குடும்பம் அமைத்து கொள்ள இது போன்ற நடைமுறை சிக்கல் உள்ளது.

இந்தியாவில் கே, லெஸ்பியன் பற்றின வெளிப்படையாக பேசாமல் இருப்பதால் அவர்களை பற்றி ஆராய்ச்சியோ, சர்வேவோ பெரிய அளவில் எடுக்கப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் வெளிப்படையாக பேசப்படுவதால் அவர்கள் தத்தெடுத்து குழந்தைகளை பற்றின சர்வே ஒன்று வெளியீட்டு இருக்கிறார்கள்.

அதில், கே உறவில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தையை தத்தெடுப்பதிலும், லெஸ்பியன் உறவில் ஈடுபடுபவர்கள் ஆண் குழந்தையை தத்தெடுப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். தங்கள் பால் இனத்தில் இருக்கும் குழந்தையை தத்தெடுத்தால் அம்மா, மகள் உறவை / தந்தை, மகன் உறவை கொச்சை படுத்துவார்கள் என்ற அச்சமே காரணமாம்.

இவர்கள் தத்தெடுக்கும் குழந்தைகள் யுவன்/யுவதியாக வளர்ந்த பிறகு செக்ஸ்யில் சாமான்ய யுவன்/யுவதி காட்டிலும் ஆர்வம் குறைவாக இருப்பார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளனர். தங்கள் தத்து குழந்தைகளிடம் செக்ஸ் பற்றி கே, லெஸ்பியன் பெற்றோர்கள் பேச தயங்குவதே காரணம் என்று கூறுகின்றனர். அதே சமயம், மற்ற யுவன் / யுவதிகளை விட சமூக காரியங்கள், உதவிகள் செய்வதில் இவர்களுக்கு அதிக ஆர்வம் இருக்கும் என்ற கருத்தையும் தெரிவிக்கிறார்கள்.

கே தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் தெளிவு இல்லாதவர்கள். லெஸ்பியன் தம்பதியர்கள் குழந்தை வளர்ப்பதில் திறமையானவர்கள் என்ற இன்னொரு கருத்தும் உண்டு.

இப்படி, பல கருத்துகள் வெளியிட்டாலும் கே, லெஸ்பியன் ஜோடிகள் குழந்தைகள் தத்தெடுக்கும் உரிமையை சட்ட ரீதியான உரிமை வழங்கப்படவில்லை என்பது தான் உண்மை.

'செக்ஸ்' என்பது தனிப்பட்ட உரிமை. எந்த பெற்றோர்கள் வளர்த்த யுவன் / யுவதியாக இருந்தாலும் சரி, பெற்றோர்களின் வளர்ப்பு முறைக்கும், செக்ஸ்க்கும் சம்பந்தமில்லை. சுற்றமும், நண்பர்கள் சேர்கை தான் 'செக்ஸ்' பற்றிய விழிப்புணர்வும், மோகமும், புரிதலும் ஏற்ப்படுத்துகிறது என்பதை தான் நடைமுறையில் சந்திக்கிறோம். ‘செக்ஸ் பிடிக்கவில்லை’ என்றால் மருத்துவ ரீதியாக அனுக வேண்டிய ஒன்று தான். ஆனால், யார் மீது ‘செக்ஸ் ஈர்ப்பு’ வருகிறது என்பது மனது சம்பந்தப்பட்டது. இதற்கும், வளர்ப்பு முறைக்கும் சம்மந்தமே இல்லை என்பது தான் அமெரிக்க சர்வே வெளியீட்டுள்ளது.

விநாயகர் கூட தான் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவரை சந்தேகப்படாமல் இருப்பவர்கள் ஐயப்பன் திருமணம் ஆகாமல் இருப்பதையும் சந்தேகப்பட கூடாது. அதே போல், அனிதாவுக்கும், கார்த்திக்கும் பிறக்கும் குழந்தையும், ஜானகி, மாலதி இருவரும் தத்தெடுக்கும் குழந்தையும், கௌஷிக், கருணாகரன் தத்தெடுக்கும் குழந்தையும் ஒன்று தான்.

**

ஐயப்பன், விநாயகர் என்று குறிப்பிட்டது புரிதலுக்காக மட்டுமே.... இந்து துரோகம் செய்துவிட்டேன் என்று பின்னூட்டம் போட்டு கட்டுரையை திசை திருப்ப வேண்டாம் என்று பணிவுடம் கேட்டு கொள்கிறேன்.

Friday, July 16, 2010

ஜனவரி முதல் ஜூன் வரை

ஒவ்வொரு ஆறு மாத முடிவில் என் வாசிப்பு சுய மதிப்பீடு (கிட்ட தட்ட Self-Review) செய்து பார்ப்பேன். எத்தனை புத்தகங்கள் படித்திருக்கிறேன், வாசிப்பு அனுபவம் உயர்ந்திருக்கிறதா, நல்ல புத்தகங்கள், மொக்கை புத்தகங்கள், படிக்க நினைத்த புத்தகங்கள், படிக்க வேண்டிய புத்தகங்கள் என்று பட்டியல் போடுவேன்.

அந்த வகையில் கடந்த ஆறு மாதம் படித்த புத்தகங்கள் ( ஜனவரி - ஜூன்,2010)

கிழக்கு

1.ஏசுவின் தோழர்கள் - இந்திரா பார்த்த சாரதி
2.மாவோயிஸ்ட் - பா.ராகவன்
3.தி.மு.க உருவானது ஏன் ? - மலர்கண்ணன்
4.ஒஷோ : ஒரு வாழ்க்கை - பாலு சத்யா
5.சீனா விலகும் திரை - பல்லவி அய்யர்
6.ராஜிவ் காந்தி கொலை வழக்கு : டி.ஆர். கார்த்திகேயன்

7. சுட்டாச்சு சுட்டாச்சு - சுதாங்கன்
8.பிராடிஜியின் 24 புத்தகங்கள்

உயிர்மை

9.நகுலம் வீட்டில் யாருமில்லை - எஸ்.ராமகிருஷ்ணன்
10.எக்ஸிஸ்டென்ஷியலிசமும், ஃபேன்ஸிபனியனும் - சாரு நிவேதிதா

11.சில்வியா - சுஜாதா

விகடன் பிரசுரம்

12.ஒரு நிமிட கதைகள் - விகடன் பிரசுரம்
13.உலக சினிமா - பாகம் I & II - செழியன்
14.தலாய் லாமா - பா.முருகானந்தம்


15. எட்டாயிரம் தலைமுறை – தலைமகன்
16. முள் - முத்துமீனாள்

17. பேசுகிறார் பிரபாகரன் (வீரம் விளைந்த ஈழம் – 2) - ஜெகத் கஸ்பர்
18. ஆதவன் சிறுகதைகள் - தொகுப்பு ; திலகவதி
19. வண்ணநிலவன் சிறுகதைகள் - தொகுப்பு ; திலகவதி
20. தேவராகம் ( ஃப்ரெஞ்ச் நாவல் ) - ஆன்ட்ரே ஜித்
21. குஜராத்தி ஓரங்க நாடங்கள் - தொகுப்பு : ஏ.எம்.ராவல்
22. பலிபீடம் நோக்கி - கலைஞர் மு.கருணாநிதி
23. ஆயிஷா - இரா.நடராசன்
24. இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்
25. 100 ஜென் கதைகள் - கண்ணதாசன் பதிப்பகம்
26. ஜாக் வெல்ச் நொ.1 தொழில் மேதை - ரவீந்தர்

27. ஒரு பட்டாம்பூச்சியின் கனவு (கவிதை) - நிலாரசிகன்
28. ஒடிஸி (தமிழில் : சிவன் ) - ஹோமர்
29. நிஜம் நீதி - சுஜாதா
30. மில் - ம.காமுத்திரை
31. அய்யனார் கம்மா – நர்சிம்
32. மீண்டும் ஒரு காதல் கதை (புத்தகம் வெளிவரவில்லை) - சங்கர் நாராயணன்
33. லால்கர் : ஒரு மூன்றாவது பார்வை - அ.மார்க்ஸ், சந்தோஷ் ராணா, குமார் ராணா
34. திரைக்கலை பிறந்த கதை
35. அந்த கணத்தில் ... (கவிதை) – Dr.மோகன் பாலகிருஷ்ணன்
36. லெமன் டீரியும் இரண்டு ஷாட் டக்கீலாவும் - சங்கர் நாராயணன்
37. டைரி குறிப்பும் காதல் மறுப்பும் - பரிசல் கிருஷ்ணா

38. Career in Book publishing - Samuel Israel
39. Inscrutable Americans - Anurag Mathur
40. Story of INA – S.A.Ayer



(Bold - காசு கொடுத்து வாங்கிய புத்தகங்கள்)

ஆங்கில புத்தகங்கள் அதிகமாக வாசிக்க வேண்டும். ‘Non Fiction’ல் இருந்து அதிகம் 'சிறுகதை', 'நாவல்' புத்தகங்களில் கவனம் சென்றிருப்பது என்னால் உணர முடிகிறது. புத்தகம் வெளியீடுவது, மார்க்கெட்டிங் மட்டுமில்லாமல் 'பிரோமோஷ்னல் வேலையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ( கேபிள், பரிசல் புத்தகம் தினமலரில் விமர்சனம் வந்ததோடு சரி)

பார்ட் டைம் பதிப்பாளராக இருப்பதால் அதிரடியாக இயங்கமுடியவில்லை. இன்னும் ஆறு மாதத்திற்குள் ஒரு மாற்று ஏற்பாடு செய்தாக வேண்டும். அடுத்த மாதம் இரண்டு நூல் வெளியீட திட்டமிட்டுயிருக்கிறேன். அதன் அடுத்த புத்தகங்களை பற்றி யோஸிக்க வேண்டும்.

இப்போதைக்கு அவ்வளவு தான். இதில் ஒன்றாவது ஒழுங்காக நிறைவேற்றுகிறனே என்பதை டிசம்பரில் பார்ப்போம்.

Thursday, July 15, 2010

தெலுங்கு திரை உலகனின் 'உலக சினிமா'

100% கமர்ஷியல் திரை உலகம் என்ற முத்திரை குத்தப்பட்ட தெலுங்கு படங்களில் சமீபத்திய படமான 'வேதம்' படம் பார்க்க வாய்ப்பு கிடைத்தது. 'ஆரியா' படத்தில் காதலில் ஈர்த்த அல்லு அர்ஜூன், நம்ப அனுஷ்கா மற்று 'கேபிள்' சங்கர் பதிவு போன்ற காரணங்களால் இந்த படத்தை பார்த்து விட வேண்டும் என்று தோன்றியது.

ஐந்து பேர் கதை தொடங்கியதுமே 'மல்டி செக்மன்ட் ஸ்டோரி டெல்லிங்' பாணியில் திரைக்கதை அமைத்திருக்கிறார்கள் புரிந்துக் கொள்ள முடிந்தது.

இசை உலகில் பெரிய சாதனை படைக்க வேண்டும் என்று அம்மா சொன்ன இராணுவ வேலையை நிராகரித்து தன் காதலி, நண்பர்களுடன் ஹைதிரபாத் வருகிறான் மனோஷ் மன்சு. சுயநலவாதியான அவன் ஒரு சர்தாஜி உதவி செய்ததும் பொது நலவாதியாக மாறுகிறான். விபத்தில் மாட்டி தவிக்கும் ஒரு கர்ப்பி பெண்ணுக்கு உதவ தன் வண்டியில் அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறான்.

கந்து வட்டிக்கு பணம் வாங்கி அசலை கொடுத்த பிறகும், வட்டி கட்டிக் கொண்டு இருக்கும் நாகைய்யாவின் பேரனை கந்து வட்டிக்காரன் தூக்கிச்சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்த தன் பேரனை மீட்க தன் மருமகளின் கிட்னி விற்க ஹைதிராபாத் வருகிறான். கிட்னி கொடுத்த மருமகள் அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறாள்.

இந்துக்களால் கருவிலே தன் குழந்தை இழந்து இந்தியாவை விட்டு ஷார்ஜாவுக்கு செல்ல திட்டமிடுகிறான் ரஹிம். முஸ்லீம்கள் என்றால் தீவிரவாதி என்று கருதும் போலீஸ்க்காரன், அவன் உறவினர்களின் தீவிரவாதி ஒருவனை கைது செய்யும் போது ரஹிம்மை சேர்த்து செய்கிறான். போலீஸிடம் இருந்து தப்பிக்கும் காலில் குண்டடி பட்டு அரசாங்க மருத்துவமனையில் அனுமதிக்க படுகிறான்.




விபச்சாரம் செய்யும் சரோஜா, தன் திருநங்கை தோழியுடன் விபச்சார விடுதியில் இருந்து தப்பித்து ஹைதிராபாத்துக்கு வருகிறாள். ஆனால், அவளை வைத்து தொழில் செய்த பெண்ணின் ஆட்கள் சரோஜாவை விடாமல் துரத்துகிறார்கள். அவர்களிடம் தப்பிக்கும் போது தன் திருநங்கை தொழிக்கு கத்தி குத்து பட, அவளை அழைத்து கொண்டு அரசாங்க மருத்துவமனைக்கு வருகிறாள் சரோஜா.

யாரை பற்றி கவலைப்படாமல் தன் காதலி தான் உலகம் என்று வாழுகிறாள் கேபிள் ராஜூ. அவளிடம் பணக்காரனாக நடித்து, இரவு விருந்துக்கு பெரிய ஹோட்டலில் இரண்டு பாஸ் வாங்கி வருவதாக சொல்கிறான். ஒரு பாஸ் 20,000 ரூபாய் என்று இருக்க, 40,000 ரூபாய்யை மருமகள் கிட்னியை விற்ற நாகைய்யாவிடம் பணத்தை திருடுகிறான். இறுதியில் மனம் மாறி, அரசாங்க மருத்துவமனையில் நாகைய்யாவிடம் பணத்தை கொடுக்க வருகிறான்.

ஐந்து கதாப்பாத்திரங்கள் எவ்வேறு இடத்தில் தொடங்கி ஒரு இடத்தில் சந்திக்கும் மருத்துவமனையில் தீவிரவாதிகள் நான்கு பேர் முற்றுகை ஈடுகிறார்கள். அவர்களிடம் இருந்து இவர்கள் எப்படி தப்பித்தார்கள் என்பது தான் கிளைமாக்ஸ்.

ஆங்கில படங்களில் Babel, 21 Grams போன்ற வெற்றி படங்கள் இந்த திரைக்கதை யுக்தியை தான் பயண்படுத்தியிருக்கிறார்கள். அதுவும் Babel நான்கு நாடுகளில் நடக்கும் கதை இறுதி காட்சி ஒரே புள்ளியில் வந்து முடியும். ஹாலிவுட்டில் பயன்படுத்திய திரைக்கதை யுக்தியை நம் நாட்டுக்கு ஏற்ற வாறு திரைக்கதை அமைத்திருப்பது எவ்வளவு பாராட்டினாலும் தகும்.



தமிழ் படத்தில் கூட இரண்டு கதாநாயகர்கள் சேர்ந்து நடிப்பதை பார்த்து விடலாம். தெலுங்கு படங்களில் மிகவும் அபூர்வம். அப்படியே இரண்டு நாயகர்கள் என்றால் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நடிகள் தான் நடிப்பார்கள். அல்லு அர்ஜூன், மனோஜ் மன்சு போன்ற நடிகர்கள் இணைந்து நடிப்பது மிக விஷயம். வில்லனை விரல் நீட்டி மிரட்டுபவர்கள். நூறு பேர் வந்தாலும் அடித்து உதைக்க கூடிய கதாப்பாத்திரத்தில் நடிப்பவர்கள். 'கேபிள் ராஜூவாக அல்லு அர்ஜூனும், விவேக் சக்கரவர்த்தியாக மனோஜ் மன்ச்சுவும் வாழ்ந்திருப்பது ‘மாசாலா’ படம் பார்த்தவருக்கு சாபவிமோச்சனம் கிடைத்தது போல் இருந்தது. ஒரு தீவிரவாதியிடம் இருந்து பல ஆயிரம் பேர் காப்பாற்ற இரண்டு நாயகர்கள் போராடுவதும், அதற்கான முடிவை தேர்ந்தெடுப்பதும் தெலுங்கு படங்களில் வராத முடிவு. ( இரண்டு 'மாஸ்' ஹீரோக்கள் சாதன குடிமகனாக நடித்திருப்பது என்னால் இன்னும் நம்பமுயவில்லை. )

கண்ணில் அதிக மைய்யும், லோ ஹிம் புடவையும், பின் முதுகு தெரியும் படியான ஜாக்கெட்டும் என்று அசல் விபச்சாரியாகவே வருகிறார் அனுஷ்கா. தன் திருநங்கைக்காக டாக்டரிடம் கெஞ்சும் போது, " உங்க கூட எத்தன வாட்டி வேணும்னாலும் படுகிறேன். அவள காப்பாத்துங்க !" என்று கெஞ்சும் போது கதாப்பாத்திரம் மீறி அவள் மேல் பரிதாபப்பட வைக்கிறது.

வசனங்கள் ஒவ்வொன்றும் ரொம்ப ஷார்ப். குறிப்பாக ஒரு இடத்தில் கூட பன்ச் டைலாக் இல்லை.

கிட்னி விற்க செல்லும் தன் மருமகளிடம் நாகைய்யா, " ஏழைகளுக்கு இருக்குற பெரிய சொத்தே அவங்க உடம்பு தான்" என்று சொல்லும் இடமாகட்டும்,

போலீஸ் ஸ்டேஷனில் அனுஷ்கா, " நாங்க உடம்பில இருக்குற துணிய அவுத்து போட்டு சம்பாதிக்கிறோம், நீங்கள் துணியப்போட்டு சம்பாதிக்கிறீங்க" என்ற இடமாகட்டும்,

ஷார்ஜா செல்லும் ரஹிம்மிடம் அவர் தந்தை, " நிறைய முஸ்லீம் இருக்குற இடத்துல இந்து பயப்படுறதும், நிறைய இந்துக்கள் இருக்குற இடத்துக முஸ்லீம் பயப்படுறதும் சகரஜம். மாப் சைக்காலஜி" என்று சொல்லும் இடம் மிக அருமை.

அதுவும் இறுதி காட்சியில், அல்லு அர்ஜூன் மனோஜிடம் " உங்க பெயர் என்ன பாஸ் ?" என்று கேட்கும் இடம் கண்ணில் நீர் வராத குறை.

'வேதம்' தமிழில் 'வானம்' என்ற பெயரில் வெளிவரயிருக்கிறது. அல்லு அர்ஜூன் நடித்த ட்ரேக்கில் சிம்பு நடிக்கவிருக்கிறார். 'விண்ணைதாண்டி வருவாயா' படத்திற்கு முன் 'வானம்' பட அறிவிப்பு வந்திருந்தால் நான் அதிர்ந்து போய்யிருப்பேன். முந்த படத்தில் கொடுத்த நம்பிக்கை, சிம்பு சோதப்பாமல் செய்வார் என்று நம்பலாம். மற்ற நான்கு ட்ரேக்குக்கும் டப்பிங் செய்வார்கள் என்றே தோன்றுகிறது.

படத்தின் இசை, கெமிராமென், டைரக்டர்... அதை பற்றி எல்லாம் நமக்கு தெரியாது. நான் என்ன 'கேபிள்' சங்கரா.... படத்தை பார்த்து ரசித்த ஒரு சாதான ரசிகனின் விமர்சனம் இது.

Wednesday, July 14, 2010

கவிதை : 'கர்ம வீரர்' காமராசர்

காந்தி வழி வந்த
எங்கள்
தென்நாட்டு காந்தி !

காந்தி பிறந்த நாளில்
மண்ணை மறந்தார்
கர்மவீரர் காந்தி !



பீஷ்மர் இருந்த இடத்தை
குசேலன் நிறப்பினார் !
பூஜை செய்பவர் மத்தியில்
பகுத்தறிவு ஆதரவு பெற்றார் !

பதவிக்கு படிப்பற்றிவு
தேவையில்லை என்று காட்டிய
முதல் அரசியல்வாதி !

சரஸ்வதி இருக்கும்
இடத்தில் விருந்தோம்பலாம்
பள்ளி குழந்தைகளுக்கு
சத்துணவு திட்டம் !

ஆண்கள் கொண்டாடிய
பிரதமர் பதவியில்
பெண்ணை அரியனை ஏற்றிய
முதல் ஆண் !

இடம் கொடுக்க மறுத்தவர்களின்
இடத்தில் இருந்து கொண்டு
இட ஒதுக்கீடு பற்றி பேசினார் !

பொன்னான் ஆட்சிக்காக
இன்னொரு கர்மவீரருக்காக
காத்திருக்கும் மக்கள் !

Monday, July 12, 2010

படித்ததும் பார்த்ததும் - 12.7.10

ஒரு மாதக பரவியிருந்த 'FIFA' ஜூரம் நேற்றோடு முடிந்தது. இந்த கால்பந்தாட்ட போட்டியில் ஸ்பெயினை விட அதிகம் பெயர் வாங்கியது ஆக்டோபஸ் என்று தான் நினைக்கிறேன். இனி நம் நாட்டில் ஆக்டோபஸ் ஜோசியம் ஆரம்பமாகும்.

***
Same sex marriage Pro & Con - A Reader
Andrew Sullivan

ஓரின சேர்கை பற்றி இணையத்தில் எழுதும் தொடருக்காக நூலகத்தில் இருந்து நான் எடுத்த புத்தகம். புரியும் படியாக ஆங்கில மொழி, எளிதில் படித்து முடித்துவிடலாம். ஆனால், அமெரிக்க மக்களை மனதில் வைத்துக் கொண்டு எழுதிய புத்தகம். அமெரிக்க சட்டங்கள் ஓரின சேர்க்கைக்கு எப்படி சாதகமாகவும், பாதகவும் போன்ற விளக்கங்களை கொடுத்துள்ளார்.

கிறிஸ்துவம், யூத மதம் ஓரின சேர்ர்கைக்கு எதிர்க்கும் காரணத்தையும் எழுதியுள்ளார். இஸ்லாமிய நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு மரண தண்டனை மற்றும் இன்னும் கொடுமையான தண்டனை வழங்குகிறார்கள். அதை பற்றி எந்த விமர்சனமோ, விளக்கமோ கொடுக்கவில்லை.அமெரிக்காவில் ஓரின சேர்க்கை எல்லாம் சகஜம் என்று நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

***

'நாளைய இயக்குனர்' நிகழ்ச்சியை எப்படியோ போராடி தொடர்ந்து மூன்று வார இறுதி சுற்று படங்களை பார்த்தேன்.

'அனு அனுவாய்' என்ற குறும்படம் பார்வையில்லாதவன் கற்பனை உலகம், பார்வை வந்த பிறகு மாறியிருப்பதை அழகான காதல் கதை மூலம் சொல்லியிருக்கிறார்கள்.

இன்னொரு குறும்படம் (பெயர் தெரியவில்லை), படகில் திசை மாறி இலங்கை இராணுவத்தால் சுட்டு கொல்லப்படும் மீனவர்களை பற்றிய படம். உதவிக்காக காத்திருக்கும் மீனவனை, படகையும் காட்டி படம் முடியும் போது பார்வையாளர் மனதில் துயரம் ஒட்டிக்கொள்ளும்.

கத்தி - திருவிழாக்களில் கத்தி வீசி வாழும் மனிதர்களை பற்றிய கதை. சினிமா இயக்குனர்கள் கூட இதுவரை யோசிக்காத கதை களம்.

ஒரு ஷாட் - பெண்ணை கடத்தும் நான்கு ரௌடிகள் போலீஸால் சுட்டு கொல்லப்படுவதை ஒரே ஷாட்டில் நல்ல ஆக்ஷன் படமாக இருந்தது.

சுயம்பு - ஒரு போராளியை பற்றி வரலாறு குறும்படம். போராளி இறந்தாலும் போராட்டம் இறப்பதில்லை என்று உணருத்தும் படம்.


ரேணுகா, ரவி நடித்த குறும்படம் 'Forward, Backward' என்று கதை முன்னோக்கி, பின்னோக்கி செல்கிறது. மருமகள் வரும் முன் பெற்றோர்களின் மனநிலையும், மாமியாரை சந்திக்க போகும் மனமகள் மனநிலை அழகான பெயின்டிங் போல் எடுத்த படம். என் பேவரிட் 'ஜனனி' நடித்த படம். சிறந்த நடிகை விருந்து அவருக்கு தான் கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஒரு தொலைக்காட்சி நடிகைக்கே கிடைத்தது.

மேல் சொன்ன ஏழு குறும்படங்கள் சித்தியாசமான தொழில்நுட்பம், கதை களம், படமாக்கிய விதம் போன்ற வகையில் சிறப்பான படங்கள். ஆனால், விருது கிடைத்தது 'நெஞ்சுக்கு நீதி' (கலைஞரின் சுய வாழ்க்கை புத்தகத்தின் தலைப்பு) குறும்படத்துக்கு கிடைத்தது. ஒரு நல்ல நகைச்சுவை படமாக ஏற்றுக் கொள்ள முடிகிறதே தவிர இறுதி சுற்றில் வெற்றி பெரும் அளவிற்கு இந்த படத்துக்கு தகுதி உண்டா என்று தெரியவில்லை.

இந்த குறும்படத்திற்கு விருது வழங்கி ஒரு கமர்ஷில் பட இயக்குனரை உருவாக்கியிருக்கிறார்கள். நல்ல இயக்குனரை அல்ல...!

விருது வழங்கியவர் இயக்குனர் ஷங்கர் என்பதால் என்னவோ !!

***

தவிர்க்க முடியாத காரணத்தால் நாகரத்னா பதிப்பக சாரிப்ப்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' முடிவை இந்த வாரம் வெளியீட முடியவில்லை. அடுத்த வாரம் வெளியீடப்படும். தாமதத்திற்கு மன்னிக்கவும்.

Wednesday, July 7, 2010

ஓரின சேர்க்கை - எதிரான வாதங்கள்

ஒரு முறை அமெரிகாவில் இருக்கும் என் நண்பனிடம் பேசிக் கொண்டு இருக்கும் போது, " அமெரிக்காவில் ஆண் - பெண் சேர்ந்து சுதந்திரமாக சுற்றும் அளவிற்கு ஆண் - ஆண், பெண் - பெண் சுற்றுவதில் இல்லை" என்றான். எனக்கு தூக்கி வாரி போட்டது. இந்தியாவை தவிர எந்த நாட்டையும் பார்க்காத எனக்கு அதிர்ச்சியாக தான் இருக்கும். அதற்கு அவன் சொன்ன காரணம், " ஒரு ஆண் - ஆண் நெருக்கமாக பழகினால், அவர்கள் 'கே' என்று சந்தேகப்படுவார்கள்". இரண்டு பெண்கள் ஒரு வீட்டில் தங்கியிருந்தால் அவர்களுக்குள் 'உறவு' இருப்பதாக நினைப்பார்களாம். கே, லெஸ்பியன் ஜோடிகள் அமெரிக்காவில் பரவலாக வாழ்ந்துக் கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் ஓரின சேர்க்கை வளர தொடங்கினால் உண்மையாக நண்பர்களாக பலகும் ஆண் - ஆண், பெண் - பெண் உறவுகள் கூட பெற்றோர், சுற்றத்தின் கண்களுக்கு சந்தேக பார்வையில் தெரிவார்கள்.

குடும்ப நிகழ்ச்சியில் ஒரு பெண் கலந்து கொண்டால், ' உங்க புருஷன் வரலையா ' என்று கேட்பார்கள். கணவன் வந்தால், ' பொண்டாட்டி வரலையா ' என்று விசாரிப்பார்கள். ஓரின சேர்க்கை வளர தொடங்கினால், ' புருஷன் வரலையா ' என்பதற்கு பதிலாக ' இவங்க புருஷன் ஆணா ? பெண்ணா ?' என்ற கேள்வி வரும். இரண்டு பேரில் 'யார் ஆண் மாதிரி இருப்பீங்க ?' போன்ற கேள்விகள் எதிர்காலத்தில் எழும் அபாயம் உள்ளது.



ஓரின சேர்க்கை திருமணத்திற்கு சட்ட அங்கிகாரமே கிடைத்தாலும், சமூக அங்கிகாரம் கிடைப்பது மிகவும் கடினம். மற்ற திருமணம் போல் ஓரின சேர்க்கை திருமணத்தை பார்க்க மாட்டார்கள். அவர்கள் தத்தெடுக்கும் குழந்தையின் எதிர்காலம் அதே நிலைமை தான். பெற்றோர்கள் பெயர் தெரியாமல் இருப்பதை விட ஒரு பால் இனத்தினரை விண்ணப்ப படிவத்தில் அம்மா, அப்பா நிரப்புவதற்கு சங்கடமாக இருக்கும். அந்த குழந்தையும் தன்னை தத்தெடுத்த பெற்றோர்களை புரிந்துக் கொள்வதில் சிரமம் இருக்கும். வெளியே சொல்லுவதற்கு தயங்கலாம்.

ஆண் - ஆண், பெண் - பெண் உடலுறவு வைத்துக் கொள்ளுவதில் மருத்துவ ரீதியாக உடல் தொல்லைகள் ஏற்ப்படும். ஒரு சில மருத்துவர்கள் இதை மறுத்தாலும், பலர் உடல் தொல்லை வரும் என்று நம்புகிறார்கள். ஓரின சேர்ர்கையாளர்களை மனநோயாளிகளாக பார்க்கும் பார்வையும் இன்னொரு காரணம்.

ஓரின சேர்க்கையாளர்கள் திருமணமே செய்துக் கொண்டாலும் சட்டப்படி அவர்கள் உறவுக்கு அங்கிகாரம் இல்லை. எதிர்காலத்தில் ஒருவருக்கு ஏதாவது நடந்தாலோ மற்றவர் அவரின் சொத்துக்களையோ, பணத்தையோ உரிமை கேட்க முடியாது.

ஓரின சேர்க்கை ஆதரிக்க தொடங்கினால், தங்கள் வம்சம் அந்த தலைமுறையோடு நினறுவிடும் என்ற பெற்றோர்களின் பயப்படுகிறார்கள். அதனால், தங்கள் மகள்/ மகன் பற்றி உண்மை தெரிந்ததும் அவர்களை அடித்தோ அல்லது மிரட்டியோ திருமணம் செய்து வைக்க நினைக்கிறார்கள். இரண்டு, மூன்று குழந்தைகள் பெற்ற பெற்றோர்களின் நிலைமை இன்னும் மோசம். ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர் என்று தெரிந்தால் மற்றவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிடும்.

பல வருடங்களாக வாழும் கணவன், மனைவிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டு பிரியும் போது எந்த அங்கிகாரம் இல்லாமல் ஒன்றாக வாழும் ஆண் - ஆண், பெண் - பெண் மட்டும் எவ்வளவு நாள் ஒத்த கருத்தோடு வாழ முடியும். ஒரு சிலர் ஆரம்பத்தில் இருக்கும் தைரியம் வாழும் போது இருப்பதில்லை. இருவரில் யாரோ ஒருவர் மனம் மாறி எதிர்பால்வினரை திருமணம் செய்து கொண்டு இயல்பாக வாழ நினைத்தால், மற்றவர் வாழ்க்கை பாதிக்கப்படும். ஓரின சேர்கையாளர்கள் நீண்ட நாள் ஒன்றாக வாழ்வதில்லை என்ற கருத்து நிலவி வருகிறது.

இந்தியாவில், 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற பண்பாட்டில் வாழ்பவர்கள். நடைமுறையில், பல பெண்களுடன் ஒரு ஆண் உறவு வைத்துக் கொண்டாலும், ஒரு பெண் கணவனுக்கு தெரியாமல் கள்ளகாதல் இருந்தாலும் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற வாசகம் நம் எல்லோர் மனதில் பதிந்து ஒன்று. 'ஒருவனுக்கு ஒருவன்', 'ஒருத்திக்கு ஒருத்தி' என்ற வாசகம் மாற்றி பேச யாருக்கும் மனவராது.

ஆதரவான வாதங்களையும், எதிரான வாதங்களையும் இரண்டு பக்கம் ஆராய்ந்தால் ஒரு விஷயம் மிக தெளிவாக தெரிகிறது.

ஓரின சேர்க்கை எதிர்ப்பவர்கள் ' உடல்' சம்பந்தப்பட்ட உறவாக பார்க்கிறார்கள்.
ஓரின சேர்க்கை ஆதரிப்பவர்கள் 'உணர்வு' ரீதியாக பார்க்கிறார்கள்.


இரண்டு பக்கத்தில் நீங்கள் எந்த பக்கம் என்று முடிவு செய்வதை விட, முதலில் நாம் புரிந்து கொள்வோம்.

Tuesday, July 6, 2010

ஓரின சேர்க்கை - சாதகமான வாதங்கள்

ஜூ 27,2010.

சென்னை கடற்கரையில் ஓரின சேர்கையாளர்கள், திருநங்கைகள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினர். பலர் தன் உரிமைக்காக கோஷங்கள் எழுப்பினர். வானவில் கொடிகளை கையிலேந்தி நடந்தனர். அந்த பேரணியில் வயதானவர்களை பார்த்ததும் பெரும்பாலான பத்திரிகையாளர்களுக்கு அதிர்ச்சி. பரப்பரப்பான தகவல்களை சேகரிக்க அவர்களிடம் நெருங்கிய போது தான் தெரிந்தது அவர்கள் ஓரின சேர்க்கையாளரின் பெற்றோர்கள் என்று !

அந்த போராடத்தில் பங்கு பெற்ற ஒரு அம்மா, " என் பையன் 'கே'னு போன மாசம் தான் தெரியும். எனக்கும், என் கணவனுக்கும் ரொம்ப அதிர்ச்சியா இருந்தது. கொஞ்ச நாள்ல எங்கள நாங்களே சமாதானம் பண்ணிகிட்டோம். அவன் 'கே' நால என் மகன் இல்லனு சொல்ல முடியுமா !" என்றார். மேலும், " என் மகன் சமூக விரோதியில்ல. சமூக பார்வையில வித்தியாசமான பாலுணர்வு உள்ளவன். அவன் உணர்வ நாங்க புரிஞ்சிகிட்ட மாதிரி அவன் மாதிரி இருக்குறவங்களோட பெற்றோரும் புரிஞ்சிக்கனும். என் பையன போல இருக்குறவங்களுக்கு ஆதரவுக்காக எங்க பங்க்கு போராடுறோம்" என்று பெருமையாக கூறினார்.
ஒரு லெஸ்பியன் பெண், " நான் பாலுணர்வால் வித்தியாசமானவள். ஒருவனுடைய திருமதியானவள் என்பதை விட நான் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனக்கு பெண்கள் மீது வரும் ஈர்ப்பு கூட ஆண்கள் மீது வரவில்லை" என்றாள். " பதினெட்டு வயதானவர்கள் தங்கள் துணையை அவர்களே தேர்ந்தெடுக்கலாம் என்று சட்டமே சொல்லும் போது, அவர் ஆணாக இருந்தால் என்ன ? பெண்ணாக இருந்தால் என்ன ?. எதிர்பாலினரை தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று எப்படி இந்த சமூதாயம் கட்டுப்படுத்தலாம் ?" என்று குரல் உயர்த்தியே பேசி இருக்கிறார்.

ஓரின சேர்க்கையை ஆதரிக்க தொடங்கிவிட்டால் பல குடும்பங்களின் அடுத்த தலைமுறை இல்லாமல் போகும் என்று கேட்டதற்கு, ஒரு லெஸ்பியன் பெண் " உலக மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. நாங்கள் இந்தியாவை முதல் இடத்தை அடைய உதவுவதற்கு விருப்பமில்லை. மக்கள் தொகையை கட்டுப்படுத்த ஓரின சேர்கை உதவி தான் செய்கிறது." இந்த பெண் ஒரு ஆஸ்ரமத்தில் இருந்து குழந்தையை தத்தெடுத்து வளர்கிறார். தன் வாரிசாக அந்த குழந்தையின் மீது பாசம் காட்டுகிறார். 'அனாதை' என்ற வார்த்தை ஓரினசேர்க்கையாளர், திருநங்கையர் போன்றவர்களால் குறைக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அவர் பேச்சில் இருந்தது.

**


காதலை கொண்டாடும் படங்களில் இந்த வசனம் இல்லாமல் இருப்பதில்லை.

" லவ் அது ஒரு பிலிங்"
" உலகத்துல காதலிக்காதவங்க யாருமில்ல "
" காதல மறந்திட்டு யாரும் நிம்மதியா வாழ முடியாது"
“ஒருவர் மீது அன்பு, அறவனிப்பு, காதல், பாசம் காட்ட மனசு இருந்தால் போதும். பண காசு தேவையில்லை”

ஆக, காதலிக்க இரண்டு மனது, இரண்டு உயிர் தேவைப்படுகிறது. காதலிக்கும் இரண்டு மனது ஆணும், பெணும் இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அந்த இரண்டு மனதும் ஆண்களுடையதாகவோ, பெண்களுடையதாகவோ இருப்பதால் தான் பிரச்சனையே !

இன்று ‘Living together’ கலாச்சாரம் அமெரிக்காவில் மட்டுமல்ல, இந்தியாவிலும் வளர்ந்து கொண்டு தான் வருகிறது. திருமணமாகல் ஒரே வீட்டில் ஆண், பெண் தங்குகிறார்கள். எந்த நிபந்தனையில்லாமல் ஒன்றாக வாழ்வதால் இவர்கள் குழந்தை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாளைக்கே பிரிய வேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டால், பிரிவதற்கு குழந்தை ஒரு தடையாக இருக்க கூடாது என்பதில் ‘Living together’ ஜோடிகள் நினைக்கிறார்கள். ‘Living together’ பற்றி விமர்சிக்காதவர்கள், ஏன் ஓரின சேர்கை திருமணத்தை எதிர்க்க வேண்டும் ? என்று நினைக்க தான் தோன்றுகிறது.

நிலா ரசிகனின் 'யாரோ ஒருத்தியின் டைரி குறிப்பு' புத்தகத்தில் 'லெஸ்பியன்' பற்றி எழுதிய சிறுகதைக்கு ஒரு வாசகி மின்னஞ்சல் எழுதியதை தனது தளத்தில் வெளியிட்டிருந்தார். அந்த வாசகி, சிறு வயதில் ஒரு ஆண்ணால் பாலியல் தொல்லை அனுபவித்திருக்கிறாள். வளர்ந்த பிறகு அவளுக்கு ஆண்கள் மீதே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தன் தோழியுடன் தான் வாழ்ந்துவருதையும் குறிப்பிடிருந்தார். இந்த வாசகி போல் பல சிறுதிமகள் பாலியல் தொல்லைப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆண்களை வெறுக்க காரணமானவனை தண்டிக்க சட்டத்தில் இடம் இல்லாத போது அந்த பெண்ணின் உணர்வுக்களுக்கு பூட்டு போடுவது எந்த வகையில் நியாயம்.

பலர் ஓரின சேர்க்கையாளர்களை மனநோயாளிகள் என்று கூறுகிறார்கள். இதுவரை ஓரின சேர்க்கை பற்றி படித்த புத்தகங்கள், நண்பர்கள் மூலம் சேகரித்த தகவலில் நான் புரிந்து கொண்டது அவர்கள் மன நோயாளிகள் அல்ல. மனநோயாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று ஒன்று சேர வெருக்கும் போது அவர்கள் மனம் பாதிக்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்கள் அடித்து, மிரட்டி திருமணம் செய்து வைக்கிறார்கள். சுற்றத்தின் உதாசின பார்வையும், மிரட்டலும் தங்கள் உணர்வை மறைக்க முடியாமல் மனதளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு சிலர் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணர்வுகளை கொன்று வாழ்கிறார்கள். தன்னம்பிக்கை, தைரியம் உள்ளவர்கள் தங்கள் பாலுணர்வை வெளிப்படுத்தி துணிச்சலாக வாழ்க்கிறார்கள்.

ஓரின சேர்க்கையில் ஈடுபடுபவர்கள் யாரும் பணமோ பொருளோ எதிர்பார்க்கவில்லை. 'இவர்களும் மனிதர்கள் தான்' என்ற அங்கிகாரத்தை தான் எதிர்பார்க்கிறார்கள்.

திருமணமான ஆண் - பெண் இருவரையும் குடும்பமாக பார்க்கும் சமூகம், ஆண் - ஆண் , பெண் - பெண் என்று ஒன்றாக வாழ்பவர்கள் குடும்பமாக பார்க்க வேண்டும் என்பது தான் இவர்களின் போராட்டம்.

****

அடுத்த பதிவில் ஓரின சேர்க்கை பற்றி எதிரான வாதங்ககளை பார்ப்போம்.

Monday, July 5, 2010

படித்ததும் பார்த்ததும் - 5.7.10

இன்று ( 5.7.10) பெட்ரோல் உயர்வை நாடு தழுவிய பந்த் நடப்பதாக எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னையில் வழக்கம் போல் எல்லா வண்டிகள் செயல்ப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. எப்போதும் போல் கேட்கும் (அ)நியாய விலைக்கு மேலும் 20 ரூபாய் கேட்கிறார்கள். ஸ்ட்ரைக் சமயத்தில் ஆட்டோ ஓட்டுறது எவ்வளவு பெரிய ரிஸ்க். அதுக்கு தான் ரூ.20 யாம் !!!

**
மனம் கொத்தி பறவை

இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஜனரக பத்திரிகைகள் வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பிய சாரு நிவேதிதா, இப்போது ஆனந்த விகடனில் 'மனம் கொத்தி பறவை' என்ற தலைப்பில் புதிய தொடர் எழுதுகிறார். நீத்து சந்திரா, அமீர் போன்ற நடிகர்களுடன் 40 நோடிகள் நடனமாடிய அனுபவத்தை எழுதியிருக்கிறார். நடிகனான எழுத வாய்ப்பு கிடைக்குமோ ?

**

நிஜம் நீதி
சுஜாதா

மிருகங்களை வைத்து நீதி கதைகளை 'நக்கீரனில்' சுஜாதா தொடராக எழுதினார். பின்பு, மேலும் பல கதைகள் சேர்த்து ' நீதி கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக உயிர்மை வெளியீட்டுள்ளது. 1998 ஆண்டிலேயே 'நிஜம் நீதி' என்ற தலைப்பில் பாரதி பதிப்பகம் சுஜாதாவின் நீதிகளை வெளிவந்துள்ளன. மேற் சொன்ன இரண்டு புத்தகங்களை படித்தால், இந்த நூலை படிக்கும் போது உயிர்மை வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் தெரிந்தது. இருந்தாலும், மறுமுறை வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. முழுமையாக வாசித்த பிறகே புத்தகத்தை முடினேன். எழுதியவர் சுஜாதாவாயிற்றே !

**

நாகரத்னா பதிப்பக சார்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' தொகுப்புக்கு எதிர்பார்த்ததை விட கவிதை வந்து கூவிந்துள்ளன. ஒரு வாரத்தில் பதிவர்களிடம் மட்டும் 50 கவிதைகள் வந்துள்ளது. தலைப்பு எதுவும் கொடுக்காததால் பெரும்பாலான கவிதைகள் 'காதல்' சம்மந்தமான கவிதைகள் அனுப்பியிருந்தார்கள்.

இலக்கிய வட்டத்தில் இருந்து மேலும் 50 கவிதைகள் வந்துள்ளது. ஒவ்வொரு கவிதைகளை தேர்வு செய்தவற்கே ஒரு வாரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதைகள் அடுத்த வாரம் பதிவில் அறிவிக்கப்படும்.

கவிதை அனுப்பியவர்களுக்கு நன்றிகள் பல..!!

Friday, July 2, 2010

சுஜாதா விருது பெற்ற 'மில்' நாவல்

ம.காமுத்திரை
விலை.150. பக்.272

2010க்கான சுஜாதா நினைவு போட்டியில் சிறந்த நாவலாக பரிசு பெற்றது.

அதிகார வர்கத்தால் ஒடுக்கப்படும் தொழிலாளிகளில் கதை. நாலாப்புறம் சிதறி கிடக்கும் மில் தொழிலாளிகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கான சங்கம் தொடங்க முடிவு எடுக்க, முதலாளி வர்கத்தினர் முறியடிக்கிறார்கள். ஒவ்வொரு சமயமும் சங்கம் தொடங்க நினைக்கும் போதும் தொழிலாளிகளுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது.

இரண்டு மணி நேரம் வேலை செய்த பிறகு மேஸ்திரி, மாஸ்டர், சுப்பர்வைசர் என்று ஒவ்வொருத்தரிடம் பேசி லிவ் கேட்டு ஒரு தொழிலாளி வெளியே வரும் போது வாட்ச்மென் தடுகிறான். லிப் போட்டதிற்கு மேஸ்திரியிடம் பேப்பரில் கையெழுத்து வாங்கி வர அனுப்புகிற இடம் நம்மை நெகிழ வைக்கிறது. 'சாமி வரம் கொடுத்தாலும் புசாரி வரம் தருனுமே !' என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.



தன் ஊர் மில் தொழிலாளிகளுக்காக நியாயம் கேட்க நாட்டாமையும், பட்டாளத்தாரும் மில் நிர்வாகத்திடம் கேட்கும் இடம் அந்த கதாபாத்திரத்தின் அப்பாவி தனத்தை காட்டுகிறது. எப்படி அரசாங்கத்தால் முதலாளிகளை எதிர்த்து தொழிலாளிகளுக்கு உதவ முடியாத நிலையில் இருக்கிறார்களோ, அதே போல் நாட்டாமையும், பட்டாளத்தாரும் எதுவும் செய்ய முடியாமல் திரும்புகின்றனர். இவர்களின் கதாபாத்திர வடிவில் இன்றைய சமூக போராளிகளை நினைவுப்படுகிறார்.

ட்ரெயினிங் என்ற பெயரில் புது ஆட்களிடம் இலவசமாக வேலை வாங்குவது மில்லில் மட்டுமல்ல இன்று பல தனியார் நிறுவங்களில் நடந்து கொண்டு தான் வருகிறது. மேலான்மை என்று சொல்லி தொழிலாளிகளின் உழைப்பு நாலாப்பக்கமாக சுரண்டப்படுகிறது என்பதை நாசுக்காக சொல்லியிருக்கிறார்.

வட்டார சொல்களில் பயன்படுத்தி முதலாளிகளின் ஆளும் மனப்பான்மையை தொழிலாளிகளின் வசனத்தில் தெரிகிறது. மில் ஊருக்கு வந்தால் பலருக்கு வேலை கிடைக்கும் எதிர்பார்த்த மக்களின் உழைப்பு சுரண்டப்பட்ட பிறகு வெளியூர்க்காரர்கள் வேலை செய்யும் கட்டத்தை படிக்கும் போது, இன்றைய ஐ.டி நிறுவனங்களை மறைமுகமாக காட்டுகிறது.

தொழிலாளிகள் சேராமல் இருப்பது தான் முதலாளிகளின் பலம் என்பதை இந்த நாவல் உணர்த்திகிறது.

கதை களம் வேறாக இருந்தாலும், நடக்கும் கூத்து ஒன்று தான். ஐ.டி என்ற பன்நாட்டு நிறுவனமாகட்டும், நம் உள்ளூர் மில்லாகட்டும் !

***

புத்தகம் வாங்க விரும்பும் நண்பர்கள் கீழ் காணும் முறையில் வாங்கலாம்.

1. பெயர் : K.G.Kannan
வங்கி எண் : 50132 82449
வங்கி : Citibank, Chennai

வங்கியில் பணம் செலுத்திய பிறகு, tmguhan@yahoo.co.in / nagarathna_publication@yahoo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு Subject யில் 'Book Order' போட்டு உங்கள் வீட்டு முகவரி அல்லது தொடர்பு கொள்ளும் முகவரி அனுப்பினால், அடுத்த இரண்டு நாளில் புத்தகங்கள் வந்து சேரும்.

2. M.O / Cheque / DD மூலம் வாங்க விரும்புபவர்கள் 'K.G.Kannan' என்ற பெயரில்,
Nagarathna Pathippagam, 3A., Dr.Ram Street, Paddy field Road, Perambur, Chennai - 11 முகவரிக்கு அனுப்பவும்.

10% கழிவு வேண்டும் என்று விரும்புபவர்கள், நாகரத்னா புத்தகத்தை ஏதாவது ஒன்றை சேர்த்து ஆர்டர் செய்யவும்.

உதாரணத்திற்கு , மில் (விலை.150) + லெமன் ட்ரீ / டைரி குறிப்பு(விலை.50) = 200 * 10% = 180.

தபால் செலவு கிடையாது. புத்தகத்தின் விலை அனுப்பினால் போதும் !!

3. இணையத்தில் வாங்க....

LinkWithin

Related Posts with Thumbnails