வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 17, 2011

என்னுள் ஒரு வேள்வி !

தாசி

படுத்தவனிடம் கேட்பது போல்

தினமும் கேற்கிறேன்

என் மேலாளரிடம்

" நேரமாச்சு... நான் போகனும்"


*


ஒவ்வொரு முறையும்

பேப்பரில் கை தொடைக்கும் போது

பேனாவால் எழுதும் போதும்

என்னை நானே கேள்விக் கேட்டுக் கொள்கிறேன்

"எத்தனை மரங்கள் வெட்டப்பது ?"


*


மனைவியை தீண்டும் போது

என்னையும் அறியாமல்

நினைவுக்கு வருகிறது

"பழைய காதலியை முத்தமிட்ட நினைவுகள்"


*


தெருவோரம் குழந்தைகள்

பிச்சை எடுக்குக்கும் போது

கண் முன் வந்து நிற்கும்

"என் செல்ல குழந்தை"

*

பல கேள்விகளுக்கும்

உருத்தலுக்கும் நடுவில்

பணம் சேர்த்து வைக்கிறேன்

நாளை வாழுவேன் என்ற நம்பிகையில்.....!?

Monday, March 7, 2011

காதல் பொன்மொழிகள் !

காதலுக்காகத் திருமணம் செய்து கொள்வது சவாலானது.
கடவுளால் உதவிக்கு வர முடியாமல் புன்னகைக்கு மட்டுமே முடிகிறது.

- ஜோஷ் பில்லிங்ஸ்

**

முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும்
தாம்பத்ய உறவு எத்தனை பேருக்கு வாய்க்கிறது ?

- அ.வெண்ணிலா

**

தாய் அவளுடைய குழந்தை என்றழைக்கப்படுவதன் பெற்றோர் அல்ல.
மாறாக வளர்ச்சியடைந்த புதிதாக விதைக்கப்பட்ட விதையின் செவிலியாகும்.
ஏறுபவன் எவனோ அவனே பெற்றோர் ஆவான்.
- புகழ்பெற்ற அப்போலஸ் தீர்ப்பு


**

ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான்.
பெண்ணோ ஒரு ஆண்ணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
- ஆஸ்கர் ஓயில்டு


நன்றி :
ஆதலால் காதல் செய்வீர், ரூ.10 (பக்:32),
பாரதி புத்தகலாயம்.

Friday, March 4, 2011

ப(பி)டித்த தத்துவங்கள் !

சதுரங்கத்தில் எல்லா காய்களும் முன்னே கொண்டு செல்பவன் வெற்று பெறுவதில்லை. சில காய்களை பின்னுக்கு தள்ளினால் தான் முன்னேறி வெற்றி கிடைக்கும்.

**

தனிமையில் இருக்கும் போது
சிந்தனையில் கவனமாக இரு !
கூட்டத்தில் இருக்கும் போது
வார்த்தையில் கவனமாக இரு !

**

அன்பை வெளிப்படுத்தும் முன் யோசிக்காதே
கோபத்தை வெளிப்படுத்தும் முன் யோசிக்க மறக்காதே !
-விவேகானந்தர்

**

உனக்கு விதிமுறைகளை பிடிக்கவில்லை என்றால்
அதை பின்பற்று, சிகரத்தை தொடு
விதிமுறைகளை மாற்றியமை !

**

சூரியன் போல் பிரகாசமாக ஓளிர வேண்டும் என்றால்
சூரியன் போல் எரிவதற்கு தயாராக இருக்க வேண்டும்
- அப்தூல் கலாம்

**

என் முதுக்கு பின் பேசுபவர்களைப் பற்றி
நான் கவலைப்படுவதில்லை
காரணம்,
அவர்களை விட இரண்டு அடி
நான் முன் நிற்கிறேன் !

**

நீ வேகமாக நடக்க வேண்டும் என்றால்
தனியாக நட !
நெடுந்தூரம் நடக்க வேண்டும் என்றால்
மற்றவர்களோடு சேர்ந்து நட !!

**

Wednesday, March 2, 2011

புத்தக விற்பனை அனுபவம்

அது ஒரு சிற்றிதழில் ஆண்டு விழா நிகழ்ச்சி. அந்த நிகழ்ச்சியில் தான் முதல் முதலாக 'நாகரத்னா பதிப்பக' சார்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சி அமைப்பாளரின் அனுமதிப் பெற்று தான் புத்தகக் கண்காட்சி நடந்தது. வாசகனாக இருந்த எனக்கு புத்தக விற்பனையாளனாக முதல் அனுபவமும் அது தான். நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் வேளையில் மேடையில் பேசுபவர் மொக்கை போட பாதிக்கு மேற்ப்பட்ட கூட்ட புத்தகத்தை மொய்க்க தொடங்கிவிட்டனர்.

நிகழ்ச்சியில் பார்வையாளராக கலந்து கொண்ட பலர் பேச்சாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். அவர்கள் புத்தகத்தைத் தேடி வந்ததில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. உபயோகம் இல்லாமல் சுய தம்பட்ட பேச்சை கேட்பதற்கு பதிலாக புத்தகத்தை பார்வையிட வந்தார்கள். நிகழ்ச்சி அமைப்பாளர் அரங்கத்தில் கூட்டம் குறைவதை பார்த்து வெளியே வந்தார். பார்வையாளராக வந்தவர்கள் புத்தகத்தை பார்த்ததும், அங்கேயே என்னை கத்த தொடங்கிவிட்டார்.

" வர கூட்ட எல்லாம் ஸ்டாலுக்கு வந்திருச்சுனா... ஹால்ல யாரு இருக்குறது. இதுக்கு தான் யாருக்கு ஸ்டால் போட அனுமதி தரதில்ல...." என்று கத்தினார்.

பல வருடங்களாக நிகழ்ச்சி நடத்துபவர் புத்தகத்தால் கூட்டம் குறைவதை நினைத்து அஞ்சியிருக்கிறார். இந்த வருடம் அவர் ஆண்டு விழா நிகழ்ச்சியில் புத்தக பார்வைக்கு அனுமதி தரவில்லை. ஒரு நிகழ்ச்சியின் கூட்டத்தை புத்தகம் குறைக்க முடியும் என்றால் நிகழ்ச்சிக்கு கூட்டத்தை புத்தகத்தால் சேர்க்கவும் முடியும் என்பதை உணர வேண்டும்.

ஒவ்வொரு அமைப்பினரும் தங்கள் உறுப்பினர் புத்தகங்கள் தங்கள் சங்க நிகழ்ச்சியில் பார்வைக்கு வைக்கலாம். நிகழ்ச்சி கலந்துக் கொள்ளும் எண்ணம் இல்லை என்றாலும், தன் புத்தகத்தை பார்வைக்கு வைப்பதற்காக கண்டிப்பாக கலந்து கொள்வார்.

ஏதாவது நிகழ்ச்சி நடக்கும் போது கண்டிப்பாக நூல் விமர்சன நிகழ்ச்சி நடத்த வேண்டும். நூலுக்கும், எழுத்தாளருக்கும் விளம்பரம் கிடைக்கும். கவியரங்கம், கவிதை வாசிப்பு போன்ற நிகழ்வுகளில் ஆர்வம் காட்டும் அமைப்புகள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.

இன்று எத்தனையோ இலக்கிய அமைப்புகள், சங்கங்கள் பல எழுத்தாளரையும், பேச்சாளரையும் உருவாக்கியிருக்கிறது. ஆனால், எந்த அமைப்பும் அவர்களை வாசகனிடத்திலோ, பார்வையாளனிடத்திலோ சரியாக கொண்டு சென்றதில்லை. ஐம்பது புத்தகம் மேல் எழுதியிருக்கும் எழுத்தாளர்க் கூட திவிரமாக புத்தகம் வாசிக்கும் வாசகனுக்கு தெரியவதில்லை. காரணம், ஐம்பது புத்தகங்களும் நூலக ஆணையை நம்பி போட்டிருப்பது. நூலக ஆணை கிடைத்தப்பின் நூலகத்தில் புத்தகம் உறங்கி கிடப்பது. இன்று பல எழுத்தாளர்களின் புத்தகத்தின் நிலைமை இது தான். எழுத்தாளரின் வீட்டில் தூங்கும். இல்லை என்றால் நூலகத்தில் தூங்கும். நூறு வாசகர்களை அந்த புத்தகம் பார்த்திருக்குமா என்பது சந்தேகம் தான்.

இன்று பலர் வரிசையில் நின்று வங்கியில் பணம் எடுப்பதில்லை. போன் போட்டாலே வீட்டுக்கு மளிகை பொருட்கள் வருகிறது. ஒரு தொலைக்காட்சி பார்ப்பது போய் ஒரு நாளைக்கு நூறு சேனல் பார்க்கிறோம். இப்படி எல்லா விஷயங்களும் நவீனமாகிவிட்ட பிறகு வாசகன் புத்தகத்தை தேடி நூலகத்திற்கோ அல்லது புத்தக கடைக்கோ சென்று வாங்க வேண்டும் என்ற பழைய பாதையில் இருந்தால் புத்தகம் விற்கவில்லை என்ற பழைய புராண கதையை தான் பாட வேண்டியது இருக்கும்.

உண்மையான எழுத்து என்பது உறங்கி கொண்டு இருக்கும் மனிதனின் மனசாட்சியை தட்டி எழுப்புவது. பலரின் புத்தகங்கள் வீட்டில் தூங்கிக் கொண்டு இருக்கும் போது எப்படி அவர்கள் எழுத்து மனசாட்சியை எழுப்ப போகிறது. இதில் இருந்து நாம் மாறுப்பட வேண்டும். வாசகனை தேடி புத்தகம் வர தொடங்க வேண்டும்.

இன்று நன்றாக எழுத தெரிந்தவன் மட்டும் நல்ல எழுத்தாளன் இல்லை. அதை விற்பனை செய்ய தெரிந்தவன் தான் நல்ல எழுத்தாளராக தெரிகிறான். அதற்கு நல்ல உதாரணம் சாரு நிவேதிதா. புத்தகக் கண்காட்சிக்கு தவறாமல் அஜாராகிவிடுவார். தன் பதிவில் தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி ஒரு வரியாவது சேர்த்துக் கொள்வார். தான் எழுதிய புத்தகத்தைப் பற்றி எழுத்தாளானே பேச கூச்சப்பட்டால் அடுத்தவர் எப்படி பேசுவார்கள் ?

எங்கள் பதிப்பக புத்தகங்களை விற்பனை செய்யும் நோக்கத்தில் தான் முதலில் ஸ்டால் போட தொடங்கினோம். ஆனால், எத்தனையோ நல்ல புத்தகங்கள் விற்க தெரியாதவர்களை பார்க்கும் போது அவர்கள் புத்தகமும் வாங்கி விற்க We can Books என்ற புத்தக விநியோகத்தை தொடங்கினோம். இது வரை எங்கள் பதிப்பக நூல்களுக்கு நூலக ஆணை கிடைக்கவில்லை. சொல்லும் படி பெரிய ஆர்டர் கிடைத்ததில்லை. எங்களின் பெரிய மார்க்கெட்டிங் பலமே நிகழ்ச்சிகளில் ஸ்டால் போடுவது தான்.

இந்த ஒரு வருடத்தில் என் பதிப்பக புத்தகங்களை விற்றதை விட மற்றவர்களின் புத்தகத்தை விற்றது தான் அதிகம். ஆனால், புத்தகம் விற்ற பணத்தை நூலின் ஆசிரியரிடம் கொடுக்கும் போது அவர்களின் எழுத்து விற்பனையாவதில் சந்தோஷாப்படுகிறார்கள்.

இந்த கட்டுரை முடிவில் நான் சொல்ல விரும்புவது உங்கள் இலக்கிய அமைப்பு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, மாதந்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி 'புத்தக பார்வை' என்று ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து புத்தகங்களை விற்பனைக்கு வையுங்கள். நூல் வெளியீட்டு விழாவுக்கு பிறகும் உங்கள் புத்தகம் ஒவ்வொரு நிகழ்ச்சியில் விற்பனையாக உதவியாக இருக்கும்.

இதை எடுத்து நடத்த உங்கள் அமைப்பில் ஒருவரை தேர்வு செய்து அவரிடம் பொறுப்பை ஒப்படையுங்கள். புத்தக பார்வை நடத்த விருப்பம் உண்டு, ஆனால் ஆட்கள் இல்லை என்று நினைப்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளுங்கள். நான் வருகிறேன். ( சுய விளம்பரம்)

Tuesday, March 1, 2011

நன்றி... நன்றி... !!!

இணைய புத்தகக் கண்காட்சி சிறப்பாக நடந்து முடிந்தது.

இணையத்தில் புத்தகம் வாங்குபவர்கள் குறைவாக இருப்பதால் ஐந்து பேர் வாங்கினாலே மிக பெரிய விஷயம் என்று இருந்தோம். ஆயிரம் ரூபாய்க்கு நூல் விற்றாலே 'புத்தகக் கண்காட்சி' வெற்றி என்று கருதுதினோம். ஆனால், ஒன்பது பேர் இந்த புத்தகக் கண்காட்சியில் ஆர்வமாக புத்தகம் ஆர்டர் கொடுத்திருந்தார்கள். ரூ.2000 வரை புத்தகம் விற்பனையாகியது. (இதில், கோரியர் மற்றும் பதிப்பாளர்களுக்கு கொடுக்க வேண்டியது போக 300 ரூபாய் கிடைத்தது.)

இந்த ரூ.300 க்கா இவ்வளவு குவ்வல் என்று பலர் நினைக்கலாம்.

புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுவது ஒரு பதிப்பாளரின் கடமையோ, புத்தகத்தை வாங்க தூண்டுவது ஒரு விற்பனையாளரின் கடமை. இது வரை தேடி சென்று புத்தகம் வாங்கினால் தான் கழிவு விலையில் புத்தகம் கிடைக்கும் என்ற நிலையில் இருந்து, வீட்டில் இருந்துக் கொண்டே 10% கழிவுடன், மேலும் கோரியர் செலவு இல்லாமல் புத்தகம் பேரலாம் என்று ’We Books’ அறிமுகப்படுத்தியுள்ளது. இதை புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள் எதிர்காலத்தில் பின்பற்றலாம் என்று எதிர்பார்க்கிறேன்.

ரூ.1000 மேல் மளிகை சமான் வாங்கினால் பொருட்கள் வீடு தேடி வரும் போது ரூ.1000 மேல் வாங்கும் புத்தகம் ஏன் வீடு தேடி வரக் கூடாது ?

ஒரு முன்னனி பதிப்பகம் தவிர இந்த புத்தக கண்காட்சியில் இடம் பெற்ற சிறு பதிப்பாளர்கள் தங்கள் புத்தகங்களை 50% கழிவுடன் கொடுத்தது இந்த புத்தகக் கண்காட்சி யோசனைக்கு உருதுணையாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுயிருக்கிறேன்.

இந்த புத்தகக் கண்காட்சி பற்றி தங்கள் பதிவில் வெளியிட்ட நண்பர்களுக்கும், குறிப்பாக கேபிள் சங்கர் (புத்தக கண்காட்சி பற்றி இவர் ‘கொத்து போரோட்டா’வில் எழுதிய பிறகு மூன்று ஆர்டர் கிடைத்தது) அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

அடுத்த முறை இணைய புத்தகக் கண்காட்சி நடத்தும் போது 100 புத்தகளோடு வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஒரு மாதத்தில் தினமும் மின்னஞ்சல் பார்த்து பதில் அனுப்பி தூங்குவதற்கு 11, 11:30 யானது. இனி கொஞ்சம் நிம்மதியாக தூங்குவேன்.

LinkWithin

Related Posts with Thumbnails