வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Saturday, March 4, 2017

இரண்டு நகைச்சுவை அனுபவம்

இன்று ஒரு பா.ஜ.க நண்பரிடம், “என்னங்க உங்க ஆளு இல. கணேசன் காஷ்மீர தியாகம் பண்ணலாம் சொல்லாரு” என்றேன். 

அவர் கோபமாக, “யோவ். அவரு எப்பய்யா அப்படி சொன்னாரு...?” 

”ஆமாங்க... ’ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம்’ சொன்னாரே!” 

“அவரு ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்காக சொன்னாரு... நீங்க இல்லாத கதை ஏன் கட்டுறீங்க...?”

 “மாநிலத்த தியாகம் பண்ணனும் முடிவு பண்ணிட்டீங்க... அது தமிழ்நாடா இருந்தா என்ன, காஷ்மீரா இருந்தா என்ன...? ” 

“உங்கள மாதிரி ஆளுங்க தான், கருத்த திசைத்திருப்பி பிரச்சனைய உருவாக்குறீங்க...” 

“ஏன் கருத்த திசைத்திருப்புற Copyrights முழுக்க உங்ககிட்ட மட்டும் தான் இருக்கா ? “ என்றேன். 

அதற்கு மேல் அவர் பேசவில்லை. அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார்.

**

எங்கள் அலுவலகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த ஒருவன், “உங்க ஊரில சாமியார்களுக்கு இவ்வளவு மரியாதையா? பிரதமர் எல்லாம் வந்து பார்க்குறாங்க.” என்று தனது சக நண்பரிடம் கேட்டிருக்கிறார். 

“அப்படியெல்லாம் இல்ல. அந்த சாமியார் மீது ஏகப்பட்ட சர்ச்சைகள் இருக்கு. அவரு அவ்வளவு பெரிய ஆளு இல்ல” என்று அந்த நண்பர் பதிலளித்திருக்கிறார்.

“அப்போது எதுக்காக கவர்மெண்ட் பஸ்ல அந்த சாமியார் படம் மாட்டியிருக்கு” என்று வட மாநிலத்தை சேர்ந்தவன் கேட்க, அந்த நண்பர் அதிர்ந்துவிட்டார். 

”எதோ நோட்டீஸ், விளம்பரம் ஒட்டியிருக்கும். நீ தப்பா புரிஞ்சிருப்ப...” என்று சொல்ல, அவன் ஆணித்தரமாக எல்லா பஸ்ஸிலும் அந்த சாமியார் போட்டோ பார்த்திருப்பதாகக் கூறினான். 

ஒரு நிமிடம் யோசித்த நண்பர் Googleல் ஒரு படத்தை தேடிக் காட்ட “இவர் படமா பாரு?” என்று கேட்க, “ஆமாம்.” என்று வட மாநிலத்தவன் பதிலளித்தான்.

 “அடப்பாவி ! இது திருவள்ளுவர் படம்டா..” என்று நண்பர் கூறினார். 

வள்ளுவருக்கு இப்படியெல்லாம் சோதனை வர வேண்டும்.

Tuesday, November 29, 2016

Demonetization நகைச்சுவை !!

செந்தில் : அண்ணே ! நிலைமை சரியாயிடிச்சு. பாருங்க ATMல கூட்டமே இல்ல...

கவுண்டமணி : டேய் ! அந்த ATM காசே இல்லடா !!

செந்தில் : அதனால என்ன அண்ணே ! ATMல கூட்டமே இல்லல்ல.... அப்போ எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு தானே அர்த்தம்.

கவுண்டமணி : டேய் ! ATMல பணம் இருந்தா தானே காசு எடுக்க ஆளுங்க வருவாங்க...

செந்தில் : நீங்களே சொல்லுங்க... ATMல கூட்டம் இருக்கா ? இல்லையா ? ... கூட்டம் இல்லனு போது எல்லாருக்கிட்டையும் பணம் வந்திடுச்சு அண்ணே ! 

கவுண்டமணி : ஐய்யோ ராமா $#$#$ !!



**
கைதி 1 : எதுக்கு உன்ன கைது பண்ணாங்க... ?

கைதி 2 : அரசாங்கத்துக்கு உதவி பண்ணேன். கைது பண்ணிட்டாங்க...

கைதி 1: அட பாவமே ! அப்படி என்ன உதவி பண்ண..?

கைதி 2 : கவர்மெண்ட் கிட்ட பணமில்லனு அவங்களுக்கு உதவியா நானே சொந்தமா ரூ.2000 நோட்ட பிரிண்ட் பண்ணேன். அதுக்கு கைது பண்ணிட்டாங்க...

**
இன்று பாரத் பந்த் (28.11.16) சொன்னாங்க....

எத்தன மணி, எந்த சேனல்ல படம் போடுறாங்கனு சொல்லவே இல்ல..



**
ரூபாய் நோட்டு அடிக்கும் ஆர்டரை சிவகாசி பிரிண்ட்டிங்க்கு கொடுத்திருந்தால் இரண்டு நாட்களில் தேவையான பணத்தை அச்சடித்திருப்பார்கள்.

**
இன்று ஒருப் பெண் personal loanக்காக போன் செய்ய... “ Rs.XXX Amount லோன் வேண்டும்..” என்றேன்.

“உங்கக்கிட்ட Pay slip, PAN card, Bank details எல்லாம் இருக்கா சார்...” என்று கேட்டார்.

“இருக்கு. லோன்ன Cash தானே தருவீங்க...” என்று கேட்டேன்.
"இல்ல சார்... உங்க அக்கவுண்ட்ல போட்டுடுவோம். நீங்க Withdraw பண்ணிக்கலாம்...”

“ஏம்மா... Bankல இருக்குற என் காச Withdraw பண்ண முடியலைனு தான் லோன் கேக்குறேன்” என்றேன்.

போன் கட்...

**


ரேஷன்ல
அரசிக் கொடுத்து பார்த்திருப்ப
பருப்பு கொடுத்து பார்த்திருப்ப
சக்கரை கொடுத்து பார்த்திருப்ப
மண்ணணெய் கொடுத்து பார்த்திருப்ப

ரேஷ்னவிட பேங்க்ல
கூட்டத்த பார்த்திருக்கிறியா...
வெறித்தனமா
அடிச்சுட்டுப் பார்த்திருக்கிறா...
நம்ப பணத்த ரேஷன்ல கொடுக்குற மாதிரி
அளவா கொடுப்பாங்க...
ஒரு நாளைக்கு ரூ.4000 தான் தருவாங்க...
பார்க்குறியா... பார்க்குறியா... !

 **
பள்ளி நாட்களில் India is My Country என்று உறதிமொழி எடுக்கச்சொன்னார்கள். இனி ’India is Mai (மை) Country’ என்று சொல்ல கட்டளையிடுவார்கள்.

**
வீட்டிலிருக்கும் 500, 1000 நோட்டுகளைக் என் மனைவி கொடுத்தார். எனக்கு தெரியாமல் வீட்டில் நடந்த ஊழல் இப்போது தெரிய வந்திருக்கிறது

**

மோடி வெளிநாட்டு போறாரு கவலைப்பட்டாங்க. ஒரு அறிவிப்பு கொடுத்தாரு, அவரு வெளிநாட்டுலேயே இருந்திருக்கலாம் நினைக்க வச்சிட்டாரு

Monday, July 18, 2016

நான் ரஜினி பேசுறேன் !!

ரஜினி அலுவலகத்தில் தொலைப்பேசி மணி ஒலிக்கிறது..

ரஜினியின் மேனேஜர் : ஹெலோ !

நான் : நா குகன் பேசுறேன். ரஜினி சார் கிட்ட பேசனும்.

ரஜினியின் மேனேஜர் : என்ன விஷயமா பேசனும் ?

நான் : கபாலி படத்துக்கு வாழ்த்து சொல்லனும்.

ரஜினியின் மேனேஜர் : சார் பிஸியா இருக்காரு. அவர் ரசிகர் போன் பண்ணதா சொல்றேன்.

நான் : சார் ! நான் கமல் ரசிகன். இருந்தாலும், ரஜினி படத்துக்கு வாழ்த்து சொன்னேன் சொல்லுங்க…

கடுப்பாகி ரஜினி மேனேஜர் போன் கீழே வைத்திருப்பார்.

**

ஒரு மணி நேரம் கழித்து…. மீண்டும் போன் செய்தேன்.

நான் : நா குகன் பேசுறேன். ரஜினி சார் கிட்ட பேசனும்.

ரஜினியின் மேனேஜர் : உங்க வாழ்த்த ரஜினி சார் கிட்ட சொல்லிட்டேன்.

நான் : நீங்க சொன்னீங்கனு நா எப்படி நம்புறது ?

ரஜினியின் மேனேஜர் : அதுக்கு ..?

நான் : ரஜினி சார் கிட்ட போன் கொடுங்க கேட்குறேன்.

ரஜினியின் மேனேஜர் : யோவ் ! போன் வைட்டா !!
**



அரை மணி நேரம் கழித்து…. மீண்டும் போன் செய்கிறேன்.

நான் : நா குகன் பேசுறேன்.

”யோவ் ! உனக்கு வேலையில்ல. எத்தன வாட்டி சொல்லுறது…” என்று ரஜினியின் மேனேஜர் கத்துவதை கேட்டு ரஜினி வர, மேனேஜர் விஷயத்தை சொல்கிறார்.

ரஜினி போன் ரிசிவரை வாங்கி… “ நான் ரஜினி பேசுறேன்”

“சார் நீங்களா !!! உங்கக் கூட பேசுவேன் நினைக்கவே இல்ல. கபாலி படத்துக்கு வாழ்த்துகள். இன்னும் நீங்க நிறைய படம் பண்ணனும். ஆனா, உங்க வயசுக்கு சூட்டாகுற கேரக்டர் மட்டும் பண்ணுங்க…” என்று சொல்லி அவரை நேரத்தை அதிகம் எடுத்துக் கொள்ளலாமல் போன் வைத்தேன்.

***

இதில் இருந்து என்ன தெரிகிறது… ரூ.3க்கு மூனு போன் செய்தால், ரஜினியிடம் நேரடியாக பேசலாம்.

”Wish Rajnikanth on Kabali! SMS, KABALI YOURNAME YOUR message and send to 53030 (Rs.5/SMS). Send your love to Rajni with Airtel!” 


போன்ற செய்தியை நம்பி பணத்தை வீணடிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். 


நீங்க கபாலிடா சொல்லி சம்பாதிக்க நினைச்சா விடுவோம்மா !! 

யாருகிட்ட !! 

குகன்னா... இராமாயணம் படத்தில ராமருக்கு மீன் கொடுத்து, அவர படகுல ஏத்தி ஓட்டுற படகோட்டி  குகன் நினச்சியா.. !!” 

குகன்டா !!!

Tuesday, December 22, 2015

மகன் தந்தைக்கு எழுதும் கடிதம் ! (நகைச்சுவைக்காக மட்டுமே)

ஒரு மகன் தன் பெற்றோருக்கு இப்படி கடிதம் எழுதுகிறான். 

 Disclaimer : நகைச்சுவைக்காக மட்டுமே.... 

** 

வணக்கம், 

உங்கள் அன்பு மகன் எழுதுகிறேன். 

கடந்த பதினைந்து ஆண்டுகளாக என்னை கஷ்டப்பட்டு படிக்க வைத்தீர்கள். என்னை படிக்க வைக்க நீங்கள் அடைந்துள்ள கஷ்டத்தை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். 

இனி அந்த கவலை உங்களுக்கு வேண்டாம். ’படிப்பே வேண்டாம்’ என்று முடிவு செய்திருக்கிறேன். நான் உங்கள் மகன். எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். அதனால், வீட்டு வாடகைக்கு வைத்திருந்த ரூ.10000 பணத்தை பீரோ உடைத்து சீட்டு விளையாட எடுத்திருக்கிறேன். 

உங்களுக்காக நான். உங்களோடு எப்போதும் நான் இருப்பேன். இப்போதைக்கு இரண்டு நாள் வீட்டுக்கு வர மாட்டேன். விரைவில் இப் பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. 

உங்கள் மீது கொண்ட அன்பின் அடிப்படையில், நான் வீட்டு செலவுக்காக ரூ.1000 விட்டு வைத்திருக்கிறேன். இரண்டு நாட்களில் ரூ.10000யை ரூ.20000 மாற்ற முழு வீச்சில் செயல்படுவேன். 

என் அரிய முயற்சிக்கு தோள் கொடுக்கும் நண்பர்களாக நாய் சேகர், ப்ளேட் பக்கிரி, போகிரி ராஜா, புது நண்பனான அசால்ட் சேது என்னுடன் அயராது உழைப்பார்கள். அவர்களை முழுவதுமாக நம்புகிறேன். 

அதில் வெற்றிப் பெற்ற பிறகு, உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமப்பேன். எனக்கென்று தனி வாழ்க்கைக் கிடையாது. 

எனக்குச் பொதுநலம் அறவே கிடையாது. என் உறவு நீங்கள் தான். நான் வைத்திருக்கும் அனைத்து பொருட்களும் நீங்கள் வாங்கிக் கொடுத்தது. என் இல்லமும் உள்ளமும் என் பெற்றோராகிய நீங்கள் தான். 

நீங்கள் வைத்த பெயரை மறந்து போகும் அளவுக்கு, ’தண்டச்சோறு’, ’தருதலை’, ’உதவாக்கரை’ என்று அழைக்கின்ற சொல்லுக்காகவே என் வாழ்நாட்கள் முழுக்க வாழ விரும்புகிறேன். 

இது போன்ற சம்பவங்களில் பல முறை நான் மீண்டு வந்திருக்கிறேன். மீண்டும் ஒரு முறை மீண்டு வந்து, உங்கள் புகழை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தனயன் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். 

நன்றி! 

உங்கள் அன்பு மகன் 
தருதலை.

Tuesday, April 29, 2014

என் அலுவலக நாடகங்கள் !! ( வீடியோ)

என் அலுவலகத்தில் நான் கதை, வசனம் எழுதி நடித்த நாடகங்கள். அதன் வீடியோ இணைப்பையும் குறிப்பிட்டுள்ளேன். நண்பர்கள் தங்கள் கருத்தை கூறவும்.

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால்.. (Version 1.0)



**

ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால்.... (Version 2.0)




**

சீரியல் பார்க்கும் குடும்பம்




Thursday, November 29, 2012

மால் அல்ல.... கோல்மால் !

“ஏயேய் ! மச்சி தீபாவளி புதுப்பட ரீலிஸ் சீ.டி வந்திருக்கு… வரியா எங்க ஹோம் தியேட்டர்ல பாக்கலாம்.”

“ நா வரலடா ! அந்த படம் நல்லா இருக்குனு கேள்விப்பட்டேன். அதனால தியேட்டர்ல போய் பார்க்க போறேன். அதுமட்டுமில்ல, சீ.டி பாக்குறது அடுத்தவங்க உழைப்ப திருடுறதுக்கு சமம்”

“அடபாவி ! என்னடா நல்லவன் மாதிரி பேசுற. இரண்டு வாரம் முன்னாடி தான் நம்ப எல்லோரும் சேர்ந்து புது நடிகர்கள் நடிச்ச படத்த சீ.டியில பாத்தோம்.” 

“அது மொக்கப்படம். சீ.டியிலாவது படத்த பார்த்தது பெரிய விஷயம்” 

நண்பனிடம் பேசி முடித்து புது மாப்பிள்ளை அளவுக்கு டிரெஸ் போட்டுக் கொண்டான் சவுண்ட் சந்தோஷ். யார் கண்டது அங்க கல்யாணத்துக்கு பொண்ணுக் கூட கடைக்கலாம். ஸாரி… கிடைக்கலாம்.

 [‘சவுண்ட்’ சந்தோஷ் எதையுமே சவுண்டாக ஒரு முறை சொல்லுவான். அது அப்புறம், மற்ற குடிமகன் போல் மனதுக்குள் குமுறிக் கொள்வான். வேறென்ன செய்ய முடியும் ? சராசரி இந்தியர்களைப் போல் அவனும் சராரரி குடிமகன் தான்.]

நண்பர்கள் அனைவரும் அந்த படத்தை பார்த்து விட்டதால் தனியாக சென்றான்.

முதல் தடவையா மால்ல சினிமா பாக்க போறோம். பஸ்லைய போவாங்க…!! ஓ.சி பைக்கில ஏ.சி மாலுக்கு நுழைத்தேன். பார்கிங்யில் நுழையவிடாமல் செக்யூரிட்டி நிறுத்தினான். வண்டி நம்பரை பார்த்து எதோ டைப் செய்து ஏ.டி.எம் கார்ட் ஒன்று கொடுத்தான். பார்க்கிங்க்கு பணம் கூட வாங்கல…!!

 “ அட ! இந்த மாலில் செலவு பண்ணுறதுக்கு ஏ.டி.எம் கார்ட் தராங்க…! இப்ப தெரியுது இங்க ஏன் இவ்வளவு கூட்டமா இருக்கு !!

 “சார் வண்டி பார்க்கிங் டோக்கன்” என்றான்.

 “பராவாயில்லையே ! டோக்கன் பச்ச, சிவப்பு, கலர் டோக்கனா கொடுப்பாங்க… பிட்டு பேப்பர் தருவாங்க. இப்போ கார்ட்டுல தருயிங்க…” 

“இல்ல சார் ! இந்த கார்ட்ல நீங்க வந்த டைம் இருக்கும். வண்டியில வெளியே எடுக்கும் போது ஹவருக்கு பணம் கொடுக்கனும்”

 “ஏய் ! என்ன பார்த்தா உனக்கு என்ன மாதிரி தெரியுது. ஹவர் சைக்கில் கடையில காசு கொடுத்து சைக்கில் எடுப்போம். என் வண்டிய வைக்கிறதுக்கு ஹவர் கணக்கு எதுக்குடா பணம் தரனும்”

 “சார் ! மால்னா அப்படி தான்” என்றான்.

‘போங்கடா’ என்று வண்டிய வைத்தேன். அடுத்த வாட்டி வரும் போது பஸ்ல வரும் வண்டிய வெளியே பார்க் பண்ணணும் நினைத்துக் கொண்டேன். 

நுழையும் போது பை எல்லாம் பரிசோதனை நடந்தது. இப்போ எல்லாம் தீவிரவாதி எங்க குண்டு வைக்கிறாங்கனு யாருக்கு தெரியும். நம்ப நல்லது பேக் செக் பண்ணுறாங்க…!

 ஒரு பெண்மணி பையில் இருந்து உணவு பொருள் எல்லாம் வெளியே எடுத்து, “ உள்ளே எடுத்துப் போக அனுமதியில்லை” என்றனர்.

 “அடபாவிங்களா! வெடிகுண்ட உள்ளவிட்டுடுங்க. சாப்பாடு பொருள எடுத்து போகக்கூடாது சொல்லுங்க..”

என் அப்பத்தா எல்லாம் புலியோதர, எலுமிச்ச சாதம் கட்டிதான் வீட்டைவிட்டு வெளியே வருவாங்க. அவங்க மட்டும் இங்க வந்தாங்க நீ செத்தேடா….!! என்று நினைத்துக் கொண்டேன். தியேட்டரில் படம் ஆரம்பிக்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு…!

ஸ்டைல்லா பெப்ஸி வாங்கி குடிச்சு பொண்ணுங்க சைட், ஒரு புட் ஷாப்பில் பெப்ஸி கேட்டேன். பெப்ஸி டின் வாங்கி திறந்தார். “பிப்டி ரூபிஸ்” என்றான். “என்ன பார்த்தா முட்டாளா தெரியுதா... 300 ml ரூ.18, ரூ.20 தான் இருக்கும். இங்க என்னடா ரூ.50 சொல்லுறீங்க…”

 அவன் எதுவும் பேசாமல் சிரித்தான். டின்னில் எவ்வளவு இருக்குனு பார்த்தா… அட திருட்டு பசங்களா…. Selected Channel போட்டு இருக்காங்க ! அப்போ நீங்க சொல்லுறது தான் விலை..!!!

இவன் கிட்ட பேசுனதுல 15 நிமிஷம் போச்சு. அவசரப்பட்டு ஓபன் பண்ணிட்டேன். இரண்டு பிகரு நம்மைய பாத்திட்டு இருக்கு. மனசு இல்லாம அம்பது ரூபா கொடுத்து தொலைச்சேன்.

நம்மக்கிட்ட இருந்து கொள்ளை அடிக்கிறது அவங்களுக்கு குச்சமாயில்ல. நம்ம பணத்த திருப்பிக் கேட்டா மட்டும் ஒரு மாதிரியா பாக்குறாங்க. என்ன மாலுடா இது !!

அவங்கல ஸ்டைல்லா லுக் விட்டு ஒவ்வொரு கடையா வெடிக்கை பாத்து… தியேட்டர் குள்ளே போலானும் இருக்கும் போது… “சார் ! பெப்ஸியை தியேட்டர் காம்ளேக்ஸ் குள்ள எடுத்து போகக் கூடாது” என்றான்.

“ டேய் ! பெப்ஸிய மால்ல தான் வாங்குன. எதுக்கு வெளியே இருந்து தான் எடுத்து வரக் கூடாது. இங்க வாங்குனது கூடவா ?”

 “ தியேட்டர்ல புட் வொர்ல்ட் இருக்கு. உங்களுக்கு வேணும்னா அங்க வாங்குக…”

 அமாடா ! மறுபடியும் ரூ.20 பெப்ஸிய ரூ.50 வாங்குவாங்க… போடா …ங்கோ… என்று மனதில் திட்டிக் கொண்டேன். மால்க்குள்ள இந்தியா - பாகிஸ்தான் பார்டர் எப்படி பிரிச்சு வச்சிருக்காங்க. அங்க இருந்து இங்க கொண்டுப் போகக் கூடாதுனு, இருங்க இருந்து அங்க போகக் கூடாதுனு.

இவங்க இஷ்டத்துக்கு நாம நடந்துக்குறதுக்கு நா எதுக்கு பணம் தந்து மால்குள்ள வரனும் ?



படத்துக்கு நேரமாச்சு. அரை மணி நேரம் பொறுமையா குடிக்கலாம் இருந்தா, இவனால அவசர அவசரமா குடிக்க வேண்டியதா இருக்கு.!

செக்யூரிட்டி பண்ண அக்க போரால ஹீரோவோட இன்ட்ரோ பாட்டை கோட்டைவிட்டேன். ஜாலியா படம் போச்சு. இன்ட்ரவல் வந்ததே தெரியுல. முதல் முதல்லா மால்ல படம் பாக்க வர அவசரத்துல எதுவும் சாப்பிடல. வெளியே வந்து ஏதாவது பிரியாணி சாப்பிடலாம் பார்த்தா… கொய்யால எல்லா பீசா, பர்கர் மட்டும் தான் இருக்கு. ஆனா, சிக்கன் பிரியாணி விக்கிற விலையில விக்குறாங்க.

பசி தாங்க முடியில. ரூ.200க்கு பர்கர் காம்போ ஒன்னு வாங்குன. கொடுக்குற காசுக்கு ரொம்ப சூப்பரா இருக்கும்னு நினைச்சா. ஐஞ்சு நாள் முன்னாடி வச்ச பண்ண கொடுக்குறான். உள்ள காய்கறி வெட்டி வச்சு இவ்வளவு அநியாய விலைக்கு கொடுக்குறாங்க. நம்ப உருளைகிளங்க அழக வெட்டி ப்ரை பண்ணதால… பிரென்சு நாட்டுல சேத்துட்டாங்க. அதான் பிரென்சு ப்ரை.

 மனசு வராம கொடுத்த ரூ.200 க்கு ரூ.20க்கு தான் சாப்பிட்டேன். இவ்வளவு செலவு பண்ணி மால்ல பார்த்ததுல… படம் நல்லா இருந்துச்சி. படம் மட்டும் கொடுமையா இருந்திருந்து… அவ்வளவு தான். டைரக்டர் வீட்டுக்கு போய் செலவு பண்ண காச திருப்பிக் கேட்டுருப்பேன்.

மொக்கப்படத்த தியேட்டர்ல பார்க்குறவங்களோட கோவம் இப்ப புரியுது.

வெளியே கூட்டத்துல வண்டிய எடுத்து வரும் போது வேலை செய்யுறவன் கொடுத்த ஏ.டி.எம் கார்ட கேட்டான். கொடுத்தேன். மிஷின்ல போட்டு…கொஞ்ச நேரத்துல ரூ.80 சொன்னான்.

ரூ.120 கொடுத்து படம் பார்த்தேன். என் வண்டிய வைக்குறதுக்கு ரூ.80 வா ?? ஹவருக்கு ரூ.20 என்றான்.

“அங்க… ரூ.15 போட்டிருக்கே ?” “அது வார நாள்ல… இது விக்கென்ட். ஹவருக்கு ரூ.20 பா” என்றான்.

“ மூனு மணி நேரப் படத்துக்கு கொஞ்ச முன்னாடி வந்ததால ரூ.20 பைன்னாட்டா. நல்லா இருப்பீங்க. இது மால்லா … கோல்மால்லா…”

அடுத்த உழைப்ப திருடக்கூடாதுனு காசுக் கொடுத்து தியேட்டர்ல படம் பாக்க வந்தா… நம்ப உழைப்ப திருடுறாங்க. இப்ப தெரியுது ஏன் எல்லா படத்தையும் சீ.டியில பாக்குறாங்க… பேசாம நானும் சீ.டியில படம் பார்த்திருக்கனும்.


Monday, October 22, 2012

சிரிப்பு சினிமா : The Dictator (2012)

நீண்ட நாட்கள் ஆனது இப்படி ஒரு ஆங்கிலப்படத்திற்கு நான் சிரித்து ரசித்து பார்த்தது. சமக்கால சர்வதேச அரசியலை இந்த அளவுக்கு பகடி செய்யும் அளவிற்கு படம் வந்திருக்காமா என்று தெரியவில்லை. முழுக்க முழுக்க நல்ல டைம் பாஸ் படம் தான்.

சார்லி சாப்லின் ‘The Great Dictator’(1940) படத்தின் கதை தான். வடையா நாட்டின் சர்வாதிகாரியான அலாதின் வெளிநாட்டுக்கு எண்ணெய் விற்க மறுக்கிறான். ஆனால், அவனின் ஆலோசகர் தமீர் அலாதின்னை கொல்ல முயல, அலாதின் நகல் கொல்லப்படுகிறான். அலாதினின் சர்வாதிகாரத்தை எதிர்த்து பல நாடுகள் கண்ட தெரிவித்தும், அவன் கண்டுக் கொள்ளவில்லை. ஐ.நாவில் தலையீட்டால் அங்கு விளக்கம் அளிக்க அலாதின் அழைக்கப்படுகிறான்.



அலாதின் அமெரிக்காவில் கால் பதிய அவனுக்கு எதிர்ப்பலைகள் பெறுகிறது. அங்கு விடுதியில் தங்கியிருக்கும் போது ஒரு உளவாளியால் அலாதின் கடத்தப்படுகிறான். அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியில், உளவாளியை கொன்று தனது தாடியை இழக்கிறான். தாடி இல்லாததால் அவன் சாமான்ய மனிதனாக அமெரிக்காவில் உளாவுகிறான். இதைப் பயன்ப்படுத்திக் கொண்டு தமீர் அலாதின் நகலை வைத்து, வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வருவதாக ஐ.நா அமைப்பு முன் சொல்கிறான். ஐ.நா உறுப்பினர் கைதட்டி அவனது முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த சதி திட்டத்திற்கு அலாதின் ஆலோசகர் தமீர் இருக்கிறான். வடையாவில் மக்கள் ஆட்சிக் கொண்டு வந்து சீனாவுக்கு எண்ணெய் வளத்தை விற்க சதி செய்திருந்தான்.

பெரிய சர்வாதிகாரியான அலாதின் சராசரி காவலர்கள் தாக்கும் அளவிற்கு தள்ளப்படுகிறான். அவனுக்கு சொயே என்ற பெண் உதவுகிறாள். இதற்கிடையில், அலாதின் கொல்லச் சொன்ன விஞ்ஞானியான நாடல் உயிருடன் இருப்பதைப் பார்க்கிறான். அதுமட்டுமில்லாமல், அவன் கொல்லச் சொன்ன அனைவரும் அமெரிக்காவில் லிட்டில் வடையாவில் உயிருடன் இருப்பதை பார்க்கிறான். நாடல் பின் தொடர்ந்து லிட்டில் வடையாவுக்கு செல்ல, அவனை அடையாளம் கண்டுக் கொள்கிறான் நாடல். அங்கு அலாதினுக்கு என்ன ஆனது ? அவன் எப்படி மீண்டும் தன் சர்வாதிகாரத்தைப் பெற்றானா ? வடையாவில் மக்கள் ஆட்சி வந்து, தமீர் சதி வென்றதா ? என்று வயிறு வலிக்க சிரித்து பார்த்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

சார்லி சாப்லின் “The Great Dictator” படத்தில் எப்படி ஹிட்லரை கிண்டல் செய்தாரோ, அதேப் போல் இதில் இஸ்லாமிய நாடுகளையும், அதன் தீவிரவாதத்தையும், கொஞ்சம் அமெரிக்காவையும் நையாண்டி செய்திருக்கின்றனர்.

அலாதின் அமெரிக்காவில் வளம் வரும் போது, “அமெரிக்கா எயிட்ஸின் பிறப்பிடம்”, ஹோட்டல் அறையில், “ ஒரு மணி நேர இன்டர்நெட்டுக்கு 20$ வாங்குபவர்கள், என்னை சர்வதேச தீவிரவாதி என்கிறார்களா !!!” என்று அதிர்வதில் அமெரிக்காவை நக்கல் செய்திருக்கிறார்.

வடையாவில் மக்கள் ஆட்சி வரும் என்று ‘நகல்’ அலாதின் சொல்ல, சீனா அதிபர் “சீனாக் கூட மக்கள் ஆட்சி நாடு தான்” என்று சொல்லி சிரிப்பது சீனாவுக்கான வசனம். அதுவும், சீனா அதிபரின் மனைவி ஆங்கில அறிவு இல்லாதவர் என்று காட்டுவதும், அதை அதிபரே கிண்டலடிப்பது போன்ற காட்சிகள் சீனாவின் உளவுத்துறை பகையை சம்பாதித்திருக்கிறார்கள்.

அலாதினின் ஆங்கில புலமை, குறிப்பாக லிட்டில் வடையாவில் தன் பெயரை மறைத்து வேறு பெயர்கள் சொல்லும் இடம், சொயே பெண்ணின் கடையில் வேலை செய்வது, கூலிப்படை பெண்ணுடன் சண்டை, இறுதிக் காட்சியில் இரண்டு கட்டிடத்து நடுவில் தொங்குவது… என்று சிரிப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்லும் காட்சிகள்.

மறைந்த லிப்யாவின் சர்வாதிகாரியான கடாபியை நினைவுப்படுத்தும் விதமாக அலாதின் பாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இறுதிக்காட்சியில், சர்வாதிகாரத்தை விமர்சிப்பவர்களுக்கு மக்கள் ஆட்சி எதிராக பேசும் அலாதின் வசனங்கள் பல உண்மைகள் சொல்கிறாது. நகைச்சுவை படமாக இருந்தாலும், சொல்ல வந்த செய்தி ‘ஏ’ ரக நகைச்சுவையை கொஞ்சம் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் பார்த்திருக்கலாம்.

Wednesday, October 12, 2011

உடல் பயிற்சி செய்பவர்களுக்கு !!!

தினமும் தேக பயிற்சி, டயட், யோகா என்று தங்கள் உடல் மேல் அதிகம் அக்கரை செலுத்தும் நண்பர்களுக்காக வந்த மின்னஞ்சல். அனுப்பியவர் நாகேஷ்வர். அதன் தமிழாக்கம்.

**

தினமும் நடப்பதும், சைக்கிளில் செல்வதும் உடலுக்கு நல்லது என்கிறார்கள். அப்படியென்றால், எல்லா போஸ்ட்மென்களின் உடல் சீரும் சிறப்புமாகவும் இருக்க வேண்டும்.

உடல் எடையை குறைக்க நீச்சல் அடிப்பது நல்லது. அப்படியென்றால், சுறா மீன் தினமும் நீந்திக் கொண்டு தான் இருக்கிறது. மீன், தண்ணீர் இரண்டையும் தவிர எதையும் சாப்பிடுவதில்லை. அப்படி ஏன் சுறா குண்டாக இருக்கிறது?

தினமும் ஓடினால் சக்கரை வியாதி குறையும் என்கிறார்கள். அதிகம் ஓடும் முயல் ஏன் 15 வருடங்கள் வாழ்கிறது?

ஆமை ஓடுவதில்லை. அதிகம் நடப்பதில்லை. எதுவுமே செய்வதில்லை. ஆனால், 450 வருடங்கள் வரை உயிருடன் இருக்கிறது.

**

மின்னஞ்சல் இத்தோடு முடிகிறது.

இதனால் சகலமானவர்களுக்கு தெரிவிப்பது என்னவென்றால் ......

உடல்பயிற்சிக்கு குட்பை !
உணவிற்கும், தூக்கத்திற்கும் ஹாய் ! ஹாய் !!

Friday, September 30, 2011

ஒரு நாடகம் அரங்கேறியது !!



2009ல் ரெஸிஷன் நேரத்தில் “ஐ.டி ஊழியர்கள் ஹோட்டலில் வேலை செய்தால் ?” என்ற தலைப்பில் நகைச்சுவை நாடகம் எழுதி பதிவிட்டிருந்தேன். அதை, சென்ற வருடம் எங்கள் அலுவலக 'Humour Club' க்காக அரங்கேற்றினோம்.

ஹோட்டல் முதலாளியாக வருவன் அடியேன் தான். ஹோட்டல் சரக்கு மாஸ்டராக சுஜய் நடித்தார். அவருடைய உடல் மொழி, டயலாக் டெலிவரி நாடகத்திற்கு மேலும் நகைச்சுவையுட்டியது.

பதிவியிடும் போது இல்லாத நகைச்சுவை வசனங்களை கூடுதலாக சேர்த்துள்ளோம். அதன் (சுமாரான) வீடியோ தற்போது தான் யூட்யூப்பின் ஏற்றினோம்.

நண்பர்கள் பார்த்துவிட்டு கருத்துக்களை கூறவும். நன்றி.

Friday, February 25, 2011

நல்லா பண்ணுடா !!

புத்தகம் விற்பதில் எந்தளவுக்கு நான் தீவிரமாக இருக்கிறேன் என்று என்னால் சென்ற ஞாயிறு (20.2.11) அன்று உணர முடிந்தது. அன்று மாலை, என் பள்ளி நண்பனின் ஜானகிராமன் திருமண மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி. பள்ளி முடிந்து 12 வருடம் கலித்து நினைவில் வைத்துக் கொண்டு பலரை அழைத்துயிருக்கிறான். அதே சமயம், வாரம் ஒரு நாளவது புத்தக ஸ்டால் போட வேண்டும் என்று பதிப்பகத்தில் தீவிரமாக இருக்கிறேன்.

இந்த இடத்தில் ஜானகி ராமனை பற்றி அவசியம் சொல்லியாக வேண்டும். நண்பர்களின் திருமணத்திற்கு போனில் அழைத்தாலே நேரில் சென்று பரிசோடு வாழ்த்துபவன். அழைத்த நண்பனை விட அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளும் நண்பர்களை பார்க்க அவ்வளவு ஆர்வம் அவனுக்கு உண்டு. மாப்பிளையை வாழ்த்தும் போது, "கங்கிராட்ஸ் மச்சான் ! நல்லா பண்ணுடா " என்பான். மணப்பெண் உட்பட பக்கத்தில் இருப்பவர்கள் சிரிப்பார்கள். ஒரு சிலர் முகம் சுலிப்பார்கள். அதைப் பற்றி எல்லாம் கவலைப்பட மாட்டான். எல்லோர் திருமணத்தில் இந்த வசனத்தை மாற்றுவதில்லை. என் திருமணம் நிகழ்ச்சி உட்பட எங்கள் பள்ளி நண்பர்கள் நிகழ்ச்சியில் இப்படி தான் செய்துயிருக்கிறான்.

இப்போதைக்கு ஜானகிராமனை புராணத்திற்கு தற்காலிக புள்ளி வைத்துவிடுவோம்.

அன்றைய தினம் 'LLA' நூலகத்தில் புத்தக ஸ்டால் போட்டேன். அங்கு இரண்டு நிகழ்ச்சி இருந்தும் கூட்டமும் இல்லை, எந்த புத்தகமும் விற்பனையாகவில்லை. ஒரு விதத்தில் நல்லதாக பட்டது. ஏழு மணிக்கே அந்த இடத்தை விட்டு நகர்ந்து வீட்டுக்கு வந்தேன். ஜானகிராமனுக்காக வாங்கிய பரிசை பேக் செய்து 8 மணிக்கு திருமண மண்டபத்திற்கு சென்றேன்.

என் வகுப்பில் படித்த 53 மாணவர்களில் 23 பேர் வரை வந்திருந்தார்கள். 12 வருடம் கலித்து பழைய நண்பர்கள் ஒருகினைந்து ஒரு இடத்தில் சந்திப்பது மிக பெரிய விஷயம். ஒவ்வொருவருக்கும் பல வேலைகள். குடும்பத்திற்காக செலவு செய்வது ஞாயிறு ஒரு தினம் தான். அந்த தினமும் நண்பனுக்காக ஒதுக்குவது மிக பெரிய சவாலக இருக்கிறது. ( ஒரு வேளை புத்தகம் நன்றாக விற்பனையாகியிருந்தால் நான் கூட சென்று இருப்பேனா என்பது சந்தேகம் தான்.)

அதற்காக ஜானகிராமனை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

23 பேரில் ஒரு சிலரை பள்ளி முடித்து இன்று தான் தான் சந்திக்கிறேன். ஸ்ரீ குமாருக்கு தலை முடி முழுவதும் காலி. பிரசாத், பிரதாப் இருவருக்கும் பாதி மூடி காலி. ஒல்லியாக இருந்த ஞான பிரகாஷ், அன்பு இருவரும் தொப்பை போட்டு இருந்தார்கள். கோபி, பிரபு மேலும் உடல் பெருத்து இருந்தார்கள். சச்சின், சரத் இருவருக்கும் திருமணமாகி அவரவர் மனைவியுடன் வந்திருந்தார்கள். எனக்கும் தலை முடி நரைத்து இருந்தது. நாங்கள் பள்ளியில் படிக்கும் போது எங்களுக்கு இருந்த உருவத்தை தொலைத்திருந்தோம். ஆனால், மீண்டும் பள்ளியில் சென்று வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோர் மனதில் இருந்தது.

’நட்பு பிரியாதது’ தத்துவம் சொன்னாலும் இரண்டு பேர் பெயரை நான் மறந்திருந்தேன். என்னைப் போல் ஒரு சிலர் பெயரை நினைவுப் படுத்த சிரம்மப்பட்டார்கள்.

கல்லூரி நண்பர்களுக்கும், பள்ளி நண்பர்களுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. கல்லூரி நண்பர்கள் பெரும்பாலும் ஒரே துறையில் இருக்க வாய்ப்புள்ளது. (என் கல்லூரி நண்பர் பெரும்பாலும் I.T துறை). பள்ளி நண்பர்கள் அப்படியில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் இருந்தனர். இருவர் சொந்தமாக தொழில் நடத்திக் கொண்டுயிருக்கிறார்கள். சினிமா, சிவில், மார்க்கெட்டிங் என்று அவரவர் துறை கதைகளை பேசிக் கொண்டுயிருந்தோம்.
அடுத்த நாள் வேலை இருப்பதை நினைக்கும் போது சாப்பாட்டு ஞாபகமும், நண்பனை வாழ்த்த வேண்டும் என்ற ஞாபகமும் வந்தது. அப்போது, பிரபு தன் திருமண நிகழ்ச்சியில் ஜானகிராமன் சொன்னதை எங்களிடம் சொல்லி, “அவன ஒரு வழி பண்ணனும்...” என்றான்.

திருமணம் ஆன மூன்று பேர் அதற்கு அதரவாக இருந்தனர். எல்லோரும் கொண்டு வந்த பரிசு போருட்களையும், மொய் கவட்ரையும் வாங்கி பெயருக்கு பக்கத்தில் எழுதினான். ஒரு சிலர் சொல்லியும் அவன் கேட்பதாக இல்லை. எங்களில் பலர் அவன் எழுதுவதை நினைத்து சிரித்துக் கொண்டு இருந்தோம். எங்கள் பரிசு பொருளில் பிரபு எழுதுவதை ஒன்றும் சொல்ல முடியவில்லை.

சாப்பிடுவதற்கு முன்பு, மாப்பிள்ளை வாழ்த்த அனைவரும் பெரும் படையாக மேடை ஏறினோம். மணப்பெண்ணின் பக்கத்தில் இருந்த ஜானகியை தளுவியும் , கை கொடுத்தும் நாங்கள் சொன்ன வாழ்த்து, “ மச்சான் கங்கிராட்ஸ், நல்லா பண்ணுடா” என்று சொல்லி பரிசு பொருட்களை கொடுத்தோம்.

பரிசு பொருளை வாங்கிய மணப்பெண்ணின் அம்மாவின் முகம் மாறியிருந்தது. “நல்லா பண்ணுடா” என்று எழுதியதை பார்த்தது.

Thursday, February 17, 2011

நகைச்சுவை குறும்படங்கள்

Youtubeயை துழாவிய போது கிடைத்த சில நகைச்சுவை காலேஜ் குறும்படங்கள்.logic, Camera angle என்று எதுவும் பார்க்காதீர்கள். ஜாலியாக ரசியுங்கள்.

உங்கள் கல்லூரியில் படித்த நண்பர்கள், நினைவுகள் கண்டிப்பாக ஞாபகத்தில் வருவார்கள்.

சின்னக்களவாணி



2 இட்லி 2 வடை



முத்தம்

Friday, December 17, 2010

2010 சிறந்த அரசியல், சினிமா !!!

இப்போதெல்லாம் அரசியல், சினிமா இரண்டு தனியாக பிரித்து பார்க்க முடியவில்லை. ஒன்று சினிமாவை வைத்து அரசியல் நடக்கிறது. இல்லை என்றால் சினிக்காரர்கள் அரசியல் செய்கிறார்கள். அதனால், இரண்டும் சேர்ந்து காக்டைல் நகைச்சுவை.

இந்த வருடம் சிறந்த அரசியல்வாதி ?
ஆ.ராசா
(அறுபது வருட இந்திய அரசியல் நடந்த எல்லா ஊழலை தன் ஒரே ஊழலில் முந்தி சென்றுள்ளார். )

இந்த வருடம் அரசியல் புது வரவு ?
'இளைய தளபதி' விஜய்.
(ரஜினி மாதிரி வருவேன்...வருவேன்... சொல்லிக்கிட்டே இருக்காம நிஜமாவே வந்திருவாரோ நினைக்க வச்சிட்டாரு)

குஷ்பு ( ஒரு வழியா எல்லா கேஸ்ல இருந்து வெளியே வந்தாச்சு )

இந்த வருடம் சிறந்த கட்சி ?
காங்கிரஸ்
( ஒருவர் தி.மு.கவுக்கு எதிராக பேசுவார்.
இன்னொருவர் தி.மு.கவோடு தொழமையாக இருப்பார்.)

அடுத்த வருடம் யார் யாரோட கூட்டனி ?
அந்த முடிவு எடுக்க தெரியாம தானே எல்லா கட்சியும் தவிச்சிக்கிட்டு இருக்கு.(அதுவரைக்கும் பத்திரிகை நல்ல விற்பனையாகும்)

2011ல்ல யாரு ??

ஜெயலலிதா : தி.மு.க தவிர எல்லா கட்சிகளும் அ.தி.மு.கவுடன் கூட்டனி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார்கள். 2011ல் மீண்டும் நாங்கள் ஆட்சி அமைப்போம்.

விஜய்காந்த் : என் தலைமையை ஏற்றுக் கொள்ளும் கட்சியுடன் கூட்டனி வைத்துக் கொள்ள தயார்.

ராமதாஸ் : தமிழ் நாட்டில் மூன்றாவது அணி அமைந்து, அவர்கள் ஆட்சி அமைய வேண்டும்.

சரத்குமார் : எங்களால் யாருக்கும் ஆபத்து இல்லை. எந்த கட்சியும் எங்களை பார்த்து பயப்பட வேண்டாம்.

கலைஞர் : தமிழக மக்கள் எங்கள் ஆட்சியை விரும்பவதால் அடுத்த வருடம் தேர்தலே இல்லை.


இந்த வருடம் நடந்த சிறந்த கூட்டம் ?
சினிமாக்காரர்கள் பத்திரிகையாளர்களை திட்டியக் கூட்டம் தான்.
(குடும்ப பெண்களை (!) தவறாக எழுதியதை கண்டித்து பத்திரிகை குடும்ப பெண்களை திட்டியது)

இந்த சிறந்த தண்டனை ?
முதல்வர் முன் உண்மையை மேடையில் சொன்னதற்காக அஜீத் முதல்வர் பேரன் படத்தில் நடிப்பது.


இந்த வருடம் டாப் 5 படங்கள்


சன் டி.வி :-

1.எந்திரன்
2.சிங்கம்
3.தில்லாலங்கடி
4.சுறா
5.ஆடுக்களம் ( படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியேவா !!!)


கலைஞர் டி.வி :-

1.பெண் சிங்கம்
1.மதராசபட்டினம்
2.தமிழ்படம்
2.பையா
3.விண்ணை தாண்டி வருவாயா
3.மைனா
4.நான் மகான் அல்ல
4.பாஸ் (எ) பாஸ்கரன்
5.வ - குவாட்டர் கட்டிங்
5.இரத்த சரித்திரம்

( 18 எம்.பி வச்சிக்கிட்டு 8 மந்திரி சீட் கேட்டவராச்சே !)

ஜெயா டி.வி :-

எல்லா படங்களை கலைஞர் வாரிசுகள் வாங்கிவிட்டதால், இந்த நிகழ்ச்சி ஜெயா டி.வியில் ரத்து செய்யப்படுகிறது.

மக்கள் டி.வி :-

இந்த வருடம் தமிழ் படமே வரவில்லை.

இந்த வருடம் சிறந்த நடிகர் ?
விஜய் தான். ( அரசியலில் நிஜமா நடிக்க தெரியனும். சினிமாவிலே சுமாரா நடிக்கிறாரு. எப்படி சமாளிக்க போறாரோ !!)


இந்த வருடம் சிறந்த நடிகை ?
தமனா ( சன் டி.வி. சிபாரிசு) மற்றும் நமீதா (கலைஞர் டி.வி சிபாரிசு )

எந்த வருடமும் சிறந்த தயாரிப்பாளர் ?
சன் குழுமம்

Wednesday, November 10, 2010

குண்டக்க மண்டக்க - 1

[ பார்த்திபன் - கல்யாண தரகர், வடிவேலு – மாப்பிள்ளை ]

வடிவேலு : ஊருல எல்லாரும் பொண்ணு பாக்குற... எனக்கும் ஒரு பொண்ணு பாரேன்...
பார்த்திபன் : எப்படி உனக்கு பொண்ணு திரிஷா மாதிரி இருந்தா பொதுமா...?

வடிவேலு : ஐயோ வேண்டாம்பா... ஒரு வாட்டி ஐஸ்வர்யா மாதிரி பொண்ண கல்யாணம் பண்ணிக்கினும் நிச்சதுக்கே... உன்னால என் மீண் கடையே போச்சு... சுமாரா பொண்ணு இருந்தா சொல்லு...
பார்த்திபன் : சரி இவ்வளவு தூரம் கேக்குற... எனக்கு தெரிஞ்ச ஒரு பொண்ணு வீடு இருக்கு.. உனக்காக போய் பேசுறேன்...

வடிவேலு : நானும் வரேன்..
பார்த்திபன் : ஏன்டா... இப்படி அலையுற...?

வடிவேலு : நானும் பொண்ண பார்த்த மாதிரி இருக்கும்ல..
பார்த்திபன் : சரி வந்து தொல...

வடிவேலு : ( இப்பவே சலிச்சுக்குறான்... எதோ நமக்கு கல்யாணம் ஆனா சரி....)

பெண் வீட்டில்......

பார்த்திபன் : சார்... நான் சொல்லல... ஒரு நல்ல மாப்பிள.. அது இவரு தான்...
வடிவேலு : வணக்கம்ங்க....
'பயில்வான்' ரங்கநாதன் : மாப்பிள கருப்பா இருந்தாலும் கலையாதான் இருக்கீங்க... அம்மா சாந்தி மாப்பிளைக்கு காபி கொண்டு வா....

பெண் வந்து காபி கொடுக்க...



வடிவேலு : பொண்ண எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....
'பயில்வான்' ரங்கநாதன்: அவ எங்க வீட்டு வேலைக்காரிங்க... நா எல்லா பொண்ணையும் அம்மா தான் சொல்லுவேன்...
வடிவேலு : அப்போ பொண்டாடிய....
பார்த்திபன் : உனக்கு கல்யாணம் ஆகனும்னா... கொஞ்ச நேரம் வாய முடு...

வடிவேலு : சரிப்பா... நீயே பேசு.. ( நமக்கு கல்யான நடக்ககுறதுக்கு இவன் பேச்சு எல்லாம் கேக்க வேண்டியதா இருக்கு...)
ரங்கநாதன் : அம்மா ஆர்த்தி... மாப்பிளைக்கு வந்து நமஸ்காரம் பணிக்கோமா...
'குண்டு' ஆர்த்தி : வணக்கம்....

வடிவேலு : வணக்கம்... (பெண்ணின் அப்பாவிடம்) எனக்கு பொண்ணு ரொம்ப பிடிச்சுருக்கு... பெரியவங்க நீங்களே நல்ல நாள பாருங்க...
'குண்டு' ஆர்த்தி : அப்பா..நான் அவருக்கிட்ட ஒரு விஷயம் பேசனும்...
ரங்கநாதன்: கல்யாணத்துக்கு அப்புறம் பேசும்மா...

பார்த்திபன் : எதோ பொண்ணு ஆசப்படுது.... ( வடிவேலுவிடம் ) டேய்... பொண்ணுக்கிட்ட பக்குவம்மா பேசு..
வடிவேலு : சரிப்பா... பொண்ணுங்க கிட்ட எனக்கு பேச தெரியாதா....

'குண்டு' ஆர்த்தியும், வடிவேலு தனியாக மாடியில்....

'குண்டு' ஆர்த்தி: என்ன உங்களுக்கு பிடிச்சிருக்கா...?
வடிவேலு : பிடிச்சதுனால தானே கல்யாணதுக்கு தேதி பார்க்க சொன்னேன்..

'குண்டு' ஆர்த்தி : என்னக்கும் உங்கள பிடிச்சிருக்கு... கல்யாணதுக்கு அப்புறம் நமகிட்ட எந்த ஒலிவு மறைவும் இருக்க கூடாதுனு நினைக்குறேன்...
வடிவேலு : அடி கிருப்புள்ள... நானும் அதையே தான் நினைச்சேன்... கல்யாணத்துக்கு முன்னாடி நமக்குள்ள இவ்வளவு பொருத்தம் பாரு...

'குண்டு' ஆர்த்தி : உங்ககிட்ட ஒரு உண்மைய சொன்னா... எங்க அப்பாகிட்ட சொல்லமாடிங்கல...

வடிவேலு : நம்ம விஷயத்த நமக்குள்ள தான் இருக்கும்... உங்க அப்பா கூட நமக்கு மூனாவது மனுஷன் போதுமா...தைரியமா சொல்லு...

'குண்டு' ஆர்த்தி : எனக்கு மூனு மாசம்...
வடிவேலு : அடி சிருக்கி... எல்லா பொம்பளையும் வயசு குறைச்சு சொல்லுவாங்கனு தெரியும்... நீ இவ்வளவு குறைச்சு சொல்லுற...

'குண்டு' ஆர்த்தி : நான் சொன்னது வயசுயில்ல.... என் வயத்துல வளர கருவ....
வடிவேலு : ( அ...ஆ.... இந்த பார்த்திபன் பைய வழக்கம் போல பிரச்சனையில மாட்டிவிட்டானே... சரி சமாளிப்போம்... )

வடிவேலு : இதோ பாரும்மா... நான் ஒன்னும் தியாகி கிடையாது... உங்க அப்பா கிட்ட சொல்லி கல்யாணத்த நிருத்த சொல்றேன்...
'குண்டு' ஆர்த்தி : நீங்க என்ன கல்யாணம் பண்ணலைனாலும் பரவாயில்ல... இந்த விஷயத்த எங்க அப்பா கிட்ட சொல்லாதீங்க...

'குண்டு' ஆர்த்தி காலில் விழுந்து கண்ணீர் சிந்த...

வடிவேலு : சரி..விட்டு.. சொல்ல... எனக்கும் உனக்கும் ஒன்னுமில்ல போது நான் ஏன் சொல்ல போறேன்...
'குண்டு' ஆர்த்தி : என் வயத்துல வளர கருவுமேல சத்தியம் பண்ணுங்க...

வடிவேலு : என்னது.... வயத்துல வளர குழந்த மேல சத்தியம் பண்ண முடியாது... உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ...
'குண்டு' ஆர்த்தி : (அழுதபடி) இப்போ நீங்க சத்தியம் பண்ணலனா.... என் சாவுக்கு நீங்க தான் காரணம் லெட்டர் எழுதி நான் தற்கொலை செஞ்சிக்குவேன்...

வடிவேலு : அடிபாவி புள்ள... ஒரு கல்யாண பண்ணிக்க ஆச பட்டதுக்கு என்ன கொலை கேஸ்சுல மாட்டவச்சிடுவ போலிருக்கு...
'குண்டு' ஆர்த்தி : சத்தியம் பண்ணுறீங்களா இல்லையா....

வடிவேலு : ஏம்மா... இப்படி அதட்டி பேசுற.... சத்தியம் தானே... பண்ணுறேன்... உன் வயத்துல வளர குழந்த மேல சத்தியமா நீ கற்பமா இருக்குறத உங்க அப்பா கிட்ட சொல்ல மாட்டேன் போதுமா....

(இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் வர போகுதோ....)

பார்த்திபன் : வாடா... என்ன பொண்ணுகிட்ட மனசு விட்டு பேசுனியா...

கடுப்பான வடிவேலு.... மெதுவாக பார்த்திபனிடம்...
வடிவேலு : யோவ்... பொண்ணு மூனு மாசம் கற்பமா இருக்கு... எப்படியாவது கல்யாணத்த நிருத்து...

பார்த்திபன் : அப்படியா…! பொண்ணு கற்பமா இருக்கு சொல்லியே கல்யாணத்த நிருத்துறேன்...
வடிவேலு : ஏன் உயிருக்கு வேட்டு வைக்காம விட மாட்டியா... அப்படி சொன்னா அவ தற்கொல பண்ணி..அதுக்கு நான் தான் காரணம் லெட்டர் எழுதி செத்துபோவேனு மிரட்டுரா.. நீ தான் எதாவது ஐடியா பண்ணி நிருத்தனும்....

பார்த்திபன் : என்ன நம்பிட்டேல.. விடு நான் பார்த்துகுறேன்....
வடிவேலு : உன்ன நம்புறேன்... எப்போவும் போல இப்பவும் என்ன கவுத்துடாத...

பார்த்திபன் : சரி... நான் இருக்கேன்... (ரங்கநாதனிடம் ) சார்... மாப்பிளைக்கு எவ்வளவு பொடுவீங்க...
ரங்கநாதன் : எதோ என் சத்திக்கு முடிஞ்சது.... ஒரு இருபது சவரன் நகை, நான் இருக்குற வீடு அவ்வளவு தான் என்னால முடியும்..
பார்த்திபன் : அட என்னங்க நீங்க... மாப்பிள்ளை கலையா இருக்காரு நீங்களே சொல்லிட்டீங்க... ஒரு நூறு சவரன் நகை, காரு, பங்கலா மாதிரி வீடு கொடுத்தா நல்ல இருக்கும்...
ரங்கநாதன் : அவ்வளவும் பண்ணனும் ஆச தான்... ஆனா பணம் இல்ல தம்பி...

வடிவேலு : பணம் இல்லாத நீ எய்யா பொண்ணுக்கு கல்யாணம் பண்ணனும் நினைக்குற.... உன் பொண்ண கல்யாணம் பண்ணிக்க முடியாது...போய்யா...
ரங்கநாதன் : டாய் எவ்வளவு தைரியமிருந்தா... போலீஸ் காரண் கிட்ட வரதட்சனைய கேப்ப....முடியாதுனு திமார வேற பதில் சொல்லுற... என் பொண்ண நீ கல்யாணம் பண்ணலைனாலும் பரவில்ல...உன்ன மாதிரி ஆ ள உள்ள போடனும். நடடா ஸ்டேஷனுக்கு...



வடிவேலு : ஐயா...ஐயா.. உங்க கிட்ட உண்மைய சொல்லிடுறேன்... நீங்க எல்லா பொண்ணுங்களையும் அம்மா கூப்பிடுறீங்க... ஆனா ஒருத்தன் உங்க பொண்ண ‘அம்மா’ ஆக்கிடான்... உங்க பொண்ணு மூனு மாசம்...
ரங்கநாதன் : ஜெயில போடுவேன் பயந்து என் பொண்ண பத்தி தப்பா பேசுற... உன்ன ஸ்டேஷன் போய் அடிக்கிறத விட... உன்ன இங்கையே அடிச்சாதான் ஏன் கோபம் திரும்...

வடிவேலு : ஐயோ..அடிக்காதிங்க..அடிக்காதிங்க...பார்த்திபா...காப்பாத்து...
பார்த்திபன் : சார்...நீங்க எவ்வளவு பெரிய அதிகாரி... இப்படி பண்ணலாம்மா...

வடிவேலு : அப்படி நியாயம் கேளு...
பார்த்திபன் : இப்போ இவன அடிச்சா...இவன் சொன்னது உண்மை ஆயிடும்... ஸ்டேஷன் கொண்டு போய்யி நல்ல அடிங்க... இல்ல போர வழியில என் கவுண்டர் பண்ணுங்க...

வடிவேலு : அடபாவி... என்ன பொணமா ஆக்காம விடமாட்டான் போல... (மெதுவா எஸ்கேப் அயிடுவோம்...)
வேலைக்காரன் : ஐயா..நம்ம ஆர்த்தி அம்மா தூக்கு மாட்டி செத்துடாய்யா.
ரங்கநாதன் : என் பொண்ண தப்பா பேசி தற்கொல செஞ்சிக்க வெச்சிடியடா....

வடிவேலு: ஐயோ..ஐய் ஐயோ.. நான் எதுவும் பண்ணல... பார்த்திபா...(பார்த்திபன் அங்கு இல்லை) அடபாவி... என்ன பிரச்சனையில மாட்டிவிட்டு நீ தப்பிச்சிடியே...

வேலைக்காரன் : சாவுக்கு காரணம் வடிவேலுனு லெட்டர் எழுதி வச்சிடு தான் செத்துருக்காங்கய்யா...
வடிவேலு : ஆ.... இப்போ கொலை பழி வேறைய்யா.... ஆள விடுங்கடா சாமி....
ரங்கநாதன் : உன்ன கொள்ளாம்ம விடமாட்டேன்.......

(இது ஒரு மறுபதிவு)

Wednesday, October 27, 2010

மின்னஞ்சலில் வந்த நகைச்சுவை

ஒரு பிச்சைக்காரன் இன்னொரு பிச்சைக்காரனிடம் " நெத்து நா தாஜ் ஹோட்டல்ல நாஸ்தா துண்ணேன்"

"மெய்யாலுமா !" என்று வியந்தான் இரண்டாம் பிச்சைக்காரன்.

"நெத்து ஒரு மவ ராசன் 100 ரூபா பிச்ச போட்டாரு. அந்த தூட்ட வச்சு சோலா ஹோட்டல்ல 1000 ரூபாய்க்கு துண்ணேன். சப்லையரு தூட்ட கேட்க இல்ல சொன்னேன்."

" அடி பின்னியிருப்பாங்களே ! "

" இரண்டு அடி அடிச்சு போலீஸ்கிட்ட விட்டுட்டாங்க "

"அப்புறம் ??"

" என் கிட்ட இருந்த 100 ரூபா கொடுத்தேன். விட்டுட்டான் "

***

கணவன் மனைவி இடையே பெரிய சண்டை.

கோபத்தில் மனைவி தன் அம்மாவிடம் போனில், " எனக்கும் அவருக்கும் மறுபடியும் பெரிய சண்ட. நா உன் கூட வந்திருக்கேன்" என்றாள்

" இல்லம்மா... ! உன் புருஷன் செஞ்ச தப்புக்கு வருத்தப்படனும். நா வந்து உன் கூட தங்குறேன் " என்றாள்.

***


கடவுளை கேட்டால் எதுவும் கிடைக்கும் என்று அம்மா சொல்ல, அப்பாவிடம் கேட்க பயந்து கார்த்திக் என்ற சிறுவன் ஐந்நூறு ரூபாய் கேட்டு கடவுளுக்கு கடிதம் எழுதினான்.

ஆனால், எந்த விலாசத்துக்கு அனுப்ப வேண்டும் என்று ரொம்ப நேரம் யோசித்தான். எந்த அட்ரஸ் போட்டால் சீக்கிரம் போகும் என்று யோசித்து கடைசியில் நிதியமைச்சருக்கு அனுப்புகிறார். அவர் அலுவலகத்தில் கடிதத்தை பார்த்து நிதி அமைச்சருக்கு தெரிவிக்கின்றனர்.

சிறுவன் மனது புண் படக்கூடாது என்பதற்காக கடவுள் பெயரில் இர நூறு ரூபாய் அனுப்பி வைக்கிறார்.

கொஞ்ச நாட்களில் அந்த சிறுவனிடம் இருந்து பதில் வருகிறது. நிதி அமைச்சர் ஆர்வமாக திறந்து படித்தார்.

அன்புள்ள கடவுளுக்கு,

நீங்கள் அனுப்பிய பணம் கிடைத்தது.

எதற்கும் வரி போடும் அரசாங்கம், நீங்கள் அனுப்பிய ஐந்நூறு ரூபாய்க்கு ரூ.300 வரி வாங்கி கொண்டு தான் அனுபியிருக்கிறார்கள்.

அன்புடன்,
கார்த்திக்

Tuesday, August 10, 2010

தாரகேஷ் – Pre KG



பெண் குழந்தை என்றால் வாயாடும். கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அதிகார தோரனை அதிகமாக இருக்கும். ஆனால், தாரகேஷ் ( என் மூன்று வயது மகன்) பேச்சிலும் சரி, வார்த்தையால் விளையாடுவதிலும் சரி பெண் குழந்தையை விட மிஞ்சிவிடுவான்.

ஒவ்வொரு திங்கள் கிழமையும் தாரகேஷ் பள்ளியில் 'கலர் டே' என்று எல்லோரு ஒரு நிற ஆடை அணிந்து வருவார்கள். மஞ்சல், சிவப்பு, பச்சை என்று ஒவ்வொரு திங்களும் ஒவ்வொரு நிறம்.

இப்படி நேற்று திங்கள் (9.8.10), என் மனைவி தாருவை ஏழுப்பும் போது, " குட் மார்னிங் தாரு... அவன் ஸ்கூல்ல இன்னைக்கு என்ன டே தெரியுமா " கேட்டாள்.

“ரோஸ் டேவா!! " என்றேன் நான்.

" இல்ல மம்மி. இன்னைக்கு ஹாலிடே !" என்று சொல்லி மீண்டும் தூங்க சென்றான்.

(இப்ப ஸ்கூல் கட் அடிக்க அஸ்திவாரம் போடுறான்.)

***
ஒரு முறை தாருவுடன் நானும், என் மனைவியும் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றோம். ஸ்டாட்டராக சூப் சாப்பிட்டு பிரியாணி, நான் என்று மூவரும் ஒரு கட்டு கட்டினோம். அந்த இடம் கொஞ்சம் காஸ்டிலியான ஹோட்டல் என்பதால் கை கழுவ 'பிங்கர் பவுல்' கொண்டு வந்து எங்கள் முன் வைத்தனர்.

" என்ன டாடி ! இன்னொரு சூப்பா " என்றான்.

சர்வர் முதல்க் கொண்டு அனைவரும் சிரித்தனர்.

( 'பிங்கர் பவுல்' சைஸ் இருந்துக் கொண்டு நக்கல் ஜாஸ்தி )

***



தாரகேஷ்க்கு அவன் பள்ளியில் தோழர்களை விட தோழிகள் தான் அதிகமாம். லக்ஷனா, ரித்திக்கா என்று இரண்டு பெண் குழந்தைகளுடன் தான் எப்போதும் விளையாடுவனாம்.

பள்ளியில் இருந்து அவனை அழைத்து வர என் மனைவி சென்ற போது அவன் டிச்சர், " தாரு ! நல்லா படிக்கிறான். எது சொன்னாலும் உடனே புரிஞ்சிக்கிறான். ஆனா, எப்போ பார்த்தாலும் பொண்ணுங்களோட தான் விளையாடுறான்"

சின்ன பசங்க தான் அப்படி தான் இருக்கும் என்று என் மனைவி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால், அடுத்து சொன்ன தகவல் தான் அதிர்ச்சியாக இருந்தது.

"இரண்டு பொண்ணுங்களோட விளையாடும் போது தீடிர் தீடிர்னு முத்தம் கொடுக்குறான்" என்று கூறினார்.

வீட்டுக்கு வந்ததும் என் மனைவி அவனை டி.வி. பார்க்க விடக் கூடாது என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.

( எனக்கு கோபத்தை விட என் மகன் மீது பொறாமை தான் அதிகமாக இருந்தது.)

***

என் மகன் பள்ளியில் சி.டியில் ரைம்ஸ் போட்டு சொல்லிக் கொடுப்பார்கள். என் மகனுடன் ஆருஷ் என்ற பையன் படிக்கிறான். ஆருஷ்யின் பெற்றோர் வழக்கறிஞர் என்பதால் என்னவோ அவனுக்கு தமிழ் ஆர்வம் அதிகம். தமிழ் ரைம்ஸ் போட்டால் கேட்பானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் கேட்காமல் விளையாட போவானாம்.

என் மனைவி அந்த பையனைப் பற்றி சொல்லும் அவன் மீது மதிப்பே வந்துவிட்டது. அவனை ஒரு முறை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னேன்.

அதே பள்ளியில் இன்னொரு மாணவன், தமிழ் ரைம்ஸ் போட்டால் காதை மூடிக் கொள்வானாம். இங்கிலீஷ் ரைம்ஸ் போட்டால் தான் கேட்பானாம். அந்த பையனின் பெற்றோர் சிறுவயதில் இருந்தே இங்கிலீஷ் பாடல் போட்டு தாய்மொழியை மறக்கடித்துத்திருப்பார்கள் என்று மனைவியிடம் சொன்னேன்.

"அந்த பையன் தாரகேஷ் " என்றாள்.

(நல்ல வேளை என் தாய்மொழி தெலுங்கு தான்.)

Friday, August 6, 2010

முன்னனி நாயகர்களின் நகைச்சுவை அனிமேஷன் !!

பொதுவாக மேடை நிகழ்ச்சிகளில் முன்னனி நாய்கர்களை பகடி செய்வதுப் போல் பேசுவார்கள். நடந்து காட்டுவார்கள். ஆடுவார்கள். முதன் முறையாக விளம்பரத்துக்காகவும், கவனத்தை ஈர்ப்பதற்காகவும் முன்னனி நாயகர்களை கலாய்த்திருப்பது அல்டிமேட் நகைச்சுவை. குறிப்பாக, விஜயகாந்த் அனிமேஷனை பார்த்து சிரிக்காமல் இருக்க முடியாது.

Rajini Power --- Watch him do the ultimate !!!



Syscom Vijayakanth's Comedy


gsmani2@gmail.com

'Pokkiri' விஜய் டான்ஸ்

Thursday, July 29, 2010

சிரிப்புக்கு நான் Guaranty !

ஐ.டி. துறையை இந்த கலாய்பது என்றால் ஐ.டி துறையில் இருப்பவர்களுக்கே சந்தோஷம் தான். அதுவும் PM,TL வைத்து காமெடி பண்ணினால், அவர்கள் ஜூனியர்ஸ் விழு விழுந்து சிரிப்பார்கள்.

'Jagguboys' குறும்படம் ஐ.டி துறையில் இல்லாதவர்களுக்கு கூட புரியும் படி நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.சமிபத்தில் வரும் சினிமா படங்களில் நகைச்சுவை காட்சிகளை விட நன்றாகவுள்ளது.குறிப்பாக, ஆணி புடுங்கும் இடம் Ultimate நகைச்சுவை.

22 நிமிட முழு நீள நகைச்சுவை குறும்படம். நீண்ட நாட்களுக்கு பிறகு வயிறு வலிக்க சிரித்தேன்.

ஒவ்வொரு Successful Employee பின்னாடி ஒரு Satisfied Manager இருக்கான் என்ற தத்துவத்தை இந்த குறும்படம் உணர்த்துகிறது.

Part -1



Part -2




Part -3

Monday, May 10, 2010

படித்ததும் பார்த்ததும் - 10.5.10

கடந்த வெள்ளிகிழமை நான்கு படங்கள் வெளிவந்து எந்த படம் பார்க்கலாம் என்ற குழப்பத்தில் எந்த படமும் பார்க்கவில்லை. 'நாரத கானா சபா'வில் சே.வி.சேகர் 5600வது மேடை நாடக நிகழ்ச்சிக்கு சேன்றிருந்தேன். கலைஞர், ஸ்டாலின், 'நல்லி' குப்புசாமி, 'திரிசக்தி' சுந்தராமன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். முதன் முறையாக கலைஞர் பத்தடி தூரத்தில் இருந்து பார்த்தேன். அவர் பேசுவதற்காக இரண்டு மணி நேர நாடகத்தை ஒரு மணி நேரத்தில் எஸ்.வி.சேகர் முடித்துவிட்டார். நிகழ்ச்சி முடிவில் கலைஞர்களுக்கு கலைஞர் அவர்கள் விருது வழங்கினார்.

****

எல்லோரும் எதிர்பார்த்தது போலவே 20/20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அரை இறுதி வாய்ப்பை இழந்தது. நமக்கும், பாகிஸ்தானுக்கு எவ்வளவு ஒற்றுமை.

2007 - ஒரு நாள் உலக கோப்பையில் இருவருமே முதல் சுற்றில் வெளியெறினர். இதில் பாகிஸ்தான் அயர்லாந்திடம் தோல்வி பெற்ற அடுத்த நாளில், இந்தியா பங்லாதேஷிடம் தோற்றது.

2007 - 20/20 உலக கோப்பையில் இருவரும் இறுதி ஆட்டத்தில் மோதினர். இதில் இந்தியா கோப்பையை கைபற்றியது. அடுத்த உலக கோப்பையை பாகிஸ்தான் வென்றது.

2010 - பாகிஸ்தான் நியூசிலாந்து அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. அடுத்த நாள், இந்தியா வெஸ்ட் இன்டிஸ் அணியிடம் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது.

என்ன மாதிரியே அழுவுறானே ! இதான் ஒரே இரத்தம் சொல்லுறது !!

****

திரைக்கலை பிறந்த கதை

வாசகர்கள் பார்வைக்கு வராத நல்ல புத்தகம். சினிமாவில் முதல் கேமிரா கொண்டு இயக்கப்பட்ட படம் தொடங்கி கேமிராவும், திரைக்கலை வளர்ச்சியையும் பற்றி வரை சொல்லும் புத்தகம். உலகில் முதல் அசையும் படம், திரைகதை வடிவ படம், நகைச்சுவை படம் என்று பல தகவல்கள் இந்த புத்தகத்தில் உள்ளது. சினிமா பற்றி தெரிந்து கொள்ள நினைப்பவர்கள் இந்த புத்தகத்தை படிக்கலாம்.

இந்த புத்தகம் நூலகத்தில் கிடைத்தது. நூலக ஆணைக்கு பிறகு இந்த புத்தகம் மறு அச்சு செய்தார்களா என்று தெரியவில்லை. பாரதி புத்தகாலயம் விற்பனை உரிமை பெற்றுள்ளது.

****

நேற்று (9.5.10) அனைத்திந்திய எழுத்தாளர் சங்கம் சார்பில் வாசுகி கண்ணப்பன் விருது வழங்கும் விழா மாம்பலம் சந்திரசேகர் மண்டப்பத்தில் நடந்தது. நாகரத்னா பதிப்பகம் சிறப்பு புத்தக கண்காட்சி அனுமதி பெற்று நடைப்பெற்றது. நல்ல வரவேற்பு கிடைத்தது. இருந்தாலும் நாகரத்னா பதிப்பக புத்தங்களை விட விற்பனை உரிமை வாங்கிய புத்தகங்கள் அதிகமாக விற்றதில் பதிப்பாளனாக சிறு வருத்தம். விற்பனையாளனாக சந்தோஷம்.

****

யுவராஜ் சிங் : தல ! நாம தோத்துட்டோமே இப்ப என்ன பண்ணுறது ?

தோனி : கவலப்படதா ! ரொம்ப 'ஐ.பி.எல்' விளையாடுனதால நாங்க ரொம்ப டையர்ட் ஆய்ட்டோம். அதனால உலக கோப்பையில சரியா விளையாட முடியல சொல்லி பேட்டி கொடுப்போம்.

ரைனா ஓடி வந்து " தல நாம மோசம் போய்ட்டோம் "

"'ஐ.பி.எல் விளையாடுனதால எங்களால நல்ல விளையாட முடிஞ்சதுனு' கெயல், பிட்டர்சன் பேட்டி கொடுத்திருக்காங "

தோனி : நாம் தோத்ததுக்கு என்ன காரணம் சொல்லலாம்னு உக்காந்து யோசிப்போம். அதுக்குள்ள என் வீட இடிக்காம இருந்தா நல்லா இருக்கும் !!

****

LinkWithin

Related Posts with Thumbnails