வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, June 28, 2012

நாமும் மரமும் !



மரத்தின் கையில்
உருவான நாற்காலியில் அமர்ந்து
எப்படி சொல்லுவது
மரத்தை வெட்டாதீர்கள் என்று !

புகை மண்டலத்தை உருவாக்கும்
இரு சக்கர வாகனத்தில் சென்று
எப்படி பறப்ப போகிறேன்
சுகாதார வாழ்க்கையை பற்றி

மரத்தின் எச்சத்தில்
உருவான காகிதத்தில்
எப்படி எழுதுவது
இயற்கையைக் காப்போம் என்று

பசிக்கும் மனிதன்
சாப்பிட போவது பழமா ? பணமா ?

மரம் பொருட்காட்சியில்
பார்க்கும் பொருளாகுமோ ?
அது நினைவு சின்னமாகுமோ ?
மனிதன் மரணத்திலும்
மரம் தான் எரிய வேண்டுமா ?

கேள்விகளிலே குற்றவுணர்வோடு
பயணிக்கும் நாம்
ஒன்றுக்காவது விடை காண்போமா ?

Tuesday, June 19, 2012

Paula Coelho வின் Alchemist

"இந்த நாவலை படிங்க... நீங்க உங்களுக்கு பிடித்தை செய்வீங்க " என்று நண்பர் ஒருவர் கொடுத்ததன் பெயரில் இந்த நாவலை படித்தேன்.

சுயமுன்னேற்ற கட்டுரைகள், கருத்துக்கள் போல சுயமுன்னேற்ற நாவல் வகையில் " Alchemist " சேர்ந்தது என்று சொல்லலாம்.

When the person desires something, all the universe conspires to help that person to realize his dream. 

ஒருவன் தன் வாழ்க்கையில் ஒன்றை அடைய நினைக்கிறான் என்றால், அண்டம் எல்லாம் சேர்ந்து அதை அடைய அவனுக்கு உதவி செய்யும் என்ற கருத்தை வழியுறுத்துவது தான் இந்த நாவலின் நோக்கம்.



ஆடு மேய்க்கும் சிறுவன் சன்டிகாவிடம் ஜோசியம் பார்ப்பவள் அவனுக்கு பெரிய புதையல் கிடைக்கும் என்கிறாள். தனக்கு பணம் தர வேண்டாம், புதையல் கிடைத்தால் பத்து சதவீதம் கொடுக்க வேண்டும் என்கிறாள். முதலில் யோசிக்கும் சன்டிகா, முன்னாள் மன்னன் மெல்ஷிசேடெக் புதையலை தேடி செல்ல உத்வேகப்படுத்துகிறான். இரண்டு ராசியான கற்களை கொடுத்து, அதை சொல்லும் நல்ல சம்பாஷ்யை புரிந்து கொண்டு புதையலை தேடி செல்ல சொல்கிறான். புதையல் கிடைத்தால் தனக்கு பாதி தர வேண்டும் என்கிறான்.

ஒரு வழியாக புதையலை தேடி செல்லும் சன்டிகா கையில் வைத்திருந்த பணத்தை இழக்கிறான். தன் இலக்கில் இருந்து மாறாத சன்டிகா, ஒரு கண்ணாடி கடையில் வேலை செய்து பணம் சேர்த்து தனது பயணத்தை தொடர்கிறான். இறுதியாக அவன் புதையலை அடைந்தானா இல்லையா என்பதை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

பாலைவனம், காற்று, சூரியன் எல்லாம் சிறுவனிடம் பேசி, அவன் கட்டளைக்கு கட்டுப்படுவது எல்லாம் சிறுவர் கதைப் போல் உணர்த்துகிறது. இவ்வளவு நேரம் சிறுவர்களுக்கான நாவலை தானா படித்தோம் என்ற எண்ணமும் வருகிறது.

நம் பகுத்தறிவுக்கு சவாலாக பல விஷயங்கள் இந்த நாவலில் உள்ளது. எனுனும் குழந்தைகள் நாவல் என்று முன்பே சொல்லியது போல், சில மாயயை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இந்த நாவலில் மிகவும் ரசிக்க கூடியது வசனங்கள் தான். நான் மிகவும் ரசித்த வரிகள்.

If I Could, I'd write a huge encyclopedia just about the words luck and coincidence. It's with those words that universal language is written.

For me, the war seemed a curse. But now it's a blessing. because it brought me to you. (போர்களத்தில் பார்க்கும் பெண்ணை கவர இதை விட நல்ல வாக்கியம் சொல்ல முடியாது)

The war is important to both armies. It's not a battle of good against evil. It's a war between forces that are fighting for the balance of power.


Every search begins with beginner's luck and every search ends with the victor's being severely tested.


There is only one thing that makes a dream impossible to achieve. the fear of failure.

ஒரு முறை நாவலை வாசிக்கலாம்.

Friday, June 15, 2012

உலக சினிமா - Departures (2008 - ஜப்பான் மொழி)

 எல்லோருக்கும் விரும்பும் வேலை அமைந்து விடுமா ? பிடித்த வேலை அதிகம் பணம் கிடைக்காததால் கிடைத்த வேலை செய்பவர்கள் தான் அதிகம். விரும்பாத மனைவியுடன் வாழ்வுவது போல் தினமும் வேலை செய்ய வேண்டும். கள்ள காதல்ப் போல் நாம் விரும்பிய வேலையை எப்போதாவது செய்து பார்க்கலாம். அதை முழு நேரமாக மாற்றிக் கொள்ள முடியாமல் தவிப்பார்கள். தலை விதியே என்று கிடைத்த வேலை, எப்படி ஒரு மனிதனை மனதை மாற்றுகிறது. அந்த வேலை எப்படி விரும்ப தொடங்குகிறான் என்பதை உணர்வு பூர்வமாக சொல்லும் படம் தான் " Departures".



டைகோ ஒரு செல்லோ கலைஞன். அவனது இசைக் குழு கலைக்கப்பட்டதால் அவனுக்கு வேலை பரிபோகிறது. இரண்டு வருடத்திற்கு முன்பு தான் அவன் அம்மா இறந்தார். அப்பா சிறு வயதில் தங்கள் தேநீர் கடையில் வேலை செய்யும் பெண்ணுடன் ஓடிவிட்டார். அவரின் முகம் கூட டைகோவுக்கு நினைவில் இல்லை. மனைவுடன் தனிக்குடித்தனம் நடத்துபவன். அடுத்த என்ன செய்வதறியாமல் தவிக்கிறான்.

“Assiting Departures" வேலை காலியிருப்பதாக செய்திதாளில் பார்த்து நேர்முக தேர்வுக்கு செல்கிறான். சசாகி என்பவர், "நீ கடுமையாக உழைப்பாயா ?" என்று கேட்கிறார். டைகோ செய்வேன் என்று சொல்ல, அவனுக்கு வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த பின்பு தான் தெரிகிறது, இறந்த உடலுக்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் வைத்து, வழியனுப்பி வைக்கும் வேலை என்று. இறந்த கோழியை பார்த்தாலே வாந்தி எடுக்கும் டைகோ, இறந்த உடலோடு எப்படி வேலை செய்ய போகிறோம் என்று அஞ்சுகிறான். தனது மனைவியிடம் உண்மையை சொல்லாமல், நிகழ்ச்சி அமைப்பாளருக்கு உதவியான வேலை என்கிறான்.

முதல் நாளில், பிணங்களுக்கு எப்படி சுத்தம் செய்யப்படுகிறது என்ற விடியோ படத்திற்கு டைகோவை பிணமாக இருக்க சொல்லுகிறான் சசாகி. அடுத்து இறந்து இரண்டு வாரம் கலித்து கண்டு பிடிக்கபட்ட வயதான பெண்ணின் பிரேதத்துக்கு தனது முதலாளி சசாகியுடன் வருகிறான் டைகோ. இரண்டு வார பிரேதத்தை பார்த்ததும் வாந்தி எடுத்து எடுக்கிறான். சசாகி அவனை விடுப்பு எடுத்துக் கொள்ள சொல்கிறார்.

டைகோ தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொள்ளும் பொது குளியலறையில் குளித்து ஓய்வு எடுத்துக் கொள்கிறான். அதை, யமஷிட்டா என்ற வயதான பெண்மனி நடத்தி வருகிறாள். அவளது மகன் டைகோவின் பள்ளி நண்பன். ஒரு நாள் அவனது முதலாளி, சசாகி செல்ல முடியாததால் டைகோ சென்று பிரேதத்திற்கு அலங்காரம் செய்து சவப்பெட்டியில் அடைக்கிறான். அங்கு உறவினர்களின் கண்ணீர் அவனை மிகவும் பாதிக்கிறது. தொடர்ந்து பல மரண வீடுகளும், உறவினர்களின் நெகிழ்ச்சியான வார்த்தைகளும் அவன் இந்த வேலை மீது வைத்திருந்த கசப்பு தன்மை மறக்கடிக்கிறது. ஆனால், டைகோ செய்யும் வேலை அவன் மனைவிக்கு தெரிந்து அவனை விட்டு பிரிகிறாள். அவனது பள்ளி நண்பன் அவனிடம் வேறு நல்ல வேலை தேட சொல்கிறான். அவனின் குடும்பத்திடம் பேச கூட அவன் நண்பன் அனுமதிக்கவில்லை. 

நாட்கள் செல்கிறது. டைகோவின் மனைவி திரும்பி வருகிறாள். அவள் கற்பமாக இருப்பதை சொல்கிறாள். அந்த சமயம் போது குளியளறை நடத்தும் யமஷிட்டா இறந்த செய்தி வருகிறது. தன் மனைவியுடம் டைகோ செல்கிறான். அங்கு யமஷிட்டாவுக்கு உயிருடன் தூங்குவது போல அழகாக அலங்காரம் செய்கிறான். இறந்த தன் அம்மாவை டைகோவின் நண்பன் கண் கலங்கி அவனுக்கு நன்றி சொல்கிறான்.

கர்பினியான தன் மனைவியை ஆறங்கரையில் தன் தந்தையுடன் வந்ததை சொல்கிறான். மொழிகள் தெரியாத காலத்தில் கற்களை கொண்டு தான் பேசுவார்கள். மென்மையான கற்கள் கொடுத்தால் சந்தோஷமாக இருப்பதாகவும், கரடுமுரடான கற்கள் கொடுத்தால் கவலையாக இருப்பதாகவும் பொருள். சிறு வயதில் தன் அப்பாவுடன் கற்களை பரிமாரி விளையாடுவதை தன் மனைவியிடம் சொல்கிறான். வருடத்திற்கு ஒரு முறை தனக்கு கல் அனுப்புவதாக சொன்னார். ஆனால், இது வரை அவர் அனுப்பவில்லை. அவன் முகம் எனக்கு நினைவுக்கு வரவில்லை என்கிறான். 

ஒரு நாள் டைகோ வேலைக்கு சென்றதும் தன் அப்பா இறந்த தகவல் தெரிந்துக் கொள்கிறான். முதலில் செல்ல மறுக்கும் டைகோ பிறகு செல்ல சம்மதிக்கிறான். சசாகி தன்னிடம் இருக்கும் ஒரு சவப்பெட்டி எடுத்து செல்ல சொல்கிறான். அங்கு அப்பாவின் உடலை இறுதி காரியம் செய்பவர்கள் அஜாக்கிரதையாக கையாள, டைகோவுக்கு கோபம் வருகிறது.

தன் அப்பாவின் உடலை அவனே தயார் படுத்துவதாக சொல்கிறான். அப்போது தான் தன் அப்பாவின் முகத்தை பார்க்கிறான். தன் அப்பாவின் உடலை சுத்தம் செய்ய கை எடுக்கும் போது, அவர் கையில் மென்மையான கல் இருப்பதை பார்க்கிறான். சிறு வயதில் அப்பாவிடம் விளையாட்டிய வாலிப முகம் நினைவுக்கு வருகிறது. கர்பினியான தனது மனைவியின் வயிற்றில் மென்மையான கல்லை வைக்கிறான்.

விருப்பமில்லாத வேலையை எப்படி ரசித்து செய்ய தொடங்குகிறான் என்பதை டைகோ பாத்திரத்தின் மூலம் காட்டியுக்கிறார் இயக்குனர் யோஜிரோ டகிடா ("Yōjirō Takita "). அந்த பாத்திரம் மனநிலை மாறுவதற்கான காட்சிகள் அமைத்திருப்பது மிகவும் நெஞ்சை தொடுவதாக உள்ளது.


தீண்டப்படாத அல்லது சமூகத்தில் மதிக்கபடாதவர்களாக தான் இன்று வரை வெட்டியான் வேலை செய்பவர்களை பார்த்து வருகிறார்கள். கண்ணீரும், மரணமும் தினமும் பார்த்து வாழ்ந்துக் கொண்டு இருப்பவர்கள் தங்கள் மனதை எப்படி பாதித்திருக்கும் என்பதை ஒரு நாள் நாம் யோசித்திருப்போமா ? அவர்கள் அந்த வேலையை விரும்பி செய்வார்கிறார்களா ? என்று ஒரு முறையாவது நினைத்து பார்த்திருப்போம். ஒரு வேலை நாமும் நமக்குள் இந்த வேலையை விரும்பி செய்கிறோமா என்ற சந்தேகம் இருக்கிறாதா ?

Tuesday, June 5, 2012

நண்பேன்டா !!!

"அறிவு கெட்டவங்க... போன் பேசிக்கிட்டே வண்டிய ஓட்டுறது. யார் மேலாவது இடிக்க வேண்டியது." என்று சாலையில் போகிற கிழவர் பைக்கில் செல்லும் ஜெகனை திட்டிக் கொண்டு இருந்தார்.

காதில் ப்ளூ டுத் ஹெட்செட்டை மாட்டிக் கொண்டு வண்டி ஒட்டும் ஜெகனுக்கு சாலையில் அவனை யார் திட்டினாலும் கேட்க போவதில்லை.

"சும்மா...சும்மா... எத்தன வாட்டிடா தேங்க்ஸ் சொல்லிட்டே இருப்ப !" என்று வண்டி ஓட்டிக் கொண்டு கேட்டான் ஜெகன்.


எதிர்முனையில், " நீ பண்ண உதவிக்கு என்னால தேங்க்ஸ் மட்டும் தான் இப்போ சொல்ல முடியும். கை மாற வேற எதுவும் செய்ய முடியாதுடா..." என்றான் ஜெகனின் நண்பன் வினோத்.

"டேய் ! ரொம்ப சென்டிமெண்ட்டா பேசற...."

"நீ மட்டும் இல்லனா. என் குடும்பமே என்ன அயிருக்கும் நினைச்சுக் கூட பார்க்க முடியல..."

ஜெகன் பேசிக் கொண்டு வரும் போது சாலை ஓறமாய் இருந்த ட்ராபிக் போலீஸ் ஜெகனை கை காட்டி நிறுத்தினார்.

ட்ராப்பிக் போலீஸ் "ஹெல்மட் மாட்டாம, போன் பேசிட்டு வண்டிய ஓட்டுற.... ரூ.1000 பைன் எடு"

 "ஸார் ! ஹெல்மட் போடாததுக்கு வேணும்னா ரூ.100 பைன் போடுங்க... நா போன் பேசல்ல..."

"என்ன பார்த்த குருடன் மாதிரி தெரியுதா. நீ தான் பேசி கிட்டே வந்தத நா பார்த்தேன்."

" நான் பேசல சார் ! பாடிட்டே வந்தேன்." என்றான்.

"நக்கல்லா ! உன் போன எடு." என்று போனை வாங்கி போலீஸ் கான்ஸ்டெபிள் பார்த்தார். கடைசி ஒரு மணி நேரமாக ஜெகன் யாருக்கும் போன் செய்யவில்லை. அவனிடம் வேறு ஏதாவது போன் இருக்கிறதா என்று கூட சோதனை செய்து பார்த்தார். அப்படி ஒன்றும் கிடைக்கவில்லை.

ரூ.1000 சொல்லி ரூ.500 கரக்கலாம் என்று இருந்த கான்ஸ்டெபிளுக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது. வந்தவரை லாபம் என்று ரூ.100 பைன் போட்டார். ஜெகன் மறக்காமல் ரசீதை கேட்டு வாங்கி கொண்டான்.

பணத்தை கட்டிவிட்டு பைக் எடுத்தான்.

"என்னால மறுபடியும் உனக்கு பண செலவு" என்றான் வினோத்.

"மறுபடியும் முதல்ல இருந்தா...!" என்று சொல்லிக் கொண்ட ஜெகன் வண்டியை சுடுக்காட்டில் நிறுத்தினான்.

"உன்ன மாதிரி பிரெண்ட் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும். என் கடன எல்லாம் அடைச்சுட்ட . என் குடும்பம் நிம்மதியா இருக்குறதுக்கு நீ தான் காரணம்"

" நீ பண்ண காரியத்துல உன் குடும்பம் நிம்மதியா இருக்கும்னு நினைக்கிறீயா ! பண பிரச்சனனு எனக்கு ஒரு வார்த்த சொல்லியிருந்தா. நா உதவி செஞ்யிருக்க மாட்டேன். இப்போ எல்லா பிரச்சனை முடிஞ்சு போச்சு. நீ பண்ணது மாத்தமுடியுமா" என்று கோபமாக கேட்டான் ஜெகன்.

"மாத்த முடியாது தான். இனி புரிஞ்சு என்ன பண்ணபோறேன். என்ன சுடுகாடுல வரைக்கு வந்து விட்டதுக்கு ரொம்ப தேங்க்ஸ்டா. நா போறேன்டா" என்று சொல்லி நடந்தான் வினோத்.

கொஞ்சம் தூரம் சென்றதும், "ஜெகன் ! என் குடும்பத்த பத்திரமா பார்த்துகோடா !!" என்று கூறி தன் கல்லறைக்குள் மறைந்தான்.

ஜெகன் கண்ணில் நீர்ப்பட அவனையே பார்த்துக் கொண்டு இருந்தான்.

Friday, June 1, 2012

புகையிலைக் கேட்டை ஒழி !



உடலை புண்ணாக்கி கொண்டோம்
புண் பட்ட மனதை
புகைவிட்டு ஆற்றிய போது !

நான் அடிமையில்லை
சொன்ன நடிகனின் கையில் சிகரெட்

நான் சிகரெட் பிடித்ததில்லை
பண்ணீரெண்டாம் படிக்கும் வரை
பெருமையாய் சொல்லும் மனிதன் !

முரணான இயங்குகிறது புகையிலை உலகம் !

ஒவ்வொரு சிகரெட் பிறக்கும் போது
ஒரு மனிதனின் ஒரு வருட ஆயுள் இறக்கப்படுகிறது

ஒவ்வொரு புகையிலை எரியும் போது
பத்து மனிதனின் ஆயுள் கேள்விக்குறியாகிறது !

காதலியின் எத்தனை முத்தங்கள் இழந்தையோ
இந்த சிகரெட் புகையினால் !

மழலை மொழிகள் தவிற்த்தாய்
புகையிலை நாற்றத்தினால் !

உனக்கு நீயே கொல்லி வைத்துக் கொண்டாய்
சிகரெட் பற்ற வைத்ததினால் !

உன் ஆண்மை அழியும் என்று தெரியாமலே
புகையிலையை நண்பனாக்கி கொண்டாய் !

உன்னைச் சுற்றி இருக்கும் உலகத்தை
இழக்க வைக்கும் புகையிலையை இழந்தால்
உலகம் உனக்கு நண்பனாகும் !!!

***

நேற்று (31.5.12), புகையிலைக்கு எதிராக மின்னல் தமிழ்ப்பணி அமைப்பினர் நடத்திய "புகையிலைக் கேட்டை ஒழி !" என்ற தலைப்பில் கவியரங்கம் நடத்தினர். அந்த கவியரங்கத்தில் நான் வாசித்த கவிதை.

கிட்டதட்ட நாற்பது கவிஞர்கள் மேல் கவிதை வாசித்தனர். இந்த நிகழ்ச்சி இன்று (1.6.12) மாலை 5 மணிக்கு எஸ்.ஆர்.எம் வானொலியான 90.4 FM ல் கேட்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails