வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Sunday, December 16, 2007

தமிழ் சினிமா 2007

எந்த வருடம் இல்லமாமல் இந்த 2007ல் மிக குறைவான வெற்றி படங்கள் தான் வந்தன. 'சிவாஜி', 'போக்கிரி' தவிர மிக பெரிய வெற்றி படங்கள் என்று சொல்லும் படியாக எந்த படமும் இல்லை. ஆனால், நல்ல படங்கள் ஒரளவு மக்கள் ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள். அம்முவாகிய நான், பள்ளிக்கூடம், மொழி, கற்றது தமிழ் போன்ற நல்ல படங்கள் வணிக ரீதியாகவும், குடும்பத்துடம் பார்க்கும் படியாகவும் அமைந்தன. முழுக்க முழுக்க பொழுது போக்குக்கான வெற்றிபடங்களை சொல்வதென்றால் 'நான் அவன் இல்லை', தாமிரபரணி', 'மருதமலை' போன்ற படங்களை சொல்லலாம்.

இந்த வருடம் ரஜினி, சங்கர் கூட்டனியில் வந்த 'சிவாஜி' படம் மட்டும் எந்த படத்திற்கும் இல்லாமல் மிக பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அது மட்டுமில்லாமல் முதல் முறையாக ஒரே சமயத்தில் சென்னையில் மட்டும் 19 திரை அரங்குகளில் திரையிடப் பட்டது. 'சிவாஜி' படத்தின் எதிர்ப்பார்ப்புப்பில் பல தாயாரிப்பாளார்கள் தங்கள் படங்களை வெளியீடுவதை தள்ளிப் போட்டார்கள். 'ஆழ்வார்', கீரிடம்' தோல்விக்கு பிறகு 'பில்லா' வை நம்பியிருகிறார் அஜீத். 'போக்கிரி' வெற்றி படத்தை தந்திருக்கிறார் விஜய். ‘அழகிய தமிழ்மகன்’ சும்மார் ரகம் தான்.

தேசிய விருது வாங்கிய கமல், விகரம் அவர்களின் படம் இந்த வருடம் வராதது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றம். அதை, 'தசாவதாரம்', 'கந்தசாமி' படங்களில் வரும் வருடத்தில் ஈடு செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம். கமல், விக்ரம் பிறகு அடுத்து தேசிய விருது வாங்க போகும் நடிகர் சத்யராஜ் என்று தான் சொல்ல வேண்டும். 'பெரியார்', 'ஒன்பது ரூபாய் நோட்டு' படங்களில் அவ்வளவு நடிப்பை கொட்டி நடித்திருக்கிறார் சத்யராஜ். 'லொள்ளு', 'ஜொள்ளு' இரண்டும் இல்லாமல் கதாப்பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

பிற மொழி படங்களை தமிழில் எடுத்துக் கொண்டு இருந்தவர்கள் இப்போது பழைய வெற்றி படங்களை புது பொழிவுடன் கொடுக்கிறார்கள். 'நான் அவன் இல்லை', 'பில்லா' வெற்றி பெற்ற படங்களின் கதையை எடுத்துக் கொண்டு திரைக்கதை மாற்றி எடுத்துள்ளார்கள். அது மட்டுமில்லாமல், பல பழைய பாடல்கள் ரீ-மிக்ஸ் வடிவத்தில் வந்த பாடல்கள் இந்த வருடம் அதிகம்.

தயாரிப்பாளர்களை திருப்தி படுத்திய ஒரே நடிகர் விஷால் தான். விஷால் நடித்த 'தாமிரபரணி', 'மலைக்கோட்டை' தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் கொடுத்துள்ளது. சென்ற வருடம் அதிக படங்கள் நடித்த பரத் இந்த வருடம் 'கூடல் நகர்' படம் மட்டுமே நடித்துள்ளார். 'கற்றது தமிழ்', 'ராமேஸ்வரம்' படங்கள் மூலம் நல்ல நடிகர் என்று ஜீவா நிருப்பித்துள்ளார்.

நடிகைகளில் பெரிதாக சொல்லும் படி யாருமில்லை. 'சிம்ரன்' இடத்தை 'சிவாஜி' படத்தின் ஸ்ரேயா நிரப்பியிருக்கிறார். 'தீபாவளி', 'கூடல் நகர் ', 'ஆரியா', ராமேஸ்வரம்' படங்களில் மூலம் இந்த வருடம் அதிக படங்கள் நடித்த நடிகை பெயரை மட்டும் பாவனா பெருகிறார். மற்ற நடிகைகள் எல்லாம் ஒரு படத்தின் நடித்து தொலைந்து போகும் நிலையில் தான் இருக்கிறார்கள்.

ஸ்ரீ காந்த் - வந்தனா திருமணம், நடிகர் ஜீவா திருமணம், பிரஷாந்த் - கிரகலக்ஷ்மி விவகாரம், சிவாஜியின் மனைவி மரணம், ஸ்ரீ வித்யா மரணம் - இந்த வருடத்தின் மிக முக்கிய நிகழ்வுகளாகும்.

இந்த வருடம் போல் அடுத்த வருடமும் நல்ல படங்களையும், மேலும் அதிக வெற்றி படங்கள் கிடைக்கும் என்று நம்புவோம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள் !!

Tuesday, September 25, 2007

அப்தூல் கலாம் கண்ட கனவு இந்தியா:2020 நிறைவெறிவிட்டது....!!!

தலைப்பை படித்ததும் இந்தியா வல்லரசு நாடாகிவிட்டது என்று நினைத்தீர்களா...!! இல்லை... இந்தியா 20- 20 உலக கோப்பை வெற்றி பெற்றதை தான் சொன்னேன். 6 மாதம் முன்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் படு தோல்வி அடைந்து முதல் சுற்றில் இருந்து வெளி ஏறிய இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியினர்கள் புது போலிவுடன் 20- 20 உலக கோப்பையில் இறுதி சுற்றுக்கு நுழைந்து இரண்டு அணியகளும் மிக சிறப்பாக விளையாடினார்கள். தோல்வி பெற்ற பிறகு... இந்திய அணிக்கு மாபெரும் வெற்றி !!!

அப்தூல் கலாம் கண்ட கனவு இது தான். தோல்வியின் போது துவண்டு போகாமல் இளைஞர்கள் துடித்து எழுந்து வெற்றி கதவை நோக்கி ஓட வேண்டும். நகைச்சுவைக்காக கிரிக்கெடை அப்தூல் கலாம் கனவோடு இணைத்து பேசினாலும், கனவு மெய்பட போராட்டம் மிகவும் முக்கியம். அப்தூல் கலாம் அவர்கள் எட்டு பேர் தேர்வாகும் தேர்வில் ஒன்பதாவது இடம் தான் அவருக்கு கிடைத்தது. தோல்வியின் போது அவர் துவண்டு இருந்தால், இன்று நாள் இதழ்களில் தலைப்பு செய்தியாக இருந்திருக்க மாட்டார்.அப்தூல் கலாம் - " தோல்வியின் போது தன் வெற்றி இது இல்லை, தனக்காக வேறு வெற்றி கத்துக் கொண்டு இருக்கிறது" என்று நினைத்தார்.

தோல்வியின் போது வரும் கோபமும், வேதனையும் இருந்தால் அடுத்த வெற்றியை நாமே தள்ளி வைக்கிறோம். தோல்வியில் வெற்றி பெற்றவர்களில் அப்தூல் கலாம் அவர்கள் முன் உதாரணம்.

( உலக கோப்பை தோல்வியின் போது தோனி வீட்டை உடைத்தவர், இப்பொது தோனிக்கு வீடு கட்டி கொடுப்பார்களா...!! )

Monday, June 4, 2007

சிதம்பர தீட்சதரின் பக்தி வியாபாரம்

சிதம்பரத்தில் மிக பிரபலமானது இரண்டே இடங்கள் தான். அந்த இரண்டு இடங்கள் இல்லை என்றால் சிதம்பரமே வெறுமையாகத் தான் தெரியும். ஒன்று சிதம்பரம் நடராஜன் கோயில், இன்னொன்று அண்ணாமலை பல்கலைக்கழகம். தாழ்த்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அழிக்கப்படுவதற்காக அண்ணாமலை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகம் இருக்கும் அதே ஊரில் தான் நடராஜன் கோயிலில் வருடத்திற்கு நாட்டியஞ்சலி நடக்கும். இது சிதம்பரம் கோயிலை பற்றி எல்லோருக்கும் தெரிந்த விஷயம். காலம் காலமாக மாற்ற முடியாத விஷயங்கள் அங்கு நடந்துக் கொண்டு இருகிறது. அது எத்தனை பேருக்கு தெரியும் ?

"யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்" என்பார்கள். சிதம்பர ரகசியத்தை வெளியே சொன்னால் புன்னியம் போய்விடும் என்று சொல்லி தீட்சிதர்கள் பார்க்க வந்தவர்களின் வாய்யை அடைக்கின்றனர். சிதம்பரம் கோயிலில் எல்லாம் தீட்சிதர் கீழ் தான். அவர் சொல் தான் அங்கு எடுப்படும்.

வெளியூரில் இருந்து ஒருவர் அண்ணாமலை நடராஜன் கோயிலுக்கு சென்றால் அங்கு தீட்சிதர் கேட்கும் முதல் கேள்வி "நீங்க உள்ளூரா? வெளியூரா? " என்று தான். உள்ளூர் என்றால் அடுத்த வார்த்தை எதுவும் சொல்ல மாட்டர்கள். ஆனால், வெளியூர் என்று சொன்னால் போதும் அடுத்து தீட்சிதர்கள் தேன் தித்திக்க தித்திக்க பேசுவார்கள். " இது கோயில் பிரசாதம். நடராஜனுக்கு ஷேமிச்சது" என்று சொல்லிக் கொடுப்பார்கள். பக்திமார்களும் அதை பயப்பக்தியுடன் வாங்கிக் கொள்வார்கள். அதன் பிறகு தான் பக்திமார்களுக்கு புரியும்.

பிரசாதம் வாங்கிய அடுத்த நொடியே தீட்சதர் "பத்து ரூபாய் கொடுங்கோ" என்பார். அந்த பிரசாதத்தில் விபூதி, குங்குமம், பூ, ஆபிஷேக தீர்தம் (ஆபிஷேக தீர்தமா அல்லது வெறும் தீர்தமா என்று த்ரியாது) தான் இருக்கும். அதன் விலை அதிகப் பட்சம் இரண்டு ரூபாய்க் கூட இருக்காது. ஆனால், பத்து ரூபாய் கேட்பார்கள் தீட்சதர்கள்.ஒவ்வொரு கடவுள் பிரகாரத்தில் இது போன்ற விஷயங்கள் நடந்துக்கொண்டு தான் இருக்கும். வாங்கிய பிரசாதம் திருப்பி எப்படி கொடுப்பது என்று தெரியாமல் பலர் பத்து ரூபாய் கொடுத்துவிடுவார்கள். ஆதனாலே பலர் வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட தாங்களை உள்ளூர் என்று சொல்கிறார்கள்.

அது மட்டுமல்ல, ஒரு சிலர் நூறு ரூபாய் கொடுத்து வருஷ வருஷம் கோயிலில் நடக்கும் விசேஷங்களுக்கு பிரசாதத்தை கொடுக்க தங்கள் வீட்டு முகவரியை கொடுத்து விட்டு வருவார்கள். ஆனால், வருஷ வருஷம் கோயிலுக்கு நன்கோடை கேட்டு தான் கடிதம் வரும். அப்படியே பிரசாதம் வந்தாலும் வெறும் விபூதி, குங்குமம் தான் வரும்.

வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு தான் பிரசாதம் விலை பத்து ரூபாய். வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பிரசாதம் பத்து டாலர். இந்திய ரூபாய் மதிப்பில் நாலாயிரம் மேல் இருக்கும். ஒரு முறை வெளிநாட்டவர்கள் அந்த பிரசாதத்தை திறந்த பிறகு தீட்சதர் பத்து டாலர் கேட்டார். வெளிநாட்டவர் பணம் தர மறுத்த போது பெரும் பிரச்சனையே நடந்து விட்டது. வெளிநாட்டவர்களை சுற்றி காட்டிய இந்தியருக்கு பெரும் தர்ம சங்கடமாக இருந்தது. அதன் பிறகு அவரே பணம் கொடுத்து பிரச்சனையை அத்தோடு முடித்தார்.

இறந்தால் மனிதன் உடல் சாம்பல் தான். அதை உணர்த்த தான் விபூதியை நெற்றியில் வைக்கிறோம். ஆனால் அந்த சாம்பலையே கடவுள் பிரசாதம் என்ற பெயரில் ஒவ்வொரு கோயிலிலும் விற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.[ விலைவாசி ஏறிய பிறகு அந்த பிரசாதத்தின் விலை 20 ரூபாயாக ஆகிவிட்டதாக கேள்வி.]

இது எல்லாம் கூட பரவயில்லை. சிதம்பர ரகசியத்தை பார்க்க ஆண்கள் சட்டையில்லாமல் தான் உள்ளே செல்ல வேண்டும்.[நல்ல வேளை பெண்களை இதில் விட்டு வைத்தார்கள்]. மந்திரியாக இருந்தாலும், ஜில்லா கலேக்டராக இருந்தாலும் அங்கு இருக்கும் தீட்சதர் முன்பு சட்டையில்லாமல் தான் உள்ளே சென்றாக வேண்டும். யாராக இருந்தாலும் சட்டையில்லாமல் தான் தீட்சதர் முன் நிற்க வேண்டும் என்பது எழுதப் படாத விதிமுறை. உள்ளே செல்வதற்கு பத்து ரூபாய் கட்டனம் கூட வசூலிக்க படுகிறது. அங்கு தட்சனையே பத்து ரூபாய்க்கு கீழ் யாருமே வாங்குவதில்லை [ பிச்சைக்காரர்கள் தவிர]

பெரிய மனிதர்களை சட்டையில்லாமல் தங்கள் முன் நிற்க வைப்பதில் தீட்சதர்களுக்கு பெரும் சந்தோஷம் தான். இதை எல்லாம் விட கோயில் மூலம் வரும் வருவாயில் ஒவ்வொரு தீட்சதர்களின் குடுமபத்திற்கு பங்குண்டு. நடராஜன் கோயிலில் தீட்சதர்கள் ராஜ்ஜியம் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டு இருக்கிறது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தாழ்த்தப்பட்டவருக்கு நூலகத்திலும், விடுதியிலும் சிறப்பு சலுகைகள் வழங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அதே இடதில் அண்ணாமலை நடராஜன் கோயிலில் தீட்சதர் குடும்பங்கள் நடத்தும் வியாபாரமாக தான் உள்ளது. பிரதஷோம் சமயத்தில் தேர் இழுக்கும் போது கூட பூஜை செய்யும் தீட்சதர்கள் இழுப்பதில்லை. கடவுளை வழிப்பட வரும் பக்தர்கள் தான் கடவுளோடு தீட்சதர்களையும் இழுத்துக் கொண்டு இருக்கிறார்கள். வைஷ்ணவ பிரமணன் கூட அங்கு அர்ச்சகனாக இருக்க அனுமதியில்லை. அங்கு இருப்பவர்கள் அனைவருமே சைவ பிரமணர்கள் (தீட்சதர்) தான்.

பணத்திற்க கடவுளை உருவாக்கியவர்கள்... அவர்கள் இயக்கும் கோயில் மட்டும் பக்தியிலா இயக்க போகிறார்கள்...? பக்தியை கூட கோயிலில் பணத்தை கொடுத்து தானே காட்டுகிறார்கள். வாழ்க பக்தி வியாபாரம் !!!

Thursday, April 12, 2007

அப்போ ஹீரோ இப்போ ஜீரோ

1983 உலகக் கோப்பை வென்ற பிறகு ஒவ்வொரு உலகக் கோப்பையும் இந்தியாவுக்கு கனவு கோப்பை தான். எத்தனை முறை எரிந்தாலும் மீண்டும் பறக்கும் ப்னிஃக்ஸ் பறவைப் போல் பல முறை கனவு தகர்ந்து மீண்டும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்ற ரசிகர்களின் ஆசை.

1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்களை கூவித்தார் ராகுல் ட்ராவிட். 2003ஆம் ஆண்டு இந்தியா இறுதி சுற்று வரை அழைத்து சென்ற கங்குலிக்கு லட்சக்கணக்கில் பரிசுகள் வழங்கப்பட்டது. அதே உலகக் கோப்பையில் சச்சின் டென்டுல்கர் அதிக ரன்கள் கூவித்ததற்காக பல பரிசுகள் வாங்கினார். இப்படி, நெற்று வரை இந்திய அணியில் ஹீரோவாக இருந்தவர்கள்.... இன்று வெறும் ஜீரோவாக தெரிகிறார்கள். ஒவ்வொரு உலகக் கோப்பை போட்டியில் வெற்றி பெறாவிட்டாலும் அதிக ரன்களை கூவிப்பது இந்திய வீரராக இருப்பார். ஆனால், இந்த முறை அந்த பெருமைக் கூட இந்தியாவுக்கு கிடைக்கவில்லை.

தோல்விக்கு காரணம் இந்திய அணியின் பொருப்பற்ற தன்மையாக இருந்தாலும்.... அதை உருவாக்கி கொடுத்தவர்கள் கிரிக்கெட் ரசிகர்களும், பத்திரிக்கைகளும், விளம்பர நிறுவனங்களும் தான்.

ஒரு போட்டியில் சதம் அடித்தால் போதும். மன்னர், ராஜாதி ராஜன், சூரன், வீரன் என்று பல புகழ் மாலைகள். விளம்பரப் படங்களும், விளம்பர நிறுவனத்தின் பணங்களும் கூவிக்கின்றன. சாதிக்கும் முன்பே பல புகழ் மாலையில் அவர்களை சாதிக்க விடாமல் செய்து விடுகிறோம்.

வந்த புதிதில் அகர்கரை அடுத்த ‘கபீல் தேவ்’ என்று புழந்தார்கள். அதன் பிறகு அவர் விளையாட்டில் தோய்வு தான் காணப்பட்டது. ஒரே இன்னிங்ஸில் பத்து விக்கெட் வீழ்த்திய கும்ளேவை ‘ஜம்போ’ என்று புழந்தார்கள். அதன் பிறகு தன் பௌளிங்கில் அதிக ரன்களை தான் கொடித்தார். 1999ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடங்கும் முன்பே டென்டுல்கர் உருவப்படம் பொருந்திய பெரிய தங்க நாணயம் டென்டுல்கருக்கு வழங்கப் பட்டது. அந்த ஆண்டு டென்டுல்கர் தந்தை இறந்ததால் அவர் சரியாக விளையாட முடியவில்லை. அதிகம் புகழ்ந்து நன்றாக ஆடக் கூடியவர்களை கூட பல்லத்தில் தள்ளி விட்டது ரசிகர்களும், பத்திரிக்கைகளும் தான்.

“அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம்” என்பார்கள். இந்திய வீரர்களுக்கு புகழ் தான் விஷம். பத்திரிக்கைகளும், ரசிகர்களும் அதிகமாய் புகழ்ந்தே அவர்களை ஹீரோவாக்கினார்கள். இப்போது அவர்களை ஜீரோவாக்கிக் கொண்டு இருக்கிறார்கள். இந்திய வீரர்கள் தகுதி உள்ளவராக இருந்தாலும் அதற்கு தகுந்தால் போல் புகழ வேண்டும்.

சமிபக் காலமாக இந்திய வீரர்கள் சரியாக ஆடவில்லை என்பது தான் உண்மை. ஆனால், பத்திரிக்கைகளும், ரசிகர்களும் இந்தியா உலகக் கோப்பை வெல்லும் என்று நம்பியதும், அதை பற்றி எழுதியதும் தவறு என்று இப்போழுது உணர்ந்திருப்பார்கள். அதிகமாய் புகழ்ந்தது தவறு செய்த ரசிகர்கள் அதிகமாய் அவர்களை அவமானப் படுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

உருவப் படத்தை எரித்தும், இந்திய வீரர்களை தவறான வார்த்தைகளை பேசிக் கொண்டு இருந்த ரசிகர்கள் இந்த முறை அவர்களை அவமானப் படுத்தும் விதம் மிகவும் வேதனையாக உள்ளது. தோனி வீட்டை உடைத்தும், ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களின் உருவப்படத்தை சவ ஊர்வலம் போல் தூக்கி சென்று சுடுக்காட்டில் எரிப்பதும், இணையத்தளத்தில் இந்திய வீரர்கள் பிச்சை எடுப்பதுப் போல் அமைப்பதும் என்று பல காரியங்கள் செய்கிறார்கள்.

NDTV யில் அதிக ஊழல்க் கோண்ட பட்டியலில் இந்தியாவுக்கு ஐந்தாவது இடம். எப்போதாவது ஊழல் செய்த அரசியல்வாதியின் வீட்டை உடைத்திருப்பார்களா ? கிரிக்கெட் விளையாடுபவர்கள் பெரும்பாலானவர்கள் பணக்காரர்கள். ஒன்று விளையாட்டில் சம்பாதித்து இருப்பார்கள் அல்லது விளம்பரத்தில் சம்பாதித்து இருப்பார்கள். ஆனால், அரசியல்வாதிகள் பணம் சம்பாதிக்க தான் அரசியலுக்கே வருகிறார்கள். அரசியல்வாதிகள் சம்பாதிக்கும் பணம் பெரும் பாலும் ஊழல் பணம் தான். கிரிக்கெட் வீரர்களை பேசியது போல் ஒரு நாளாவது ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை பொது மக்கள் பகிரங்கமாக தாக்கி பேசியிருப்பார்களா...? நாளை இந்திய அணிக்கு ஒரு ஹீரோ கிடைப்பார்கள். ஆனால் அரசியலில்.....?

( நன்றி : தமிழ்.சிஃபி.காம் (tamil.sify.com/general/worldcup07/fullstory.php?id=14426315) மற்றும் நம் உரத்தசிந்தனை :ஏப்ரல்,2007 )

LinkWithin

Related Posts with Thumbnails