இன்று ( 5.7.10) பெட்ரோல் உயர்வை நாடு தழுவிய பந்த் நடப்பதாக எதிர்கட்சியினர் அறிவித்திருந்தனர். ஆனால், சென்னையில் வழக்கம் போல் எல்லா வண்டிகள் செயல்ப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன. எப்போதும் போல் கேட்கும் (அ)நியாய விலைக்கு மேலும் 20 ரூபாய் கேட்கிறார்கள். ஸ்ட்ரைக் சமயத்தில் ஆட்டோ ஓட்டுறது எவ்வளவு பெரிய ரிஸ்க். அதுக்கு தான் ரூ.20 யாம் !!!
**
மனம் கொத்தி பறவை
இலக்கிய எழுத்தாளர்களுக்கு ஜனரக பத்திரிகைகள் வாய்ப்பு தருவதில்லை என்று புலம்பிய சாரு நிவேதிதா, இப்போது ஆனந்த விகடனில் 'மனம் கொத்தி பறவை' என்ற தலைப்பில் புதிய தொடர் எழுதுகிறார். நீத்து சந்திரா, அமீர் போன்ற நடிகர்களுடன் 40 நோடிகள் நடனமாடிய அனுபவத்தை எழுதியிருக்கிறார். நடிகனான எழுத வாய்ப்பு கிடைக்குமோ ?
**
நிஜம் நீதி
சுஜாதா
மிருகங்களை வைத்து நீதி கதைகளை 'நக்கீரனில்' சுஜாதா தொடராக எழுதினார். பின்பு, மேலும் பல கதைகள் சேர்த்து ' நீதி கதைகள்' என்ற பெயரில் புத்தகமாக உயிர்மை வெளியீட்டுள்ளது. 1998 ஆண்டிலேயே 'நிஜம் நீதி' என்ற தலைப்பில் பாரதி பதிப்பகம் சுஜாதாவின் நீதிகளை வெளிவந்துள்ளன. மேற் சொன்ன இரண்டு புத்தகங்களை படித்தால், இந்த நூலை படிக்கும் போது உயிர்மை வெளியிட்ட தொகுப்பில் இடம் பெற்ற கதைகள் தெரிந்தது. இருந்தாலும், மறுமுறை வாசிக்காமல் கீழே வைக்க முடியவில்லை. முழுமையாக வாசித்த பிறகே புத்தகத்தை முடினேன். எழுதியவர் சுஜாதாவாயிற்றே !
**
நாகரத்னா பதிப்பக சார்பில் வெளியீட இருக்கும் 'கவிதை உலகம்' தொகுப்புக்கு எதிர்பார்த்ததை விட கவிதை வந்து கூவிந்துள்ளன. ஒரு வாரத்தில் பதிவர்களிடம் மட்டும் 50 கவிதைகள் வந்துள்ளது. தலைப்பு எதுவும் கொடுக்காததால் பெரும்பாலான கவிதைகள் 'காதல்' சம்மந்தமான கவிதைகள் அனுப்பியிருந்தார்கள்.
இலக்கிய வட்டத்தில் இருந்து மேலும் 50 கவிதைகள் வந்துள்ளது. ஒவ்வொரு கவிதைகளை தேர்வு செய்தவற்கே ஒரு வாரம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். தேர்ந்தெடுத்த கவிதைகள் அடுத்த வாரம் பதிவில் அறிவிக்கப்படும்.
கவிதை அனுப்பியவர்களுக்கு நன்றிகள் பல..!!
வீடு நெடுந்தூரம் - Short film
Book, Movies Offers
To Buy my books in flipkart
Showing posts with label இலங்கை. Show all posts
Showing posts with label இலங்கை. Show all posts
Monday, July 5, 2010
Thursday, May 20, 2010
'மேலிட உத்தரவுப்படி தமிழர்களைக் கொன்று குவித்தோம் ' - சிங்கள தளபதி
லண்டன்: எங்களால் பிடிக்கப்பட்ட, எங்களிடம் வெள்ளைக் கொடியுடன் வந்து சரணடைந்த அனைத்துத் தமிழர்களையும் சித்திரவதை செய்து கொடூரமாகக் கொலை செய்தோம் என ஈழப் போரின் கடைசிக் கட்டத்தின்போது களத்தில் இருந்த ராணுவ தளபதி ஒருவரும், ஒரு ராணுவ வீரரும் சானல் 4 தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளனர்.
மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.
பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:
இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.
கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.
போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.
இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,
இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.
சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.
இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.
சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
மேலும் தமிழ் இளைஞர்களை கைகளையும், கண்களையும் கட்டி துப்பாக்கிகளால் பின்னாலிருந்து கொடூரமாக ராணுவத்தினர் சுட்டுக்கொன்ற காட்சிகளை இந்த ராணுவ வீரர்தான் படம் பிடித்து சானல் 4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ளார் என்றும் சானல் 4 தெரிவித்துள்ளது.
பிரபாகரனின் இளைய மகன் சித்திரவதை செய்து கொலை:
இதேபோல, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் இளைய மகனை உயிருடன் பிடித்து கொடூரமாக சித்திரவதை செய்து, பிரபாகரன் இருப்பிடத்தை அறிந்து கொண்ட பின்னர் அந்த சின்னஞ் சிறுவனையும் மிகக் கொடூரமாக ராணுவம் சுட்டுக் கொன்றதாகவும் அந்த சிங்கள ராணுவ வீரர் கூறியுள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின்போது இலங்கைப் படையினரால் பிடிக்கப்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொலை செய்யப்பட்ட வீடியோவை முன்பு சானல் 4 வெளியிட்டது.
கண்களையும், கைகளையும் கட்டிய நிலையில் பின்னாலிருந்து மிருகத்தனமாக தலையில் சுட்டு அந்தத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டனர். இது உண்மையான வீடியோதான் என பின்னர் நிரூபிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அந்த வீடியோ தொடர்பாக மேலும் ஆதாரங்களை பெறும் வகையில் அந்த படுகொலைகளை மேற்கொண்ட இலங்கை ராணுவ சிப்பாய் மற்றும் போர் முனையில் இருந்த ராணுவ தளபதிகளில் ஒருவருடைய பேட்டியை தற்போது சானல் 4 வெளியிட்டுள்ளது.
அதில் அந்த ராணுவ வீரர் கூறுகையில், எமது தளபதி எல்லோரையும் படுகொலை செய்யுமாறு உத்தரவிட்டார். ஆகவே, நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம்.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் யாரையும் உயிருடன் வைத்துப் பாதுகாக்க்கும் திட்டம் ஏதும் எங்களிடம் இல்லை. எனவே அனைவரையும் படுகொலை செய்து விட்டோம். இதற்கான உத்தரவு நிச்சயமாக உயர்மட்டத்திலிருந்தே கிடைத்திருக்க வேண்டும்.
வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்காக விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் வந்தபோது, அவர்களை முதலில் கைது செய்தோம். பின்னர் சித்திரவதை செய்தோம். அதன் பின்னர் கொலை செய்தோம்.
போரின் இறுதி நாட்களில் நாங்கள் எல்லோரையும் கொலை செய்தோம் என்றார்.
இந்த செய்திகள் மற்றும் படங்கள் குறித்து லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திடம் சனல் 4 செய்தி நிறுவனம் கேட்டபோது,
இலங்கை படையினர் மனிதாபிமான நடவடிக்கையினையே கடந்த வருடம் மேற்கொண்டிருந்தனர் அதில் பொதுமக்கள் எவருக்கும் எந்த இழப்பும் எற்படவில்லை. அவ்வாறு படையினர் குற்றச்செயல்களில் ஈடுபட்டார்கள் என்று வெளிவரும் செய்திகள் எதிலும் எந்த உண்மையும் இல்லை.
சானல் 4 தொலைக்காட்சியினால் தற்போது வெளியிடப்பட்ட தகவல்கள் குறித்து தற்போது நான் எந்த பதிலும் கூறமுடியாது. இது தொடர்பான வீடியோவை அனுப்புங்கள். அதன் பின்னர்தான் அது குறித்து கருத்து கூறமுடியும்.
இலங்கைப் படையினர் தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்வதற்கு இலங்கை அதிபர் குழு ஒன்றினை நியமித்துள்ளார் என்று இங்கிலாந்துக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய வீடியோ தகவல் குறித்து சானல் 4 தொலைக்காட்சியின் வெளியுறவு செய்தியாளர் ஜோனதன் மில்லர் கூறுகையில், புரட்சிகளையும், மக்கள் எழுச்சியையும் அடக்க இனிமேல் உலக நாடுகள் இலங்கை மாடலை உதாரணமாக எடுத்துக் கொள்ளும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஈவு இரக்கமின்றி சரணடைந்தவர்களையும் கொடூரமாகக் கொலை செய்துள்ள இலங்கைப் படையினரின் செயல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்திற்கும், மனிதாபிமானத்திற்கும் வைக்கப்பட்ட வேட்டு ஆகும் என்றார்.
சரணடைய வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை அப்படியே சுட்டுக் கொல்லுமாறு கோத்தபயா ராஜபக்சேதான் உத்தரவிட்டார் என்று முன்பு பொன்சேகா கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். தற்போது சானல் 4 வெளியிட்டுள்ள வீடியோவுக்கு பேட்டிஅளித்துள்ள ராணுவ அதிகாரியும், வீரரும் கூறியிருப்பதை வைத்துப் பார்த்தால், பல ஆயிரக்கணக்கான அப்பாவிகளும், விடுதலைப் புலிகளும், பா. நடேசன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் படுகொலை செய்யப்பட கோத்தபயாதான் காரணம் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிறது.
கோத்தபயாதான் இதைச் செய்ய உத்தரவிட்டார் என்பதற்கு மேலும் உறுதியான ஆதாரம் கிடைத்தால், ஹிட்லரை விட மிக மிக மோசமான கொலைகாரனாக கோத்தபயா உருவெடுப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே சர்வதேச பிரச்சினைகளுக்கான குழுமம், இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் தொடர்பாக விசாரணை தேவை என்று திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோ தகவல் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது- சர்வதேச சமுதாயம் சீரியஸாக இதை கருதி செயல்பட்டால்.
நன்றி : தட்ஸ்தமிழ்.காம்
Tuesday, May 26, 2009
வாழ்க அகதிகள் மூகாம் !
விடுதலை புலிகள் தங்கள் தலைவர் பிரபாகரின் மரணத்தை உறுதி செய்து விட்டனர். இறந்த உடல் பிரபாகரன் தானா என்று எழுதிய கேள்விகள் எல்லாம் குப்பையில் போட வேண்டிய நிலையில் தள்ளப்பட்டு விட்டோம்.
பிரபாகரன் மரணத்தை பற்றி சிங்கள இராணுவம் அறிவித்த போது நான் வருந்தி பதிவு எழுதினேன். அதன் பின், வந்த ஒரு சில பதிவுகள் ( குறிப்பாக லக்கி லுக் பதிவுகள்), பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பும் வகையில் எனக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்து, நக்கீரன் வெளியீட்ட செய்தியும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினேன். இப்போது, விடுதலை புலிகள் பிரபாரனின் மரணத்தை உறுதி செய்த பிறகு 'தமிழ் ஈழம்' கனவு என்று உறுதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம்.
இனியாவது என் தமிழர்களுக்கு இலங்கையில் உயிர் பாதுகாப்பு இருக்குமா...? மூன்று வேளை உணவு சாத்தியமா... ? இயல்பால வாழ்க்கை வாழ முடியாமா ? என்று பல கேள்விகள் எழுகின்றன.
‘போர் முடிந்த விட்டது’ என்று ராஜபாக்ஷே அறிவித்த பிறகும்... ஏன் வெளி நாட்டு ஊடகங்கள் இலங்கையில் அனுமதிக்க வில்லை...? நிவாரண நிதி சரியாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் சென்று அடைகிறதா என்று இப்போதாவது யாராவது உறுதியாக சொல்ல முடியுமா...? பிரபாகரன் கையில் துப்பாக்கி இருந்த போதே தமிழர்களின் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. இப்போது, பிரபாகரன் இறந்து விட்டார். அவர்கள் நிலை....??? இந்த கேள்விகள் எல்லாம் வேள்வியில் எரிந்துக் கொண்டு இருக்கின்றன. பதில் அளிப்பவர்கள் தான் யாருமில்லை.
பிரபாகரனின் நண்பன் கலைஞர் தன் கட்சி தமிழருக்கு மத்திய அமைச்சர் சீட் வாங்குவதில் கவனமாக இருக்கிறார். காங்கிரஸின் சந்தோஷத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.
இனி.... அதகதிகள் மூகாம் அதிகரிக்கும். தமிழர்களை பிச்சைக்காரனாக்கிய சந்தோஷத்தில் ஆட்சி நடக்கட்டும். தமிழர்கள் உயிரை பேரம் பேசியவர்கள் மானங்கெட்டு வாழ்க்கை வாழட்டும்.
வாழ்க அகதிகள் மூகாம் !
****
படங்கள்



நன்றி : http://www.inllanka.com/
பிரபாகரன் மரணத்தை பற்றி சிங்கள இராணுவம் அறிவித்த போது நான் வருந்தி பதிவு எழுதினேன். அதன் பின், வந்த ஒரு சில பதிவுகள் ( குறிப்பாக லக்கி லுக் பதிவுகள்), பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற நம்பும் வகையில் எனக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்து, நக்கீரன் வெளியீட்ட செய்தியும் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்று நம்பினேன். இப்போது, விடுதலை புலிகள் பிரபாரனின் மரணத்தை உறுதி செய்த பிறகு 'தமிழ் ஈழம்' கனவு என்று உறுதி செய்யும் நிலையில் நாம் இருக்கிறோம்.
இனியாவது என் தமிழர்களுக்கு இலங்கையில் உயிர் பாதுகாப்பு இருக்குமா...? மூன்று வேளை உணவு சாத்தியமா... ? இயல்பால வாழ்க்கை வாழ முடியாமா ? என்று பல கேள்விகள் எழுகின்றன.
‘போர் முடிந்த விட்டது’ என்று ராஜபாக்ஷே அறிவித்த பிறகும்... ஏன் வெளி நாட்டு ஊடகங்கள் இலங்கையில் அனுமதிக்க வில்லை...? நிவாரண நிதி சரியாக பாதிக்கப்பட்ட தமிழர்கள் சென்று அடைகிறதா என்று இப்போதாவது யாராவது உறுதியாக சொல்ல முடியுமா...? பிரபாகரன் கையில் துப்பாக்கி இருந்த போதே தமிழர்களின் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை. இப்போது, பிரபாகரன் இறந்து விட்டார். அவர்கள் நிலை....??? இந்த கேள்விகள் எல்லாம் வேள்வியில் எரிந்துக் கொண்டு இருக்கின்றன. பதில் அளிப்பவர்கள் தான் யாருமில்லை.
பிரபாகரனின் நண்பன் கலைஞர் தன் கட்சி தமிழருக்கு மத்திய அமைச்சர் சீட் வாங்குவதில் கவனமாக இருக்கிறார். காங்கிரஸின் சந்தோஷத்தை பற்றி சொல்லவே வேண்டாம்.
இனி.... அதகதிகள் மூகாம் அதிகரிக்கும். தமிழர்களை பிச்சைக்காரனாக்கிய சந்தோஷத்தில் ஆட்சி நடக்கட்டும். தமிழர்கள் உயிரை பேரம் பேசியவர்கள் மானங்கெட்டு வாழ்க்கை வாழட்டும்.
வாழ்க அகதிகள் மூகாம் !
****
படங்கள்



நன்றி : http://www.inllanka.com/
Tuesday, May 19, 2009
பிரபாகரனின் ஆத்மா சாந்தி அடையுமா ??
பல முறை 'பிரபாகரன் மரணம்' என்று அறிவித்திருந்த இலங்கை அரசு இந்த முறை ஆதரப்புர்வமாக அறிவித்திருக்கிறது. அறிவிப்போடு இல்லாமல் ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் இறந்த அவர் உடலை காட்டிவருகின்றனர். (இந்த முறையும் இது வேறும் வதந்தியாக இருக்க கூடாத என்று மனம் எங்குகிறது.)

மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.
பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.
பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?
இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

மூடாத கண்கள், நிறைவேறாத கனவுகள், கம்பிரமான இரண்வு உடையில் பிரபாகரன் இறந்திருக்கிறார். அவர் லண்டன், அமெரிக்கா என்று பதுயிருப்பார் என்று சில ஊடங்கள் மூலம் தவறாக பிரச்சாரம் செய்தவர்களுக்கு 'பிரபாகரன் ஒரு உண்மையான போராளி' என்று பிரபாகரனின் மரணம் காட்டியிருக்கும். இறந்த அவர் ஆத்மா தமிழீழ எல்லையில் தான் சுற்றிக் கொண்டு இருக்கும். அந்த ஆத்மாவையாவது இலங்கை இராணுவம் சுதந்திரமாக உலாவ விடட்டும்.
பிடல் காஸ்டிரோ ஆயுதம் எடுத்தான் - க்யூபா பிறந்தது. ஹோ சி மின் ஆயுதம் எடுத்தான் - வியட்நாம் மலர்ந்தது. ஈழம் மலர பிரபாகரன் ஆயுதம் எடுத்தான். இன்று நரகாசுரன் இறந்த தீபாவளி தினம் போல் கொண்டாடுவதும், சந்தோஷமாக இனிப்பு வழங்குவதுமாக தான் இருக்கிறார்கள். ஹிட்லர் தொடங்கி இந்த உலகம் தோல்வி அடைந்தவர்களை விமர்சித்து வருகிறது. இதில் பிரபாரகனும் தப்ப முடியாமல் போனது தான் மிக கொடுமை.
பிரபாகரன் செய்தது சரியா ? தவறா ? என்று விவாதிக்க விரும்பவில்லை. விவாதித்தாலும் இனி எந்த பயனுமில்லை. அவரால் இறந்த உயிர் இழப்புகளை நியாயப்படுதவுமில்லை. இனியாவது, 'இன படுகொலை' என்ற பெயரில் யார் உயிரும் போகாமல் இருக்க வேண்டும். யுத்தமில்லாத பூமியாக மாற வேண்டும். அது தான் எல்லோருடைய ஆசையாக இருக்கும்.

பிரபாகரன் மீது சிறு கீறல் விழுந்தால் தமிழ் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்று சொன்ன அரசியல் வாதிகள், தனி ஈழம் அமைத்து கொடுப்போம் என்று சொன்னவர்கள் இப்போது எதை வைத்து அரசியல் செய்ய போகிறார்கள் ?
இது வரை, அவரை வைத்து அரசியல் செய்தவர்களுக்கு இனி அரசியல் செய்ய வேறு காரணம் கிடைத்து விடும். தமிழ் நாட்டில் அரசியல் செய்ய காரணத்திற்கா பஞ்சம்...! ஆனால், இலங்கை தமிழர்களுக்கு இனி யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
Thursday, March 26, 2009
விடுதலைப் புலிகள் : ஒரு அறிமுகம்
1970 ஆம் ஆண்டு பிரபாகரன் தலைமையில் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers - TNT) என்ற இயக்கத்தை சிங்கள அரசுக்கு எதிராக தொடங்கினார். TNT தொடர்ந்து TELO, EROS என்று ஒவ்வொரு இயக்கங்களும் இலங்கை அரசுக்கு எதிராக தோன்றின. இந்த இயக்கங்கள் சிங்கள அரசுக்கு எதிராக கலவரம், தாக்குதல் என்று நடத்தி வந்தது. 1976 ஆம் ஆண்டு டி.என்.டி. என்ற பெயரை எல்.டி.டி.ஈ (LTTE) என்று மாற்றினர். LTTE என்றால் Liberation Tiger of Tamil Eelam. ஈழத்தமிழர்களுக்காக தனி தேசம். அது தான் தமிழ் ஈழம். LTTE க்கு மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் கனவு தேசம் அது தான். இன்று வரை அந்த கனவு தேசத்துக்காக உயிர் கொடுக்கிறார்கர்கள்.

1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படும் அந்த கொடுரூர சம்பவம் இலங்கை தமிழர்களை கண்ணீர் கடலில் முழ்கடித்தது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் சிங்களர்கள் வீட்டில் இருந்து கிளம்பினர். கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர். லீட்டர் கணக்கில் பெட்ரோல், தமிழர்களின் உடலை பதம் பார்த்தது. தமிழ் பெண்களை உடனே கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை; அவர்களை கற்பழித்து மூச்சு தினற கொடுமை செய்து கொன்றனர். அவர்கள் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ் பெண்கள் ஏராளம். அன்று நடந்த கலவரத்தால் வீடு, குடும்பம் இழந்து ஒரு லட்ச தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இடம் தேடி வந்தனர். அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னால் முடிந்த வரையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைக்கு நிவாரண உதவி அளித்தார். அன்றைய அரசியல் காரணமாக இலங்கையை எதிர்க்க இந்தியா விரும்பவில்லை.
இலங்கை அரசு தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லாமல் இந்திய அமைதி காக்கும் படை (IPKP) என்ற படையை இலங்கைக்கு அனுப்பினார். இந்திய படையின் வரவால் விடுதலை புலிகளுக்கு எரிச்சலை தந்தது. தமிழகத்தில் இருந்து வரும் உதவியை அவர் முடக்கி வைத்திருந்தார். (புதுமைபித்தன் தனது வாழ்க்கை குறிப்பில் ராஜீவ் காந்தி 'தமிழ் ஈழ' பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டியதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.)
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையில் இருக்கும் பெண்ணை வைத்து தமிழகத்தில் கொன்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா நாடுகளில் எல்.டி.டி.ஈ இயக்கத்தை தடை செய்தனர்.
இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இது வரை நடந்து விட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்களின் சண்டைக்கு மூற்று புள்ளி வைக்கவில்லை.
26 டிசம்பர், 2004 சுனாமி இலங்கையை தாக்கியதில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எல்.டி.டி.ஈயினர் உடனே நிவாரணப் பணியில் இறங்கினர். சர்வதேச அமைப்புகளில் இருந்து எல்.டி.டி.ஈ உதவிக்கரம் நீட்டினர். அதிபர், பிரதமர் என்று இலங்கையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களுக்கு போட்டியாக இலங்கை தமிழர்களை காக்கும் பிரபாகரம் வடக்கு, கிழக்கு பகுதியில் ஆட்சி நடப்பது தான் நிதர்சன உண்மை.
சுனாமி அலை ஒய்ந்து நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் அடுத்த கலவரம் வெடிக்க தொடங்கியது. இவர்கள் சண்டையை விளக்கி கொண்டே போனால் இந்த கட்டுரை பக்கம் நிரம்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் சண்டையை இரண்டு வரியில் சொல்ல வேண்டும் என்றால்....
"இலங்கை தமிழர்களை ஒழிப்பது சிங்களர்களின் லட்சியம்.
தமிழ் ஈழ தேசத்தை பெறுவது தமிழர்களின் லட்சியம். "
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை
இலங்கையில் கலவரம் வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.
அங்கு எந்த சமயத்தில் வெடிகுண்டு வெடிக்குமோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடுதலை புலிக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் உயிர் இழப்புகள் மட்டும் நிச்சயம். அவர்களின் மரணத்தை தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இரத்த வாடையே போது தாக்குதல் நடந்ததை பற்றி தெரிந்துக் கொள்வார்கள். அங்கு காற்றை சுவாசித்ததை போலவே இரத்த வாடை சுவாசித்தவர்கள் அதிகம். அவர்களின் பேனா மை கூட சிவப்பு நிறமாக தான் இருக்கும். பல வெடிகுண்டுகள், சமாதான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்து ஈழ தமிழர்களுக்கு விடியல் என்பது கனவாகவே இருக்கிறது.
கட்டுரைக்கு உதவிய நூல் :
விடுதலைப் புலிகள் - மருதன்
கிழக்கு பதிப்பகம்

1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படும் அந்த கொடுரூர சம்பவம் இலங்கை தமிழர்களை கண்ணீர் கடலில் முழ்கடித்தது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் சிங்களர்கள் வீட்டில் இருந்து கிளம்பினர். கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர். லீட்டர் கணக்கில் பெட்ரோல், தமிழர்களின் உடலை பதம் பார்த்தது. தமிழ் பெண்களை உடனே கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை; அவர்களை கற்பழித்து மூச்சு தினற கொடுமை செய்து கொன்றனர். அவர்கள் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ் பெண்கள் ஏராளம். அன்று நடந்த கலவரத்தால் வீடு, குடும்பம் இழந்து ஒரு லட்ச தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இடம் தேடி வந்தனர். அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னால் முடிந்த வரையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைக்கு நிவாரண உதவி அளித்தார். அன்றைய அரசியல் காரணமாக இலங்கையை எதிர்க்க இந்தியா விரும்பவில்லை.
இலங்கை அரசு தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லாமல் இந்திய அமைதி காக்கும் படை (IPKP) என்ற படையை இலங்கைக்கு அனுப்பினார். இந்திய படையின் வரவால் விடுதலை புலிகளுக்கு எரிச்சலை தந்தது. தமிழகத்தில் இருந்து வரும் உதவியை அவர் முடக்கி வைத்திருந்தார். (புதுமைபித்தன் தனது வாழ்க்கை குறிப்பில் ராஜீவ் காந்தி 'தமிழ் ஈழ' பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டியதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.)
1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையில் இருக்கும் பெண்ணை வைத்து தமிழகத்தில் கொன்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா நாடுகளில் எல்.டி.டி.ஈ இயக்கத்தை தடை செய்தனர்.
இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இது வரை நடந்து விட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்களின் சண்டைக்கு மூற்று புள்ளி வைக்கவில்லை.
26 டிசம்பர், 2004 சுனாமி இலங்கையை தாக்கியதில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எல்.டி.டி.ஈயினர் உடனே நிவாரணப் பணியில் இறங்கினர். சர்வதேச அமைப்புகளில் இருந்து எல்.டி.டி.ஈ உதவிக்கரம் நீட்டினர். அதிபர், பிரதமர் என்று இலங்கையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களுக்கு போட்டியாக இலங்கை தமிழர்களை காக்கும் பிரபாகரம் வடக்கு, கிழக்கு பகுதியில் ஆட்சி நடப்பது தான் நிதர்சன உண்மை.
சுனாமி அலை ஒய்ந்து நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் அடுத்த கலவரம் வெடிக்க தொடங்கியது. இவர்கள் சண்டையை விளக்கி கொண்டே போனால் இந்த கட்டுரை பக்கம் நிரம்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் சண்டையை இரண்டு வரியில் சொல்ல வேண்டும் என்றால்....
"இலங்கை தமிழர்களை ஒழிப்பது சிங்களர்களின் லட்சியம்.
தமிழ் ஈழ தேசத்தை பெறுவது தமிழர்களின் லட்சியம். "
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை
இலங்கையில் கலவரம் வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.
அங்கு எந்த சமயத்தில் வெடிகுண்டு வெடிக்குமோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடுதலை புலிக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் உயிர் இழப்புகள் மட்டும் நிச்சயம். அவர்களின் மரணத்தை தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இரத்த வாடையே போது தாக்குதல் நடந்ததை பற்றி தெரிந்துக் கொள்வார்கள். அங்கு காற்றை சுவாசித்ததை போலவே இரத்த வாடை சுவாசித்தவர்கள் அதிகம். அவர்களின் பேனா மை கூட சிவப்பு நிறமாக தான் இருக்கும். பல வெடிகுண்டுகள், சமாதான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்து ஈழ தமிழர்களுக்கு விடியல் என்பது கனவாகவே இருக்கிறது.
கட்டுரைக்கு உதவிய நூல் :
விடுதலைப் புலிகள் - மருதன்
கிழக்கு பதிப்பகம்
Thursday, March 12, 2009
இலங்கை வரலாறு : ஒரு அறிமுகம்
தினமும் தீபாவளி வெடி போல் இலங்கையில் ஏதாவது ஒரு இடத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடந்துக் கொண்டு இருக்கிறது. பல அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டுவருகின்றனர். நம் அரசியல்வாதிகளும் அரசியலாக்கி கொண்டு இருக்கிறார்கள். உண்ணாவிரதம், போராட்டம் என்று பல நாடகங்கள் சமிபத்தில் நாம் எல்லோரும் பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இவர்களுக்கு எத்தனை பேருக்கு இலங்கையின் உண்மையான வரலாறு தெரியும் என்று தெரியவில்லை. அவர்களுகாக....
இன்று இலங்கை வரலாறு பற்றி கேட்டால் இரத்தத்தால் எழுதப்பட்டது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !! அதற்கு முன் அமைதி, இயற்கை அழகு, வணிகம், விளையாட்டு என்று எல்லா நாடுகளை போல தான் இலங்கையும் இருந்தது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கயில் குடியேற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு இலங்கையின் இயற்கை அழகு கண்ணை உருத்தாமல் இல்லை. அன்றைய இலங்கையை சிலோன் என்று தான் அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் சிலோனின் தேயிலை, காபி தோட்டத்தில் வேலை செய்ய சிங்களர்களை அழைத்த போது யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. ஆனால், அதை பற்றி ஆங்கிலேயர்கள் கவலைப்படாமல் மலிவான வேலைக்காரர்களான தமிழர்களை அழைத்து வந்து வேலை வாங்கினர். பஞ்சத்தில் இருந்த தமிழர்களுக்கும் மிகுந்த சந்தோஷம். எங்கோ சென்று வேலை செய்வதை விட தமிழ் நாட்டில் அருகில் இருக்கும் சிலோனில் சென்று வேலை செய்வது பாக்கியமாக கருதினார்கள். அவர்களுக்கு சிலோன் ‘இன்னொரு தமிழ் நாடாக’ தான் தெரிந்தது.
1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக அறிவித்தனர். அதை சிங்களர்கள் எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் அரசு பதவியில் வேலைக் கொடுத்த போது சிங்களர்களை விட தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மாற்றங்களுக்கு தமிழர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமிழர்களின் வேலை திறமையை பார்த்த பிரிட்டன் அரசு 1931 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அரசாங்க பதவியில் உயர் பதவியும் அளித்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழர்களை பார்த்து சிங்களர்கள் மனதில் வெடித்துக் கொண்டு இருந்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போராடும் தைரியம் அவர்களுக்கு இல்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிக தீவிரமாக சுதந்திர போர் இலங்கையில் நடக்கவில்லை. வெள்ளையர்களுக்கு அடங்கி தான் இருந்தார்கள். அதனால் தானோ இலங்கை இலங்கையாகவே இருந்தது.
பிரிட்டன் இந்தியாவுக்கு விடுதலை அளித்த கையோடு இலங்கைக்கும் பிப்ரவரி 4,1948 அன்று சுதந்திரத்தை அளித்தது. சுதந்திர இலங்கைக்கு முதல் பிரதமராக டான் ஸ்டிபன் செனனாயகே (Don Stepen Senanayake) இருந்தார். அந்த சமயத்தில் பல துறையில் தமிழர்கள் முன்னேறி இருந்தார்கள். சிங்களர்களால் தமிழர்களுடன் போட்டி போட முடியவில்லை. வெள்ளையர்கள் இலங்கையை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் உண்மையான உருவம் தெரிய தொடங்கியது.
விடுதலைக்கு பிறகு தமிழர்கள் மீது சிங்களர்களுக்கு கோபம் அதிகமானது. நாளடைவில் அந்த கோபம் வெறியாக மாறியது. சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டு முடிவதற்குள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குரிமையை பறித்தது. 1956 ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட சாலமன் பண்டரநாயகா சிங்கள மொழியை அரசாங்க மொழியாக சட்டபூர்வமாக அங்கிகரித்து அறிவித்தார். தமிழர்கள் இதை எதிர்த்து போராடினர். விளைவு.... தமிழர் - சிங்களர் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. சிறுபான்மை தமிழர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அதிபர் சாலம் பண்டரநாயகா புத்த பிக்குவால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் பின் இலங்கையில் நடந்த எல்லா சம்பவங்களும் இரத்தத்தால் எழுதப்பட்டவை. மருந்துக்கு கூட “அமைதி” என்ற வார்த்தை அங்கு நிலவியதில்லை.
இன்று இலங்கை வரலாறு பற்றி கேட்டால் இரத்தத்தால் எழுதப்பட்டது என்று சின்ன குழந்தைக்கு கூட தெரியும். ஆனால், இந்த இரத்த வரலாறுக்கு வயது ஐம்பத்தி இரண்டு மட்டுமே !! அதற்கு முன் அமைதி, இயற்கை அழகு, வணிகம், விளையாட்டு என்று எல்லா நாடுகளை போல தான் இலங்கையும் இருந்தது.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே இலங்கயில் குடியேற ஆரம்பித்துவிட்டார்கள். இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களுக்கு இலங்கையின் இயற்கை அழகு கண்ணை உருத்தாமல் இல்லை. அன்றைய இலங்கையை சிலோன் என்று தான் அழைப்பார்கள். ஆங்கிலேயர்கள் சிலோனின் தேயிலை, காபி தோட்டத்தில் வேலை செய்ய சிங்களர்களை அழைத்த போது யாரும் வேலை செய்ய முன்வரவில்லை. ஆனால், அதை பற்றி ஆங்கிலேயர்கள் கவலைப்படாமல் மலிவான வேலைக்காரர்களான தமிழர்களை அழைத்து வந்து வேலை வாங்கினர். பஞ்சத்தில் இருந்த தமிழர்களுக்கும் மிகுந்த சந்தோஷம். எங்கோ சென்று வேலை செய்வதை விட தமிழ் நாட்டில் அருகில் இருக்கும் சிலோனில் சென்று வேலை செய்வது பாக்கியமாக கருதினார்கள். அவர்களுக்கு சிலோன் ‘இன்னொரு தமிழ் நாடாக’ தான் தெரிந்தது.
1833 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் ஆங்கில மொழியை அரசாங்க மொழியாக அறிவித்தனர். அதை சிங்களர்கள் எதிர்க்கவில்லை. கல்வி மற்றும் அரசு பதவியில் வேலைக் கொடுத்த போது சிங்களர்களை விட தமிழர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொண்டார்கள். ஆங்கிலேயர்கள் கொண்டு வந்த மாற்றங்களுக்கு தமிழர்களை பயன்படுத்திக் கொண்டார்கள்.
தமிழர்களின் வேலை திறமையை பார்த்த பிரிட்டன் அரசு 1931 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு வாக்குரிமை வழங்கியது. அரசாங்க பதவியில் உயர் பதவியும் அளித்தது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொண்ட தமிழர்களை பார்த்து சிங்களர்கள் மனதில் வெடித்துக் கொண்டு இருந்தனர். வெள்ளையர்களை எதிர்த்து போராடும் தைரியம் அவர்களுக்கு இல்லை. சொல்லிக் கொள்ளும் அளவிற்கு மிக தீவிரமாக சுதந்திர போர் இலங்கையில் நடக்கவில்லை. வெள்ளையர்களுக்கு அடங்கி தான் இருந்தார்கள். அதனால் தானோ இலங்கை இலங்கையாகவே இருந்தது.
பிரிட்டன் இந்தியாவுக்கு விடுதலை அளித்த கையோடு இலங்கைக்கும் பிப்ரவரி 4,1948 அன்று சுதந்திரத்தை அளித்தது. சுதந்திர இலங்கைக்கு முதல் பிரதமராக டான் ஸ்டிபன் செனனாயகே (Don Stepen Senanayake) இருந்தார். அந்த சமயத்தில் பல துறையில் தமிழர்கள் முன்னேறி இருந்தார்கள். சிங்களர்களால் தமிழர்களுடன் போட்டி போட முடியவில்லை. வெள்ளையர்கள் இலங்கையை விட்டு சென்றவுடன் சிங்களர்களின் உண்மையான உருவம் தெரிய தொடங்கியது.
விடுதலைக்கு பிறகு தமிழர்கள் மீது சிங்களர்களுக்கு கோபம் அதிகமானது. நாளடைவில் அந்த கோபம் வெறியாக மாறியது. சுதந்திரம் பெற்று ஒரு ஆண்டு முடிவதற்குள் தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கொடுத்த வாக்குரிமையை பறித்தது. 1956 ஆம் ஆண்டு அதிபராக தேர்வு செய்யப்பட்ட சாலமன் பண்டரநாயகா சிங்கள மொழியை அரசாங்க மொழியாக சட்டபூர்வமாக அங்கிகரித்து அறிவித்தார். தமிழர்கள் இதை எதிர்த்து போராடினர். விளைவு.... தமிழர் - சிங்களர் பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டது. சிறுபான்மை தமிழர்கள் பலர் சிங்களர்களால் கொல்லப்பட்டனர். அதிபர் சாலம் பண்டரநாயகா புத்த பிக்குவால் சுட்டு கொல்லப்பட்டார். அதன் பின் இலங்கையில் நடந்த எல்லா சம்பவங்களும் இரத்தத்தால் எழுதப்பட்டவை. மருந்துக்கு கூட “அமைதி” என்ற வார்த்தை அங்கு நிலவியதில்லை.
Subscribe to:
Posts (Atom)