வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, March 26, 2009

விடுதலைப் புலிகள் : ஒரு அறிமுகம்

1970 ஆம் ஆண்டு பிரபாகரன் தலைமையில் புதிய தமிழ் புலிகள் (Tamil New Tigers - TNT) என்ற இயக்கத்தை சிங்கள அரசுக்கு எதிராக தொடங்கினார். TNT தொடர்ந்து TELO, EROS என்று ஒவ்வொரு இயக்கங்களும் இலங்கை அரசுக்கு எதிராக தோன்றின. இந்த இயக்கங்கள் சிங்கள அரசுக்கு எதிராக கலவரம், தாக்குதல் என்று நடத்தி வந்தது. 1976 ஆம் ஆண்டு டி.என்.டி. என்ற பெயரை எல்.டி.டி.ஈ (LTTE) என்று மாற்றினர். LTTE என்றால் Liberation Tiger of Tamil Eelam. ஈழத்தமிழர்களுக்காக தனி தேசம். அது தான் தமிழ் ஈழம். LTTE க்கு மட்டுமல்ல இலங்கையில் இருக்கும் ஒவ்வொரு தமிழர்களுக்கும் கனவு தேசம் அது தான். இன்று வரை அந்த கனவு தேசத்துக்காக உயிர் கொடுக்கிறார்கர்கள்.



1983 ஆம் ஆண்டு 'கறுப்பு ஜூலை' என்று அழைக்கப்படும் அந்த கொடுரூர சம்பவம் இலங்கை தமிழர்களை கண்ணீர் கடலில் முழ்கடித்தது. தமிழர்களை அழிக்க வேண்டும் என்ற முடிவோடு தான் சிங்களர்கள் வீட்டில் இருந்து கிளம்பினர். கண்ணில் பட்ட தமிழர்களை எல்லாம் கொன்று குவித்தனர். லீட்டர் கணக்கில் பெட்ரோல், தமிழர்களின் உடலை பதம் பார்த்தது. தமிழ் பெண்களை உடனே கொல்ல அவர்களுக்கு மனம் வரவில்லை; அவர்களை கற்பழித்து மூச்சு தினற கொடுமை செய்து கொன்றனர். அவர்கள் சிறுமிகளை கூட விட்டு வைக்கவில்லை. இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட தமிழ் பெண்கள் ஏராளம். அன்று நடந்த கலவரத்தால் வீடு, குடும்பம் இழந்து ஒரு லட்ச தமிழர்கள் அகதிகளாக தமிழகத்தில் இடம் தேடி வந்தனர். அன்றைய முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் தன்னால் முடிந்த வரையில் இலங்கை தமிழர்களுக்கு உதவி செய்தார். பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கைக்கு நிவாரண உதவி அளித்தார். அன்றைய அரசியல் காரணமாக இலங்கையை எதிர்க்க இந்தியா விரும்பவில்லை.

இலங்கை அரசு தமிழர்கள் அதிகமாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் மீது பொருளாதார தடை விதித்தது. அந்த சமயத்தில் இந்திரா காந்தி மரணத்துக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தார். அவர் இலங்கை அரசுடன் ஒப்பந்தம் போட்டது மட்டுமில்லாமல் இந்திய அமைதி காக்கும் படை (IPKP) என்ற படையை இலங்கைக்கு அனுப்பினார். இந்திய படையின் வரவால் விடுதலை புலிகளுக்கு எரிச்சலை தந்தது. தமிழகத்தில் இருந்து வரும் உதவியை அவர் முடக்கி வைத்திருந்தார். (புதுமைபித்தன் தனது வாழ்க்கை குறிப்பில் ராஜீவ் காந்தி 'தமிழ் ஈழ' பிரச்சனையில் எம்.ஜி.ஆரை மிரட்டியதை கூறிப்பிட்டுயிருக்கிறார்.)

1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுதலை புலிகள் தற்கொலை படையில் இருக்கும் பெண்ணை வைத்து தமிழகத்தில் கொன்றனர். ராஜீவ் காந்தி படுகொலைக்கு பிறகு அமெரிக்கா, இந்தியா நாடுகளில் எல்.டி.டி.ஈ இயக்கத்தை தடை செய்தனர்.

இலங்கை அரசுக்கும், விடுதலை புலிகளுக்கும் எத்தனையோ பேச்சு வார்த்தைகள் இது வரை நடந்து விட்டது. ஆனால், எந்த ஒரு பேச்சு வார்த்தையும் அவர்களின் சண்டைக்கு மூற்று புள்ளி வைக்கவில்லை.

26 டிசம்பர், 2004 சுனாமி இலங்கையை தாக்கியதில் தமிழர்கள் வாழும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்பட்டது. எல்.டி.டி.ஈயினர் உடனே நிவாரணப் பணியில் இறங்கினர். சர்வதேச அமைப்புகளில் இருந்து எல்.டி.டி.ஈ உதவிக்கரம் நீட்டினர். அதிபர், பிரதமர் என்று இலங்கையில் ஆட்சி நடத்தினாலும் அவர்களுக்கு போட்டியாக இலங்கை தமிழர்களை காக்கும் பிரபாகரம் வடக்கு, கிழக்கு பகுதியில் ஆட்சி நடப்பது தான் நிதர்சன உண்மை.

சுனாமி அலை ஒய்ந்து நிம்மதி பெரு மூச்சு விடுவதற்குள் அடுத்த கலவரம் வெடிக்க தொடங்கியது. இவர்கள் சண்டையை விளக்கி கொண்டே போனால் இந்த கட்டுரை பக்கம் நிரம்பிக் கொண்டே இருக்கும். இவர்கள் சண்டையை இரண்டு வரியில் சொல்ல வேண்டும் என்றால்....

"இலங்கை தமிழர்களை ஒழிப்பது சிங்களர்களின் லட்சியம்.
தமிழ் ஈழ தேசத்தை பெறுவது தமிழர்களின் லட்சியம். "
இந்த இரண்டில் ஏதாவது ஒன்று நடக்கும் வரை
இலங்கையில் கலவரம் வெடித்துக் கொண்டு தான் இருக்கும்.

அங்கு எந்த சமயத்தில் வெடிகுண்டு வெடிக்குமோ என்று யாருக்கும் தெரியாது. ஆனால், விடுதலை புலிக்கும், இலங்கை இராணுவத்துக்கும் நடக்கும் யுத்தத்தில் உயிர் இழப்புகள் மட்டும் நிச்சயம். அவர்களின் மரணத்தை தகவல் தொடர்பு மூலம் தெரிவிக்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இரத்த வாடையே போது தாக்குதல் நடந்ததை பற்றி தெரிந்துக் கொள்வார்கள். அங்கு காற்றை சுவாசித்ததை போலவே இரத்த வாடை சுவாசித்தவர்கள் அதிகம். அவர்களின் பேனா மை கூட சிவப்பு நிறமாக தான் இருக்கும். பல வெடிகுண்டுகள், சமாதான பேச்சு வார்த்தைகள் எல்லாம் நடந்து ஈழ தமிழர்களுக்கு விடியல் என்பது கனவாகவே இருக்கிறது.

கட்டுரைக்கு உதவிய நூல் :

விடுதலைப் புலிகள் - மருதன்
கிழக்கு பதிப்பகம்

1 comment:

Unknown said...

i want to know how tamil peoples went there..

LinkWithin

Related Posts with Thumbnails