வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, March 10, 2009

காதலுடன் ஒரு உரையாடல்

பல வருடங்கள் பிறகு என்னை எழுத வைத்த காதலை இன்று தான் சந்தித்தேன். நீண்ட நாள் நண்பனை பிரிந்து இன்று தான் சந்தித்தது போல் ஒர் உணர்வு. இது வரை எத்தனையோ கிறுக்கல்கள் கிறுக்கியிருந்தாலும் அதற்கு எல்லாம் உத்வேகமாய் இருந்தது காதல் தான். அந்த காதலை பற்றி முழுமையாக நான் எழுதியதில்லை. நான் மட்டுமல்ல.. காதலை யாருராலும் முழுமையாக எழுத முடியாது. காரணம், காதல் அவ்வளவு அழகனாது.... அதே சமயத்தில் புதிரானது.

ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தில் காதல் ஒவ்வொரு விதமாக தொன்றும். அதை முழுமையாக அறிந்துக் கொண்டவர்கள் யாருமில்லை. உலகில் உள்ள எல்லா பெண்களில் மனதை அறிந்தவனாலே காதலை பற்றி அறிந்துக் கொள்ள முடியும். அப்படி இந்த உலகில் யாருமில்லை.

இதோ என்னை எழுத வைத்த காதலோடு சில உரையாடல்கள்.

நானும் காதலும்

காதல் : வா.. நண்பா பார்த்து நீண்ட நாட்கள் ஆனது.... நலம் தானா..?
நான் : நலம் தான்... உன் நலம் எப்படி ?

காதல் : என் நலம் உனக்கு தெரியாதா ?... என்னை ஒரு காதல் ஜோடி என்னை புனிதப்படுத்தினால்.... பத்து காதல் ஜோடிகள் காமத்திற்காகவே காதலிக்கிறார்கள். ‘காதல்’ என்றால் ‘காமம்’ என்று சொல்லும் நாள் வந்துவிடுமோ என்ற அச்சம் வந்துவிட்டது.
நான் : உன் அச்சம் தேவையில்லாதது... காரணம், காதலுக்கு மறு பெயர் தான் காமம் என்று வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.

காதல் : என்ன சொல்கிறாய் ? வள்ளுவர் அப்படியா சொன்னார்...?
நான் : ஆமாம்... காமத்துப்பாலில் 25 ஆதிகாரங்களே எழுதியிருக்கிறார். அதில் ‘காதல்’ வார்த்தைக்கு அவர் ‘காமம்’ என்ற வார்த்தையை தான் தான் பயன் படுத்தியிருக்கிறார். காதலில் காமமில்லை என்றால் அதில் சுவையிருப்பதில்லை நண்பா...

காதல் : ஆனால்... காமம் மட்டும் காதல்ல... அன்பும் காதல் தான்.
நான் : உண்மை தான்.... அன்பு + காமம் = காதல். காதலில் இரண்டும் வேண்டும். இரண்டுமே சரிபாதியாக இருக்க வேண்டும். அன்பு அதிகமானால் அது நட்பு. காமம் அதிகமானால் அது வேறும் தேக உணர்வு.

காதல் : அடே அப்பா... காதலுக்கு நல்ல தான் விளக்கம் சொல்கிறாய்...
நான் : இன்று பல பேர் உன்னை தவறாக புரிந்துக் கொண்டு... தவறாகத் தான் நடந்துக் கொள்கிறார்கள்.... அதனாலே காதல் என்னவென்றால் உனக்கே மறந்து விட்டது...

காதல் : உண்மை தான். இன்று உண்மை காதல் என்னவென்று தெரியாமல் காதலிப்பதால்... எனக்கே உண்மை காதல் எதுவென்று தெரியாமல் மறக்கடித்து விட்டனர்.
நான் : சரி... என்ன செய்வது.... காலத்தின் மாற்றங்களில் இதுவும் ஒன்று தான்.

காதல் : நீ கூட என்னை கண்டுக் கொள்வது இல்லையே உன்னை என்ன செய்வது....
நான் : ஐய்யோ... நான் யாரை காதலித்து ஏமாற்ற வில்லையே... காதலை காதலிக்கும் காதலன் நான்.

காதல் : எனக்கு தெரியும். ஆனால் காதலை பற்றி இப்பொழுது எல்லாம் நீ எழுதவில்லையே....
நான் : உன்னை பற்றி எழுதினால் தான்... ‘உன்னை காதலிக்கிறேன்’ என்று அர்த்தமா.... என்னை எழுத வைத்ததே நீ தானே

காதல் : அந்த நன்றி இருப்பதால் தான் நீ என்னிடம் பேசிக்கொண்டு இருக்கிறாய்... மற்றவர்கள் என்னை கண்டுக் கொள்ளவது இல்லை...
நான் : ஓ..அதான் என்னை கண்டுகொள்ள வில்லை என்றாயோ....

காதல் : ஆமாம்... எதோ தனிமை ஆகிவிட்ட உணர்வு.... என்னை வைத்து எழுத தொடங்கிய கவிஞர்கள் எல்லாம்.... இப்பொது பெண்னை பற்றி எழுதுவதும், கதாநாயகனுக்கு பாட்டு எழுதுவதும் தான் இருக்கிறார்கள்.
நான் : எல்லோரும் அப்படியில்லை... காலத்தால் அழியாத காதல் பாடல்களை எழுதிய கண்ணதாசன் தான்... இன்று எல்லா கவிஞர்களுக்கும் குரு....

காதல் : ஆ.. அவரா... என்னை அதிகமாக வாழ்த்தி பாடியவரும் அவரே.... என்னை அதிகமாக வதைத்து பாட்டு எழுதியவரும் அவரே....
நான் : கதைக்கு எற்ற சூழ்நிலைக்கு பாட்டு எழுதும் தலைமை பாடாசிரியர் அவர்... அவரை குறைக் கூறாதே...

காதல் : நான் யாரையும் குறைக் கூறவில்லை.... என் வேதனை கூறுகிறேன்.
நான் : அப்படி என்ன உன் வேதனை ?

காதல் : தமிழில் முதலில் ‘அ’ எழுதி தமிழை கற்றுக் கொள்வதுப் போல் கவிதை எழுத கற்று கொள்ளும் கவிஞர்கள் முதலில் என்னை பற்றி தான் எழுதுகிறான். ஆனால் வளர்ந்த பிறகு என்னை பற்றி கண்டு கொள்வதேயில்லை...வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் என்று தங்கள் திறமையை வேறொன்றில் நிருப்பிக்க நினைக்கிறார்கள். அதன் பிறகு என்னை பற்றி மீண்டும் எழுதுவதில்லை.
நான் : உன்னை பற்றி எழுதுவது சுலபம்...’கிறுக்கல்’ கூட காதலில் கவிதை தான். ஆனால், நீ சொன்ன வாழ்வியல், உரைநடை, சரித்திரம், விஞ்ஞானம் எல்லாம் படித்து உணர்ந்துக் கொள்ளும் அறிவு இருப்பவர்களாலே எழுத முடியும். தங்கள் திறமை உலகிற்கு காட்ட நினைப்பது தவறு ஒன்றும் இல்லையே...

காதல் : நான் தவறு என்று சொல்லவில்லை... ஆனால் மீண்டும் என்னை பற்றி எழுதுவதில்லை என்றே என் வருத்தம்...
நான் :அதை எல்லாம் எழுதிய பிறகு அவர்களுக்கு வயது ஐம்பதை தாண்டி இருக்கும்... அப்பொது அவர்களுக்கு காதலை விட ஆன்மீகம், சமுதாய சிந்தனை தான் மனதில் அதிகம் நிறைந்துயிருக்கும்....

காதல் : அப்படி என்றால் வளர்ந்த பிறகு என்னை பற்றி எழுதமாட்டார்களா....
நான் : அப்படி சொல்லவில்லை.... வளரும் சமயத்தில் ‘காதல்’ மட்டுமே மனதில் நிறைந்துயிருக்கும்... வளர்ந்த பிறகு உன்னை மருந்துக்கு என்று இரண்டு, மூன்று பக்கங்கள் மட்டுமே எழுதுவார்கள்... மற்ற பக்கங்களில் தங்கள் சமுதாய, அறிவியல் சிந்தனைக் காட்ட தான் நினைப்பார்கள்.

காதல் : இன்றைய தமிழ் திரைப்படத்தில் கவர்ச்சிக்கு நடிகை ஒரு பாடலில் ஆடிவிட்டு செல்வதுப் போல் சொல்கிறாய்.... என்னை முழுமையாக வளர்ந்தவர்கள் யாரும் எழுதுவதில்லை.... அதற்கு சமாதானம் கூறு....
நான் : உன் கடமையை மறந்து நீ பேசுகிறாய்....
காதல் : எது என் கடமை?
நான் : கவிஞர்களை உருவாக்குவதே உன் கடமை.... அதை நீ சரியாக செய்.... எந்த கவிஞனும் உன்னை மறக்க முடியாது. காரணம், நீ இல்லாமல் கவிதையில்லை... புரிந்துக் கொள் ! உன் வருத்தம் தேவையில்லாதது....

காதல் : அப்பொது ஏன்... காதல் கவிதை தொகுப்புகள் அதிகமாக வருவதில்லையே....
நான் : எனக்கு சிரிப்பு தான் வருகிறது... நீ பேசுவது சிறு பிள்ளை தனமாக உள்ளது ( வடிவேலு சொல்வது போல் ) ... ஒவ்வொரு கவிதையிலும் அன்னை மீது உள்ள காதல், மண்ணின் மீது உள்ள காதல், பெண்ணின் மீது உள்ள காதல் என்று உன்னை பற்றி தான் எழுதுகிறார்கள்...

காதல் : யாரோ மீது இருக்கும் காதலைத் தான் எழுதுகிறார்கள். என் மீது காதல் பற்றி யாரும் எழுதவில்லையே...
நான் : தண்ணீருக்கு தரையில் நடக்க ஆசை வந்ததுப் போல் உள்ளது... நீ மனித உறவுகளில் ஜீவ நாடி... உன்னையும், மனித உறவுகளையும் பிரித்துப் பார்க்க முடியாது... நீயும் உன்னை பிரித்துப் பார்க்காதே...

காதல் : ஆ.... நன்றாக பேச கற்றுக் கொண்டாய்.... உன்னை இப்படி பார்ப்பதில் எனக்கு மகிழ்ச்சி....
நான் : என்ன ...உன் கவலை திர்ந்ததா...?

காதல் : எனக்கு கவலையா... நீண்ட நாள் கழித்து உன்னை பார்க்கிறேனே... அன்று உன்னை பார்த்தது போல் அப்படியே இருக்கிறாயா... மாறிவிட்டாயா என்று சோதித்து பார்த்தேன்...
நான் : ஓ... இது உன் சோதனையா.... என்ன தெரிந்துக் கொண்டாய்...

காதல் : உன்னிடம் நல்ல மாற்றம் தெரிகிறது.... காதலை விட காலம் உன்னை நன்றாகவே மாற்றி இருக்கிறது... நம்பிக்கை இழக்காமல் என்னை தேற்ற பொறுமையாய் பதிலளித்தாய்.... தன்நம்பிக்கை வளர்த்துயிருக்கிறாய்....
நான் : மிக்க நன்றி.... உன்னை நான் மறக்கவில்லை என்று மிக விரைவில் தெரிந்துக் கொள்வாய்....

காதல் : எப்படி..?
நான் : இதோ... ‘என்னை எழுதிய தேவதைக்கு..’ தலைப்பில் ஒரு தொகுப்பை தொடங்கிள்ளேன்..... ஒவ்வொரு காதல் சூழ்நிலைகளை என்னை நாயகன் இடத்தில் வைத்துக் கொண்டு எழுதியிருக்கிறேன்...

காதல் : வாழ்த்துக்கள்... உன் எழுத்துப்பணி தொடரட்டும்....யார் அந்த தேவதை
நான் : நீ தான் அந்த தேவதை...

காதல் : நான் பெண்பால் இல்லை... எப்படி நான் தேவதையாக முடியும் ?
நான் : தெரியும். ஆண்ணுக்கு நீ பெண்பால். பெண்ணுக்கு நீ ஆண்பால். அதனால் தான் உன்னை இரு பால்களும் விரும்புகிறார்கள்.

காதல் : உன்னிடம் பேசிக் கொண்டு இருந்தால்... எனக்கே உன் மீது காதல் வந்துவிடும்... நான் வருகிறேன்.
நான் : சரி நன்றி காதலே.... உன்னை மீண்டும் சந்திக்கிறேன்.

காதல் : ஐய்யோ... மறுபடியும் உன்னை சந்திப்பதா....

பயந்தப்படி எங்கோ நீ எங்கோ மறைந்துக் கொண்டாய். நீ விளையாட்டாக அப்படி சொன்னாலும் உனக்கு என் மீதுள்ள காதலால் தானே என்னிடம் உரையாட வந்தாய்.

ஒவ்வொருவரிடம் காதல் உரையாடிக் கொண்டு தான் இருக்கிறது. அதை உணர்ந்தவர்கள் மட்டுமே கவிஞர்களாக உருமாருகிறார்கள். அதை உணராதவர்கள் கவிஞர்களின் கவிதையை படிக்கிறார்கள்.

1 comment:

ஆ.ஞானசேகரன் said...

///காதலை யாருராலும் முழுமையாக எழுத முடியாது. காரணம், காதல் அவ்வளவு அழகனாது.... அதே சமயத்தில் புதிரானது.///
உண்மைதான் நண்பரே

LinkWithin

Related Posts with Thumbnails