வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, March 16, 2009

கலீலியோ கலீலி

அந்தக் காலத்தில் கணிதம் படித்தவருக்கு சிறப்பான வேலை என்பது கிடையாது. கணிதம் படிப்பதால் நாட்டில் மதிப்பும் இல்லை; வேலை வாய்ப்பும் இல்லை. கணிதம் கற்றால் வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாட வேண்டியதுதான் என்று கலீலியோவின் தந்தை அவருடைய கணிதப் படிப்புக்குத் தடை விதித்து மருத்துவப் படிப்பில் சேர்த்து விட்டார். ஆனால் அவருக்குக் கணிதத்தில் இருந்த ஆர்வம் மருத்துவப் படிப்புடன் கணிதம் மற்றும் இயற்பியல் பாடத்தையும் சேர்த்துப் படிக்க வைத்தது.

அந்தக் காலத்தில் அரிஸ்டாட்டில் எழுதிய அனைத்தையும் ஆதரித்துப் படித்து வந்தனர். இந்த நிலையில் அரிஸ்டாட்டில் எழுதியதைப் படித்த கலீலியோ அதில் பல தவறான கோட்பாடுகள் இருப்பதைக் கண்டறிந்து சொன்னார். இதனால் வெறுப்படைந்த கல்லூரிப் பேராசிரியர்கள் இது குறித்து அவரது தந்தைக்கு கடிதம் அனுப்பினர். அவரும் கணிதத்தைக் கைவிட்டு மருத்துவம் படிக்க வலியுறுத்திக் கடிதம் எழுதினார். ஆனால் கலீலியோ அக்கடிதத்தைக் கண்டு கொள்ளாமல் அரிஸ்டாடில் செய்திருந்த பல தவறை சரி என்று ஒத்துக் கொள்ளாமல் அதிலிருக்கும் தவறைப் பற்றி முழுமையாக ஆய்வு செய்யத் துவங்கினார்.



இதன் வழியாக பெண்டுலத்தின் ஊசல் ஒரே கால அளவில் ஆடுவதை வைத்து நேரம் பார்க்கப் பயன்படுத்தினால் என்ன என்று தோன்றியது. அதுதான் பெண்டுலம் ஊசல் கடிகாரம். இப்படி அவர் கண்டுபிடித்ததால் வெறுப்படைந்த பேராசிரியர்கள் மருத்துவத்தில் அவரைத் தேர்வடைய விடாமல் தோல்வியடையச் செய்தனர். இதனால் அவருக்கு அடுத்து வயிற்றுப் பிழைப்புக்கு என்ன தொழில் செய்யலாம் என்ற யோசனையும் தோன்றியது. அரைகுறை மருத்துவப் படிப்பால் யாருக்கும் வைத்தியம் செய்ய முடியாது. மன்னருக்கு நெருங்கிய உறவினர் ஒருவர் மூலம் கணிதப் பாடத்தில் பேராசிரியராக பணி வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கும் கணிதமே படிக்காத ஒருவர் பேராசிரியராகப் பணியில் இருப்பதா என்று போட்டியில் பொறாமையில் பாதிக்கப்பட்டார். வாழ்க்கையை ஓட்ட போதிய பணமில்லாமல் கஷ்டப்பட்டார்.

கலீலியோ பாடம் நடத்தும் போது அதில் மாணவர்கள் ஆர்வமில்லாமல் இருந்து வந்தனர். அப்போது அரிஸ்டாட்டிலின் தத்துவத்தின் தவறுகளைச் சுட்டிக் காட்ட இதுவே தருணம் என்று முடிவு செய்து அதிக எடையும் குறைவான எடையும் உள்ள பொருள்கள் ஒரே நேரத்தில் பூமியை வந்தடையும் என்று செய்து காண்பித்தார். ஆனால் அவரது சோதனை வெற்றியைப் பாராட்டாமல் அரிஸ்டாட்டிலின் பழைய புராணமே பாடப்பட்டது.

இப்படியே கன்னர் காம்பஸ் தத்துவத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். இந்நிலையில் அவருக்கு மரினா கம்பா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு திருமணம் நடந்தது. அடுத்த ஆண்டில் வர்ஜினா என்கிற பெண் குழந்தையும், அதற்கடுத்த ஆண்டு லிவியா என்கிற பெண் குழந்தையும் பிறந்தன. அதற்குப் பிறகு ஐந்து வருடங்களுக்குப் பின்பு ஒரு மகன் பிறந்தான். அவனுக்குத் அவரது தந்தை வின்சென்ஸிசோ பெயரை வைத்தார்.

இந்த நிலையில் அவருக்கும், மரின கம்பாவிற்கும் குடும்ப வாழ்க்கையில் சண்டை ஏற்படத் துவங்கியது. அவர்களுக்குள் பிரிவு வந்தது. மகனை மரின கம்பாவிடம் விட்டுவிட்டு மகள்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு ப்ளாரன்ஸ் நகருக்குப் போனார். அங்கிருந்த போது தியரி ஆஃப் மோசன் எனும் நீரில் மிதக்கும் பொருள்கள் நகர்வதைக் குறித்து கண்டுபிடித்தார். இதை போலோ சர்பி என்ம் கணித மேதைக்கு அனுப்பி வைத்தார். அதில் அவர் பல குறைகளைக் கண்டு சொன்னார். கலீலியோ மீண்டும் அதுகுறித்து ஆராய்ச்சி செய்து அந்தக் குறிப்புகளை எல்லாம் தொகுத்து "டிமோட்டோ" எனும் நூலை எழுதினார்.

அதன்பிறகு ஹேன் லிப்பர்ஷே கண்டுபிடித்த டெலஸ்கோப் குறித்து மேலும் ஆய்வு செய்தார். அதன் மூலம் விண்வெளியை ஆய்வு செய்யத் துவங்கினார். மில்கி வே எனும் பால்வெளி வீதியைக் கண்டுபிடித்தார். விண்வெளி குறித்த பல தகவல்களைக் கண்டு சொன்னார். நெப்டியூன் கிரகத்தைக் கண்டுபிடித்துச் சொன்னார். கலீலியோ புதிய டெலஸ்கோப்பைக் கண்டறிந்து அனைவருக்கும் விண்வெளியைக் காட்டினார். அசந்து போனார்கள்.

இதுபோல் மைக்ரோஸ்கோப், , தெர்மா மீட்டர் என்ரு மருத்துவத்துறைக்கும் சில கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார். கலீலியோவின் கண்டுபிடிப்புகளில் "சூரியக் கரும்புள்ளி" என்பதும் முக்கியமானது. இந்நிலையில் கிறித்துவ மதத்தில் கூறப்பட்ட கருத்துக்களுக்கு முரணான கருத்துக்களைத் தெரிவிப்பதாகக் கலீலியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. எப்படியொ அதிலிருந்து மீண்டு வெளியே வந்தார். ஆனாலும் அடுத்தும் பல குற்றச்சாட்டுகளை அவர் மீது சில திருச்சபைகள் சுமத்தின. தான் எழுதிய அஸ்ஸையர் என்ற நூலை வெளியிட்டார். அதில் அரிஸ்டாட்டிலின் கொள்கையில் இருந்த தவறுகள் பற்றி விளக்கமாக எழுதியிருந்தார்.

அடுத்து "கோப்பர்னிகன் தியரி" எனும் நூலை எழுதி அவருடைய நண்பரான போப் எட்டாம் அர்பனிடம் வெளியிட உதவும்படி கேட்டுக் கொண்டார். அவர் மதக் கொள்கைகளைத் தாக்காமல் மிகவும் கவனமுடன் எழுதவேண்டும் என்று சொன்னார்கள். அவரும் நூலை எழுதி முடித்து விட்டார். அந்தக் காலத்தில் நூல்கள் வெளியிட திருச்சபையின் அனுமதி பெற வெண்டும். அந்த நூலைப் படித்த திருச்சபையினர் அந்தப் புத்தகத்தை நிறுத்திவிடும்படி சொன்னார்கள். இந்த நூலைப் பார்த்ததும் பொப் எட்டாம் அர்பன் கோபம் தலைக்கேறியது. அந்த நூலில் பைபிளுக்கு எதிரான கருத்துக்கள் பல் இருந்தன.

கலீலியோவின் மீது மத விரோதக் குற்றம் சுமத்தப்பட்டது. விசாரண நடத்தப்பட்டது. "பூமி சூரியனை மையமாகக் கொண்டு சுற்றுகிறது" என்று முதலில் சொன்ன கிறித்துவ மதத் துறவி கியோடர்னோ புருனோவை கம்பத்தில் கட்டி உயிருடன் எரித்தனர். அதே போல் கலீலியோவும் "பூமி சூரியனைச் சுற்றவில்லை" என்று சொல்ல வேண்டும் என விசாரணை மன்றம் வலியுறுத்தியது. ஆனால் அறுபத்தேழு வயதான கலீலியோ அப்படிச் சொல்ல மறுத்தார். பூமி சூரியனைச் சுற்றுகிறது என்றுதான் சொன்னார். விசாரணை மன்றம் அவரை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது.

ஒன்பது ஆண்டுகள் வரை வீட்டுக் காவலில் இருந்த கலீலியோ கண்பார்வை இழந்தும் தன் மாணவர்கள் உதவியுடன் இரண்டு நூல்களை எழுதினார். கடைசியில் அவருடைய எழுபத்தெட்டாம் வயதில் மரணமடைந்தார். கலீலியோவின் உடலை பாசிலிகா புனித மடத்தில் அடக்கம் செய்ய போப் எட்டாம் அர்பனும் மற்ற குருமார்களும் எதிர்ப்பு தெரிவிக்க அருகிலுள்ள சாதாரண மக்களுக்கான அடக்கம் செய்யும் இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

சூரியக் கரும்புள்ளியுடன் பல இயற்பியல் உண்மைகளைக் கண்டுபிடித்துச் சொன்ன கலீலியோவிற்கு எதிர்ப்பு தெரிவித்த கிறித்துவமதத்திற்கு இது ஒரு கரும்புள்ளிதான். இதற்காக 1992 ஆம் ஆண்டில் பொப் இரண்டாம் ஜான் பால் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்க விசயம்தான்.

வாழ்க்கையோடு போராடிக் கொண்டிருப்பவர்கள் சென்னை, Prodigy வெளியிட்ட, குகன் எழுதியிருக்கும் இந்தக் கலீலியோ கலீலி எனும் தலைப்பிலான விஞ்ஞானியின் வாழ்க்கைப் போராட்டத்தைப் படித்துப் பாருங்கள். எழுதியிருப்பவரைப் பாராட்டத் தூண்டும். வாழ்க்கையில் எதையாவது நாமும் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தைத் தூண்டும்.


நன்றி : முத்துகமலம்.காம்

முகவரி :

கிழக்கு பதிப்பகம்
- Prodigy வெளியீடு -
(Prodigy, An imprint of New Horizon Media Pvt. Ltd.,)
33/15, எல்டாம்ஸ் ரோடு,
2 வது தளம், ஆழ்வார் பேட்டை,
சென்னை-600 018.
தொலைபேசி : 044-42009601/03/04
தொலைநகல் : 044-43009701

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails