வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, March 18, 2009

தேர்தல் 2009 : பா.ஜ.க நகைச்சுவை

அத்வானி : என்ன நடந்தாலும் சரி... தமிழ் நாட்டுல 10 சீட்டாவது ஜெய்க்கனும்... எந்த கோயில்ல கட்டுறதா சொன்னா ஓட்டு போடுவாங்க...

ஆலோசகர் : கோயிலுக்கு பதிலா... பாலம் கட்டித்தரதா சொல்லுங்க... கண்டிப்பா 3 சீட்டாவது கிடைக்கும்...

அத்வானி : அப்படியா... இப்பவே 'பாலம்' கட்டி தரோம்னு பிரச்சாரத்த ஆரம்பிச்சிடுறேன்.என்ன பாலம் கட்டலாம்...?

ஆலோசகர் : 'இராமர் பாலம்'

****

பா.ஜ.க : நாங்க ஆட்சிக்கு வந்தா... ஒரு லட்ச பேருக்கு ஐ.டி வேலை வாய்ப்பு கொடுப்போம்.

பத்திக்கையாளர் : ஐ.டி. துறையே நஷ்டத்துல நடக்கும் போது உங்களால எப்படி இவ்வளவு வேலை உருவாக்க முடியும்.

பா.ஜ.க: நான் ‘ஐயப்பன் டீ’ (ஐ.டீ) கடையை ஒவ்வொரு மாநிலத்தில தொடங்கி...அதுல வேலை கொடுப்போம்னு சொன்னேன்.

****

பா.ஜ.க : இன்னும் எத்தன வருஷமா... ராமர் கோயில் கட்டுறத சொல்லி ஓட்டு கேக்குறது...

தொண்டர் : இந்த வாட்டி... தாஜ் மஹால் இடிச்சிட்டு சிவன் கோயில் கட்டுவோம் சொல்லாமா...

பா.ஜ.க : அடபாவி... கிடைக்குற இரண்டு மூன்னு ஓட்டு கிடைக்காதே...

****

பா.ஜ.க : தமிழ் நாட்டுல எந்த கடவுள் பத்தி பேசினா ஓட்டு அதிகமா விழும்.

தமிழ்நாடு பா.ஜ.க : இங்க 'கடவுள் இருக்கு' சொல்லுறவங்கள விட 'கடவுள் இல்லைனு' சொன்னா தான் ஒரளவு ஓட்டு விழும். அப்படி ஒரு புரட்சிய ஒரு பெரியவரு (பெரியார்) பண்ணிட்டு போய்ட்டாரு....

****

பத்திரிக்கையாளர் : யாருக்கும் பெரும்பாண்மை கிடைக்கலானா... என்ன பண்ணுவீங்க...

பா.ஜ.க : மூன்றவது அணியோட சேர்ந்து ஆட்சி அமைப்போம்... இல்லனா காங்கிரஸோட சேர்ந்து ஆட்சி அமைப்போம்.

பத்திரிக்கையாளர் : அப்போ யார் பிரதமரா இருப்பாங்க...??

பா.ஜ.க : முதல் இரண்டரை வருஷம் எங்க 'அத்வானி' பிரதமரா இருப்பார். அடுத்த இரண்டரை வருஷம் அவங்க இருக்கட்டும்.... இதுல முதல் இரண்டரை வருஷம் நாங்க ஆட்சி பண்ணுவோம் விஷயத்துல ரொம்ப உறுதியா இருக்கோம்.

பத்திரிக்கையாளர் : அப்போ இரண்டரை வருஷத்துல இன்னொரு தேர்தல் வரும் சொல்லுங்க...

3 comments:

ttpian said...

கேபரா டான்சரோடு கூட்டு வைக்கும்போது அத்வானிக்கு கலாச்சாரம்
சீரழியவில்லையா?

குகன் said...

// ttpian said...
கேபரா டான்சரோடு கூட்டு வைக்கும்போது அத்வானிக்கு கலாச்சாரம்
சீரழியவில்லையா? //

ஓட்டுக்காக யார்கிட்ட வேணும்னாலும் கூட்டனி வச்சிக்கிலாம்னு அரசியல் சித்தாந்தம் இருக்குற வரைக்கும்... இந்த நிலைமை மாறாது..

Cinema Virumbi said...

Dear Guhan,

' இந்த BJP பெருசுங்க லொள்ளு தாங்க முடியலப்பா! (ஒரு கற்பனை உரையாடல்) '


சமீபத்திய Delhi, Rajasthan, Chattisgarh etc., தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு idlyvadai.blogspot.com ல் ஒரு பதிவில் பின்னூட்டமாக என்னால் சில மாற்றங்களுடன் பதியப் பட்டது)

nanRi!

Cinema Virumbi

http://cinemavirumbi.tamilblogs.com

அத்வானி: எழவு , ஒரு பார்முலாவும் ஒர்க் அவுட் ஆவ மாட்டேங்குது ! போன வாட்டி ‘India Shining’ னு சொன்னோம்; நமக்கே ஷூ பாலிஷ் போட்டுட்டானுங்க! சாமியார் , சாமியாரிணி, சினிமா நடிகர்னு யாரைக் காமிச்சாலும் ஓட்டு விழ மாட்டேங்குது!

வெங்கையா நாயுடு : இந்த வாட்டி , தீவிரவாதம்னு பூச்சாண்டி காட்டினோம் ! மாப்பு, வச்சிட்டாங்கையா ஆப்பு!

அருண் ஜெட்லி: போன வாட்டியே ஆட்சியில் இருந்த ஆறு வருஷத்துல எல்லா அரசு நிறுவனத்தையும் தூக்கி தனியாருக்குத் தாரை வார்த்திருக்கணும்! கோட்டை விட்டுட்டோம்! இனிமே நாம என்னிக்கு ஜெயிச்சு, நான் என்னிக்கு disinvestment மந்திரி ஆகி … விடிஞ்சுரும்!

ராஜ் நாத் சிங்: நமக்கு ஜாதகம் சரியில்லைய்யா! என்ன சொன்னாலும் ஜனங்க நம்புவேனான்றாங்க! டெல்லில பத்து வருஷம் ஆனாலும் காங்கிரசே தேவலைன்றாங்க! பழைய வெங்காய வெலைய மறக்க மாட்றாங்க!

வெங்கையா நாயுடு : ராஜஸ்தான்ல யாரோ மகாராணியை எல்லாம் ப்ரொஜெக்ட் பண்ணிப் பார்த்தோம் , பாச்சா பலிக்கலை!

ஜஸ்வந்த் சிங்: யாரங்கே? கொஞ்சமா ஓப்பியம் போட்டு ஒரு டீ கொண்டா.

அத்வானி: குறுக்குச்சால் ஓட்டறது நம்ப பார்ட்டில ரொம்ப ஜாஸ்திய்யா ! மதன் லால் குரானா , உமா பாரதி ,கல்யாண் சிங், இப்போ மீணான்னு ஒரு ராஜஸ்தான் மந்திரி, சொல்லிக்கிட்டே போகலாம் .

வேறு ஒருவர்: (மனதுக்குள்) வாஜ்பாய்க்கு எதிரா நீங்க ஓட்டறா மாதிரியா?!

வெங்கையா நாயுடு : அது மட்டுமா? காரியம் ஆனதும் கழட்டி உடறது, ஊமைக் காயம் வர்றா மாதிரி அடிக்கறது , இதிலெல்லாம் நம்ப பார்ட்டி ஆளுங்க கில்லாடியாச்சே! குரானா, உமா பாரதி, கல்யாண் சிங் , பங்காரு லக்ஷ்மண் , கோவிந்தாச்சார்யா எல்லாரையும் எப்படி smooth ஆ கழட்டி உட்டோம்!

அருண் ஜெட்லி: அது என்ன ஜுஜுபி! ஓட்டுப் போட்டதும் ஒட்டு மொத்தமா ஜனங்களையே கழட்டி உட்டோமே அதை விடவா?!

அத்வானி: ‘கிடக்கிறது கிடக்கட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்கிற மாதிரி இந்த பைரோன் சிங் ஷெகாவத் வேற நான்தான் பிரதமர் என்கிறாரு ! May 2009 க்கு என்னதான்யா வழி?!

அருண் ஜெட்லி: அயோத்யா, ராமர் பாலம், மத மாற்றம், வெல வாசி, 123 ஒப்பந்தம், தீவிரவாதம் ….

வெங்கையா நாயுடு : …… ரியல் எஸ்டேட் ஏற்றம், ஷேர் மார்க்கெட் சரிவு , அது இது எல்லாத்தையும் போட்டுக் கலக்கி வைப்போம்! அதுக்குள்ள இந்தப் பாழாய்ப் போன ஜாதகமும் கொஞ்சம் மாறித் தொலைக்குதா பார்ப்போம் !

எல்லோரும்: ஜெய் ஸ்ரீ ராம்!

LinkWithin

Related Posts with Thumbnails