வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, August 10, 2011

நாகரத்னா பதிப்பகத்தின் இரண்டு நூல் வெளியீட்டு விழா !

வணக்கம்,

சுரேகாவின் “ நீங்கதான் சாவி”, கனியன் செல்வராஜ்ஜின் “உள்ளங்கையில் வாழ்க்கைக்கு வழி” நூல்களுக்கு பிறகு நாகரத்னா பதிப்பகம் தனது அடுத்த நூல்களை வெளியீட உள்ளது.


கலைஞரின் நினைவலைகள் 100
பக் :64, ரூ.35/-)

கலைஞர் அவர்கள் மேடை பேச்சு, பத்திரிகைக்கு பேட்டி கொடுத்தது, அவ்ரது திரைப்பட குறிப்புகள், அவரது நகைச்சுவை நயம் என்று 100 தகவல்களை தொகுத்து நூலாக கொண்டு வந்துள்ளோம். முடிந்த வரையில் அரசியல் கலக்காமல் அவரது குறிப்புகளை சேகரித்துள்ளோம்.

கலைஞர் அவர்கள் பதவியில் இருக்கும் போது வெளியிட்டு இருந்தால், நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் என்று சில நண்பர்கள் கூறினர். ஆனால், அவர் பதவியில் இல்லாத இந்த சமயத்தில் நூல் வருவது சரியான தருணம் என்று எங்களுக்கு தோன்றியது.

( எட்டு மாதங்களாக என் பதிவில் இடது இடம் பக்கம் இருந்த நூலின் அட்டை படம் இப்போது நூலாக கொண்டு வர முடிந்தது.)

கலாம் கண்ட கனவு
(பக் :64, ரூ.35/-)

45 கவிஞர்கள் கலாமைப் பற்றியும், இந்திய தேசத்தைப் பற்றியும், இளைஞர்கள் பற்றியும் எழுதிய கவிதைத் தொகுப்பு. இந்த புத்தகத்தில் பதிவர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது சற்று வருத்தம் தான். ஆனால், எங்கள் முந்தைய தொகுப்பு நூலை விட மிக சிறப்பாக வடிவமைத்து வந்துள்ளது.

இரண்டு நூல் வெளியீட்டு விழாவோடு இல்லாமல் நாகரத்னா பதிப்பகத்தில் எழுதிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. அவர்களது நூலின் அறிமுக நிகழ்ச்சியும் நடைப்பெற இருக்கிறது.

தேதி : 4.9.2011, காலை 10 மணிக்கு
இடம் : கன்னிமரா நூலகம், எழும்பூர், சென்னை.


வெளியிடுபவர்களின் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails