Monday, December 5, 2011

ஹைக்கூ கவிதைகள் : மரம்

காடுகள் அழித்து
குடி வர வீடு கட்டினோம்
மழை வரவில்லை !

**

காகித கப்பல் செய்யும்
குழந்தைகளுக்கு தெரிவதில்லை
அது மரத்தின் எச்சமென்று !!

**

பணத்தை திங்க முடியாது
என்று உரைத்தது
பாலைவனத்தில் !

**

மரங்கள் வெட்டப்படுவது
நிறுத்தப்படும்
அதற்கு வாக்குரிமை அளித்தால் !

**

மரத்தின் மரணம்
பல உயிர்களை காத்தது
ஈழப்படகு !

0 comments:

LinkWithin

Related Posts with Thumbnails