வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Showing posts with label போட்டி. Show all posts
Showing posts with label போட்டி. Show all posts

Wednesday, October 6, 2010

சவால் சிறுகதை : உளவாளி

உயிர் போகும் ஆபத்தான வேலை தான். ஆனால், இதில் இருக்கும் த்ரில் எதிலும் இல்லை. சேஸிங், டபிள் க்ராஸ், கொலை எல்லாம் இந்த மூன்று மாதத்தில் கிடைத்த அனுபவம் எந்த பெண்ணுக்கும் கிடைத்திருக்காது. காமினிக்கு கிடைத்திருக்கிறது. ஆண்களுக்கு இணையாக சண்டை போடக் கூடியவள். சாகசத்திலும் கெட்டிக்காரி. ஆதானலே பரந்தாமன் கள்ளக்கடத்தல் கூட்டத்தில் முக்கியமான ஆளாக கருதப்பட்டாள்.

காமினி சீக்கிரம் அந்த கூட்டத்தில் முக்கிய அங்கமாக கருத்தப்பட்டதற்கு இன்னொரு காரணம். சிவா. பரந்தாமனுக்கு அடுத்து அந்த கூட்டத்தில் தலைவனாக இருப்பவன். காமினியை பார்த்த மாத்திரத்தில் அவள் அழகால் கவரப்பட்டவன். ஒரே வாரத்தில் அவளிடம் காதலை சொல்லி, அவள் சம்மதம் பெற்றவன்.

வருடக்கணக்கில் அந்த கூட்டத்தில் இருக்கும் ஆண்களுக்கு கூட தெரியாத ரகசியம் எல்லாம் சிவா மூலம் காமினிக்கு தெரிந்தது. சில சமயம் சிவா சொல்ல மறுத்தாலும், காமத்தின் உச்சத்திற்கு அவனை அழைத்து சென்று உண்மையை வாங்கிவிடுவாள்.

இருவருக்கும், திருமணம் தான் நடக்கவில்லை என்றாலும் இருவரும் கணவன், மனைவியாக தான் இருந்தனர். பரந்தாமனின் அன்புக்கு பாத்திரமாக சிவா இருந்ததால் இன்றைய முக்கியமான கொள்ளையில் சிவாவுடன் காமினியை அனுப்பியிருந்தான். அந்த டைமண் மட்டும் வந்துவிட்டால் கொள்ளையடிக்கும் தொழிலே முழுக்கு போட்டுவிடலாம். அதை வாங்குவதற்காக வெளிநாட்டில் இருந்து தனது க்ளைட் எல்லோரையும் வரவேற்கும் விழாவில் பெரிய தொகையை ஏலத்திற்கு விட வேண்டும் என்ற திட்டம் போட்டான் பரந்தாமன்.

சிவா என்றைக்கும் எந்த விஷயத்திலும் சொதப்பியதில்லை என்ற நம்பிக்கை பரந்தாமனுக்கு இருந்தது. கூடவே, காமினி சென்று இருக்கிறாள். எந்த கவலையும் இல்லாமல் பரந்தாமன் வெளிநாட்டு விருந்தாளிகளை கவனிப்பதில் இருந்தான்.

ஆனால், நேரமாக ஆக பரந்தாமனுக்கு பயம் பற்றிக் கொண்டது. இன்னும் ஒரு மணி நேரத்தில் டைமண்ட் வரவில்லை என்றால் வெளிநாட்டு வியாபாரிகள் சென்றுவிடுவார்கள். இதை விற்க சிரமப்பட வேண்டும். சிவாவின் செல்போனும் ஆப் செய்யப்பட்டிருந்தது.

இரண்டு முக்கிய வியாபாரிகள் வேலையிருப்பதாக சொல்லி வெளியே சென்றனர்.

இனி அந்த டைமண்டை விற்க முடியாது என்ற நம்பிக்கை இழக்கும் போது காமினி அறைக்குள் நுழைந்தாள்.

ஆனால், அவளுடன் சென்ற சிவாவும், மற்றவர்களும் வரவில்லை.

" காமினி ! டைமண்ட் என்ன ஆச்சு ? சிவா எங்கே ?? " என்று பல கேள்விகள் உள்ளுக்குள் ஓடியது.

" டைமண்ட் எடுத்து வரும் போது சிவாவையும், மத்தவங்களையும் போலீஸ் அரஸ்ட் பண்ணிட்டாங்க... நா மட்டும் டைமண்ட்டோட தப்பிச்சேன் " என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

காமினி கையில் இருக்கும் டைமண்ட்டை ஆசையாய் வாங்கி பார்த்தான். தன்னை இன்னும் சில நிமிடங்கள் இந்த டைமண்ட் கோடிஸ்வரனாக்க போகிறது என்ற பூரிப்பில் இருந்தான்.

தீடிர் என்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் ஒளித்தது.

அந்த அறையை சுற்றி போலீஸ் வலைத்தனர். காமினி, பரந்தாமனோடு அவனின் வாடிக்கையாளர்களும் கைது செய்யப்பட்டனர்.

காமினி மட்டும் தனியாக பெண் போலீஸ் அழைத்து சென்று ஐ.ஜி முன் நிறுத்தினர்.

" கமான் காமினி ! யூ டன் ஒன்ஸ் அகேன்"

" தாங்க் யூ ஸார் !"



"எவ்வளவு வருஷம எத்தன உளவாளி வச்சும் கண்டுப்புடிக்க முடியாத கொள்ள கூட்டத்த மூனு மாசத்தில கண்டு புடிச்சு கொடுத்துட்ட..."

" அதுக்கெல்லாம் சிவா என் மேல வச்சிருந்த பைத்தியக்கரமான காதல் தான் காரணம்"

"குட்... எப்படி அவன் உன் மேல இந்த அளவுக்கு காதல் வளர்த்துக்கிட்டான் "

" வெரி சிம்பிள். ஐ ஹெட் செக்ஸ் வித் ஹிம். அது தான் அவன் என் மேல் அதிக நம்பிக்கை வளர்த்துக்கிட்டான்"

" ஒரு கொள்ளக்காரனோடு உன் கற்ப இழக்குற அளவுக்கு நீயும் அவனும் பழகுன..."

" வெரி பன்னி... இந்த காலத்துல கற்பு பத்தி பேசுறீங்க. எந்த உளவாளிக்கும் இல்லாத ஆயுதம் பெண் உளவாளிக்கு இருக்குதுனா அது அவளோட அழகு தான். அத பயன்படுத்துனா தான் மதிப்பு" என்று புன்னகையோடு காமினி கூறினாள்.

" ஓ.கே. அது உன்னோட சொந்த விஷயம். உன்ன அரஸ்ட் பண்ணும் போது தப்பிக்க முயற்சி பண்ண. சுட்டுட்டோம்னு சொல்லி உங்க கூட்டத்த நம்ப வைக்கனும். இல்ல உனக்கு பிண்ணாடி பிரச்சையை வரும்.”

" அவங்க அத நம்புவாங்கனு நினைக்கிறீங்களா.."

" கொஞ்சம் கஷ்டம் தான். பரந்தாமனுக்கு உன் மேல சந்தேகம் வர வாய்ப்பிருக்கு"

"நாளைக்கு சிவாவோட என்னையும் கோர்ட்க்கு கூட்டிட்டு போகும் போது நான் தப்பிக்கிறேன். ஒரு போலீஸ் வச்சு என்ன சிவா முன்னாடி சுட சொல்லுங்க..."

"குட்...இதுவும் நல்ல ஐடியா தான்."

" இன்ஸ்பெட்டர் வெங்கட் கிட்ட நம்ப திட்டத்த பத்தி சொல்லுறேன். அவர் தான் நாளைக்கு உங்களோட கோர்ட்டுக்கு வராரு..."

" ஓ.கே.."

மீண்டும் காமினி கையில் விலங்கு மாட்டி கைதி போல் அழைத்து சென்றனர்.

அடுத்த நாள்.

சிவா, பரந்தாமனோடு காமினியும் கையில் விலங்கு மாட்டி சைதை கோர்ட்டுக்கு அழைத்து செல்ல வேனில் ஏற்றினர். மவுன்ட் ரோட் சிக்கலில் ஐ.ஜி திட்டப்படி காமினி கையில் விலங்கோடு ஓட தயாரானாள். சிவா, பரந்தாமன் போலீஸ் சுற்றியிருந்ததால் காமினியிடம் எதுவும் பேச முடியவில்லை.

நந்தனம் சிக்னல் வந்தது. காமினி ஓட தயாராக இருந்தாள். பச்சை விளக்கு வரும் இரண்டு நொடி இருக்கும் போது ஓடினாள்.

டமால்.... தூப்பாக்கி வெடித்தது.

துப்பாக்கி தோட்டா காமினி மார்பில் பாய்ந்தது. வெங்கட்டை அடித்து சிவா அவனின் துப்பாக்கியால் காமினியை சுட்டான். சிவாவும், பரந்தாமனுக்கு துப்பாக்கி காட்டி தப்பித்தனர்.

காமினியின் உயிருக்கு ஆபத்தில்லை. மயக்க நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.

" ஒண்ணும் பிரச்சன இல்ல... மார்பு குறிப்பார்த்து சுடுற நினைச்சு தோள் பட்டையில தான் சுட்டிருக்கான். ஒரு மணி நேரத்து கண் முழிச்சிடுவாங்க..." என்று டாக்டர் ஐ.ஜியிடம் சொன்னார்.

" தப்பிச்சு போன கொள்ளக்காரங்களால எந்த நேரத்துலையும் இவளுக்கு ஆபத்துவரலாம். போலீஸ் புரட்டக்ஷன் கொடுக்க நீங்க அனுமதிக்கனும்.

" ஓ.. ஷுர்..." என்றார் டாக்டர்.

காமினியின் மயக்கம் தெளிந்தது.

மூன்று மாதமாக சிவாவோடு நெருங்கி பலகியவள். அவன் தன்னை கொள்ளாமல் விடமாட்டான். மருத்துவமனை காவலை மீறி தன்னை எளிதாக கொன்றுவிடுவான். இங்கு இருப்பது எந்த நேரத்திலும் ஆபத்து என்று நினைக்க தொடங்கினாள்.

ஐ.ஜி, டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அக்ற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

இரண்டு வருடங்களாக உளவாளி வேலை செய்திருக்கிறேன். காட்டிக் கொடுத்தது நான் தான் என்ற சந்தேகம் யாருக்கும் வந்ததில்லை. சிவாவுக்கு மட்டும் எப்படி தெரிந்தது என்ற குழப்பத்தில் ஒரு ஆட்டோவில் ஏறினாள்.

"பெஸ்ட் நகர் போப்பா " என்ற போது அதிர்ந்து விட்டாள் காமினி.

ஆட்டோ டிரைவர் வேடத்தில் சிவா.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

பத்தடி தூரத்தில் பரந்தாமனிடம் இருந்து பணம் வாங்கிக் கொண்டு இருந்தான் இன்ஸ்பெட்டர் வெங்கட்.

Tuesday, October 27, 2009

யாரோ ஒருத்தி



சிறுவயதில் இருந்து விரல் சப்பி பழக்கப்பட்ட எனக்கு, சிகரெட் தான் சரியான ஆல்டர்னெடாக இருந்தது. இருபது வயதானவன் விரல் சப்பினால் எவ்வளவு கேவலமாக இருக்கும் ? வயதானாலும், உதடு சுவைத்துக் கொள்ள ஏதோ ஒன்று தேவைப்படுகிறது. தற்சமயம் அந்த எதோ ஒரு தேவை.... சிகரேட் தான். நண்பனை கிங்ஸ் வாங்க அனுப்பி விட்டு, சாலையில் செல்லும் வாங்கனங்களையும், சிகனலையும் பார்த்துக் கொண்ட்டு இருந்தேன்.

பச்சை.... மஞ்சல்....சிவப்பு.... சிவப்பு.. பச்சை.. மஞ்சல்.

பரபரப்பான போக்குவரத்து நெரிசலில் சிக்னல் எவ்வளவு கொடுமையானவை. மனிதன் வசதிகாக கண்டு பிடித்தது எல்லாம் மனிதனுக்கு எதிரியாக இருப்பது வியப்போன்றுமில்லை. அதில் சிக்னல் தவிர்க்க முடியாத ஒன்று.

எதிர் சாலையில் பார்த்துக் கொண்டு இருக்கும் போது, மார்டன் ட்ரெஸ் போட்ட பெண் சாலையை கடந்து நான் நிற்கும் பஸ் நிற்கும் பஸ் பயணிகள் குடைக்குள் வந்தாள். நெற்றியில் சிவப்பு பொட்டு, ஸ்லீவ் லெஸ் பச்சை டி ஷர்ட், ஜீன்ஸ் என்று அணிந்திருந்தாள். ஸ்லீவ் லெஸ் டி ஷர்ட் போடும் பெண்களை ஒரு ஆண் எதை பார்த்து ரசிப்பானோ அதையே தான் நான் பார்த்து ரசித்தேன்.

ஒரு நிமிடம் சிக்னலையும், அவளையும் மாற்றி மாற்றி பார்த்தேன். மஞ்சல் நிறத்தை அவள் உடம்பில் எங்காவது மறைத்து வைத்திருப்பாளா ?? ச்சே... அவள் நிறமே மஞ்சலாக இருக்கும் போது இன்னொரு மிஞ்சல் எதற்கு ? அவள் நடமாடும் சிக்னலாக தெரிந்தாள். திரும்பி என் நண்பனை பார்த்தேன். அவன் கடைக்காரனிடம் சில்லரை பற்றி பேசிக் கொண்டு இருந்தான். கொஞ்ச நேரம் அவன் வராமல் இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்போது எனக்கு சிகரெட்டை விட அந்த பெண் அழகு தான் முக்கியமாக இருந்தது.

நாள் அவளை பார்ப்பதை தெரிந்து விட்டது போல் என்னை திரும்பி பார்த்தாள். ஓட்டு போட்ட மக்களை கண்டுக் கொள்ளாத அரசியல்வாதி போல் நான் என் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் அவளை பார்ப்பதை உள்ளூர ரசிக்கிறாள். அல்லது ரசிப்பது போல் பாவனை செய்கிறாள்.

தன் செல்போனை எடுத்து யாரிடமோ பேசினாள். அவள் பேசி முடித்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டு பேர் வந்து அவளிடம் பேசினர்.குறிப்பாக செல்போன் வைத்திருப்பவனிடம் அவள் அதிகமாக பேசினாள். அவள் பேசிய இரண்டாவது நிமிடத்தில் முகம் கொஞ்சம் கோபமாக மாறியது. இரண்டு பேரில் ஒருவன் அவளிடம் கை நீட்டி பேசினான். இன்னொருவன் அவனை அழைத்து சென்று சமாதானப்படுத்தினான். அந்த பெண் முகம் கொஞ்சம் வாடியிருந்தது. காதல் சண்டையாக இருக்கும் என்று நினைத்தேன்.

அந்த பெண் திரும்பி பார்த்து, என்னை நோக்கி வந்தாள். அப்போது பஸ் நின்று இருந்ததாள், அதுக்காக வருகிறாளோ என்று யோசிக்க கூட அவகாசம் கொடுக்கவில்லை.

அவள் என்னிடம், "டி.நகருக்கு என்ன பஸ் போகும் ?" என்றாள்.

இவ்வளவு நேரம் பார்த்து ரசித்த பெண்ணிடம் இருந்து எதிர்பாராத அறிமுகம்.

தட்டு தடுமாறி '27C' என்றேன். அவள் அந்த இடத்தை விட்டு நகர விரும்பவில்லை. என்னுடன் பேச்சை தொடர விரும்புவது போல் இருந்தது. எனக்கு அவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் இருப்பது போல் என்னை நானே சந்தோஷப்படுத்திக் கொண்டேன். ஆனால், உண்மை அது தான்.

" இங்க கீரின் போர்ட், யெல்லோ போர்ட் பஸ் நிக்குமா ?" என்றாள்.

"ம்..." என்று தலை அசைத்தேன்.

அவளிடம் கோபப்பட்டவம் எங்களை முறைத்தவாரு இருந்தான். கண்டிப்பாக அவன் அவள் காதலானாக தான் இருக்க வேண்டும். அவனை பொறாமைப்பட வைக்க அந்த பெண் என்னிடம் வந்து பேசுகிறாள் என்று யூகிக்க முடிந்தது.

அவள் காதலனுடன் வந்தவன் அந்த பெண்ணை ஒரு நிமிடம் அழைத்தான். அந்த பெண் போகமாட்டாள் என்று எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்பை பொய்யாக்கி அவனிடம் பேச சென்றாள். சற்று ஏமாற்றத்தோடு அவள் போவதை பார்த்துக் கொண்டு இருந்தேன். இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாம். ஆனால், அவர்கள் காதலில் என்னால் வீண் பிரச்சனை வரும். வந்தாள்... பேசினாள்... சென்றாள். அவ்வளவு தான்.

ரசித்த சந்தோஷத்தோடு... பேசிவிட்டு சென்று இருக்கிறாள். இது வரை நான் சைட் அடிக்கும் பெண்களிடம் பேசியதில்லை. இது தான் முதல் தடவை. ஒவ்வொரு முறை பெண்களிடம் பேசும் போது இப்படி தான் நினைத்துக் கொள்வேன்.

அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. அந்த பெண் தன் காதனுடன் கை குழுக்கிக் கொண்டாள். தன் காதலனின் நண்பனுடன் ஒரு காரில் ஏறி சென்றாள். அவர்கள் சமரசமாகி விட்டார்கள் என்று அவர்களின் புன்னகையில் தெரிந்தது. எதோ என்னை அறியாமல் ஒரு காதலுக்கு உதவியிருக்கிறேன். என் வாழ்க்கையில் நான் உருப்படியாக செய்த முதல் காரியம் இது தான்.

நான் அந்த பெண் செல்வதை பார்த்துக் கொண்டு இருக்கும் போது என் தோள் மீது யாரோ கை போட்டனர். என் நண்பன் தான். இரண்டு சிகரெட்டை வாங்கி இப்போது தான் வந்தான். அந்த பெண்ணை நினைத்து ஏக்க பெரு மூச்சு விட கண்டிப்பாக எனக்கு சிகரெட் தேவை. சிகரெட்டை வாங்கி ஆறாவது விரலாக சொருகிக் கொண்டு பற்ற வைத்தேன்.

" என்ன... மாமா..." என்று என் நண்பன் சிரித்தப்படி கேட்டான்.

எப்போது 'மாப்பிள்ள' என்று அழைப்பவன். வழக்கத்துக்கு மாறாக என்னை 'மாமா' என்று அழைத்தான்.

"என்னடா...புதுசா...." என்றேன்.

"உன்ன வச்சு அந்த பொண்ணு ரேட்ட ஏத்திட்டா...." என்றான்.

"என்ன சொல்லுற..."

" டேய்... அந்த பொண்ணு இரண்டு பேருக்கு இரண்டாயிரம் கேட்டா... வந்த பசங்க ஆயிரம் தான் தருவேன்னு கராரா இருந்தான். உன் கூட வந்து பேசுனதும்.... எங்க நீ தள்ளிட்டு போய்டுவியோ பயந்து இரண்டாயிரத்துக்கு ஒத்துக்கிட்டாங்க...."

"அட...ச்சே... சும்மா பொய் சொல்லாத... நான் அந்த பொண்ணு கிட்ட பேசுனத இவ்வளவு பொறாமையா பார்த்தான்..."

"டேய்...அது ஐடம்டா ! அந்த இரண்டு பேரும் சிகரெட் வாங்குன கடை பக்கத்துல நின்னு எனக்கு கேக்குற மாதிரி தான் பேசுனாங்க. அந்த பையன் தான் கஷ்ட பட்டு போன் பண்ணி அந்த பொண்ண வர சொன்னா... நீ தள்ளிட்டு போற மாதிரி இருந்தா கோபம் வராதா..." என்று சொல்லி என்னை ஏளனமாக சிரித்தான்.

என்னால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்க முடியவில்லை. அவள் அந்த மாதிரி பெண்ணா இருப்பாளோ என்று சந்தேகம் வர தொடங்கியது.

ச்சே... இவ்வளவு நேரம் அந்த மாதிரி கேவலமான பெண்ணிடமா பேசிக் கொண்டு இருந்தேன். அவளின் காதலனாக நினைத்த நான், அவளை பொறாமையில் பார்த்தான். தான் படுக்க வேண்டும் என்றால், விபச்சாரியிடம் கூட கற்பை எதிர்பார்க்கும் ஆளாக இருப்பான் போலிருக்கு. கடைசியில் என் மரியாதையை நானே கெடுத்துக் கொண்டேன். இனிமேல் எந்த பெண்ணும் வழிய வந்து பேசினால் நான் பேச கூடாது என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டேன்.

கொஞ்ச நேரத்தில் நான் செல்ல வேண்டிய பஸ் வந்தது. கையில் இருக்கும் சிகரெட்டை அனைத்தேன்.

" இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா அவ போன் நம்பர் வாங்கி இருந்திருக்கலாம் " என்று மனதில் நினைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறினேன்.

[சர்வேசன்500 - நச்னு ஒரு கதை போட்டி 2009]

Thursday, July 9, 2009

அழகிய தோழியே…!!

பல நாட்கள் காத்திருந்த என் உணர்வுகளுக்கு இன்று தான் உத்வேகம் பிறந்தது. இதற்காக எத்தனை நாள் தவமிருந்தேன். என் மனதில் பூட்டி வைத்திருந்தேன். சொல்ல துணிந்த பிறகு ஆழ்கடலின் ஆழம் பார்ப்பது எதற்கு...? ஒரு முடிவோடு தான் பூர்ணிமாவை பார்க்க புரப்பட்டேன். இன்று என் மனதில் ஒலித்து வைத்த காதலை சொல்வதற்கு....

பூர்ணிமா அழகில் டையனாவோ ஐஸ்வர்ய ராயோ இல்லை. பார்க்க சுமாராக தான் இருப்பாள். யாரிடமும் அதிகம் பேச மாட்டாள். குறிப்பாக ஆண்கள் இருக்கும் பக்கம் போகவே மாட்டாள். எப்போதும் எதையோ பறிகொடுத்தது போலவே சோகமாக முகத்தை வைத்திருப்பாள். அவள் சிரிக்காமல் இருப்பதால் எங்கள் கல்லூரியில் அவளுக்கு 'சோனியா அகர்வால்' என்ற பட்டப் பெயரும் அவளுக்கு உண்டு.

யாரிடமும் பேசாத பூர்ணிமா என்னிடம் மட்டும் தான் மனம் விட்டு பேசுவாள். அவளுக்கு பாட தெரியும் என்பது அவளுடன் பழகிய பிறகு தான் எனக்கு தெரியும். நான் அவளை கல்லூரி ஆண்டுவிழாவில் பாட சொன்னேன். பல ஆண்கள் கூடிய மேடையின் முன் பாட முதலில் தயங்கினாள். நான் கட்டாயப்படுத்தியதில் அவள் பாட சம்மதித்தாள்.



கல்லூரி ஆண்டு விழாவில் 'வசீகரா' பாடலை பாடினாள். அரங்கமே அதிரும் அளவிற்கு கைதட்டல் அவள் பாட்டுக்கு கிடைத்தது. பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கியதும், இரண்டு பேர் அவளை பாராட்டினர். அவர்கள் ‘ஆண்கள்’ என்பதால் பூர்ணிமா அவர்களின் பாராட்டுக்கு 'நன்றி' கூட கூறாமல் வந்து விட்டாள். எனக்கு அவள் செய்தது பிடிக்கவில்லை. நான் அவளிடம் அவள் செய்த தவறை சுட்டிக்காட்டினேன். எல்லா பெண்களை போல என்னிடம் சண்டைப் போட்டுக் கொண்டு பேசாமல் சென்றாள்.

இரண்டு நாளுக்கு மேல் அவளால் என்னிடம் பேசாமல் இருக்க முடியவில்லை. அவள் தான் உள்ளூர ஆண்களை வெறுப்பதை கூறினாள். காரணத்தை கேட்டேன். நடுங்கிய குரலில் பதிலளித்தாள். நான் அதிர்ந்து நின்றேன்.

பூர்ணிமாவுக்கு பத்து வயது இருக்கும் போது அவள் அப்பாவுக்கு வேலை மாற்றல் காரணமாக வெளியூர் செல்ல வேண்டியதாக இருந்தது. அவளுடைய அம்மாவும் அப்பாவுடன் செல்ல வேண்டிய நிலைமை. ஒரு வருடத்தில் தனக்கு வேலை மாற்றம் வாங்கி மீண்டும் இதே ஊரில் வந்து விடலாம் என்று நினைத்த பூர்ணிமாவின் அப்பா, தன் தூரத்து உறவினர் வீட்டில் தங்க வைத்தார். ஒரு வருடம் வரை அங்கு இருந்து படிக்க சொல்லி அவள் பெற்றோர் வெளியூர் சென்றனர். அந்த தூரத்து உறவினர் ஒரு வகையில் பூர்ணிமாவின் அப்பாவுக்கு அண்ணன் முறை. பூர்ணிமாவின் பெற்றோர்கள் ஊருக்கு சென்று பத்து நாள் வரை அவள் பெரியப்பா நன்றாக தான் பார்த்துக் கொண்டார். அதன் பிறகு தான் அவளுக்கு தெரிந்தது அவளுடைய பெரியப்பாவின் உண்மையான சுயரூபம்.

இரவு நங்கு தூங்கிக் கொண்டு இருக்கும் வேளையில் அவள் உடலில் எறும்பு ஊர்ந்து செல்லுவது போல் இருந்தது. தட்டி விட்டாள். பிறகு தான் தெரிந்தது அது அவள் பெரியப்பாவின் கை என்று ! பூர்ணிமா அவரை தடுத்தாள். கட்டாயப்படுத்தி முத்தமிட்டான். அவளை நிர்வாணமாக்கி மோப்பம் பிடிக்கும் நாய் போல் அவள் உடலை மோர்ந்தான். தடவினான். இன்னும் விவரிக்க முடியாத வார்த்தைகளில் அவள் பெரியப்பாவால் கொடுமைப்படுத்தப்பட்டாள். ஒரு நாள் அல்ல... இரண்டு நாள் அல்ல... இரண்டு மாதம் அந்த பெரியப்பனால் இரவில் நரக வேதனை அனுபவித்தாள். பயத்தில் அவளுக்கு காய்ச்சல் வந்தது. அந்த காய்ச்சலில் பள்ளிக்கு சென்று வந்தாள். வீட்டுக்கு வருவதை பயப்படுவாள். அவளின் நிலைமை அங்கு தான் வந்தாக வேண்டும். அப்பா, அம்மாவிடம் போனில் சொல்லுவதற்கு கூட பயந்தாள்.

நாளுக்கு நாள் அவன் கொடுமை அதிகரித்து வந்ததில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். ஊரில் இருந்து அவள் அப்பா, அம்மா வர வழைக்கப்பட்டனர். பூர்ணிமா அவள் அம்மாவை கட்டிபிடித்து அழுதாள். தன் அம்மாவிடம் அவளுக்கு சொல்ல தைரியமில்லை. தனக்கு நடந்தது என்ன என்று தெரிந்தால் தானே சொல்லுவதற்கு...! அந்த அறியாத வயதில் அந்த பெரியப்பா எதற்காக தன்னிடம் இப்படி நடந்துக் கொண்டார் என்று அவளுக்கு தெரியவில்லை. அவள் பெற்றோர்கள் அவர்களுடனே அழைத்து சென்றனர்.

விபரம் தெரியும் வயதில் பூர்ணிமாவுக்கு தனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. அந்த காமந்தனை நிர்வாணப்படுத்தி கொடுமை செய்ததை நினைக்கும் போதெல்லாம் தன் உடலை கூட வெறுத்தாள். சில சமயம் காரணமில்லாமல் தன் உடலை அவளே காயப்படுத்திக் கொண்டாள். அந்த வெறுப்பு வளர வளர ஆண்கள் மீது அவளுக்கு வெறுப்பு அதிகமானது. தன் அப்பாவை உட்பட ஆண்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டாள். எல்லா ஆண்களும் மோசமானவர்கள் என்ற முடிவுக்கே அவள் வந்துவிட்டாள்.

பூர்ணிமா தன் கதையை சொல்லி முடித்ததும் என் மடியில் படுத்து அழுதாள். நான் ஆறுதலாக அவள் தலையை தடவினேன். என்னை அறியாமல் அவள் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது. அப்போது எனக்கு வந்த எண்ணம் பெரிதாக தெரியவில்லை. நாளாக நாளாக பூர்ணிமா மீது இருப்பது 'காதல்' என்று உணர்ந்தேன். பூர்ணிமா என் வாழ்நாள் முழுக்க என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. நேரில் அவளை பார்க்கும் போதெல்லாம் சொல்ல தயங்கினேன். இன்று தான் எனக்கு தைரியம் பிறந்தது.

பூர்ணிமாவிடம் சென்றேன்.

"இவ்வளவு நாள் என் மனசுல இருக்குறத சொல்ல போறேன். ஐ லவ் யூ ! பூர்ணிமா !!"

"உனக்கு என்ன பைத்தியமா..."

அவள் கத்தி முடித்தப்பின் என் கதையை கூறினேன். தன் கதையை தைரியமாக சொன்ன பூர்ணிமாவிடம் இன்று தான் என் கதையை சொல்ல போகிறேன். அவளை போல நானும் சிறு வயதில் மூன்று ஆண்களால் பாதிக்கப்பட்டவள். பல இரவு காமந்தர்களால் ஆடையில்லாமல் இருந்திருக்கிறேன்..

என் கதை யை சொல்ல சொல்ல அழுதுவிட்டேன் .

" காயத்ரி..! அழாதே..." என்று கண்களை துடைத்தாள். நான் அவள் கரத்தை பற்றிக் கொண்டேன். எனக்கு நடந்த சம்பவத்தை மறக்க வெளியே சிரித்து பேசிக் கொண்டு இருந்தேன். ஆனால், பூர்ணிமாவிடம் தான் சொல்லி அழ வேண்டும் போல் இருந்தது.

பூர்ணிமா முகத்தில் " இது நடக்குமா" என்ற கேள்வி தெரிந்தது.

நான் உச்ச நீதி மன்ற தீர்ப்பை காட்டினேன்.

****

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான இரண்டாவது ஆக்கம் !

Wednesday, July 1, 2009

வெட்டப்படாத 'நிர்வாணம்'

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் ஒருவனால் ஏமாற்றப்பட்டு விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். வயதானவராக இருந்தாலும், இளைஞனாக இருந்தாலும் அவர்களை திருப்த்தி செய்து அனுப்பி வைப்பவள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் சேகர் மூலம் கேள்வி பட்டுயிருக்கிறேன்.

சேகரிடம் கண்மணியையுடன் இரவு கழிக்க வேண்டும் என்று சொல்லியிருந்தேன். அவன் என் வீட்டு விலாசத்தை அவளிடம் கொடுத்து என்னை பார்க்க அவளை அனுப்பினான்.

"நீங்க தானே ரவி !"

" நா கண்மணி. சேகர் அனுப்ச்சாரு..."

" உள்ள வாங்க....." என்றேன்.

இது போன்ற விஷயங்களில் எனக்கு முன் அனுபவம் இருந்தாலும் திருமணத்துக்கு பிறகு இது தான் முதல் முறை. வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.



கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை.

" உங்களுக்கு புடவ ஒ.கேவா. வேற ட்ரெஸ் போட்டு வரவா..." என்றாள்.

"எதுக்கு ட்ரெஸ்...?" என்றேன்.

என் அறையில் பட்டாசு கொளுத்தி போட்டது போல் "ஆஹா....!!" என்று சிரித்தாள். அப்போது தான் அவள் கை பையில் மாற்று துணியுடன் வந்திருப்பதை கவனித்தேன். இருந்தும், என் கண்கள் அவள் இடையில் இருந்து எடுக்க முடியவில்லை.

" இந்த மாதிரி விஷயத்துக்கு ட்ரெஸ் தேவையில்ல தான். ஒவ்வொரு ஆம்பளைங்க ஒவ்வொரு மாதிரி இருப்பாங்க. அதுக்கு தான்"

" புரியல...."

" சில ஆம்பலங்களுக்கு புடவ கட்டி வந்தா மூடு வரும். அத ரசிச்சு கலட்டுறதுல அவங்களுக்கு இன்னும் மூடு வரும். அந்த மாதிரி சுடிதார், மிடி, ப்ராக், ஆப் ஸாரினு... ஒவ்வொரு ஆம்பளைங்களுக்கு ஒரு டேஸ்ட்...." என்றாள்.

அவள் பேச்சை கேட்டவுடன் இடையில் இருந்து அவள் முகத்தை உற்று பார்த்தேன். அவள் சொன்னதுக்கு என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை.

" ஆசைய தீத்துக்கனும்னு வராங்க. அவங்க ஆச படுற மாதிரி ட்ரெஸ் பண்ணி கழட்டுறதுல அவங்களுக்கு கிக் இருக்கு. உங்களுக்கு எப்படி ?" என்றாள்.

'கஸ்டம்மர் சர்வீஸ்' மட்டுமல்ல் 'கஸ்டம்மர் சாட்டிஸ்பேக்ஷனில்' கூட இவளை அடிச்சிக்க முடியாது என்று நினைத்தேன். அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யமும் அது தான். கடைசி விஷயமும் அது தான்.

" கொஞ்ச இருங்க... " என்று சொல்லி என் அறையில் இருக்கும் பீரோவை திறந்தேன். அதில் இருந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. என் மனைவிக்கு அவள் அம்மா வீட்டு சீர்வரிசை நகையே அதிகமாக இருந்ததால் இந்த நகையை அவ்வளவாக போடுவதில்லை. அதிக நகை போடும் சந்தர்ப்பமும் என் மனைவிக்கு அமையவில்லை. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

"எதுக்கு இவ்வளவு நக..." என்று வியப்பாக கேட்டாள்.

" ட்ரெஸ் இல்லாம... இந்த நகைய மட்டும் போட்டுட்டு வாங்க...." என்றேன்.

அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்த ஆண்களை பார்த்திருக்கிறாள். நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்த ஆண்களிடம் படுத்திருக்கிறாள். ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

கஸ்டம்மர் எது சொன்னாலும் மறு பேச்சு பேசாமல் செய்பவள் ஒரு கனம் யோசித்து என்னையே பார்த்தாள். தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நினறாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவினேன். தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

" கொஞ்ச இருங்க... பத்து நிமிஷத்துல முடிஞ்சிடும் " என்றேன்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை அடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

" அவ்வளவு தானா... என்ன வரையுறதுகா கூப்டிங்க...." என்று சொல்லி கொண்டு நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வானமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.

என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வணமாக வரைந்து மரம், கடல், மலை என்று சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும். எத்தனையோ என் ஓவியத்திற்காக பரிசுகள் வாங்கியிருக்கிறேன். அப்பா சம்பாதித்த சொத்துக்கள் இருந்தாலும் இது போல ஓவியம் வரைவதில் தான் எனக்கு சந்தோஷம்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க....?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்”,என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

" ஒண்ணும் நடக்கல்ல.. எதுக்கு பணம்" என்றாள்.

" இந்த பணம் என் பெய்டிங்க்கு மாடலிங் பண்ணதுக்கு...." என்று சொல்லி கொடுத்தேன். ஆனால், அவள் வாங்க மறுத்தாள்.

" இந்த உடம்ப நிர்வாணமா நிறைய பேர் பார்த்திருக்காங்க... முதல் தடவையா இயற்கையோட பார்க்க போறாங்க... அதுக்கு பணம் வாங்கி உங்க கலைய அசிங்க படுத்த விரும்பல...." என்றாள்.

தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள். நடு இரவானதால் இரவு தங்கி காலை போக சொன்னேன்.

"குடும்ப பொண்ணுங்க தான் இராத்திரி போக பயப்படனும். என் வேலைய இராத்திரியில தானே..." என்று சொல்லி நகர்ந்தாள்.

திடீர் என்று என்ன நினைத்தாளோ தெரியவில்லை. என்னை திரும்பி பார்த்தாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன்" என்றேன்.

கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. காமம் இருக்கும் நேரத்தில் கலை வராது. என்றைக்கும் கலையையும், காமத்தையும் நான் சேர்த்து வைத்து பார்ப்பதில்லை. கண்மணி கதவு திறந்து வெளியே செல்லும் நேரத்தில்.... வெளியே இருந்து "டீரிங்... டிரிங்..." காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

ஊருக்கு சென்ற மனைவி வந்து விட்டாளோ என்ற பயம் என்னை ஆட்கொண்டது. அவளுக்கு இது போன்ற விஷயத்தை புரிந்துக் கொள்ளும் அறிவில்லை. அப்படியே புரிந்துக் கொண்டாலும் தன் கணவன் இன்னொரு பெண்ணின் நிர்வாணத்தை பார்ப்பதை யார் தான் பொருத்துக் கொள்வார். கண்மணிக்கு உள்ளூர பயன் இருந்தது. தன்னால் என் குடும்ப வாழ்க்கை கெட்டு விடுமோ என்று பதறினாள். நான் கண்மணியை எங்கள் வீட்டு பூஜை அறைக்கு சென்று மறைந்திக்க சொன்னேன்.

பதினெட்டு டிகிரி எ.சி இருந்தும் எனக்கு வேர்த்தது. பயந்தப்படி கதவை திறந்தேன். என் நண்பன் சேகர் நின்றுக் கொண்டு இருந்தான்.

"டேய் எதுகுடா இந்த நேரத்துக்கு வந்த..." என்று பயம் கலந்து கோபத்தில் கத்தினேன்.

" டென்ஷன் ஆகாத மச்சி...! ஒரு பொண்ணு அனுப்பி வெச்சோமே. எப்படி இருந்துச்சுனு கேட்கலாம் வந்தேன்." என்றான்.

" அது நாளைக்கு கேக்குறது. ஒரு நிமிஷத்துல பயந்திட்டேன்."

" என்ன பொண்ணாட்டி ஞாபகமா...." என்று கேனத்தனமாக சிரித்தப்படி என் அறையை தேடி பார்த்தான்.

" எங்கடா கண்மணி. போய்ட்டாலா...." என்றான். அவன் கண்களில் ஏமாற்றம் தெரிந்தது. இந்த நேரத்தில் அவன் அதுக்கு கண்மணியை தேடுகிறான் என்று புரிந்தது. இதற்கு மேல் அவனிடம் பேசவும் எனக்கு கூச்சமாக இருந்தது. பூஜை அறையில் ஒழிந்து இருக்கும் கண்மணியை வெளியே வர சொன்னேன். என்ன நடந்தது என்று தெளிவாக சேகரிடம் விளக்கினேன்.

" நீ வேஸ்ட் மச்சி ! காலேஜ் படிக்கும் போது இப்படி தான் இருந்த. இப்போவுமா... " என்று சொல்லி கண்மணியை ஒரு மாதிரியாக பார்த்தார். " மச்சி ! இவ்வளவு தூரம் இவ வந்துட்டா... சும்மா அனுப்ப முடியுமா... இன்னைக்கு ஒரு நாள் உன் ரூம நாங்க யூஸ் பண்ணிக்கிறோமே..." என்றான்.

செய்த உபகாரத்திற்கு பதில் உதவி கேட்கிறான். பாவம் என்னால் இன்று இரவு கண்மணிக்கு வருமானம் இல்லாமல் போய்விட்டது. வேறு வழியில்லாமல் 'சரி' என்றேன். அவர்கள் இருவரும் அறைக்கு சென்று தாளிட்டுக் கொண்டார்கள்.

நான் ஹாலில் படுத்துக் கொண்டேன். என் மனைவிக்காக செய்த நகையை ஒரு விலை மாதுவுக்கு போட்டது நினைத்து என்னை நானே நொந்துக் கொண்டேன். " என் கலைக்கு மனைவிக்காக ஆசையாக செய்த நகையின் மதிப்பை குறைத்து விட்டேனே " என்று அழுதப்படி படுத்தேன். குற்றவுணர்ச்சியில் எனக்கு தூக்கம் வரவில்லை.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறினான்.

----

தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து "உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

பின்குறிப்பு :- ஒன்று முதல் மூன்று பக்கங்கள் என்று அறிவித்திருந்த "உயிரோடை" சிறுகதை போட்டி, 1500 வார்த்தைகள் வரை இருக்கலாம் என்று அறிவித்திருப்பதால்... நானே சென்சார் செய்த 'நிர்வாணம்' கதை எந்த வித சென்சார் இல்லாமல் மீண்டும் (6 பக்கங்கள்) பதிவெற்றியிருக்கிறேன்.

Friday, June 19, 2009

நிர்வாணம் - சிறுகதை

தொப்புல் தெரிவது போல் சேலைக்கட்டி என் முன் கண்மணி நின்றாள். மெல்லிய இடை, அளவான மார்பு, சுண்டி இழுக்கும் கண்கள், முதுகுவரை கூந்தல் என்று தமிழ் சினிமாவுக்கு பொருத்தமான கதாநாயகியாக இருந்தாள். அவளின் போறாத நேரம் விலை மாதுவாக தன் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கிறாள். இந்த தொழிலில் கண்மணியின் 'கஸ்டம்மர் சர்விஸில்' அடிச்சிக்க ஆளேயில்லை என்று என் நண்பன் மூலம் கேள்வி பட்டு அவளை வர சொன்னேன்.

வீட்டில் யாருமில்லை. என் மனைவி திருத்தனியில் இருக்கும் அவள் அம்மா வீட்டுக்கு சென்றது எனக்கு வசதியாக இருந்தது.

கண்மணியை என் படுக்கை அறைக்கு அழைத்து சென்றேன். அவள் என் அறையை ஒரு நோட்டம் விட்டு என்னை பார்த்து சிரித்தாள். நான் அவள் அங்கங்களை ஒவ்வொன்றாக உற்றுபார்த்தேன். குறிப்பாக அவளுடைய இடை. அவள் புடவையில் அழகாகத் தான் இருந்தாள். ஆனால், நான் அவளை வரச்சொன்னது புடவை கட்டிய அழகை ரசிக்க அல்ல... அவளுடைய நிர்வாணத்தை. விலைமாதுவிடம் ரசிக்கப்பட வேண்டிய முதல் விஷ்யம் அது தான்.



பீரோவை திறந்து என் மனைவியுடைய நகையை எடுத்தேன். ஒவ்வொரு நகையும் என் மனைவிக்காக பார்த்து பார்த்து நான் எடுத்தது. அவளுக்காக நான் எடுத்த நகையை கண்மணியிடம் கொடுத்தேன்.

ஆடைகள் எல்லாம் கலைத்து விட்டு நகையை மட்டும் அணிந்து வர சொன்னேன். அதிர்ச்சி கலந்து வியப்புடன் என்னை பார்த்தாள். தன் ஆடைகளை கலைத்து நிர்வாணத்தை ரசித்தவன், நிர்வாணமாக வர சொல்லி அனுபவித்தவன், ஒன்றாய் குளித்தவன், குடி போதையில் வந்தவன், பிறந்த மேனியோடு பேசியவன் என்று பல வித ஆண்களை கடந்து வந்திருக்கிறாள். இன்று தான் முதன் முறையாக தன் நிர்வாணத்திற்கு ஒருவன் தங்கம் பூச நினைத்திருக்கிறான்.

நான் சொன்னதிற்காக தன் ஆடைகளை எல்லாம் கலைத்து விட்டு நகையை அணிந்து கண்ணாடியை பார்த்தாள். ஒரு நிமிடத்தில் அவளுக்கே ஆச்சரியமாக இருந்தது.

அவள் மார்ப்பு நான் கொடுத்த தங்க சங்கிலி மறைத்திருந்தது. இடுப்பில் கட்டிய தங்க ஒட்டியானத்தில் மணி அவளுடைய பெண் உருப்பை மறைந்திருந்தது. என் மனைவிக்காகவே ஒட்டியானத்தில் தங்க மணிகள் தொங்குவது போல் செய்திருந்தேன். இப்போது கண்மணி அணிந்து கொண்டு தங்க மாளிகை போல் என் முன் வந்து நின்றாள்.

நகைகளை அணிந்த படி என் படுகையில் உட்கார சொன்னேன். அவளும் உட்கார்ந்தாள். நான் என் கையில் ஒரு பென்ஸிலை எடுத்து சீவி, தங்கம் பதிந்த கண்மணியின் மேனியை வரைந்தேன். அவள் இடுப்பு, மார்ப்பு, கண்,கை, உதடு என்று அங்கம் அங்கமாக ரசித்து அப்படியே வரைந்தேன். அதன் பின் வரைந்த அவள் உருவத்திற்கு வண்ணங்கள் பூசினேன். கண்மணியும் பொறுமையாக இரண்டு மணி நேரம் அசையாமல் நான் வரைவதற்காக அப்படியே உட்கார்ந்து இருந்தாள்.

அவள் கண்களை மெதுவாக வரைந்து ஒவியத்தை முடிதேன்.

" இப்போ ஒ.கே. ரிலாக்ஸ் அயிட்டு உங்க ட்ரெஸ போட்டுக்கோங்க...." என்றேன்.

அவள் ஒன்று புரியாமல் என்னை பார்த்தாள். எதுவும் செய்யாமல் அவளை ஆடையை போட சொன்னது அவளுக்கு வியப்பாக இருக்கலாம். இது என்னுடைய பொழுது போக்கு, கலை ஆர்வம் என்று அவளுக்கு தெரியாது. இது அவளுக்கு தெரிந்திருக்க நியாயமுமில்லை.

அருகே வந்து நான் வரைந்த ஓவியத்தை பார்த்தாள். அவளுடைய பிரம்மிப்பை கண்களில் பார்த்தேன். தன்னை இவ்வளவு தத்துருபமாக ஆபாசம் இல்லாமல் நிர்வாணமாக நான் வரைந்த ஓவியம் அவளுக்கு வியப்பாக இருந்திருக்கும். தங்க நகை அணிந்து அவள் தேகத்தை இயற்கை போல் வரைந்து காலகள் பிலாஸ்டிக்கால் அழிந்துக் கொண்டு வருவது போல் வரைந்திருந்தேன்.என் கல்லூரி நாட்களில் இது போல் எத்தனையோ விலைமகளை நிர்வாணமாக வரைந்து மரம், கடல், மலை போன்ற இயற்கையோடு சேர்த்திருக்கிறேன். அதில் அவர்களுடைய நிர்வாணம் தெரியவதில்லை. என்னுடைய கலை தான் தெரியும்.

" உங்க பெய்ட்டிங். ரொம்ப அழகா இருக்கு. இதுல என்ன சொல்லுறீங்க...?"

“ இயற்கை நிர்வாணமா இருந்தா தான் அழகு... பிலாஸ்டிக் ஆடை கொடுத்தா அழிஞ்சு போய்ட்டும்” என்றப்படி புன்னகையுடன் மூவாயிரத்தை நீட்டினேன். என்னை ஒரு மாதிரியாக பார்த்தாள்.

பணத்தை வாங்காமல் தன் உடலில் இருந்து நகைகளை கலட்டி நான் கொடுத்த தங்க பேட்டியில் வைத்தாள். அவள் அணிந்து வந்த புடவையை மீண்டும் அணிந்து கொண்டாள்.

" உங்க கிட்ட ஒண்ணு கேட்டா தப்பா நினைக்க மாட்டீங்களே...."

" சொல்லுங்க...." என்றேன்.

" நீங்க சுகத்துக்காக வர சொன்னீங்கனு நினைச்சேன். வரையுறதுக்கு உங்க மனைவிய இதே மாதிரி நிக்க சொல்லி வரஞ்சிருக்கலாமே. யாருக்கு தெரிஞ்சிருக்க போது..."

" என் மனைவியோட நிர்வாணத்த நா காமத்தோடு பார்க்குறேன். உங்க மாதிரி பொண்ணுங்களோட நிர்வாணத்த கலை கண்ணோட்டமா பார்க்குறேன். கலை இருக்கும் இடத்தில் காமம் வரதாது. அதே மாதிரி , காமம் இருக்கும் நேரத்தில கலை வராது. நா எப்போதும் கலையையும், காமத்தையும் சேர்த்து வச்சி பார்க்குறதில்ல " என்றேன்.

அந்த ஓவியத்தை ஓவிய கண்காட்சியில் வைத்தேன்.

" ச்சே... அந்த இடத்த போய் மறைச்சு வரைஞ்சிருக்கான் பாரு. கொஞ்சம் காட்டுற மாதிரி வரைய கூடாது" என்று ஒருவன் தன் அருகில் இருந்த நண்பனிடம் கூறியதை கேட்டேன்.

***********
தூறல்கவிதை ச.முத்துவேல்யின் எழுதிய கவிதையை கருவாக வைத்து
"உயிரோடை" நடத்தும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம் !

Wednesday, May 27, 2009

தெரு கூத்து …

முகத்தில் காலை சூரியன் வெளிச்சம் பலிர் என்று அடித்தது. இரவு நேரம் காற்றோட்டமாக இருக்கும் என்று ஜன்னலோர சீட்டு பார்த்து பஸ்ஸில் அமர்ந்தேன். அதுவே என் தூக்கத்திற்கு எதிரியாக இருக்கும் என்று காலையில் தான் தெரிந்து கொண்டேன். ஐந்து நாட்கள் பெட்ரோல், டீசல் புகையில் இருந்து விடுதலை பெற்று என் பூஞ்சோலை கிராமத்துக்கு வந்தேன்.

என்னை அழைத்து செல்வதற்காக மாடசாமி மாட்டு வண்டியுடன் தயாராக இருந்தார். எனக்கும், மாடசாமிக்கும் பத்து வயது வித்தியாசம் இருக்கும். சிறு வயதில் இருந்து என் வீட்டில் இருக்கிறார். எங்கள் வீட்டில் யாரும் அவரை வேலைக்காரராக நடத்தியதில்லை. அவர் என் குடும்பத்தில் ஒருவர். என்னை சின்ன வயதில் இருந்து வளர்த்தவர் அவர் தான்.

" வாங்க ராமு தம்பி. பிராயாணம் எப்படி இருந்தது ?"

" நல்லா இருந்தது. நீங்க எப்படி இருக்கீங்க...? வீட்டுல அண்ணி, பையன் எப்படி இருக்காங்க ?"

" எல்லோரும் நல்லா இருக்கோம். பைய கொடுங்க..."

" நானே எடுத்திட்டு வரேன்" என்று கூறி என் பையை மாட்டு வண்டியில் போட்டேன்.

என் கிராமத்தில் பெட்ரோல் வண்டிகள் அதிகம் இல்லை. பெட்ரோல் பங்க் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் இருப்பதால், பலர் சைக்கிளும், மாட்டு வண்டியும் தான் வைத்திருக்கிறார்கள். பலருக்கு ப்ளாஸ்டிக் என்றால் என்ன என்பது கூட தெரியாமல் இருக்கிறார்கள். அதனால், எங்கள் கிராமத்து இயற்கை இயற்கையாகவே இருந்தது.

மரம், சேடி, கொடி அழகை ரசித்ததில் என் வீடு வந்ததை கவனிக்கவில்லை.

" தம்பி ! வீடு வந்திருச்சி இறங்குங்க..." - மலர்ந்த முகத்துடன் மாடசாமி கூறினான்.

ஒரு மாதத்திற்கு பிறகு என் கால்கள் வீட்டில் பதிந்தது. அப்பா என் வரவை எதிர்பார்த்து இருந்தார். எனக்காக அம்மா கோழி கறி சமைத்து வைத்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அம்மா கையால் கோழி கறியை ஒரு பிடி பிடித்தேன். மாட்டை கட்டி விட்டு மாடசாமி விட்டுக்குள் வந்தார்.

" வா மாடசாமி! வந்து ஒரு வாய் சாப்பிடு" என்றாள் என் அம்மா.

" இல்லம்மா! வீட்டுக்கு போனும். என் பையனுக்கு காய்ச்சல். எத பார்த்து பயந்தான் தெரியல்ல. மந்திருச்சு விட்ட மாதிரி இருக்கான். நம்ப கூத்து நாடகம் ஆரம்பிச்சதுல்ல இருந்து காய்ச்சல் இருக்கு" என்று கவலையாக மாடசாமி கூறினார்.

" என்ன கூத்து...?" என்றேன்.

" நம்ம ஊர் திருவிழாவுல.... சஷ்டிக்கு முருகன் அசுரர்கள வதம் பண்ணுற கூத்து. அதுல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அசுரன நான் நடிக்கிறேன். அத பாக்குறதுக்கு என் பொண்டாட்டியும், பிள்ளையும் வந்தாங்க. என்ன காத்து பட்டுச்சோ தெரியல்ல.“

" டாக்டர் கிட்ட காட்டுனீங்களா..?

" காட்டுனேன் தம்பி. பையன் எதோ பார்த்து பயந்திருக்கிறான் சொன்னாரு. மருந்து கொடுத்திருக்காரு. கொடுத்து பார்த்தேன். குணமாகல்ல. வேப்பிலை அடிச்சி பார்த்தாச்சி. என்னனு தெரிய மாட்டிங்குது.."

" நான் சாப்பிட்டு பையன பார்க்க வரேன்...".

" பரவாயில்ல. இப்போவே ரொம்ப மணி அயிடுச்சு. ஆறு மணிக்கு கூத்து ஆரம்பிச்சிடும். அங்க வந்திங்கனா என் பையனையும், பொண்ணாட்டியும் பார்க்கலாம்."

" சரி! நான் ஆறு மணிக்கு கூத்து பட்டறைக்கு வந்துடுறேன்"

மாடசாமி தன் வீட்டுக்கு சென்றார். பயண கலைப்பு வேறு. மதியம் சாப்பாடு அளவுக்கு மீறி சாப்பிட்டு விட்டேன். பஸ்ஸில் சரியாக தூக்கம் இல்லாததால் தூக்கம் என் கண்ணை சொக்கியது. நன்றாக படுத்து உறங்கினேன்.

அப்போது தான் தூங்கியது போல் இருந்தது. அதற்குள் மணி ஐந்திரை ஆகிவிட்டது. மாடசாமியின் கூத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. அதே சமயம் அவர் பையனையும் பார்க்க வேண்டும். சீக்கிரமாக என் முகத்தை அலம்பி கொண்டு கூத்துக்கு சென்றேன்.

கூத்து பட்டறையில் ஒவ்வொருவரின் முகத்திலும் முக சாயம் புசிக் கொண்டு இருந்தார்கள். உடனே மாடசாமி குரல் கேட்டது.

"தம்பி! நான் இங்க இருக்கேன் "

திரும்பி பார்த்த போது பச்சை சாயமும், பய முறுத்தும் கருப்பு மை அப்பிய விழிகளுடன் இருந்தார்.

" அடையாளமே தெரியல்ல. நீங்க நடிக்கும் போது அண்ணியாள கூட கண்டு பிடிக்க முடியாதுனு நினைக்கிறேன்."

" அசுரனா நடிக்கிறது நான் தான்னு முன்னாடியே பொண்டாட்டி, பையன் கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன். அந்த சந்தேகம் வராதுல்ல.." சிரித்துக் கொண்டு கூறினார்.

அண்ணியும், அவர் பையனும் கூத்து பார்ப்பதற்காக முன் வரிசையில் அமர்ந்திருப்பதை பார்த்தேன். நான் என் அண்ணி அருகே சென்று அமர்ந்து கொண்டேன். அண்ணியிடம் இருந்து பையனை வாங்கி என் மடியில் வாங்கி கொண்டேன். அவனுக்கு ஆறு வயது இருக்கும். ரொம்ப சுட்டியாக திரிபவன் காய்ச்சல் வந்ததில் இருந்து துவண்டு போய் இருந்தான். அவன் உடல் அனலாய் கொதித்தது. எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான்.

கூத்து தொடங்கியது. என்ன தான் ஏ.சி அறையில் அமர்ந்து படம் பார்த்தாலும், தெரு கூத்தை தரையில் அமர்ந்து பார்ப்பது போல் வரும் சுகம் கிடையாது. இந்த சுகம் கிராமத்தினருக்கு மட்டுமே தெரியும்.

" வந்தேன் வந்தேன்...மன்னன் வந்தேன்..." என்று மாடசாமி அரிதாரம் புசிய முகத்தோடு தோன்றினார். மாடசாமி வந்ததும் பலர் கைதட்டினார்கள். சிறு வயதில் இருந்தே அவருக்கு நடிப்பு ஆர்வம் அதிகம். தெருகூத்து நடிப்பில் அவரை அடித்துக் கொள்ள ஆளே கிடையாது என்று சொல்லலாம்.




கூத்தின் இறுதி கட்டம் நெருங்கியது. முருகர் கடவுள் அசுரனை கொள்ளும் கட்டம். முருகராக நடித்தவர் அசுரரை... மாடசாமியை வேலால் கொல்ல வேண்டும். மாடசாமி மீது வேல் படும் போது பார்க்க வந்த அனைவரும் 'அரோகரா... அரோகரா...' என்று கத்தினர். ஒருவன் மட்டும் பயத்தில் நடுங்கி கொண்டு இருந்தான். அதை என்னால் நன்றாக உணர முடிந்தது. பயந்து நடுங்கியது என் மடியில் அமர்ந்த மாடசாமியின் மகன். அவன் நடுங்கியது அண்ணி கவனிக்கவில்லை. நான் அவனை தனியாக அழைத்து சென்று பேசினேன்.

" என்னடா.... ஆச்சு. ஏன்டா பயப்படுற..." என்று கேட்டேன்.

" அப்பா.. அப்பாவ.. கொன்னுடாங்க...." பயத்தில் பிதறினான்.

" அப்படி எல்லாம் ஒன்னுமில்ல. பத்து நிமிஷத்துல வந்திருவாரு..."

"ஏன் தினமும் எங்கப்பாவ வேலால குத்துறாங்க ?" மழலை கலந்த மொழியுடன் கேட்டான்.

நமக்கு தான் மாடசாமி செய்தது நடிப்பென்று தெரியும். பாவம் சின்ன குழந்தையின் பிஞ்சு மனம். அது நிஜம் என்று நம்பி ஒவ்வொரு நாளும் மாடசாமி மீது வேல் பாய்யும் போது கதறி இருக்கிறான். அண்ணி 'அரோகரா' போடும் கோஷத்தில் தன் மகன் பயப்படுவதை கவனிக்காமல் இருந்திருப்பார். நான் என்ன சொல்லியும் அந்த பையன் பயம் தெளியவில்லை. கொஞ்ச நேரத்தில் மாடசாமி முக சாயத்தை கலைத்து வெளியே வந்ததை பார்த்த பிறகு, அந்த பையனுக்கு உயிரே வந்தது.

மாடசாமி வந்ததும் அவரை இருக்க கட்டி பிடித்துக் கொண்டான். ஒவ்வொரு நாளும் தன்னை பாசத்துடன் கட்டி பிடிக்கிறான் என்று மாடசாமி நினைத்துக் கொண்டு இருந்திருக்கிறார். அவன் பயத்தில் தான் கட்டி பிடித்தான் என்று என்னால் உணர முடிந்தது.

" பட்டனத்துல படம் பார்த்த நீங்க கூத்து பார்க்க வந்திருக்கீங்க. பிடிச்சிருந்ததா...?"

" என்ன இப்படி சொல்லுறீங்க...? கூத்துல இருந்து தான் சினிமாவே வந்தது.."

" ஆனா யார் அத ஞாபகம் வச்சிருக்காங்க...!"

" உங்க கிட்ட தனியா பேசனும்". கையில் இருந்த மகனை அண்ணியிடம் கொடுத்து விட்டு மாடசாமி என்னுடன் வந்தார்.

மாடசாமியிடம், " பையனுக்கு காய்ச்சல் வந்ததுக்கு காரணமே நீங்க தான்" என்றேன்.

அவர் என்னை உற்று பார்த்தார். "என்ன சொல்லுறீங்க?" மெல்லிய குரலில் கேட்டார்.

" கூத்துல உங்கள குத்துனத பார்த்து நிஜம்னு நம்பிட்டான். ஒவ்வொரு நாளும் உங்க மேல் வேல் குத்தும் போது பயந்து போய் இருக்கிறான். உங்க மேல இருக்குற பாசம் தான் அவன் காய்ச்சலுக்கு காரணம்."

நான் பேசுவதை கேட்டு தன்னால் மகன் பயப்படுவதை உணர்ந்தார். கூத்து முடியும் போது பலர் தன்னை பாராட்டியதில் மகனின் பாசம் மாடசாமி கண்ணுக்கு தெரியாமல் போய்விட்டது.

" இப்போ என்ன பண்ணுறது...?"

" உங்க பையன் பழையப்படி சந்தோஷமா இருக்கனும்னா ? அது உங்க கையில தான் இருக்கு "

" என்ன பண்ணனும் சொல்லுங்க..?"

" நாளைக்கு கூத்துல நடிக்காதீங்க. உங்க பையனோட உக்காந்து கூத்து பாருங்க. உங்களுக்கு பதிலா வேற யாராவது நடிக்க நான் ஏற்ப்பாடு பண்ணுறேன்."

சிறு வயதில் இருந்து மாடசாமிக்கு கூத்துக் கட்டி வேஷம் போடுவது ரொம்ப பிடிக்கும். ஆனால், தன் மகனின் பயத்தை பார்த்த பிறகு நடிப்பு அவருக்கு பெரிதாக தெரியவில்லை. என்னிடம் எந்த பதிலும் சொல்லாமல் கூத்து நடத்தும் தலைவரிடம் விஷயத்தை சொன்னார். தலைவரும் சற்று நேரம் யோசித்தார். அதன் பின் " பரவாயில்ல மாடசாமி ! நம்ப பையன் ஒருத்தன் ரொம்ப நாளா நடிக்குறதுக்கு வாய்ப்பு கேட்டுட்டு இருந்தான். அவன வச்சி சமாளிச்சுக்கிறேன். நீ பையன பார்த்துக் கோ."

அடுத்த நாள்.

நானும், மாடசாமி குடும்பத்துடன் கூத்து பார்க்க சென்றோம். அப்பா தன் அருகில் இருந்ததால் பையன் முகம் பிரகாசமாக இருந்தது. இந்த அசுரன் உடலில் வேல் படும் போது அந்த பையனும் மற்றவர்களோடு சேர்ந்து 'அரோகரா' என்று கத்தினான். அவனுடைய பழைய தெம்பு வந்தது. புது நடிகன் மாடசாமி அளவுக்கு நடிக்கவில்லை என்றாலும், சொதப்பாமல் நடித்தான். மாடசாமிக்கு கிடைத்த கைதட்டல் அவனுக்கு கிடைக்காத போது தெரிந்துக் கொண்டேன் 'மாடசாமி எங்களூர் சுப்பர் ஸ்டார்' என்று !

அன்று இரவே நான் ஊருக்கு செல்ல வேண்டியதாக இருந்தது. மாடசாமி வழக்கம் போல் என்னை பஸ் ஏற்றிவிட்டார். நான் செல்லும் போது என் கையை பிடித்து ‘நன்றி’ கூறினார். மன நல மருத்துவராய் என் கடமையை தான் செய்தேன் என்று கூறினேன். கலைஞர்கள் கூத்து கலையை விடுவதற்கு பாசமும் ஒரு காரணமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சென்னைக்கு வந்தேன் . மீண்டும் பெட்ரோல், டீசல் காற்றை ஸ்வாசித்தேன்.

*****

சமூக கலை இலக்கிய அமைப்பு சார்பாக வலைப்பதிவர்களுக்கு நடத்தப்படும் சிறுகதைப் போட்டிக்கான ஆக்கம்!

Wednesday, February 11, 2009

'கமலா' - வெற்றி பெற்ற போஸ்ட் கார்ட் சிறுகதை

பதிவர் நண்பர்களுக்கு வணக்கம்,

நம் உரத்தசிந்தனை இலக்கிய மாத இதழ் நடத்திய 'போஸ்ட் கார்ட்' சிறுகதை போட்டியில் நான் எழுதிய 'கமலா' சிறுகதை வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்ற வருடம் 'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதைக்கு நம் உரத்தசிந்தனை சிறந்த கதை என்று தேர்வு செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி,

அன்புடன்,
குகன்

----

கமலா

சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.

"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.

"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.

சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.

" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.

Tuesday, February 10, 2009

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள் ???

சென்ற வாரம் ஒரு மலேஷியாவில் இருந்து வாசகி தன் மகளின் பள்ளியில் பேச்சு போட்டி நடப்பதாகவும், அதற்கான தலைப்பில் 'கட்டுரை' எழுதி தர முடியுமா என்று கேட்டுக் கொண்டார். நம்மையும் ஒரு நல்ல பதிவர் (??) என்று நம்பியிருக்கிறார் என்பதற்காக ஒரு பக்க அளவில் கட்டுரை எழுதி மின்னஞ்சல் அனுப்பினேன்.இதற்கு முன் அந்த வாசகி யார் என்று கூட தெரியாது. எதோ என் பதிவு அவர்களுக்கு பிடித்திருக்கலாம். கேட்டுவார். நானும் எழுதி கொடுத்து விட்டேன். அவர் மகள் வெற்றி பெற்றாரா என்று கூட தெரியவில்லை.

அவர் என்னிடம் கேட்ட தலைப்பு " இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்". இந்த தலைப்பை படித்ததும் எனக்குள் பல கேள்விகள். இந்த போட்டிகள் நடத்துவதால் பங்கு பெற வேண்டும் என்பதற்காக பலர் தங்கள் கற்பனை தட்டி எழுதுகின்றனர். ( வெற்றியை முக்கியமாக கருதுவதில்லை.)

எந்த வித உள் நோக்கமில்லாமல் உண்மையாகவே இலக்கிய போட்டிகள் நடத்தி எழுத்தாளர்களை ஊக்கவிக்கிறார்களா என்ற சந்தேகம் நீண்ட நாட்களாகவே என் மனதில் உள்ளது. 1000, 5000 ரூபாய் என்று ஒரு சிறுகதைக்கோ அல்லது கவிதைக்கோ கொடுக்கிறார்கள். வெற்றி பெற்ற எழுத்தாளர்களும் பெற்றுக் கொள்கிறார்கள். ஆனால், போட்டி நடத்துபவர்கள் என்ன பயன் பெறுகிறார்கள். எந்த லாபம் இல்லாமல் போட்டி நடத்துவார்களா...! இல்லை அவர்கள் போட்டி நடத்துபது மூலம் தேடிக் கொள்ளும் விளம்பரமா என்று புரியவில்லை.

ஒரு எழுத்தாளர் பார்வையில் எழுதிய கட்டுரையை கீழே குறிப்பிட்டுள்ளேன். எந்த வார்த்தைகளும் மாற்றாமல் அப்படியே கொடுத்திருக்கிறேன்.


-----

இலக்கிய போட்டிகளால் நாம் அடையும் நன்மைகள்

ஒரு திறந்த மைதானத்தில் பதினொரு பேர் கொண்ட இரு அணி வீரர்களை எந்த இலக்கும், விதிமுறைகளும் இல்லாமல் பந்தை இரண்டு பக்கமும் அடிக்க வேண்டும் என்று சொன்னால் எப்படி இருக்கும்....? அவர்கள் பந்தை அடித்தப்படி விளையாடிக் கொண்டே இருப்பார்கள். அந்த விளையாட்டுக்கு முடிவு என்பதே கிடையாது. பார்வையாளர்களும் அந்த விளையாட்டை பார்க்க மாட்டார்கள். ஒரு கட்டத்தில் விளையாட்டு வீரர்களுக்கும் அலுப்பு தட்டிவிடும். ஆனால், இதே விளையாட்டை காலளவு, விதிமுறைகள், இலக்கு என்று நிர்ணயம் செய்து விளையாடினால் ரசிகர்கள் திரண்டு வந்து பார்ப்பார்கள். இரண்டு அணிகளும் பந்தை தங்கள் இலக்கை நோக்கி அடித்து விளையாடுவார்கள். ரசிகர்களும் கைதட்டி ஆராவாரம் செய்வார்கள்.

இலக்கிய போட்டிகளும் அப்படி தான். ஒவ்வொரு எழுத்தாளனும் எழுத்து துறையில் நுழையும் போது 'கவிதை' என்ற நுழைவு தேர்வு மூலம் தான் உள்ளே வருகிறான். காலம் செல்ல செல்ல வளர்ந்த நிலையில் கட்டுரை, சிறுகதை, புதினம் என்று அவனது எழுத்துக்களும் வளர்ச்சி அடைகின்றன. ஒரு நல்ல எழுத்தாளரால் எல்லாமே எழுத முடியும். ஆனால், அவன் எதில் சிறந்து விளங்குகிறான் என்பதை இலக்கிய போட்டிகள் தான் அவனுக்கு உணர்த்துகிறது. இலக்கிய போட்டிகளில் வளர்ந்த எழுத்தாளர்கள் ஒருவனின் கவிதையோ அல்லது சிறுகதையோ தேர்வு செய்யும் போது எழுத்துலகில் மிக பெரிய அங்கிகாரம் கிடைக்கிறது. அவன் எழுதிய அந்த படைப்புக்கும் வாசகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுகிறது.

எந்த ஒரு எழுத்தாளனையும் இலக்கிய போட்டிகள் போல் வாசகர்களிடம் எதுவும் கொண்டு செல்வதில்லை. புகழ் பெற்ற இதழிலோ அல்லது நாளேடுகளிலோ எழுதுபவர்கள் குறிப்பிட்ட வாசகர்கள் வரை தான் சென்றடைகிறார்கள். ஆனால், இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்ற படைப்புகள் பெரும் அளவில் வாசகர்களின் ஆதரவு கிடைக்கிறது. இன்றும், சாகித்ய அகாதமி விருது, தமிழ அரசு விருது பெற்ற நூல்கள் வாசகர்கள் மத்தியில் நல்ல மதிப்பு பெற்றுள்ளது. அந்த நூலின் விற்பனைக்கும் இலக்கிய போட்டியின் முடிவுகள் உதவுகிறது.

இலக்கிய போட்டிகள் எழுத்தாளனை அங்கிகரிப்பதோடு அல்லாமல் வாசகனுக்கு நல்ல படைப்புகள் எளிதில் சென்றடைய வழி வகுத்துக் கொடுகிறது.

---

எழுத்தாளர் பார்வையில் இலக்கிய போட்டிகள் மிகவும் முக்கியம். ஆனால், போட்டிகள் நடத்துபவர்களின் பார்வையில் தேவை விளம்பரம் மட்டும் தானா...அல்லது அதையும் மீறி ஏதாவது ஒன்று அவர்கள் எதிர்பார்க்கிறார்களா !!

ச்ச.. யாரை தான் சந்தேகம் படனும் அறிவிருக்கா... எதோ காசு இருக்குறவங்க போட்டி நடத்துறாங்க ! எழுத்தாளர் போட்டியில் கலந்துக் கொள்ளுறான். உனக்கு என்ன வந்தது.இப்படினு நீங்கள் கேட்கலாம். அப்படி கேட்டாலும் அதில் உண்மை இருக்கிறது. இருந்தாலும், என் சந்தேகம் நியாயமாக தான் எனக்கு படுகிறது. நீங்க என்ன சொல்லுறீங்க... ????

LinkWithin

Related Posts with Thumbnails