பதிவர் நண்பர்களுக்கு வணக்கம்,
நம் உரத்தசிந்தனை இலக்கிய மாத இதழ் நடத்திய 'போஸ்ட் கார்ட்' சிறுகதை போட்டியில் நான் எழுதிய 'கமலா' சிறுகதை வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்ற வருடம் 'மனசாட்சி சொன்னது' என்ற சிறுகதைக்கு நம் உரத்தசிந்தனை சிறந்த கதை என்று தேர்வு செய்துள்ளது என்பதை இவ்விடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
குகன்
----
கமலா
சண்முகம் கமலாவின் தோள் மீது ஒரு கையும், இடுப்பில் ஒரு கையும் போட்டுக் கொண்டு பேசிப்படி நடந்து வந்தான்.
"எத்தன வருஷமா இந்த தொழில்ல இருக்க..." என்றான் சண்முகம்.
"இரண்டு வருஷமா ஸார்...!" என்றாள்.
சண்முகத்தின் காம பார்வை கமலாவின் தேகத்தை மொய்த்து கொண்டு இருந்தது. இந்த வேலைக்கு என்று வந்த பிறகு ஆண்ணின் தீண்டல் பெரிதாக எடுத்துக் கொள்ள கூடாது என்று அமைதியாக நடந்தாள்.
" நீ பேசாம இந்த இடத்த விட்டுட்டு என் கூடவே தங்கிக்கோ.." என்று கூறி அசட்டு தனமாக சிரித்தான். கமலா அவனை தாங்கி நடந்தபை அறையில் விட்டு வெளியே வந்தாள். சேவைக்கும், தொழிலுக்கும் வித்தியாசம் தெரியாதவனிடம் பேச விருப்பமில்லாமல் பொறுமையாக நர்ஸ் கமலா அடுத்த நோயாளியை கவனிக்க சென்றாள்.
6 comments:
வாழ்த்துகள் சகா
//கார்க்கி said...
வாழ்த்துகள் சகா //
நன்றி தோழரே :)
இது ஒரு...
ஹைக்கூ சிறுகதை.. என கூறலாம்...
நன்றி...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
நல்லா இருக்கு
// Subbu said...
நல்லா இருக்கு //
நன்றி Subbu :)
Post a Comment