வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 24, 2009

சாரு நிவேதிதாவின் 'தீராக்காதலி'

பதிவர் வட்டத்தில் அதிகம் பேசப்படும் எழுத்தாளர் என்றால் அது ‘சாரு நிவேதிதாவாக’ தான் இருக்க முடியும். அவரை சூடாக விமர்சிப்பவர்கள் அவர் எழுதிய 'ஸீரோ டிகிரி' மீதும், 'ராஸ லீலா' மீதும் பலர் முன் நிருத்தி உள்ளனர். பலருக்கு அவருடைய கட்டுரை தீரனும், தேடல்களும் தெரியாமல் இருக்கிறது. அவருடைய தேடலை புரிந்துக் கொள்ள நினைப்பவர்கள் 'தீராக்காதலி' நூலை கண்டிப்பாக படிக்க வேண்டும்.

காலத்தால் மறந்து விட்ட 'சூப்பர் ஸ்டார்' எம்.கே. தியாகராஜ பாகவதர் வாழ்க்கை வரலாற்றில் இருந்து புத்தகம் தொடங்குகிறது. அவர் நடித்த 'அரிசந்திரா' (மூன்று தீபாவளி கண்ட படம்) இன்றும் எந்த படங்களாலும் முறியடிக்க முடியாத சாதனை படமாக இருக்கிறது. கொலை வழக்கில் கைதாகி, அதனால் தன் சொத்தும், புகழும் இழந்தவர் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், அவர் விடுதலையான பிறகு சியாமளா (1952), புது வாழ்வு (1957), சிவகாமி (1959) என்று மூன்று படங்கள் நடித்திருக்கிறார். இந்த படங்களுமே தோல்வியடைந்தன. காலத்திற்கேற்ற படங்கள் அவர் நடிக்காமல் பாட்டை நம்பி படம் எடுத்ததால் அவர் தோல்விக்கு காரணம் என்ற இந்த நூலில் மூலம் தெரிந்துக் கொண்டேன்.

அன்றைய 'சூப்பர் ஸ்டார்' பாகவதர் போல், நடிப்பு திலகத்திற்கு பி.யு.சின்னப்பா இருந்திருக்கிறார். இவர் கதநாயகனாக நடித்த 'சதிலீலாவதியில் தான் M.G.R, N.S.K அறிமுகம் ஆகியுள்ளனர்.

அடுத்து இந்த நூலில் இடம் பெற்றவர் 'இசை மன்னர்' என்று கருதப்பட்ட எஸ்.ஜி.கிட்டப்பா அவர்கள். குடித்து குடித்து இள்மையிலே தன் வாழ்க்கை முடித்துக் கொண்ட இசை மாமேதை. இறுதி நாட்களில் அவர் எழுதிய கடிதங்களும் இந்த நூலில் இடம் பெறுகின்றன.

உண்மையில் இந்த நூலின் நாயகி சொன்னால் "தீராக்காதலி" இருந்த (வாழ்ந்த) நடிகை கே.பி.சுந்தராம்பாள் அவர்கள் தான். இன்று வரை பலர் மனதில் அவ்வையாராக வாழ்ந்து கொண்டு இருக்கும் சுந்தராம்பாள் அவர்களின் இளமைக்காலம் மிகவும் சோகமானவை. நல்ல குரல் வளம் கொண்ட சுந்தராம்பாள் அவர்கள் எஸ்.ஜி.கிட்டப்பாவுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப்பட்டார். கிட்டப்பாவுடன் சட்ட ரீதியான திருமணம் நடக்காவிட்டாலும் அவர் மரணத்திற்கு பிறகு சாமியாராக தான் வாழ்ந்திருக்கிறார். கிட்டப்பா 28வது வயதில் இறக்கும் போது சுந்தராம்பாளுக்கு வயது 25 ! கும்பிடுவதற்கு இரண்டு கைகள் வேண்டும். காதலுக்கு இரண்டு உள்ளங்கள் வேண்டும். அந்த விஷயத்தில் சாரு சொல்வது போல் சுந்தராம்பாள் அவர்கள் "ஒரு தனி பிறவி தான்".

வில்லனாக நடித்த எம்.ஆர்.ராதா இந்த புத்தகங்களில் சொல்லும் இரண்டு சம்பவங்கள் மூலம் நாயகனாக தெரிகிறார்.

1. எம்.ஆர்.ராதா நாடகம் நடத்தும் ஊர்களில் அதிக வசதிகளை எதிர்பார்க்க மாட்டார். " நமது நாடங்களை நடத்துபவர்கள் மிகவும் ஏழைகள். இந்த நாடகத்தைக் கொண்டு தான் கடனை அடைக்க வேண்டும். ஒரு வாரத்திற்காவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள். அவர்களிடம் ரொம்ப வசதிகள் எதிர்பார்க்காதீர்கள் !" என்று கூறுயவர்.

2. 1956ல் கலைஞரை எதிர்த்து எம்.ஆர்.ராதாவை நிற்குமாறு வற்புற்த்திய கி.வீரமணியிடம் " கருணாநிதி நம்ப ஆளாச்சே.... அதோடு, அய்யாவுக்கு தேர்தலெல்லாம் பிடிக்காது. அதெல்லாம் அயோக்கியத்தனம்னு சொல்லியிருக்காரு..." என்று கூறி மறுத்துவிட்டார் எம்.ஆர்.ராதா

எம்.ஜி.ஆர் பற்றிய கட்டுரையில் எல்லாம் நமக்கு தெரிந்த விஷயத்தை தான் சொல்லியிருக்கிறார். புத்திதாக ஒன்றுமில்லை. நூலின் வணிக நோக்கத்திற்காகவே எம்.ஜி.ஆர் பற்றின கட்டுரை சேர்க்கப்பட்டது போல் தெரிகிறது.

அட்டைப்படத்தில் சினிமா கலைஞர்களையும், புத்தகத்தில் 'தீராக்காதலி' என்ற தலைப்பை பார்த்ததும் அவர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றியதாக இருக்கும் என்ற ஆவல் இருந்தது. ( ஒரு வேலை எழுதியது சாரு நிவேதிதா என்பதால் அப்படி தோன்றியிருக்கலாம்). நாம் மறந்த கலைஞர்களை நினைவு படுத்தும் வகையில் இந்த நூல் இருக்கிறது.


விலை. 80
உயிர்மை பதிப்பகம்
11/29, சுப்பிரமணியம் தெரு.
அபிராமபுரம், சென்னை - 18.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails