Monday, February 9, 2009

நடேசன் பார்க்கில் (8.2.09) புலிகளின் கூட்டம்

நேற்று (8.2.09), மாலை 4 மணியளவில் நடேசன் பார்க்கில் இலங்கையில் நடக்கும் போருக்கு எதிராக ஐம்பதுக்கு மேற்பட்ட வலைப்பதிவர்கள் சந்தித்தோம். தவிர்க்க முடியாத காரணத்தால் 4 மணி கூட்டத்திற்கு 5.15 மணிக்கு தான் வந்தேன். (‘ஞாயிறு’ என்பதால் மதியம் ஆழ்ந்து தூங்கிவிட்டேன்)

பாதியில் கலந்துக் கொண்டதால் பலரது அறிமுகம் கிடைக்காமல் போனது.

ஒரு நண்பர் " ஒரு வாரத்திற்காவது மொக்கை பதிவுகளை நிறுத்திக் கொண்டு, இலங்கை போருக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும்” என்று சொன்னார். (எனக்கும் இது சரியாக தான் படுகிறது.)

இலங்கை பிரச்சனைக்கு தமிழர்கள் மட்டும் குரல் கொடுத்தால் மட்டும் போதாது. மற்ற மாநிலத்தவர்களுக்கும் நம் உணர்வுகளை புரியவைக்க வேண்டும். அதற்கும் ஆங்கிலத்தில் ப்ளாக் எழுதுபவர்களை அனுகி 'முத்துகுமார்' இறுதி கடிதத்தை ஆங்கிலத்தில் பதிவு போட வேண்டும் என்று பலர் வலியுருத்தினர்.

ஒருவர் அடுத்த வாரம் பெங்களூரில் அடுத்த வாரம் இலங்கை பிரச்சனை பற்றி கூட்டம் போட போவதாக கூறினார். இலங்கை பிரச்சனை பற்றி ஒரு சிறு குறிப்பு பிரசுரம் போட வேண்டும் என்பதை பற்றியும் பேசப்பட்டது.

இறுதியில், ஐந்து நிமிடம் இறந்த 'முத்துகுமார்' அவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தி விட்டு கூட்டம் கலைந்தது.

தேநீர்க்காக கொஞ்ச நேரம் சுற்றி விட்டு கடைசியில் பார்க் பக்கத்தில் இருக்கும் கடையில் தேநீர் அருந்தினோம்.

கூட்டம் முடினதும் நான், கார்க்கி, முரளிகண்ணன் பேசிக் கொண்டு இருந்தோம். முரளிகண்ணன் அவர்கள் வலை திரட்டிகளை பற்றியும், தமிழிஷ் பற்றியும் பல தகவல்கள் கூறினார். தகவல்கள் ரொம்ப பயனுள்ளதாக இருந்தது.

லக்கிலுக்கிடம் அவர் எழுதிய புத்தகம் பற்றி பேச வேண்டும் நினைத்தேன். அவரை சுற்றி பெரும் கூட்டமே சுழ்ந்துக் கொண்டு இருந்ததால், அதிகம் பேசமுடியவில்லை.

'விடுப்பட்டவை' பாலா இருந்திருந்தால் இன்னும் பல தகவல் கிடைத்திருக்கும்.

அண்ணன் கேபிள் சங்கரிடம் அவரது 'நிதர்சன கதைகள்' பற்றி பேசிய பிறகு அந்த இடத்தை விட்டு நான் சென்று விட்டேன்.

இலங்கை பிரச்சனையை அரசியல் பண்ணுபவர்கள் மத்தியில் நம்மால் ஒரு தீபம் ஏற்ற முடிந்தாலே போதும். ஒரு தீபம் வைத்து பல தீபங்கள் ஏற்ற முடியும் என்ற நம்பிக்கையில் செல்வோம். நல்லது நடந்தால் சரி...!

ஏதாவது விடுப்பட்டிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

2 comments:

அத்திரி said...

நேற்று நடந்த இந்த சந்திப்பை பற்றி நீங்கதான் முதலில் பதிவிட்டுள்ளீர்கள்.ஏகப்பட்ட மேட்டர் இருக்கும்னு எதிர்பார்த்தேன்...........

குகன் said...

நான் பாதியில் கலந்துக் கொண்டதால் சில விஷயங்கள் விடுபட்டிருக்கலாம்.

LinkWithin

Related Posts with Thumbnails