வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 17, 2009

சிட்டி பேங்க் CEO வுக்கு ‘ஜே’ முன் உதாரணம் ! ஓபாமா வைத்த ‘ஆப்பு’ !!

வெள்ளி மதியம் (13.2.09) சாப்பிடும் போது என் செல்போனில் ஒரு செய்தி வந்தது. சிட்டி பேங்க் 'CEO' விக்ரம் பன்டிட் இனி தான் ஒரு டாலர் மட்டும் சம்பளமாக வாங்க முடிவு எடுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் நிலவி வரும் பொருளாதார வீழ்ச்சியால் பல நிறுவனங்கள், வங்கிகள் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. இந்த பொருளாதார வீழ்ச்சியால் சிட்டி பேங்க் பெரிதும் பாதிக்க பட்டுள்ளது. தங்களுடைய 'BPO' நிறுவனமான 'e-serve' வை நடத்த முடியாமல் 'TCS' நிறுவனத்துக்கு விறுதை பலருக்கு நினைவிருக்கும். மார்ச் நிதி ஆண்டில் பல கோடி நஷ்டத்தை காட்ட வேண்டியது இருக்கும் என்பதை உணர்ந்த விக்ரம் பன்டிட், தன் வங்கி லாபம் கிடைக்கும் வரை தான் ஒரு டாலர் சம்பளம் வாங்க போவதாக அறிவித்துள்ளார்.

இதை என் அலுவலக நண்பனிடம் கூறிய போது, "இது என்ன பெரிய விஷயம். நம்ப ஜே ஒரு ரூபாய் சம்பளம் வாங்களையா...." என்று சிரித்துக் கொண்டு கூறினார். ஒரு நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எடுத்திருக்கும் முடிவை நம் அரசியலோடு முடிச்சு போட்டதை நினைத்து எனக்கு சிரிப்பு தான் வந்தது.

விக்ரம் பன்டிட் இந்த முடிவு அரசியல் தந்திரம் கொண்டதாக கூட இருக்கலாம். தலைமையில் இருப்பவரே ஒரு டாலர் சம்பளம் வாங்கும் போது ஊழியர்கள் குறைக்கும் அடுத்த நடவடிக்கைக்கு எந்த பிரச்சனை வராமல் தடுக்க கூட இருக்கலாம்.

******

நேற்று முன் தினம் (15.2.09), ஒபாமா அமெரிக்க இந்தியர்களுக்கு 'ஆப்பு' வைப்பது போல் ஒரு அறிவிப்பு கொடுத்துள்ளார்.

அரசிடம் நிதி உதவி பணம் வாங்கிய எல்லா நிறுவனங்களும் வெளிநாட்டவர்களை (எச்-1பி விசாவில் வேலை செய்பவர்கள்) வேலையில் அமர்த்த கூடாது என்று நிபந்தனை போட்டுள்ளார். வெளிநாட்டில் இயங்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அதிக வரி கொடுக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த நிபந்தனைக்கு முழுமையாக ஒப்புக்கொண்டு, நிதியைப் பெற்றுக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனங்கள், ஒட்டுமொத்தமாக இப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன.

“இனி அடுத்த இரு ஆண்டுகளுக்கு எச்-1பி விசாவில் யாரையும் வேலைக்கு அமர்த்த மாட்டோம்” என அமெரிக்க அரசிடம் நிதி உதவி பெற்றுள்ள பெரிய நிறுவனங்கள் அனைத்தும் அறிவித்துவிட்டன.

இந்த எச்1பி விசாவில் அதிகம் பணி நியமனம் பெறுவோர் இந்தியர்களாகவே இருந்தனர். இதனால் ஒரு லட்ச இந்தியர்களுக்கு வேலை போக வாய்ப்புள்ளது. அது மட்டுமில்லாமல் அமெரிக்காவில் இருந்து இந்தியா கிடைத்துக் கொண்டு இருக்கும் BPO வேலைகளுக்கும் பாதிக்கப்படலாம். மார்ச் மாதத்திற்கு மேல் நிலைமை மோசமாகும் என்பது நன்றாக தெரிகிறது.

இந்த வருஷம் ஆரம்பமே சரியில்லை.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails