வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 12, 2009

நடிகர் சங்கம் vs பத்திரிகையாளர்கள்

புவனெஸ்வரி என்ற தனி நபர் விபச்சார வழக்கு எப்படி எல்லாம் திசை மாறி நடிக சங்கம் - பத்திரிகையாளர்கள் சண்டையாக மாறிவிட்டது. கடைசியில், வழக்கில் கைதான புவனெஸ்வரியை மறந்து விட்டனர். மூன்று நாட்கள் பெரிய விஷயமாக இருக்கும் என்று எதிர்பார்த்தது, இப்போது ஒரு மாதத்திற்கு பெரிய செய்தியாக மாறிவிட்டது.

தினமலர் வெளியிட்ட விபச்சார நடிகைகள் பட்டியலை வெளியிட்ட கண்டன கூட்டத்தில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளின் உண்மையான குணம் தெரிந்துவிட்டது. அவர்கள் யாருக்கு பிறந்தவர்கள் என்பதை பத்திரிகையாளர்களை திட்டியதில் தெரிகிறது. இலங்கை தமிழர்களுக்காக கூடிய கூட்டத்தில் கூட இத்தனை ஆவேசத்தை காட்டவில்லை. இலங்கை இராணுவத்தை எதிர்த்து பேச வாய்வரவில்லை. அங்கு நடக்கும் பிரச்சனையை எழுதிய பத்திரிகையாளர் குடும்பத்தை சேர்த்து திட்டுவதற்கு இவர்களுக்கு பல வார்த்தைகளை கண்டு பிடித்து பேசி இருக்கிறார்கள்.

தினமலர் மீது மான நஷ்ட வழக்கு போட்டு முடிய வேண்டிய விஷயத்தை, தன் நண்பர் விஜயகுமார் மனைவி (மஞ்சுளா) பெயரை பிரசுரம் செய்ததற்காகவே நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பெரிதாக ஆகிவிட்டார் என்று நினைக்கிறேன். எப்படி இருந்தாலும் அவர்கள் பேசிய வார்த்தைகளுக்கு மன்னிப்பு கேட்டு தான் ஆக வேண்டும்.

இவ்வளவு பெரிய பிரச்சனை ஆன பிறகு, தினமலர் தங்கள் ஆதாரத்தை வெளியீட வேண்டும். அப்போது தான் அவர்கள் சொன்னது உண்மை என்று நம்ப வைக்க முடியும். இல்லை என்றால், அவர்கள் வெளியீட்ட செய்தி யூக மாக கருதப்படும்.

எது எப்படியோ ஒரு மாதத்திற்கு இது தான் "Headlines"

டிஸ்கி : பத்திரிகையாளருக்கு எதிரான மனுவை முரசொலி ஆசிரியர் (முதல்வர்) நடவடிக்கை எடுக்க கொடுத்திருக்கின்றனர். முதல்வருக்கு வேறு வேலையே இல்லையா.... அவர் பதவியை நடிகர் சங்கம் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். எல்லாம் நாட்டமைக்கு தான் வெளிச்சம்...

1 comment:

Prathap Kumar S. said...

குற்றம் உள்ள மனசுதான் குறுகுறுக்கும்... முழு பூசணிக்காயை மூடிமறைக்க பார்க்கிறார்கள்.

இப்ப அம்மா ஆட்சில இருந்திருத்திருந்தால் என்ன நடந்திருக்கும்.

LinkWithin

Related Posts with Thumbnails