வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, November 3, 2016

அரசு அலுவலகச் சிஸ்டம்

எங்கள் பகுதி தபால் நிலையத்தில் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் கவுண்டரில் வயதானப் பெண்மணி ஒருவர் வேலை செய்கிறார். போன் பில், EB Bill போன்ற விஷயத்திற்கு தனி கவுண்டரெல்லாம் கிடையாது. எல்லாரும் அந்த கவுண்டரை தான் பயன்படுத்த வேண்டும். 

அந்த வயதானப் பெண்மணிக்கு கம்யூட்டர் ஆப்ரேட் செய்வதைப் பார்த்தால் ஆமையை விட மெதுவாக இயக்குவார் (வீடியோவில் இருக்கும் பெண்மணி மேல்). ஒவ்வொரு நாளும் அந்த கவுண்டரில் நிற்பவர்கள் அவரை வசவுப்பாடாமல் இருக்கமாட்டார்கள். கூட்டத்தின் கோபத்தை கட்டுப்படுத்த அந்தச் சமயத்தில் வேறு ஒருவரை உட்கார வைத்து வேலையை முடிப்பார்கள். சில சமயம் வசவு வார்த்தைகளை காதில் வாங்கி கொண்டு வேலை செய்வார். 

இது போதாதென்று அந்த பெண்மணிக்கு தமிழ் தெரியாது. வாடிக்கையாளர்கள் ஸ்பீட் போஸ்ட், ரெஜிஸ்டர் பார்சல் முகவரியை தமிழில் எழுதி வந்தால், அந்த அம்மாவின் நிலை அவ்வளவு தான். 

அவருக்கு கணக்கும் சரியாக தெரியாது. பல சமயம் சில்லரை கொடுக்கும் போது அதிகமாகவே கொடுப்பார். நியாயமாக இருப்பவர்கள் திருப்பி கொடுத்துவிடுவார்கள். சிலர் வந்தது லாபம் என்று எடுத்துச் செல்வார்கள். அந்த அம்மா தனது கை காசைப் போட்டு கணக்கு முடிப்பார். 

பல முறை தலைமை தபால் ஆபிஸரிடம் சொல்லியும் அந்தப் பெண்மணியை மாற்றவில்லை. காரணம், அவரை தவிர அந்த வேலையை செய்ய யாரும் முன் வரவில்லை. வாடிக்கையாளரை சந்திக்கும் கவுண்டரின் ஓய்வு கிடைப்பது குறைவு. மத்தியச் சாப்பாடு வரை கூட்டம் வந்துக் கொண்டே இருக்கும். மாதக்கடைசியில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த பெண்மணி ஏமாந்தவர் என்பதால் இந்த வேலையை அவர் தலையில் கட்டிவிட்டார்கள். 

அவரைப் பற்றி விசாரித்தப் போது தான் தெரிந்தது கணவர் சர்வீஸில் இருக்கும் போது இறந்ததால் அவருக்கு தபால்துறையில் வேலை கொடுத்திருக்கிறார்கள். மகன் பத்தாவதோ, +1 படிக்கிறான். கணவர் இருக்கும் வரை வீடு தான் உலகம் என்று இருந்தவர், அவரின் மறைவுக்கு பிறகு தனது மகனையும், தன்னையும் காப்பாற்றுவதற்காக தெரியாத வேலையை கஷ்டப்பட்டு செய்கிறார். 

ஒரு வருடமாக அவரை கவனிக்கிறேன். முன்பைவிட பராவாயில்லை. அவர் தட்டுத்தடுமாறி எப்படியோ கம்யூட்டரை ஒரளவுக் கற்றுக் கொண்டுள்ளார். பாவம் தமிழ் படிக்கத்தான் தெரியவில்லை. கணக்கு போடுவதற்கு Calculator பக்கத்திலேயே வைத்திருக்கிறார். 

நியாயமாக அந்தப் பெண்மணி மீது கோபப்படுவது சரியா ? 


பொதுவாக, ஐ.டியில் வேலை செய்யாதவனுக்கு விழும் திட்டை விட அவர்களது மேலாளருக்கு தான் அதிக திட்டு விழும். காரணம், வேலை தெரியாதவனுக்கு வேலை கொடுத்தது அந்த மேலாளரின் தவறு. யாருக்கு என்ன வேலைக் கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிப்பது தான் மேலாளரின் வேலை. அதை செய்யத் தெரியாதவன் நல்ல மேலாளராக இருக்க முடியாது. இப்படித்தான் எல்லா தனியார் நிறுவனங்களிலும் இப்படி தான் நடக்கிறது. 

அரசு அலுவலகத்தில் மேலாளர்கள் விதிவிளக்காக வேலை செய்வார்கள். யார் ஏமாந்தவர்களோ அவரின் தலையில் வேலையை கட்டிவிடுவார்கள். அவர்களும் தனக்கு தெரிந்த வேலையை கொடுங்கள், தெரியாத வேலை கொடுக்காதீர்கள் என்று எதிர்த்து மேலாளரிடம் பேசமுடியாது. 

இன்று ஒரு நாள் பலு குறைவான வேலையை கொடுங்கள் என்று கோரிக்கை வைத்தால், அவரது வேலை செய்ய யாராவது ஒருவர் முன்வர வேண்டும். அப்படி இல்லையென்றால் அந்த வேலையை அவர்கள் தான் செய்தாக வேண்டும். அப்போது தான், அவர்களது பிழைப்பு ஓடும். 

வங்கியில் இருக்கும் காஷியர் முதல் பேரூந்தை மெதுவாக ஓட்டும் ஓட்டுநர் வரை அவர்களது நிலைமை இது தான். தனக்கு கீழ் இருப்பவர்கள் எப்படி வேலைச் செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் ஏசி அறையில் இருக்கும் அரசு மேலாளர்களை பொதுமக்கள் எளிதாக சந்திக்க முடியாத அரசு அலுவலகச் சிஸ்டம் செயல்படுகிறது. 

சொல்லப்போனால் பிரச்சனை அவர்களிடத்தில் மட்டும் இல்லை. இந்த சிஸ்டம் இப்படி தான் இயங்குகிறது என்று ஏற்க மறுக்கும் நம்மிடத்திலும் இருக்கிறது.

3 comments:

Avargal Unmaigal said...

///சொல்லப்போனால் பிரச்சனை அவர்களிடத்தில் மட்டும் இல்லை. இந்த சிஸ்டம் இப்படி தான் இயங்குகிறது என்று ஏற்க மறுக்கும் நம்மிடத்திலும் இருக்கிறது.///

மிக மிக மிக உண்மை

Unknown said...

the problem is that all staffs in govt private have tight work.. whether they do is another question...
all grievances irregularities come to light only in respect of the jobs involving public
for example CASH COUNTERS..
mostly cashiers in banks e.b offices are targeted by the public
there are many areas in govt banks where daily work is not carried out...
for example loan processing... loan settlement.. foreclosure of loans...

Unknown said...

years back i had to approach the managing director of a nationalised bank for my preclosure of housing loan.. my application for preclosure was gathering dust... in the section...
the bank loses considerable interest when they approve preclosure ...
so they never touch preclosure appln...
the m.d knows all the tricks of his staffs
in the end he gave orders to preclose the loan... nearly one month after my appln
in the meanwhile they also charged preclosure housing loan charges....
and if they know that you are from ABROAD they squeeze you bro..

LinkWithin

Related Posts with Thumbnails