வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, February 2, 2017

மாண்புமிகு உளவுத்துறை - வே.இராமநாதன்

கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது உளவுத்துறை ரிப்போர்ட்டை விடக்கட்சிக்காரர்களைத்தான் அதிகமாக நம்புவார். செல்வி ஜெயலலிதாவோ உளவுத்துறையையும் நம்பமாட்டார், கட்சிக்காரர்களையும் நம்பமாட்டார். தனக்கு எது சரியென்று படுகிறதோ அதை செய்யக் கூடியவர். 


தமிழகத்தின் வரலாற்றில் கலைஞருக்கு மிக முக்கிய இடமுண்டு. மிகச்சிறந்த ஞாபக சக்தியும், கூர்மையான அறிவும் உடைய தலைவர்கள் அவருக்கு நிகராக இந்திய வரலாற்றில் யாரையேனும் சொல்ல வேண்டுமென்றால் வெகுநேரம் யோசிக்க வேண்டியிருக்கும். 


தன் பாதுகாப்பு அதிகாரிகளை நல்ல முறையில் நடத்துவதில் எம்.ஜி.ஆருக்கு நிகர் அவர்தான். அவர்கள் சாப்பிட்டார்களா ? என்ன சாப்பிட்டார்கள் ? எது அவர்களுக்கு பிடிக்கும் என்பதையெல்லாம் கவனித்துக்கொள்வார். ஏதாவது விசேஷம் என்றால் அன்பளிப்புகளைத் தாராளமாக வழங்குவார். எம்.ஜி.ஆரின் பாதுகாப்புக்குப் போவதென்றால் போலீஸாருக்குக் குஷிதான். ஆனால், ஒரு விஷயம். எம்.ஜி.ஆரின் மேடைப்பேச்சு அவரது புகழுக்கு ஏற்ற வகையில் தெளிவாக இருக்காது. 




இப்படி முக்கியமான அரசியல் தகவலை கொடுத்திருப்பவர் தமிழகத்தை சேர்ந்த உளவுத்துறை அதிகாரி. 1964 – 1999 வரை 35 ஆண்டுகள் காவல்துறையில் பணியாற்றிய வே.இராமநாதன் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அரசியல் ஆர்வமுள்ளவர்கள், உளவுத்துறை பற்றி தெரிந்துகொள்ள விருப்பமுடையவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

இணையத்தில் வாங்க....

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails