வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Wednesday, February 22, 2017

துருவங்கள் பதினாறு ( 2016 )

கதை என்று பார்த்தால் பெரிதாக ஒன்றுமில்லை. ஒரு கொலை நடக்கிறது. அதை விசாரிக்கும் காவல் அதிகாரி, அவரின் உதவிக்கு புதிதாக வேலைக்கு சேர்ந்த கான்ஸ்டெபிள். அவர்களின் விசாரணை தான் கதை. 

ஒரு ப்ளாட், ரகுமான் வீடு, காவல் நிலையம், சாலை என்று இதைச் சுற்றிதான் கதைகளன் அமைந்திருக்கிறது. அதற்குள் பல முடிச்சுகளோடு கதை தொடங்குகிறது. ஒவ்வொரு முடிச்சுகள் அவிழ்க்கும் போது அழகான விளக்கம் என்று திரைக்கதை விறுவிறுப்பாக செல்கிறது. 



படத்தில் கடைசிக் காட்சி வரை கேள்விகளும், அதற்கான விடையோடு பார்வையாளனை சீட் நுணியில் அமர வைக்கிறது. இறுதியாக சொல்லப்படும் கதை… அது வரை திரையில் காட்டப்பட்ட கதைக்கும், விவாதிக்கப்பட்ட சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லாத விஷயமாக இருக்கிறது. 

படம் முடிந்து இரண்டு மணி நேரமாக கதையின் திரைக்கதை மனதில் ஓட்டிப்பார்த்தேன். எல்லா மூடிச்சுகளுக்கும் பதில் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குனர் கார்த்திக் நரேன். மிகவும் ரசித்த விஷயம், கதையை யார் கோணத்தில் சொல்கிறோமோ அவர்கள் தான் நமக்கு நாயகர்களாக தெரிவார்கள். இதேக் கதையை பாதிக்கப்பட்டவன் பார்வையில் இருந்து பார்த்தால் ’உண்மை’ என்று தான் தெரிகிறது. 

Simple and Neat Screenplay என்பதற்கு மிக சிறந்த உதாரணம் “துருவங்கள் பதினாறு”. 

Horrer Thriller என்று சொல்லி பெய்ப்பட சீசனில் இப்படி ஒரு Investigative Thriller படம் தமிழில் பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கிறது. யார் கண்டது ”துருவங்கள் பதினாறு ” மூலம் அடுத்து Investigative Thriller பட சீசன் ஆரம்பிக்கலாம் !!! 

எந்த வித எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் பார்த்தப்படம். தனது அடுத்தப்படத்தில் பார்வையாளனை அதிகம் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறார் கார்த்திக் நரேன். வாழ்த்துகள் !!!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails