வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, October 24, 2016

எப்படி ? இப்படி ? - பட்டிக்கோட்டை பிரபாகர்

ஒவ்வொரு மர்ம நாவலுக்கு பின்னால் எதோ உண்மையான குற்றம் ஒழிந்திருக்கிறது. உண்மையும், புனைவும் கலந்த ஒரு புள்ளி தான் மர்ம நாவலின் அடித்தளமாக இருக்கிறது. அப்படி மர்ம நாவலின் ஆசானான பட்டிக்கோட்டை பிரபாகர் புனைவு அல்லாத உண்மை சம்பவங்களின் குற்றத்தைப் பற்றி எழுதியிருக்கும் நூல் ‘எப்படி ? இப்படி ?’. 



தமிழகத்தில் எம்.ஜி.ஆர் சுடப்பட்டதில் இருந்து அமெரிக்காவின் மர்லின் மன்றோ மரணம் பின் வரை நடந்த சம்பவங்கள், வழக்கு விசாரணை, தீர்ப்பு என்று 31 உண்மை குற்றச் சம்பவங்களை கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு சம்பவம் மர்மமான சிறுகதை போல் இருக்கிறது. சில வழக்கின் தீர்ப்புகள் இந்திய நீதிமன்றத்தில் பணம் எந்த அளவுக்கு விளையாடுகிறது என்பது புரிந்து கொள்ள முடிகிறது. 

உண்மை குற்றவியல் சம்பவங்களை வாசிக்க விரும்புபவர்கள் வாசிக்க வேண்டிய நூல்… 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails