வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, November 3, 2008

மனம் (+) மனம் (-) மனம் (!)

“அறிவுக்கும் மனசுக்கும்
சிக்கல் எற்படும் போது
நீ மனசு சொல்வதை மட்டும் கேள்
அறிவு சொல்வதை கேட்காதே !
அறிவுக்கு அனைத்தும் தெரியும்
மனசுக்கும் உன்னை மட்டும் தான் தெரியும் !”
- விவேகானந்தர்.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “Mind is fater than wind”. காற்றை விட அதி வேகமாய் மனம் செல்லும். சென்னையில் சில மணி நேரங்கள் தேவைப்படும். ஆனால், மனிதன் மனம் சென்னையில் இருந்துக் கொண்டு அமெரிக்காவுக்கு செல்வதைப் பற்றி யோசிப்பான்.

நூறு கிராம் தான் இதயம். ஆனால் அதில் டன் கணக்கில் ஆசைகள். பதவி, பெண், பொருள், பொன், புகழ், பணம், நிலம் இதிலேயே தன் மனதில் கவனம் செலுத்தி வருகிறான்.இவைகளை அடைவதற்காகவே பல முயற்சிகள் செய்து வருகிறான்.

விழித்திருக்கும் போது இதயத்துடிப்பு அதிகமாய் துடிக்கும். உறங்கும் போது அதை விட சற்றுக் குறைவாகவே இதயதுடிப்பு துடிக்கும். ஆனால், மனதில் இருக்கும் ஆசைகள் உறங்கும் போது கனவாய் உலாவருகிறது. விழித்த பிறகு அந்த ஆசைகள் மனதில் இரட்டிப்பாய் வளர்கிறது.

ஒரு முனிவர் பத்து வருடங்களாக தவம் செய்து தண்ணீரில் நடப்பதற்கு வரம் வாங்குகிறார்.வரம் வாங்கிய பிறகு யமுனை கரையை நடந்து சென்று நண்பனைப்பார்க்க செல்கிறார். முனிவர் நண்பனிடம் “நான் பத்து வருடங்களாக கடும் தவம் புரிந்து நீரில் நடந்து செல்ல வரம் வாங்கி வந்துள்ளேன். இப்பொதுக் கூட யமுனைக் கரையை நடந்தே கடந்து வந்தேன்” என்றார். அதற்கு அந்த நண்பர் “அவ்வளவுதானா .. இதற்கு பத்து ரூபாய் ஓடக்காரரிடம் கொடுருந்தால் அவன் யமுனைக் கரையை கடக்க உதவியிப்பான். இதற்காக பத்து வருடம் வீணாய் செலவு செய்து விட்டீரே” என்றார். அந்த முனிவர் ஒன்றும் பேசாமல் சென்றுவிட்டார்.

மற்றவர் நம்மை பாராட்டவே மனம் செயல் படுகிறது. நாம் செய்யும் வேலையை மற்றவர்கள் வியக்க வேண்டும் என்று ஒவ்வொரு வேலையும் செய்கிறோம். அதை யாரும் பாராட்டாத போது மனம் வாடுகிறோம்.

இளம் வயதில் உடலை வருத்திக் கொண்டு பணத்திற்காக மனம் உழைக்க சொல்லும். சற்று நரை வளர்த்த பிறகு உடல் நலத்திற்காக மனம் பணத்தை செலவு செய்ய சொல்லும். காலத்திற்கு ஏற்றதுப் போல் நம்மை அறியாமலே நம் மனது இயங்கும்.

நாம் மனதை ஆலயமாக வைத்துக் கொள்ள முயற்சிக்க வேண்டாம். குறைந்தது ஆலயத்தில் வெளியே கிடக்கும் செருப்பாக நம் மனம் இருக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பாரி, அசோகன், சோழ நாட்டு மன்னர்கள் இவர்கள் எல்லாம் நாட்டை ஆண்டு பெயர் எடுத்தவர்கள். விவேகானந்தர், ராம கிருஷ்ணர், சாக்ரடீஸ் இவர்கள் எல்லாம் தங்கள் மனதையாண்டு பெயர் எடுத்தார்கள். இன்றைய காலக் கட்டத்தில் நாட்டை ஆட்சி செய்து பெயர் எடுப்பதை விட மனதை ஆட்சி செய்து பெயர் எடுப்பது சுலபம். ஆதலால், மனதர்களே மனதை ஆட்சி செய்யுங்கள்.

( நன்றி : 'தாய் மண்' இலக்கிய மாத இதழில் ஜூலை,2006 வெளிவந்தது )

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails