வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

11. 'உதவியாளர்' அன்ரூ மார்வல்

மில்டன் வாழ்க்கை தொடக்கத்தின் அத்தியாயங்களில் பல பக்கங்கள் வேறும் கருப்பு பக்கங்களாகவே இருந்தன. முதல் திருமணத்தில் வந்த கசப்பு, இரண்டு மனைவிகள் இழப்பு, 'பிரடைஸ் லாஸ்ட்' நூலின் எதிர்ப்பு, கண் பார்வை இழந்தது - இப்படி பட்டியலிட்டு கொண்டே போகலாம்.தன் வாழ்க்கை அர்த்தமில்லாமல் போகுமோ என்று இருந்தவரு அன்பு காட்டியவர் அவரது மூன்றாவது மனைவி எலிசபத் மின்ஷூல். ஆனால், குருடனாய் இருந்த மில்டனுக்கு எழுத உதவியது அவரது மனைவி இல்லை !!

மில்டன் பிறக்கும் நல்ல உடல் நிலையில் தான் பிறந்தார். இடையில் வந்த உடல் நல குறைவால் தன் கண் பார்வை இழத்தவர் அதிகம் கவலை பட்டது தன் எழுத்து பணியை பற்றியது தான். பிறவி குருடராக இல்லாதவர் எப்படி எவ்வளவு படைப்பு படைக்க முடியும் என்ற வியப்பு வருவது சரி தான். அந்த வியப்புக்கு காரணமாய் இருந்தவர் அன்ரூ மார்வெல் என்ற கவிஞர். ஜான் மில்டன் உணர்வுகளை தன்னுள் வாங்கிக் கொண்டு, அவர் சொல்வதை எழுதுவார். அன்ரூ மார்வல் மில்டனுக்கு துணையாக உதவியதால் கண்ணில்லாதது அவருக்கு ஒரு குறையாக தெரியவில்லை. ஜான் மில்டனை பாராட்டும் போது அன்ரூ மார்வலை பாராட்டாமல் இருக்க முடியாது.

அன்ரூ மார்வல் மார்ச் 31, 1621 ஆ ண்டு பிறந்தார். ஜான் மில்டனிடம் வந்து சேர்ந்த முதல் உதவியாளர் அன்ரூ மார்வல் தான். பதினெடாவது வயதிலே கேம்பிரிட்ஜ்யில் உள்ள ட்ரினிடி கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்றவர். சிறுகாலத்திலே உலகத்தின் பெரும் பகுதியை பார்த்தவர். நான்கு மொழிகளை கற்றவர். மில்டனால் அதிகம் ஏர்க்கப்பட்டவர்.

மில்டன் முழுமையாக கண் இஅழந்த நிலையில், 1657ல் மார்வல் மில்டனிடம் உதவியாளராக சேர்ந்தார். மாதம் 200 பௌன்ட் சம்பளம். மில்டன் ஒலிவர் கிரோம்வெல் சபையில் லத்தின் செயலாளராக இருந்த போது மில்டனுக்கு மார்வல் மிகவும் உதவியாக இருந்துள்ளார்.அதன் பின் 1660ல் மீண்டும் இரண்டாம் சார்லஸ் மன்னராக வந்த போது மில்டனுக்கு பக்க பலமாகவும் இருந்தார். சார்லஸ் மன்னராக வந்த பிறகு மில்டன் சிறையில் அடைததோடு இல்லாமல் பல படைப்புகள் மக்கள் முன் எறிக்க உத்தரவிட்டார். அன்ரூ மார்வல் பேசிய பிறகு இரண்டு நூல்கள் (ஏகொன்க்லஸ்டேஸ் (Eikonklastes) மற்றும் டிபேன்சியோ(Defensio))மட்டும் எரிக்கப்பட்டது. மில்டனும் தண்டனையில்லாமல் விடுதலையானார். அதுமட்டுமில்லாமல், 'பிரடைஸ் லாஸ்ட்' இரண்டாம் பதிப்பில் வெளி வர அதிகம் உதவியவர் அன்ரூ மார்வல்.
அன்ரூ மார்வலும் ஒரு கவிஞர் தான். தன் கற்பனையை கலக்காமல் ஜான் மில்டன் சொல்வதை அப்படியே எழுதுவார். இந்த பணியை சாதான ஒரு எழுத்தாளர் செய்யலாம். ஆனால், எழுதும் போது கவிஞர்களுக்கு என்று சொந்த கற்பனைகள் வரும். தன்க்கென்று சொந்த கற்பனைகளை மறந்து ஜான் மில்டனின் கண்ணாகவும், எழுத்துக்கோளாகவும் இருந்தவர் அன்ரூ மார்வல்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails