வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

2. மில்டனின் படிப்பு

பொதுவாக உலக புகழ் பெற்றவர்கள் எல்லாம் தங்கள் பள்ளி வாழ்வில் மிகவும் சுட்டிதனமாகவும் அல்லது பள்ளி வாழ்வை விரும்பாதவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், ஜான் மில்டன் அப்படியில்லை. படிப்பில் மிகுந்த ஆர்வமுடையவர்.

மில்டனின் தந்தை தான் அவருக்கு முதல் ஆசிரியர். சில கடிதங்களை கொடுத்து அவ்வபோது படிக்க சொல்வார். வீட்டுல் நாம் சொல்லி கொடுத்தாலும் முறையாக ஒருவர் சொல்லி கொடுத்தால் தான் பாடம் புரியும் என்று மில்டன் சீனியர் நினைத்தார்.

மில்டன் ஆரம்ப பள்ளியை வீட்டில் இருந்து கொண்டே படிக்க தொடங்கினார். தாமஸ் யங் என்பவர் மில்டனின் வீட்டில் வந்து தினமும் பாடம் எடுப்பார். தாமஸ் யங் மில்டனுக்கு ஒரு ஆசிரியராக மட்டுமில்லாமல் நல்ல நண்பனாகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். மில்டன் பதினொராவது வயதில் தாமஸ் யங் வெறு இடத்தில் ஆசிரியர் வேலை கிடைத்ததால் லண்டனை விட்டு சென்றார். மில்டன் அவரை விட்டு பிரிந்தாலும் அவர் மேல் இருந்த குரு பக்தியில் தன் படைப்பான ‘Of reformation’ கவிதையை தாமஸ் யங்க்கு சமர்பித்தார்.

அதன் பிறகு மில்டன் சீனியர் தன் மகனை லண்டனில் உள்ள சென்ட் பால் பள்ளியில் சேர்த்தார். சென்ட் பால் பள்ளியில் தான் ஜான் மில்டன் லத்தின் மற்றும் கிரேக்க மெழிய கற்றார். அங்கு கற்ற அந்த மொழிகள் தான் அவரை மிக பெரிய கவிஞராக உருவாக்கியது. சென்ட் பால் பள்ளியில் ஜான் மில்டனுக்கு கிடைத்த நல்ல நண்பர் தான் சார்லஸ் டியோட்டி.

மில்டன் மிக பெரிய படிப்பாளி. எப்போது புத்தகம் கையுமாக தான் இருப்பார். நண்பர்களுடன் ஊரை சுற்றுவது, வெட்டி கதை பேசுவது எதையும் விம்பாதவர். அப்படியே நண்பர்களிடம் பேசினாலும் பற்றிதான் பேசுவார். மில்டனின் சகோதரர் கிரிஸ்டபர் ஒரு முறை மில்டனை பற்றி கூறுகையில் மில்டன் இரவு 12, 1 மணி வரை படிப்பார் என்று கூறியிருக்கிறார். அந்த கடின உழைப்பு தான் தன் பதினைந்தாவது வயதில் முதல் படைப்பை படைக்க முடிந்தது.

1625ல் பள்ளி படிப்பை முடித்தவுடன் மில்டன் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்து படித்தார். கல்லூரியில் மற்ற மாணவர்களுடன் பேசுவது, அரட்டை அடிப்பது பொன்ற விஷ்யங்களில் மில்டன் ஈடுபாடு செலுத்தியதில்லை. பெரும் பாலும் கல்லூரியில் அவர் தனிமையில் தான் கழித்தார். மில்டன் எப்போது படிப்பார், எந்த நேரத்தில் படிப்பார் என்று அவருடன் அறையில் இருப்பவருக்கு தெரியாது. நல்லிரவில் விளக்கு போட்டு கொண்டு புத்தகம் படித்துக் கொண்டு இருப்பார் மில்டன். மில்டனுடன் தங்கியிருந்தவர்களுக்கு அவர் படிக்கும் நேரம் கஷ்டமாகவே இருக்கும். "இ வ ன் படிக்கிறதுக்கு.... நம்ம தூக்கத்த கெடுக்குறாடா..." என்று மில்டனின் அறையில் இருப்பவர்கள் புலம்பிக் கொள்வார்கள்.

எப்படியோ ஒரு வழியாக 1629ல் பி.ஏ பட்டத்தினையும், 1632ல் எம்.ஏ., பட்டத்தினையும் பெற்றார்.

ஆலயங்களில் பணிபுரிய அவர் முன்னதாக விரும்பிய போதிலும், அக்காலத்திய ஆலயப்பணியின் போக்கினை வெறுத்தார். வேறு எந்த பணியிலும் ஏடுபட மனமில்லாதவராக இருந்த மில்டன், தன் இலக்கியங்களைக் கற்பதில் தம் நேரத்தை செல்விட்டு வந்தார். ஆறு ஆண்டுகளாக இடைவிடாது நூலகளைக் கற்றதால் சிறந்த கவிதை எழுதும் புலமை பெற்றார். இந்த காலத்தில் தான் கோமஸ், லிஸிடஸ் நூல்களையும் எழுதினார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails