வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, February 5, 2008

4.மில்டனின் பயணம்...

மில்டன் கவிதை, பாடல் எழுதுவதில் மட்டுமில்லாமல் நீண்ட தூரம் பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். 1637ல் மில்டனின் தாய் சாரா ஜெர்பி மரணத்தால் மிகுந்த சோகத்தில் இருந்தார். அம்மாவின் நினைவுகள் அவரை வாடிக்கொண்டு இருந்தது. தனக்கு ஒரு மாறுதல் வேண்டும் என்று விரும்பினார். தன் மன மாற்றத்திகாக மில்டன் பிரான்ஸ் மற்றும் இட்டாலி நாடுகளுக்கு சுற்று பயணம் சென்றார்.

ஒரு கவிஞனுக்கு புத்தம் படிப்பதை கிடைக்கும் சிந்தனையை விட நான்கு ஊர்களை பார்த்து வரும் சிந்தனை அதிகம். கவிஞனின் கற்பனை உலகளவு செல்லும். மில்டன் இந்த பயணம் அவர் எழுத்துக்களுக்கு உதவிகவும் இருந்தது.

பாரிஸ்,நைஸ்,பிசா, பிலாரண்ஸ், ரோம்,வெனிஸ்,மிலன் இன்னும் பல இடங்களுக்கு மில்டன் பயணம் செய்தார். விடுமுறை நாடகளில் பயணம் செய்த மில்டன் தன் சிந்தனைக்கு விடுமுறை கொடுக்கவில்லை. பயணத்தின் மதத்தின் மீது அவருக்கு இருந்த சந்தேகங்களை நிபர்த்தி செய்து கொண்டார். ஹூகோ க்ரோடியஸ் என்பவரிடம் தன் சந்தேகங்களை கேட்டார். ஹூகோ க்ரோடியஸ் ஒரு கவிஞர், நாடக ஆசிரியர், சட்டம் படிதவர். மில்டன் ஹூகோ க்ரோடியஸ் செல்வு செய்த நாடகள் எதிர்காலத்தில் அவர் எழுத்துகளுக்கு மிக உதவியாக அமைந்தது.

1638ல் மில்டன் பிலாரண்ஸ் ஊரை அடைந்த போது சரித்திரம் போற்றும் பெரும் விஞ்ஞானியை சந்தித்தார். அதுவும் அவர் இருக்கும் சிறையில்...

அந்த விஞ்ஞானி வேறு யாருமில்லை. கலிலியியோ. உலகம் உருன்டை என்று சொன்ன அதே கலிலியியோ தான். இயற்கையை கடவுளாக பார்த்தவர்களின் மத்தியில் இயற்கையில் இருக்கும் விஞ்ஞானத்தை பார்த்தவன் கலிலியோ. அதற்கு பரிசாக கிடைத்து சிறை வாசம். கலிலியோவிடம் விஞ்ஞான ரிதியான விஷயங்களை பற்றி மில்டன் பேசினார்.

கலிலியியோவை சந்தித்ததை தன் நூலில் பதவு செய்தார். தன து 'பிரடைஸ் லாஸ்ட்' நூலில் கடவுள் சாத்தான் வருவதை கலிலியியோ கண்டுபித்த தொலை நோக்கும் கருவி (Telescope) மூலம் பார்த்ததாக கூறுகிறார். கலிலியியோ சந்தித பிறகு மில்டனுள் இருந்த நாட்டு பற்று வெளி வர தொடங்கியது.

எந்த எழுத்தாளரும் எழுத்துப்பணியை முழு நேர வேலையாக செய்ய முடியாது. தன் ஜீவனத்திற்காக யோசித்துக் கொண்டு இருந்தார் மில்டன். அப்போது மில்டன் சீனியர் தன் கையில் இருந்த பணத்தை கொடுத்தார். அந்த பணத்தை மூலதனமாக கொண்டு மில்டன் தனியாக ஒரு பள்ளியை தொடங்கினார். தன் உறவினர்களின் குழந்தை, மற்ற குழந்தைகளுக்கும் பாடம் எடுத்துக் கொண்டு இருந்தார். மில்டன் பள்ளிக்கூடம் நடத்திய காலத்தில் தான் “Of Education” என்ற படைப்பை எழுதினார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails