
ஹோட்டலில் ஒரு பெண் மீது கரப்பான்பூச்சி அவள் மீது விழ, கத்தி ஆரபாட்டம் செய்துவிட்டாள். கத்தக்கள்ளி, குச்சுபுடி என்று பல நடனங்கள் ஆடியும் அவள் உடலில் இருந்து அது அகரவில்லை. அவள் பக்கத்தில் இருக்கும் கணவன் தட்டி விட, அந்த கரப்பான் இன்னொரு பெண் மீது பவ்வியமாக அமர்ந்தது.
அந்த பெண் செய்தது இரண்டு மடங்கு நடனமாடி கரப்பான்பூச்சி தள்ளிவிடுகிறாள். அந்த கரப்பான் காபி கப் எடுத்து வரும் சர்வர் மீது கால் மேல் கால் போடாத குறையாக ஏறிக்கொண்டது.
அவன் அசரவில்லை. பொறுமையாக இருந்தான். அதன் அசைவுகளை தீவிரமாக கவனித்தான். தன் கையில் காபி கப்பை வைத்துவிட்டு, அது தப்பிக்க முடியாத நேரம் பார்த்து பிடித்து தூக்கி வெளியே ஏறிந்தான்.
அந்த ஹோட்டலில் நடந்த கலாட்டாவுக்கும் கரப்பான்பூச்சிக்கும் ஏதாவும் சம்மந்தமுண்டா ? இல்லை.
கரப்பான்பூச்சி தூக்கி ஏறிய சர்வர் காட்டிய நிதானத்தை அந்த இரண்டு பெண்மணிகள் காட்டவில்லை.
எந்த பிரச்சனையையும் நம் உடனே எதிர்விளைவை காட்டுவதிற்கு பதிலாக நாம் பொறுமையாக கையாள வேண்டும்.
வீட்டில் அப்பா திட்டுயதும், வாடி சென்று குழந்தைகள் அழுகிறது.
முதலாளி நம்மை திட்டிய பிறகு வேலையில் கோபத்தை காட்டி மேலும் தவறுகள் செய்கிறோம். நாம் தவறுகள் செய்வதற்கும், நம்மை திட்டியவர்களுக்கு எந்த சம்மந்தமில்லை. நாம் காட்டிய எதிர்விளைவு தான் காரணம்.
மேல் குறிப்பிட்ட பிரச்சனையில் பெரிதாக தெரிந்தது. காரணம், அந்த பெண் எதிர்விளைவை உடனே காட்டியது தான். சர்வர் பொறுமையாக கையண்டதால் பிரச்சனை மேலும் வளராமல் இருந்தது.
வரி விலக்கில்லாத ஆங்கிலத்தில் சொல்ல வேண்டும் என்றால்
We should not react in life, we should always respond.
Reactions are always instinctive whereas responses are always intellectual
***
மின்னஞ்சலில் அனுப்பிய நண்பர் சந்திருவுக்கு நன்றி :)
1 comment:
Post a Comment