வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 2, 2009

தேடினேன் ஒரு தேவதை

சௌக்காரப்பேட்டை என்று சொன்னவுடன் எல்லோருக்கும் நினைவில் வருவது 'சேட்' பெண்கள் தான். அப்படிப்பட்ட 'சேட்' பெண்களை சைட் அடித்தப்படி குறுக்கும் நெருக்கான சந்துகளில் நடந்துக் கொண்டு இருந்தேன்.

வட இந்திய பெண்களை இறக்குமதி செய்தது போல் ஒவ்வொரு பெண்களும் இருந்தனர். ( வட இந்தியாவில் இருந்து இங்கு தயங்கியவர்கள் அப்படி தான் இருப்பார்கள்... இது கூடவா தெரியாதா..!!) வெள்ளை தோலை எல்லாம் அழகு என்று சொல்லும் முட்டாள் நானில்லை. ஒரு சிலர் பார்க்கும் படி இருந்தனர். ஒரு சிலர் சப்பாத்தி மாவு போல் தெரிந்தனர். எந்த பெண்ணையும் இரண்டு நிமிடம் மேல் பார்க்க முடியவில்லை.

என் கண்ணுக்கு மட்டும் என்னவோ சப்பாத்தி பெண்கள் தான் அதிகம் தெரிந்தனர். இப்படி வேடிக்கை பார்த்தப்படி நடக்கையில் ஒரு பெண் மீது தெரியாமல் இடித்துவிட்டேன்.

" ஸாரி..." என்ற சொல்லி அவள் முகத்தை பார்த்தேன்.

ஐஸ்வர்யா ராய்யின் மெழு சிலைக்கு உயிர் வந்தது போல் அவன் தேக நிறம் அவ்வளவு சிவப்பாக இருந்தது. நிச்சயமாக இவள் 'சேட்' பெண்ணாக இருக்க மாட்டாள் என்றே தோன்றியது.

காரணம், அவளை இடித்தவுடன் " முட்டாள்...உனக்கு கண்ணு தெரியல்ல..." என்று சுத்த தமிழில் திட்டினாள். ‘இந்தி’ கலப்படம் இல்லாமல் சுத்த தமிழில் பேசியதால் இப்படி ஒரு முடிவுக்கு வந்தேன்.

அழகான பெண் நம்மை திட்டி விட்டு சென்றால் தமிழ் நாட்டில் எண்பது சதவீதம் ஆண்கள் கவலையில்லாமல் அவளை பின் தொடர நினைப்பார்கள். அதை தான் நானும் செய்ய நினைத்தேன். நான் நினைத்து முடிப்பதற்குள் கூட்டத்தில் அவள் தொலைந்து போனாள். இல்லை... இல்லை...நான் அவளை தொலைத்துவிட்டேன்.

இவள் இந்த இடத்தில் இருப்பவளாக இருந்தால் கண்டிப்பாக இதே சந்து வழியாக தான் செல்வான் என்று தோன்றியது.

அடுத்த நாள்...

அதே சந்தில் அவளுக்காக காத்திருந்தேன். அவள் வரவில்லை. ஒரு வேலை உடம்பு சரியில்லையோ...!!

அதற்கு அடுத்த நாள்...

இன்றும் அவள் வரவில்லை... வேறு சந்து வழியாக சென்று இருப்பாளோ...

அடுத்த வாரம்...

இன்றைக்கும் அவளை காணவில்லை. வீடு மாறி வேறு ஏரியாவுக்கு குடிபுகுந்திப்பாளோ...

அடுத்த மாதம்...

இதோ மைலாப்பூல் சாலையில் தேவதையை பின் தொடந்து சென்றுக் கொண்டு இருக்கிறேன்.

கபாலிஸ்வரன் கோவிலில் கடவுளை வணங்கும் அழகை பார்க்கும் போது... அம்மன் சிலையே கடவுளை வணங்குவது போல் இருந்தது.

" 'அம்மன்' கூட கடவுள் தான்.... ஒரு கடவுள் எப்படி இன்னொரு கடவுளை வணங்க முடியும்...முட்டாள்??" என்று யாரோ என்னை திட்டியது போல் இருந்தது.

யார் திட்டினால் நமக்கென்ன... தொடரு அந்த தேவதையை...

சௌக்காரப்பேட்டை தொலைத்த தேவதையை எப்படி மைலாப்பூரில் கண்டுபிடித்தேன் என்று வியப்பாக உள்ளதா....!

ஒரு மாதத்திற்கு மேல் தொலைந்த பெண்ணுக்காக காத்திருக்க நான் என்ன பைத்தியக்காரனா...!! இவள் வேறொரு தேவதை.... என்னுடைய தேவதை தேடல் தொடரும்...

5 comments:

Cable சங்கர் said...

ஆரம்பம் அருமை. முடிவு.. கொஞ்சம் சப்..

FunScribbler said...

ஹாஹா... முடிவு சூப்பர்! எதிர்பார்க்காத ஒன்று!:) கலக்குங்க:)

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதயுடன்)
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவன்
உலவு.காம்

குகன் said...

// Cable Sankar said...
ஆரம்பம் அருமை. முடிவு.. கொஞ்சம் சப்.. //

வாங்க தல... நீங்க எதிர்பார்த்த முடிவ கொடுத்திட்டா த்ரில் என்ன இருக்கு... :)

குகன் said...

// Thamizhmaangani said...
ஹாஹா... முடிவு சூப்பர்! எதிர்பார்க்காத ஒன்று!:) கலக்குங்க:)
//

நன்றி...::)

LinkWithin

Related Posts with Thumbnails