வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Monday, April 27, 2009

"நான் வில்லனாக தான் நடிப்பேன்"- நடிகர் புஷ்பராஜ் பேட்டி

பிரபல வார இதழ் நிருபர் தங்கள் இதழில் நடிகர் புஷ்பராஜ் பேட்டியை பிரசுரம் செய்ய ஆசைப்பட்டு அவரை காண சென்றார். தேநீருடன் உபசரித்த நடிகர் புஷ்பராஜ் நிருபர் கேள்விக்கு பதில் சொல்ல தயார் ஆனார்.

நிருபர் : உங்க டைட் ஷெடுல்ல எங்களுக்கு டைம் ஒதுக்குனது ரொம்ப நன்றி...!

புஷ்ப்பராஜ் : ( கையில படமே இல்ல. என்ன பண்ணுறது) உங்கள மாதிரி இதழ்ல என் பேட்டி வரதுக்கு எனக்கும் ரொம்ப பெருமையா இருக்கு..!

நிருபர் : சரி... பேட்டிக்கு போவாமா ஸார்...!
புஷ்ப்பராஜ் : கண்டிப்பா...!

நிருபர் : ஹீரோவ அறிமுகமான நீங்க இப்போ வில்லனா நடிக்கிருங்க... ஏன் இந்த திடீர் முடிவு. மறுபடியும் ஹீரோவா நடிப்பிங்களா ?

புஷ்ப்பராஜ் : ( நான் என்ன ஹீரோவா நடிக்க மாட்டேனா சொன்னேன். எவனும் ச்சான்ஸ் தர மாட்டேங்கிறான்) ஹீரோவா நடிக்கிறது விட வில்லனா நடிக்கிறது ரொம்ப கஷ்டம். எல்லா படத்திலையும் ஹீரோனா நாலு பாட்டுக்கு டான்ஸ், அஞ்சு பாட்டுனு போய்டலாம். வில்லனா அப்படியில்ல ஒவ்வொரு படத்துல கொலைய வித விதமா பண்ணணும். ரேப் பண்ணனும். ஹீரோ கிட்ட அடிவாங்குறது மட்டும் இல்லாத, அவங்க அம்மா, தங்கச்சினு குடும்பத்துகிட்ட அடிவாங்குற மாதிரி சீன் வரும். அது எல்லாம் என்ன மாதிரி திறமையான கலைஞன் தான் செய்ய முடியும்.

சாகுற மாதிரி சீன் பார்த்த கூட வில்லன் பாத்திரம் தான் ரொம்ப வசதி. ஹீரோ அடிப்பட்டாலும் கடைசி வரைக்கும் சண்டை போடனும். தூப்பாகி குண்டு பட்டாலும், அவனே கத்திய வச்சி குண்டு எடுத்து ட்ரிட்மென்ட் எடுக்கனும். சாகும் போது துடிச்சு, கஷ்டப்படு, இம்சப்பட்டு செத்தா தான் ஜனக ஏத்துப்பாங்க ! ( ஜனக ஏத்துப்பாங்களோ இல்லையோ டைரக்டர் அப்ப தான் டேக் 'ஓ.கே' சொல்லுவாரு )

வில்லன் அவ்வளவு கஷ்டப்பட தேவையில்ல... படம் முழுக்க ஜாலியா, வசதியா வரலாம். பொண்ணுங்க, சுமோ, பங்களா ரொம்ப சந்தோஷமா இருக்கலாம். ஹீரோ ஒரு கத்தி வீசினாலும், தூப்பாகியால ஒரு குண்டு சுட்டாலும் டக்குனு செத்திடலாம். ரொம்ப சிரமப்படாம சாகலாம்.

ஹீரோ பணக்காரணாகனும்னா ரொம்ப கஷ்டப்படு உழைக்கனும். ‘விக்கரம்’ மாதிரி டரைக்டர் தான் ஒரே பாட்டுல பணக்காரனாக்குவாரு. மத்தவங்க பட முழுக்க ஹீரோவ ரொம்ப கஷ்டப்படு உழைக்க வைப்பாங்க. வில்லன் ஒரு சீன்ல பணக்காரன் ஆகலாம். எம்.பி, எம்.எல்.ஏ, மந்திரி உதவி வச்சி அடுத்த சீன்ல பணக்காரன் ஆகலாம். நம்ப ‘தமிழ் சினிமா’ பொருத்த வரை வில்லன் பெரும்பாலும் பணக்காரங்களா தான் இருப்பாங்க ! வில்லன முன்னுக்கு கொண்டு வர நேர்வழியே கிடையாது. குறுக்கு வழியில தான் முன்னுக்கு வருவான்.

இது எல்லாத்துக்கு மெல வில்லன நடிக்கிறதுக்கு முக்கியமான ஒரு காரணம் இருக்கு. ஹீரோவுக்கு ஒரு ஹீரோயின் இல்ல இரண்டு ஹீரோயினோட தான் டூயட் பாடமுடியும். அதுவும் மெயின் ஹீரோயின் தொடமா நடிக்க வேண்டியது இருக்கும். ஆனா வில்லன் அப்படியில்ல... ஒவ்வொரு சீன்லையும் பத்து பொண்ணுங்களோட வரலாம். பெரிய பட்ஜெட் படமா இருந்தா ‘பிகினி’ போட்ட பொண்ணுங்க கூட வருவாங்க. இப்படி சந்தோஷமா, ஜாலியா இருந்துட்டு கடைசியா ஒரு சீன் மட்டும் அடிவாங்கி சாகனும். ஹீரோ ஒரு பொண்ண கட்டி பிடிக்குறதுக்காக படம் முழு கஷ்டப்பட்டு அடிவாங்கி ஜெய்க்கனும்.

ஒரே சமயத்துல வில்லனா நாலைஞ்சு படம் நடிக்கலாம். ஹீரோவ ஒண்ணு, இரண்டு படம் தான் நடிக்கம் முடியும்...

புஷ்பராஜ் பேசிக் கொண்டு இருக்க நிருபர் எழுந்து செல்ல தொடங்கினார்.

புஷ்பராஜ் : எங்க பதில் சொல்லி முடிக்கிறதுகுள்ள கலம்பிட்டீங்க....?
நிருபர் : இந்த பதிலே எங்க வார இதழ்ல இரண்டு பக்கம் வரும். இன்னும் நீங்க பேசி எல்லாம் பதிவு பண்ணா, அடுத்த வாரம் இதழ்ல முழுக்க உங்க பேட்டி மட்டும் தான் வரும்.

புஷ்பராஜ் நிருபரையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

நிருபர் : அடுத்த வாரம் வந்து இன்னொரு கேள்வி கேட்கிறேன். இத மாதிரி பதில் சொல்லுங்க. 'ஹாய் புஷ்பராஜ் !' சொல்லி இரண்டு பக்கம் உங்களுக்காக ஒதுக்கி தரோம்.

இப்படி சொல்லிவிட்டு நிருபர் 'எஸ்' ஆனார்.

“ஓ...இப்படி தான் எல்லாரும் 'பத்தி' எழுத்தாளரானங்களா...” என்று நடிகர் புஷ்பராஜ் மனதில் நினைத்துக் கொண்டார்.

4 comments:

ஆதவா said...

நல்லா இருக்குங்க.. குறுநகை வரவழைத்தது!!

ஆதவா said...

அதென்னங்க வில்லான்???

குகன் said...

// ஆதவா said...
நல்லா இருக்குங்க.. குறுநகை வரவழைத்தது!!
//

Nandri :)

// ஆதவா said...
அதென்னங்க வில்லான்???
//

அவசரத்துல எழுதுனதுனால சின்ன ஸ்பெல்லிங் மிஸ்டேக் :(

நாஞ்சில் பிரதாப் said...

yaarunga adhu pushparaj...endha padathula nadichaaru.

LinkWithin

Related Posts with Thumbnails