வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Tuesday, April 21, 2009

ஓட்டை தவிற்கும் வாக்காளர்கள்

“கள்ள ஓட்டுப் போட்டால் இரண்டு வருஷம் தண்டனை
நல்ல ஓட்டுப் போட்டால் ஐந்து வருஷம் தண்டனை”
- தண்டனை வேண்டாம் என்பதற்காக பெரும் பாலும் யாரும் ஓட்டுப் போடவே வருவதில்லை.



முன்பு ஒரு முறை செய்தித்தாளில் படித்த ஒரு செய்தி. தங்கள் கிராமத்துக்கு அடிப்படை வசதி செய்து தராததால், அந்த கிராமமே தேர்தலை புறக்கனித்தனர். சமிபத்தில் பீகார் தேர்தல் எனக்கு மீண்டும் இந்த செய்தியை நினைவுப்படுத்தியிருக்கிறது. நடந்த பாராள மன்ற தேர்தலில் பீகாரில் 46 % மட்டுமே வாக்குகள் பதிவாகி இருக்கின்றன.

பாதிக்கு மேற்ப்பட்டவர்கள் ஓட்டு போடாமல் இருக்க ஏதாவது ஒரு காரணம் இருக்கும். பாதிக்கு மேல் ஓட்டு போடாமல் இருந்தாலும் கிடைத்த ஓட்டுக்களை வைத்து வெற்றியாளர்களை நிர்ணயம் செய்யும் ஜனநாயக நாட்டில் தான் நாம் இருக்கிறோம். ஒரு தொகுதியில் ஐம்பது சதவீதம் பேர் தேர்தலை புறக்கணிக்கிறார்கள் என்றால் எவ்வளவு பெரிய விஷயம். அதை பற்றி யோசிக்காமல் அடுத்த மாநிலத்தில் நடக்கும் தேர்தலை பற்றி தொலைக்காட்சி ஊடகங்கள் சிந்திக்க தொடங்கிவிட்டனர்.

தேர்தலை புறக்கணிப்பவர்கள் தங்கள் ஓட்டுகள் பற்றி விழிப்புணர்வு இல்லையா அல்லது தங்கள் பிரதிநிதி தேர்வு செய்ய அ க்கறையில்லையா என்று புரியவில்லை. எது எப்படி இருந்தாலும், பாதிக்கு மேல் வாக்குகள் பதிவாகாத போது அந்த பகுதிக்கு வெற்றியாளர் என்று யாரையும் அறிவிக்க கூடாது.

ஆட்சி அமைக்க பாதி வாக்குகள் பதிவாகாத தொகுதியில் யாரோ ஒரு வெற்றியாளரை அறிவிப்பதால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்து விட போகிறது. தங்கள் பிரதிநிதியை தேர்வு அவர்களுக்கே கவலையில்லாத போது கடமைக்கென்று ஒரு வெற்றியாளர் அறிவிப்பதால் ஓட்டு போடாத ஐம்பது சதவீதம் மக்கள் அவரை மதிக்கவா போகிறார்கள்.

இப்படி ஐம்பது சதவீதம் குறைவான வாக்குகள் பதிவான இடத்தில் மாவட்ட ஆட்சியாளர் பொருப்பில் ஒப்படைக்கலாம். இரண்டு வருடம் கலித்து தங்களுக்கு ஒரு பிரதிநிதி வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் நினைத்தால் ஒரு இடைத்தேர்தல் நடத்தலாம்.

நான் சொல்வதற்கு காரணத்தை பீகார் தேர்தலை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். பீகாரில் மட்டும் ஓட்டுக்கள் 46% வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. மிதம் உள்ளவர்கள் தேர்தலை புறக்கனிக்கிறார்கள். வெற்றி பெரும் வேட்பாளருக்கு 16 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். இரண்டாவதாக இருக்கும் வேட்பாளருக்கு 12 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். மூன்றாவதாக இருக்கும் வேட்பாளருக்கு 10 சதவீதம் ஓட்டுக்கள் கிடைக்கும். மிதம் 8 சதவீதம் இதற வேட்பாளருக்கு ஓட்டுக்கள் கிடைக்கும். இறுதியில் நூறு சதவீத ஓட்டுகளில் 16 சதவீத ஓட்டுக்கள் வாங்கி பதவிக்கு வருகிறார். இதற்கு பெயர் நாம் ஜனநாயகம் என்றால் அது நம்முடைய பேதமை ?

இப்படிப்பட்ட இடங்களில் வெற்றியாளர் அறிவிக்காமல் மாவட்ட ஆட்சியாளர்களிடம் கொடுத்தால், தங்களின் பிரதிநிதியை பற்றின முக்கியதுவத்தை மக்கள் உணர்வார்கள். அவர்களின் அவசியத்தை புரிந்துக் கொள்வார்கள்.தங்கள் கஷ்டங்களை தீர்வு செய்ய மக்கள் தேர்தல் அரசாங்கத்தை நாடுவார்கள். அப்போது, இது போன்ற பகுதியில் இடைதேர்தல் நடத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் கிடைத்த ஓட்டுகளில் வெற்றியாளர் அறிவிக்கப்படுவதால், ஓட்டுப்போடாதவர்கள் செய்யும் தவறு அவர்களுக்கே தெரிவதில்லை.

தேர்தலை புறக்கனித்தால் அவர்களுக்கு அடிப்படை வசதி வந்துவிடுமா என்ன ? இப்படி கேள்வி எழுப்பினால் அவர்கள் எழுப்பும் கேள்வி ஓட்டுப் போட்டால் மட்டும் எங்கள் குறை தீர்ந்து விடுமா ? நம்பிக்கை இல்லாத வேட்பாளருக்கு ஓட்டுப் போடத்தான் வேண்டுமா ? தவறான ஒருவரை தேர்ந்தெடுத்து தீர வேண்டுமா ? என்று பல கேள்விகள் எழும்.

எந்த வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாத வாக்காளர்கள் குறைந்தது 49 ஓ பிரிவில் பதிவு செய்யுங்கள். தேர்தல் நடக்கும் இடத்தில் வாக்களார்கள் 49 ஓ பிரிவில் ஒரு காகிதத்தில் பதிவு செய்தால், அந்த வாக்காளர்கருக்கு எந்த வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லை என்று பொருள். இப்படி ‘யார் மீதும் நம்பிக்கை இல்லை’ என்று வாக்காளர்கள் ஓட்டுப் போடலாம்.

பின் சேர்க்கை :

பெரும்பான்மை மக்கள் ஓட்டு போடாமல் இருப்பது ஜனநாயக தவறு என்றால், ' எந்த பிரதிநிதி வேண்டாம்' என்று நினைக்கும் மக்களிடம் வலுக்கட்டாயமாக ஒரு பிரதிநிதியை தினிப்பதும் 'ஜனநாயக எதிரானது'. அது தான் நம் நாட்டில் இது வரை நடந்துக் கொண்டு இருக்கிறது. அரசாங்கதை குறை சொன்னால் ஒவ்வொருவர்கள் மீது விரலை தான் காட்டுவார்கள்.

ஒரு தொகுதியில் வெற்றியாளர் என்ற அறிவித்து மக்கள் எண்ணத்திற்கு எதிராக நடக்காமல் இருந்தால், வரும் தேர்தலில் அதிக வாக்குகள் பதிவாகும்.எண்பது சதவீதம் வாக்குகள் பதிவாகும் நிலைமை வரும்.அரசாங்கத்தை திருத்துவது பெரிய வேலை. தேர்தலில் நாம் ஓட்டு போட வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரட்டும். பிறகு அரசாங்கத்தை திருத்துவதை பார்த்துக் கொள்ளலாம்.

2 comments:

ஆதவன் said...

“கள்ள ஓட்டுப் போட்டால் இரண்டு வருஷம் தண்டனை
நல்ல ஓட்டுப் போட்டால் ஐந்து வருஷம் தண்டனை”

superb.. keep it up..

குகன் said...

// ஆதவன் said...
“கள்ள ஓட்டுப் போட்டால் இரண்டு வருஷம் தண்டனை
நல்ல ஓட்டுப் போட்டால் ஐந்து வருஷம் தண்டனை”

superb.. keep it up..
//

Nandri...Athavan.

LinkWithin

Related Posts with Thumbnails