வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Saturday, April 18, 2009

'கடல் புறா'- இரண்டாம் பாகம் சுருக்கம்

கடல் கொள்ளையரான இளையபல்லவன் தன் உப தளபதிகளான அமீர், கண்டிதேவனுடன் அஷயமுனை தீவை நோக்கி சென்றுக் கொண்டு இருக்கிறான். முதல் பாகத்தில் படைத்தலைவனாக வந்த இளையபல்லவன் எப்படி கடல் கொள்ளைக்காரனாக ஆனான் விளக்கத்தை தன் சொல்கிறான். கலிங்கத்துடன் நட்புறவு வைத்திருக்கும் ஸ்ரீ விஜயத்தின் கடற்படை பலத்தை சிதைக்கவே தான் கடல் கொள்ளையனான அகூதாவுடன் ஒராண்டு பயிற்சி எடுத்ததை சொல்கிறான். இப்போது தன் லட்சிய பாதையை நோக்கி தன் உபதளபதிகளுடன் அஷயமுனை தீவைக்கு வருகிறான்.

அஷயமுனை தீவு அதன் தலைவன் பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அஷயமுனை ஸ்ரீ விஜயத்துக்கு ஆதரவாக இருப்பதை தெரிந்தும் இளையபல்லவம் தன் உபதளபதிகள் உதவியில்லாமல் தனியாக தீவுக்குள் செல்கிறான். முதலில் அவனை கொல்ல நினைக்கும் பலவர்மன், இளையபல்லவன் அகூதாவின் பெயரை பற்றி சொன்னதும் அஞ்சுகிறான். தன்னுடன் நட்புறவு வைத்துக் கொண்டால் அஷயமுனை தீவு பாதுகாக்கப்படும் என்பதையும் இளையபல்லவன் சொல்கிறான். அப்போது பலவர்மனுடைய வளர்ப்பு மகள் மஞ்சளழகி அங்கு வருகிறாள்.



அந்த தீவில் பௌர்ணமி திருவிழா நடக்கும் சமயத்தில் இளையபல்லவன் வந்தால் அவனுக்கு புர்வகுடி தலைவனான வில்வலனால் ஆபத்து வருமா என்று பலவர்மனும், மஞ்சளழகியும் அஞ்சுகிறார்கள். மஞ்சளழகி அந்த திருவிழா வில்வலன் செய்யும் கொடுமைகளையும், கொலைகளையும் பற்றி சொல்கிறாள். ஒரு வேலை வில்வலன் இளையபல்லவனை கொன்றாலும் அஷயமுனைக்கு ஆபத்து இருப்பதை பலவர்மன் உணர்ந்தான். ஆனால், இளையபல்லவன் எதற்கும் அஞ்சாமல் அந்த விழாவில் தன் உபதளபதிகளுடன் கலந்துக் கொள்கிறான்.

திருவிழாவில் மஞ்சளழகி ஆடும் போது இளையபல்லவனை நோக்கி ஒருவன் குறுவாள் வீசும் போது உபதளபதி அமீர் தன் குறுவாள்ளால் கொல்கிறாள். இதை பார்த்த வில்வலன் கோபன் கொண்டு இளையபல்லவன் சண்டைக்கு அழைத்து தோல்வியும் அடைகிறான். தோல்வியுற்ற வில்வலன் பலவர்மனிடன் இன்னும் சிறு நாட்களில் அஷயமுனையை அழித்துவிடுவதாக சுழ்ழுரைத்து செல்கிறான்.

அஞ்சி நடுங்கிய பலவர்மன் ஒரு திட்டம் போடுகிறான். தன் மகளை இளையபல்லவனுக்கு திருமணம் செய்து வைத்தாள் தன் கோட்டை பாதுகாக்கும் தளபதி கிடைக்கிறான். அவன் திருமணத்துக்கு மறுத்தால் தன் மகளிடம் தவறாக நடந்து கொண்டான் என்று சொல்லி கொன்றுவிடலாம் என்று திட்டம். பெண்களிடம் தவறாக நடந்து கொள்பவனை யாராக இருந்தாலும் அகூதா மன்னிக்கமாட்டான் என்பதை அந்த தீவில் உள்ளவர்கள் அனைவருக்கு,ம் தெரிந்த உண்மை.

மஞ்சளழகி தன் தந்தையின் இந்த திட்டத்தை பற்றி சொல்கிறாள். ஒன்று திருமணம் அல்லது மரணம் என்ற நிலையில் இளையபல்லவன் தள்ளப்படுகிறான். அவளை திருமணம் செய்துக் கொள்ள இளையபல்லவன் சம்மதிக்கிறான். அதுமட்டுமல்லாமல், தன் கப்பலில் இருக்கும் செல்வத்தை எல்லாம் பலவர்மன் செல்வத்துடன் இணைத்து சேந்தனை பாதுக்காக்கும் படி சொல்கிறான். அஷயமுனை இருக்கும் மக்களுக்கு போர் வில்வலனை எதிர்க்கும் போர் பயிற்சியும் கொடுக்கிறான்.

இதற்கிடையில், மஞ்சளழகி வைத்து பலவர்மன் ஆடும் அரசியல் பகடையை பார்த்து இளையபல்லவன் மனதில் சந்தேகம் எழுகிறது. அவள் பலவர்மனின் வளர்ப்பு மகள் பிறகு தெரிந்துக் கொள்கிறான். தன் உபதளபதி கண்டிதேவனை தன் கப்பலை மாற்றியமைக்க சொல்கிறான். கண்டிதேவன் கொள்ளை கப்பலை புறாவடிவத்தில் மாற்றியமைக்கிறான். அதற்கு ஒரு மாதம் நேரமும் எடுத்துக் கொள்கிறான். மாற்றியமைத்த கப்பலுக்கு 'கடல் புறா' என்ற பெயர் வைக்கிறான் இளையபல்லவன்.

இளையபல்லவன் அஷயமுனையில் எல்லா வகை மதுக்களையும் சுவைத்து பார்க்கிறான். அவன் குடிப்பதை பார்த்து பலவர்மன் இளையபல்லவன் முழு குடிகாரனாக மாறிவிட்டதை நினைத்து சந்தோஷப்படுகிறான். என்னென்றால், பலவர்மன் கட்டுப்பாட்டில் இருக்கும் தீவை மறைமுக இளையபல்லவன் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறான் என்று தெரிந்துக் கொண்டான். வில்வலனை நேரம் பார்த்து தன் தீவை தாக்கும்படி பலவர்மனே யோசனை சொல்கிறான். மஞ்சளழகி மூலம் அஷயமுனையில் காவலை குறைக்க வைக்கிறான் பலவர்மன். இளையபல்லவன் ஏன் இப்படி நடந்துக் கொள்கிறார் என்று பலர் வியந்தனர்.

இளையபல்லவன் குடிபழக்கத்துக்கு அதிகம் அடிமையாகிறான். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பலவர்மன் அவன் குடிக்கும் மதுவில் விஷம் கலக்கிறான். ஆனால், இளையபல்லவன் மது அறிந்திருந்தாலும் நிதானம் இழக்கவில்லை என்பது அப்போது தெரிந்தது. தன் உபதளபதிகளுக்கு ரகசிய உத்தரவுப்படி வில்வலனை தாக்குதலை எதிர்கொள்ள போருக்கு தயாராக இருந்தனர்.

வில்வலனை கொன்று அஷயமுனை பாதுக்காக்க படுகிறது. யுத்தம் முடிந்த பிறகு அகூதா வருகிறான். மஞ்சளழகி தன் சகோதரி மகள் என்று இளையபல்லவனிடம் கூறுகிறான். அதுமட்டுமல்ல.... தன் சகோதரியை பலவர்மனும், ஜெயவர்மனும் சேர்ந்து கடத்தி சென்றனர் என்றும், மஞ்சளழகியின் தந்தை ஜெயவர்மன் என்றும் உண்மையை சொல்கிறான். அகூதா பலவர்மனை கொல்ல நினைக்கும் போது இளையபல்லவன் அவனை தடுத்து தனக்கு உதவியாக கடல் பயணத்துக்கு அழைத்து செல்கிறான். மஞ்சளழகியிடம் அஷயமுனையை ஒப்படைத்து விட்டு கடல் புறாவில் பயணம் மேற்கொள்கிறான்.

இரண்டாம் பாகத்தில் நச் வசனங்கள்..

மஞ்சளழகி இளையபல்லவனை சந்தித்த போது....

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன்...!

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : உங்களுக்கு அடக்கமும் இருக்கிறது..

இளையபல்லவன் : நன்றி

மஞ்சளழகி : வெட்கமும் இருக்கிறது உங்களுக்கு..

இளையபல்லவன் : சில சமயங்களில் அந்தக் குணம் ஆண்களுக்கும் தேவையாயிருக்கிறது.

மஞ்சளழகி : உங்களுக்கு விஷமமும் இருக்கிறது..

இளையபல்லவன் : என்ன ?

மஞ்சளழகி : நீங்கள் மாவீரன் என்றேன் - அடக்கத்தை காட்டினீர்கள். உங்களுக்கு அடக்கமிருக்கிறதென்றேன் - வெட்கத்தை காட்டினீர்கள். வெட்கமிருக்கிறதென்றேன் -என்னை குத்திக் காட்டி உங்களுக்கு விஷமமும் உண்டு என்பதை நிரூபித்தீர்கள்.

இளையபல்லவன் : ஏன் ?

மஞ்சளழகி : அடக்கம் வீரத்துக்கு அடையாளம். வெட்கம் பண்பாட்டுக்கு அடையாளம். விஷமம் ரசிகத் தன்மைக்கு அடையாளம்.


காஞ்சனை மீது இளையபல்லவனுக்கு காதல் இருப்பதை பற்றி மஞ்சளழகி கேட்க.. அதற்கு இளையபல்லவன் "மனம் ஒன்றுதான். எனக்கு அது சிக்கி இருக்கும் சிறைகள் இரண்டு. அது எப்பக்கம் இழுபடுமோ தெரியாது".

இறுதியில் இளையபல்லவம் மஞ்சளழகியை விட்டு பிரியும் போது, " இந்த அலையை போல தான் நீங்களும் என்ற அன்றே சொன்னேனே..? அலையும் என்னைத் தொட்டுவிட்டுப் போகிறது. நீங்களும் அப்படித்தான் போகிறீர்கள்." என்கிறாள். இதே வார்த்தையை மூன்றாம் பாகத்திலும் இளையபல்லவன் நினைத்து மஞ்சளழகிகாக வருந்துவது வாசகர்களை இரண்டாம் பாகத்தை நினைவுப் படுத்த வைக்கிறார்.

2 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

:) நல்ல அறிமுகம்...

குகன் said...

நன்றி :)

LinkWithin

Related Posts with Thumbnails