வீடு நெடுந்தூரம் - Short film

Book, Movies Offers

To Buy my books in flipkart

Thursday, April 23, 2009

'கடல் புறா' - மூன்றாம் பாகம் சுருக்கம்

கடல் புறா மூன்றாம் பாகம் இரண்டு பகுதியாக பார்ப்போம்.

அஷயமுனை கைது செய்யப்பட்ட பலவர்மனுடன் இளையபல்லவன் கடலில் பயணம் செய்துக் கொண்டு இருக்கிறான். அப்போது இரண்டு கலிங்கத்து மரகலத்துடன் போர் புரிந்து அவன் கைப்பற்றுகிறான். இளையபல்லவன் கைப்பற்றிய மரக்கலத்தில் காஞ்சனை, குணவர்மனும் கைதிகளாக இருப்பதை பார்த்து இருவரையும் விடுவிக்கிறான். கடல் புறா 'கடல் மோகினி' நோக்கி செல்வதை கேள்விப்பட்ட பலவர்மன் அஞ்சி நடுங்கிறான். கடல் புறாவை திருப்பவும் சொல்கிறான். ஆனால், அவன் சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் 'கடல் மோகினி' நோக்கி செல்கிறான் இளையபல்லவன்.

தமிழர்கள் வசம் இருந்த கடல் மோகினி கங்கதேவன் என்னும் தலைவன் கலிங்கத்தை ஆதரிக்கும் ஸ்ரீ விஜயத்தின் கட்டுப்பாட்டில் வந்திருப்பதை தெரிந்துக் கொள்கிறான். உண்மை அறிந்த இளையபல்லவன் தன் மரக்கலங்களில் கலிங்கத்துக்கு கோடியை பறக்க விட்டு கடல் மோகினிக்கு செல்கிறான். குணவர்மனை ரகசிய அறையில் வைத்து விட்டு, காஞ்சனையை மஞ்சளழகி என்று கங்கதேவனிடம் அறிமுகம் செய்து வைக்கிறான். பலவர்மனை பார்த்தவுடன் கொன்று விட துடிக்கும் கங்கதேவன் அவர்கள் அரச காரியத்திற்காக அவர்களை எதுவும் செய்யாமல் தன் தீவில் தங்க வைக்கிறான்.

தன் தீவுக்கு வந்த இளையபல்லவனை, அவன் உபதளபதிகளையும் விருந்துக்கு அழைக்கிறான் கங்கதேவன். விருந்துக்கு வந்தவர்கள் உள்ளே நுழைந்ததும் கங்கதேவன் கைது செய்கிறான். கங்கதேவன் ஆபத்தான எதிரி என்று முன்பே யுகித்த இளையபல்லவம் தான் அகூதாவின் தளபதி என்று அறிமுகம் படுத்துகிறான். அதுமட்டுமல்லாமல் கடாரத்தை கொள்ளையடிக்க தன்னுடன் கூட்டனி சேரும்ப்படி ஆசை வார்த்தை காட்டுகிறான்.

இளையபல்லவனை ஒப்பந்ததை ஏற்றுக் கொள்ள மஞ்சளழகி என்று அறிமுகப்படுத்தப்பட்ட காஞ்சனையை கேட்கிறான். தன் ஆபத்தான நிலைமை உணர்ந்த இளையபல்லவன் காஞ்சனை மீது தனக்கு பற்று இல்லாதது போல் காட்டிக் கொள்கிறான். இதனால், இருவரும் கூட்டு சேர்கிறார்கள். அதே சமயம் கங்கதேவன் மாலுமிகளிடம் காஞ்சனையுடன் யார் தவறாக நடந்துக் கொண்டாலும் அவர்களை உயிருடன் விட மாட்டேன் என்று கூறுகிறான்.

இளையபல்லவன் குணவர்மனை கங்கதேவனிடம் ஒப்படைத்து சிறை வைக்கிறான்.இளையபல்லவன் சதி திட்டத்தை அறிந்த கடாரத்தின் இளவரசியான காஞ்சனை கோபம் கொள்கிறாள். காஞ்சனை இளையபல்லவனிடம் கோபமாக வாதம் செய்ய கங்கதேவன் அவளை கை பிடித்து தன் மாளிகை அழைத்து செல்ல பார்க்கிறான். இளையபல்லவன் கங்கதேவனிடம் காஞ்சனையை விடும் படி சொல்கிறான். அவன் மறுக்க, இருவரும் சண்டையிடுக்கின்றனர். இறுதியில் இளையபல்லவன் கங்கதேவனை கொன்று விட்டுகிறான். காட்டில் ஒலிந்திருந்த தமிழர்களுடம் இளையபல்லவனுக்கு ஆதரவாக வருகின்றனர்.



ஒன்பது மாதம் பிறகு....

கலிங்கத்துக்கு ஆதரவாக இருந்த ஸ்ரீ விஜய தீவுகளை கைபற்றிவிட்டு காஞ்சனையை பார்க்க கடாரத்துக்கு செல்கிறான் இளையபல்லவன். ஆனால், அவனுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி காத்துக் கொண்டு இருப்பதை அப்போது தான் தெரிந்துக் கொள்கிறான். தனது நண்பனான அநபாயன் வீரராஜேந்திர தேவர் ஆணைப்படி தன்னை கைது செய்ய வந்திருப்பதை ஒரு வீரன் தெரிவிக்கிறான்.

அதே சமயம் அநபாயன் கைது செய்து சிறையில் வைக்கும் போது அங்கு தப்பிக்கவும் திட்டம் கொடுக்கிறான். ஆனால், இளையபல்லவன் அதை செய்ய மறுக்கிறான். அதனால், அநபாயன் அமீரின் துணையோடு இளையபல்லவனை மயக்கடைய செய்து காஞ்சனையுடன் அஷயமுனைக்கு கடல் புறாவில் அனுப்புகிறான்.

மயக்க தெளிந்த இளையபல்லவன் கடல் புறாவில் தன் தலைமையை மதிப்பு இல்லை என்று உணர்கிறான். தன் தந்திரத்தால் அமீர், கண்டிதேவன் இருவரையும் கடல்புறாவை ஸ்ரீ விஜய்த்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் 'மலையூர்' பக்கம் திருப்பிவிடுகிறான். முதலை வாயில் இருப்பதை உணர்ந்த அமீர், மீண்டும் இளையபல்லவனை தலைமை ஏற்க்கும்மாறு கூறுகிறான்.

கடல் புறா விஜயசந்திரன் என்னும் உபதளபதி தலைமையில் மலையூர் படைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலையில் இருந்தனர். விஜயசந்திரப் ஆபாரா போர் திறமை கடல் புறா ஒரளவு சேதமானது. ஆனால், இறுதியில் இளையபல்லவனே வெல்கிறான். கைது செய்யப்பட்ட விஜயசந்திரனிடன் அவன் தளபதிக்கு கடிதம் எழுத சொல்கிறான். அவனும் எழுதிக் கொடுக்கிறான். அந்த கடிதத்தை இளையபல்லவனே எடுத்துக் கொண்டு மலையூர் தளபதியை சந்திக்க செல்கிறான்.

அங்கு சென்றவுடன், அவனுக்கு பெரும் அதிர்ச்சி. மலையூருக்கு தலைவனல்ல.. தலைவி...அதுவும் 'மஞ்சளழகி' அந்த இடத்தில் அமர்ந்திருந்தாள். அதன் பிறகு ஜெயவர்மன் தன்னை மகளாக ஏற்றுக் கொண்டுவிட்டார் என்பதையும், அவளிடம் மலையூரை கட்டுப்பாட்டில் விட்டதையும் தெரிந்துக் கொள்கிறான்.

மஞ்சளழகி இளையபல்லவன் மீது இருந்த காதலால் அவனுடைய கடல்புறாவை அழிக்காமல் விட்டுவிடுகிறாள். தந்தை ஆணைப்படி கேட்கும் உபதளபதியின் கவனைத்தை திசை திருப்ப உதவுகிறாள். இதனால், எந்த பெரிய யுத்தமில்லாமல் மலையூரை இளையபல்லவன் கைப்பற்றுகிறான்.

மலையூர் கைப்பற்றிய கையோடு ஜெயவர்மனின் ஸ்ரீ விஜயத்தின் மீது போர் தொடுக்கிறான். போரில் வெற்றி பெற்ற இளையபல்லவனுக்கு பரிசாக வீரராஜேந்திர தேவர் வண்டை குறுநிலத்தை பரிசாக அளிக்கிறான். காஞ்சனை, மஞ்சளழகி இருவரையும் மணக்கிறான் இளையபல்லவன்.

மூன்றாம் இனிதே முடிவடைந்தது !!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails